Thursday, March 18, 2010

Indian Expats

Indian Expats

Found this site recently.. looks like an amazing place.. check it out ppl..Indian Expat Forums, Classifieds, Events, Jobs and more...

www.abroadindians.com

பணம் தேடும் பந்தயத்தில் .......

பணம் தேடும் பந்தயத்தில் .......

வத்திய மேனியும்
நெற்றியில் வியர்வையுமாக
இங்கே நான்!


கருகிப்போன
கனவுகளுடன்
விட்டு வந்த சொந்தங்களுக்கு
இன்னும் நான்
விடுகதையாய்!!


கூழோ! கஞ்சியோ!
குடிக்கும் போது நீ வேண்டும்;
என எத்தனை முறை சொன்னாலும் நீ;
மூட்டை முடிச்சுடன்
மூட்டைப் பூச்சிகளுடந்தான்
இங்கே நான்!!


பட்டதுப் போதும்
கட்டியவள் அங்கே - என
காட்சிகள்
சாட்சிகள் சொன்னாலும்;
முகெலும்பை ஒடிக்கும்
கடன் மட்டுமே
கண் முன்னாடி!!


பணம் தேடும்
பந்தயத்தில்
பணயமாக நீ மட்டுமே!!


விடைக் கிடைத்தால்
விடைக் கொடுத்துவிடுவேன்
வளைக்குடாவிற்கு!!


சிக்கிய எச்சிலுடன்
சீக்கிரம் வந்துவிடுவேன் என்றாலும்;
உள் அர்தத்தை
உன்னைத் தவிர யாரும் புரிந்துக் கொள்ளமுடியாது!!


வழிந்தோடும்
உன் கண்ணீரை
என் கரம் கொண்டு துடைக்கத்தான் ஆசை;
ஆனால்
அனுப்ப முடிந்தது
வெளி நாட்டு கைக்குட்டை மட்டுமே!!!


- யாசர் அரஃபாத்

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!


A. Mohammad Alavudeen | Cash Control | Finance & Risk Management | Emirates Group
(: +9714-7083176 | 6: +9714-2864132 | *: mohammad.alavudeen@emirates.com

NRI’s offered scholarships

NRI’s offered scholarships

http://arifmaricar.blogspot.com/2010/03/nris-offered-scholarships.html

June 10 last date for receipt of applications The Ministry of Overseas Indian Affairs, Government of India has announced the Scholarship Programme for Diaspora Children (SPDC 2010-2011) to assist children/wards of PIOs / NRIs to pursue undergraduate courses in several disciplines in India. The Educational Consultants India Limited (Ed.CIL), a Government of India Enterprise, has been designated as the Nodal Agency for implementation of the SPDC.

The following are the highlights of the SPDC 2010-2011 :
- 100 scholarships are being offered for undergraduate courses in several disciplines including Engineering/Architecture/Technology, Humanities/Liberal Arts, Commerce, Management-BBA/BBM, Computer-BCA, Journalism, Hotel Management, Agriculture/Animal Husbandry, Sciences, Law, etc. - The programme is open only to PIOs/NRIs from the specified 40 countries, including Kuwait, having a larger concentration of Indian Diaspora.

- 50 percent of the scholarship would be reserved for PIOs. However, in the event of non-availability of suitable PIO candidates, the unfilled slots could be assigned to NRI candidates.

- NRI candidates would be eligible for the grant of scholarship only if their total family income per month does not exceed an amount equivalent to US $2,250 (US dollars two thousand two hundred and fifty only).

- Children ot NRIs should have pursued at least three years of education inclusive of 11th & 12th or equivalent (not beyond), in a foreign country during the last six years, and should have passed the qualifying examination abroad.

n The last date for receipt of duly filled-in application forms in the prescribed format by Ed.CIL is 10th June 2010.

- PIO/NRI students already studying in India on a self-financing basis or under any other arrangement will not be eligible under this scheme, which is open only for fresh admissions in the first semester/year of undergraduate courses.

- Candidates would be selected on the basis of their performances in the qualifying examination (equivalent to plus 2 stage in India) which decides the eligibility to apply for the scholarship scheme. The candidates would also have to fulfill all the criteria prescribed for the purpose.

The guidelines and the application form can be downloaded from http://www.educationindia4u.nic.in/shared/downloaditems/Img180.pdf

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” டாக்டர் பெரியார்தாசன்

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” டாக்டர் பெரியார்தாசன்

சமுதாய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹி வபரகாத்துஹு

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.
நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும், முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார். தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார். “அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.
ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும் இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும், டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்
ஸனாயியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி இணைந்து ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஜித்தாவின் தொழில்பேட்டையாக அறியப்பட்ட ஸனாயியா அழைப்பு மையத்தில் அதன் மேலாளர் ஷேக் “ஃபுவாத் பின் ஹாஸிம் அல் கவ்ஸர்” அவர்களின் முன்னிலையில் நடந்தது.
நிர்வாகத்திறன் பயிற்சி பட்டறை மற்றும் தமிழ் மன்ற சிறப்பு நிகழ்ச்சிகளினால் டாக்டரை அறிந்தவர்களும், முஸ்லிம், இந்து கிருத்துவ சகோதரர்களும் சொற்பொழிவை கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு சகோதரர் சாதிக் சிக்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். அழைப்பு மையத்தின் தமிழ் துறை பொறுப்பாளர் ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் இறுதி சிற்றுரையோடு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.
ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்கள் பேசும்போது, “டாக்டர் அவர்களுடன் சேர்ந்து உம்ரா செய்யும் வாய்ப்பு நேற்று கிடைத்ததாகவும், அப்போது ஜித்தாவில் உள்ளவர்களுக்கு ‘நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்பதை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஏற்று, டாக்டர் அவர்கள் தனது ரியாத் பயணத்தை ஒத்திவைத்ததாகவும் குறிப்பிட்டார். பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டாக்டரின் சொற்பொழிவை இஸ்லாம்கல்வி.காம் www.islamkalvi.com தளத்தில் பார்க்கலாம்.

இஸ்லாமிய வரலற்றில் இந்த மாதம்: ரபீவுல் ஆகிர்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இஸ்லாமிய வரலற்றில் இந்த மாதம்: ரபீவுல் ஆகிர்

நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை மக்களுக்கு எடுத்துக் கூறிய சமயத்தில் இந்த ரபீவுல் ஆகிர் மாதத்தில் நிகழ்ந்த சில வரலாற்று நிகழ்வுகள்.

பஹ்ரான் யுத்தம். இதை நஜ்ரான் யுத்தம் என்றும் சொல்லப்படுகிறது. பத்ரு யுத்ததிற்கும் உஹது யுத்ததிற்கும் இடைப்பட்ட காலத்தில் குரைஷிகளையும், பனூ சுலைம் கூட்டத்தினரையும் எச்சரிப்பதற்காக நயகம் (ஸல்) அவர்கள் படையுடன் சென்று “பஹ்ரான்” என்ற இடத்தில் இந்த மாதம் முழுவதும் தங்கினார்கள். யுத்தம் நடை பெறவில்லை. மீண்டும் மதீனா திரும்பினார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ரபீவுல் அகிர் மாதம் நடந்தது.

மதீனாவிலுள்ள பனூ நழீர் கூட்டத்தைச் சேர்ந்த யூதர்கள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்ய முயற்சி செய்தனர். யூதர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலம் நபியவர்களுக்கு அறிவித்து காப்பாற்றினான். இந்நிகழ்வு ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் நடந்தது.

ஜைது இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படை பனூ சுலைம் கூட்டத்தினரிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்களிடம் போரிட்ட இஸ்லாமிய படையினர் சிலரை கைதிகளாக்கினர். ஒட்டகம் ஆடு போன்ற கால்நடைகளை கனீமத்தாக (வெற்றிப்பொருளாக) எடுத்து வந்தனர். இந்நிகழ்வு ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் நடந்தது.

அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை “துல்கஸ்ஸா” என்ற இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். எதிரிகளில்ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பிவிட்டனர். அவர்களின் கால்நடைகள் வெற்றிப் பொருளாக கிடைத்தது. இந்நிகழ்வும் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் நடைபெற்றது.


தொகுப்பு: மவ்லவி ஏ.சீனி நைனார் முஹம்மது தாவூதி, Dubai ( 055 976 4994 )

ஐ.ஏ.எஸ். தேர்வு எப்படி நடைபெறுகிறது?

ஐ.ஏ.எஸ். தேர்வு எப்படி நடைபெறுகிறது?

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு முக்கியமாக இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது பிரிலிம்ஸ். மற்றொன்று மெயின்ஸ். இதில் பிரில்ம்ஸ் என்பது ஸ்கிரீனிங் டெஸ்ட் மாதிரிதான். இதற்கு புவியியல், வரலாறு.. இப்படிப்பட்ட 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

‘ஜெனரல் ஸ்டடிஸ்’ என்றும் ஒரு பேப்பர் இருக்கிறது. இதில் நம் நாட்டின் இப்போதைய நடப்புகள், இந்திய அரசியல், வரலாறு இப்படி பல துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த மதிப்பெண்ணைக் கொண்டுதான் மெயின்ஸ்க்கு தேர்ந்தெடுப்பார்கள்.

மெயின்ஸில் இரண்டு தேர்வுகள் உண்டு. முதலாவது எழுத்துத் தேர்வு. இதற்கென முதலில் சொன்ன 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஏதாவது இரண்டைத் தேர்வு செய்ய வேண்டும். பிரிலிம்ஸில் எடுத்த சப்ஜெக்டையே மீண்டும் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அதையே தேர்வு செய்தாலும் பரவாயில்லை. இந்தத் தேர்வோடு ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு மாநில மொழியில் தேர்வு எழுத வேண்டும். அதில் போதுமான மதிப்பெண் வாங்கினால்தான், மெயின்ஸில் எழுதிய தேர்வுத்தாள்களைத் திருத்துவார்கள்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் அடுத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டி வரும். இதில் பர்சனாலிட்டி, பேசும் திறன் எல்லாமே உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

டிகிரி எந்த சப்ஜெக்டில் படித்தாலும், பிரிலிம்ஸ் தேர்வுக்கு அதே சப்ஜெக்டைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

எதில் விருப்பம் இருக்கிறதோ, எந்த சப்ஜெக்டுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கிறதோ அதை எடுத்துப் படிக்கலாம். U.P.S.C. கேள்விகளைத் தேர்வு செய்யும் குழு, மூன்று வருடத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கும். ஒரு முறை கேள்வி எளிதாக இருந்தால் மறுமுறையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த சப்ஜெக்டில் நீங்கள் ஸ்டிராங்கோ, அதைத் தேர்வு செய்வது நல்லது.

(நன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்)

தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ்...

தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ்...

கோடை காலத்தில் அனைவரும் உண்ண வேண்டிய அற்புதமான உணவு கம்மங்கூழ்...

அதைப்பற்றியான எனது பதிவை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்...

http://sangkavi.blogspot.com/2010/03/blog-post_16.html

அன்புடன்....
சங்கவி...
sangkavi.blogspot.com
sat10707@gmail.com

துபையில் (Peace) அமைதி மாநாடு

துபையில் (Peace) அமைதி மாநாடு

இஸ்லாம் என்றால் பயங்கரவாதம், தீவிரவாதம் எனும் பூச்சாண்டிக் கருத்துருவாக்கம் உலகெங்கும் வலிந்து திணிக்கப்படும் இக்காலச் சூழலில், அதைத் தவிடுபொடியாகச் செய்யும் "அமைதி மார்க்கத்தின் அழைப்பு" மாநாடுகள் நடத்தப் படுவது காலத்தின் கட்டாயமாகும். அவ்வரிசையில் துபையில் இன்ஷா அல்லாஹ் நாளை 18.03.2010இல் தொடங்கி மூன்றுநாட்கள் நடைபெறவிருக்கும் மாநாட்டில் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடைய சத்தியமார்க்கம்.காம் அன்புடன் வேண்டி, இதை அறிவிக்கின்றது.
கலந்து கொண்டு சிறப்பிப்போர்:

Sheikh Abdur Rahman Al Sudais (Expected)
Imam Masjed Al-Haram (Al-Kaba) – Saudi Arabia

Dr. அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸ் - ஸஊதி அரபியா
ஈர்த்திழுக்கும் இவரது மறையோதல் உலகப் புகழ் பெற்றது. 1961ஆம் ஆண்டு பிறந்த ஷேக் அப்துர் ரஹ்மான், தமது 12ஆவது வயதில் இறைமறையை முழுமையாக மனனம் செய்தவர். ஹிஜ்ரீ 1399ஆம் ஆண்டு ரியாத் மருத்துவக் கழகத்தின் மிகச் சிறந்த மாணவராகப் பட்டம் பெற்ற மருத்துவர். ஷேக் அப்துர் ரஹ்மான் அவர்கள், தமது 'இஸ்லாமிய அடிப்படை நெறிமுறை' (ஷரீஆ) இளங்கலைப் பட்டத்தை ரியாத் பல்கலைக் கழகத்தில் 1983இல் நிறைவு செய்தார். பின்னர், இமாம் முஹம்மது இபுனு ஸஊத் இஸ்லாமியப் பலகலைக் கழகத்தில் தமது முதுநிலைக் கல்வியை 1987இலும் இஸ்லாமிய நெறிமுறை (ஷரீஆ) ஆய்வுக்கான முனைவர் பட்டத்தை உம்முல் குரா பல்கலைக் கழகத்தில் 1995இலும் நிறைவு செய்தார். ஹிஜ்ரீ 1404 ஷஅபான் மாதம் 22ஆம் நாள்முதல் கஅபாவின் இமாமாகப் பணியாற்றுகிறார். அன்னார், சிறுவயது முதல் தம் நல்லொழுக்கத்தாலும் இப்போதும் பின்பற்றும் எளிமையாலும் அனவரையும் கவர்ந்தவர்.

Sheikh Mishary Rashid Al Effasy - Kuwait
ஷேக் மிஷாரீ ராஷித் அல் இஃபாஸி - குவைத்

ஷேக் மிஷாரீ அவர்கள் 1976இல் குவைத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த ஓதுவார் (காரீ அல் குர்ஆன்). மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் அல் குர்ஆனையும் இஸ்லாமியக் கல்வியையும் பயின்றவர். மறையோதுதலின் நுட்பங்களை கற்றுத் தேர்ந்த ஷேக் மிஷாரீ, குவைத்தின் பெரிய பள்ளிவாயிலின் இமாமாகப் பணியாற்றுகிறார். இவரது குரலில் அல் குர்ஆன் யூ-ட்யூபில் கேட்கக் கிடைக்கிறது.

Dr. Hussain Hamed Hassan - Egypt
Dr. ஹுஸைன் ஹாமித் ஹஸன் - எகிப்து
Dr. ஹுஸைன் ஹாமித் ஹஸன் அவர்கள் இஸ்லாமியப் பொருளாதாரத் துறையில் சமகாலத்தவரின் தந்தை எனப் பேசப் படுகிறார். கைரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் தமது முனைவர் பட்டத்தைக் கடந்த 1965இல் பெற்றவர். கூடுதலாக, ந்யூயார்க் பலகலைக் கழகத்தின் 'உலகளாவிய ஒப்பீட்டுச் சட்டப் பயிற்சி' மையத்திலிருந்து இரு பட்டங்களைப் பெற்றிருக்கிறார். எகிப்து அரசின் தலைமை வழக்கறிஞராக 1969-1970 பணியாற்றியுள்ளார். தற்போது மத்தியக் கிழக்கின் பல இஸ்லாமிய வங்கிகளுக்கு மட்டுமின்றி, பொருளாதாரக் கல்விப் பயிலகங்களின் நெறிமுறைக் கண்காணிப்புக் குழுமத்தின் தலைவராகவும் மத்தியக் கிழக்கின் அரசாங்கங்கள் சிலவற்றுக்குப் பொருளாதார ஆலோசகராகவும் திகழ்கிறார்.

Yasir Qadhi - USA
ஷேக் யாஸிர் காழி - அமெரிக்கா
ஷேக் யாஸிர் காழி அவர்கள் அமெரிக்காவின் டெக்ஸஸில் உள்ள ஹ்யூஸ்டனில் பிறந்தவர். மேனிலைப் பள்ளிப் படிப்பை ஸஊதியில் உள்ள ஜித்தாவிலும் இஸ்லாமியக் கல்வியை மதீனாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலும் பயின்றவர். தமது இஸ்லாமியக் கல்வி ஆய்வுக்கான முனைவர் பட்டத்தை அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழத்தில் அண்மையில் பெற்றார் ஷேக் யாஸிர். மிகச் சிறந்த பேச்சாளரும் இஸ்லாமிய அழைப்பாளருமான ஷேக் யாஸிரின் அழைப்புப் பிரச்சாரங்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்துள்ளன. ப்பீஸ், இஸ்லாம்(இங்கிலாந்து), அல்-ஹுதா(ஸஊதி அரேபியா), அல்-ஃபஜ்ரு(எகிப்து) ஆகிய தொலைக்காட்சிகளிலும் இவரது இஸ்லாமியப் பிரச்சாரம் ஒளிபரப்பப் படுகிறது.

Yusuf Estes - USA
ஷேக் யூஸுஃப் எஸ்ட்ஸ் - அமெரிக்கா

"விளையாட்டுப் பிள்ளை" என்று கேள்விப் பட்டிருக்கிறோமில்லையா? போலவே, அமெரிக்காவின் யூஸுஃப் எஸ்ட்ஸ் அவர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரின் உள்ளங்களையும் தம் விளையாட்டுப் பேச்சினால் கொள்ளை கொண்ட இந்த "விளையாட்டு ஷேக்" ஒரு முன்னாள் கிருஸ்துவப் பாதிரியாவார். ஐ.நா.வின் மத அமைதி-நல்லிணக்கத் தலைவர்களில் அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். எகிப்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமைக் கிருஸ்துவத்துக்கு மதமாற்ற முயன்றபோது இஸ்லாத்தின் வலையில் தாமாகவே வந்து 'வீழ்ந்துபட' நேந்ததை விளையாட்டாக எளிமையான ஆங்கிலத்தில் அவர் விவரிக்கும்போது சிரிப்பும் அழுகையும் கலந்த அனுபவம் உண்டாகும். வெகு எளிமையான ஆங்கிலத்தில் விளையாட்டுத்தனமாகப் பேசியே பலரை இஸ்லாத்தின் பக்கம் அழத்து வந்திருக்கிறார். இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காகவே பல இணைய தளங்களை நடத்திவருகிறர். அவரது சொந்தப் பெயரிலும் (www.YusufEstes.com) பிற பெயர்களிலும் இயங்கும் இணைய தளங்களுள் குறிப்பிடத் தக்கவை : (www.BibleIslam.com), (www.ShareIslam.com).

Abdur Raheem Green - UK
ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன் - இங்கிலாந்து

ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன் அவர்கள் ஆங்கிலேய முடியாட்சியின் கீழ் இராணுவப்படை நிர்வாகியாத் திகழ்ந்த தந்தைக்கு, தான்ஸானியாவின் தலைநகரான தாருஸ்ஸலாமில் பிறந்தவர். குடும்பம் முழுதும் இங்லாந்துக்கு மீண்டு, லண்டன் கிருஸ்துவப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றவர். மாணவப் பருவத்திலேயே வாழ்வின் பொருளைத்தேடி, தம் உள்ளம் அலைபாயுவதை உணர்ந்தவர். தம் கலாச்சாரத்தை, வாழும் வழியைப் பல்வேறு வகையில் தன்னுள் கேள்விக்குட்படுத்தியவர். பிறகென்ன? தேடிக் கொண்டே இருப்பவர்களை இறுதியாக எதிர்கொள்வது அல்லாஹ்வின் வேதம்தானே! அது 1987இல் அவர் கைக்குக் கிடைத்தது. அன்றுமுதல் இன்றுவரை தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனப் பிறருக்கு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் சிறந்த அழைப்பாளர்களுள் ஒருவராக மாறிவிட்டார் ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன். அவரது இணையதளம் www.IslamsGreen.org

Sheikh Hussain Yee - Malaysia
ஷேக் ஹுஸைன் யீ - மலேஷியா

"சீனஞ் சென்றேனும் ஞானம் தேடு" என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. இந்தச் சீனவழிவந்த "யீ" அவர்களுக்கு ஞானம் பிறந்தது மலேஷியாவில். புத்தமதக் குடும்பத்தில் பிறந்த "யீ", தமது 18ஆவது வயதில் (1978) இஸ்லாத்தைத் தழுவினார். இஸ்லாமியக் கல்வி பயில்வதற்காக அவர் தேர்ந்து கொண்டது மதீனாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகம். தேர்ந்தெடுத்த துறை ஹதீஸுக்கலை. பட்டம் பெற்றது 1978இல். மலேஷியாவில் புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களுக்கு அடிப்படை போதனைகளையும் வாழும் வழிகளையும் சொல்லிக் கொடுப்பதற்குத் தோற்றுவிக்கப்பட்ட 'முஸ்லிம் சமூகநல அமைப்பு (Perkin)'இல் தம்மை இணைத்துக் கொண்டார் ஷேக் ஹுஸைன். பின்னர் ஹாங்காங்கின் இஸ்லாமிய மையத்தின் இயக்குநர் பொறுப்பேற்றார். மலேஷியாவில் "அல்-காதிம்" (தொண்டன்) எனும் அமைப்பை 1984இல் நிறுவி அழைப்புப் பணியைத் தொடர்ந்தார். சமகால ஹதீஸுக்கலை விற்பன்னர்களில் தலையானவரான இமாம் முஹம்மது நாஸிருத்தீன் அல்-அல்பானீ (ரஹ்) அவர்களின் மாணவராவார் ஷேக் ஹுஸைன்.

M.M Akbar - India
ஷேக் எம். முஹம்மது அக்பர் - இந்தியா

இயற்பியல் பட்டதாரியான எம். முஹம்மது அக்பர், ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் சுற்றிக் கொண்டேயிருக்கும் இஸ்லாமிய அழைப்பாளர். கேரளாவில் பிறந்த ஷேக் அக்பர் இஸ்லாமியப் பிரச்சாரத்திலும் பிறமத நண்பர்களுடன் நடத்தும் நட்புமுறையில் அமைந்த விவாதத்திலும் கெட்டிக்காரர். "ஸ்நேகஸம்வாதம்" (Friendly debate) எனும் பெயருடைய மலையாள மாத இதழின் ஆசிரியர். "நிஜம்" எனும் தஃவா அமைப்பின் நிறுவன இயக்குநர். Peace எனும் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். "Bibilinte Daivikatha-Vimarshangal, Vasthuthakal" (Divinity of Bible-Criticisms and Truths), "Haindavatha - Dharmavum Dharshanavum" (Hinduism – Religion and Ideology) ஆகிய நூல்களை எழுதிய மிகச் சிறந்த எழுத்தாளர்.

Saeed Rageah - Canada
ஷேக் ஸயீத் ராகேஹ் - கனடா
சோமாலியாவில் பிறந்து ஸஊதியில் வளர்ந்து, வட அமெரிக்காவுக்குப் பெயர்ந்து, தற்போது கனடாவின் டோரொண்டோவில் அபூஹுரைரா இஸ்லாமிய மையத்தில் இமாமாகப் பணியாற்றும் ஷேக் ஸயீத், இஸ்லாமியக் கல்வியில் இளங்கலைப் பட்டமும் வெர்ஜினீயாவின் ஃபயர்ஃபாக்ஸில் உள்ள 'இஸ்லாமிய, அரபு அறிவியல் பயிலக Institute of Islamic and Arabic Sciences'த்தில் நெறிமுறை(ஷரீஆ)க் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நாவன்மை மிக்கவர். மஸ்ஜிது ஹுதா (மோண்டரல்), மஸ்ஜித் ஆயா (மேரீலாண்ட்) "முஸ்லிம் இளையோர்" இதழ், "அக்ஸாக் கூட்டமைப்பு" ஆகியவற்றின் நிறுவனர் ஆவார் ஷேக் ஸயீத்.
Ahmed Hamed - India
ஷேக் அஹ்மது ஹாமித் - இந்தியா
"அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை ஆகும்" எனக் கூறும் ஷேக் அஹ்மது ஹாமித், 28 வயது நிரம்பிய இந்திய இளைஞர். வணிகவியலில் முதுநிலைப் பட்டதாரியான அஹ்மது, கடந்த சில ஆண்டுகளாகவே அழைப்புப் பணியில் தீவிரமாக இயங்கி வருகிறார். "இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதலை, குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் அமைந்த பிரச்சாரம் ஒன்றின் மூலமே களைய முடியும்" எனக் கூறும் அஹ்மது, எவரையும் கவரும் நாவன்மை கொண்டவர். பல்வகைப்பட்ட தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்காற்றியவர். அமீரகங்கள், ஸஊதி அரபியா, இங்கிலாந்து, மலேஷியா ஆகிய நாடுகளில் அழைப்புப் பணி செய்திருக்கிறார். தாஇகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் ஷேக் அஹ்மது.

Zain Bhikha - South Africa
ஸைன் பிகா - தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவின் ப்ரிட்டோரியாவில் 1974இல் பிறந்த ஷேக் ஸைன், சிறுவயதில் குரலினிமை கொண்ட சிறந்த பாடகராம். ப்ரிட்டோரியா முஸ்லிம் பள்ளிக்கூடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இஸ்லாத்தை மையப் படுத்தி, "வாழும் வழி - A Way of Life" எனும் ஒரு கவிதைத் தொகுப்பையும் பின்னர் "Praise to the Prophet (SAW)" (1996), "Fortunate is He" (1997) and "The Journey" (1998) ஆகிய தொகுப்புகளையும் ஸைன் வழங்கியுள்ளார்.

நிகழ்ச்சி நிரல்:
வியாழன் 18.03.200
மாலை 5 முதல் இரவு 11:30 வரை : மாநாட்டுத் தொடக்கம், உரைகள், பொருட்காட்சி
வெள்ளி 19.03.2010
காலை 10 முதல் பகல் 1 வரை : உரைகள், ஜும் ஆத் தொழுகை, பொருட்காட்சி
பகல் 2.30 முதல் இரவு 11:30 வரை : உரைகள், கிரா அத், கவிதை, பொருட்காட்சி
சனி 20.03.2010
காலை 10 முதல் பகல் 1 வரை : உரைகள், பொருட்காட்சி
பகல் 2.30 முதல் மாலை 6 வரை : உரைகள், பொருட்காட்சி
மாலை 6.30 முதல் இரவு 11.30 வரை : பொருட்காட்சி, மாநாட்டு நிறைவு
கூடுதல் விபரங்களுக்கு: http://www.peaceconvention.com/

நன்றி : பீஸ் ட்ரைன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1857)

முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1857)

அலமா பஜல் ஹக் - உத்திரப் பிரதேசம்
லியாகத் அலி - உத்திரப் பிரதேசம்
குலாப் கான் - மத்தியப் பிரதேசம்
முஹிபுல்லாஹ் - மத்தியப் பிரதேசம்
மிர் ஜாபர் அலி தன்ச்வாரி - மத்தியப் பிரதேசம்
நூரா - மத்தியப் பிரதேசம்
சிராஜுதீன் - மத்தியப் பிரதேசம்
கையும் கான் - மத்தியப் பிரதேசம்
மௌலவி சயீத் அலாவுதீன் - ஹைதராபாத்
மது மாலிக் - அஸ்ஸாம்
ஷேக் பர்மூத் அலி - அஸ்ஸாம்

வஹாபி போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1860 - 1870)

அஹமதுல்லாஹ்
அமிருதீன்
இப்ராகிம் மண்டல்
முஹம்மது சேர் அலி
யஹ்யா அலி

மாப்பிளா புரட்சியில் (கேரளா ) ஈடுபட்ட காரணத்தால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள்: (1922 - 1924)

நெல்லிப்பரம்பன் அலவி ஹாஜி
கொலபரம்பன் குஞ்சலாவி
கொழிச்செரி கோயா குட்டி
அம்பட்டுபரம்பன் சைதலிப்பா
கயக்கட்டிபரம்பில் குன்ஜெனி
மசிங்கள் ரயின்
குதுகள்ளன் குஞ்சிரா
சுந்காத் அதான்
வரியாத்வளப்பில் அஹம்மத் குட்டி
மட்டும்மால் அஹம்மத் குட்டி
பொயிக்குன்னான் மரைக்கார்
மசின்சேரி அலவி
பொகத் கொயமி
குஞ்சிக் காதர் மொல்லா
முகரி குஞ்சயம்மு
குன்ஹி மொஹிதீன் குட்டி
பூவகுண்டில் அலவி
குஞ்சிடு
அரிபார பாகர்
மட்டும்மால் மரைக்கார்
குட்டி ஹசான்

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் (1909 - 1921)

அலி அஹ்மத் சித்திகி - பஞ்சாப்
முஸ்தப்பா ஹுசைன்

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் (1932 - 1938)

அப்துல் காதர் சௌத்ரி - மேற்கு வங்காளம்
சிராஜுல் ஹக் - மேற்கு வங்காளம்
முஹம்மது இப்ராகிம் - மேற்கு வங்காளம்

Laugh out loud

Laugh out loud

R. Priyadarshini

16 March 2010

Say the word recession and some Dubai residents literally laugh it away. Don’t believe us? Well then you’ll have to check out the Emirates Humour Club to see what’s so funny

The fifth floor auditorium at the Karama Centre in Dubai recently roared with laughter when the Emirates Humour Club (EHC) held its first anniversary function attended by around 350 people. What started with a handful of residents sharing jokes has now become a hugely popular event around the city.

“EHC also stands for ‘Eeee, Haaa, Corner’ where once a month, ordinary people gather, laugh it out and become extraordinary people. This is one forum where people take humour seriously and everything else in life lightly,” say KG Guna and Suresh Krishnan, who are the brains behind the club. Both are seasoned entertainers and communicators with a penchant for humour.

‘Know humour? No worries! No humour? Know worries!’ is the tag line of the venue, and sex, religion and politics are forbidden subjects. True happiness is to make others happy and members literally live by this rule, insists Suresh.

The president of the club opens proceedings with a humorous welcome address which is followed by the general humour session, and after breaking the ice, calls out people from a list to the podium to share some humour.

Joke sharing is the basic requirement for a humorist. Applied humour like mimicry, slapstick comedy and miming are also in the fray.

Humorous skits are part of the activities at the EHC club and with every session, special skits spanning 10 to 15 minutes enthrall the audience, covering everything from contemporary news to interesting facts from around the world.

The U.A.E. is a rare country where people of more than 150 nationalities live in harmony. How does EHC intend to break the language barrier as its present programmes are mostly in Indian languages?

“The EHC is planning to have its second chapter in English. This is primarily aimed at expanding our horizon and includes numerous humour lovers from other sections of the community, as well as children. We are open to one and all,” says Guna.
“Many people still hesitate to take to the stage and share a joke. If I say something funny, they will laugh. But the basic idea of the club is to do just that,” he says with a smile.

Dr Sujatha Parthasarathy, an active member of the club, believes ‘humour is infectious’.

“At a time when there are so many negative thoughts thanks to the recession,” he says, “nothing proves better than loads of humour to lighten our burden.”
Guna and Suresh echo the same sentiment.

“People asked us where is the need for such a club at a time when recession is striking everyone hard. We replied that this is precisely the right time as nothing offers better remedy than comedy.”

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
விளையாட்டு – தங்கும் விடுதி
2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன் : 2841 2742
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30 மே 2010
தலைவர் : டாக்டர் சையத் எம்.எம். அமீன்
ஏழை மாணவர் இல்லம்
தொலைபேசி : 2848 1344

தியாகிகள் மையம் நடத்தும் அறிவுத்திறன் போட்டிகள்

தியாகிகள் மையம் நடத்தும் அறிவுத்திறன் போட்டிகள்
கட்டுரைப்போட்டி தலைப்பு :
பெரும் புரட்சியாளர் பெருமானார் ( அல்லது )
நம் தியாகத்தால் கிடைத்தது நாட்டுக்கு சுதந்திரம்
சும்மா கிடைக்குமோ ஆட்சி, அதிகாரம்
- ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஓர் ஆய்வு

கலந்து கொள்ளத் தகுதி : மாணவர்கள் மற்றும் 40 வயதிற்குட்பட்ட அனைவரும்
அளவு : ஏ4 அளவுத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் டைப் செய்து ஐந்து பக்கங்களுக்கு மிகாமல்
தியாகிகள் மையத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15 ஏப்ரல் 2010

பரிசு : நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு தலா ரூ. 5000 மற்றும் ஆறுதல் பரிசுகள்

முகவரி :
தியாகிகள் மையம்
எண் 10 ( பழைய எண் 73 ) தாதா முத்தியப்பன் தெரு ( பிராட்வே )
பிளாட் எண் 5 முதல் தளம்
கொத்தவால் சாவடி காவல் நிலையம் எதிரில்
ஜார்ஜ் டவுண்
சென்னை 600 001
போன் : 044 – 421 65 352

சமரசம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2010

சமரசம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2010

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1078

• இஸ்லாமிய மாண்புகளை, பண்பாடுகளை வலியுறுத்தும் வகையிலோ, இஸ்லாமிய வாழ்வியலின் சிறப்புக் கூறுகளை எடுத்துக் கூறும் வகையிலோ சிறுகதைகள் அமையலாம்
• சிறுகதைகள் மொழிபெயர்ப்பாகவோ, தழுவலாகவோ இருக்கக் கூடாது. சொந்தப் படைப்பு என்பதற்கான உறுதிமொழி அளிக்கப்படல் வேண்டும்.
• இதற்கு முன்பு வேறு எந்த ஊடகத்திலும் எந்த வடிவிலும் வெளியானதாக இருக்கக் கூடாது.
• பெயர், முகவரி, அலைப்பேசி எண் ஆகியவற்றைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதைப் பக்கங்களில் பெயரோ, முகவரியோ இடம் பெறக்கூடாது.
• அஞ்சல் தலை வைத்து அனுப்ப வேண்டாம். தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.
• சமரசத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் அமைய வேண்டும்.
• உறையின் மேல் சமரசம் சிறுகதைப் போட்டி என்று குறிப்பிடுக
• நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
முதல் பரிசு : ரூ 2000
இரண்டாம் பரிசு : ரூ. 1000
மூன்றாம் பரிசு : ரூ. 500
( பரிசு பெறாத கதைகள் தகுதியிருப்பின் சமரசம் இதழில் வெளியாகும் )
சிறுகதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 31.03.2010
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர்
சமரசம்
எண் 138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
தொலைபேசி : 2662 0091
தொலைநகல் : 2662 0682
மின்னஞ்சல் : samarasam12@gmail.com
www.samarasam.net