Sunday, June 29, 2008

வெளிநாடு வாழ் இந்தியர் அவசர உதவி பெற

NEED HELP, PLEASE CALL 1800113090
(No Charges when calls made through BSNL/MTNL in India)

MAY WE HELP YOU PLEASE?
AUTHENTIC NRI INTORMATION CENTER
Since the Ministry of External Affairs received increased number of enquiries and complaints from the NRIs, it was felt to have a Center to sort out all the problems faced by the NRIs.
Through this Center it is possible to establish a link between anyone who lives at any part of India and outside world.
*It is the first big step taken to protect and help the NRIs
*Immediate help and assitance will be provided by the Government
Released for the Welfare
by

Ministry of External Affairs
www.moia.gov.in

For help approach the
Authentic NRI Information Center
through BSNL/MTNL

Toll Free No. in India: 1800113090

0091-11-40503090
can also be contacted
from any part of the
world

Thursday, June 26, 2008

மர்ஹூம் குலாம் முகம்மது பனத்வாலா

கேரளீயர்களான கிருஷ்ணமேனன் மும்பையிலிருந்தும், அனந்தன் நம்பியார்
திருச்சியிலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதை ஜாதி
- மத - இன - பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு
ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அக்காலத்தில் ஊடகங்கள் உட்பட பலர்
பெருமை அடித்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம்..

ஆனால், அதே சமயம் ஓசைப் படாமல், ஒன்றல்ல இரண்டு தொகுதிகளில், ஒரு
முறையல்ல பலமுறை இரண்டு
முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் ஒரு மாபெரும் புரட்சி நடைபெறக் காரணமாக
இருந்திருக்கிறார்கள். தமிழ்
நாட்டைச் சேர்ந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு அவர்கள் மஞ்சேரித்
தொகுதியிலிருந்தும், மராட்டியத்தைச்
சேர்ந்த பனத்வாலா அவர்கள் பொன்னானித் தொகுதியிலிருந்தும் தொடரத் தொடர
வெற்றி பெற்று சாதனை
படைத்து வந்தார்கள்.

அது எப்படி சாத்தியமாயிற்று ? கேரளத்தில் தலைவர்கள் இல்லையா, இருந்தும்
அவர்கள் இதை ஆட்சேபிக்கவில்லையா, குறைந்த பட்சம் முணுமுணுப்பாவது
கேட்கவில்லையா என்கிற கேள்விகளுக்கான
பதில்: ஏனில்லை. ஜாம்பவான்க்ச்ள் இருந்தார்கள். சி. எச். முகம்மது கோயா,
அப்துர்ரகுமான் பாஃபக்கி தங்கல்,
உமர் பாஃபக்கி தங்கல், இப்ராஹிம் சுலைமான் சேட், அஹ்மது குருக்கள் என்று
முஸ்லிம் லீகிலும், இதுபோக
காங்கிரஸ்ஸிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஏகப்பட்ட பெருந்தலைவர்கள் பலர்
இருந்தார்கள்.

என்றாலும் இந்த இருவரும் தனித்தல்ல, தனித்வத்துடன் நின்றார்கள். உள்ளூர்
வாசிகள் அல்ல என்பது இவர்களுக்கு ஒரு
பலவீனம் என்பதை விட, உள்ளூர் அரசியல் மாச்சரியங்களுக்கு
அப்பாற்பட்டவர்கள் என்பது இவர்களுக்கு
ஒரு பெரும் பலமாகவே அமைந்து போனது.

மும்பையில் , திருச்சியில் நடந்ததை விட, மலையாளியான எம்.ஜீ.ஆரை தமிழகம்
முதல்வராக ஏற்றுக்
கொண்டதை விட கேரள மக்களாகிய தங்களுடைய பெருந்தன்மையின் பிரதிபலிப்பான இந்தச் சாதனை
எந்த வகையிலும், எள்ளளவும் குறைந்த தல்ல என்பது இவர்கள் பெருமையோடு
குறிப்பிடும் ஒரு விஷயம்.

மன்னத் பட்மநாபன், பட்டம் தாணுப்பிள்ளை ஆகியோர் தலைமையில் நாயர்
ச்மூகமும் (என்.எஸ்.எஸ்)
ஷங்கர் தலைமையில் ஈழவ சமுதாயமும் (எஸ்.என்.டி.பி) கொடி கட்டிப் போர்
முரசம் முழங்கிய காலம்.
கம்யூனிஸ்ட்களோடு ஆதிக்கப் போட்டியில் இவர்கள் முட்டி மோதியதை அரசியலில்
ஒரு பெரிய போர்க்களம்
என்று வர்ணிக்கலாம். இந்த ஆதிக்கப் போட்டியில் வெற்றியாளர்களைத்
தீர்மானிக்கும் நிர்ணாயக சக்திகளாக
முஸ்லிம் லீக் இருந்தத்து. அவர்களை அரசியல் நீதி தவறாமல் - நெறி பிறழாமல்
வழி நடத்தும் இடத்தில்
காயிதே மில்லத்தும், பனட்வாலாவும் இருந்தார்கள்.

வட கேரளத்தில் முஸ்லிம்கள் ஒரு தனிச்சக்தி - மாபெரும் சக்தி. சரியான வழி
நடத்தலில் அவர்கள் தங்கள்
கடமைகளை இறையச்சத்துடன் செய்தார்கள். ஆகவே தங்கள் உரிமைகளை ஆணையிட்டுப்
பெற்றார்கள்.

"பிறையும், பிச்சை பாத்திரமும் ஒரே வடிவு ஆகவே ஒதுக்கீடுகளை பிச்சையாக
யாசிக்கிறொம்" என்று
மணிடியிடவோ - தண் டனிடவோ செய்யவில்லை. முஸ்லிம்கள் இல்லாமல் கேரளத்தில்
ஓர் அரசு அமையவே
முடியாது ன்கிற நிலைக்கு உயர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்களில் ஒருவரை
- அமரர் சி.எச்.முகம்மது கோயா -
முதல்வராக்கவே முடியும் என்றும் நிரூபித்தார்கள்.

காங்கிரஸ் பல் கூறுகளாகச் சிதறியது போல, கம்யூனிஸ்ட் வலது இடதாக உடைந்தது
போல், முஸ்லிம் லீகும்
காலத்தின் சுழற்சி வேகத்தில் ' யூனியன்' 'தேசிய' என்கிற இரண்டு
கூறுகளாகப் பிளர்ந்தது. ஒரு வகையில் இதுவும்
தோஷம் செய்யாமல், நன்மையே செய்தது. காங்கிரசும் இடது சாரிகளும் மாறி மாறி
ஆட்சிகளைக் கைபற்றீயபோது
முஸ்லிம் லீகின் ஏதாவது ஒரு பிரிவும், எதாவது ஓர் அணியில் இடம் பிடித்து
ஆட்சியிலும் பங்கு கொண்டது.
எனவே, முஸ்லிம்களுக்கு ஆட்சியில் பங்காளித்துவம் தொய்வில்லாமல் தொடர்ந்து
கிடைத்து வந்தது

பிறகு லஞ்ச-லாவண்யம், ஒழுக்கக் கேடுகள் பனி மூட்டமாகப் படர ஆரம்பித்தன.
முஸ்லிம்கள் துணையில்லாமல்
ஆட்சி இல்லை என்கிற நிலை மாறி, முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி வேண்டாம்
என்று சில கட்சிகள் துணிவு
பெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகின.

காந்தபுரம் அபுபக்கர் மவுலவி போன்றவர்களால் முஸ்லிம் லீகின் செல்வாக்கில்
ஓட்டை போட முடிந்ததே தவிர
உடைக்க முடியவில்லை. ஆனால் அப்து நாசர் மாஅதானி போன்ற இளம் தலைவர்களின்
எழுச்சியால் முஸ்லிம்
லீக் கேரளத்தை விட்டே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

யார் எங்கே ஜெயித்தாலும், தோற்றாலும் மஞ்சேரியும் பொன்னானியும் முஸ்லிம்
லீகுக்கே என்ற நிலைமாறி
சென்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட 20 தொகுதிகளில் 19 ல்
'ஊற்றிக் கொண்டு விட' ஒரே ஒரு
தொகுதி மஞ்சேரியில் மட்டும் இப்போதைய மத்திய அரசின் வெளியுறவுத் துறை
அமைச்சர் ஈ.அஹ்மது
முஸ்லிம் லீக் சார்பில் நின்று வென்றிருக்கிறார்.

காயிதே மில்லத்தும் பனத்வாலாவும் எப்படிப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள்
என்பது அவர்கள் இல்லாமல்
இருக்கும்போதுதான் - அதனால் முஸ்லிம் லீகுக்கு ஏற்பட்ட இழப்புகளை
எண்ணும்போதுதான் நம்மால் புரிந்து
கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இவர்கள் நாம் சாதாரண அர்த்தத்தில்
புரிந்து கொள்ளும் அதிரடி அரசியல்
நடத்தும் தலைவர்கள அல்ல, மாறாக, கண்ணியத்தின் உறைவிடங்கள். தன்னலம்
கருதாத தியாக சீலர்கள். எனவே அவர்கள்
சொல் எடுபட்டது. செல்வாக்கு அத்தனை தடைகளையும் துளைத்துக் கொண்டு செல்ல
வேண்டிய இடங்கள்
வரை சென்றது. கட்டுக்கடங்காதவர்கள் கூட கண்ணியத்துக்கு
கட்டுப்பட்டார்கள். கட்சி கட்டுக் கோப்பாக
இருந்தது.

காயிதே மில்லத் என்கிற தலைவர் காலமான பின்பு கப்பலை கட்டுக்குள்
வைத்திருக்க மலுமி பனத்வாலா
கடுமையாக முயன்றார். ஆனால் காலச் சூறாவளி அதை அனுமதிக்கவில்லை. காலம்
இன்று அவரையும்
கவர்ந்து சென்று விட்டது.

இந்தக் காலத்துக் கட்சிகள் அல்ல, அந்தக் காலத்தில் எந்தக் கட்சியும்
தன்னுடைய த்லைவனாக ஏற்றுக் கொள்ள
விரும்பும் அற்புதத் தகைமைகள் பெற்றிருந்தார், பனத்வாலா. நிறையப்
படித்தார். பிரச்னைகளின் அடி நுனி வரை சென்றார்.
ஆழமாக அலசினார். இந்தக் காலத்துத் தலைவர்களைப்போல் நுனிப்புல் மேயவில்லை.
அதற்கு அவரது மிக
அற்புதமான உரைகளே சான்று.

முஸ்லிம் லீகுடனும், அதன் தலைவர்களுடனும் 'ஹலோ' சொல்லும் அளவுக்குத்தான்
எனக்கு நெருக்கமும் - உறவும்.
ச்கோதரி ஃபாத்திமா முஸஃஃபரும் அவரது கணவரும் விதி விலக்கு.

ஆனால் இலங்கை அதிபரின் ஆலோசகர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களோடு
எனக்கு நெருங்கிய நட்பு
உண்டு. அதன் மூலம் பல பெரிய தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது திருவனந்தபுரத்தில்
முகம்மது கோயா அவர்களது இல்லத்தில் மதிய உண்வே உண்டிருக்கிறோம்.

ஒரு முறை பனத்வாலாவைச் சந்த்திருக்கிறேன். "உங்களைப் போன்றவர்கள்
எங்களுக்குத் தேவை. ஏன் நீங்கள்
உங்களை லீகில் இணைத்துக் கொள்ளக் கூடாது?" என்றபோது, நான் சிரித்துக்
கொண்டே, "காரியங்கள் போகிற
போக்கைப் பார்த்தால் நீங்கள் கூட லீகில் இருப்பீர்களா என்று எண்ணத்
தோன்றுகிறது" என்றேன். சிரித்தார்.

பக்கதில் இருந்த கேரள ச.ம உறுப்பினர் P.A.P. அஹ்மது கண்ணு சாகிபு, "
நானும் தலம கிட்டே அதத்தான்
சொல்லுகேன்..கேட்கமாட்டேங்குதாவோ" அப்படியென்றால்....!!!

பனத்வாலா," மக்களிடமிருந்து, அதுவும் நம் மக்களிடமிருந்து பாராட்டை
எதிர்பாராதீர்கள். உங்கள் கடமைகளை
நீங்கள் செய்யுங்கள். மிகுதியை இறைவனிடம் விட்டு விடுங்கள் நற்கூலி
கொடுக்க அவனே போதுமானவன்"
என்றார். சத்தியமான வார்த்தை.

அவர் தன் கடமையை முழுமையாகச் செய்தார். இறைவன் தன் அருட் கருணையை அவர்
மீது நிச்சயம்
பொழிவான். சந்தேகமே இல்லை. ஆனால் நாம் அவருக்குரிய பாராட்டை முழுமையாக வழங்கினோமா ?
சென்னை தீவுத்திடலில்தான் பார்த்தேனே !!!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com

Wednesday, June 25, 2008

முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்


சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.

அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=

பனாத்வாலாசாஹிபின் நினைவு கூறத்தக்க பணிகள்

"முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!":

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்

B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!



முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10
http://kayalpatnam.com/shownews.asp?id=1898

அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-

ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:

மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.

ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

பாராட்டுகள்:

பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 'விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் 'சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான 'மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 'பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் 'முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பொறுப்புகள்:

காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.

வெளியீடுகள்:

'மார்க்கமும் - அரசியலும் 'சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.
பயணித்த நாடுகள்:

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கடந்த ஜூன் 2021 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.

எல்லாம்வல்ல அல்லாஹ் மறைந்த முஜாஹிதெமில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை கபுல் செய்து அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக ஆமீன்.

தாய்ச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் மர்ஹூம் அவர்களின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தலைமை நிலையம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.



வாசகர் கருத்துக்கள்

மணியன்
manimalar.blog@gmail.com


அவருடன் கேரளாவில் தொடர்வண்டியில் உரையாடியது நினைவிற்கு வருகிறது. ஒரு எளிமையான மனிதாபிமானமிக்க அரசியல் தலைவராக அவரைக் கண்டேன். அவரது மறைவிற்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள்


khaleel: இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாருக்கு மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பித்து வைக்க துஆ செய்கின்றோம்.
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம்
குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை
குவைத் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

Abdul Jabbar

இன்னா லில்லாஹி வ இனா இலைஹி ராஜிவூன் - சாத்.அப்.ஜப்பார்

Patel Raheem
dateThu, Jun 26, 2008 at 4:25 PM
subjectG M Banatwala

Inna lillahi wa inna ilaihi rajiwoon

S.M.Abdurraheem Patel
Ph:+91 44 25268314
Mob: 09381000236

Abdul Hameed Rafiudeen
dateThu, Jun 26, 2008 at 7:59 AM
subjectRE: துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை

PLEASE CONVEY OUR CONDOLENCE FOR BANATWALAS SAHIB SUDDEN DMISE


RAFIUDEEN
PRESIDENT FROM HONG KONG
WORLD TAMIL CUL ASSN

TEL 93814255

கைராலி கலா கேந்திரம்

கைராலி கலா கேந்திரம்

கைராலி கலா கேந்திரம் இசை,நடனம் மற்றும் கலை ஆகியவற்றை பயிற்சியளிக்கும் ஒரு மையம்.

இது துபாய், ஷார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

ஓவியம், கணினி பயிற்சி, டெய்லரிங், அபாகஸ், மலையாள மொழி கற்றுக்கொடுத்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விபரங்களுக்கு

www.kairali-kalakendram.com

E mail : ashasharathgroup@yahoo.com

Al Quisais : 04 267 2552

Sharjah : 06 572 51 52

Ras Al Khaimah : 07 2286687

Tuesday, June 24, 2008

மனமே.. சிந்திந்து.. செயல்படு..

மனமே.. சிந்திந்து.. செயல்படு..



வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி ஏற்படும். வெற்றி மட்டுமே
வாழ்க்கையாக மாறாது. தோல்வி மட்டுமே வாழ்க்கையாக மாறாது. முதலில்
உங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டு முடிவு செய்தால்,
பின்னர் அதனையே விரும்புங்கள். அதற்காக திட்டமிட்டு உழையுங்கள். உணர்ந்து
செயல்படுங்கள். உற்சாகத்தினை பெறுங்கள். நீங்கள் விரும்பியதை விரைவில்
அடைய முடியும்.

நல்லது மற்றும் கெட்டது எது என்பதை ஆராயும் திறனை ஏக இறைவனாகிய அல்லாஹ்
நமக்கு கொடுத்து இருக்கும் போது சிலர் தோல்வி மற்றும் சோக மயமான எதிர்
மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதன் காரணம் என்னவென்று தெரியவில்லை.

எந்த சூழ்நிலையிலும் கடந்த காலத்தில் செய்த தவறுகள், பிழைகள், தப்புகளை
மனதில் நினைத்துக்கொண்டு, அதற்காக தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதும்
தனக்கு தானே தண்டனைக்கொடுத்துக்கொள்வது தீர்வாக அமையாது. நேற்று நான்
தோற்றுப் போனான், இன்றும் தோற்றுப்போவேன், நாளையும் தோற்பேன் என்ற
மனோரீதியில் தோல்விக்கு காரணம் கற்பிக்கப் பழகுதல் கூடாது. கடந்த
காலத்தில் செய்த பிழைகள், தோல்விகள், கசப்பான அனுபவங்கள் ஆகியவை மறந்து
போகாமல் இருக்கலாம் இருப்பினும் அதையே நினைத்து மனம் கலங்காமல் அதில்
இருந்து பெற்ற அனுபவத்தினையும் மற்றும் படிப்பினையும் துணையாக்கிக்கொண்டு
சரியான விதத்தில் புரிந்து கொண்டு நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும்
சந்திக்கப் பழக வேண்டும்.

விழிப்புணர்வுடனும் பொறுமையுடனும் ஒரு காரியத்தை செய்யும் போது அதில்
எந்தத் தவறும் ஏற்படுவதில்லை. அப்படியே தவறு வந்தாலும், அதை நமது
விழிப்புணர்வு சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்யும். எந்த ஒரு
சூழ்நிலையிலும் எதிர்மறையான மற்றும் தோல்வி தொடர்பு சம்மந்தமான எண்ணங்கள்
ஏற்பட்டால் அதை உதறித் தள்ளி விட்டு தொடர்ந்து செயலாற்றும்
மனப்பக்குவத்தினையும், மனநிலையை நாமே நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செயல்பட்டால் நாளடைவில் தோல்வி தொடர்பான எண்ணங்கள் வலுவிழந்தும்
பயனற்றும் போய்விடும்.

சரி.. எதிர் மறையான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டு விட்டது. என்ன செய்வது.
இதற்கும் ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்களை மாற்ற
முயற்சிக்கும் போது அதைப்பற்றியே நினைக்காமல் நல்ல எண்ணங்களை மனதில்
வளர்த்துக்கொள்ளலாம்.

உதாரணமாக பள்ளிக்கூட சிறார்கள் தேர்வில் தோற்றுப்போய் இருப்பார்கள்.
ஆனால் அவர்களிடம் இனியும் நான் தோற்றுப்போவேன் என்று கலங்கித் தவித்தால்
தோல்வி தான் கிடைக்கும். இல்லை நானும் வெற்றி பெறுவேன்.. இதனை விட அதிக
மார்க் வாங்குவேன்.. பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும்
பாராட்டு பெறுவேன் என்ற புதிய எண்ணங்களை உருவாக்கி கொண்டு நினைத்தால்
நிச்சயமாக வெற்றிக்கனி கைக்கு கிடைக்கும். இந்த செயல்பாடுகள் மூலமாக
படிப்படியாக எதிர்மறையான எண்ணங்களின் பாதிப்பு அவர்களை விட்டு அகன்று
விடும். இந்த மாதிரியான நல்ல எண்ணங்களையும் புதிய எண்ணங்களையும் நாம்
நமக்குள் வளர்த்துக்கொண்டு நம்முடைய பிள்ளைகளும் சொல்லி தரவேண்டும்.

நம்பிக்கையை மறு பரிசீலனை செய்யுங்கள். என்னால் இந்தச் செயலை செய்ய
முடியாது. அப்படியே செய்தாலும் அதை சிறப்பாக செய்ய முடியாது என்ற எண்ணம்
தோன்றும் போது அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த எண்ணம் உண்மைகளின்
அடிப்படையில் தோன்றிய ஒன்றா? அல்லது தவறான புரிதலால் நிகழ்ந்த ஒன்றா?
என்று ஆராய வேண்டும். அப்போது உங்களுக்குள் நீங்களே சில கேள்விகளை
கேட்டுக்கொண்டால் அது பற்றி தெரியவரும் அந்தக்கேள்விகள்.. இந்த எண்ணம்
தோன்றியது சரியான உண்மைகளின் அடிப்படையிலா? தவறாக புரிந்து கொண்டதால்
ஏற்பட்ட ஒன்றா? இந்த சூழலில் மற்றவர்கள் இருந்தாலும் இதே முடிவு தான்
எடுக்கும் நிலை வருமா? சரியான காரணம் இல்லாத சூழலில் ஏன் தோல்வி எண்ண
பயத்துடன் செயல்பட வேண்டும்?

இந்த கேள்விகளுக்கு உண்மையான விடை தேட வேண்டும் உங்கள் மனதை எந்த
நிலையிலும் ஏமாற்றிக் கொள்ளாமல் பதில் தேடுங்கள். அப்போது உங்கள் மனதில்
தோன்றிய எண்ணம் உண்மையின் அடிப்படையில் தோன்றியதா? அல்லது தவறாகப்
புரிந்து கொண்டதால் ஏற்பட்டதா? என்பது தெரியவரும். இந்த முடிவின்
அடிப்படையில் உங்களது எண்ணங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முடியும்.

எதை நீங்கள் அடைய விரும்புகிறீர்களோ அதை ஆழமாக விரும்புங்கள். அப்போது
ஏற்படும் சக்தியே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். அதாவது
நீங்கள் எதனை அடைய விரும்புகிறீர்களோ.. அதை உங்கள் மனதில் நிலையாக
நிறுத்திக் கொள்ளுங்கள். அதை அடிக்கடி உங்கள் மனதில் நினைவு கூர்ந்து
உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். அதையே மனதில் தினமும்
தியானியுங்கள். உற்சாகமான இந்த புதிய சிந்தனையே உங்கள் மனதில் இருக்கும்.
எதிர்மறையான எண்ணங்களை விரட்டியடிக்கும். எதை அடைய விரும்புகிறீர்களா அதை
அடைய வேண்டும் என்ற எண்ணம் தீவிரம் அடையும் போது அதை அடைவது
எளிதாகின்றது.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'ஈமான் என்றால் என்ன?' என்று வினவினார்.
அண்ணலார் விடையளித்தார்கள்: 'ஒரு நற்செயல் உனக்கு மகிழ்ச்சி அளித்தால்,
தீய செயல் உம்மைத் துக்கத்தில் ஆழ்த்தினால் அப்பொழுது நீர் ஈமான் உடையவர்
ஆவீர்' அதற்கு வந்தவர் கேட்டார்: 'இறைத்தூதரே! பாவம் என்றால் என்ன? 'எது
உனது உள்ளத்தை உறுத்துகிறதோ அதை விட்டு விடு!' அறிவிப்பாளர்: அபூ உமாமா
(ரலி) ஆதாரம்: அஹ்மத்,

நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும். தினந்தோறும் அவர்களுடன் நல்ல
செய்திகளையும் நல்ல விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள். தாங்கள்,
இன்று ஒரு நல்ல செய்தியினை ஊடகத்துறை மூலமாக கேட்டு இருக்கலாம் அல்லது
படித்து இருக்கலாம். அதனை பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களும்,
அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை பற்றி உங்களிடம் மகிழ்வுடன்
பகிர்ந்துக்கொள்வார்கள். தனிமையை விட்டு தூரமாக இருக்க முயற்சி
செய்யுங்கள். தனிமையாக இருந்தால் நமக்குள் ஷைத்தான்கள் குடிப்புகுந்து
விடுவான். அப்படியே தனிமையில் இருந்தால் நல்ல விஷயங்ளை பற்றி
காகிதங்களில் எழுதிக்கொண்டு இருக்கவும். நண்பர்களுடன் காட்டுங்கள்.
ஏதேனும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கவும் என்றும் அவர்கள் ஆலோசனை
சொல்வார்கள். கேட்டு கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை படிக்கவும்..
அதனையும் அவர்களுக்கு கொடுக்கவும். அவர்களும் தாங்களுக்கு நல்ல
புத்தகங்களை பரிசாக கொடுப்பார்கள்.

லட்சியம் எது என்று முடிவு செய்த பின்னர் அதை அடைவது குறித்த உங்கள்
செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள்
தகுதி, திறமை என்ன என்பதையும் உங்கள் லட்சியத்தை அடைய அது எந்த அளவுக்கு
உதவியாக இருக்கும் என்பதையும் பகுத்து உணர்ந்து கொள்ளுங்கள். நம்மால்
முடியுமா..? முடியும் என்றால் அதை அடைவது எப்படி? முடியாது என்றால்
அதற்கு காரணம் என்ன? முடியாது என்பதை முடியும் என்று மாற்ற முடியுமா..?
அதற்கு எவ்வாறு திட்டமிட வேண்டும், உழைக்க வேண்டும்? இவற்றை அலவி
ஆராய்ந்து தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

உங்களது திறமையை நீங்களே புதைத்து விட வேண்டாம். அல்லாஹுதலா நாம்
எல்லோருக்கும் ஏதேனும் ஒரு திறமையினை கொடுத்து இருப்பான். சிலருக்கு
பேச்சு திறமை இருக்கும், சிலருக்கு எழுத்து திறமை இருக்கும். அதனை நாம்
நமக்குள் மூடி வைத்துக்கொண்டால் அதுவே திறன் இல்லாமல் மறைந்தும் மறந்தும்
போய் விடும். நம்முடைய திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய வாய்ப்பினையும்
மற்றும் அமைப்பினை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

திறமையை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு வெற்றி இலக்கை தவறவிடுவதும்
கூடாது. தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று ஆழம் தெரியாமல் காலை
விட்டு தோல்விகளைச் சந்திக்கவும் கூடாது. ஆகவே இறைவன் நமக்கு கொடுத்த
சிந்திக்கும் திறனை கொண்டும் பகுத்தறிவினைக்கொண்டும் சிந்தித்து செயல்பட
வேண்டும். அப்போது விதியை மதியால் வெல்லலாம். சில நேரங்களில் ஆகுமான
செயல்கள் கூட ஹராமான (விலக்கப்பட்ட) செயல்களுக்குக் காரணமாகி விடுகின்றன.
இதனால் இறை நம்பிக்கையாளர்களுக்கு முன்னால் ஆகும் எனும் அம்;சம் மட்டுமே
இருக்கக்கூடாது. மாறாக ஆகுமான செயல் தப்பித்தவறி விலக்கப்பட்ட
செயல்களுக்குக் காரணமாகிவிடக் கூடுமோ என்ற அச்சத்துடன் அவர்கள்
விழிப்புடன் இருக்க வேண்டும்.

உங்களுக்கு என்ன தேவை என்பதை தீர்மானிக்கும் தன்மை பள்ளிப்பருவத்திலேயே
வந்து விட வேண்டும். விரும்பிய பாடத்தைப் படிக்கும் போது அதில்
கவனத்துடன் பர நுணுக்கங்களை விரும்பி கற்றுக்கொள்ள முடியும். அதை
கருத்தில் கொண்டு தான் ஒவ்வொருவருக்கும் விருப்பப்பாடம் என்ற ஒன்றை
தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு 12 ஆம் வகுப்புகளிலும் மற்றும்
கல்லூரிகளிலும் அளிக்கப்படுகிறது. நாம் அங்கு விரும்பாக எடுத்த
பாடத்தொடர்பானது வேலையாக மாறும் போதும் சரியே பணியாற்று போதும் சரியே
என்பது அன்பின் வெளிப்பாடாக அது அமையும். அன்பின் வெளிப்பாடாக வேலை
அமையும் போது உற்பத்தி திறன் கூடும். களைப்பு தோன்றாது. திறமை அதிகரிக்க
வாய்ப்பாக அது அமையும்.

எனவே வாழ்க்கையினை தீர்மானிப்பது என்பது நம்முடைய சிந்தனையே தவிர
வேறில்லை. அதாவது பகுத்தறிவுத் துணை கொண்டு தீர ஆராய்ந்து முடிவு
எடுங்கள். இன்றைய மதியே நாளைய விதியாகும். இன்று முதல் சரியாக சிந்தித்து
செயல்படத் துவங்கிவிட்டால் நாளை என்பது இன்று என்பதின் துவங்கமே..

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் தைரியத்தையும் இழந்து விட வேண்டாம், கவலையும்
பட வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால்,
நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள். அல்குர்ஆன் 3:139

http://www.tamilmuslim.com/sinthi.htm



M.M.Mohamed Ikbal M.C.A,
IT - Support Engineer,
Apple Centre,
Al Moayyed International,
Manama,
Kingdom Of Bahrain.
Website: www.almoayyedintl.com
Email: nnikbal@gmail.com, nnikbal@yahoo.com

मुस्लिम लीग मला

Muslim League MLA

M. A. Khaleelur Rahman
263 Sha Nagar
Pallapatti 639 207
Karur Dist
Tel : 04320 - 241399

நீதியின் குரல்

நீதியின் குரல்

http://neethienkural.googlepages.com/home


குவைத்தில் வெளிவரும் இதழ்

தகவல் : முபாரக் ரஸ்வி

sithima@gmail.com


Sugumaran R.
tosatrumun@googlegroups.com
dateTue, Jun 24, 2008 at 9:01 PM
subjectRe: neethienkural website as e-paper (forward this mail address for ur tamil friends)

வணக்கம்,

"நீதியின் குரல்" "எம்.ஜி ஆர்" காலத்தில் "ஜேபிஆர்" - ஆல் நடத்தப்பட்ட பத்திரிக்கை, அப்போது அந்த பத்திரிக்கையின் செய்தியாளராக நான் இருந்துள்ளேன்.

பழைய நினைவை நினைவு படுத்துகிறது பத்திரிக்கையின் தலைப்பு.

அன்புடன்
இரா.சுகுமாரன்

Sunday, June 22, 2008

துபாயில் இஸ்லாமியப் பயிற்சி நிறுவனம்

துபாயில் இஸ்லாமியப் பயிற்சி நிறுவனம்


துபாயில் ரிவாக் கல்வி மையம் கோடைக்காலத்தில் சிறுவர்களுக்கு பயனுள்ள பல்வேறு பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.

திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்
அரபி மொழி பயிற்சி
ஆங்கிலம்
கம்ப்யூட்டர்

குறைந்த கட்டணம்

போக்குவரத்து வசதி உள்ளது.

REWAQ EDUCATIONAL CENTER
Al Quisais
TEL 04 2611200
FAX 04 2616123
MOBILE 050 578 2958

முகவரிகள்

முதுகுளத்தூர் மௌலவி பஷீர் சேட் ஆலிம் 944 361 0495
முதுகுளத்தூர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் 99 403 86889
முதுகுளதூர் ஏ.அலாவுதீன், சென்னை 98 404 50220



சென்னை எம்.யூ. முஹம்மது ஹுசைன் 99 404 64587
பேராசிரியர் ஆபிதீன் 944 361 0350
பேராசிரியர் அப்துல் சமது 964266001
கம்பம் முஹம்மது அலி 99 65231110
மதுரை ராஜா ஹஸனபர் 9443226374
ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.என். காஜா மைதீன்,அதிபர் அரசன் பேக்கரி
04563 262616 / 9787505016
மதுரை புதிய காற்று haamim musthafa 99 524 00322
மதுரை புதிய காற்று tamilpriyan 98 421 15801

அருப்புக்கோட்டை

ஜும் ஆ பள்ளிவாசல், வாழவந்தபுரம் - 70639



முஸ்லிம் லீக்

மதுரை பி.கே.என்.அப்துல் காதர் ஆலிம் 98 421 58543 / 0452 2337990





ஆனந்த்
த/பெ பி. ஆவுடையப்பன் ( TNSTC Driver )
எண் 69/92 பி பாரதி நகர்
வீரவநல்லூர் 627 426
திருநெல்வேலி மாவட்டம்
தொலைபேசி : 04634 - 288 355
மொபைல் : 944 28 92 834



சுலைமான் ( மாரத்தான் )
52 Cross Street
Kayalpatnam
Tel : 04639 - 280550

138 Big Bazar Street
Opp : Jafer Sha St.
Trichy 620 008
Tel : 0431 - 270 196
House : 0431 - 270 156
Mobile : 98 424 77828
ad_sulaiman4000@yahoo.com


Abdul Rahman ( AR ) | ADC, ITO | M P H A S I S an EDS
Company|
7th Floor, Tidel Park, 4 Canal Bank Road, Taramani,
Chennai - 600 113 | Tel: +91 (44) 22549650 Extn 2167
Cell: +91 9444 530218
eMail: abdulrahman.karim@eds.com | www.eds.com



Dr.H.K.Lakshman Rao Ph.D. (Mgmt.), M.Phil (Statistics)
M.Sc(Stat), M.A(D.Edn.),M.A(Pub.Admn),M.A(R.D) M.Sc(Psy), OR & SQC (ISI.),AMP (IIM-A), DDE.
(Former Gen. Manager MFL & Professor & Head Dept. of Management CEC)
Management, Corporate & Statistical Consultant
Statistical Consultant- World Bank Aided Project – Primary Education
"ANUGRAHA", 33, Krishnapuri, R.A.Puram, Chennai – 600 028
Ph: 044-43060656, Cell: 09381036989, e-mail: hklrao@gmail.com



புதுச்சேரி இரா.சுகுமாரன்
rajasugumaran@gmail.com

நான் பத்திரிக்கைகளில் செய்தியாளராக இருந்துள்ளேன்.

இளநிலை கணிதம், (B.Sc. Maths) முதுநிலை வரலாறு, (M.A History) முதுநிலை
இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல், M.A (Journalism and Massa
communication) மற்றும் முதுநிலை வணிக நிர்வாகம் (M.B.A) எனது கல்வி
பயின்று ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறேன்.

சொந்தமாக ஒரு பத்திரிக்கையும் நடத்திய அனுபவம் உள்ளது.
இதனால் புதுச்சேரி பத்திரிக்கையாளர்களிடையே ஒரு நல்ல அறிமுகமும் எனக்கு
உண்டு. ஆகவே சில முக்கிய விசயங்களைக்கூட செய்தியாக வெளியிடும் வாய்ப்பு
உள்ளது.


இக்பால் பைஸ்
cmiqbalanish@yahoo.co.in
04366 - 251 285


வெஸ்ட் ஆசியா - மும்பை

1. West Asia Exports & imports ( P ) ltd.
New Harilela House, 2 nd Floor.
Mint Road,Opp GPO.Victoria Terminus.Mumbai - 400 001.
Tel : 0091 22 22 673537
Fax : 0091 22 22 673554
E Mail: waei@vsnl.com




TURKISH CULTURE & TOURISM OFFICE
50 N Nyaya Marg
Chanakyapuri
New Delhi 110 021
Tel : 011 - 24102237
goturkey.india@goturkey.com

ஷேக் முஹம்மது செண்டர் ஃபார் கல்சுரல் அண்டர்ஸ்டாண்டிங்

SHEIKH MOHAMMED CENTRE FOR CUTURAL UNDERSTANDING



Open Doors.Open Minds Programmes

Designed to increase understanding between UAE nationals, expatriates and visitors to Dubai


JUMEIRAH MOSQUE VISIT

A rewarding spiritural and informative experience.

Saturday, Sunday, Tuesday and Thursday at 10 am

During Ramadan an evening tour is schduled.

Jumeirah Mosque is only Mosque in the UAE open to non Muslims.

Visitors must be accompanied by a SMCCU guide.

Meeting Point - outside Jumeirah Mosque


Sheikh Mohammed Centre for Cultural Understanding
Phone : 04 353 66 66
Fax : 04 353 66 61

E mail : smccu@emirates.net.ae

www.cultures.ae

மனித இனத்திற்கெதிரான குற்றம்

மனித இனத்திற்கெதிரான குற்றம்


நூல் : மனித இனத்திற்கெதிரான குற்றம்
குஜராத் இனப்படுகொலை 2002

தமிழில் : எம்.எஸ். அப்துல் ஹமீது


வெளியீடு

இலக்கியச் சோலை
எண் 26 பேரக்ஸ் சாலை
பெரியமேடு
சென்னை 600 003
தொலைபேசி : 256 10 969

33% இட ஒதுக்கீடு: பெண்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும்- கனிமொழி

33% இட ஒதுக்கீடு: பெண்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் - கனிமொழி



சென்னை, ஜூன் 21: பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பெண்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, சென்னையில் சனிக்கிழமை நடந்த கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் அவர் பேசியது:

உடல் பலத்தை விட அறிவு பலம் தான் தற்போது முன்னிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் அறிவு பலத்தை பெருக்கவேண்டும். நாம் நம்பும் கொள்கைக்காகப் போராடி அதில் வெற்றிபெற நம் சக்தி முழுவதையும் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு கல்வி அறிவை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு, பெண்களுக்கான 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது மிக அவசியம். இதற்கு, பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும். இல்லையேல், 33 சத இட ஒதுக்கீடு பட்டிமன்றப் பொருள்களாகவே இருந்துவிடும்.

அரசியல், பொருளாதாரத் துறைகளில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்கும் மிக முக்கியம். அதற்கு, 33 சத இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை. நாட்டின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் பெண்களைக் கலந்தாலோசித்தே எடுக்கவேண்டும்.

பெண்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகளை பெண்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. பட்ஜெட்டில் பெரும் தொகை ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. சமூக மேம்பாடு, மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயந்தி நடராஜன்: மகளிருக்கான 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, பெண் உறுப்பினர்களை கீழே தள்ளிவிட்டு, மசோதாவை தாக்கல் செய்தவதை சில கட்சி உறுப்பினர்கள் தடுக்க முயன்றனர்.

இதைப் பார்க்கும்போது ஜனநாயக நாட்டில் தான் வசிக்கிறோமா? என எண்ணத் தோன்றுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள உரிமை வாக்களிக்க மட்டும் தானா? பெண்களுக்கு அரசியல் அதிகாரமும் உண்டு. நாடாளுமன்றத்திலேயே பெண்களை தாக்குகின்றனர் என்றால், கிராமங்களில் உள்ள பெண்களின் நிலை என்ன?

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னும் சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்றால் அங்கு ஜனநாயகம் நீடிக்காது. சமமான பிரதிநித்துவத்தைப் பெற கல்வி தான் ஒரே கருவி. நாட்டில் உள்ள மொத்த பெண்களில் 50 சதம் பேருக்கு கல்வி அறிவு இல்லை. 14 வயதுக்கு உட்பட்ட 5.5 கோடி பெண்கள் வீட்டு வேலைகளிலேயே முடக்கப்படுகிறார்கள்.

கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கு நாம் இணைந்து போராட வேண்டும் என்றார்.

மாநாட்டுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநில அமைப்பாளர் பாத்திமா முஷாபர் தலைமை வகித்தார். திராவிடர் கழக செய்தித் தொடர்பாளர் ஏ.அருள்மொழி, சமூக நலவாரியத் தலைவர் சல்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமூக நல்லிணக்கம், கல்வி, ஊடகவியல், இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் சாதனை படைத்த இஸ்லாமிய பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறுபான்மையோர் நல அமைச்சகம்: அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை

சிறுபான்மையோர் நல அமைச்சகம்: அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை



சென்னை, ஜூன் 21: சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரியுள்ளது.

அக்கட்சியின் மணிவிழா மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும்.

மத்திய அரசில் உள்ளது போல தமிழக அரசிலும் சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். உலமா நல வாரியம் மற்றும் உருது ஆசிரியர் பயிற்சி கல்லூரியை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அமைய உள்ள புதிய பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு காயிதே மில்லத் பெயரைச் சூட்ட வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அடக்கஸ்தலம் (கபரஸ்தான்) இல்லாத ஊர்களில் அந்த வசதியையும், பட்டாக்களையும் வழங்க வேண்டும். பட்டம் பெற்ற யுனானி மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒரே விதமான சிவில் சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும். தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வேண்டும். சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு உதவி அளிக்க வேண்டும்.

இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையில் விடுதலை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080621135450&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

மதவாத சக்திகளை தடுத்திட, மத்தியில் ஒர் நல்லாட்சி ஏற்பட்டிட..........

மதவாத சக்திகளை தடுத்திட, மத்தியில் ஒர் நல்லாட்சி ஏற்பட்டிட
சுயமரியாதைக் கொள்கை உறுதி கொண்ட இலட்சிய கூட்டணி இருக்க வேண்டும்
முஸ்லிம் லீக் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் பேருரை

சென்னை, ஜூன் 22- இந்தியாவிலே ஒரு நல்ல அரசு உருவாக வேண்டுமானால், மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்திடாத சுயமரியாதைக் கொள்கை உறுதி கொண்ட, இலட்சிய உறுதி கொண்ட கூட்டணி உருவானால்தான் தடுத்திட முடியும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நேற்று நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டில் எடுத்துக் கூறி விளக்கவுரை யாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு நேற்று (21.6.2008) சென்னைத் தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு: இந்த அருமையான மாநாட்டில் கலந்து கொண்டு - பெருமை மிகு தலைவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் கேட்கின்ற வாய்ப்பினைப் பெற்று - இந்த மாநாட்டிலே நிறைவேற்றியுள்ள தீர்மானங்களையெல்லாம் படித்துப் பார்த்து - அவற்றை நிறைவேற்றுகின்ற வாய்ப்பு கிடைக்குமேயானால் நிறைவேற்றி - உங்களுடைய நன்றிக்கு உரியவனாக ஆகின்ற நிலையில் இந்த மாநாட்டிலே நான் கலந்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய அளவில் இந்த மாநாடு நடைபெறும் என்று நான் முதலில் எதிர்பார்க்கவில்லை. நம்முடைய மாநாட்டின் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் குறிப்பிட்டதைப் போல, எதிர்பார்த்ததை விட மேலான கூட்டம் - பேரணி - இவைகள் எல்லாம் இன்றைக்கு நடைபெற்று நானும் உங்களோடு இணைந்து மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்திருக்கிறேன். (கைதட்டல்)

எங்களுடைய துணை எங்களைப்போல
வலுவாக, உரமாக இருக்கிறது

நம்முடைய பனத்வாலா அவர்கள்கூட இங்கே வரும்போது, பேரணியும், பொதுக்கூட்டமும், மாநாட்டுக் கூட்டமும் ஏதோ ஓரளவு - ஒரு மண்டபத்திலே நடைபெறும் கூட்டம் என்ற அளவிலேதான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டுதான் வந்திருப்பார். அவர் ஆற்றிய உரையை சிங்கநாதம் என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் இங்கே வர்ணித்தார்கள். அவர் உரை, சிங்க நாதமாக மாறியதற்குக் காரணமே, இங்கே குழுமியிருக்கின்ற இந்தக் கூட்டத்தின் காட்சிதான் என்று சொன்னால் அது மிகையாகாது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இப்போது முஸ்லிம் லீக் கட்சிக்கு வளர்ச்சி இல்லை - அது குறுகி விட்டது - நாங்கள் பரந்து விரிந்து இங்கே எங்களுடைய கொடியை நாட்டியிருக்கிறோம் என்றெல்லாம் எண்ணி கர்ச்சனை புரிந்து கொண்டிருக்கின்ற மதச் சார்புடைய ஒரு கூட்டம் - மதவெறி கொண்ட ஒரு கூட்டம் - இங்கே முஸ்லிம்களுடைய இயக்கம் வலுவாக இல்லை என்று சொன்னதற்குக் காரணமே, களிப்படைவதற்குக் காரணமே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துணையாக இருக்கின்ற முஸ்லிம் லீக் இளைத்துப் போய் விட்டது, எனவே தி.மு. கழகம் கம்பீரமாக நடமாட முடியாது என்ற அந்த நப்பாசையிலேதான் அவர்கள் இதைச் சொல்லி வருகிறார்கள், ஏடுகளில் சிலர் எழுதியும் வருகிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய துணை இளைத்துப் போக வில்லை. களைத்துப் போகவும் இல்லை. எங்களுடைய துணை எங்களைப் போலவே வலுவாக இருக்கிறது. எங்களைப் போலவே உரமாக இருக்கிறது. ஆகவே இதற்குத் தான் துணை என்று பெயர். ஒன்று இளைத்துப் போய் மற்றொன்று பலமாக இருந்தால், அது துணையாக இருக்க முடியாது, தொல் லையாகத்தான் இருக்கும். எனவே நாங்கள் சம பலத்தோடு இன் றைக்கு இருக்கிறோம். இந்த வார்த்தையை நம்முடைய காதர் மொகிதீன் அவர்கள் தேர்தல் நேரத்தில் இடங்களைப் பிரித்துக் கொள்கின்ற போது பயன்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை யோடு நான் இதைச் சொல்கிறேன். (பலத்த சிரிப்பு)

நான் இந்தக் கூட்டத்திலே அளவற்ற மகிழ்ச்சியோடு நீங்கள் எல்லாம் அமர்ந்திருக்கின்ற காட்சியினைக் கண்டு உள்ளபடியே மனம் பூரிக்கின்றேன். என்னுடைய இதயம் கனத்துப் போகிறது. ஏனென்றால் நம்முடைய அருமை நண்பர் நாகூர் அனீபா அவர்கள் இங்கே பாடும்போது எனக்கு பல நினைவுகள். அவரும் நானும் ஏறத்தாழ சம வயதினர். ஒன்றிரண்டு வயது ஏற்றத் தாழ்வு இருக்கலாம். அந்தக் காலத்தில் நீதிக் கட்சி தொடர்பு கொண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடுகளில் - பிறைக் கொடி பறந்த அந்த மாநாடுகளில் - நம்முடைய வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் - பிறைக் கொடியைப் பிடித்த கை இந்தக் கை, சிறுவனாக இருந்து பிறைக் கொடியை ஏந்திய கை இந்தக் கை. அந்தப் பிறைக் கொடியைப் பற்றி பாடியவர், அன்றைய மாணவராக, இளைஞராக இருந்த நம்முடைய நாகூர் அனீபா அவர்கள். அந்த இசை முரசின் நாதம் இதுவரையிலே அதே தொனியிலே ஒலித்துக் கொண்டி ருக்கின்ற காட்சியினை நீங்கள் காண்கிறீர்கள். சிறு களைப்பு ஏற்பட்டாலும்கூட அந்தக் குரல்வளம் கொஞ்சமும் குறையவில்லை. எப்படி நாகூர் அனீபா வின் குரல்வளம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறதோ அதைப் போலத்தான் முஸ்லிம் லீக்கின் பலமும் குறையாமல் இருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்பு கிறேன்.

கொள்கைகளும் கூட்டணியும்

கூட்டணி பற்றி இங்கே பேசப்பட்டது. கூட்டணிக்கு, நம்முடைய பனத்வாலா அவர்கள் குறிப்பிட்டார்கள் - அதைத் தொட்டு நம்முடைய பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களும் சுட்டிக் காட்டினார்கள். தேர்தல் நேரம் தான் என்றில்லாமல், அதற்கு முன்பே கூட்டணியைப் பற்றியெல்லாம் ஒரு ஏற்பாட் டுக்கு வர வேண்டுமென்ற கருத்தைச் சொன்னார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் யார் யார் கூட்டணி சேருவது என்ற அந்த முக்கியமான கருத்தை விட யார் யார் கூட்டணியிலே இருப்பது என்கின்ற முக்கியமான கருத்துக்கு இப்போது நேரம் வந்து விட்டது என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள். நான் இன்று நேற்றல்ல, எங்களையெல்லாம் ஆளாக் கிய அரசியல் மேதை - ஜனநாயக காவலர் அண்ணா அவர்கள் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதிலே ஆர்வம் உடைய வர்கள். மக்களாட்சித் தத்துவம் வெற்றி பெற வேண்டுமானால், அப்படி வெற்றி பெற்ற மக்களாட்சி நிலைக்க வேண்டுமேயானால் - அடிப்படை பலமாக இருக்க வேண்டும். அந்த அடிப் படையைப் பலப்படுத்திக் கொள்ள நேர்மையான, நியாயமான, வலுவுள்ள நம்முடைய இலட்சியங்களை எதிரொலிக்கக் கூடிய, நம்முடைய கொள்கைகளுக்கேற்ற கூட்டணி இருக்க வேண்டும். நான் இங்கே நம்முடைய பனத்வாலா அவர்களின் எதிரிலே ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். நாங்கள் இடையிலே இந்தக் கூட்டணிக் கொள்கை யில் சற்று விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது - அவருக்குத் தெரியும். ஏனென்றால் என்னைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்ற தேசிய தலைவர்களில் அவரும் ஒருவர். ஏன் விட்டுக் கொடுக்க வேண்டி யிருந்தது என்பதை அவர் அறிவார். தமிழ்நாட்டில் பா.ஜ.க. வோடு திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வைக்க வேண் டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்ட போதும், நாங் கள் கொள்கையை புறம் வைத்து விட்டு, அந்தக் கூட்டணிக்குச் செல்லவில்லை. கொள்கையிலே உறுதியாகவே - கொள்கை யில் ஒரு துளியும் விட்டுக் கொடுக்காமல் அந்தக் கூட்டணியில் எங்களை நாங்கள் இணைத்துக் கொண்டோம். கூட்டணி உருவானபோதே டெல்லிப் பட்டணத்தில் நானும் தம்பி முரசொலி மாறன், இன்றைய ம.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் தம்பி கோபாலசாமி - எல்லோரும் படித்துப் பார்த்து, திருத்தம் சொல்லி இந்தக் கூட்டணியில் நாங்கள் இருப்பதென்றால், மதவெறியை நீங்கள் விட்டொழிக்க வேண்டும், ஒரு பொதுக் கொள்கையில் நாம் உடன்பாடு கொள்ள வேண்டும், மிக முக்கியமாக அயோத்தியிலே நீங்கள் ராமர் கோவில் கட்டுவ தற்காக பாபர் மசூதியை இடிக்கும் பணியிலே ஈடுபட்டிருக் கிறீர்களே, அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கேட்டு அதற்கெல்லாம் அவர்கள் வளைந்து கொடுத்து, அதற் கெல்லாம் ஒப்புதல் சொன்ன பிறகுதான் அந்தக் கூட்டணிக்கு எங்கள் கையெழுத்தைப் பெற முடிந்தது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.

கூட்டணிக் கட்சிக்கான இலக்கணம்

பிறகு நாங்கள் அந்தக் கூட்டணியிலிருந்து விலகியதற்குக் காரணமும், எங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக முதலில் சொல்லி விட்டு, கொஞ்சம் கொஞ்சம் அதைத் தளர்த்திய காரணத்தால் அதிலிருந்து அவர்கள் விலகிய காரணத்தால் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகினோம். அமைச்சர்களாகவே இருந்து விலகினோம். அதற்குப் பிறகுதான் இனி இப்படி கொள் கையிலே உறுதியாக இருப்போம் என்று சொல்லி விட்டு, பின்னர் மாறி நடப்பவர்களுடைய நட்பு என்றைக்கும் வேண்டாம், சொன்ன சொல் தவறாத ஒரு கட்சி இருந்தால் தான், அந்தக் கட்சியோடு தான் இனி கூட்டணி, நன்றி உணர்வோடு இருக் கின்ற கட்சியோடு தான் இனி கூட்டணி என்று அன்றைக்கு எடுத்த அந்த உறுதிதான் நாங்கள் அடுத்த வேறொரு கூட்டணியை காங்கிரஸ் கட்சியின் தலைமை யில் அமைக்க வேண்டி வந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளோடும் நம்முடைய தம்பி திருமாவளவன் கட்சியோடும், முஸ்லிம் லீக் கட்சியோடும் உடன்பாடு கொள்ள வேண்டிய நிலைமை யெல்லாம் ஏற்பட்டது.
இதிலே இடையிலே ஒரு கூட்டணி கட்சியை விட்டு விட்டாயே என்று நீங்கள் கேட்கலாம். பெயர் சொல்லத் தான் விட்டு விட்டேனே தவிர, விட்டு விடவில்லை, அவர்கள் என்ன செய்தால் போகச் சொல்வார்கள் என்று எண்ணிய காரணத்தால் போனவர்களே தவிர, நாங்களாக யாரையும் இழக்கவும் விரும்ப வில்லை, விரட்டவும் விரும்பவில்லை. ஏனென்றால் பனத்வாலா அவர்கள் இங்கே வந்திருக்கின்ற காரணத்தால், அவருக்கு இந்தச் செய்தியை வேறு யாராவது வேறு விதமாகச் சொன்னால் என்ன செய்வது என்பதற்காகத் தான் உண்மையான தகவலை அவருக்குச் சொன்னேன். நாங்கள் யாரையும் போ என்று விரட்ட வில்லை. ஆனால் நாங்கள் எவ்வளவு இழிவைத் தாங்கிக் கொண்டு, எவ்வளவு அவமானத்தைத் தாங்கிக் கொண்டு ஒரு அணியை நடத்துவது? நான்தான் அந்த அணிக்கு தலைவன் என்றாலுங்கூட, அந்த அணியைக் கட்டிக் காப்பது என்ற அந்தக் கேள்விக்கு கிடைத்த பதில் தான் எங்கள் அணியிலிருந்து ஒரு கட்சி இன்றைக்கு வெளி யேறியதற்குக் காரணம், இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது என்றைக்கோ நடந்ததற்காக இன்றைக்கு இந்த காரியத்தை நீங்கள் செய்யலாமா என்று கேட்பவர்கள் உண்டு. எழுதுபவர்களும் உண்டு. வள்ளுவர் அப்போதே சொன்னார். தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே
நாவினால் சுட்ட வடு என்று ! அந்தத் திருக்குறளை வேண்டு மானால் எடுத்துக் கொளுத்தி விட்டு, என்றைக்கோ பேசிய தல்லவா என்று பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் என்றைக் கும் நாவினால் சுட்ட வடு மாறாது, ஆறாது. ஆகவே தான் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியத்திற்கு வந்தோம். இன்றைக்கு இந்தக் கூட்டணியிலே இருந்து ஒரு கட்சி, விலகி யிருந்தாலுங்கூட, இதிலே இருக்க முடியாத சூழ்நிலை ஏற் பட்டாலுங்கூட, நாம் திராவிட முன்னேற்றக் கழகமாக, நம்மோடு இருக்கின்ற கட்சிகளோடு ஒரு அணியாக செயல்பட வேண்டிய சூழ்நிலை இருந்தாலுங்கூட நான் இந்த மாநாட்டிலே உறுதியாகத் தெரிவிக்கின்றேன். நிச்சயமாக, வருகின்ற தேர்தல் - அது பாராளுமன்றத் தேர்தலாக இருந் தாலும் - அடுத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் நம்முடைய அணிதான் வெற்றி அணி - நாம் தான் வெற்றியடையப் போகின்ற அணி என்பதை உறுதிபட நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

ஏனென்றால் முஸ்லிம் லீக் என்பது ஒரு சந்தர்ப்ப வாத இயக்கம் அல்ல. அந்த இயக்கத்திலிருந்து எங்களை அரவணைத் துக் காத்து, அறிஞர் அண்ணாவுக்குத் தோழராய், பெரியாருக்கு நண்பராய், எங்களுக்கெல்லாம் தலைவராய் விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் ஆனாலும் - அவர்களுக்கு அடுத்து இந்த இயக்கத்தை வளர்த்து எங்களோடு நட்பு கொண்டிருந்த என்னுடைய அருமை நண்பர் அப்துல் சமத் அவர்கள் ஆனாலும் - அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தை, இந்தக் கூட்டணியை எப்படி நடத்திச் செல்ல துணை புரிந்தார்கள் என்பதை யெல்லாம் நான் மறந்து விடவில்லை. இடையிடையே ஆயிரம் கசப்பு உணர்வுகள் , ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களிடையே ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஏற்பட்டாலுங் கூட, கண்ணியம் மறந்ததில்லை அவர். அதனால் தான் அவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று இன்றளவும் போற்றப்படுகிறார். கோபதாபங்கள் எனக்கும் அப் துல் சமத் அவர்களுக்கும் இடையிலே ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் வாய் தவறி கூட என் பெயரைச் சொல்லி, அருமை நண்பர் சமத் அவர்கள் அழைத்ததில்லை. அதனால் தான் இன்றைக்கு அவருடைய மகளான பாத்தி மாவை என்னுடைய அருமைச் செல்வி என்று என்னால் அரவ ணைக்க முடிகிறது. அந்த உறவு இன்றைக்கும் தொடருகிறது.

நான் இங்கே வந்ததும் என்னிடத்திலே வந்து பாத்திமா பேசினார். என்ன சொன்னார்? அவர் குடும்பத்தைப் பற்றியா? அல்லது என்னுடைய குடும்பத்தை பற்றியா விசா ரணை? இல்லை. கொள்கையைப் பற்றித் தான் பேசினார். இன்றைக்கு கனிமொழியைப் பார்த்தேன், அப்பா. நாங்கள் இருவரும் ஒரு சபதம் செய்திருக்கிறோம் என்றார். என்ன சபதம் என்றேன். இந்த மகளிர் இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவது, பெறுவதற்கான போராட்டத்திலே ஈடுபடுவது என்று சபதம் செய்திருக்கிறோம் என்றார். அப்போது தான் முஸ்லிம் லீக்கின் வலுவும், அவர்களு டைய மன உறுதியும் இந்தப் பெண்களை வளர்த்திருக்கின்ற தலைவர்களின் வைராக்கியமும், கொள்கைப்பற்றும் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நாம் நம்புகிறோம். நம்புவதற்கு வழி இருக்கிறது என்று உறுதிபடக் கூறுகிறேன்.

மதவாத சக்திகள் வென்றால் மீண்டும்
ராமர்கோயில் உருவாகும்
இன்று இந்தியாவின் நிலைமை என்ன? அவைகளை யெல்லாம் சாங்கோபாங்கமாக பேச வேண்டிய நேரம் தான் இது. அதைத் தான் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பேசிக் கொண் டிருக்கிறோம். ஒரு புறத்திலே ஏழை யெளிய மக்கள் வாடுகிற அளவிற்கு விலைவாசி ஏறுகிறது. தமிழகத்திலே அதைத் தடுக் கின்ற முயற்சியிலே ஈடுபடுகிறோம். முடிந்த வரையிலே தாங்கப் பார்க்கிறோம். முடிந்த வரையிலே தாங்கிக் கொண்டிருக் கிறோம். வேறு சில மாநிலங்களிலே அதற்கான வழி வகைகளை இன்னும் காணாமல் இருக்கிறார்கள். அகில இந்திய அளவிலே கூட அதற்குரிய காரண காரியங்களை அறிந்து அதைக் களைய வேண்டிய முயற்சிகளிலே ஈடுபடவில்லை. அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினை

கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை இந்த நேரத்திலே அணுசக்தி விவகாரம். அதிலே நம்முடைய மதிப்பிற் குரிய தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நண்பர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு. அதைத் தீர்க்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. நாளைக் குக் கூட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவர்களோடு பேசவிருக்கிறேன். அதன் பிறகு நான் டெல்லிக்குச் செல்லவிருக்கிறேன். ஏனென்றால் தகவல்கள், புதுத் தகவல்கள் என்பதால் உங்களுக்கும் சொல்ல வேண்டு மென்பதற்காகச் சொல்கிறேன். அந்தத் தகவல்கள் பரிமாற்றம், அந்தச் சந்திப்பு அதன் மூலமாக ஏற்படுகின்ற விளைவுகள் இந்தி யாவைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட் சியைக் காப்பாற்றவோ, காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றவோ பயன்பட வேண்டுமென்று சொல்வதற்குப் பதிலாக இருவரி டையே ஏற்படுகின்ற நல்ல எண்ணம், இந்தியாவைக் காப்பாற் றப் பயன்படும். இவர்களிடையே பிளவு ஏற்படுமேயானால், அது மத வாத சக்திகளுக்கு வெற்றியாக ஆகி விடும், மீண்டும் ஒரு அயோத்தி - மீண்டும் ஒரு ராமர் கோவில் பிரச்சினை - மீண்டும் ஒரு பாபர் மசூதி இடிப்பு என்றெல்லாம் ஏற்படும் என்பதற்காகத் தான் சொல்கிறேன். அவைகள் எல்லாம் வராமல் இருக்க சுமூகமான இந்தியா, அமைதியான இந்தியா அமைய வேண்டுமேயானால், என்ன நடக்க வேண்டும்? ஒரு வேளை விரைவிலே தேர்தல் வந்தாலும், அல்லது உரிய நேரத்திலே வந்தா லும் அந்தத் தேர்தலிலே ஏற்பட வேண்டிய முடிவு யார் ஜெயிப் பது, யார் தோற்பது என்பதல்ல. இந்தியா வாழ்வதா இல்லையா என்ற அந்தக் கேள்விக்கு கிடைக்கின்ற பதிலாகத் தான் அது இருக்கும்.
கட்சி நீடிக்க வேண்டும் -

பணம் வேண்டாம் என்றவர் காயிதே மில்லத்
உங்களுக்கு நான் நினைவுபடுத்துகின்றேன். பாகிஸ்தான் பிரிந்து - பாகிஸ்தானிலே முஸ்லிம் லீக் தலைவர்களின் கூட்டம் நடைபெற்று - அந்தக் கூட்டத்திற்கு நம்முடைய காயிதே மில்லத் அவர்கள் சென்று திரும்பும் போது என்ன பேசினார் தெரியுமா? அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்ட போது - அய்யா இஸ்மாயில் சாகிப் அவர்களே, இதுவரை ஒன்றாக இருந்த முஸ்லிம் லீக் கட்சிக்கான பணம் மொத்தம் 40 லட்ச ரூபாய் இருக்கிறது. தற்போது இரண்டு நாடுகளாக பிரிந்து விட்டதால் - இந்தியாவிலே அமையவுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் பங்காக 17 இலட்ச ரூபாயை நீங்கள் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று சொன்ன போது, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் சொன்னார் - எனக்கு பணம் பெரிதல்ல, நான் பணத்தைக் கேட்க இங்கே வரவில்லை, கராச்சிக்கு நான் வந்திருப்பது பணத்தைப் பெறுவதற்காக அல்ல, நாற்பது இலட்சம் அல்ல, 400 லட்சம் ஆனாலும் எனக்குத் தேவையில்லை. ஆனால் நான் விரும்புவது எங்களுடைய அமைப்பு இல்லாமல் போய் விடக் கூடாது. அந்த அமைப்பு அப்படியே இருக்க வேண்டும். எனவே அமைப்பை அப்படியே தாருங்கள் - முஸ்லிம் லீக் இந்தியாவிலே இருக்கும், அதை நாங்கள் கட்டிக் காப்போம், அதை நாங்கள் நடத்துவோம். முஸ்லிம் லீக் இருந்தால் போதும் எங்களுக்கு, உங்கள் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டு திரும்பி வந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்கள்.
அங்கே சொன்னார்கள் - இதை எடுத்துச் செல்லுங்கள் என்று. ஆனால் வேண்டாம் என்று கொடுத்து விட்டு வரும் போது பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானைப் பார்த்து, இன்றையதினம் நாங்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். நீங்கள் பாகிஸ்தான்காரர்கள். நாங்கள் வேறு நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எங்கள் பிரச்சினை களை இனிமேல் நாங்களே பார்த்துக் கொள்வோம். நீங்கள் அதிலே தலையிட முயற்சிக்கக் கூடாது. அதாவது பாகிஸ்தான் இந்தியாவின் பிரச்சினைகளிலே தலையிடக் கூடாது, அதை நாங்களே பார்த்துக் கொள்வோம். ஏனென்றால் இந்தியா எங்கள் நாடும் கூட என்று கூறிவிட்டு, நாங்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். உங் கள் நாட்டில் வாழும் சிறுபான்மையினரை நீங்கள் கௌரவ மாக நடத்துங்கள். அது ஒன்றே போதுமானது இங்கே உள்ள சிறுபான்மையினரை கௌரவமாக நடத்துங்கள் என்று இந் தியாவிலே இருக்கின்றவர்களைப் பார்த்து கேட்கின்ற உரிமைக் குரல் எப்படி முஸ்லிம் தலைவர்களுக்கு ஏற்படுகிறதோ, அதைப் போல பாகிஸ்தானிலே இருக்கின்ற சிறுபான்மையோரை கௌர வமாக நடத்துங்கள் என்று சொல்கிற அந்த வீரக் குரலை ஒலித்தவர் நம்முடைய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்பதற்காகத் தான் இதை நான் சுட்டிக் காட்டுகிறேன். ``இசுலாமியரை வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை

நாடாளுமன்றத்தில் ஓர் விவாதத்தின் போது கே.டி.எம். அகமது இப்ராகிம் சாகிப் என்பவர் முஸ்லிம்களுக்காக வேகமாக வாதா டிக் கொண்டிருந்தாராம். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்கு கோபம் வந்து விட்டது. உடனே அவர் இப்ராகிம் சாகிப் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு இங்கிருக்கப் பிடிக்கா விட்டால் பாகிஸ்தானுக்கு போய் விடுவது தானே என்று வல்லபாய் படேல் கேட்டாராம். அப்போது அவையிலே இருந்த காயிதே மில்லத் விறுட்டென்று எழுந்து, அமைச்சர் பட்டேலைப் பார்த்து எங்களை பாகிஸ்தானுக்குப் போகச் சொல்ல நீங்கள் யார்? இந்த நாட்டில் பிறந்த யாரையும் வெளியே போ என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. இந்த நாட்டில் உள்ள ஈ, எறும்பு, கொசுக்களைக் கூட வெளியே போ என்று சொல்ல முடியாது என்று சொன்னாராம். அந்த அளவிற்கு இந்திய நாட்டுப் பற்றும், இந்த நாட்டை விட்டு வெளியேறு என்று சொல்கிறவர்களைக் கடிந்து கொள்கிற அந்த உணர்வும் பெற்றவராக காயிதே மில்லத் அவர்கள் அன்றைக்கு இருந்த காரணத்தால் தான் அந்த நாட்டுப் பற்று, அந்தத் தேசிய உணர்வு இன்றளவும் குமரி முனை வரையில் - இமயத்தின் முகடுகள் வரையில் பரவியிருக்கிறது, வளம் பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களைப் பெற்ற இயக்கம் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அந்த இயக்கம் பெற்ற வெற்றிகள் ஒன்றிரண்டு அல்ல.

இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போரிட்டு வெற்றிக் கொடி நாட்டி, சுதந்திரத்தைக் கொண் டாடுகின்ற உரிமையை வாங்கித் தந்த மக்கள் இந்திய மக்கள் என்றால், அந்த இந்திய மக்களிலே இஸ்லாமிய மக்களுக்கும் பங்கு உண்டு என்ற அந்த உணர்வோடு நாம் நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. எனவேதான் இன்றைக்கும் இஸ்லாமியர்களுடைய உரிமைகள், முஸ்லிம் மக்களுடைய உரிமைகள், உணர்வுகள் இவைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய மசூதிகளை இடிப்போம், அவர் களை இங்கே வாழ விட மாட்டோம், நாங்கள் தான் இந்த நாட்டிற்காக அவதாரம் எடுத்தவர்கள் என்று யார் பேசினாலும், அவர்களுக்கு இந்தியாவிலே இனி வேலையில்லை என்று சொல்கின்ற அரசு தான் மத்தியிலே உருவாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசு உருவாக வேண்டுமேயானால் இங்கே வீற்றிருக்கின்ற நாமெல்லாம் அந்தக் கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும். அந்தக் கூட்டணி சுயமரியாதை கூட்டணி. மான உணர்வுள்ள கூட்டணி. அந்தக் கூட்டணி ஜனநாயகக் கூட் டணி. அந்தக் கூட்டணி மனிதனை மனிதனாக மதிக்கின்ற கூட் டணி. கண்ணியத்திற்குரிய கூட்டணி, நாகரிகமான கூட்டணி, அந்தக் கூட்டணி வெல்ல இந்த மாநாடு நிச்சயமாகப் பயன்படும், இந்த மாநாடு ஒரு பக்க பலமாக இருக்கும் என்ற நம்பிக் கையோடு என்னுடைய உரையை நிறைவு செய்து, வெற்றிகள் எல்லாம் நம் பக்கம் வந்து சேரட்டும், அதற்கு உங்களுடைய பணி தொடரட்டும் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

www.viduthalai.com

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
கலைஞர் அவர்களுடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மணிவிழா மாநாட்டில் தமிழர் தலைவர் உணர்ச்சிப் பேருரை

சென்னை, ஜூன் 22- கலைஞர் அவர்களை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என்று இஸ்லாமியர்கள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்க வுரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-6-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை - தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

கலைஞர் ஆட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்புநம்முடைய தமிழகத்திலே கலைஞர் அவர்களுடைய பொற் கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய ஆட்சியைக் பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் பேசும்பொழுது, எங்களுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் நீங்கள் என்று சொன்னார்.

திராவிட இயக்கம் என்றைக்கும் உங்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும். இந்தியாவில் பாபர் மசூதியை இடித்த நேரத்தில், இந்தியாவில் அமைதிப் பூங்கவாகத் திகழ்ந்த மாநிலம் ஒன்று என்று சொன்னால் அது தமிழ்நாடுதான்.

திராவிட இயக்கம் அந்த அளவுக்கு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது.பெரியார் பிறந்த மண்ணான இந்த மண்ணில் என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பு உண்டு.

ஆனால், காந்தியார் பிறந்த மண்ணான குஜராத்தில் இன்றைக்கும் சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை இருக்கிறது.

மூன்றாவது தலைமுறையாக தொடரும் உறவு காயிதே மில்லத் அதற்கடுத்து சிராஜுல்மில்லத் அதற்கடுத்து இன்றைக்கு மூன்றாவது தலைமுறையாக இந்த உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மதத்தில் இஸ்லாமியர்களாக இருந்தாலும் நாம் திராவிடர்கள்.

நீங்கள் கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் அல்ல.

இந்த மண்ணுக்கு தலைமுறை தலைமுறையாக, சொந்தக்காரர்கள் நீங்கள்.

திராவிட இயக்கம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நமது கலைஞர் அவர்களுடைய பொற்கால ஆட்சியில் நீங்கள் கோரிக்கைகளை வைத்து, கேட்டுத்தான் பெறவேண்டும் என்பதில்லை.

கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே கேட்காமலேயே செய்யக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இன்றைக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

1972-இல் சட்டமன்றத்திலே கலைஞர் சொன்னார்முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பற்றிச் சொன்னார்கள். 1972 லே சட்டமன்றத்திலே கலைஞர் அவர்கள் மிகத் தெளிவாக சொன்னார்கள். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தில் இடம் இருக்கிறதோ - இல்லையோ என்னுடைய இதயத்திலே இடமிருக்கிறது என்று சொன்னவர்தான் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

கலைஞர் ஆட்சியை இந்தியாவே பின்பற்ற வேண்டும்பனத்வாலா அவர்கள் பேசும்போது கலைஞர் அவர்களுடைய ஆட்சி எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு பாராட்டிச் சொன்னார்கள்.

இந்தியாவே கலைஞர் அவர்களுடைய ஆட்சித் திறனைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார். பனத்வாலா அவர்கள் சொன்னதிலே இட ஒதுக்கீடு அடங்கியிருக்கிறது. சமூகநீதி அடங்கியிருக்கிறது.

இனநலம் இருக்கிறது. சமூக பாதுகாப்பு இருக்கிறது. சமூக நல்லிணக்கம் அடங்கியிருக்கிறது என்று சொன்னார்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கும்.

எங்களைப் பார்த்து சிலர் கேட்பதுண்டு. நீங்கள் எப்படி முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்துகொள்ளலாம்? என்று.

முஸ்லிம் மதம் மட்டும்தான் இந்த நாட்டை ஆளவேண்டும், மற்ற மதத்தினர் ஆளக்கூடாது என்று சொல்பவர்கள் அல்ல அவர்கள்.

மற்ற மதத்துக்காரர்கள் மாள வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல. பெரும்பான்மையினர் ஆள வேண்டும்; சிறுபான்மையினர் வாழ வேண்டும் என்று கருதுபவர்கள் அவர்கள்.

எல்லோருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியை கலைஞர் அவர்கள் இங்கு நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

அவருடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிய மக்களான உங்களுக்குப் பாதுகாப்பு கலைஞர் அவர்கள்தான். கலைஞர் அவர்களுடைய ஆட்சியை காப்பது உங்களுடைய கடமை. அவருடைய ஆட்சிக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது உங்களுடைய கடமை.

நம்முடைய கடமை. இன மீட்புக்காக நடைபெறக்கூடிய கலைஞர் ஆட்சியை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமை தலையாய கடமையாகும்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்.

உரையாற்றியோர்இம்மாநாட்டில் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் சையத் சத்தார், பாத்திமா (அப்துல் சமது மகள்), இசைமுரசு நாகூர் அனிஃபா, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்திய தலைவர் பனாத்வாலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி, பல பொறுப் பாளர்கள் உரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் எம். ஜெய்னுல் ஆபுதீன், நிர்வாகிகள் கமுதி பஷீர், நிஜாமுதீன் ஆகியோர் மாநாட்டிற்கான பணியை முன்னின்று நடத்தினர். பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு இஸ்லாமியர்களின் பேரணி தொடங்கி மாலை 6.15 மணிக்கு மாநாடு நடைபெற்ற தீவுத் திடலை வந்தடைந்தது.தீவுத் திடலில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை இஸ்லாமிய மக்களின் கூட்டம் காணப்பட்டது.

http://viduthalai.com/20080622/news14.html

www.quaidemillathforumuae.blogspot.com

Saturday, June 21, 2008

முஸ்லிம் லீக் மாநாட்டில் சமய நல்லிணக்க விருது



எம்.டி.ஸலாஹுத்தீன், வின்சென்ட் சின்னதுரை, பொன்னம்பல அடிகளார், நல்லகண்ணுவுக்கு விருது!



சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டையொட்டி இன்று காலை 10.00 மணிக்கு சமய நல்லிணக்க விருது வழங்கும் விழா நடைபெற்றது.

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை ஆகியோருக்கு சமய நல்லிணக்க விருதினை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வழங்கினார். அவர்களுக்கு முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பொன்னாடை போர்த்தினார்.

இன்று காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் விழா தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் ஜி.எம். பனாத்வாலா ஸாஹிப், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, டி.பி. மைதீன்கான், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், மத்திய அமைச்சர் இ.அஹமது, ஆர்.எம்.வீரப்பன், கேரளாவிலிருந்து அஜீத் சாஹிப், கவிக்கோ அப்துல் ரஹ்மான், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சிக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்குமாறு தலைமை நிலையச் செயலாளர் அபூபக்கர் முன்மொழிந்தார். அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீது வழிமொழிந்தார். செய்யது ஹபீப் அப்துல் ரஹ்மான், ஜமாஅத்துல் உலமா பேரவை மாநிலத் தலைவர் உமர் பாரூக் தாவூதி ஆகியோர் துஆ ஓதினர்.

ஸலாஹுதீன், இசை மாமணி எம்.எம்.யூசுப், மாநில உலமாக்கள் அணி தலைவர் ஹாமித் பக்ரீ, மார்க்க அணி அமைப்பாளர் கனிசிஷ்தி, இலக்கிய அணி அமைப்பாளர் தஜம்முல் முஹம்மது, அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் அப்துர் ரஹ்மான், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அஹமது, அஜீஸ் சாஹிப், அமெரிக்கா காயிதெமில்லத் பேரவை தலைவர் நூர்தீன், துபாய் ஸலாஹுத்தீன், மெஜஸ்டிக் கரீம் ஆகியோர் உரையாற்றினார்.

சையத் ஸலாஹுத்தீனின் சேவைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித் பாராட்டு வாசித் தார்.

கம்யூனிஸ்டுகளின் மூத்த தலைவர் ஆ. நல்லகண்ணு பற்றிய பாராட்டுக் குறிப்பினை மாநில அமைப்பாளர் கமுதி பஷீர் வாசித்தார்.

வின்சென்ட் சின்னத்துரை பற்றி அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பாராட்டுக் குறிப்புரை வழங்கினார்.

பின்னர் இம்மூவருக்கும் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி சமூக நல்லிணக்க விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

http://www.muslimleaguetn.com/

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநில மாநாட்டுத் தலைமையுரையும், மாநாட்டுப் பிரகடனமும்!

http://www.muslimleaguetn.com/news.asp

வந்தோரை வாழ வைப்பவர் செய்யிது ஸலாஹுத்தீன் ஆற்காடு வீராசாமி பேச்சு

http://www.muslimleaguetn.com/news.asp?id=28

பெண்கள் தமக்குத் தாமாகவே தடை விதித்துக் கொள்கிறார்கள்! -ஃபாத்திமா முஸஃப்பர் பேச்சு

http://www.muslimleaguetn.com/news.asp?id=27

மாநாட்டு நிகழ்ச்சிகள், பிறைக்கொடி பேரணி ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

http://www.muslimleaguetn.com/news.asp?id=26




Thursday, June 19, 2008

அமீரக தொழிலதிபருக்கு மாநாட்டில் சமயநல்லிணக்கத்துக்கான விருது


அமீரக தொழிலதிபருக்கு மாநாட்டில் சமயநல்லிணக்கத்துக்கான விருது


துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் கீழக்கரை அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன், கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, கிறிஸ்தவ பிரமுகர் மறைதிரு வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்டோருக்கு சமய நல்லிணக்கத்துக்கான சிராஜுல் மில்லத் விருது இந்திய யூனியன் முஸ்லிம் 60 ஆம் ஆண்டு மணி விழா மாநாட்டில் சனிக்கிழமை வழங்கப்பட இருக்கிறது.

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தில் சுமார் 70,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பல்வேறு இன,மொழி, நாடு உள்ளிட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமய பேதமில்லாது சர்வ சமய மக்களும் பணிபுரிந்து வரும் கேந்திரம் ஈடிஏ அஸ்கான் நிறுவனம், சமயநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இடம். இதில் 70,000 பேர் என்றில்லாது 70,000 குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றன.

இதேபோல் சம்ய நல்லிணக்கப் பணிகளை மேற்கொண்டு வரும் நல்லகண்ணு, வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்டோருக்கும் இவ்விருது வ்ழங்கப்பட்டுகிறது.

மேலும் இயக்க வளர்ச்சிக்காக 50 ஆண்டுகள் உழைத்தோருக்கு காயிதெமில்லத் விருது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றியோருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கப்படுகிறது.மேலும் சாதனைப்பெண்மணிகளுக்கும் விருது வழங்கப்படுகிறது.

அமீரக அமைப்புகள் வாழ்த்து : சமய நல்லிணக்க விருது பெறும் செய்யது எம் ஸலாஹுதீனுக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம். ஜே. முஹம்மது இக்பால், துபாய் தமிழ்ச் சங்க தலைவர் சபேசன், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், தமிழ்த் தென்றல் இதழ் ஆசிரியர் அப்துல் ரவூஃப், வானலை வளர்தமிழ் நிர்வாகி காவிரி மைந்தன், சுடர் வம்சம் நிறுவனர் ரகுராஜ், உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் சலாஹுதீனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் விருது பெறுவோர் பட்டியல்!

மணிவிழா மாநாட்டில் விருது பெறுவோர் பட்டியல்!

www.muslimleaguetn.com


இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் ஜூன் 21 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் காயிதெமில்லத் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 50 ஆண்டுகள் உழைத்த முஸ்லிம் லீக் மூத்த ஊழியர்கள்-

காயிதெ மில்லத் விருது பெறுவோர்:

1. மவ்லவி அப்துல்ஹை நக்காவி - பள்ளபட்டி
2. மவ்லவி எம்.என். அப்துல் காதர் பாகவி - பெரம்பலூர்
3. எம். செய்யது இப்ராஹிம் - வேதாளை
4. ஹாஜி ஏ.கே. அப்துல்ஹலீம் - சென்னை
5. இசைமணி எம்.எம். ய+சுப் - சென்னை
6. ஹாஜி ஜம்ஜம் எஸ்.எம். பதுருத்தீன் - சென்னை
7. எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் - திருச்சி
8. எச்.ஏ. அப்பாஸ்(சுதந்திர போராட்ட வீரர்) - சென்னை
9. ஹாஜி பி.கே.இ. அப்துல்லா - வலங்கைமான்
10. ஹாஜி எம்.ஏ. குலாம்மொய்தீன் - அய்யம்பேட்டை
11. ஹாஜி என்.பி. முஹம்மது உசேன் - ராஜகிரி
12. மொய்தீன் பிச்சை - திருச்சி
13. எஸ்.டி.ஏ. முஹம்மது மீரான் - சென்னை
14. மவ்லவி ஆர்.கே.அப்துல்காதர் பாகவி - பள்ளபட்டி
15. ஹாஜி எம்.அப்துல் கனி - தூத்துக்குடி
16. எஸ்.எஸ்.இ. காழி அலாவுதீன் ஆலிம் - காயல்பட்டினம்
17. ஹாஜி வாவு அப+பக்கர் சித்தீக் - காயல்பட்டினம்
18. எஸ்.டி. நிஸார் அஹமது - வாணியம்பாடி
19. ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார் - பள்ளபட்டி
20. மவ்லவி அப்துஸ்ஸமது நத்வி - கோட்டகுப்பம்
21. பி.கே. அப்துல் ஸலாம் - கோயமுத்தூர்
22. வி.எம். முஹம்மது காசீம் - கோயமுத்தூர்
23. அப்துல் ரஹ்மான் (ஏ) பிச்சை ஹாஜியார் - பள்ளபட்டி
24. ஹாஜி எம்.ஓ. செய்யதுஇஸ்மாயில் - சென்னை
25. ஹாஜி எஸ்.எம். கனிசிஷ்தி - சென்னை
26. பேராசிரியர் சாகுல் ஹமீது - குளச்சல்
27. டி.ஏ. அப்துல் மஜீது - குன்னூர்
28. அறமுரசு அப்துல் காதர் - நாகூர்
29. சாந்து முஹம்மது - இனாம்குளத்தூர்
30. முஹம்மது யாக்கூப் - கோயமுத்தூர்
31. புதுப்பேட்டை கே.எஸ்.ஆரிஃப் - சென்னை
32. ஹாஜி எம்.எம். மொகுதூம்கண் சாஹிப் - காயல்பட்டினம்
33. அரிக்கடை பி.எம். முஹம்மது சாலிஹ் - குளச்சல்
34. ஹாஜி எம். பஸ்லுத்தீன் - ஆயங்குடி
35. ஹாஜி மெக்கோ பக்கீர் முகைதீன் - சென்னை
36. ஆயிரம்விளக்கு ஏ.பி.அமானுல்லா - சென்னை
37. இளம் லீகன் ஏ.ஆர். செய்யது இப்ராஹிம் - புதுமடம்
38. கே.எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான் - அதிராம்பட்டினம்
39. எம். சேக்னா மரைக்காயர் - அதிராம்பட்டினம்
40. டாக்டர் ஏ.எம். ஜியாவுதீன் - அய்யம்பேட்டை
41. ஹாஜி என்.பி. அப்துல் வஹாப் - வழுத்தூர்
42. கே.ஏ. அப்துல் கலாம் - கோயமுத்தூர்
43. வி.பி.முஹம்மதலி - கோயமுத்தூர்
44. ஏ.எம். தெராவு ஷா சாஹிப் - கோயமுத்தூர்
45. சர்கார் முஹம்மது இஸ்மாயீல் - சென்னை
46. ஹாஜி எம்.எஸ். அப்துல் ரஹ்மான்நூரி - சங்கரன்கோவில்
47. டாக்டர் கே.எஸ்.டி. ஜமாலுத்தீன் - சேரன்மகாதேவி
48. கே.அப்துல் வஹாப் - சோழமாதேவி
49. என். அப்துல் காதர் - விக்கிரமசிங்கபுரம்
50. ஹாஜி செய்யது பட்டாணி - பாம்புக்கோவில்சந்தை
51. கவிஞர் வீரை எம். அப்துல் ரஹ்மான் - வீரவநல்லூர்
52. வெ.கா. உ.அ. முஹம்மது ஹனீபா - கடையநல்லூர்
53. எஸ். ஹபீபுல்லாஹ் - தென்காசி
54. வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம்(முன்னாள் எம்.எல்.ஏ) - மேலப்பாளையம்
55. ஏ.கே.எச்.அப்துர் ரசாக் - வரகனேரி
56. கே.இ.இப்ராஹிம் - திருச்சி
57. பி.ஆர்.எம். அப்துல் ஸலாம் - இனாம்குளத்தூர்
58. ஷாகுல் ஹமீது - திருச்சி
59. ஹாஜி ஏ.பி. மலுக்காமலி - பத்தமடை
60. ஹாஜி டி.ஜே. பக்கீர் முஹம்மது - லால்பேட்டை
61. அ.க.நெய்னா முஹம்மது - கீழக்கரை
62. ஹ{சைன் பீரான் - சேலம்
63. கே.எஸ். அப்துல்லா பாஷா - காஞ்சிபுரம்
64. ஏ.கே. செய்யது இப்ராஹிம் - எண்ணூர்
65. அல்ஹாஜ் அப்துல் ஹாதி - நெல்லிக்குப்பம்
66. எச்.எம். ஆலியா மரைக்காயர் - காரைக்கால்
67. ஒய். அப்துல் ரஷாக் - காரைக்கால்
68. ஹாஜி எஸ்.டி. வெள்ளைத்தம்பி - காயல்பட்டினம்
69. ஹாஜி ஏ.எம்.ஹனீபா - மங்கலம்பேட்டை
70. ஹாஜி எம்.எஸ். அஹ்மது பாஷா - குடியாத்தம்
71. ஹாஜி வி.எஸ். அமானுல்லாஹ் - கடையநல்லூர்
72. கே.இ. முஹம்மது இப்ராஹிம் - புளியங்குடி
73. மணிவாசகம் ய+சுப் - மதுரை
74. டாக்டர் கே.எம். ஜக்கரிய்யா - மேட்டுப்பாளையம்
75. ரங்கூன் சுலைமான் - சென்னை
76. எழுத்தாளர் ஷேக்கோ - இளையாங்குடி
77. த.உ. அப்துல் காதர் - கடையநல்லூர்
78. ஹாஜி. பி.எம். ஷேக் உதுமான் - கடையநல்லூர்
79. எம்.ஏ. ஷாஹ{ல் ஹமீது(மூப்பன்) - கடையநல்லூர்
80. ஹாஜி பி.எம். அப்துல் காதர் - கடையநல்லூர்
81. எஸ்.எம். காஸிம் - மேட்டுப்பாளையம்
82. எம்.கே.இப்றாஹீம் - அதிராம்பட்டினம்
83. ஹாஜி என்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதர் - முத்துப்பேட்டை
84. எம்.எம்.ஷாஹ{ல் ஹமீது - வேதாளை
85. கே.சையது இப்றாம்ஷா - வேதாளை

சிராஜுல் மில்லத் நல்லிணக்க விருது பெறுவோர்:

1. செய்யது எம்.ஸலாஹ{த்தீன்
2. திரு. நல்லகண்ணு
3. மறைதிரு. வின்சென்ட் சின்னதுரை

கல்வி, மருத்துவம், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சமூகநலப் பணியாற்றுபவர்களுக்கான சமுதாய ஒளிவிளக்கு விருது பெறுவோர்:

1. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துர் ரஹ்மான் - கல்வித்தந்தை
2. மேல்விஷாரம் அல்ஹாஜ் எம்.முஹம்மது ஹாஸிம் - மார்க்கப் பணியும் சமூக சேவையும்
3. அல்ஹாஜ் டாக்டர் எஸ்.எம். ஹாமித் அப்துல் காதர் - கல்வி நிறுவனம்
4. அல்ஹாஜ் டாக்டர் சேகு நூருத்தீன் - பத்திரிகை, கல்விக்கூடம்
5. அல்ஹாஜ் பரகத்அலி மாயின் அப+பக்கர் - பள்ளிவாசல்கள்
6. நோபுள் சாகுல் ஹமீது - ஜகாத் விநியோகத்தில் புதுமை
7. ஒயிட்ஹவுஸ் அல்ஹாஜ் அப்துல் பாரி - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புப் பணிகள்
8. ஹாஜி டி.எஸ். பத்ஹ{ர் ரப்பானி - கல்விக்கூடம்
9. ஹாஜி எஸ். அஹமது மீரான் - புரபஸனல் கூரியர் சர்வீஸ்
10. எஸ்.டி. கூரியர் கே. நவாஸ் கனி - கூரியர் சர்வீஸ்
11. ஹாஜி டாக்டர் செய்யது கலீபத்துல்லா - மருத்துவசேவை
12. ஆம்ப+ர் முஹம்மது சயீது - கல்வி வளர்ச்சி
13. அல்ஹாஜ்வாவு செய்யது அப்துர் ரஹ்மான் - மகளிர் கல்வி
14. அல்லாமா பிலாலிஷாஹ் ஜுஹ{ரி - கல்வி வளர்ச்சி
15. இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா - இசை மூலம் சமயப் பணி
16. அய்யம்பேட்டை மர்ஹபா ஏ.கே.பஷீர்அஹமது - கல்விப் பணி
17. கவிஞர் நாகூர் சலீம் - இலக்கியப் பணி
18. சென்னை ஆர். வரிசை முகம்மது - தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வேலைவாய்ப்பு, சமூகப் பணிகள்
19. திருப்ப+ர் குர்பானி அறக்கட்டளை - கல்வி மற்றும் மருத்துவப் பணி
20. கூத்தாநல்லூர் ஏ.வி.எம். ஜாபருத்தீன் - பத்திரிகை துறை, கல்வித்துறை
21. புதுக்கோட்டை அல்ஹாஜ் ஏ. ஷர்புதீன் - பள்ளிவாசல் கட்டுதல் மற்றும் கல்வி உதவி
23. புதுக்கோட்டை அல்ஹாஜ் எஸ்.எம். செய்யதுஇப்ராஹிம் - வேலை வாய்ப்பு மற்றும் பைத்துல்மால் பணி
24. நாகூர் அல்ஹாஜ் ஆலியா சேக்தாவ+து - கல்விப் பணி
25. கூத்தாநல்லூர் சேக்தாவ+து - நூல் வெளியீட்டில் உலக சாதனை
26. கே.எம்.டி. மருத்துவமனை காயல்பட்டினம் - மருத்துவசேவை
27. மேல்விஷாரம் ஹாஜி ஜியாவுதீன் - கல்விப்பணி
28. இரோடு டாக்டர் அமானுல்லா - மருத்துவம் கல்விப் பணி
29. கோவை கலீல் அஹமது - கல்விப் பணி
30.அழகன்குளம் முகம்மது ஆதம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சமூகப் பணி
31. மேலப்பாளையம் இன்ஜினீயர் செய்யது அஹமது - மகளிர் கல்வி மேம்பாடு
32. தென்காசி ஹாஜி எம்.எஸ். துராப்ஷா - தொழில் கல்வி
33. அதிராம்பட்டினம் ஏ.ஜெ. இக்பால் - மதரஸே நிஸ்வான்
34. உடன்குடி எஸ்.ஜே.எம். ஜமாலுதீன் - கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணி
35. திருச்சி டாக்டர் அஷ்ரப் - இந்திய அளவில் மருத்தவ சேவை முன்னோடி
36. அய்மான் கவிஞர் ஷம்சுதீன் (அய்மான் கல்வி அறக்கட்டளை) - மகளிர் கல்வி மேம்பாடு
37. மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம் - ஷரீஅத் பஞ்சாயத்து நிர்மாணம் மற்றும் பள்ளிவாசல்
38. கோட்டாறு மாலிக் தினார் முஹல்லம் பைத்துல்மால் - முன்மாதிரி முஹல்லா ஜமாஅத் அமைப்பு
39. டாக்டர் அயாஸ் அக்பர் - அறுவை சிகிச்சை இல்லாத இருதய நோய் நிவாரணம்
40. டாக்டர் ஜமீர் பாஷா - லேப்ரோஸ் கோபிக் முறையில் மருத்துவ சிகிச்சை
41. திருச்சி ஹாஜி முஹம்மது ய+னுஸ் (எம்.ஐ.இ.டி.) - உயர்கல்விப் பணி
42. காயல்பட்டினம் எஸ். அக்பர்ஷா - வேலைவாய்ப்பு மற்றும் கல்விப் பணிகள்
43. சித்தார்கோட்டை எஸ். தஸ்தகீர் காக்கா - கல்வி நிறுவனங்கள்
44. அல்ஹாஜ் தைக்காலெப்பை - ஆன்மீக வழியில் சமூக அமைதிப்பணி
45. உத்தமபாளையம் ஹாஜி எம்.தர்வேஸ் முகைதீன் - கல்விப் பணி
46. கம்பம் ஹாஜி எம்.கே.முஹம்மது ஷரீப் - இஷாஅத் இஸ்லாம் பணி
47. பழனி முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் - கல்வி திருமண உதவிகள்
48. திருச்சி டாக்டர் ஷேக்முஹம்மது - கணக்கு ஆய்வியல் இந்திய அளவில
; 49. இனாம்குளத்தூர் ஹாஜி சாகுல் ஹமீது - யுக காலண்டர் தயாரித்து சாதனை
50. துவாக்குடி முஹம்மது இல்யாஸ் - தொழில் கல்வி நிறுவனம் மற்றும் பள்ளி நிர்மாணித்தல்
51. திருச்சி பேராசிரியர் டி.சி. அப்துல் மஜீத் - முன்மாதிரி அனாதை நிலையம் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம்
52. திருநெல்வேலி ஹாஜி எம். ஜமால் முஹம்மது - கல்விப்பணி மற்றும் அநாதை நிலையம்
53. மேலப்பாளையம் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துல் ரஹ்மான் - கல்வி பணி
54. கூத்தாநல்லூர் வடக்கு கோட்டையார் முஹம்மது அப்துல்லா அறக்கட்டளை - சமய நல்லிணக்கப் பணிகள்
55. தஞ்சாவ+ர் ஹாஜி பி.எஸ். ஹமீது - மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை
56. ராஜகிரி ஹாஜி அப்துல் மாலிக் - கல்விப் பணி
57. மதுரை ஹாஜி ராஜா ஹஸன் - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு
58. வி.எஸ். முஹம்மது முபாரக் (எ) சலீம், குன்னூர் - சமூக சேவைகள்
59. முஸல்மான் உருது பத்திரிக்கை - புகழ்பெற்ற உருது பத்திரிக்கை

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு ஜூன் 21, 2008 காலையில் ராஜாஜி ஹாலில் நடைபெறும் கல்வி மேம்பாடு விழிப்புணர்வு மகளிர் கருத்தரங்கில் சாதனைப் பெண்மணி விருது பெறுவோர்:

1. மினி கிருஷ்ணன் - சமய நல்லிணக்கம்
2. முனைவர் பேராசிரியை சா. நஸீமாபானு - கல்விப் பணி
3. எம். அனீஸ் ஃபாத்திமா - முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர்
4. முனைவர் தா. ஜெய்புன்னிஸா - இலக்கியப் பணி
5. ஏ.எஸ்.குர்சித் பேகம் - சமூக சேவகி
6. கே. மாசா நஜீம் - இளம் வயது உலக சாதனையாளர்

சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தினருடன் முஸ்லிம் லீக் தலைவர் ஆலோசனை!

http://www.muslimleaguetn.com/news.asp


சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தினருடன் தலைவர் ஆலோசனை!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில உறுப்பினர்களுடனான கலந்தாலோசனை இன்றிரவு ( 19 ஜுன் 2008) 8.15 மணியளவில் காயிதெமில்லத் மன்ஸிலில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தலைவர் குஞ்சுமோன், தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலுர்ரஹ்மான், அப்துல் பாஸித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநாட்டு நிகழ்வுகளில், சென்னைவாழ் கேரள முஸ்லிம் லீகர்களின் பங்களிப்புகள் எப்படி அமைந்திட வேண்டும் என்பது குறித்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவுரைகள் வழங்கினார். அவர் தனதுரையில், வெளியில் இருந்துகொண்டு இந்த இயக்கம் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனங்களைக் கூறலாம்... ஆனால், அவையெல்லாம் கதைக்குதவாது! சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என அதிகாரங்களில் நமது முறையான பங்களிப்பு இருந்தால் மட்டுமே நமது குரலுக்கு உரிய பதில் கிடைக்கும். அந்த அடிப்படையில் தற்சமயம் தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

உங்கள் கேரள மாநிலம்தான் எங்கள் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், ஓர் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருந்துகொண்டு, அவ்வப்போது சமுதாயத்தின் குரலை நீங்கள்தான் ஓங்கி ஒளித்துக் கொண்டிருக்கிறீர்கள்... நாங்கள் உங்களிடமிருந்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கள் வழிகாட்டிகள்... உங்களை ஒருங்கிணைத்தது இந்த முஸ்லிம் லீக்!

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள - கேரளத்தின் வருங்கால எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சமுதாயப் பிரமுகர்களை நான் உளமார வரவேற்கிறேன்... இந்த மாநாட்டிலும், பேரணியிலும் உங்கள் பங்களிப்பு நிறைவாக இருக்க வேண்டும் என நான் உங்கள் யாவரையும் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்... என்றார்.


தொடர்ந்து, சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தலைவர் குஞ்சுமோன், சென்னைவாழ் கேரள முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) துணைத்தலைவர் அஃப்ஸீர் நூருத்தீன், செயலாளர் முஜீபுர்ரஹ்மான், துணைச் செயலாளர் முஹ்யித்தீன் மற்றும் மேடையில் முன்னிலை வகித்த அனைவரும் கருத்துரைகள் வழங்கினர்.

Wednesday, June 18, 2008

முஸ்லிம் லீக் மாநாடு - மகளிர் அணி நிகழ்ச்சிகள்


முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு ! இணையதளத்தில் !!

முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு ! இணையதளத்தில் !!


முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டு நிகழ்ச்சிகள் 21 ஜுன் 2008 மாலை 6 மணி முதல் இணையதளத்தில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு நிகழ்வுகளைக் காண :

www.muslimleaguetn.com
www.easylive.tv

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநருக்கு விருது ! சென்னை முஸ்லிம் லீக் மாநாட்டில் !!










சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு - ஜுன் 20 & 21 நடக்கிறது


இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு ஜுன் 20 மற்றும் 21 தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

ஜுன் 20 வெள்ளிக்கிழமை

ஜுன் 20 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் நிறைவேற்றியபின்னர் காயிதெ மில்லத் நினைவிடத்தில் ஜியாரத் ஃபாத்திஹா நடைபெறும் அதனைத் தொடர்ந்து சிராஜுல் மில்லத் நினைவிடத்துக்கு செல்லப்படும்.

துஆ மஜ்லிஸ்

சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் அமையப்பெற்றுள்ள தலைமை நிலையமாம் காயிதெமில்லத் மன்ஸிலில் அல்லாமா அஷ்ஷெய்க் தைக்கா ஷுஐபு ஆலிம் தலைமையில் துஆ மஜ்லிஸ் மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்விற்கு ஏ.கே. அப்துல் ஹலீம், ஆரூர் அப்துல் காலிக், எழுத்தரசு ஏ.எம். ஹனீஃப், எஸ்.எம். காதர் பாட்சா, எஸ்.எம். கோதர் முஹைதீன், பி.எஸ்.ஹம்ஸா, டாக்டர் இக்பால் பாஷா, வி.எஸ்.டி.ஷம்சுல் ஆல்ம், எஸ்.டி. நிசார் அஹ்மது, எம். ஜெய்னுல் ஆப்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாநாடு வரவேற்புக் குழு கூட்டம்

காயிதெ மில்லத் மன்ஸிலில் மாலை 7.00 மணிக்கு மாநாடு வரவேற்புக்குழு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெறும்.

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மது, செய்யிது முஹம்மதலி ஷிஹாப் தங்கள், பி.கே.குஞ்ஞாலிக் குட்டி, பி.வி.அப்துல் வஹாப் எம்.பி, வழக்கறிஞர் அஹ்மது பக்‌ஷ், நயீம் அக்தர் தஸ்தகீர் ஆகா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

ஜுன் 21 சனிக்கிழமை

காயிதெமில்லத், சமுதாய ஒளிவிளக்கு, சிராஜுல் மில்லத் விருதுகள் வழங்கும் விழா

காலை 9.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருது வழங்கும் விழாவிற்கு முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

செய்யிது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் துஆ ஓதுகிறார்.

அல்லாமா அஷ்ஷெய்க் தைக்கா ஷுஐபு ஆலிம், மவ்லானா எம்.எஸ். உமர் பாரூக் மவ்லானா, டி.ஜே.எம். ஸலாஹுத்தீன், எஸ்.எம்.சேகு நூர்தீன், டாக்டர் காஜா கே. மஜீத், ஏ.ஜே. அப்துல் ரஜ்ஜாக், காக்கா முஹம்மது ஜுபைர், முஹம்மது யூனுஸ் ( எம்.ஐ.இ.டி ) வி.எம். அப்துல் ஜப்பார், கே.பி. இஸ்மத் பாட்சா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

வி.எம். செய்யது அஹ்மது, ஏ.அப்துல் ஹக்கீம், திருப்பூர் எம்.ஏ. சத்தார், மவ்லவீ என். ஹாமித் பக்ரீ, அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, எஸ்.எம். கனி சிஷ்தீ, எம்.பி. காதர் ஹுசைன், கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

சிறப்பு மலர் வெளியீடு

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு சிறப்பு மலர் வெளியிட மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஏ. ராசா முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

காயிதெ மில்லத் விருது

முஸ்லிம் லீகில் ஐம்பதாண்டு காலம் உழைத்து வரும் தியாகிகளுக்கு காயிதெ மில்லத் விருது வழங்கி சிறப்புரையினை மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மது நிகழ்த்துகிறார்.

தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், அப்துல் வஹ்ஹாப் எம்.பி, ஷைகுல் ஹதீஸ் மவ்லானா ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான், மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் சேமுமு முஹம்மது அலி உள்ளீட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சமுதாய ஒளிவிளக்கு விருது

கல்வியாளர்கள் மார்க்க அறிஞர்கள் மற்றும் சமுதாய புரவலர்களுக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபைதுல்லாஹ், விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் இரகுமான்கான், சென்னை மேயர் மா.சுப்பிரமணியம், ஜே.எம். ஹாரூன் எம்.பி, உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

சிராஜுல் மில்லத் விருது

சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்து வரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், சிறுபானமை நலத்துறையின் வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்ட பெருமக்களுக்கு சிராஜுல் மில்லத் விருது வழங்கி தமிழக கல்வி அமைச்சர் க. அன்பழகனார் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தவத்திரு பொன்னம்பல அடிகளார், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, கவிக்கோ அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயீல் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

கல்வி மேம்ப்பாடு, விழிப்புணர்வு, மகளிர் கருத்தரங்கம்

ஜுன் 21 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு ராஜாஜி மண்டபத்தில் நடைபெறும் மகளிர் கருத்தரங்கிற்கு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸஃப்பர் தலைமை தாங்குகிறார்.

கனிமொழி எம்.பி. ஜெயந்தி நடராஜன் எம்.பி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் ருக்கையா சல்மா, வழக்கறிஞர் அருள்மொழி, கமருன்னிசா அன்வர், நூர்பீனா ரசீத், பேராசிரியை நசீமா பானு உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மாபெரும் பிறைக்கொடி பேரணி

பிற்பகல் 3.30 மணிக்கு மாபெரும் பிறைக்கொடி பேரணி சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு வாலஜா சாலை, அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக தீவுத்திடலை அடைகிறது.

பேரணியை அப்துல் ரவூஃப் துவக்கி வைக்க ஹெச். அப்துல் பாஸித் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிரார்.

ஜி.எம். ஹாஷிம், கே.எம். நிஜாமுத்தீன், எம்.எஸ். முஹம்மது ரஃபீக், வி.ஆர். முஹம்மது இப்ராஹீம், கே.எஸ். ஷேக் தாவூத், மவ்லவீ ஏ.எஸ். அப்துல் ரஹ்மான், முஸஃப்பர் அஹ்மத், ஏ.ஏ. ரஷீத் கான் உள்ளிட்டோர் பேரணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர்.

இசையரங்கம்

மாலை 4 மணிக்கு தீவுத்திடலில் இசையரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முகவை சீனி முஹம்மது, கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் குழுவினர் இயக்கப் பாடல்கள் பாடுகின்றனர்.

மாநாடு நிறைவு விழா

மாலை 6.30 மணிக்கு தீவுத்திடலில் நிறைவு விழா கே.டி.எம். அஹ்மது இப்ராஹிம் நுழைவு வாயிலில், அப்துல் வஹ்ஹாப் ஜானி சாஹிப் அரங்கில் நடைபெறும்.

விழாவிற்கு முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ. தீர்மானங்களை வாசிக்கிறார்.

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா, மத்திய அமைச்சர் இ.அஹ்மது, தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தா.பாண்டியன், தொல்.திருமாவளவன், பி.கே. குஞ்ஞாலிக்குட்டி, அஸத்துத்தீன் உவைஸி எம்.பி, கர்நாடக அமீரே ஷரீஅத் மவ்லானா அஷ்ரப் அலி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

ஹெச்.அப்துல் பாசித் எம்.எல்.ஏ. அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துல் ரஹ்மான், எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், கவிஞர் ஜபருல்லாஹ், நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், வழக்கறிஞர் ஜீவகிரிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் நிறைவுப் பேருரை நிகழ்த்துகிறார்.

தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நன்றி கூற மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லவீ தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் துஆவுடன் மாநாடு நிறைவுறும்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ )

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-ந்தேதி நடக்கிறது

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-ந்தேதி நடக்கிறது
கருணாநிதி பங்கேற்கிறார்

சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மணிவிழா மாநாடு 21-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் எம்.பி., சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

60 பேருக்கு விருது

இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சி 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபடுவது, சிறுபான்மை சமுதாய கலாசார தனித்தன்மையை பாதுகாப்பது போன்ற அடிப்படை கொள்கைகளை கொண்டுள்ளது. கட்சியின் மணிவிழா (60-வது ஆண்டு) மாநில மாநாடு சென்னையில் 21-ந்தேதி பலகட்டங்களாக நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி., தலைமையில் விருதுவழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் மணிவிழா மாநாட்டு மலரை மில்லத் ஜி.எம்.பனாத்வாலா வெளியிடுகிறார். அதனை மத்திய மந்திரி ஆ.ராசா பெற்றுக்கொள்கிறார். முஸ்லிம் சமுதாயத்தில் முன்னுதாரணமாக விளங்கிய 60 பேருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருதினை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபட்டு வரும் இந்திய கம்ïனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், வின்சென்ட் சின்னதுரை ஆகியோருக்கு அமைச்சர் அன்பழகன் சமுதாய நல்லிணக்க விருது வழங்குகிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பணியாற்றி வருபவர்களுக்கு காயிதே மில்லத் விருதினை மத்திய மந்திரி இ.அஹமது வழங்குகிறார்.

ஜெயந்திநடராஜன்-கனிமொழி

அதே போல மகளிரணி சார்பில் சென்னை ராஜாஜி ஹாலில் காலை 10 மணிக்கு கல்வி மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதற்கு கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.பாத்திமா முசபர் தலைமை தாங்குகிறார். இதில் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளரும், முன்னாள் மத்தியமந்திரியுமான ஜெயந்தி நடராஜன் எம்.பி., வக்கீல் அருள்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 6 பெண்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்படுகிறது.

பின்னர் மாலையில் சென்னைத் தீவுத்திடலில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு நிறைவு விழா நடைபெறுகிறது. அதனையொட்டி மாலை 3.30 மணிக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இருந்து ஊர்வலம் புறப்படும். அதில் முதல் முறையாக 12 ஆயிரம் இளைஞர்கள் வெள்ளை சட்டை பேண்டு அணிந்து பச்சை தொப்பியுடன் சீருடைப் பேரணியாக தீவுத்திடலுக்கு வருவார்கள்.

கருணாநிதி நிறைவுரை

அங்கு நடைபெறும் நிறைவு விழாவுக்கு மாநில தலைவர் கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி., தலைமை தாங்குகிறார். அனைவரையும் டாக்டர் எஸ்.ஏ.சையர்சத்தார் வரவேற்கிறார். முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.

இதில் கட்சியின் அகில இந்திய தலைவர் ஜி.எம்.பனாத்வாலா, மத்திய மந்திரி இ.அஹமது, மத்திய மந்திரி ஜி.கே.வாசன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இந்திய கம்ïனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு கே.எம்.காதர்மொகைதீன் எம்.பி. கூறினார்.

துபாயில் வாராந்திர ஆங்கில சொற்பொழிவு

"Prophet Ibraheem's Du'aa"


This week Friday Night Reflections is presented by brother Muhammad Nubee. Muhammad was born in North Carolina, US and has a background in Educational Psychology and Sociology.

In 1976, he left the Nation of Islam to become a Muslim. He became active in the North American da'wah and served as a Muslim Chaplain in the US Prison System for 6 years. He has been in the UAE since 2001 and is currently the Academic Coordinator for the Institute of Applied Technology in Dubai.


Muhammad Nubee presents:

"Prophet Ibraheem's Du'aa"

Perspectives on Maslow's Hierarchy of Needs



Time: Friday June 20th at 8.00PM
Location: KALEMAH, Muhaisanah 3, Dubai
Directions & Map: Click here
Tel: 04 2644115
Email: info@kalemah.org

Web: www.kalemah.org

Past talks can be listened to or downloaded from here.
Discuss each week's talk in KALEMAH Community





This message was sent from KALEMAH to muduvaihidayath@gmail.com. It was sent from: KALEMAH, Muhaisanah 3, Dubai, PO BOX 77147, United Arab Emirates. You can modify/update your subscription via the link below.

www.kalemah.org

தமிழ் முஸ்லிம் டியூப்.காம்

It is an amazing work –

தொழில்நுட்பத்தின் உதவி! வியக்கவைக்கும் அமைப்புடன்!!

இறைமறை குர்ஆனை உங்கள் கணணியின் முகப்பில் உங்கள் கரங்களால் பக்கங்களை புரட்டி படிக்க இதோ...

புனித மிகு ரமலானில் தவறாமல் புரட்டுங்கள் முழுமையாக....

Now read the Quran at your desktop. Arabic version, English version, turns the pages of the Quran by hand and read by yourself. Very interesting. "The Quran Flash".

http://www.quranflash.com/en/quranflash.html

Quran mp3 with 107 voices
http://www.mp3quran.net/eng/


To purify your soul and make you closer to Allah Subahanahu tha'alaa, we are presenting a video website, that will bring all world famous Al Quran Reciters (Qari's) under one roof called
www.tarteelalquran.com .



To enlighten your knowledge about "Meelad" Please read following article from " Office of Religious Endowments and Islamic Affairs, Dubai Administration of Ifta' and Research.
http://sunnah.org/ibadaat/mawlid_dubai.htm

for further reading
http://seekingilm.com/archives/203
http://www.livingislam.org/n/mwld_e.html
http://www.livingislam.org/n/mwld-qrd_e.html



சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் கும்பகோணத்தில் நடத்திய மானுட
வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின்
கீழ்க்காணும் இஸ்லாமிய கேள்வி பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல்

1.சமுதாய நல்லிணக்கம் தேவையா?
2.பாப்ரி மசூதியை முஸ்லிம்கள் விட்டுக்கொடுத்தால் என்ன?
3.உருவமில்லா இறைவனை வணங்குவதற்கு பள்ளிவாசல் தேவையா?
4.அல்லாஹ் யார்?
5.பெண்களை வீட்டில் அடைத்து இஸ்லாம் அடிமைப் படுத்துகிறதா?
6.முஸ்லிம் தனியார் சட்டம் பெண்கள் உரிமையை பறிக்கிறதா?
7.மொழி அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டபோது, இறைவழிபாடு மட்டும்
அரபியில் நடத்துவது ஏன்? மற்ற மொழிகளில் நடத்தினால் என்ன?
8.பலர் ஏன் தொழுவதில்லை ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் ஊரையே கூட்டித் தொழுவதேன்?
9.வட்டித் தொழில் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
10.இன்றைய வன்முறை சூழலுக்கு சிறுபான்மை வன்முறை காரணமா?பெறும்பான்மை
வன்முறை காரணமா?
11.21ம் நூற்றாண்டிலும் பர்தா தேவையா?
12.மதம் மாறுவது தேவையா?
13.கருணையே இல்லாது மிருகங்களை குர்பானி கொடுக்கச் சொல்லும் இஸ்லாம்,
அன்பை/கருணையை போதிக்கும் மார்க்கம் என்று கூறுவது பொறுந்துமா?
14."முஸ்லிம் அல்லாதவரை கொல்லுங்கள்" என்று குர்'ஆனில் கூறியுள்ளதா?
15.முஸ்லிம்கள் மீதுள்ள தீவிரவாத முத்திரயை போக்க என்ன வழி?

Towards Understanding Islam – following Non Muslims questions on
Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public
meeting conducted by Islamic Foundation Trust (IFT) at Kumbakonam, now
available at your favorite website www.tamilmuslimtube.com

1. Is Social & Religious harmony required?

2. Why can't Muslims give "Babri Masjid" to Hindus as a gesture of good will?

3. If no shape for Allah, why Masjid is required for prayer?

4. Who is Allah?

5. Is Islam restricting women inside the house and not giving their rights?

6. Is Muslim Personal law protecting women or taking away their rights?

7. Why "Arabic" is used in prayer? & why can't Muslims use their mother tongue?

8. Why many Muslims are not praying regularly but on Fridays, why all
the Muslims in the town gathering for prayer?

9. What is Islam's view on "Interest"?

10.The root cause of the present law and order problem due to Minority
terrorism or majority terrorism?

11. In this 21st century, is veil required?

12. Is Religious conversion necessary?

13. Eid Sacrifice (Kurbani) is a cruelty towards animals, then how
Islam can be called "the religion of peace"?

14. Is Quran promotes killing of non Muslims?

15. Is there any action to remove "terrorist" stamp from Muslims?

__._,_.___



சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் திருச்சியில் நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் கீழ்க்காணும் இஸ்லாமிய கேள்வி பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல்

- உறுப்பு தானம் செய்யலாமா?
- இஸ்லாத்தில் மனித உரிமை.
- பிரசவம் வலியா? வசந்தமா?
- மதவாதிகள் அரசியலில் நுழையலாமா?
- இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ன?
- இஸ்லாத்தின் உலகலாவிய நோக்கம் என்ன?
- தீவிரவாதத்தில் முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் இறைச்சி கடைகளை அதிகமாக ஏன் வைத்துள்ளார்கள்?
- முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா?
- உருவமற்ற இறைவனை ஆண்பாலாக ஏன் முஸ்லிம்கள் அழைக்கிறார்கள்?
- இஸ்லாம் வாள் முனையில் வளர்ந்ததா?
- இஸ்லாமும் கிறிஸ்துவமும் எதில் வேறுபடுகிறது?
- இஸ்லாம் மதமா மார்க்கமா?

Towards Understanding Islam –Non Muslims following questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) held at Trichy are now available at your favorite website www.tamilmuslimtube.com


Is organ donation accepted in Islam?
Is there human right in Islam?
Is pregnancy pain or pleasure?
Why religious leaders entering in politics?
What are basic concepts of Islam?
What is the goal of Islam?
Why Muslims involvement more in terrorism?
Why most of the meat shops owned by Muslim?
Is Islam allows dowry?
If there is no shape or stature for Allah, then why Allah is called in male gender?
Is Islam spread through sword?
Where Islam and Christianity differ?
Is Islam religion or way of life?



380 வருட சரித்திரப் புகழ் வாய்ந்த கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில், மகான் மாதிஹிர் ரசூல் ஷெய்க் சதக்கதுல்லா அப்பா அவர்கள் தர்பாருக்கு எதிரில் உள்ள வள்ளல் சீதக்காதி மண்டபத்தில் நடைபெற்ற எம் பெருமானார் ரசூலே கரீம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய தின பெரு விழாவில்

- ஹாபிழ் A.M.K .செய்யது அஹமது நெய்னா அவர்களின் கிராஅத் மற்றும் கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி ஜமாஅத் தலைவர் Dr.A.S.M.. கியாதுத்தீன் M.B.B.S., D.C.H., அவர்களின் வரவேற்புரை.

- கீழக்கரை டவுன் காஜி அல்ஹாஜ் A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி M.A. அவர்களின் தலைமை உரை.

- கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தின் சிறப்பு பற்றியும், மெய்ஞானக் கடல் மகான் ஷெய்க் சதக்கதுல்லாஹ் அப்பா அவர்கள் எம் பெருமானார் மீது கொண்ட பக்தி பற்றியும்,கீழக்கரை காஜிமார் சிறப்பு குறித்தும் கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி கதீப் ஹாபிழ் M.A. அஸ்மத் ஹுசைன் மன்பயி அவர்கள் ஆற்றிய உரை.

- காயல்பட்டிணம் ஜாவியா அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் ஹாபிழ் மெளலவி அல்ஹாஜ் ஹாஜா முஹையத்தீன் அவர்களின் உரை

- கோவை கரும்புக்கடை சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் மெளலவி அல்ஹாஜ் A.அப்துல் அஜீஸ் பாஜில் பாக்கவி M.A. அவர்களின் உரை

- தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மெளலவி அல்ஹாஜ் ஒ.எம்.அப்துல் காதர் பாக்கவி அவர்களின் சிறப்புரை
தற்பொழுது உங்கள் www.tamilmuslimtube.com ல் காணலாம்.


Video's of great speeches in tamil delivered by the
- President of Tamil Nadu Jamathul Ulema Al Haj. Movlavi Sheikh O.M.Abdul Kader Bakavi .
- Vice Principal of Kayalpatnam Jawiya Arabic College Movlavi Hafiz Haja Mohaiyaddeen Kasimi.
- Coimbatore Karumbu kadai Sunnath Jamath Masjid Imam Movlavi A. Abdul Azeez Bakavi M.A.
- Kilakarai Town Kazi A.M.M.Kaderbux Hussain Siddiqi M.A. &
- Kilakarai Nadutheru Juma Masjid Khatheeb Hafiz Al Haj Movlavi M.A. Asmath Hussain Manbayee's Islamic speech about virtue of Kilakarai naduth theru Juma Masjid, Islamic knowledge of Mathihir Rasool Imam Sheikh. Sathakathullah Appa and his love towards Prophet Mohamed Salalalahu Alaihi wasallam and Historic lineage of Kilakarai Town Kazi's.

during Meeladun Nabi celebration held at historical Kilakarai Naduth theru Juma Masjid complex are available in your favorite www.tamilmuslimtube.com.


பள்ளபட்டி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை IFT நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி

பகுதி 1.அறிமுக உரை பி.எஸ்.உமர் :.பாரூக் மற்றும் எஸ்.எஸ்.எம்.அஷ்ர:.ப் அலி அவர்கள்.
பகுதி 2.வாழ்த்துரை பள்ளபட்டி பேரூராட்சி தலைவி எஸ்.எ.முனவர் ஜான் மற்றும் மருத்துவர் என்.வேலுச்சாமி.
பகுதி 3. முன்னுரை மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
பகுதி 4. இஸ்லாமிய நடைமுறைகளும்,கடமைகளும்,சட்டங்களும்,தண்டனைகளும் கடுமையாக இருப்பதேன்?
பகுதி 5. லாட்டரி சமுதாயத்திற்கு நன்மையா? தீமையா?
பகுதி 6. அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் போது ஜகாத் கொடுப்பது தேவையா?
பகுதி 7. ஜகாத் கடமையாக இருந்தும் பெறும்பான்மை முஸ்லிம்கள் வறுமையில் இருப்பதேன்?
பகுதி 8. பிரச்சனைகளை எதிர் கொள்வது எப்படி?
பகுதி 9. நீதிபதிகளிடையே லஞ்சம்,அநீதிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், பொய் சாட்சி சொல்லும் மக்கள், பொய் வழக்கு போடும் அரசாங்கம் இதற்கு இஸ்லாத்தில் தீர்வு என்ன?
பகுதி 10. இஸ்லாத்தின் வளர்சிக்கு காரணம் என்ன?
பகுதி 11. இஸ்லாம் உலகில் முதன் முதலாக தோன்றிய மதமா?
பகுதி 12. தர்ஹா என்பது என்ன? அதற்கு செல்லலாமா?
பகுதி 13. முஸ்லிம்களின் கடமைகள் என்ன?
பகுதி 14. மாற்று மதத்தவர் குர்'ஆனை வைத்துக் கொள்ளலாமா, படிக்கலாமா, அதன் அர்த்தத்தில் மாற்றம் செய்யலாமா?
பகுதி 15. வட்டியை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
பகுதி 16. மரணத்தின் இறுதி நேரத்தில் "கலிமா" சொன்னால் சொர்க்கம் செல்ல முடியுமா?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல் காத்திருக்கிறது.

Non Muslims questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) Chennai held at Pallapatti, Karur District.
Part 1 – Welcome address by Mr.P.S.Umar Farook & Mr.S.S.M.Asraf Ali.

Part 2 – Facilitation by Dr.N. Velu Sami & Pallapatti town Panjayat President Mrs.S.A. Munawar Jan.

Part 3 – Preface Dr.KV.S.Habeeb Mohamed .

Part 4 - Why Islamic practices are difficult, laws are strict & punishments are severe?

Part 5 - Is lottery is good and acceptable for the society?

Part 6 – Is Zakat is necessary, when we are paying tax to government?

Part 7 – Even though Zakat is compulsory, Why poverty is exists among Muslims?

Part 8 – How to face difficulties?

Part 9 – Corruption among judges, lawyers are arguing to uphold falsehood, Peoples giving false witness , Government filing false cases & what is solution in Islam.

Part 10 – What are the reasons for Islam's growth?

Part 11 – Is Islam if the first religion of the world?

Part 12 - What is Dargah and is it allowed to go there?

Part 13 – What are all the responsibilities of Muslims?

Part 14 – Is it allowed to keep and read the Holy Quran by non Muslims and is it allowed change the meaning of Quran?

Part 15 – What is Islam's view on "Interest"?

Part 16 - At the last moment of death, if anyone says "Kalima" will he go to Paradise?



All the above questions & its answers now available at your favorite website www.tamilmuslimtube.com






மிகச் சிறந்த தமிழ் இஸ்லாமியக் குறும்படங்கள் கீழ்க்காணும் தலைப்புகளில்

1. குர்'ஆன் ஒளியில் "உயிரினங்கள்".
2. குர்'ஆன் ஒளியில் "கடல் அதிசயங்கள்"
3. குர்'ஆன் ஒளியில் "வித்துக்களின் வினோதங்கள்".
4. பரிணாம வளர்ச்சி- கற்பனைகளும் எதார்த்தங்களும்.
5. ஸ்பெயினில் இஸ்லாம்.
6. குர்'ஆன் கூறும் தளங்கள்


இதோ உங்கள்

www.tamilmuslimtube.com ல்

thamizhmuslim
dateThu, Jun 19, 2008 at 2:27 PM
subject[AIMAN Times] Tamil Muslim Video


Asslamu Alaikum Brothers & Sisters

Thank you for your kind support.

Your favorite Tamil Muslim video site www.tamilmuslimtube.com is now viewed from more than 25 countries.

May Allah accept and reward everyone who supported this work.

Marhoom Palanibaba' s thundering political and Islamic speeches given at Chennai Port. Trichy.Tanjore, Madurai . Ramnad. Ervaadi, Athhikkadai, Thittacheri. Kallidaikurichi, Ilangakurichi are available now in www.tamilmuslimtube.com


சென்னை துறைமுகம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், அத்திக்கடை, ஏர்வாடி, திட்டச்சேரி, கள்ளிடைக்குறிச்சி, இலங்காகுறிச்சி ஆகிய ஊர்களில் பதிவான மர்ஹூம் பழனிபாபா அவர்களின் அரசியல் விழிப்புணர்வு சொற்பொழிவு உஙகள்
www.tamilmuslimtube.com ல்


இங்கிலாந்திலும், இந்தியாவிலும் பதிவான மு.:ப்தி ஒமர் ஷெரீ.:ப் அவர்களின் சிறந்த தமிழ் வீடியோ பயான் கீழ்க்காணும் தலைப்புகளில்
1.இறைவன் யார்?
2.இஸ்லாத்தில் கல்வி
3.சுவர்கத்தின் இன்பம்
4.நரகத்தின் துன்பம்
இதோ உங்கள் www.tamilmuslimtube.com ல்


A series of public program conducted by Islamic Foundation Trust (IFT) Chennai towards Understanding Islam.

Non Muslims questions on Islam/Muslims and answers by Dr.KV.S.Habeeb Mohamed held at Papanasam Rajagiri Dawood Basha (RDB)College - .
Part 9 - Why Zakath fund is distributed to Muslims only?
Part 10 - Why Islam against cloning?
Part 11 - Is Islam encouraging begging?
Part 12 - Why Muslims are strict on prayer timing?
Part 13 - Why Muslim women are not encouraged to work?
Now available at your favorite www.tamilmuslimtube.com

பாபநாசம் RDB கல்லூரி நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கேள்வி பதில்
முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
முஸ்லிம் அல்லாதவற்கு ஜகாத் ஏன் கொடுப்பதில்லை?
குறித்த நேரத் தொழுகை தேவையா?
இஸ்லாம் குளோனிங்கை ஏன் எதிர்கிறது?
பிச்சைகாரர்களை இஸ்லாம் ஊக்குவிக்கிறதா?
இப்பொழுது உங்கள் அபிமான www.tamilmuslimtube.com ல்


இங்கிலாந்திலும், இந்தியாவிலும் பதிவான மு.:ப்தி ஒமர் ஷெரீ.:ப் அவர்களின்
சிறந்த தமிழ் வீடியோ பயான் கீழ்க்காணும் தலைப்புகளில்

1.இறைவன் யார்?
2.இஸ்லாத்தில் கல்வி
3.சுவர்கத்தின் இன்பம்
4.நரகத்தின் துன்பம்

இதோ உங்கள் www.tamilmuslimtube.com ல்

Thought provoking video speech on Rights & Responsibilities of Muslim Women delivered by Mowlavi Akar Mohammed from Sri Lanka .

A must watch video for all Muslim family Members available in www.tamilmuslimtube.com


இஸ்லாமிய பெண்களின் கடமைகளையும், உரிமைகளையும் திருக்குர்'ஆன் ஹதீஸ் பார்வையில் விவரிக்கும் சிறீலங்கா மெளலவி அகார் முஹம்மது அவர்களின் சிறந்த பயான்.

கணவன் , மனைவி மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் கண்டு பயன்பெற வேண்டிய சிறந்த ஒலி/ஒளிப் பேழை உங்களுக்காக www.tamilmuslimtube.com பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது