Showing posts with label மணக்கூலி. Show all posts
Showing posts with label மணக்கூலி. Show all posts

Saturday, September 18, 2010

மணக்கூலி...

மணக்கூலி...

யாசகம் கேட்க
வாசகத்துடன் என் வாசலுக்கு;
படித்த மாப்பிள்ளை என்று;
அடையாளத்துடன் அறிமுக விழா
உன் புகைப்படத்துடன்!

உன்னை விலைப்பேசி
உறவைக் கொல்லக் கைக்கூலி;
மணாளியாய் வந்து
மசக்கையாவதற்கா மணக்கூலி!

எல்லாம் துறந்து
உன்னை மணந்து
உயிராய் வரும் என்னிடமே
தட்சணையா!

காலத்திற்கும் சேர்ந்து
கணவன் நீ சோர்ந்தால்
மனதிற்கு மருந்தாய்
இல்லறத்திற்குக் கனிவாய்
இருப்பதற்கா இந்தத் தினக்கூலி!

உன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய
என் பெற்றோருக்கு அபராதமா;
உனக்கான தலைமுறையை
தருவதற்கான பரிகாரமா!

மணம் முடிக்க
பணம் பறிக்கும்
உனக்குப் பெயர் மாப்பிள்ளையா
கைப்பிடிக்கவேக் கைக்கூலிக் கேட்கும்
நீயெல்லாம் ஆண்பிள்ளையா!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
--