Tuesday, August 26, 2008

தஞ்சை சுன்னத் ஜமாஅத் மாநாட்டு தீர்மானங்கள்

தஞ்சை சுன்னத் ஜமாஅத் மாநாட்டு தீர்மானங்கள்
தகவல்: காயல்பட்டணத்திலிருந்து மாஸ்டர் கம்ப்;யுட்டர் அகடமி (?)

http://www.kayalpatnam.com/shownews.asp?id=2069


தமிழகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பில் 7 சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சுன்னத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுன்னத் ஜமாஅத் மாநாட்டை ஹாஜா முஹ்யித்தீன் ரப்பானி தொடக்கி வைத்தார். தொடர்ந்து கொடியேற்றம் மற்றும் கண்காட்சி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3.5 சதம் இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கிறோம்.

சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் உள்ள நிர்வாகிகள் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற சட்டத்தை வக்ஃபு வாரியம் உடனடியாக அமுலுக்கு கொண்டு வர வேண்டும்.

பத்திரிகைகள், திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும். பள்ளிவாசல்களிலும், தர்ஹாக்களிலும் பிரச்சினை ஏற்படுத்தி ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் முஸ்லிம் பெயர் தாங்கிய அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும்.

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ஃபு வாரியத்தில் தர்கா நம்பிக்கை உள்ளவரையே தலைவராக நியமிக்க வேண்டும். இது தொடர்பாக தமழக முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் கல்விக்கென்று தனி அமைச்சகம் இருப்பது போன்று தமிழகத்திலும் முஸ்லிம்கள் கல்விக்கும் மற்றும் சிறுபான்மையினர் நலத்துக்கும் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் தர்காவில் பணிபுரியும் உலமாக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உலமாக்கள் நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்.

உருது மொழிக்காக தனி பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் பயன்பெறும் வகையில் 15 சத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தஞ்சை ஷேக் சிராஜுத்தீன், கே.எம்.பாரூக், காதர் உசேன் புகாரி, மேலை நாசர், எஸ்.எம். நாகூர் கனி, ஜான் அப்துல், பொருளாளர் முத்தலிபு, சூரத் கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி : தினமணி (நெல்லை பதிப்பு)

நாள் : 25-08-2008

துபாயில் அக்கவுண்டண்ட் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை

Assalamu Alaikum

Following jobs available in Dubai.

Position : Accountant
Qualification : Bachelor Degree –
Fluent in Arabic and English( Read , Write and Speake)

Salary : Minimum 3500

Company : Leading Real Estate Company




Position : Accountant

Qualification : Bachelor Degree –
English and should handle all Accounts independently

Salary : Minimum 3500 + Accommodation

Company : Leading Real Estate Company
Work Station at Furnished Apartment


Interested candidated should apply to alhadhi@gmail.com

Thanks & Salam

N. Abdul Hadhi

அழகான படங்கள் எடுக்க............

அழகான படங்கள் எடுக்க, ஜீவ்ஸ் ஒரு பத்து சூட்சமங்கள் ஈ.மடலாக அனுப்பி வைத்தார். அதில் சில டச்-அப் செய்து, உங்க முன்னாடி வைக்கரேன்.


http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_04.html

நல்ல நேர்த்தியான புகைப்படங்கள் பிடிக்க, உங்களுக்குத் தெரிஞ்ச சூட்சமங்களையும் பகிருங்கள்.
உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள்/கேள்விகளை கேட்கவும் பின்னூடுங்கள்.

சூ 1 - முடிந்த வரையில் இயற்கை ஒளியில் படம் எடுக்க முயலுங்கள். செயற்கைத் தனமற்ற நல்லதொரு புகைப்படம் கிடைக்கும். Be more creative. Strive to find the best option for a good shot than just trying to snap a shot. எதையும் சற்று நுணுக்கமாக பார்க்க பழகுங்கள். Viewfinderல பாக்கும்போதே ஒரு 5 விநாடிகள் "இந்த படம் ப்ரிண்ட் போட்டு ஆல்பத்துல வெச்சா, ஒரு attractiveஆ இருக்குமா?" என்று சிந்திக்கவும். ஆரம்ப காலங்களில், 10 எடுத்தா 1 படம் தான் சரியா வரும். As you build your experience in framing, your ratio of good hits will increase.
(framing, viewfinder, இதுக்கெல்லாம் தமிழ்ல என்னங்க சொல்லணும்?).

சூ 2- ஒவ்வொரு படம் எடுக்கும் முன்னும், உங்கள் கேமராவில் இருக்கும் modeஐ சரியாக உபயோகிக்கலாம். க்ளோஸப்பில் பூக்கள் எடுக்க, தூரத்தில் இருக்கும் பொருள் எடுக்க, இரவில் படம் பிடிக்க என்று வரிசையாக இருக்கும் பொத்தான்களை உபயோகிக்கலாம். ஷட்டர் வேகம், aperture இவற்றின் நுணுக்கங்கள் புலப்படும் வரை, கேமராவில் உள்ள இந்த வசதிகள் கைகொடுக்கும்.

Flower modeல (நண்பனின்) Nikon D80 கேமரால எடுத்தது. Adobe Photoshop வச்சு கொஞ்சமா டச்சிங் பண்ணிருக்கேன். Flower Mode உபயோகித்ததால், பூக்கள் அழகா focus ஆகி, பின்னால் இருக்கும், இலைகள் out of focusல் தெரிவதை கவனியுங்கள். போடோக்கு ஒரு அழக கொடுக்குது இல்லியா? (என்னது? இல்லையா?:))


சூ 3- வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்காது. கிடைக்கும் வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பாயிண்ட், சூ1 க்கு சற்று முரணானது மாதிரி தெரியும். இருந்தாலும், இங்க என்ன சொல்றோம்னா, சில படங்கள் பிடிக்கும்போது, advancedஆ திங்க் பண்ணனும், படம் க்ளிக்க வேண்டிய நேரத்தில், க்ளிக்க மட்டும்தான் செய்யணும். உ.ம், பட்டாம்பூச்சி, தும்பியெல்லாம் படம் புடிக்க முயற்ச்சி பண்ணினா, 10 விநாடிகளில், 10 படம் க்ளிக்கணும். அப்பதான் நீங்க நெனச்ச ஒண்ணாவது ஒழுங்கா வரும். குழந்ததகளை படம் பிடிக்கும்போதும், இது பொறுந்தும்.
க்ளிக்கரை, முழுதுமாக அமுக்காமல், பாதி அமுக்கிய நிலையில் (half-press) நீங்கள் எடுக்க நினைக்கும் frameஐ, focus செய்து கொள்ள முடியும். நீங்கள் நினைத்த காட்சி தெரிந்ததும், மீதிப் பாதியையும் அமர்த்தி, படத்தை க்ளிக்கலாம்.
குழந்தையை படம் எடுக்கும்போது, அது சிரிக்கும் வரை காத்திராமல், viewfinderல், குழந்தையின் முகத்தை frame செய்து, பொத்தானை half-press செய்து, focus lock செய்ய முடியும். குழந்தை சிரிக்கும்போது, மீதிப்பாதியை அமர்த்தி படத்தை எடுக்கலாம்.

சூ 4- ஃபிளாஷ் உபயோகிக்கும் போது ஃபிலிம் ரோல் வாங்கிய வெள்ளை டப்பா வை கத்தரித்து ஃபிளாஷ் மேல் வத்து படம் எடுத்தால் மென்மையா ஒளியில் எடுத்த எஃபெக்ட் கிடைக்கும்.
இந்த டெக்னிக், க்ளோஸப்பில் முகங்கள் எடுக்கும்போது நல்லா கைகொடுக்கும். மிகக் கிட்டத்தில் இருக்கும் பொருளை, ஃபிளாஷ் போட்டு எடுத்தா, வெளிரிப்போய் வரும். இந்த மாதிரி நேரத்தில் மேலே சொன்ன சூட்சமம் கைகொடுக்கும்.

சூ 5. புகைப்படம் எடுக்க காலை மற்றும் மாலை வெயில் நேரம் மிகச் சிறந்ததாக இருக்கும்.

சூ 6. நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.

சூ 7. ஒளிவிழும் கோணமும் மிக முக்கியமான ஒன்று. ஒளி விழும் கோணம் தவறாக இருந்தால் வெகு அழகாக வரவேண்டிய புகைப்படம். மிக அசிங்கமாக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.

சூ 8. புகைப்படத்தை மெருகேற்றும் என்று நீங்கள் நினைத்தால் ஒழிய முடிந்த வரையில் நிழல்களை தவிர்க்க பாருங்கள்.

சூ 9. எச்சரிக்கை: ஒரு பொழுதும் உச்சிவெயில் நேரத்தில் அல்லது அதிக சூரியவெளிச்சம் உள்ள நேரத்தில் நேரடியாக சூரியனை புகைப்படம் எடுக்க முயலாதீர்கள். அது கேமராவிற்கும் உங்களுக்கும் தீதாக அமையலாம்.

சூ 10. அதிகவெளிச்சம் சில சமயம் glare effect உருவாக்க கூடும். முக்கியமாக மனிதர்களை எடுக்கும்போது நெற்றி மற்றும் கன்னங்கள் புகைப்படத்தில் அதிக வெளுப்புடன் வந்து புகைப்படத்தையே கெடுத்துவிடும்.

யாராவது ஒருத்தர், இந்த பத்து பாயிண்ட வச்சு படம் புடிச்சு, தப்பா செஞ்சா எப்படி வரும், ரைட்டா செஞ்சா எப்படி வரும்னு விலாவாரியா பதியுங்களேன்? நானும் முயற்ச்சி பண்றேன்.

படங்காட்டுங்க!

அபுதாபியில் நீரிழிவு ( சர்க்கரை ) மற்றும் உடல் பாதுகாப்பு முறை பற்றிய கருத்தரங்கு

அபுதாபியில் நீரிழிவு ( சர்க்கரை ) மற்றும் உடல் பாதுகாப்பு முறை பற்றிய கருத்தரங்கு

அபுதாபி தமிழ் நண்பர்கள் சார்பில் நீரிழிவு ( சர்க்கரை ) மற்றும் உடல் பாதுகாப்பு முறை பற்றிய கருத்தரங்கு 28.08.2008 வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு அபுதாபி நஜ்தா சாலை ரெட் டேக் கட்டிடத்தில் ( பழைய சனா ஷோரூம் ) நடைபெற இருக்கிறது.

இக்கருத்தரங்க நிகழ்விற்கு அய்மான் மகளிர் கல்லூரி செயலாளர் கே. சையது ஜாபர் தலைமை தாங்குகிறார். பத்திரிகையாளர் வி. களத்தூர் ஷா வரவேற்புரை நிகழ்த்த இருக்கிறார்.

அபுதாபி மஃப்ரக் மருத்துவமனை மருத்துவர் நிஜாமுத்தீன் நீரிழிவு மற்றும் உடல் நலக் கையேடு நூலை வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார்.

கல்வியாளர் ஏ.ஹெச். அப்துல் ஜாமி ஆலம் நன்றியுரை நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு அல் ஹனான் மருந்தகம் மற்றும் ஃபார்மா வெல்ட் உதவியுடன் இலவசமாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்படும்.

மேலும் விபரங்களுக்கு 050 - 5709287 / 055 9016541 / 050 7458771