Showing posts with label உண்ணாநிலை. Show all posts
Showing posts with label உண்ணாநிலை. Show all posts

Sunday, April 26, 2009

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி உண்ணாநிலை!

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி உண்ணாநிலை!


இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று காலை முதல் உண்ணாநிலையைத் தொடங்கியுள்ளார்.

இன்று காலை அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற கருணாநிதி அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தனது உண்ணாநிலையைத் தொடங்கினார்.

இது தமிழர்களுக்கான தன்னுடைய மற்றொரு தியாகம் என்று கூறிய முதல்வர், ராஜபக்சேவின் இன அழிப்பில் நானும் ஒருவனாக இருக்கட்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று விடுதலைப் புலியினர் தாங்களாகவே முன்வந்து போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர். இலங்கை அரசு அதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்ட நிலையில், இதுபற்றிக் கூறிய கருணாநிதி இன்று ஓர் இரவு பொறுத்திருப்போம் என்று கூறியிருந்தார்.