வேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை...
ஐ.டி., துறை தொடர்புடைய ஒரு புதிய வேலையையோ, அல்லது வகிக்கும் பதவியில் ஒரு உயர்வையோ பெறுவதற்கு ஐ.டி., துறை தொடர்புடைய சான்றிதழ் படிப்புகள் பெரிதும் உதவி புரிகின்றன.
இன்றைய உலகம் சர்வ தேசப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இந்த நாட்களில் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதோடு, ஐ.டி., துறையும் இழந்த பெருமையை மீண்டும் பெறும் நிலைக்கு முன்னேறி வருகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில் எந்தெந்த ஐ.டி., சான்றிதழ் படிப்புகளுக்கு இனி வரும் நாட்களில் நல்ல மதிப்பிருக்கும் என்ற ஒரு ஆராய்ச்சியை பூட் பார்ட்னர்ஸ் என்ற தொழில் ஆய்வு நிறுவனம் நடத்தியது. அந்த ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்ட முதல் 10 படிப்புகள் இவைதான் :
வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல் : தற்போது வர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜிக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே வி.சி.பி., என்ற வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் வி.சி.பி.,களுக்கு அதிக தேவை இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்தப் படிப்பு முதலிடத்தைப் பெறுகிறது.
சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் : தகவல் தொழில் நுட்ப ஆடிட்டிங் பிரிவில் ஐ.எஸ்.ஏ.சி.ஏ., என்ற அமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சி.ஐ.எஸ்.ஏ., என்ற சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் சான்றிதழ் படிப்பு முன்னிலை வகிக்கிறது. இருந்த போதும் இந்த சான்றிதழைப் பெற ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பு வகுத்துள்ள நிர்ப்பந்தங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஜி.ஐ.ஏ.சி., செக்யூரிட்டி ஆடிட் எசன்சியல்ஸ் : ஒரு நிறுவனத்தின் திட்டம், செயல்முறை, ஆபத்துக்கள் போன்ற நிறுவனம் தொடர்புடைய தகவல் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சான்றிதழ் படிப்பாகும் இது. இந்தப் பிரிவில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கலாம்.
சர்டிபைடு இன்பர்மேஷன் செக்யூரிட்டி மேனேஜர் : ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பினால் தகவல் பாதுகாப்பு மேலாளர்களுக்கு வழங்கப்படும் சி.எஸ்.ஐ.எம்., சான்றிதழ் படிப்பாகும் இது.
பாயிண்ட் சர்டிபைடு செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் : ஐ.டி., தகவல் பாதுகாப்புத் துறையில் அனுபவம் கொண்ட தொழில் நுட்ப அறிவு படைத்தவர்களுக்காக சி.சி.எஸ்.இ., என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பு முழுக்க நுகர்வோரின் தேவைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இதனைப் படிப்பதன் மூலம் முழுமையான தகவல் பாதுகாப்பு குறித்த திறன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பாயின்ட் சர்டிபைடு செக்யூரிட்டி அட்மினிஸ்டிரேடர் : இதுவும் பாயின்ட் சர்டிபிகேஷனில் மற்றொரு படிப்பாகும். சி.சி.எஸ்.ஏ., என்ற இந்தப் படிப்பில் உபயோகிப்பாளரின் அன்றாட பாதுகாப்பு, வலையமைப்பில் தகவல்கள் சிதறாமலிருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி பாடப் பகுதிகள் இருக்கும்.
மைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம்ஸ் என்ஜினியர்(செக்யூரிட்டி) : எம்.சி.எஸ்.இ., என்ற இந்த சான்றிதழ் படிப்பை மேற்கொள்வதன் மூலம் வடிவமைத்தல், செயல்படுத்துதல், உள்கட்டமைப்பு நிர்வாகம் ஆகிய பகுதிகளில் ஒரு தனி நபரின் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். வியாபாரத் தேவைகளை நிறைவேற்ற விண்டோஸ் 2003 மற்றும் விண்டோஸ் 2000 சர்வர்களை உபயோகிக்கும் நிறுவனங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.
சர்டிபைடு வயர்லெஸ் செக்யூரிட்டி புரபஷனல் : ஒயர்லெஸ் நெட் வொர்க்குகளைப் பெற உதவிடும் விதத்தில் வழங்கப்படும் மிக ஆழமான சான்றிதழ் படிப்பாக சி.டபிள்யூ.எஸ்.பி., படிப்பு இருக்கிறது. இந்தப் படிப்பில் 802.11 வயர்லெஸ் லான் டெக்னாலஜி குறித்த ஆழமான பாடப் பகுதிகள் இருக்கும்.
ஜி.ஐ.ஏ.சி., சர்டிபைடு இண்ட்ரூஷன் அனலிஸ்ட் : ஜி.சி.ஐ.ஏ., என்ற இந்தப் படிப்பும் தகவல் பாதுகாப்பு குறித்த ஒன்றுதான். இதில் தொழில் நுட்ப ரீதியான மற்றும் செயல்முறையுடன் கூடிய சிறப்பு அணுகுமுறைகள் உண்டு. இந்தப் படிப்பை சான்ஸ் என்ற கல்வி நிறுவனம் 1999 முதல் நடத்தி வருகிறது.
சிஸ்கோ சர்டிபைடு நெட்வொர்க் புரபஷனல் : சி.சி.என்.பி., என்ற இந்தப் படிப்பை சிஸ்கோ நிறுவனம் நடத்துகிறது. இதுவும் உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டதுதான். இந்தப் படிப்பில் லோகல் ஏரியா நெட் வொர்க்கில் திட்டமிடுதல், செயல்படுத்துதல், சோதனை செய்தல், பிரச்னைகளைக் கையாளுதல்,
திறனாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு, ஒலி, வயர்லெஸ், மற்றும் வீடியோ தொழில் நுட்பம் போன்றவற்றில் பணியாற்றுதல் ஆகியவை கையாளப்படுகிறது.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label படிப்பு. Show all posts
Showing posts with label படிப்பு. Show all posts
Thursday, June 10, 2010
Thursday, December 31, 2009
பார்க்கவும் வேண்டுமோ..????
பார்க்கவும் வேண்டுமோ..????
பட்டப் படிப்பு முடிப்பதற்குள்...கணினி
வேலைக்கும் உத்தரவு.....
இருபத்தியொரு வயதினிலே....
இருபத்தைந்தாயிரம் கையினிலே.....
கேட்கவும் வேண்டுமோ..?
யௌவன கர்வம்.....
வாணியும்...'ஸ்ரீ' யும் கூடி நிற்க...
அழகோடு அறிவும் சேர்ந்தால்....
கேட்கவும் வேண்டுமோ..?
மனமகுடதிற்கு.....கூடவே....
குணம் குன்றலானது.....
கண்பார்க்கும் எதுவும் துச்சமானது...
வருமானம் தந்த தன்மானம்.....
கேட்கவும் வேண்டுமோ..?
காதோடு இணைந்த 'கைபேசி'
தோளோடு தழுவும் 'தோல்ப்பை'..
உலகமே துச்சமாய் ஒரு பார்வை...
கேட்கவும் வேண்டுமோ..?
கவலை ஏதும் அறியாது....
உலக உண்மை புரியாது...
பெற்றோர்களின் அறிவுரைகள்...
அறவே..தனக்குப் பிடிக்காது....
தறுதலை பதில்களும்..வெறும்..
தலையாட்டலும்......அனாசய
நிராகரிப்பில்...
கேட்கவும் வேண்டுமோ?...
பணதருமை அறியாது...
பச்சை நோட்டுக்கள் கத்தை கத்தையாய்...
பூச் செண்டுக்கும், செருப்புக்கும், சென்ட்டுக்கும் பறக்க...
சொல்லப் போனால்....'சுதந்திரம் போச்சு'
என.. ஏக வசனத்தில் வெடிக்க....
கேட்கவும் வேண்டுமோ....?
வளர்ந்த பெண்ணின் வாய்க்கு
பயந்து....பயந்து.....பயந்து.........
அன்பின் அச்சாணியில்....சுழன்று...
போகும் வழி தவறென்று......
மனசுக்குள் மணி அடிக்க...
கேட்கவும் வேண்டுமோ..?
பெற்றவரின் மன உளைச்சல்...
பெருமை எல்லாம் ஊருக்காகத்தான்..
வீட்டின் உள்ளே.....பொருமித் தீர்க்கும் மனசு....!!
கேட்கவும் வேண்டுமோ...?
கால்கட்டு போட்டுவிட்டால்...பெண்
கைபிடிக்குள் வந்திடுவாள்....என
ஏமாளிப் பெற்றோர்கள்.....வரன் தேடி அலைய.........
கோமாளி ஆகுதற்க்கே.....புதுத் துணையோடு...
நுழைந்தாள்......மகள்....!!!
கேட்கவும் வேண்டுமோ...?
பட்டமும்.. ..வேலையும்.....வந்ததால்.....
தந்ததே.....சுதந்திரம்....அவளுக்கு...
மாலையாய்....... வந்ததே....
மலர்வளையம்..... எங்களுக்கு..!!!!
பார்க்கவும் வேண்டுமோ..????
ஜெயஸ்ரீ ஷங்கர்....
பட்டப் படிப்பு முடிப்பதற்குள்...கணினி
வேலைக்கும் உத்தரவு.....
இருபத்தியொரு வயதினிலே....
இருபத்தைந்தாயிரம் கையினிலே.....
கேட்கவும் வேண்டுமோ..?
யௌவன கர்வம்.....
வாணியும்...'ஸ்ரீ' யும் கூடி நிற்க...
அழகோடு அறிவும் சேர்ந்தால்....
கேட்கவும் வேண்டுமோ..?
மனமகுடதிற்கு.....கூடவே....
குணம் குன்றலானது.....
கண்பார்க்கும் எதுவும் துச்சமானது...
வருமானம் தந்த தன்மானம்.....
கேட்கவும் வேண்டுமோ..?
காதோடு இணைந்த 'கைபேசி'
தோளோடு தழுவும் 'தோல்ப்பை'..
உலகமே துச்சமாய் ஒரு பார்வை...
கேட்கவும் வேண்டுமோ..?
கவலை ஏதும் அறியாது....
உலக உண்மை புரியாது...
பெற்றோர்களின் அறிவுரைகள்...
அறவே..தனக்குப் பிடிக்காது....
தறுதலை பதில்களும்..வெறும்..
தலையாட்டலும்......அனாசய
நிராகரிப்பில்...
கேட்கவும் வேண்டுமோ?...
பணதருமை அறியாது...
பச்சை நோட்டுக்கள் கத்தை கத்தையாய்...
பூச் செண்டுக்கும், செருப்புக்கும், சென்ட்டுக்கும் பறக்க...
சொல்லப் போனால்....'சுதந்திரம் போச்சு'
என.. ஏக வசனத்தில் வெடிக்க....
கேட்கவும் வேண்டுமோ....?
வளர்ந்த பெண்ணின் வாய்க்கு
பயந்து....பயந்து.....பயந்து.........
அன்பின் அச்சாணியில்....சுழன்று...
போகும் வழி தவறென்று......
மனசுக்குள் மணி அடிக்க...
கேட்கவும் வேண்டுமோ..?
பெற்றவரின் மன உளைச்சல்...
பெருமை எல்லாம் ஊருக்காகத்தான்..
வீட்டின் உள்ளே.....பொருமித் தீர்க்கும் மனசு....!!
கேட்கவும் வேண்டுமோ...?
கால்கட்டு போட்டுவிட்டால்...பெண்
கைபிடிக்குள் வந்திடுவாள்....என
ஏமாளிப் பெற்றோர்கள்.....வரன் தேடி அலைய.........
கோமாளி ஆகுதற்க்கே.....புதுத் துணையோடு...
நுழைந்தாள்......மகள்....!!!
கேட்கவும் வேண்டுமோ...?
பட்டமும்.. ..வேலையும்.....வந்ததால்.....
தந்ததே.....சுதந்திரம்....அவளுக்கு...
மாலையாய்....... வந்ததே....
மலர்வளையம்..... எங்களுக்கு..!!!!
பார்க்கவும் வேண்டுமோ..????
ஜெயஸ்ரீ ஷங்கர்....
Saturday, May 9, 2009
வி.களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வி.களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்ட வி. களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி 11.05.2009 திங்கட்கிழமை ஜும் ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி கற்க வழிகாட்டுதல், எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு தொடரமுடியாத ஆண், பெண்களுக்கு மேற்கொண்டு பட்டப்படிப்பு தொடர வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு உள்ளிட்டவை வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை செய்துள்ளது.
குறிப்பு :
இதுபோன்ற கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை தங்களது ஊரில் நட த்த விரும்புவோர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் அவர்களை 9965892706. எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்ட வி. களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி 11.05.2009 திங்கட்கிழமை ஜும் ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி கற்க வழிகாட்டுதல், எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு தொடரமுடியாத ஆண், பெண்களுக்கு மேற்கொண்டு பட்டப்படிப்பு தொடர வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு உள்ளிட்டவை வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை செய்துள்ளது.
குறிப்பு :
இதுபோன்ற கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை தங்களது ஊரில் நட த்த விரும்புவோர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் அவர்களை 9965892706. எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
Labels:
நிகழ்ச்சி,
படிப்பு,
வழிகாட்டுதல்,
வி.களத்தூர்
Friday, August 15, 2008
ரியல் எஸ்டேட் பற்றிய முதுநிலை பட்டப் படிப்பு அறிமுகம்
ரியல் எஸ்டேட் பற்றிய முதுநிலை பட்டப் படிப்பு அறிமுகம்
சென்னை, ஆக. 14 : இந்தியாவில் முதன்முறையாக ரியல் எஸ்டேட் தொடர்பாக எம்.ஆர்க். (ரியல் எஸ்டேட்) என்ற படிப்பை தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் (மியாசி) கட்டடக் கலை அகாதெமி அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை புதுக்கல்லூரி வளாகத்தில் 1999-ம் ஆண்டு முதல் "மியாசி' அகாதெமி, கட்டடக் கலையில் பி.ஆர்க். பட்டப் படிப்பை நடத்தி வருகிறது.
இந்தக் கல்வியாண்டு கட்டடக் கலை கவுன்சிலின் (கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்) அனுமதியோடு ரியல் எஸ்டேட் துறையில் இரண்டாண்டு எம்.ஆர்க். பட்டப் படிப்பை தொடங்கியுள்ளது.
ரியல் எஸ்டேட் சார்ந்த வடிவமைப்பு, செயல்பாடு, நிதி மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
"மியாசி' அகாதெமியின் எம்.ஆர்க். கல்வித் திட்ட ஆலோசனைக் குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்று "மியாசி' கட்டடக் கலை அகாதெமியின் நிறுவனர் கே. அமீனூர் ரகுமான், இயக்குநர் அல்டாஃப் அகமது ஆகியோர் தெரிவித்தனர்.
சென்னை, ஆக. 14 : இந்தியாவில் முதன்முறையாக ரியல் எஸ்டேட் தொடர்பாக எம்.ஆர்க். (ரியல் எஸ்டேட்) என்ற படிப்பை தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் (மியாசி) கட்டடக் கலை அகாதெமி அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை புதுக்கல்லூரி வளாகத்தில் 1999-ம் ஆண்டு முதல் "மியாசி' அகாதெமி, கட்டடக் கலையில் பி.ஆர்க். பட்டப் படிப்பை நடத்தி வருகிறது.
இந்தக் கல்வியாண்டு கட்டடக் கலை கவுன்சிலின் (கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்) அனுமதியோடு ரியல் எஸ்டேட் துறையில் இரண்டாண்டு எம்.ஆர்க். பட்டப் படிப்பை தொடங்கியுள்ளது.
ரியல் எஸ்டேட் சார்ந்த வடிவமைப்பு, செயல்பாடு, நிதி மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
"மியாசி' அகாதெமியின் எம்.ஆர்க். கல்வித் திட்ட ஆலோசனைக் குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்று "மியாசி' கட்டடக் கலை அகாதெமியின் நிறுவனர் கே. அமீனூர் ரகுமான், இயக்குநர் அல்டாஃப் அகமது ஆகியோர் தெரிவித்தனர்.
Tuesday, July 22, 2008
பத்திரிகை தொடர்புகள்
பத்திரிகை தொடர்புகள்
கைராலி மலையாள தொலைக்காட்சி
ஷார்ஜா : 050 7262997
pravasalokam@gmail.com
கைராலி மலையாள தொலைக்காட்சி
ஷார்ஜா : 050 7262997
pravasalokam@gmail.com
அமெரிக்க படிப்பு வேண்டும், வாட்ச் வேண்டும், டீல் வேண்டாமா - லாலு நக்கல்
அமெரிக்க படிப்பு வேண்டும், வாட்ச் வேண்டும், டீல் வேண்டாமா - லாலு நக்கல்
செவ்வாய்க்கிழமை, ஜூலை 22, 2008
டெல்லி: அமெரிக்க வேலை வேண்டும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச் வேண்டும். ஆனால் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மட்டும் வேண்டாம் என்று நாடகமாடுவதா என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆவேசமாக கேட்டார்.
லோக்சபாவில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு லாலு பேசுகையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமரே தானாக முன்வந்து கொண்டு வந்துள்ளார். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது மன்மோகன் சிங்கிற்கு உள்ளது.
பாஜக அணு சக்தி ஒப்பந்தத்தை ஒருபோதும் எதிர்த்ததில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அத்வானி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அமெரிக்காவை அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லை.
அணு ஒப்பந்தத்துக்கு அத்வானி எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், இப்போது எதிர்க்கிறார்களாம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணு ஆயுத சோதனை தடை சட்டத்தில் கையெழுத்திட இருந்தார். கடைசி நேரத்தில் அதை கைவிட்டார்.
அணு ஒப்பந்தத்தை எதிர்க்கும் விஷயத்தில் பாஜகவிடம் உண்மையான பதில் இல்லை. அவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனையை வைத்து நாட்டை பிளக்க முயல்வதே வேலை.
இந்தியா முன்னேற, தொழிற்சாலைகள் நடக்க அணு ஒப்பந்தம் மிக அவசியம். அடிப்படைக் கட்டமைப்பும் மின்சாரமும் தான் ஏழைகளுக்கு ரொட்டி தரும். வானிலிருந்து ரொட்டி மழை பெய்யுமா?.
இடதுசாரிகளே எங்களுடன் இருங்கள்.. என இப்போதும் கேட்கிறோம்.
இங்கு இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் பலரின் பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். அங்கே போய் படிக்கிறார்கள். அதை பெருமையாகவும் சொல்லிக் கொள்கின்றனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச்சை பெருமையாக கட்டிக் கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவை பார்த்து பயப்படுகின்றனர். அணு சக்தி ஒப்பந்தத்ைத எதிர்க்கிறார்கள்.
எல்லோருக்கும்தான் பிரதமராக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. முலாயம் சிங் ஆசைப்படுகிறார், மாயாவதிக்கும் ஆசை வந்து விட்டது. எனக்கும்தான் ஆசை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் முடிகிற காரியமா. அவசரப்படக் கூடாது.
இடதுசாரிகள் குழப்பும் வேலையை மிக சரியாக செய்கிறார்கள். அதில் அவர்களை குறை கூறவே முடியாது.
தீவிரவாதம் குறித்து, அப்சல் குரு பற்றி பேசுகிறது பாஜக. உலகின் மிகப் பெரிய தீவிரவாதியான அஸார் மசூதை ஆப்கானி்ஸ்தானில் போய் விட்டுவிட்டு வந்தது யார்?. பாஜக தானே... இவ்வாறு லாலு பேசியபோது பாஜகவினர் எழுந்து கடும் கூச்சல் போட்டனர்.
அப்போது குரலை மேலும் உயர்த்தி தொடர்ந்து பேசிய லாலு, இந்தக் கூச்சலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இப்போது குஜராத்தில் மதக் கலவரம் நடத்தியவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்களுடன் இடதுசாரிகள் கைகோர்க்கிறார்கள்.
நான் சாதாரண ஆள் இல்லை. மொரார்ஜி தேசாய் அரசையே கவிழ்த்தவன். அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியவன். கைதும் செய்தவன். என்னை உங்களது மிரட்டல் ஒன்றும் செய்யாது.
நம்மிடம் நிலக்கரி ரிசர்வும் குறைந்து வருகிறது. மின் நிலையங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் இந்த அணு ஒப்பந்தம் மிக அவசியம்.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மட்டுமல்ல, மின்சாரமும் வேண்டும். அதை எங்கிருந்து தருவது?. மின்சார உற்பத்தியை அதிகரித்தாக வேண்டாமா? என்றார் லாலு.
மற்ற உறுப்பினர்கள் பேசும்போதெல்லாம் அவை முழுவதும் எதிர்ப்பலைகள் பரவி அவையே அமளியில் மூழ்கியிருந்தது. ஆனால் லாலுவின் பேச்சுக்கு அவை முழுக்க ஒரே சிரிப்பலையாக இருந்தது. பாஜக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் கூட லாலுவின் ரகளையான பேச்சைக் கேட்டு சிரித்தபடி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தனது பேச்சின்போது, எனக்கு ஆங்கிலத்திலும் பேசத் தெரியும். ஆனால் அவையின் நேரம் வீணாகி விடக்கூடாது என்று பார்க்கிறேன் என்று லாலு கூற அவை சிரிப்பலையில் மூழ்கி தத்தளித்தது.
செவ்வாய்க்கிழமை, ஜூலை 22, 2008
டெல்லி: அமெரிக்க வேலை வேண்டும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச் வேண்டும். ஆனால் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மட்டும் வேண்டாம் என்று நாடகமாடுவதா என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆவேசமாக கேட்டார்.
லோக்சபாவில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு லாலு பேசுகையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமரே தானாக முன்வந்து கொண்டு வந்துள்ளார். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது மன்மோகன் சிங்கிற்கு உள்ளது.
பாஜக அணு சக்தி ஒப்பந்தத்தை ஒருபோதும் எதிர்த்ததில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அத்வானி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அமெரிக்காவை அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லை.
அணு ஒப்பந்தத்துக்கு அத்வானி எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், இப்போது எதிர்க்கிறார்களாம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணு ஆயுத சோதனை தடை சட்டத்தில் கையெழுத்திட இருந்தார். கடைசி நேரத்தில் அதை கைவிட்டார்.
அணு ஒப்பந்தத்தை எதிர்க்கும் விஷயத்தில் பாஜகவிடம் உண்மையான பதில் இல்லை. அவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனையை வைத்து நாட்டை பிளக்க முயல்வதே வேலை.
இந்தியா முன்னேற, தொழிற்சாலைகள் நடக்க அணு ஒப்பந்தம் மிக அவசியம். அடிப்படைக் கட்டமைப்பும் மின்சாரமும் தான் ஏழைகளுக்கு ரொட்டி தரும். வானிலிருந்து ரொட்டி மழை பெய்யுமா?.
இடதுசாரிகளே எங்களுடன் இருங்கள்.. என இப்போதும் கேட்கிறோம்.
இங்கு இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் பலரின் பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். அங்கே போய் படிக்கிறார்கள். அதை பெருமையாகவும் சொல்லிக் கொள்கின்றனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச்சை பெருமையாக கட்டிக் கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவை பார்த்து பயப்படுகின்றனர். அணு சக்தி ஒப்பந்தத்ைத எதிர்க்கிறார்கள்.
எல்லோருக்கும்தான் பிரதமராக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. முலாயம் சிங் ஆசைப்படுகிறார், மாயாவதிக்கும் ஆசை வந்து விட்டது. எனக்கும்தான் ஆசை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் முடிகிற காரியமா. அவசரப்படக் கூடாது.
இடதுசாரிகள் குழப்பும் வேலையை மிக சரியாக செய்கிறார்கள். அதில் அவர்களை குறை கூறவே முடியாது.
தீவிரவாதம் குறித்து, அப்சல் குரு பற்றி பேசுகிறது பாஜக. உலகின் மிகப் பெரிய தீவிரவாதியான அஸார் மசூதை ஆப்கானி்ஸ்தானில் போய் விட்டுவிட்டு வந்தது யார்?. பாஜக தானே... இவ்வாறு லாலு பேசியபோது பாஜகவினர் எழுந்து கடும் கூச்சல் போட்டனர்.
அப்போது குரலை மேலும் உயர்த்தி தொடர்ந்து பேசிய லாலு, இந்தக் கூச்சலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இப்போது குஜராத்தில் மதக் கலவரம் நடத்தியவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்களுடன் இடதுசாரிகள் கைகோர்க்கிறார்கள்.
நான் சாதாரண ஆள் இல்லை. மொரார்ஜி தேசாய் அரசையே கவிழ்த்தவன். அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியவன். கைதும் செய்தவன். என்னை உங்களது மிரட்டல் ஒன்றும் செய்யாது.
நம்மிடம் நிலக்கரி ரிசர்வும் குறைந்து வருகிறது. மின் நிலையங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் இந்த அணு ஒப்பந்தம் மிக அவசியம்.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மட்டுமல்ல, மின்சாரமும் வேண்டும். அதை எங்கிருந்து தருவது?. மின்சார உற்பத்தியை அதிகரித்தாக வேண்டாமா? என்றார் லாலு.
மற்ற உறுப்பினர்கள் பேசும்போதெல்லாம் அவை முழுவதும் எதிர்ப்பலைகள் பரவி அவையே அமளியில் மூழ்கியிருந்தது. ஆனால் லாலுவின் பேச்சுக்கு அவை முழுக்க ஒரே சிரிப்பலையாக இருந்தது. பாஜக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் கூட லாலுவின் ரகளையான பேச்சைக் கேட்டு சிரித்தபடி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தனது பேச்சின்போது, எனக்கு ஆங்கிலத்திலும் பேசத் தெரியும். ஆனால் அவையின் நேரம் வீணாகி விடக்கூடாது என்று பார்க்கிறேன் என்று லாலு கூற அவை சிரிப்பலையில் மூழ்கி தத்தளித்தது.
Sunday, July 20, 2008
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு
வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஹிந்தி மொழி பயிலும் வாய்பினை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஹிந்தி இயக்ககம் வழங்கி வருவதாக அபுதாபி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த ஹிந்தி மொழி இயக்ககம் ஹிந்தி மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வ்ழங்கி வருகிறது. இப்படிப்புகளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழியினை தாய்மொழியினைக் கொண்டிராதவர்கள் பங்கேற்கலாம்.
இப்படிப்பு ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளின் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.
சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணம் ஐம்பது டாலர்கள்.கோடிட்ட வங்கி வரைவோலையினை
The Director, Central Hindi Directorate, New Delhi எனும் பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி : ஆகஸ்ட் 14
மேலதிக விபரம் பெற
Central Hindi Directorate
Department of Correspondence Courses Ministry of Human Resource Development (Department Of Higher Education)
West Block - VII, R.K. Puram
New Delhi
Delhi
Phone-No: 26178454, 26105211, 26105213, 26105214
Fax: 26100758, 26103160
www.hindinideshalaya.nic.in
Hindi courses for Indian expatriates
By a staff reporter
20 July 2008
PrintE-mail
ABU DHABI — The Central Hindi Directorate of the Department of Secondary and Higher Education at India's Ministry of Human Resources Development has announced Hindi language learning courses for non-Hindi speaking persons residing in India and abroad, a Press release from the Indian Embassy here said.
The department conducts certificate courses in Hindi (Preliminary) and diploma courses for the benefit of non-Hindi speaking Indians who are settled in India and abroad.
Hindi language will be taught through the medium of English, Tamil, Malayalam and Bangla, while the advanced diploma course will be taught through the Hindi medium, the release said.
The fees for certificate/diploma courses in Hindi is US$50 and for advanced diploma courses US$200. The fee could be paid by sending a crossed bank draft, payable to the Director, Central Hindi Directorate, New Delhi.
The last date for submission of application is August 14. Those interested may visit the web site www.hindinideshalaya.nic.in
http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=/data/theuae/2008/July/theuae_July630.xml§ion=theuae
வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஹிந்தி மொழி பயிலும் வாய்பினை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஹிந்தி இயக்ககம் வழங்கி வருவதாக அபுதாபி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த ஹிந்தி மொழி இயக்ககம் ஹிந்தி மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வ்ழங்கி வருகிறது. இப்படிப்புகளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழியினை தாய்மொழியினைக் கொண்டிராதவர்கள் பங்கேற்கலாம்.
இப்படிப்பு ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளின் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.
சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணம் ஐம்பது டாலர்கள்.கோடிட்ட வங்கி வரைவோலையினை
The Director, Central Hindi Directorate, New Delhi எனும் பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி : ஆகஸ்ட் 14
மேலதிக விபரம் பெற
Central Hindi Directorate
Department of Correspondence Courses Ministry of Human Resource Development (Department Of Higher Education)
West Block - VII, R.K. Puram
New Delhi
Delhi
Phone-No: 26178454, 26105211, 26105213, 26105214
Fax: 26100758, 26103160
www.hindinideshalaya.nic.in
Hindi courses for Indian expatriates
By a staff reporter
20 July 2008
PrintE-mail
ABU DHABI — The Central Hindi Directorate of the Department of Secondary and Higher Education at India's Ministry of Human Resources Development has announced Hindi language learning courses for non-Hindi speaking persons residing in India and abroad, a Press release from the Indian Embassy here said.
The department conducts certificate courses in Hindi (Preliminary) and diploma courses for the benefit of non-Hindi speaking Indians who are settled in India and abroad.
Hindi language will be taught through the medium of English, Tamil, Malayalam and Bangla, while the advanced diploma course will be taught through the Hindi medium, the release said.
The fees for certificate/diploma courses in Hindi is US$50 and for advanced diploma courses US$200. The fee could be paid by sending a crossed bank draft, payable to the Director, Central Hindi Directorate, New Delhi.
The last date for submission of application is August 14. Those interested may visit the web site www.hindinideshalaya.nic.in
http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=/data/theuae/2008/July/theuae_July630.xml§ion=theuae
Friday, June 6, 2008
துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில.......
துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில.......
துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில உதவும் நிறுவனம்
COLELGE OF ISLAMIC AND ARABIC STUDIES DUBAI
P O BOX NO 50106
ZABEEL ROAD
DUBAI
TEL : 04 396 1777
FAX : 04 396 1314
E mail : iasc@emirates.net.ae
College : www.islamic-college.co.ae
இக்கல்லூரியில்
பி ஏ, எம்.ஏ, பி.ஹெச்டி உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
துபாயில் இஸ்லாமியக் கல்வி பயில உதவும் நிறுவனம்
COLELGE OF ISLAMIC AND ARABIC STUDIES DUBAI
P O BOX NO 50106
ZABEEL ROAD
DUBAI
TEL : 04 396 1777
FAX : 04 396 1314
E mail : iasc@emirates.net.ae
College : www.islamic-college.co.ae
இக்கல்லூரியில்
பி ஏ, எம்.ஏ, பி.ஹெச்டி உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
Tuesday, April 29, 2008
ஜெயா டிவியில் ரஷ்ய மருத்துவ பல்கலை நடத்தும் மருத்துவ படிப்புகள் குறித்த உரை
ஜெயா டிவியில் ரஷ்ய மருத்துவ பல்கலை நடத்தும் மருத்துவ படிப்புகள் குறித்த உரை
ஜெயா டிவியில் ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்கள் நடத்தும் எம்.டி, பி.டி.எஸ்.,உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகள் குறித்த விளக்க நிகழ்ச்சியினை சென்னை ஏ.ஜே. டிரஸ்ட் கல்வி ஆலோசனை நிறுவன தலைவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான் 30 ஏப்ரல் 2008 புதன்கிழமை காலை இந்திய நேரப்படி 12 மணி முதல் 1 மணி வரை ( அமீரக நேரம் காலை 10.30 முதல் 11.30 வரை ) வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியினை கண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்புகள் குறித்த விளக்கம் பெறலாம்.
மேலும் தகவல் பெற விரும்புவோர்
ஏ.ஜே. டிரஸ்ட் கல்வி ஆலோசனை மையம்
கிரஸெண்ட் கோர்ட் பில்டிங்
எண் 963 பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை 600 084
தொலைபேசி : 2661 4485 / 3295 9991
அலைபேசி : 93 828 62393 / 98 406 52729 / 93 800 05652
மேலும் துபாயில் ரஷ்ய மருத்துவ பலகலை டீன் பங்கேற்கும் நேர்முக நிகழ்ச்சி 11 மே 2008 ஞாயிறன்று மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலின் தேரா அரங்கில் நடைபெற இருக்கிறது. அமீரகத்தில் இருப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்று ரஷ்ய மருத்துவ பல்கலை குறித்த தன்க்களது ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
தகவல் : டாக்டர் ஏ. நசீருல் அமீன், சென்னை
ஜெயா டிவியில் ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்கள் நடத்தும் எம்.டி, பி.டி.எஸ்.,உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகள் குறித்த விளக்க நிகழ்ச்சியினை சென்னை ஏ.ஜே. டிரஸ்ட் கல்வி ஆலோசனை நிறுவன தலைவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான் 30 ஏப்ரல் 2008 புதன்கிழமை காலை இந்திய நேரப்படி 12 மணி முதல் 1 மணி வரை ( அமீரக நேரம் காலை 10.30 முதல் 11.30 வரை ) வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியினை கண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்புகள் குறித்த விளக்கம் பெறலாம்.
மேலும் தகவல் பெற விரும்புவோர்
ஏ.ஜே. டிரஸ்ட் கல்வி ஆலோசனை மையம்
கிரஸெண்ட் கோர்ட் பில்டிங்
எண் 963 பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை 600 084
தொலைபேசி : 2661 4485 / 3295 9991
அலைபேசி : 93 828 62393 / 98 406 52729 / 93 800 05652
மேலும் துபாயில் ரஷ்ய மருத்துவ பலகலை டீன் பங்கேற்கும் நேர்முக நிகழ்ச்சி 11 மே 2008 ஞாயிறன்று மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலின் தேரா அரங்கில் நடைபெற இருக்கிறது. அமீரகத்தில் இருப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்று ரஷ்ய மருத்துவ பல்கலை குறித்த தன்க்களது ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
தகவல் : டாக்டர் ஏ. நசீருல் அமீன், சென்னை
Monday, April 7, 2008
சட்டத் துறையில் பட்டம் பெற விரும்புவோர்களின் கவனத்திற்கு...
சட்டத் துறையில் பட்டம் பெற விரும்புவோர்களின் கவனத்திற்கு...
1. 3 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு 40 சதவீத தேர்ச்சி பெற்ற எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை)
2. டிகிரி முடிக்காத ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் 5 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ப்ளஸ் 2 வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-04-2008. மேலும் விபரங்களுக்கு....
சகோ. M.E.S. அன்ஸாரி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
Mob.: 9952756420, 9443879995.
http://mypno.blogspot.com/2008/04/blog-post_07.html
1. 3 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு 40 சதவீத தேர்ச்சி பெற்ற எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை)
2. டிகிரி முடிக்காத ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் 5 வருட LL.B/B.L பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ப்ளஸ் 2 வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (நுழைவுத் தேர்வில் 45 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்வதற்கு நுழைவு தேர்வு அவசியமில்லை)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-04-2008. மேலும் விபரங்களுக்கு....
சகோ. M.E.S. அன்ஸாரி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
Mob.: 9952756420, 9443879995.
http://mypno.blogspot.com/2008/04/blog-post_07.html
Subscribe to:
Posts (Atom)