Thursday, March 6, 2008

ஓர் எதிரியின் வாக்குமூலம்!

ஓர் எதிரியின் வாக்குமூலம்!

நபிகள் நாயகத்தைப்பற்றி
ஓர் எதிரியின் வாக்குமூலம்

நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த காலமது. அன்று வல்லரசு நாடுகளில் ஒன்றான உரோமமப் பேரரசருக்கு ஒரு கடிதத்தை தமது தோழர் திஹ்யா இப்னு கலீபா அல்கல்ஃபீ அவர்கள் மூலமாக பஸராவின் கவர்னரிடம் கொடுத்து ரோமப்பேரரசரிட்ம் சேர்ப்பிக்குமாறு அனுப்பிவைத்தார்கள்.
அப்பொழுது ரோமானியப் பேரரசர் கைஸர் (ஹெர்கலிஸ்) சிரியா நாடு வந்திருந்தார்.சிரியாவின் தலை நகரில் (மஸ்ஜிதுல் அக்ஸாவில்) அவரது அவை கூடியது. அப்பொழுது அவரது அமைச்சர்களில் ஒருவர் ஒரு கடிதத்தை அரசரிடம் கொடுத்தார்.அதனைப் பெற்றதும் அப்பேரரசரின் தலையும் சுழன்றது. ஒரு நொடி நேரத்தில் எத்தனையோ எண்ணங்கள் அவரது உளக்கடலில் அலைமோதின.
அரபு நாட்டிலிருந்து இங்கு யாரும் வந்துள்ளனரோ? என்று விசாரித்தார் மன்னர் மன்னர். 'ஆம்' என்றார் அங்கு வீற்றிருந்த ஒருவர்.உடனே அவரை அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார் அரசர். அவ்வாறே அந்நாட்டிற்கு வாணிபத்தின் பொருட்டு வந்திருந்த குரை ஷpகள் சிலர் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் அண்ணல் நபியின் பெரும் பகைவர் அபூசுஃபயானும் நின்று கொண்டிருந்தார்.
உங்களுடைய நாட்டில் யாரோ ஒருவர் தம்மை 'நபி' என்று கூறிக் கொள்;கிறாராமே! இங்கு வந்திருப்பவர்களில் அவருக்கு நெருங்கிய உறவினர் எவரேனும் உண்டோ? என்று வினவினார் அப்பேரரசர்.
"நான் அவரது நெருங்கிய உறவினர் தான்" என்று கூறிக்கொண்டே அவர் முன் வந்து நின்றார் அபூசுஃப்யான்.
அப்பொழுது அப்பேரரசர் மற்ற அரபிகளைப் பார்த்து, இப்பொழுது நான் அபூசுஃப்யானிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன் அதற்கு மறுமொழியாக அவர் பொய் கூறுவாராயின் நீங்கள் என்னிடம் எடுத்துரைக்கவேண்டும் என்று எச்சரித்தார்.(அபூசுஃப்யான் பி;ன்னர் ஒருசந்தர்பத்தில் கூறும் பொழுது 'ரோமானியப் பேரரசர் அன்று மட்டும் அவ்வாறு எச்சரிக்கை செய்திராவிட்டால் நான் நிச்சயமாக அவர் முன்னிலையில் பொய்யே சொல்லி யிருப்பேன்' என்று கூறினார்.)அதன் பின் கைஸருக்கும் அபூசுஃப்யானுக்கும் இடையே பின் வரும் உரையாடல் நிகழ்ந்தது.
கைஸர் : தம்மை நபி என்று கூறிக்கொள்பவரின் குடும்பத்தகுதி என்ன?
அபூசுஃப்யான் : அரபு நாட்டின் மிக உயர்ந்த குடும்பம் அவரது குடும்பம்.
கைஸர் : இதற்கு முன்னர் எவரேனும் அவரது குடும்பத்தில் தம்மை 'நபி' என்று கூறிக்கொண்டனரா?
அபூசுஃப்யான் : இல்லை.
கைஸர் : வரது குடும்பத்தில் எவரேனும் அரசர்களாக இருந்துள்ளனரோ?
அபூசுஃப்யான் : இல்லை.
கைஸர் :அவரைப் பின்பற்றுவோர் ஏழைகளா? செல்வந்தர்களா ?
அபூசுஃப்யான் : ஏழைகள்.
கைஸர் :அவரைப் பின்பற்றுவோர் பெருகிக் கொண்டு போகிறதா? குறைந்து கொண்டு போகிறதா?
அபூசுஃப்யான் : நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே தான் செல்கிறது.
கைஸர் : அவர் எப்பொழுதேனும் பொய்யுரைத்ததை நீங்கள் கேட்ட துண்டா?
அபூசுஃப்யான்:ஒருபோதும் இல்லை.
கைஸர் : உடன்பாட்டுக்கு அவர் மாறு செய்ததுண்டா?
அபூசுஃப்யான் :இது வரையிலும் இல்லை.இப்பொழுது எங்களுக்கும் அவருக்குமிடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இனிமேல் தான் பார்க்கவேண்டும்.
கைஸர் :அவருடன் நீங்கள் போர் செய்ததுண்டா?
அபூசுஃப்யான் :ஆம்.
கைஸர் :அதன் முடிவு என்ன ?
அபூசுஃப்யான் :சில சமயங்களில் எங்களூக்குவெற்றி.மற்றும்சில சமயஙகளில்
அவருக்கு வெற்றி.
கைஸர் : அவர் மக்களுக்கு என்ன உபதேசம் செய்கின்றார்?
அபூசுஃப்யான் : ஒரே இறைவனை வணங்குங்கள் என்றும்,அவனுக்குஇணைவைக்காதீர்கள்
என்றும்,அவனைத் தொழுது தூய வாழக்கை வாழுங்;கள் என்றும்,உண்மை பேசுமாறும்,உறவினருடன் ஒற்றுமையாயி ருக்குமாறும் அவர் போதிக்கிறார்.
இப்பொழுது ரோமானியப் பேரரசரின் கண்கள் சுடர் விட்டன. அவருடைய முகத்தில் என்றுமில்லாத ஒளி தோன்றியது. அவர் அரபுகளைப்பார்த்து பின்வருமாறு கூறினார்.
அவர் உயர் குடியிற் பிறந்தோர் என்று கூறினீர்.தீர்க்கதரிசிகள் எல்லாம் இதுகாறும் உயர் குடியில் தான் பிறந்துள்ளனர்.
அவருடைய குடும்பத்தில் இதுவரை யாரும் தம்மை நபியென்று கூறிக் கொள்ளவில்லை என்றும் கூறினீர். அவ்விதம் இருப்பின் அவரைப் பின்பற்றி இவரும் தம்மை அவ்வாறு அழைத்துக் கொள்கிறார் என்று எண்ணலாம். அவ்விதம் எண்ணுவதற்கு இடம் இல்லை.
அவருடைய குடும்பத்தில் இதற்கு முன் யாரும் அரசர்களாய் இருந்ததில்லை என்றும் கூறிகின்றீர். அவ்விதம் இருந்திருப்பின் இவரும் ஓர் அரசராவ தற்காக இவ்வாறு வேடம் புனைந்துள்ளார் என்று நான் எண்ணி இருப்பேன்.
அவர் பொய்யுரைப்பதில்லை என்றும் கூறினீர்.பொய்யுரைக்காத ஒரு மனிதர் எவ்வாறு இறைவனைப்பற்றிப் பொய்யுரைப்பார்?
அவரைப் பின்பற்றுவோர் ஏழைகளே என்றும் கூறுகின்றீர். இறைவனின் தூதர்களை முதலில் பின்பற்றுவோர் ஏழைகள் தாம்!
அவர் உடன்பாட்டை முறித்ததில்லை என்றும் கூறினீர். இறைவனின் திருத்தூதர்கள் ஒருபோதும் பித்தலாட்ட வேலைகளில் ஈடுபடமாட்டார்கள்.
சிலபொழுது போரில் உங்களுக்கு வெற்றியும், சிலபொழுது அவருக்கு வெற்றியும் ஏற்பட்டதாகக் கூறுகின்றீர். இவ்வாறே வெற்றியையும்,தோலவியையும் மாறி மாறி வழங்கி இறைவன் அவர்களைச் சோதிப்பான். அவருடைய அறிவுரைகள் யாவும் எல்லோராலும் பின்பற்றத் தக்கவை.
நீர் கூறியது உண்மையாயிருப்பின் அவர் நிச்சயமாக இறைவனின் இறுதித் தூதரேயாவார். ஒரு காலத்தில் இந்நாடும் அவர் வயமாகும். இறைவனின் தூதர் தோன்றப்போகின்றார் என்பதை நான் அறிந்தே இருந்தேன். ஆனால் அவர் அரபு நாட்டில் தோன்றுவார் என்று நான் எண்ணவில்லை.எனக்கு அங்கு செல்ல வாய்ப்பு கிட்டின் நான் அவர்களுடைய கலடிகளிலே நின்று குற்றேவல்; புரிவேன். அதன் பின் அக்கடிதத்தைப் படிக்குமாறு பணித்தார் மன்னர்.
'அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால், அவனுடைய அடியாரும் திருத்தூத ருமாகிய முஹம்மத், ரோமானியப் பேரரசர் ஹெர்குலிஸுக்கு எழுதும் கடிதமாவது :-
இறைவன் மீது நம்பிக்கை வைத்து அவனுடைய திருத்தூதரைப் பின்னற்றி ஒழுகுபவர்களுக்கு இறைவனின் சாந்தி உண்டாவதாக!
வேதத்தையுடையோரே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்குஇணைவைக்கவும் மாட்டோம். நாம் நம்மில் ஒருவரை ஒருவர் கடவுளாக ஆக்கிக் கொள்ள மாட்டோம் என்ற பொதுக் கொள்கைக்கு வாருங்கள் என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் 'நாங்கள் முஸ்லிம்கள்' என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள். (குர்ஆன்-3.64) என்ற மறைவசனத்தை துவக்கமாகக் கொண்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது. (புகாரி)
அல்லாஹ்வைத்தவிர்த்து வணக்கத்திற் குரியோன் வேறு யாருமில்லை என்றும், நான் எல்லா மக்களுக்கும் எச்சரிக்கை செய்து அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பெற்ற அவனது திருத்தூதர் என்றும் சான்று பகர்கின்றேன். நீரும் இஸ்லாத்தைத் தழுவிவிடும்;.அப்போது நல்வாழ்வு வாழ்வீர்! இல்லையேல் உம்முடைய குடிகளின் பாவங்களும் உம்மையே வந்து சேரும்.முடங்கல் எழுப்பிய முழக்கத்தைக் கேட்டதும் அங்கு வீற்றிருந்த பாதிரிமார் களின் மூளை கலங்கியது. அதன் பின்னர் மன்னர், அபூஸுஃபயான் முதலானோரைப் போய்வருமாறு பணித்தார்.அபூஸுஃபயான் வெளியே வரும்பொழுது அடகடவுளே! மன்னாதி மன்னரும் முஹம்மதைக்கண்டு அஞ்சுகிறானே.அவருடைய மடலைச் செவியுற்று அவனுடைய அவையி லுள்ளோர் அனைவரின்; உள்ளமும் உடலும்; நடுநடுங்குகின்றனவே! 'இதென்ன புதுமை!' முனங்கிக் கொண்டு சென்றனர்.
பின்னர், அப்பேரரசர் தம் அவையினரை யெல்லாம் பார்த்து இஸ்லாத்தின் பெருமையினை எடுத்துரைத்து அதனைப் பின்பற்றின் தங்களுக்கு வளவாழ்வும், வான்புகழும் வந்து சேரும் என்றும் கூறினார்.
மேலும் பெருமானாரின் தூதர் திஹ்யாவுக்கு மன்னர் பெரும் பரிசில்களையும் செல்வத்தையும், உயர் ரக ஆடைகளையும் அளித்து கவுரவித்தார். மன்னர் மனத்திலே அக்கடிதம் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியது.(ஸீரத்துந்நபி, இப்னு ஹிஷாம்)


--
அன்புடன்
மீரான்

www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

அறிவியல்

மேற்கத்திய அறிவியல் வளர்ச்சியடைந்து அதன் பரிணாமமான நவீன கண்டுபிடிப்புக்கள் உலகை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் உலகின் மகிழ்ச்சிக்கு குழிதோண்டிக் கொண்டிருப்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும். இத்தருனத்தில் இஸ்லாம் கூறும் அறிவியல் பக்கங்களை ஒருமுறை புறட்டிப்பார்ப்பது மிகவும் பொருத்தமாக அமையும்.

எமது அவா என்னவென்றால்:
மேற்கத்திய உலகையே உதவிக்கு அழைத்துக் கொண்டிருக்கும் நமது சமூகம் இவைகளை உணர்ந்து தன்னை வளர்ச்சியின் பக்கம் திருப்பிக் கொள்வதற்கு இந்த வரிகள் ஓர் ஊன்று கோலாய் அமையும்.
முஸ்லீம்கள் அல்லாத நம் சகோதரர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து சத்தியத்தைப் பின்பற்ற வழிகோலும்.

இவை நமது பிரதான எதிர்பார்ப்புகளாகும்.

இந்த ஆக்கத்தில் கூறப்பட்டிருக்கும் முக்கிய சில பகுதிகள் 27-04-2007 ஆம் நாளன்று சவுதி அரேபியா, அல்-ஜுபைல் தஃவா சென்டரில் நடைபெற்ற ஒருநாள் இஸ்லாமிய மாநாட்டில் உரையாற்றப்பட்டது. இத்தலைப்பு பறந்து விரிந்த ஒரு தலைப்பாதலால் பெரும்பாலான பகுதி உரையில் விடுபட்டுள்ளது. எனவே தமிழ் உலகம் பயனடைய வேண்டும் என்ற ஒரு நோக்கில் என்னால் முடிந்தளவு பல தகவல்களை ஒன்று திரட்ட முயற்சிக்கிறேன். வல்ல றஹ்மான் நம் அனைவருக்கும் தெளிவையும் சத்தியத்தைப் பின்பற்றும் வாய்ப்பையும் தந்தருள்வானாக.

இத்தலைப்பில் ஆங்கிலத்தில் விரிவாக நூற்கள் வெளிவந்த அளவுக்கு தமிழில் வெளிவரவில்லைதான். இருந்தாலும் சில எழுத்தாளர்கள் தங்களுக்கு முடிந்த வரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த நூற்கள் ஒரு சில விடயங்களை மட்டுமே அலசுகின்றன. நிறைய தகவல்கள் விடுபட்டுள்ளன. நமது இந்த ஆக்கம் கூட அனைத்தையும் உட்கொள்ளாவிட்டாலும் ஓரளவு பல விடயங்களை வியாபித்துள்ளதை நீங்களே போகப் போக புறிந்து கொள்வீர்கள்.

இந்த ஆக்கம் எழுதப்படுவதற்கு இதர இருபெரும் காரணங்கள் உள்ளன:
1-இஸ்லாத்தின் மூலாதார நூற்கள் கூறும் அறிவியல் உண்மைகளை, நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புக்களோடு உரசிப்பார்த்து நமது ஈமானை புதுப்பித்துக் கொள்ளுதல்.
2-மேற்கத்திய உலகின் நன்றி மறந்த தன்மையையும், அவர்களது சுய ரூபத்தையும் மக்களுக்கு உணர்த்துதல்.

மேலே குறிப்பிட்ட காரணங்களில் இரண்டாவது காரணத்தில் மிகப் பெரும் உண்மை உலகின் கண்களை விட்டும் மறைக்கப்பட்டுள்ளன. அதாவது மேற்கத்திய உலகின் கண்டுபிடிப்புகளுக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் முஸ்லீம்கள் தான் காரணமாக அமைந்திருக்கிறார்கள். முஸ்லீம்களது அன்றைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள்தான் அவர்களுக்கு வளர்ச்சிப் படிக்கட்டுக்களாக அமைந்துள்ளன. உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தல் தகுமோ? என்பதே நமது கேள்வியாகும்.

இக்கூற்றினைப் பார்க்கும் அநேகருக்கு இது புதுமையாகக் கூட இருக்கலாம். அல்லது முஸ்லீம்கள் அறிவியல் முன்னோடிகளாக இருந்துள்ளனரா? என்ற கேள்வி கூட எழுப்பலாம். இதனை நாம் ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. மாறாக அவர்களது கூற்றுக்களை வரலாறுகள் பட்டியலிடுகின்றன.

ஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-
'Marguis' எனும் அறிஞர் தனது 'speeches delivered in ' எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
'It is to musalman science, to musalman art and to musalman literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.'
'ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.'

ஏனென்றால், 8-12ம் நூற்றாண்டு காலப்பகுதியானது 'ஐரோப்பா அறியாமை எனும் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என இன்றும் வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் அசாத்தியமானவைகளாகும். இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு முஸ்லீம்கள் வளர்ச்சியடைந்திருந்தார்கள் என்பதற்கு இஸ்லாம் மார்க்கமும், அவர்களது வேதமும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Maurice Bucaille :
'அந்த நூற்றாண்டில் வாழ்;ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத - இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புக்களின் யதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படி துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது?' - The Bible, The Quran and Science 1978,p.125

Sir. William Muir கூறுகிறார்:
'குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்ஆன் அனைத்திற்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.' - The life of Mohammed, London 1903, ch. The Coran p.vii.

இந்த நடுநிலைவாதிகளின் கூற்றுக்கள் உண்மையில் பொன் வரிகளில் பொறிக்கப்பட வேண்டியவைகளாகும். வரலாறுகளை மாற்ற முடியாதல்லவா! அதுதான் இன்னும் இந்த உண்மைகள் புறையோடிக் கிடக்கின்றன. சத்தியவாதி அவைகளைத் தூசிதட்டி வெளிக் கொணருகிறான். சாதனைகள் பல கண்ட இஸ்லாமிய அறிஞர்கள் பலரது வரலாறுகளை உலகின் கண்களை விட்டும் மறைத்த பெருமையும் மேற்கத்திய உலகையே சாரும்.

வியக்கத்தகு சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகள் சிலர்:
இல பெயர்காலகட்டம்(கி.பி) துறை
1அல்குவாரிஸ்மி (அல்காரிஸ்ம்) 780-850 கணிதம், வானவியல்
2அல்ராஜி (ரேஜஸ்) 844-946 மருத்துவம்
3அல்ஹைதம் (அல்ஹேஜன்) 965-1039 கணிதம், ஒளியியல்
4அல்பிரூணி 973-1048 கணிதம், தத்துவம், வரலாறு
5இப்னுசீனா (அவிசென்னா)980-1037மருத்துவம்
6அல்இத்ரீஸி (டிரேஸஸ்)1100 புவியியல்
7இப்னுருஸ்து (அவிர்ரோஸ்)1126-1198 மருத்துவம், தத்துவம்
8ஜாபிர் இப்னு ஹையான் (ஜிபர்)803 பெளதீகம்
9அல்தபரி838 மருத்துவம்
10அல்பத்தானி (அல்பதக்னியஸ்) 858 தாவரவியல்
11அல்மசூதி 957 புவியியல்
12அல்ஸஹ்ராவி (அல்புகேஸிஸ்) 936 அறுவைசிகிச்சை
13இப்னுஹல்தூன் 1332 வரலாறு
14இப்னு ஹுஜ்ர் (அவன்ஜோர்) அறுவை சிகிச்சை
15இப்னு இஷாக் அல்கிந்தி 800-873தத்துவம், பெளதீகம், ஒளியியல்
16முஹம்மது ஷாகிர் ஹஸன்
(Angel of red sea)
17முஹம்மது சகரிய்யா யாஸீன் மருத்துவம்
18அலி இப்னு அப்பான் மருத்துவம்
(அலி இப்னு அப்பான் எனும் மருத்துவ மேதை அக்காலத்திலேயே 20 பாகங்களைக் கொண்ட ஒரு மருத்துவ நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).




The Random House Dictionary of the English Language Comple by:- Lawrance Urdang – p ல் காணப்படும் Algebra (Ap'lwo), Al-Chemy (Chemistry). Alcohol, Alkali, Algorithm போன்ற விஞ்ஞானப் பெயர்கள் அரபியிலிருந்து எடுக்கப்பட்டவைகள் என்பதும் கவணத்திற் கொள்ளப்பட வேண்டியவைகளே.


அல்-குஆனும் அறிவியல் விஞ்ஞானமும்:
1642 ல் பிறந்த ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானியே பிற்காலத்தில் உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அறிவியல் கோட்பாடுகளுக்கு அடித்தளமிட்டவர் என மேற்கத்திய வரலாறு கூறுகின்றது. ஆனால் அல்குர்ஆனோ 1400 வருடங்களாக விஞ்ஞானிகளுக்கே பாடம் புகட்டிக் கொண்டிருப்பதை மேற்கத்திய உலகம் கண்டு கொள்ளவே இல்லை. அல்லது மூடி மறைத்திருக்கின்றது என்று கூட சொல்லலாம்.

அல்குர்ஆன் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் எனும் உண்மையை Dr.Zakir Naik அவர்கள், தனக்கே உரிய பானியில் மிகவும் அற்புதமாக இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:
'The Holy Quran is Miracle of Miracles, Quran is Miracle of all times''.
நபிகளார் (ஸல்) அவர்கள் உலகம் அஸ்தமிக்கும் வரைக்கும் அனைவருக்குமான தூதராதலால், அல்குர்ஆன் நிச்சயமாக நிலையான அற்புதமே! (وما أرسلناك إلا كافة للناس)-34:28 'உம்மை உலகத்தார் அனைவருக்கும் (தூதராக) அனுப்பியிருக்கிறோம்' எனும் வசனம் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

Albert Anstain said: 'Science without religion is lame, and religion without science is blind'.
இந்த அல்குர்ஆனின் அதிசயத் தன்மைகள் ஏராளம்! அல்குர்ஆன் கூறும் அறிவியலாகும். ஆதேபோன்று அதனது சபதத்தை மனிதர்களால் முறியடிக்க முடியாமையாகும்.

Dr.Zakir Naik இதனை மிகவும் அழகாகக் கூறுவார்கள்: 'Al-Quran is a book of SIGNS not a book of SCIENCE'. அதாவது, அல்-குர்ஆன் அத்தாட்சிகள் கொண்ட ஒரு வேதமே தவிர விஞ்ஞானப் புத்தகம் கிடையாது என்பதாகும்.

قال تعالى:ஜوإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقينழூ فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرينஸ- البقرة:23-24

'நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.
உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! நிராகரிப்பாளர்களும், கற்களுமே அதன் எரிபொருட்களாகும். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.' – 2:23-24.

இந்த சபதம் 1400 ஆண்டுகளைக் கடந்த பினபும் இதுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை. அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட (Coptic Christian) கிறிஸ்தவர்கள் எகிப்தில் மட்டும் 6 மில்லியன் இருக்கின்றனர். அதேபோன்று லெபனான், சிறியா போன்ற இன்னும் பல அரபு நாடுகளிலும் அரபு மொழி பேசக் கூடிய கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அப்படியிருந்தும் அவர்களால் அல்குர்ஆனின் சவாலை முறியடிக்க முடியவில்லை என்பது அல்குர்ஆனின் இறைத் தன்மையையும், அதன் உண்மைத் தன்மையையும் உணர்த்துகின்றது!

காலத்தை வென்ற கச்சித வேதம் அல்குர்ஆன் ஓர் நிலையான அற்புதமாகும்.
அல்குர்ஆனின் வரலாறுகள் புராணங்கள் போன்று கிடையாது.
நிதர்சன உண்மைகள் அல்குர்ஆனில் தனிரகம்!
அல்குர்ஆன் சரித்திரம் பேசும் ஆனால் சரித்திர நூலன்று! வரலாறு கூறும் ஆனால் வரலாற்று நூலுமன்று!
விஞ்ஞானம் அல்குர்ஆனின் விந்தைகளிற் சில, ஆனால் விஞ்ஞான நூலல்ல!
அல்குர்ஆனின் போதனைகள் நிச்சயமாக உலகத்திற்குத் தேவை!!
காலத்தின் நகர்வோடு சிறிதளவும் சலைக்காது நடைபோடும் ஒரே தன்நிகரற்ற வேதம் என்றால் அது அல்குர்ஆனைத் தவிர வேறெதுவும் கிடையவே கிடையாதென அடித்துக் கூறலாம்.

உலகில் இன்று வேதவாக்குகள் மறுக்கப் படலாம் ஆனால், விஞ்ஞானிகளின் வாக்குகள்தான் மேதாவிகள் பலருக்கு வேதப் பாடம். விஞ்ஞானிகளுக்கே விஞ்ஞானம் புகட்டும் வேதப் புத்தகத்தை உலகில் கண்டிருக்கிறீர்களா? அது அல்குர்ஆன் மட்டும்தான்! ஏனைய மதநூற்களில் கூட ஓரிரு விஞ்ஞானக் கருத்துக்கள் காணக்கிடக்கின்றன. அவைகள் தற்செயலாக விஞ்ஞானத்தோடு பொருந்திப் போனவைகள் என்றே கருத வேண்டும். ஏனென்றால் அதிகமான இடங்களில் மதக் கருத்துக்கள் விஞ்ஞானத்தோடு மோதுகின்றமை அன்று முதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. உதாரணத்திற்கு கலீலியோ கலீலியின் விஞ்ஞானக் கருத்துக்கு திருச்சபைகள் எவ்வாறு தடையாக இருந்தன என்பதை வரலாறுகள் நிருபித்துக் காட்டுகின்றன.

அதே நேரம் உலக வேதபுத்தகங்களிலேயே அல்குர்ஆன் தனித்து நிற்பதை கீழ் வரும் 'அல்குர்ஆனும் விஞ்ஞானமும்' எனும் தொடர் உண்மைப்படுத்துவதை உணர்வீர்கள்!!

--
அன்புடன்
மீரான்

smeeran.tnj@gmail.com
www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

இயற்கை!!

இயற்கை!!
-------------

அண்டங்கள் ஆகாயங்கள்
இயற்கை!

வானும் விண்மீன்களும்
இயற்கை!

சூரியனும் ஒளியும்
இயற்கை!

அதைச் சுற்றிவரும் கிரகங்கள்
இயற்கை!

நேரமும் காலமும்
இயற்கை!

மேகமும் மின்னலும்
இயற்கை!

காற்றும் மழையும்
இயற்கை!

நீரும் நிலமும்
இயற்கை!

நிலநடுக்கமும் எரிமலைகளும்
இயற்கை!

ஆறுகள் கடல்கள் அருவிகள்
இயற்கை!

வறட்சியும் பசுமையும்
இயற்கை!

உயிரினங்கள் அனைத்தும்
இயற்கை!

அவற்றின் பிறப்பும் இறப்பும்
இயற்கை!

உயிரும் உடலும்
இயற்கை!

இரவும் பகலும்
இயற்கை!

உறக்கமும் விழிப்பும்
இயற்கை!

பசியும் தாகமும்
இயற்கை!

அன்பும் பாசமும்
இயற்கை!

இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும்
இயற்கை!

அவற்றின் மாட்சியும் மகிமையும்
இயற்கை! இயற்கை!!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.
drimamgm@hotmail.com

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் கவிதை அற்புதமாக இயற்கையாகவே அமைந்துள்ளது. என்றும் இயற்கையாகவே உங்கள் படைப்புக்கள் வர எனது வாழ்துக்கள்.


நன்றி: வார்ப்பு.

ஒப்பாரும் மிக்காரும்...?


பொது விடங்களில்
துப்புவதிலும்
நான்கு பேர்
கூடியிருக்குமிடத்தில்
மூக்கையும் சளியையும் சிந்தி
அசுத்தப் படுத்துவதிலும்
உண்ட வாழையின்
தோலை வீதியில்
வீசி எறிவதிலும்
பொதுவிடங்களில்
சுவர்களைத் தேடி
சிறுநீர் அபிஷேகம்
செய்வதிலும்
எச்சத்தையும் மிச்சத்தையும்
கண்ட இடங்களில்
போடுவதிலும் நம்மை
ஒப்பாரோ மிக்காரோ தான்... எவர்?
வார்ப்பில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.

பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-06-16




அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


கவிதை : காந்தி பிறந்த நாடு !!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]


மீண்டும் மீண்டும்
தொடந்து கொண்டுதானிருக்கின்றன
நச்சுச் சாராய சாவுகள்!

மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது
விதவை அநாதைகளின் பெருக்கம்!

மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது
உறவு நட்புகளின் ஒப்பாரி!

நின்று கொல்லும் நஞ்சு- மது!
நிறுத்தாமல் குடித்தாதால்
இன்று கொன்றிருக்கிறது நச்சுச் சாராயம்!

கொலைகள் கொள்ளைகள்
விலையேற்றம் பணவீக்கமென
அனைத்தும் வளர்பிறையாய்....!

அனைத்துத் துறைகளிலுமே
வேகமாய் முன்னேறி வருகிறது
நம் நாடு!

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில்
முழுகவனத்துடன்....
காவல்துறை!

சூடான பரபரப்பான
செய்திகளின் தேடலில்....
ஊடகங்கள்!

கேள்வி கண்டனக் கணைகளை
வீசுவதில்... சலிப்படையாத
எதிர்க்கட்சிகள்!

ஆர்ப்பாடமின்றி அகிம்சைவழியில்
கோலொச்சிக் கொண்டிருக்கிறது
நம் அரசு!

காந்தி பிறந்த நாட்டில்
நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
பெருமையுடன்....


நன்றி:தமிழோவியம்.



அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


காற்று!
------------

வசந்தம் வாடை

அனல் புயல்

சூறாவளி புழுதிக்காற்றெனப்

பருவத்துக்குப் பருவம்

பற்பல அவதாரங்களில்...


பிராணவாயு

கரியமிலவாயுவென

உயிரினங்களுக்கும்

தாவரங்களுக்குமிடையே

சுவாசப் பரிமாற்றத்தில்...


காடுகளின் அழிப்பு

இரசாயனங்களின்

வெளியேற்றம்

தூசு மாசுகளின்

ஆதிக்கத்தால் இன்று

நச்சு பரப்பும் நிலையில்...


காற்றின்

கனிவும் சீற்றமும்

பாகுபாடு பார்ப்பதில்லை

கனிவுடன் இருக்கும் வரைதான்

கண்ணியத்துடன் இருக்கும்...


உணர்ந்துகொள் மனிதா...!

இதன் இதமும்

இனிமையும் இன்பமும்

இலக்கியங்கள் கதைத்திடும்!

சினமும் சீற்றமும் கடுமையும்

வரலாறு உரைத்திடும்!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

நன்றி: வார்ப்பு













சேமித்து வைக்க





அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


சாதனை!!
---------
படிப்பில் பந்தயத்தில்
வீரத்தில் விவேகத்தில்
திறமையில் உயர்வில்
விஞ்சியிருப்பதும் முந்தியிருப்பதும்
சாதனை!

படைத்திட்ட சாதனைகளை
விஞ்சுவதும் மிஞ்சுவதும்
தனித்தன்மையுடன்
ஒளிர்வதும்
சாதனை!

உண்மை உழைப்பு
கடமை கண்ணியம்
கட்டுப்பாடு புத்திசாலித்தனத்தால்
சாதிப்பதே
சாதனை!

மனித உயிரின்
வாழ்வுக்கும் உயர்வுக்கும்
ஆக்கத்துக்கும் இன்றியமையாதவற்றை
கண்டுபிடித்தல்
சாதனை!

விண்கோள்கள் ஏவுகணைகள்
விண்வெளி ஆராய்ச்சி
கணினிகள் தகவல்தொழில்நுட்பம்
மாற்றுறுப்புப் பொருத்தங்கள் எல்லாமே
சாதனைகள்!

உயிர்காக்கும் மருந்துகள்
நோயறியும் பொறிகள்
வானொலி தொலைக்காட்சி
தொலைப்பேசி செல்பேசிகள் எல்லாமே
சாதனைகள்!

விண்ணில் மண்ணில்
நீரில் பயணம் செய்ய
விதவிதமான அதிவெக
வாகனங்கள் எல்லாமே
சாதனைகள்!

விவசாயத்தில் பசுமைப்புரட்சி
உற்பத்தியில் தன்னிறைவு
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
விமானங்களில் பறந்து கொண்டிருக்கும்
நம் பட்டதாரிகள் எல்லாமே
சாதனைகள்!

மகாத்மா முதற்கொண்டு
சாதனையாளர்களையும் சாதனைகளையும்
பட்டியலிட்டால் எண்ணிமாளாதவையாய்
எத்தனை யெத்தனையோ
சாதனைகள்!

புகை போதை விபச்சாரம்
சமூகவிரோதம் ஏழ்மையில்லா
சமுதாயம் காணும் இனியநாளே
இந்தியாவின் மகத்தான உன்னதமான
சாதனையாகும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


பூமிப்பந்தின் பரப்பில்
மூன்றில் இருபங்கு நீர்!

உயிருக்கும் உடலுக்கும்
இன்றியமையாத் தேவை நீர்!

உணவு பானங்கள் பழங்கள்
அனைத்திலுமே நீர்!

ஊற்றுஅருவி ஆறு மேகம் உப்புகளின்
தோற்றமும் தோன்றலும் நீர்!

சுவைக்க சுத்தம் சுகாதாரமாயிருக்க
அழுக்கைப் போக்க நீர்!

மனித இனத்தின் மகிழ்ச்சியிலும்
துக்கத்திலும் நீர்!

சூடாக்கினாலும் குளிர்வித்தாலும்
தணிந்திருந்தாலும் நீரே நீர்!

நீரின்றி ஏது இயக்கம்?
நீரின்றி உயிரில்லை!

நீரின்றி உலகுமில்லை!
எங்கும் எதிலும் நீர் நீர் நீர்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


நன்றி: முத்துக்கமலம்.


அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/

ஏன் இஸ்லாம்!!
--------------
'இஸ்லாம்'
மாற்றாருக்கு
எளிதில்
பிடித்து விடுவதில்லை!
பிடித்து விட்டால்
எவரும் அதை
விட்டு விடுவதுமில்லை!

இது ஓர்
பகுத்தறிவு மார்க்கம்!
இங்கு
மூட நம்பிக்கைகளுக்கு
இடமில்லை!
முஸ்லிம்கள்
மூடராய் இருப்பதில்லை!
மூடர்கள்
முஸ்லிமாய் இருப்பதில்லை!

உலகில் பலரும்
'கடவுள் ஒருவனே'
என்கின்றார்!
அந்த ஒருவனின்
தேடலில்...
ஆயிரம் பேரைக்
காண்கின்றார்!
அவ்வாயிரத்தில் ஒருவன்
இவனா?
தேடலிலேயே...
ஆயுளை முழுதாய்த்
தொலைக்கின்றார்!

ஏக இறைவனை
தந்தையும் அவனே!
மகனும் அவனே!
பரிசுத்த ஆவியும் அவனே!
என்கின்றார்-அதை
அறிவுப் பூர்வமாய்
சிந்திக்க ஏனோ?
ம(று)றக்கின்றார்!

அன்பே தெய்வம்!
அறிவே செல்வம்!
என்கின்றார்-மிருக
வதை கண்டால்
முதலைக் கண்ணீர்
வடிக்கின்றார்!
சாதிச் சண்டையில்
மனித உயிகள்
மாய்வதைக் கண்டு
மகிழ்கின்றார்!

'இஸ்லாம்' ஓர்
சமாதான மார்க்கம்!
அன்பும் அறமுமே
அதன் அடிப்படை!
கட்டுப்பாட்டுக்கே
முக்கியத்துவம்!

இப்படித்தான்
வாழ்தல் வேண்டுமென
வாழ்வோர் மட்டுமே
இஸ்லாமியராய் இருப்பர்!
எப்படியும் வாழலாமென
நினைப்போர்...
எப்படியும் இருப்பர்!

இஸ்லாத்தில்
வந்து விட்டால்
ஈருலகிலும்
இன்பம்!
நிராகரிப்போருக்கு...
என் ஆழ்ந்த வருத்தம்...!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


முத்துக்கமலத்தில்

இமாம்.கவுஸ் மொய்தீன் படைப்புகள்

தமிழ்நாட்டில் செங்கற்பட்டு நகரில் பிறந்து வளர்ந்த இவர் புகுமுகக் கல்வி வரை செங்கற்பட்டிலும், மருத்துவக்கல்வியை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் படித்தார். தற்போது சவூதி அரேபியாவில், ஜெத்தா நகரில் மருத்துவராகப் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் இமாம்.கவுஸ் மொய்தீன், இறை மொழியன் என்கிற பெயர்களில் தமிழகத்தில் வெளியாகும் பிரபல தமிழ் இதழ்களிலும், பல தமிழ் இணைய இதழ்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், வளைகுடா வாழ் இந்தியத் தமிழர் குழுமம், இந்தியக் கலாச்சாரக் குழுமம் அமைப்புகளில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வரும் இவருடைய விழியருவிகளும் விமான நிலையங்களும் என்கிற ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


மரத்தினால் ஆனதாலோ

உலோகத்தினால் ஆனதாலோ

கண்கூடாய்க் காண்பவற்றை

வெளி கூறாது

ஜடமாயிருந்திருந்து

ஜடமாகி விட்டதாலோ?

'ஜடம்' என்றே அழைக்கப்படுகிறது.


இதுவும் ஓர் நாடகமேடைதான்!

எத்தனை யெத்தனை காட்சிகள்

நாடகங்கள் அரங்கேற்றங்கள்

மந்திரங்கள் சத்தியங்கள்!

அனைத்தையும் கண்டு

ரசிப்பதோடு சரி!

மற்றபடி 'ஜடமே' தான்.


பெரிய மனிதர்

உத்தமர் சாதனையாளர்

மாவீரர் மதிப்புக்குரியவர்

எல்லாமே வெளித் தோற்றம் தான்!

நாற் சுவற்றுக்குள்

அவரின் மிருகத்தனம்

அப்பப்ப்பா.........!!

புலிகள் எலியாவதும்

யானைகள் பூனைகளாவதும்...

எதையும் காணாதது போல்

'ஜடமா'கவே... கட்டில் !



நன்றி: தமிழோவியம்.


கோடிகள் கொடுத்தாலும்...!!



அம்மா... ...!
ஊரில் இருக்கின்றார்!
கேட்போர்க்கெல்லாம்
பதிலாய் இருந்த
நிகழ் காலம்...
அவரின் மரணத்தால்
இறந்த காலமானது!

அவருக்குச் செய்த
பணிவிடைகள்
கடுகாய்ச் சுருங்கிவிட
தவறியவை
மலை போல்
மனக்கண் முன்...!

தன் உதிரத்தை
உணவாய் உணர்வாய்
ஊட்டியது...

தாலாட்டு பாடி
தொட்டிலாட்டி
உறங்க வைத்தது...

நிலாவை
நட்சத்திரங்களை
மின்மினிகளைக் காட்டி
சோறூட்டியது...

உடல் நலமில்லாத
நேரங்களில்
உண்ணாமல் உறங்காமல்
சேவை செய்தது...

விரல் பிடித்து
நடை எழுத்து
சித்திரம் பழக்கியது...

மழலையைக் கேட்டுப்
பூரித்தது
புன்முறுவல் பூத்தது
பெருமை கொண்டது...

குழந்தைகட்கு
வலியேதுமென்றால்
துடித்தது துவண்டது
துயரம் கொண்டது...

ஒவ்வொன்றும்
தொடர் காட்சியாய்
நெஞ்சை வருட...

உடன் வைத்திருந்து
பணிவிடை செய்து
பார்த்திருந்திருக்கலாமே...!

விம்மியது இதயம்
அருவிகளாயின விழிகள்
கசக்கிப் பிழிந்தது
குற்ற மனப்பான்மை!

விலகி இருந்ததாலும்
பிரிந்து விட்டதாலும்
இழந்த சுகம்
கோடிகள் கொடுத்தாலும்
திரும்புமோ?
-இமாம்.கவுஸ் மொய்தீன்.

நன்றி: முத்துக்கமலம்.


அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/



'சுப்ஹானல்லாஹ்'!!
------------------
சுன்னி ஷியா ஹனஃபி
ஷாஃபி மாலிகி ஹம்பளி
சூஃபி வஹாபி
தௌஹீத் ஜமாத்
சுன்னத் ஜமாத்
அஹ்லே ஹதீஸ்
ஜமாத்தே இஸ்லாமி
இன்னும் இப்படி
எத்தனைப் பிரிவுகளோ
இன்றைய இஸ்லாமியருக்கிடையில்...!

இவை யெல்லாம்
சாத்தானின் சூழ்ச்சியா?
மனிதனின் அறியாமையா?
பிரித்து ஆண்டுப் பழகிவிட்டோரின்
கைங்கர்யமா?

தாவூத் மூசா
ஈசா முஹம்மத்[சல்..] என
அனைத்து இறைத்தூதர்களும்
ஏக இறைவனையே வணங்கினர்.
ஏகத்துவதையேப் போதித்தனர்.
இடையில் என்ன நேர்ந்ததோ?
இத்தனைப் பிரிவுகள்...!

எத்தனைத் தான் பேதங்கள்
சூழ்ச்சிகள் உருவானால் என்ன?
'' லாயிலாஹா இல்லல்லாஹ்
முஹம்மத் ரசூலல்லாஹ்..''
உச்சரிக்கும் போது
அனைத்துமே அற்றுப் போய்விடுகின்றன.
'சுப்ஹானல்லாஹ்'!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்


'சைக்கோ' !!
--------------

நாள்தோறும் விடிந்தும்

விடியாமலேயே இருக்கின்றது

காலைப் பொழுது!



ஊடகங்களைத் திறக்க

பதைபதைக்கிறது

மனம்!



'சைக்கோ'வின் அடுத்த பலி

உறக்கத்திலிருக்கும்

அப்பாவி எவருமா?



'சைக்கோ' என நினைத்ததால்

கொல்லப்பட்டிருக்கும்

அப்பாவி எவருமா?



'சைக்கோ'வின் பெயரால்

கைதாகி இருக்கும்

அப்பாவி எவருமா?



கைதானவரும் கொல்லப்பட்டவரும்

'சைக்கோ'வாய் இருக்கும் பட்சத்தில்

தொடரும் கொடூரக் கொலைகளுக்குக்

காரணம் யார்? யார்? யார்?



பொதுமக்களுக்கு வேண்டுமாயின்

புதிராய் பீதியாய் இருக்கலாம்

'சைக்கோ'!



ஸ்காட்லாண்ட் யார்டுக்கு

இணையானதாகக் கருதப்படும்

தமிழகக் காவல்துறைக்குமா...?


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

நன்றி: தமிழோவியம்.

அன்புடன்,


இமாம்.

http://thamizheamude.blogspot.com/


சொத்துப் பங்கீடு!!

-இமாம்.கவுஸ் மொய்தீன் -


தந்தையின் சொத்து
மக்கட் கென்பர்!

அவரின் மறைவுக்குப் பின்
நிகழ்ந்தது சொத்துப் பங்கீடு!

மூத்தவருக்குச் சென்றன
வீடும் கடையும்!

அடுத்தவரின் பங்கில்
நஞ்சை புஞ்சைகள்!

மற்றவருக்குச் சென்றன
நகைகளும் மனையும்!

சகோதரிகளின் பங்கில்
கால்நடைகள்!

கடைசி மகனாய்
நான் இருந்ததால்....

என் பங்கில் வந்தன
கடனும் அம்மாவும்!!

drimamgm2001@yahoo.co.in

நன்றி: பதிவுகள்.


அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/



சுதந்திரமே உன்னால்...!




சுதந்திரம் அடைந்து
அறுபதாண்டு காலத்தில்
இன்றைய நிலையில்
நம் இந்திய நாடு...
உலக அரங்கையே
வியக்கத்தான் வைக்கிறது!

உற்பத்தியில் தன்னிறைவு
விவசாயத்தில் பசுமைப்புரட்சி
கல்வி அறிவியல் மருத்துவம்
தகவல் தொழில் நுட்பம்
பொறியியல் மற்றும்
பல துறைகளில் அபார வளர்ச்சி!

சொந்தமாய் விண்கோள்கள்
ஏவுகணைகள் அணு ஆயுதங்கள்
இயந்திரங்கள் வாகன உற்பத்தி
என்று வேகமான முன்னேற்றம்.
எல்லாமே இமயத்தைக்
காட்டிலும் உயர்வுதான்
பெருமையும்தான்!

ஆயினும்...
செங்கோட்டையில்
தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
குண்டுகள் துளைக்காத
கண்ணாடிப் பேழையின்
உள்ளிருந்து
பிரதமரின் உரை...!

விமான இருப்புப்பாதை
பேருந்து நிலையங்களிலும்
வழிபாட்டுத் தலங்களிலும்
பொதுவிடங்களிலும்
பாதுகாப்புச் சோதனையின்
பெயரில் பொதுமக்கள்
வதைக்கப்படும் நிலை...!

பிரித்தாண்டவர்கள்
வெளியேறிவிட்ட பின்னரும்
அவர்கள் விட்டுச் சென்ற
பிரிவினை இனவாத
நச்சுவிதைகளின் தாக்கத்தால்
நிகழும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
அழிவுகள்... இழப்புகள்...!

அன்னிய மாநிலத்தவர்
வெளியேற வேண்டும்
அன்றேல் உதைக்கப்படுவர்
வதைக்கப்படுவர் ஒழிக்கப்படுவரென
செயல்படும் சில இயக்கங்களின்
அச்சுறுத்தல்கள்...!

ஆணையங்களும் உச்சநீதிமன்றமும்
ஆணைகள் பிறப்பித்த பின்னரும்
அண்டை மாநிலங்கட்கு
நதிநீரைப் பகிர்ந்தளிக்க மறுத்து
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
ஊறுவிளைவிக்கும்
மாநிலங்களின் மனப்போக்கு...!

அன்றாட நடைமுறையாகிவிட்ட
கொலை கொள்ளை இலஞ்சம்
ஊழல்கள் சமூகவிரோதச் செயல்கள்...
சகோதரனே பகையாய் இருக்கையில்...
சுதந்திரமே உன்னால்
சுவையுமில்லை! மகிழ்வுமில்லை!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.
நன்றி:முத்துக்கமலம்.





அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


எதுவும் சாத்தியமே! - இமாம் கவுஸ் மொய்தீன்


on 23-08-2008 16:37


Favoured : None
Published in : இலக்கியம், கவிதை


பறப்பன நடப்பன

ஊர்வன தவழ்வன என

அனைத்து உயிரினங்கட்கும்

சொந்தமாய் இல்லங்களாம்

மரங்கள் கூடுகள் புதர்கள்

புற்றுகள் குகைகள்...!


மனிதர்கட்கும் அவரவர்

வளம் வசதிகட்கேற்ப

சொந்த வீடுகள்

வாடகை வீடுகள்

குடிசைகள் சாலையோரங்கள்

இல்லங்களாய்...!


வாழ்நாளில்

சொந்தமாய் ஓர் வீடு

பெரும்பாலோரின் கனவு!

ஒரே நாளில்

ஊரையே அழித்துத்

தரைமட்டமாக்குதல்

சிலரின் நனவு!


உலகே வியக்கும்

வேடிக்கை பார்க்கும்

மனசாட்சியையும்

மனிதநேயத்தையும்

புதைத்துவிட்டவர்களின்

அரசியலை......

- இமாம் கவுஸ் மொய்தீன்

Last update: 23-08-2008 17:21


நன்றி: அதிகாலை.





அன்புடன்,

இமாம்.

http://thamizheamude.blogspot.com/


கவிதை : நாளைய நட்சத்திரங்கள்!!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]


அன்று....
தலையைப் படிய வாரி
எண்ணெய் முகத்தில் வடிய
சீருடை முழுதாயணிந்து
சுமக்க முடியாமல்
புத்தக மூட்டையைச் சுமந்து
கூட்ட நெரிசலிலும் இடிபாடுகளிலும்
சிக்கித் தவித்துப்
பேருந்தில் பயணம் செய்து
பள்ளிக்குச் சென்றபோது
பரிகாசம் பேசியோருண்டு!
பரிதாபம் கொண்டோருண்டு!
விமர்சித்தோரும் பலருண்டு!

இன்று....
படிப்பு முடிந்துவிட்டது
பட்டம் பெற்றாகிவிட்டது
பணியும் கிடைத்துவிட்டது
கை நிறையச் சம்பளம்
வளங்கள் வசதிகள்
வாகனங்கள் ஏவலாட்களென
சொந்த வாழ்வில்....
என்னுடன் புத்தகம் சுமந்த பலரும்
என்னைப் போன்றே
வசதிகள் வளமுடன்....

பணிக்குச் செல்லும் நேரம்
பள்ளிக்குச் செல்வோரைப்
பார்க்கிறேன்!
முதுகில் புத்தக மூட்டை....
அதில் புத்தகங்களுடன்
அவரவரின் எதிர்காலம்
பெற்றோரின் கனவுகள்
கற்பனைகள் உழைப்பு
நம்பிக்கையென அனைத்தையும்
சுமந்து செல்லும் சிறார்கள்!

இதயம் பூரிக்கிறது
நம் நாட்டின்
நாளைய மன்னர்களைக்
காண்கையில்!
இன்று நாம் ஒளிர்வதைப் போல்
நாளை ஒளிர இருக்கும்
இந்தியாவின்
நம்பிக்கை நட்சத்திரங்கள்!!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

நன்றி:தமிழோவியம்.

வலைப்பூ:http://thamizheamude.blogspot.com