Sunday, May 31, 2009

மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்

webdunia photoWD

மாம்பழ ‌வி‌ற்பனை துவங்கி படு ஜோராக நட‌ந்து வரு‌கிறது. எங்கு பார்த்தாலும் மஞ்ஞை மஞ்சேலென காட்சி அளிக்கிறது மாம்பழங்கள். தெருவோரக் கடைகளிலும் சரி, நடைபாதைக் கடைகளிலும் சரி தற்போது அதிகம் வியாபாரமாவது மாம்பழம்தான்.

குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி குறிப்பாக பெண்கள் மாம்பழத்தை வாங்கி அதிகளவில் சாப்பிடும் நேரம் இது. பலரது ‌வீடுக‌‌ளி‌ல் சா‌ப்பா‌ட்டு‌க்கு பதா‌ர்‌த்தமாகவே இ‌ந்த மா‌ம்பழ‌த்தை வை‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். ப‌ள்‌ளி ‌திற‌க்க‌ட்டு‌ம், பா‌தி மாணவ‌ர்களது உணவு ட‌ப்பா‌க்க‌ளி‌ல் மா‌ம்பழ‌ம் ‌நி‌ச்சய‌ம் இட‌ம்பெ‌ற்று ‌விடு‌ம்.

மாம்பழத்தை வெறுப்பவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதிகமாக சாப்பிட விரும்பாதவர்கள் என்று வேண்டுமானால் இருப்பார்கள். அவர்களும், இதுவரை சுவையான மாம்பழத்தை சுவைத்ததில்லை என்றுதான் கூற வேண்டும். சுவையான மாம்பழத்தை சுவைத்தவர்கள் யாரேனும் மாம்பழம் வேண்டாம் என்று கூறுவார்களா? அப்படியே அவர்கள் கூறினா‌ல் அவர்களுக்கு ஒன்று நீரிழிவு நோய் அ‌ல்லது ம‌ஞ்ச‌ள் காமாலை இருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். சரி இந்த கதையெல்லாம் எதற்கு

இந்த மாம்பழத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே என்ன சொல்வீர்கள்.

ஆம், அதற்குத்தான் இந்த கட்டுரை. அதாவது மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் காணப்படுகின்றன.

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த வைட்டமின்கள் மற்றும் சத்துகள் நமக்கு எளிதில் கிடைத்துவிடும்.

மாம்பழத்தை சாப்பிடுபவர்கள், அதன் தோல் பகுதியை பெரும்பாலும் நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது பெரும் தவறு. ஏன் என்றால் மாம்பழத்தின் தோல் பகுதியில்தான் அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் மாங்கொட்டை‌யிலும் கால்சியம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் காணப்படுகின்றன.

பொதுவாக மாம்பழ வரத்து ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாத இறுதி வரை நீடிக்கும். உலகில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் இருந்தாலும் இந்தியாவில் குறிப்பிட்ட சில ரக மாம்பழங்கள் மட்டுமே விளைகிறது. இவற்றில் இமாம்பசந்த், அல்போன்சா, பங்கனப்பள்ளி, பீத்தர், செந்தூரா, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல்கோவா, கிளிமூக்கு உள்ளிட்ட சில ரகங்கள் முக்கியமானவை.

பொதுவாக நமக்கு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து மாம்பழ வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் கடந்தாண்டை விட இந்தாண்டு மாம்பழ விலை சற்று அதிகமாக இருப்பதால், மாம்பழப் பிரியர்கள் பலரும், மாம்பழம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் சில நாட்கள் போகட்டுமே, விலை குறையும் என்று காத்திருக்கின்றனர். ஒரு சிலர்.. என்ன விலை என்று கூட கேட்காமல் வாங்கிச் சென்று சுவைக்கின்றனர்.

மாம்பழத்திலும் தற்போது நமக்கு கவலையை அளிக்கும் விஷயம் ஒன்று வந்துவிட்டது.

அதுதான், மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கற்களைப் பயன்படுத்துவது. வியாபாரிகள் பலரும், மாங்காய்களை வாங்கி வந்து குடோனில் போட்டு, அதனுடன் கார்பைடு கற்களையும் வைத்து விடுகின்றனர். இதனால் மாம்பழங்கள் சீக்கிரம் பழுத்துவிடுகின்றன. ஆனால், இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு, உடல் சூடு அதிகரிக்கும், கொப்புளம், குடல் புண் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

காவல்துறையும், பல இடங்களில் சோதனை நடத்தி இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்களை அழித்து வருகின்றனர்.

எனினும் இலைமறைக் காயாக ஆங்காங்கே கார்பைடு கற்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சந்தைக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன.

மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு, அதனை குளிர்ந்த நீரில் அல்லது சாதாரண நீரில் மூழ்குமாறு போட்டு வைத்துவிட்டு பின்னர் சாப்பிடுவது உடலுக்கு சூட்டை ஏற்படுத்துவதை குறைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.

மேலும், மாம்பழம் கிடைக்கிறதே என்று அதிகமாக சாப்பிட்டு விடாமல், அளவாக சாப்பிடுவதும் உடலுக்கு மிகவும் நல்லது. அ‌ப்படி மா‌ம்பழம் சாப்பிட்டால், பால் குடிப்பது உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும்.

க‌ர்‌ப்‌பி‌ணிக‌ள் மா‌ம்பழ‌ம் சா‌ப்‌பிடுவதை குறை‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திக சூடு‌ குழ‌ந்தை‌க்கு ந‌ல்லத‌ல்‌ல. அ‌தி‌ல்லாம‌ல் மா‌ம்பழ‌த்‌தினா‌ல் குழ‌ந்தை‌க்கு மா‌ந்த‌ம் என‌ப்படு‌ம் நோ‌ய் ஏ‌ற்படவு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. அ‌தனா‌ல் கவன‌ம் தேவை.

‌விளையு‌ம் அனை‌த்து மாம்பழ‌ங்களு‌ம் சா‌ப்‌பிடுவத‌ற்கு ம‌ட்டும‌ல்லாம‌ல், ‌ அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில், மாம்பழத்தை வைத்து பச்சடி மற்றும் சட்னி செய்வார்கள். மாம்பழ ஊறுகாய், மாம்பழ ஜாம் உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகிறது.

என்ன ஒரே மாம்பழ வாடை வீசூகிறதா? சரி சரி நாக்கில் எச்சில் ஊறுகிறது. போய் ஒரு மாம்பழம் வாங்கி சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்.

வருகிறோம்

துபாய் முதுவைக் கவிஞருடன் ( 29 மே 2009 ) அல் கிஸஸ் ஷேக் காலனியில்.....



Friday, May 29, 2009

ஹி ஹி ஹி மொபைல் மற்றும் நெட்வொர்க் கம்பெனி களை வைத்து ஒரு திருவிளையாடல் ரீமிக்ஸ்....

ஹி ஹி ஹி மொபைல் மற்றும் நெட்வொர்க் கம்பெனி களை வைத்து ஒரு திருவிளையாடல் ரீமிக்ஸ்....



சேர்ந்தே இருப்பது ?
ஏர்செல் உம் நெட்வொர்க் பிஸி உம் ....
சேராமல் இருப்பது?
ரிலையன்ஸ் இல் இருந்து BSNL க்கு msg...
செய்ய கூடாதது ?
செல் to land லைன் கால்...
செய்ய வேண்டியது?
customer கால்...
செல்லுக்கு?
நோக்கியா...
பில்லுக்கு?
BSNL...
டவர் க்கு ?
ரிலையன்ஸ்...
சைஸ் க்கு?
மோடோரோலா...
கலருக்கு?
LG..
கேமராக்கு ?
சோனி Ericsson...
சவுண்ட் க்கு?
சாம்சுங்...
SMS க்கு?
ஏர்செல்...
offerkku?
ஏர்டெல்...
Recharge க்கு?
Vodafone...
ரேட் க்கு?
டாட்டா இண்டிகாம்...
மொக்கைக்கு?
நான்...
பொலம்பல் க்கு ?
நீங்க....

என்ன வரட்டா.....

Be Cool...
Stay Cool...

operations@alzafercargo.com

TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 30 - 31) கல்வி சேவை நிகழ்சிகள் (இன்ஷா அல்லாஹ்)

TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 30 - 31) கல்வி சேவை நிகழ்சிகள் (இன்ஷா அல்லாஹ்)


1. இராமநாதபுரத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 30 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : காலை 9: 30 மணி முதல் மதியம் 1 மணி வசிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்),
இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்

தொடர்பிற்கு : 9894652633, 9994588737

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.


2. முத்து பேட்டையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 30 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ் )

நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

சிறப்புரை : J.முஹமது தஸ்தகீர். B.E.

இடம் : TNTJ மர்கஸ், நூர் பள்ளிவாசல் தெரு, முத்து பேட்டை, திருவாரூர்
மாவட்டம்

தொடர்பிற்கு : 9094283904

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. திருவாரூர் மாவட்ட மாணவர் அணி.


3. கும்பகோணத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 31 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )

நேரம் : காலை 9 மணி முதல் 1 மணி வரை

சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : TNTJ மர்கஸ், No: 193, ஜான் செல்வராஜ் நகர் (கும்பகோணம் பேருந்து
நிலையம் அருகில்) , கும்பகோணம்

தொடர்பிற்கு : 9944338847

மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ தஞ்சை (வடக்கு) மாவட்ட மாணவர் அணி.


4. திண்டிவனதில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 31 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )

நேரம் : காலை 9 மணி முதல் 1 மணி வரை

சிறப்புரை : J.முஹமது தஸ்தகீர். B.E.

இடம் : TNTJ மர்கஸ், அரவப்பாக்கம், திண்டிவனம்

தொடர்பிற்கு : 9865271550

மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ விழுப்புரம் மாவட்ட மாணவர் அணி.


தர்பியா நிகழ்சிகள்

1. இராமநாதபுரத்தில் TNTJ மாணவர் அணியின் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)

நாள் : மே 30 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்),
இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்

தொடர்பிற்கு : 9894652633, 9994588737

மாணவர்கள், இளைஞர்கள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.



2. கும்பகோணத்தில் TNTJ மாணவர் அணியின் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)

நாள் : மே 31 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )

நேரம் : மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம் : TNTJ மர்கஸ், No: 193, ஜான் செல்வராஜ் நகர் (கும்பகோணம் பேருந்து
நிலையம் அருகில்) , கும்பகோணம்,

தொடர்பிற்கு : 9944338847

மாணவர்கள், இளைஞர்கள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
தஞ்சை (வடக்கு) மாவட்ட மாணவர் அணி.

Monday, May 25, 2009

Golden Rules for Memorizing the Qur’an

Golden Rules for Memorizing the Qur’an


Be Sincere

Correct Pronunciation and Recitation

Apportion the Daily Number of Verses to Memorize

Do Not Move to the Next Portion Till You Master the Present One

Stick to One Specific Copy of the Glorious Qur’an

Understand What You Are Memorizing

Do Not Move from One Surah to Another Till You Connect Its Beginning to Its End

Recite Frequently before Others

Follow Up Frequently

Pay Attention to Similarities

Seize the Opportunity of the Golden Years to Memorize



LINK to Islamonline.net

பிளஸ் 2-க்கு பிறகு 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு : சென்னைப் பல்கலை. அறிமுகம்

பிளஸ் 2-க்கு பிறகு 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு : சென்னைப் பல்கலை. அறிமுகம்

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்த ஐந்து ஆண்டுகளுக்கு இடையில் படிப்பை நிறுத்தினால், அதற்கேற்ப சான்றிதழ் வழங்கப்படும் என்பது சிறப்பம்சம்.

ஒருங்கிணைந்த 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு குறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் கூறியது:

"பிளஸ்-2 முடித்த மாணவர்கள் நலன் கருதி சென்னை பல்கலைக்கழகத்தில் 5 வருட ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு இந்த வருடம் தொடங்கப்படவுள்ளது. எம்.ஏ. மானுடவியல், எம்.ஏ. நவீன மேம்பாட்டு (போஸ்ட் மாடர்ன் டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேசன்) நிர்வாகம், எம்.ஏ. பிரெஞ்சு ஆகியவையும் எம்.எஸ்சி. வாழ்க்கை அறிவியல் படிப்பும் தொடங்கப்படவுள்ளன. இவற்றில் தலா 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதிகமானோர் விண்ணப்பித்தால் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
இந்த படிப்புகளில் மாணவர்கள் ஒரு வருடத்தில் நின்றால் சான்றிதழ், 2 வருடத்தில் நின்றால் டிப்ளமோ, 3 வருடத்தில் நின்றால் பட்டம், 4 வருடத்தில் நின்றால் முதுகலை டிப்ளமோ, 5 வருடம் படித்து தேர்ச்சி பெற்றால் முதுகலை பட்டம் வழங்கப்படும்.

இவற்றில் எம்.எஸ்சி. படிப்புக்கு மட்டும் அவ்வாறு சான்றிதழ் கிடையாது. 3 வருடம் படித்தால்தான் பட்டமும், 5 வருடம் முடித்தால் முதுகலைப்பட்டமும் கிடைக்கும். இதற்கு கட்டணம் ஆண்டுக்கு ரூ.4, 500 மட்டுமே," என்றார் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன்.

மேலும், "இந்தப் படிப்புகள் தவிர எம்.எஸ்சி. கடல் சார் அறிவியல் தொழில்நுட்பம் படிப்பும், எம்.எஸ்சி. சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பும் தொடங்கப்படவுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகார கல்லூரிகளில் 250 படிப்புகள் உள்ளன. மாணவர்கள் அவர்களின் திறனுக்கு ஏற்ப சரியான பாடங்களை தேர்ந்து எடுத்து நன்றாக படித்தால் வேலைவாய்ப்பு உறுதி.

மாணவர்கள் நலன் கருதி கல்விக் கண்காட்சி சென்னை பல்கலைக்கழகத்தில் 23 மற்றும் 24 தேதிகளில் நடத்தப்படவுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

New Indian Passport and Visa Service Centres to open in Kuwait

New Indian Passport and Visa Service Centres to open in Kuwait

Effective Wednesday, 27 May 2009, collection and submission of Indian passport and visa applications and their delivery to applicants in Kuwait will take place only via two Indian Passport and Visa Service Centres located at the following addresses:



1. Emad Commercial Centre, Basement Floor, Ahmed Al Jaber Street, Sharq, Kuwait City. Telephone: 22470005. Telefax: 22470006.

2. Mujamma Unood, 4th floor, Office No. 25-26 Makka Street, Fahaheel, Kuwait. Telephone: 23912352. Telefax: 23912354.

Both Service Centres will function from 0800 hrs. to 1200 hrs. and 1600 hrs to 2000 hrs. from Sunday to Thursday, and from 1600 hrs. to 2000 hrs. on Saturdays. They will be closed on Fridays and major public holidays. Both Centres are located at venues that are regularly served by public transport and have free parking space available nearby.

An Indian Company, M/S BLS International Visa Services, will operate both Service Centres, which will also offer the following facilities: [a] Information desk; [b] Free distribution of passport and visa application forms; [c] Filling of passport and visa application forms [at nominal charge]; and [d] Photocopy facility [at nominal charge].

A service fee of KD 1.500 for Passport Services and KD 5.000 for Visa Services per application will be charged by M/S BLS International Visa Services, in addition to the Passport and Visa fees of the Government of India.

The website http://www.bls-international.com/, which will be functional from Sunday, 24 May 2009, will provide details of all passport and visa services available at both Service Centres. A Consular representative of the Embassy of India, Kuwait, will initially be available at both locations in case of need for any clarification.

Applications for visas on Diplomatic/Official/Special passports as well as for issue of PIO/OCI cards and Emergency Certificates will continue to be accepted directly at the Embassy of India, Kuwait. Affidavit/Attestation services will also continue to be provided at Embassy of India, Kuwait.



Kuwait
May 21, 2009
http://arifmaricar.blogspot.com/2009/05/new-indian-passport-and-visa-service.html

____________________________________________________________________

S.M. Arif Maricar
Technical Clerk,
Ministry of Electricity & Water,
Treasurer,
(TMCA) Tamilnadu Muslim Cultural Association, Kuwait .

http://www.tmcaonline.com
http://www.arifmaricar.blogspot.com
http://www.flickr.com/photos/30497921@N08/
http://www.flickr.com/photos/28801755@N03/

திருந்தினால் திரை விலகும்...!

கதை தானே என்று ஒதுக்கி விட வேண்டாம். தேவையான பல கருத்துக்கள் அடங்கியுள்ளது. படித்துப் பாருங்கள்.



திருந்தினால் திரை விலகும்...!

தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு.

"என்ன பாத்திமா, ஷாகிராவிடமிருந்து செய்தி வந்திருக்கா? என்ன சொல்றா உன் மக?"

"பேசியது நம்ம பொண்ணுதான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க!" கண்கள் மலர குழந்தைத் தனமாகக் கேட்டாள் பாத்திமா.

"இதென்ன பெரிய விஷயமா? ஷாகிராவை பெங்களூர் காலேஜ்லே சேர்த்ததிலிருந்து பார்த்துகிட்டு தானே இருக்கேன்.மககிட்டே பேசும்போது உன் முகத்தில் காணும் சந்தோஷத்தை!"

"இருக்காதாபின்னே! மூன்று பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆசை மவளாச்சே.வருஷம் போனதே தெரியலைங்க.ஷாகிராவுக்கு எம்.சி.ஏ பரிட்சை ஆரம்பமாகப்போகுதாம்.முடிஞ்சதும் போன்செய்றாளாம்.. அழைத்துப்போக உங்களை வரச் சொன்னாள்."

"அதுக்கென்ன போயிட்டு வரேன்.சரக்கு எடுக்க சீக்கிரமாக போகணும்.டிபன் எடுத்து வை".

இரவு படுக்கையில் மெல்ல பேச்செடுத்தாள் பாத்திமா. எந்தக் குடும்ப விஷயமாக இருந்தாலும் இரவு நேரத்தில்தான் ஜாபர் அலி ஓய்வாக செவி கொடுத்து கேட்பார். மற்ற நேரங்களில் டென்ஷன் பார்ட்டிதான். 45 வருடதாம்பத்யத்திய அனுபவம் பாத்திமாவிற்கு.

"என்னங்க நம்ம பொண்ணுக்கு படிப்பு முடிஞ்சிப்போச்சு. இனி நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து கல்யாணம் நடத்திவிடுவதுதான் நல்லது. இப்போதே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிடுச்சிடுங்க. சரியா இருக்கும். "

"ஷாகிரா படிச்ச பொண்ணு. அவ படிப்புக்கு ஏற்ற மாப்பிள்ளையை நம்ப பிள்ளைங்கதான் பார்க்கணும். எனக்கு என்ன விபரம் தெரியும். அவங்க மூன்று பேரையும் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லி போனில் சொல்லிடு."

அடுத்து பேசுவதற்குள் குறட்டைச் சத்தம்தான் அவரிடமிருந்து பதிலாக வந்தது. கணவருக்கு வியாபார அலைச்சல் அதிகம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை...........

மூன்று மகன்களும் தொலைபேசி தொடர்பின் காரணமாக அவரவர்களுடைய விலையுர்ந்த கார்களில் முகமதியார்பேட்டை வந்து இறங்கினர். மகன்களை ஒருசேரக்கண்டதில் ஜாபர் அலிக்கு மட்டில்லா மகிழ்ச்சி. இருக்காதா பின்னே..........

படிப்பு,பதவி, பெரிய இடத்து மாப்பிள்ளைகள் என்ற அந்தஸ்த்து ஆகிய முகாந்திரம் எல்லாம் ஒரு சேரக்கண்டதில் பரம திருப்தி அவருக்கு.

மூத்த மகன் அப்துல் சலீம் பி.இ (சிவில்) படித்துவிட்டு சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் சலீம் கன்ஸ்ட்ரகஷன் தொழிலை நடத்திக்கொண்டு குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டான்.

இரண்டாவது மகன் அப்துல் மாலிக் பி.காம் முடித்துவிட்டு மதுரைஅரசு பதிவுத்துறை அலுவகத்தில் சார்பதிவாளராக பணிபுரிகின்றான்.மதுரைவாசியாகிவிட்டான்.

மூன்றாவது மகன் அப்துல் வஹாப் பி.எஸ்சி (கெமிஸ்ட்ரி) முடித்துவிட்டு திருச்சியிலுள்ள பால்வளத்துறை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகின்றான். வீட்டு மாப்பிள்ளையாக இருக்கிறான்.

தங்கையின் திருமணப்பேச்சு சம்பந்தமான விவாதம் நடந்தது. எல்லோருடைய ஒட்டுமொத்தமான கருத்துக்களும் தங்களுடைய அந்தஸ்த்துக்கேற்ற பணக்கார மாப்பிள்ளையை தேடுவதில்தான் இருந்தது. ஜாபர் அலியின் விருப்பமும் அதுதான். தன் மகளுக்கு ஒழுக்க குணமுள்ள மாப்பிள்ளைதான் வேண்டும் என்ற ஜீனத் - பாத்திமாவின் வேண்டுகோள் எடுபடவில்லை. இறை நாட்டப்படி நடக்கட்டும் என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தன்கைமணச்சுவையோடு வயிறார உணவு பறிமாறி மகன்களை அனுப்பி வைத்தாள் பாத்திமா.

படிப்பு முடித்துவிட்டு வந்த மகளுக்கு வாய்க்கு ருசியாக வித விதமாகச் சமைத்துப் போட்டு மகிழ்ந்தாள் பாத்திமா. அண்ணன்கள் வந்ததையும் மாப்பிள்ளையைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்களும் தலையசைக்கும் தந்தையைப்பற்றியும் கூறினாள் பாத்திமா. அதைக்கேட்ட ஷாகிராவின் முகம் வாடியது.

"ஏம்மா, எல்லோரும் தீன் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்காங்க. அவர்கள் மார்க்கக்கல்வி படிக்கலையா?வாப்பாவும் அவர்கள் வழி செல்கிறாரே?"

"என்னம்மா செய்யறது, உன்னை மதரஸாவில் சேர்த்து படிக்க வைத்தது போலத்தான் அண்ணன்களையும் படிக்க வச்சேன். நீ கருத்தாகப் படிச்சே, பட்டப்படிப்பையும் இஸ்லாமியக்கல்லூரியிலேயே சேர்ந்து படிச்சதாலே தீன் பற்று உனக்கு அதிகமா இருக்கு. ஆனா உன் அண்ணன்கள் சரியா படிக்கலன்னா ஹஜரத் தலையில் ஓங்கிக் கொட்டுவார்னு சாக்கு சொல்லி படிக்காம நின்னுட்டாங்க. ஹஜரத் கொஞ்சம் கண்டிப்பானவர். ஓதுறதுல அசிரத்தையா இருந்தா அவருக்குக் கோபம் வரும். நம்ம நல்லதுக்குத்தானே!. வாப்பாகிட்டேயும் சொல்லிப் பாத்துட்டேன். அவர் வியாபாரம் மூலம் பணம் சேர்ப்பதில்தான் குறியாக இருந்தார். உன் மனசு நோகக் கூடாதுன்னுதான் ஊறுகாய் தொட்டுக்கொள்வதைப்போல பள்ளிக்குப் போய் வருவார்."

(வாழ்க்கை) வசதிகள் அதிகமா இருப்பது செல்வமல்ல;மாறாக போதுமென்ற மனமே (உண்மையான)செல்வமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புகாரி)

"அரபியில் ஓத வரலைன்னா என்னம்மா? நம்ம உம்மத்துக்களுக்கு மார்க்கம் எவ்வளவு எளிமைப்படுத்தி கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்துள்ளது. தமிழிலியே இஸ்லாமிய கருத்துக்களையும் மார்க்க நெறிமுறைகளையும் ஆய்வுகளையும் சூராக்களையும் படித்து கடைப்பிடிக்கலாமே! அண்ணிங்க கூடவா எடுத்து சொல்லமாட்டாங்க"

"அட போம்மா,பூவோட சேர்ந்த நாறும் மணம் வீசும் என்பாங்க". இவங்க பூவா இருந்தால்தானே!. இவர்கள் மறுமை வாழ்க்கைக்கு அமல் செய்வதை விட, இவ்வுலக நாகரீக மோகமும் பணம் சம்பாதிக்க கணவன்களுக்கு தவறான வழி காட்டுவதில்தான் ஆர்வமா இருக்காங்க. அவங்க பிள்ளைகளை ஆண்டவன் தான் காப்பாத்தணும்."

சந்திரனை மேகம் மறைத்தது போல பாத்திமாவின் முகத்தில் கவலையின் ரேகைகள் படிந்தன. மனவருத்தத்தை மறைத்துக்கொண்டு தாய்க்கு ஆறுதல் கூறினாள் ஷாகிரா.

ஓய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிடவும் மார்க்கக் கல்வி பற்றிய செய்திகளை அதிகமா தெரிந்து கொள்ளவும் ஒரு கம்ப்யூட்டர் தேவையென வாப்பாவிடம் கூறினாள் ஷாகிரா. மகளின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத ஜாபர் அலி அவள் விருப்பப்பத்தை நிறைவேற்றி வைத்தார். மகன்களிடம் இருந்து மாப்பிள்ளைகளின் விபரங்கள்,புகைப்படத்துடன் பதிவுத்தபாலில் வந்து சேர்ந்தன. ஜாபர் அலி மகளைக் கூப்பிட்டார்.

"ஷாகிரா,மாப்பிள்ளைகளின் பயோடேட்டா, போட்டோ எல்லாம் வந்திருக்கு. பெரிய இடம் போலிருக்கு, போட்டோவைப் பார்த்தாலே தெரியுது".

ஷாகிரா பயோடேட்டாவை மட்டும் வாங்கிப் பார்த்தாள். அதில் படித்த, அழகான, வசதியான பெண் வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"வாப்பா,எனக்கு இந்த மாப்பிள்ளைகள் பிடிக்கவில்லை"என்றாள் ஷாகிரா.

"என்னம்மா சொல்றே, எந்த போட்டோவையும் பார்க்காமலேயே எப்படிம்மா பிடிக்கலைன்னு சொல்றே?"

"பயோடேட்டாங்கிறது முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி, மாப்பிள்ளைகளுடைய குணம், நோக்கம்,எ திர்பார்ப்பு எல்லாம் அதிலேயே தெரிஞ்சுக்கலாம். எனக்கு மார்க்கப்பற்றுள்ள, படித்த, எளிமையான மாப்பிள்ளை போதும், வாப்பா; பணம், வசதி எல்லாம் வேண்டாம்".

"என்னம்மா, புரியாத பொண்ணா இருக்கியே! குணம் மட்டும் பத்தாது, பணம் தாம்மா நம்மை வாழவைக்கும்".

"வாப்பா, நீங்க புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான். நமக்கெல்லாம் வழிக்காட்டியாக விளங்கும் நாயகமும் அவர்களின் வழித்தோன்றல்களும் பெண்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் பாத்திமா நாயகமும் அவர்களின் எளிமையான வாழ்க்கை நெறிமுறைகளும் தான் இஸ்லாத்திற்கு பெருமையைச் சேர்க்கிறது. நீங்கள் நினைப்பதுபோல் இல்லே."

"நம்ம பொண்ணு சொல்றது சரிதாங்க. அவள் விருப்பப்படியே மாப்பிள்ளைப் பார்ப்போம்" என்று ஆதரவாகப் பேசினாள் பாத்திமா.

"சரிம்மா, நீ சொல்றமாதிரி பையனை எங்கேபோய் தேடுவது சொல்லு."

"ஒண்ணும் கஷ்டம் இல்லே வாப்பா, இன்டர்நெட்லே இல்லாத விஷயமே இல்லே. நீங்க அனுமதி கொடுத்தா தேடிப்பார்க்கிறேன்" என்றாள்.

"இதெல்லாம் கூட கம்ப்யூட்டர் செய்யுதா என்ன! புரோக்கருக்கு வேலையே இல்லைன்னு நினைக்கிறேன்."

தந்தையின் அனுமதி கிடைத்தது ஷாகிராவுக்கு.

"என் மனம் நாடும் மணாளனை மணம் முடித்து வை." என்று இறைவனிடம் துவா கேட்டாள். நாட்கள், வாரங்கள், மாதங்கள் நகர்ந்தன.

"தொழுகை தூக்கத்தை விட சிறந்தது" என்பதால் ஃபஜர் தொழுதுவிட்டு அம்மாவுக்குச் சமையலில் உதவி செய்த பின் கம்ப்யூட்டர் முன்அமர்ந்தாள். இஸ்லாமிய இணையதளம் ஒன்றில் அவள் பார்த்த மாப்பிள்ளையின் விவரம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. மார்க்கப்பறுள்ள, ஐவேளைதொழுகும் தன் பெற்றோர்களைப் பராமரிக்கும் பெண் தேவையென குறிப்பிட்டு இருந்தது.

"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. செல்வத்திற்காக 2.குடும்ப வம்ச பாரம்பரியத்திற்காக 3.அழகிற்காக 4.மார்க்க நல்லொழுக்கத்திற்காக. எனவே மார்க்க நல்லொழுக்கத்திற்காக பெண்ணை மணந்து வெற்றி அடைந்துக்கொள்.(இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்." (அறிவிப்பாளர்: அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி. எண்; 5090)

மாப்பிள்ளையின் விவரங்களை ஷாகிரா பெற்றோர்களிடம் தெரிவித்தாள். அவள் முகத்தில் சந்தோஷத்தைக் காண தவறவில்லை ஜாபர்அலி. வாழப்போகும் மகளின் விருப்பம்தான் முக்கியம் எனக்கருதி மாப்பிள்ளையைப் பார்க்கப் புறப்பட்டார். ஊரிலிருந்து திரும்பிவந்த ஜாபர்அலியின் முகத்தில் மட்டில்லா மகிழ்ச்சியும் மனநிறையும் தென்பட்டது. சொல்லப்போகும் செய்தியைக் கேட்க பாத்திமா ஆவலுடன் கணவரின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

"பாத்திமா, நம்ம பொண்ணு தேர்வு செய்த மாப்பிள்ளை அவள் எதிர்ப்பார்த்த மாதிரியே இருக்கார். எளிமையான குடும்பமாக இருந்தாலும் நல்லபெயரைச் சம்பாதித்து வைத்துள்ளார். தொழுகையாளி, அடக்கம், சாந்தமான பேச்சு, பெற்றோர்கள் பழகும் விதம் எல்லாம் மனசு நிறைஞ்சு இருக்கு. நம்முடைய பணமும் அவர்களுடைய குணமும் நம்ம பொண்ணைச் சந்தோஷமாக வாழவைக்கும்!".

அவருடைய உள்மனம் ஒரு கணக்குப் போட்டது. தொலைபேசிமூலம் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் மாப்பிள்ளை பற்றிய விவரங்களையும் தங்களுடய விருப்பத்தையும் தெரிவித்தார். மூவரும் குடும்பத்துடன் வந்து திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி சொல்லி முடித்தார். மூன்று குடும்பங்களும் வந்து இறங்கினார்கள் சுனாமிபோல் ஆவேசமாக. காரசாரமான விவாதங்கள் நடந்தன. தாங்கள் பார்த்த வரன்களை நிராகரித்ததன் காரணமாக தங்கள் கௌரவம், அந்தஸ்த்து எல்லாம் பஞ்சாக பறந்து விட்டது என ஆர்ப்பரித்தனர். அண்ணிகள் தங்கள் பங்குக்கு உபதேசம்செய்தனர். தன் நிலையிலிருந்து தளரவேயில்லை ஷாகிரா.

"அண்ணா, எனக்கு ஆடம்பரமான பணக்கார குடும்பம் வேண்டாம். சொத்துக்களோ, நகைநட்டோ வேண்டாம். மனசுக்கு நிறைந்த வாழ்க்கையே போதும். மூவரும் ஒன்று சேர்ந்து நடத்தி வைங்க" என்று உருக்கமாக வேண்டினாள்.

அவர்கள் மனம் இரும்பாக இருந்தால்தானே உருக வாய்ப்பிருக்கும்; அதுதான் கல்லாகி விட்டதே.! பிடிவாதமாக எல்லோரும் புறப்பட்டுச் சென்று விட்டனர். பலமுறை நேரில் அழைத்தும் வர மறுத்து விடவே உறவினர்கள், நண்பர்களை வைத்து படைத்தவன்மேல் பாரத்தைப் போட்டு திருமணத்தை முடித்து விட்டார் ஜாபர் அலி. மறுவீடு வந்த மருமகனிடம் மகளுடன் வீட்டோடு தங்கிவிடும்படி கேட்டார்.

அதற்குச் சாதிக், "மாமா, உங்களுக்குத் தெரியாதது ஒண்ணும் இல்லே. மகன்கள் இருக்கும்போது வீட்டு மாப்பிள்ளையாக இருப்பது உகந்தது இல்லே. அது முறையும் இல்லே. நான் என் சொந்த காலில் நிற்கவே ஆசைப்படுகிறேன். என் பெற்றோர்களைப் பராமரிக்கும் கடமையும் இருக்கு. மனைவி ஷாகிராவை மட்டும் என்னுடன் அனுப்பினால் போதும். வேறு எதுவும் வேண்டாம். தவறாக நினக்காதீங்க; அல்லாஹ் போதுமானவன்" என்று பதில் கூறினான்.

கணவரின் கருத்தையே ஆமோதிப்பதுப்போல் மகளும், "வாப்பா புகுந்த வீடுதான் பெண்களுக்கு சொர்க்கம். அவருக்கும் அவரைப்பெற்றவர்களுக்கும் பணிவிடை செய்யவே விரும்புகிறேன். ஆண்டவன் துணையும் உங்களின் துவா பரகத்தும் போதுமானது" என்றாள்.

பாசம் ஒன்றையே சீதனமாகக்கொண்டு விடைப்பெற்றுச் செல்லும் மகளையும் மருமகனையும் பெருமிதத்தோடுப் பார்த்துக்கொண்டு நின்றார் ஜாபர் அலி. ஜீனத் பாத்திமாவுக்கு கண்கள் குளமாயின. ஜாபர் அலியின் மனக்கணக்கு பொய்த்ததில் அவருக்கு வருத்தமே இல்லை.

பணக்கார வீட்டுப்பெண் என்ற சுவடு தெரியாமல் மன நிறைவோடு குடும்பம் நடத்தினாள் ஷாகிரா. அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு ஓதவும் தொழவும் கற்றுக் கொடுத்தாள். பெண்களைக்கூட்டி இஸ்லாமிய நெறிமுறைகளை எடுத்துக்கூறினாள். எல்லோருடைய மனதிலும் நிறைந்து நின்றாள். கணவனின் வேலைக்காக நாளிதழ்களைப் புரட்டவும் தவறுவதில்லை. எல்லா பட்டதாரிகளையும் போல சாதிக்கும் வேலை கிடக்காமல் அல்லாடினான். கணவனின் நிலை கண்டு கண்கலங்கிய ஷாகிராவின் பார்வை அன்றைய செய்தித்தாளில் நிலைத்தது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விண்ணப்பம் ஒன்றை கண்டாள்.

"குருடனுக்குப் பார்வை கிடைத்ததைப்போல" மனம் துள்ளியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கணவனை வற்புறுத்தினாள். "ஷாகிரா, இந்தத் தேர்வு எழுத நிறைய செலவாகும். நம் சக்திக்கு ஒத்து வராதும்மா" என்றான் சாதிக்.

இருவரும் பேசியதைக்கேட்ட அவனது பெற்றோர்கள், "சாதிக், கவலைப்படாதே, நம்முடைய பூர்வீக நிலம் கொஞ்சம் இருக்கு. அவசரத்துக்கு உதவும் என்று தான் வைத்துள்ளோம். அதை விற்று மருமகளின் ஆசையை நிறைவேற்றுப்பா" என்று கூறினார்கள்.

ஈடுபாட்டுடன் படித்து தேர்வு எழுதிய சாதிக் மாநிலத்தில் ஏழாவது இடத்தில் தேர்ச்சி பெற்றான். ஷாகிரா ஐவேளை தொழுகையிலும் துவா கேட்டதும் ஸலவாத்து ஓதியதும் மற்றவர்களுக்கு உதவியதும் வீண் போகவில்லை. மட்டுமின்றி, சாதிக்கின் தேர்வுக்குத் தேவையான விஷயங்களைச் சேகரித்துக் கொடுப்பதிலும் ஷாகிரா நிறைந்து நின்றாள். சாதிக் முகமதுவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. டேராடூனில் பயிற்சி முடிந்து திருச்சியில் கூடுதல் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டான். பங்களாவில் தன் பெற்றோர்களுடன் குடியேறினான்.

மருமகனின் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் பதவியும் கண்டு ஷாகிராவின் பெற்றோர்கள் பூரித்துப் போனார்கள். மைத்துனரின் முன்னேற்றத்தைக் கண்ட ஷாகிராவின் சகோதரர்கள் மூவரும் பொறாமைப்பட்டார்கள்; எரிச்சலடைந்தார்கள். வாழ்க்கையில் வேகமாக முன்னேற வேண்டும் என்ற வெறி அதிகமாகியது. மனைவிகளின் தூண்டுதல்களின் பேரில் பதவியைப் பயன்படுத்தி தவறான பாதையில் செல்ல ஆரம்பித்து, பிடிபட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கேள்விப்பட்ட ஜாபர் அலியும் பாத்திமாவும் நிலைகுலைந்து போனார்கள்.

இறைவழி நின்று எல்லோருடைய பாராட்டுகளோடு உயர்ந்து வரும் மருமகன் ஒருபுறம்; பொறாமைத்தீயில் வெந்து, பதவியை இழந்து நிற்கும் பிள்ளைகள் ஒருபுறம். இஸ்லாத்தில் பிறந்து, ஐவேளை தொழுகையை மறந்து, செல்வத்தைச் சேர்ப்பதில் கவனமாக இருந்த தனக்கு அல்லாஹ் பாடம் புகட்டிவிட்டான் என்று எண்ணினார். முதன் முறையாக அவருடைய உடல் இறையச்சத்தால் நடுங்கியது; கண்கள் கலங்கியது. இரு கைகளையும் ஏந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மூவரும் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். அண்ணன்களின் செய்தியறிந்து ஷாகிரா கணவருடன் தாய்வீடு வந்தாள். மூவருக்கும் ஆறுதல் கூறினார்கள்.

சாதிக் முகமது தன் மைத்துனர்களைப்பார்த்து, "நான் வயதில் உங்களை விட வயதில் சிறியவன். நான் சொல்லப்போவதை யாரும் தவறாக எண்ண வேண்டாம்; சொல்லுவதை என்னுடைய கடமையாக எண்ணுகின்றேன். நீங்கள் மூவரும் பதவியைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கியது, கலப்படம் செய்தது, நம்பியவர்களை ஏமாற்றியது எனப் பல குற்றங்களை செய்துள்ளீர்கள். இதற்கெல்லாம் காரணம் மார்க்கத்தைப்பற்றிய அறிவும் இறையச்சமும் இல்லாததுதான்."

"நபிகள் நாயகம் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), நூல்: இப்னுமாஜா).

ஒவ்வொரு முஃமீனுக்கும் புனித குர்ஆனையும் முகமதுநபி(ஸல்) அவர்களின் போதனையையும் படித்து பின்பற்றுவது, மார்க்க அறிவைப்பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.

"எவன் தூய்மையான அச்சமுடையவனாக இருக்கிறானோ அவன்தான் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவன்" (அல் குர்ஆன் 49:13)

"பயபக்தி உடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்; வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்" (அல் குர்ஆன் 29:90-91)

முதலில் மைத்துனருடைய அறிவுரைகளை அலட்சியப்படுத்தியவர்கள், பின்னர் அவருடைய பேச்சையும் குர்ஆன் வசனத்தையும் கேட்க ஆரம்பித்தப்பிறகு உண்மையிலேயே இறையச்சத்திற்கு ஆளானார்கள்; முகம் வியர்த்தது.

சாதிக் முகமது மேலும் தொடர்ந்தான்... "உங்களின் தவறான போக்குக்குக் காரணம் நீங்கள் மட்டுமல்ல; சரியான பாதையைக் காட்டத்தவறிய பெரியவர்களும்தான்."

ஜாபர் அலி தன் குற்ற உணர்வால் தலை நிமிரவே இல்லே.

"மச்சான் எங்களின் இந்நிலைக்கு முழுக்காரணமும் நாங்கள்தான். எங்களின் தங்கையைப்போலவே எங்கள் மனைவிகள் இருந்து இருந்தால் கூட இந்நிலை வந்திருக்காது." என வருந்தினார்கள்.

"இனி ஒருவர் மேல் ஒருவர் பழி சொல்லிப் பயனில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும்."

"எங்களை அல்லாஹ் மன்னிப்பானா?" மூவரின் குரல்களும் தழுதழுத்தது.

"உங்கள் தவறுகளை எப்போது உணர்ந்தீர்களோ, அப்போதே அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். இறையச்சம் உடையவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். கவலை வேண்டாம்."

மூவரின் இதயங்களின் இருள் திரை விலகி கரையைக்கடந்ததுப் போன்ற ஓர் தெளிவு பிறந்தது.

"முடிந்தவரை மூவரும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு காணுங்கள். தண்டனை காலம் முடிந்ததும் வேலைக்கு முயற்சி செய்கிறேன்." என்றான் சாதிக்.

"வேண்டாம் மச்சான். இனி எங்களுக்கு வேலைக்குப் போக விருப்பமில்லை. எங்களை நல்வழிப்படுத்தியதே போதும். இனி வாப்பாவுக்கு உதவியாக இருந்து, தீனுக்காக உழைக்கப்போகிறோம். எங்கள் ஊர் பள்ளிவாசலை பெரிதுபடுத்தி மார்க்கக்கல்வியை விரிவாக்குவோம். மறுமை வாழ்வுக்கு அமல்கள் செய்வோம்", மூவரும் மனநிறைவோடு கூறினார்கள்.

தன் பிள்ளைகளின் மாற்றங்களைக்கண்டு மகிழ்ந்த ஜாபர் அலி மருமகனின் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டார். இதனைக் கண்ட ஷாகிராவின் கண்கள் பனித்தன. சாதிக் முகமதுவின் முகத்தில் நிறைவான புன்னகை தவழ்ந்தது.

"அனைத்திற்கும் ஆண்டவன் போதுமானவன்!"

"எவர்கள் நேர்வழியில் செல்லுகின்றார்களோ, அவர்களுடைய நேர் வழியை (இன்னும்)அதிகப்படுத்தி அவருக்கு தக்வாவை-பயபக்தியை(இறைவன்)அளிக்கிறான்". (அல் குர்ஆன் 47:17)

ஆக்கம்: ஆர். நூர்ஜஹான் ரஹீம் (கல்லை)


Source: satyamargam.com

Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil @ Jeddah on 29.05.2009

Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil @ Jeddah on 29.05.2009

அன்புச்சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் வருகிற வெள்ளிக்கிழமை 29.05.2009 அஸர் தொழுகைக்குப்பின், ஸனாயியா தாஃவா அழைப்பகத்தில் (Jeddah, Industrial Area) ஆண்களுக்கென்று பிரத்யேகமாக குர்ஆன் மற்றும் தொழுகையை புரிந்துக்கொண்டு செயல்படுவது சம்பந்தமாக, தமிழில்

Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil

சகோதரர். முகையதீன் கஜ்ஜாலி (ரியாத்)
அவர்களைக் கொண்டு நடக்க இருக்கின்றது.

இதற்கு தகுதி:
அரபியில் குர்ஆன் ஓத மற்றும் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

மூன்று மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் எட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் (through Powerpoint slides). ஒவ்வொரு பாடங்களும் சுமார் 20 நிமிடத்தில் முடியும்.

கீழே குறிப்பிட்டவைப் போன்று கற்பிக்கப்படும்:

1. ஸூரா அல்-பாத்திஹா, அல்-அஸர், மற்றும் அன்றாடம் தொழுகைக்கு பயன்படும் துஆக்கள் தமிழ் மொழிபெயர்ப்புடன் சொல்லிக் கொடுக்கப்படும்.
2. அரபு இலக்கணம் எளிய வழியில் (TPI - Total Physical Interaction method)
3. ஓதுவதை எப்படி எளிதாக ஞாபகத்தில் வைத்துக்கொள்வது.
4. 50 தடவை திருக்குர்ஆனில் திரும்ப திரும்ப வரும் 27,500 அரபி சொற்கள் அதன் தமிழ் மொழி ஆக்கத்துடன் கற்பது. இது தெரிந்தால் ஏறத்தாழ 35% சொற்கள் தெரிந்தது போல் ஆகும்.


நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் குறைந்தது 50 வார்த்தைகளை கற்றுக்கொண்டதை உறுதி செய்ய கேள்வித்தாள்கள் கொடுத்து விடை கேட்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
சகோதரர். இப்ராஹிம் மௌலவி (0506625229)
சகோதரர். அப்துல் பத்தாஹ் (0508569066)
ஆகியோர்களில் ஒருவரை கைப்பேசியில் தொடர்புக் கொண்டு தங்கள் வருகையை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும்.

குறிப்பு: வருகிற அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்ஙனம்
இஸ்லாமிய அழைப்பகம்,
ஸனாயியா, ஜித்தா

Sunday, May 24, 2009

Muslim MPs in Indian Parliment

30, not 28 Muslims MP have won this Lok Sabha election
S.O. News Service, Saturday, 23 May 2009 - 17:12:09 IST
http://www.sahilonline.org/english/news.php?catID=nationalnews&nid=5459&viewed=0


New Delhi: The number of Muslim candidates who have been elected to the new Lok Sabha is now 30. According to the final result of successful Lok Sabha candidates, 30 among 543 members are Muslims.

In the early reports after the counting of votes, only 28 Muslims were shown winner. While Bahujan Samaj Party candidate Kaisar Jahan, who won Sitapur Lok Sabha constituency in Uttar Pradesh, was missing in early lists, the name of the newly elected Trinamool Congress candidate Kabir Suman seems to have confused many. Suman, a convert and practicing Muslim, has won Jadavpur Lok Sabha constituency in West Bengal. He got 5,40,667 votes and defeated CPM's Sujan Chakraborty by about 60 thousand votes.

Kabir Suman, a Kolkata-based modern Bengali singer-songwriter, guitarist, poet, journalist, TV presenter and occasional film actor, converted to Islam in 2000. Before being Kabir Suman, he was Suman Chattopadhaya. Jadavpur University graduate in English Literature as the major subject, Kabir Suman is married to Sabina Yasmin. His album of protest songs "Nandigram" in response to atrocities committed on the residents of the village is his latest work.

Against the 14th Lok Sabha which had 39 Muslim Members, this Lok Sabha will have 30. As for the representation of the Muslim community in the Lok Sabha is concerned, this is a far less number given the fact that the community (150 million) counts about 15% of the total population.

Partywise distribution of Muslim MPs in 15th Lok Sabha

Indian National Congress --- 11
National Conference --- 4
Bahujan Samaj Party --- 4
Trinamool Congress --- 3
Muslim League --- 2
Majlis Ittehadul Muslimeen --- 1
Assam United Democratic Front --- 1
Janata Dal United --- 1
Dravida Munnetra Kazhagam --- 1
Communist Party of Marxist --- 1
Bharatiya Janata Party --- 1

Full list of successful Muslim Lok Sabha candidates

1. Andhra Pradesh, Hyderabad, Asaduddin Owaisi All India Majlis-E-Ittehadul Muslimeen
2. Assam, Dhubri, Badruddin Ajmal, Assam United Democratic Front
3. Assam, Barpeta, Ismail Hussain, Indian National Congress
4. Bihar, Kishanganj, Mohammad Asrarul Haque, Indian National Congress
5. Bihar, Begusarai, Dr. Monazir Hassan, Janata Dal (United)
6. Bihar, Bhagalpur, Syed Shahnawaz Hussain, Bharatiya Janata Party
7. Jammu & Kashmir, Baramulla, Sharief Ud Din Shariq, Jammu & Kashmir National Conference
8. Jammu & Kashmir, Srinagar, Farooq Abdullah, Jammu & Kashmir National Conference
9. Jammu & Kashmir, Anantnag, Mirza Mehboob Beg, Jammu & Kashmir National Conference
10. Jammu & Kashmir, Ladakh, Hassan Khan, Independent
11. Kerala, Malappuram, E. Ahamed, Muslim League Kerala State Committee
12. Kerala, Ponnani, E.T. Muhammed Basheer, Muslim League Kerala State Committee
13. Kerala, Wayanad, M.I. Shanavas, Indian National Congress
14. Tamil Nadu, Vellore, Abdulrahman, Dravida Munnetra Kazhagam
15. Tamil Nadu, Theni, Aaron Rashid.J.M, Indian National Congress
16. Uttar Pradesh, Kairana, Tabassum Begum, Bahujan Samaj Party
17. Uttar Pradesh, Muzaffarnagar, Kadir Rana, Bahujan Samaj Party
18. Uttar Pradesh, Moradabad, Mohammed Azharuddin, Indian National Congress
19. Uttar Pradesh, Sambhal, Dr. Shafiqur Rahman Barq, Bahujan Samaj Party
20. Uttar Pradesh, Kheri, Zafar Ali Naqvi, Indian National Congress
21. Uttar Pradesh, Farrukhabad, Salman Khursheed, Indian National Congress
22. Uttar Pradesh, Sitapur, Kaisar Jahan, Bahujan Samaj Party
23. West Bengal, Maldaha Uttar, Mausam Noor, Indian National Congress
24. West Bengal, Maldaha Dakshin, Abu Hasem Khan Choudhury, Indian National Congress
25. West Bengal, Murshidabad, Abdul Mannan Hossain, Indian National Congress
26. West Bengal, Basirhat, Sk. Nurul Islam, All India Trinamool Congress
27. West Bengal, Uluberia, Sultan Ahmed, All India Trinamool Congress
28. West Bengal, Burdwan - Durgapur, Sk. Saidul Haque, Communist Party of India (Marxist)
29. West Bengal, Jadavpur, KABIR SUMAN, All India Trinamool Congress
30. Lakshadweep, Lakshadweep, Muhammed Hamdulla Sayeed A.B, Indian National Congress




Kerala 4 Wayanad M.I. Shanavas Indian National Congress
Kerala 6 Malappuram E. Ahamed Muslim League Kerala State Committee
Kerala 7 Ponnani E.T. Muhammed Basheer Muslim League Kerala State Committee
Tamil Nadu 8 Vellore Abdulrahman Dravida Munnetra Kazhagam
Tamil Nadu 33 Theni Aaron Rashid.J.M Indian National Congress
Andhra Pradesh 9 Hyderabad Asaduddin Owaisi All India Majlis-E-Ittehadul Muslimeen
Assam 4 Dhubri Badruddin Ajmal Assam United Democratic Front
Assam 6 Barpeta Ismail Hussain Indian National Congress
Bihar 10 Kishanganj Mohammad Asrarul Haque Indian National Congress
Bihar 14 Darbhanga Kirti Azad Bharatiya Janata Party
Bihar 24 Begusarai Dr. Monazir Hassan Janata Dal (United)
Bihar 26 Bhagalpur Syed Shahnawaz Hussain Bharatiya Janata Party
Jammu & Kashmir 1 Baramulla Sharief Ud Din Shariq Jammu & Kashmir National Conference
Jammu & Kashmir 2 Srinagar Farooq Abdullah Jammu & Kashmir National Conference
Jammu & Kashmir 3 Anantnag Mirza Mehboob Beg Jammu & Kashmir National Conference
Jammu & Kashmir 4 Ladakh Hassan Khan Independent
Maharashtra 21 Nashik Sameer Bhujbal Nationalist Congress Party
Uttar Pradesh 2 Kairana Tabassum Begum Bahujan Samaj Party
Uttar Pradesh 3 Muzaffarnagar Kadir Rana Bahujan Samaj Party
Uttar Pradesh 6 Moradabad Mohammed Azharuddin Indian National Congress
Uttar Pradesh 8 Sambhal Dr. Shafiqur Rahman Barq Bahujan Samaj Party
Uttar Pradesh 28 Kheri Zafar Ali Naqvi Indian National Congress
Uttar Pradesh 40 Farrukhabad Salman Khursheed Indian National Congress
West Bengal 7 Maldaha Uttar Mausam Noor Indian National Congress
West Bengal 8 Maldaha Dakshin Abu Hasem Khan Choudhury Indian National Congress
West Bengal 11 Murshidabad Abdul Mannan Hossain Indian National Congress
West Bengal 18 Basirhat Sk. Nurul Islam All India Trinamool Congress
West Bengal 26 Uluberia Sultan Ahmed All India Trinamool Congress
West Bengal 39 Burdwan - Durgapur Sk. Saidul Haque Communist Party of India (Marxist)
Lakshadweep 1 Lakshadweep
Muhammed Hamdulla Sayeed
A.B Indian National Congress
Lakshadweep 1 Lakshadweep
Muhammed Hamdulla Sayeed
A.B Indian National Congress

Micro sector fit for Islamic financing

http://www.dc-epaper.com/DC/DCC/2009/01/16/ArticleHtmls/16_01_2009_013_020.shtml

Micro sector fit for Islamic financing

R. Seetharaman, chief executive officer of Doha Bank, is a strong advocate of Islamic banking. He began his career at the global consultancy firm Price Waterhouse & Associates. A graduate from Raja Serfoji college, Tanjore, he is a chartered accountant and holds certificates in IT Systems and Corporate Management. Recipient of numerous honors and awards, including the Middle East banking industry’s Banker of the Year Award in 2007 and the 2006 Arab Asian Banker Excellence Award, Seetheraman is a renowned speaker and author on cross-border economic issues. This Tanjore Brahmin believes that Islamic banking is ideal for Indian condition and would help eradicate poverty.

Excerpts from an interview with K. S. ANANDAN.
How will a country like India benefit from Islamic banking? Gulf countries possess enormous prosperity from oil and gas. Huge gulf funds can be expected to flow in once India recognises Islamic banking. The micro finance sector is a fit candidate for Islamic financing, which is also a solution for alleviating poverty.

How is Islamic banking different from commercial banking? Islamic banking is consis tent with the principles of Sharia (the Islamic law), namely sharing and caring. Commercial banks charge interest whereas Islamic banks prohibit interest. Sharia prohibits gambling, liquor and any other business that is not conducive for human prosperity. In Islamic banking, we give equity financing, not debt. The system insists on a transparent contract, and there is no hidden agenda in the process.

If you don’t have any commercial interest, how serious will you be in monitoring your partner? We have to create a Special Purpose Vehicle (SPV) for issuing Islamic Sukuk (bonds). Principles of Sharia very categorically state that the responsibility of sharing is applicable for both partners.

How many countries are banking on Islamic financing, with how many banks? What is the asset base under this system? There are 36 countries practicing Islamic banking, including the UK, Japan, Canada and Taiwan with 715 banks across the world. Over $12 trillion assets are under this system.

With globalization, the entire global financial system is interlinked. In such a scenario, how can Islamic banks operate in a standalone fashion without integrating the massive global financial system to function in a safe mode? The global financial crisis is a result of unethical banking practice. They practiced asset-based transactions instead of assetbanked transactions. In Islamic banking, all transactions are done with assets and the products are backed by assets. The system has inbuilt security with its asset base, ensuring its safety.

Why is the Indian regulator reluctant to introduce Islamic financing? We need to create a Sharia board, regulatory system, rating agency and auditors all based on Sharia to introduce Islamic banking in India. Modern Islamic banking is just a 30-year- old industry. Over a period of time, I believe, it will evolve in our country.

Saturday, May 23, 2009

புது உத்தி

புது உத்தி

முதல் உதாரணம் : 96 x 97

முதல் எண் 96. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 96 =4
அடுத்த எண் 97. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 97 = 3

இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 3 = 12. இது விடையின் இரண்டாவது பகுதி
இப்போது 96ல் இருந்து மூன்றை கழியுங்கள் 96 - 3 = 93. அல்லது 97ல் இருந்து நான்கை கழியுங்கள் 97-4 = 93. இரண்டிற்கும் ஒரே விடைதான் 93. இது விடையின் முதல் பகுதி
அதாவது 9312
அடுத்த உதாரணம் : 98 x 92

முதல் எண் 98. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 98 =2
அடுத்த எண் 92. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 92 = 8

இனி விடைகளை பெருக்குங்கள். 2 x 8 = 16. இது விடையின் இரண்டாவது பகுதி
இப்போது 98ல் இருந்து எட்டை கழியுங்கள் 98 - 8 = 90. அல்லது 92ல் இருந்து இரண்டை கழியுங்கள் 92-2 = 90. இரண்டிற்கும் ஒரே விடைதான் 90. இது விடையின் முதல் பகுதி
அதாவது 9016
மூன்றாவது உதாரணம் : 96 x 99

முதல் எண் 96. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 96 =4
அடுத்த எண் 99. இது நூறில் இருந்து எவ்வளவு குறைச்சல். 100 - 99 = 1

இனி விடைகளை பெருக்குங்கள். 4 x 1 = 5. ஐந்தை 05 எனக் குறித்துக் கொள்ளுங்கள். இது விடையின் இரண்டாவது பகுதி
இப்போது 96ல் இருந்து ஒன்றை கழியுங்கள் 96 - 1 = 95. அல்லது 99ல் இருந்து நான்கை கழியுங்கள் 99-4 = 95. இரண்டிற்கும் ஒரே விடைதான் 95. இது விடையின் முதல் பகுதி
அதாவது 9505

ARAB CUISINE IN CHENNAI

ARAB CUISINE IN CHENNAI

Think Arabia, and you’re instantly reminded of wind-swept deserts, Bedouins, belly-dancers, hookahs, and most importantly the food: hummus, falafel, shawarma and the like. Arab cuisine has travelled the world and has also touched Chennai's shores. Here are the city's two restaurants that sell Arab food.

Sea Shell at Greams Road is typically not what you’d call an authentic Arab restaurant as it serves Chinese and Indian food as well. Nevertheless, it does rustle up several Arab dishes with panache. The ubiquitous khubuz (flat round bread), hummus kebabs, grilled chicken and shawarma prominently feature on their menu.

Surprisingly, though, other dishes like mutnabel (brinjal paste), fatayer (pastries stuffed with spinach, meat and cheese) or the tabouleh (green salad) don’t feature. Instead, you'll find a variety of rice-based dishes, known as kabsa, cooked with meats of your choice like mutton, chicken or fish.

Besides these, unusually-named fresh fruit juices and cocktails—Rolex, Omani, and London—are also served here. Do note that their service is slow.

Looking for something more up-market? Then, do try Cedars located at Kotturpuram. A warm ambience, a platter of kebabs, yoghurt-based chicken shawarma, khubuz and a variety of dips amongst others make this place much sought-after. Do be warned though, this place is not meant for the budget-conscious.
So how about a taste of Arabia tonight?

http://www.chennaionline.com/cityfeature/FoodCorner/May09/09Arab-Cuisine-in-Chennai.aspx

Friday, May 22, 2009

ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்ட‌ர் அமீர்ஜ‌ஹான்..........

ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்ட‌ர் அமீர்ஜ‌ஹான்..........


ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்ட‌ர் எக்ஸ் எனும் நிக‌ழ்ச்சியில் முதுகுள‌த்தூர் டாக்ட‌ர் ஏ. அமீர்ஜ‌ஹான் ப‌ங்கேற்று நேய‌ர்க‌ளின் பாலிய‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் அளிக்கிறார்.

இந்நிக‌ழ்ச்சி இந்திய‌ நேர‌ப்ப‌டி இன்று ( ச‌னிக்கிழ‌மை ) இர‌வு 10.30 ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பாக‌ இருக்கிற‌து.
( அமீர‌க‌ நேர‌ம் இர‌வு 9 ம‌ணி )

லால்பேட்டை சிங்கார வீதி பநேசா நகரில் வீடு மனை விற்பனைக்கு

லால்பேட்டை சிங்கார வீதி பநேசா நகரில் வீடு மனை விற்பனைக்கு உள்ளது
தொடர்புக்கு

ஹயாத் ரியல் எஸ்டேட்

contact 9944001521/9940722818

சஹாரா ரியல் எஸ்டேட்
contact; 9994977803

Thursday, May 21, 2009

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

“தாடிக்குத் தடை”, “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ். அல்ஹம்துலில்லாஹ்.

“ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?” என்ற நபிவழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக் கிண்டி இருப்பது எடுத்து வைக்கும் அடி எத்தனை இதயங்களை இடித்துரைக்கப் போகிறதோ? என்று எதிர்பார்க்கத் தோணுகிறது.

தகுதியான ஆசிரியர் குழுவைக் கொண்டு தடம் போட்டு வைத்திருக்கும் ‘சமவுரிமை’ புடம் போட்டெடுத்துச் செய்திகளை படம் போட்டுக் காட்டும் என நம்பலாம்.

முதல் இதழே முதன்மையான இதழாக விளங்குகிறது. இது சமுதாயத்துக்குத் தேவையான சமவுரிமைகளைப் பெற்றுத் தந்து வாசகர்களின் இதயங்களிலே நடுபீடத்தில் குடியேற நெஞ்சாற வாழ்த்துகிறோம்.

வானவில் போல அழகாகத் தோன்றி மறையாமல் நல்லவைகளை நிலவுபோலக் குளுமைப்படுத்தி – அல்லவைகளைச் சூரியனைப் போல சுட்டெரித்து ஊடக வானில் என்றென்றும் புகழுடன் நிலைத்திருக்க இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறோம். இதயம் குளிர்ந்து வாழ்த்துகிறோம்.

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்
158 லாயிட்ஸ் சாலை
கோபால‌புர‌ம்
சென்னை 600 086
தொலைபேசி : 044 4210 5352
மின்ன‌ஞ்ச‌ல் : samaurimai@gmal.com

ம‌திப்புரை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்
முதுவைக் கவிஞர்
மவ்லவி அ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பஇ

சிறந்த இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகள்

சிறந்த இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகள்
எழுதியவர் : கார்த்திக் 17 May 2009

வைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங் சிஸ்டமும் பிரவுசர் தொகுப்பும் எத்தனை பாதுகாப்பாய் அமைக்கப்பட்டாலும் வைரஸ்களும் ஸ்பைவேர்களும் நாளுக்கு நாள் பெருகி கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சவாலாய் உள்ளன.

எனவே தான் ஆண்டி வைரஸ்கள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் . சைமாண்டெக், மேக் அபி, இசெட் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்புகளை தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் சில அனைத்து வகை பாதுகாப்பையும் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் தொடக்க கட்டணம் ரூ.4,000 லிருந்து ரூ. 7,000 வரை உள்ளன. இதனால் தான் பலரும் இலவச தொகுப்புகளை நாடுகின்றனர்.


இணையத்தில் பல தொகுப்புகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் இலவசமாக ஆண்டி வைரஸ் தொகுப்பு தருகிறேன் என்று சொல்லி பல தளங்கள் வைரஸ்களையும் கம்ப்யூட்டர் செயல்பாட்டை முடக்கும் புரோகிராம்களையும் அனுப்பி கெடுதல் விளைவிக்கின்றன. இருப்பினும் சில ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முற்றிலும் இலவசமாகவே பாதுகாப்பினைத் தருகின்றன. அவற்றில் சில பற்றிய குறிப்புகள்...

ஆண்டிவைரஸ் 1

1. பெயர்: Avast! 4 Home EditIon

2. நிறுவனம் : ALWIL Software

3. பைல் அளவு: 26309 கேபி

4. கட்டணம் : இலவசம்

5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்

6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகளை வழங்கி வருகிறது. பல நிறுவனங்கள் இதன் தொகுப்புகளை மாடலாகக் கொண்டு இதே போல இலவச புரோகிராம்களை வழங்கி வருகின்றன. 4 ஹோம் எடிசன் என்பது அண்மைக் காலத்திய பதிப்பாகும். இதில் ஒரு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஸ்கேனர், இமெயில் ஸ்கேனர், வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் வளையம் மற்றும் அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடும் ஸ்கேனர் தரப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பு அவ்வப்போது உருவாகி வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தன்னை வளப்படுத்தி எதிர்த்து தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது. இதனுடைய ஸ்கேனிங் செய்திடும் வேகமும் கூடுதலாகவே உள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முதலில் ஓர் ஆண்டிற்கு இலவசமாகப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெகு எளிதாகப் பதிந்து பெறும் வசதி தரப்பட்டுள்ளது.

ஆண்டிவைரஸ் 2

1. பெயர்: Avast! AVG Antivirus 8 Free Edition

2. நிறுவனம் : Grisoft Inc

3. பைல் அளவு: 47924 கே.பி

4. கட்டணம் : இலவசம்

5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்

6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

பல ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு இது. ஒரு சில அலுவலகங்களில் பணம் கட்டி வேறு ஆண்டி வைரஸ் தொகுப்பு வாங்கினாலும் கம்ப்யூட்டரை இயக்குபவர்கள் தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தொகுப்பைப் பயன்படுத்துகையில் ஓரளவிற்கே சிஸ்டம் தரும் மெமரியைப் பயன்படுத்துவதால் பிரச்னை எதுவும் இதன் இயக்கத்தால் ஏற்படுவதில்லை. பைல்களை ஸ்கேன் செய்வதில் இந்த தொகுப்பு காட்டும் வேகம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலவசமாகவே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறந்த அம்சம். அதைப் போல இதன் அப்டேட்டுகளும் என்றைக்கும் இலவசமே.

ஆண்டிவைரஸ் 3

1. பெயர்: Avira Anti Personal Edition

2. நிறுவனம் : Avira GmbH

3. பைல் அளவு: 24462 kb

4. கட்டணம் : இலவசம்

5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்


6.இணையதளமுகவரி: இங்கே கிளிக் செய்யவும்


இந்த தொகுப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். அவாஸ்ட் தொகுப்பு போல பல வகைகளில் இது வைரஸ் தொகுப்பிற்கு எதிரான பாதுகாப்பினை வழங்கி வருகிறது. பயன் படுத்துவோரை வழி நடத்த இந்த தொகுப்பு தரும் டயலாக் பாக்ஸ்கள் குறிப்பிடத் தக்கவையாகும். பைல்களை மிக வேகமாக ஸ்கேன் செய்கிறது. ஆனால் அடிக்கடி வரும் பாப் அப் விண்டோக்கள் சில சமயம் எரிச்சலைத் தருகின்றன.

முழுவதும் என்றும் இலவசமாய் இயங்கும் தொகுப்பு இது. இணையத்தில் இன்னும் பல சிறந்த ஆண்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளன. வரும் காலத்திலும் நிறைய கிடைக்கலாம். ஆனாலும் எச்சரிக்கையுடன் புதிய தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். எனவே தான் சோதிக்கப்பட்டு பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான மூன்று தொகுப்புகள் குறித்த விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது.

ரியாத்தில் தமிழக ஊழியர் மரணம் : உடலை தாயகம் அனுப்ப ரியாத் தமிழ்ச் சங்கம் உதவி

ரியாத்தில் தமிழக ஊழியர் மரணம் : உடலை தாயகம் அனுப்ப ரியாத்தமிழ்ச் சங்கம் உதவி

அறந்தாங்கியைச் சேர்ந்த லூர்துசாமி என்பவர் திடீர் மாரடைப்பால் 40 நாட்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார், அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளது, அவரின் உடல் சுமேசி மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக உள்ளது, அவர் கபீலிடம் இருந்து ஓடிவந்து வெளியில் வேளைபார்த்த காரணத்தால் கபீல் அவருடைய பாஸ்போர்ட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். இக்காமாவும் கலாவதி போன்ற பிரச்னைகளால் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

விபரமறிந்த உறவினர்கள் இந்தியாவில் இருந்து என்னை தொடர்பு கொண்டு உதவும் படி கோரினார்கள், இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு எமர்ஜென்சி பாஸ்போர்ட், மற்றும் தேவையான உதவிகள் பெறப்பட்டு கேரளாவைச் சேர்ந்த சமுதாய ஆர்வலர் திரு. சிகாப் அவர்கள் மாறல் உடலை அனுப்பி வைப்பதற்குண்டான அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது. என் வேண்டுகோளை ஏற்று சிகாப் அவர்கள் முழுமூச்சுடன் மும்முரமாக செயலாற்றிக்கொண்டுள்ளார், இறைவன் நாடினால் இந்த மாத இறுதிக்குள் அவர் உடலை இந்தியா அனுப்பிவிடலாம், ஊரிலும் அவர் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற விபரம் அறியப்பட்டுள்ளது.

வழக்கம் போல் இந்த பாதிக்கப்பட்ட மனிதரின் உடலை அனுப்ப தேவையாகும் செலவுகளுக்கும், குடும்பத்தினருக்கு உதவுவதற்கும் உதவிசெய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு (imthias@imthias.com) தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,
இம்தியாஸ் அஹமது
தலைவர்
ரியாத் தமிழ்ச் சங்கம்.

Tuesday, May 19, 2009

அன்று குழந்தை தொழிலாளி: இன்று சாதனை மாணவி!

அன்று குழந்தை தொழிலாளி: இன்று சாதனை மாணவி!

First Published : 15 May 2009 12:59:52 AM IST
Last Updated : 15 May 2009 02:11:48 AM IST

திருப்பூர், மே 14: சாதனை படைக்க வறுமையும் மொழியும் தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் திருப்பூர் மாணவி புஷ்ரா பானு.

குழந்தை தொழிலாளியாக தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்ட அவர், பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ரஹமத்துல்லா, சாராம்மா தம்பதியின் மகள் புஷ்ரா பானு. இவர் கேரளத்தில் 4-ம் வகுப்பு வரை படித்தார். வறுமை காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் பிழைப்புத் தேடி திருப்பூர் வந்தனர். பின்னர் புஷ்ரா பானு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்தார்.

இதையறிந்த கோவை கிளாஸ் அமைப்பினர் அவரை மீட்டு, தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தனர். பின்னர், ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்து 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியிலேயே படித்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அவர் 994 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 176 மதிப்பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்: தமிழ் - 176, ஆங்கிலம் - 145, கணிதம் - 179, கணினி அறிவியல் - 169, இயற்பியல் - 164, வேதியியல் - 161. மொத்தம் 1200க்கு 994.

நான் பொறியாளராக விரும்புகிறேன். ஆனால், குடும்ப வறுமை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது. யாரேனும் உதவி செய்தால் படிப்பைத் தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார்.

திருப்பூர் கல்லூரி சாலை ராம்ஜி நகரில் வசிக்கும் அவரது வீட்டு அலைபேசி எண் 9943016993.

Pen drive இன் ஒரு பகுதிக்கு Password கொடுப்பது எப்படி ?

Pen drive இன் ஒரு பகுதிக்கு Password கொடுப்பது எப்படி ?
Friday, May 15, 2009
Posted by TamilhackX
4 Comments
கணணிப் பயன்பாட்டாளர் களிடையே Pen drive வைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. என்ற நிலை உருவாக்கி விட்டது ஆனால் அந்த Pen drive நம் கையில் இருக்கும் மட்டும் தான் அதில் இருக்கும் தகவலுக்குப் பாதுகாப்பு நாம் அதை எங்காவது மறந்து போய் விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுக்கும் எவரும் நமது Pen drive வில் இருக்கும் தகவலை பார்கவோ அல்லது அதை Copy பண்ணி எடுக்கவோ முடியும்.
இதற்காக தற்போது imation போன்ற சில Pen drive தயாரிக்கும் நிறுவனங்கள் தாம் தயாரிக்கும் Pen drive க்கு Password போட்டு பாதுகாக்கக் கூடியவாறு அதனுடன் சிறிய மென்பொருளையும் இணைத்து தருகிறார்கள் ஆனால் அந்த மென்பொருட்களை இந்த வகை Pen drive களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது.



அப்ப மற்றவர்கள் என்ன பண்ண............... ? ஆமாம் அவர்களுக்காக உள்ள மென்பொருள் தான் Rohos Mini Drive இதன் முலம் Pen drive வின் ஒரு பகுதியை தனியாக Patition பண்ணி அந்த பகுதிக்கு Password கொடுக்க முடியும்.

செயற்படுத்தும் முறை
முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.
அந்த மென்பொருளை உங்கள் கணணியில் install பண்ணவும்.
Pen
drive கணணியில் இணைத்து விட்டு install பண்ணிய அந்த மென்பொருளை இயக்கவும்.
அதில் Setup USB key என்பதை Click செய்தவுடன் உங்கள் Pen drive பற்றிய தகவலை காட்டும் அதன் கீழ் Password கேட்பார்கள் .
அந்த தகவல் சரியாயில் அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் Password டைக் கொடுத்துவிட்டு Create disk ஐ கிளிக் செய்யவும். ( அந்த தகவலில் ஏதேனும் பிழையிருப்பின் Change என்பதை கிளிக் செய்து தகவலை மாற்றலாம் )

அது தானகவே உங்கள் Pen drive இன் ஒரு பகுதிக்கு Password போட்டு விடும் பின் உங்கள் pen drive ஐ கணணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் இணைக்கவும்.



பின் கணணியில் இணைத்தவுடன் Pen drive வில் இருக்கும் Rohos mini.exe என்பதை Double click செய்து உங்கள் password கொடுத்து விட்டு My computer ஐ open பண்ணிப் பார்த்தால் புது Drive ஒன்று இருக்கும். அந்த Drive தான் நீங்கள் password கொடுத்திருக்கும் drive.






அதனுள் நீங்கள் பாதுகாக்க வேண்டிய File போட்டு வைத்துவிட வேண்டியது தான் மீண்டும் அந்த

Password போட்ட drive ஐ மூடுவதற்கு படத்தில் உள்ளது போல் உங்கள் taskbar இல் இருக்கும் அந்த Icon ஐ Right click செய்து Disconnect என்பதை Click செய்யவும்.



இந்த Password போட்ட Pen drive வைப் பயன்படுத்துவதிற்கு இந்தமென்பொருள் கணணியில் install பண்ணி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது அதன் சிறப்பாகும்.

மேலதிக விபரங்களுக்கு : http://www.rohos.com/products/rohos-mini-drive/

மென்பொருளைத் தரவிறக்க : http://www.rohos.com/rohos_mini.exe

Read more: http://tamilhackx.blogspot.com/2009/05/pen-drive-password.html#ixzz0FmQYFP8G&B

எங்கு படிக்கலாம் ?- முழுத்தகவல்

எங்கு படிக்கலாம் ?- முழுத்தகவல்- tamil mail (must see guide our society)






Assalamu alaikum,


see all the links useful for students and parents


தொலை தூர கல்வி, உயர்கல்வி மற்றும் பல....

இவைகளை download செய்து பள்ளிவாசல்களின் ஒட்டிவைக்கு மாரு கேட்டுக்கொள்கின்றேன்

Download this and past in all our masjid, also, if anybody ask give that information
http://tntjsw.blogspot.com/2009/03/blog-post_03.html

எந்த கல்லூரி நல்ல கல்லூரி? ( பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல்)

Ranking of engineering colleges
See the ranking to know which colleges is best ,
http://www.annauniv.edu/coe/news.html

எவ்வளவு cut-off mark எடுத்தால் எந்தகல்லூரியில் சீட் கிடைக்கும்

கடந்த வருட பொறியியல் சேர்க்கை விபரம்

Last year engg. Admission information
See this to know,
http://collinfo.annauniv.edu:9080/tnea2008/cutoff/index.jsp


கல்லூரிவாரியாக



http://www.collegesintamilnadu.com/Counseling/TNEA-2008-Engineering-Counselling-Cutoff..asp




உங்கள் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை பற்றிய தகவல் அறிய
Information about colleges in ur districts,
http://www.collegesintamilnadu.com/

Also see
கல்வி வழிப்புணர்வு பிரச்சார விடியோ

Educational awareness video
http://tntjsw.blogspot.com/2007/03/blog-post.html

கல்வி சம்மதமான சில முக்கிய இணையதள link-கள்

Some important educational links
Go to this link http://tntjsw.blogspot.com/
see right side scroll down and click the links

தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் விபரம்

medical colleges in tamil nadu
http://www.collegesintamilnadu.com/Medical/Para-Medical-Colleges.asp

தமிழ் நாட்டில் உள்ள பாலிடெக்னிக் (டிப்ளோமா) கல்லூரிகளின் விபரம்

polytechnic in tamil nadu
http://www.collegesintamilnadu.com/Polytechnic/Polytechnic-Colleges..asp

அடக்கம் அமரருள் உய்க்கும்

அடக்கம் அமரருள் உய்க்கும்
எஸ்.எம். ரபீஉத்தீன் பாக்கவி

மனித உடலுக்குப் பல நோய்கள் இருப்பதுபோல அவனது உள்ளத்திற்கும் பல நோய்கள் உள்ளன. அந்த நோய்களில் ஒன்றுதான் பெருமை.

எங்கும் நீக்கமற நிறைந்தவன் என்று இறைவனைப் பற்றிச் சொல்லப்படுகிறது. இன்று இறைவனுக்கு அடுத்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று உண்டென்றால் அது பெருமைதான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். (திறந்து கொண்டும் சொல்லலாம்;தப்பில்லை)

வாழ்க்கையின் வசதி நிரம்பப் பெற்றவர்கள், அழகில் சிறந்தோர், ஆற்றல் மிக்கோர், பெரிய உத்தியோகத்தில் இருந்து கொண்டு கைநிறைய சம்பாதிப்போர் பெருமை யடிக்கிறார்கள் என்றால் ஓரளவாவது அதை சீரணிக்க முடிகிறது. ஆனால் ஏழைகளும், அழகற்றவர்களும் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே அவஸ்தைப்படுவோரும் கூட பெருமையடிப்பதைத்தான் தாங்க முடியவில்லை.

பெருமை நம்மை உயர்த்தும் என்று பலரும் தப்புக்கணக்கு போடுகிறார்கள். ஆனால் இறைநியதி என்று ஒன்று இருக்கிறதே, இந்தப் புவியையும் அதிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் இந்த உலகின் அனைத்து இயக்கங் களையும் இயக்கிக் கொண்டிருக்கிற அற்புத ஆற்றல் அந்த இறைசக்தி, அந்த ஆற்றல் இந்த பாவப்பட்ட ஆத்மாக்களை ஒருபோதும் உயர்த்தவே உயர்த்தாது.

பணிவு கொள்வோரை இறைவன் உயர்த்துவான். பெருமை யடிப்போரை வீழ்த்துவான். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால் மனித சமுதாயத்தின் பெரும் பான்மை பிரச்சினைகளுக்கு இந்தப் பெருமைதான் காரணம் என்பதை உணர முடியும். மனிதனுக்கு ஏற்படுகிற கோபம் பெரும்பாலும் பெருமையால்தான் உண்டாகிறது. குரோதம் இதைக் கொண்டுதான் உண்டாகிறது. பொறாமை, வெறுப்பு போன்றவை இதனால்தான் ஏற்படுகிறது. பிறரைப் பற்றி இனிக்க இனிக்கப் புறம் பேசத்தூண்டுவதும் இந்தப் பாழாய்ப் போன பெருமைதான். பணிவுள்ள மக்களிடம் இது போன்ற பாவங்கள் நிகழ்வது ஆபூர்வம்.

முதல் மனிதராகிய நம் தந்தை ஆதம் அவர்களைப் படைத்தபோது இறை சன்னிதானத்தில் நடைபெற்ற ஒரு காட்சி, அந்த முதல் மனிதருக்கு வானவர்களைக் கொண்டு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்பது இறைவிருப்பம். எனவே, அனைத்து வானவர்களையும் ஒன்று திரட்டி அவருக்கு சிரம் தாழ்த்தும்படி இறைவன் கட்டளை யிடுகிறான். எல்லா வானவர்களும் சிரம் பணிகிறார்கள். அதிலே ஒரு தலை மட்டும் வணங்கா முடியாக நிமிர்ந்து நிற்கிறது. அது எவன் தலை என்று பார்த்தால் சாத்தானுடைய தலை. ஏனென்று கேட்டால் அவரைவிட நான் சிறந்தவன் என்னை நீ நெருப்பினால் படைத்தாய் அவரையோ மண்ணால் படைத்திருக்கிறாய் மண்ணைக் காட்டிலும் எல்லா வகையிலும் நெருப்பே சிறந்தது. எனவே அவரைக் காட்டிலும் நானே உயர்ந்தவன். சிறப்பு மிக்க நான் தாழ்வான ஜீவனுக்கு எப்படி சிரம் பணிய முடியும்? என்று இறைவனையே கேள்வி கேட்டுத் தாழ்ந்து போனான்.

பெருமையின் தீங்குகளில் இதை முதன்மையானது எனலாம். இறைவனுக்கே மாறு செய்யத் தூண்டுகிற மனோபாவம். இன்று பள்ளிவாசல்களில் பாங்கோசை கம்பீரமாய் ஒலிக்கிறபோது அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் பாராமுகமாய்ப் பலர் செல்வதற்கு அடிப்படைக் காரணமே இந்தப் பெருமைதான். பெருமை அதன் விளைவான அலட்சியம். மனிதன் எப்பொழுதும் இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டுமேயன்றி அறிவுக்கு அடிமையாக இருக்கக்கூடாது. இறை ஆற்றலுக்கு முன்பு இந்த அறிவெல்லாம் ….ச்சும்மா ஜுஜுபி. உன்னையும் படைத்து அந்த முதல் மனிதர் ஆதமையும் படைத்து உன் அறிவையும் படைத்து இறைக் கட்டளை அது என்பதை மறந்தல்லவா அவன் அறிவுக்கு முக்கியத்துவம் தந்தான். அறிவை மட்டும் மனிதன் நம்புகிற போது பல சமயங்களில் அது இப்படித்தான் அவனைக் கவிழ்த்துவிடும்.

இறைக் கட்டளையில் மனம்தான் முன்னிற்க வேண்டுமேயன்றி அறிவு முன்னிற்கக்கூடாது. இது சாத்தானுக்கும் தெரியும்தான். பெருமை அவன் கண்ணை மறைத்து விட்டது. அவரைவிட நான் சிறந்தவன் என்கிற சாத்தானின் வாதம் தர்க்க ரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால் இன்று நம் அனைவரின் பார்வையிலும் அவன் எவ்வளவு சிறுத்துப் போனான்? இதுதான் பெருமை. அது எத்தனைதான் ஆடம்பர வேடம் அணிந்துகொண்டு வந்தாலும் ஆர்ப்பாட்டமாய் வந்தாலும் பார்போர் கண்ணுக்கு அது சிறுமைதான்.

ஓர் எளிமையான உதாரணம் பார்க்கலாமா?

உயர்ந்த மலைமீது ஒருவர் நிற்பதாக வைத்துக் கொள்வோம். அவர் அங்கிருந்து கீழே கொஞ்சம் குனிந்து பார்த்தால் கீழே நடமாடுகிற மனிதர்களெல்லாம் பொடிப் பொடி எறும்புகள்போல் அவரின் கண்களுக்குத் தெரிவார்கள். வேடிக்கை என்னவென்றால் கீழிருப்போர் கொஞ்சம் நிமிர்ந்து இவரைப் பார்த்தால் அவர்கள் கண்களுக்கும் இவர் எறும்பு போல்தான் தெரிவார். இதுதான் எதார்த்தம். பெருமையடிப் பவர்கள் அவர்களுக்கு மட்டுமே பெருமையானவர்கள். மற்றவர் பார்வைக்கு அவர்கள் அற்பர்களாகத்தான் தெரிவார்கள்.

பெருமையைவிட்டு முற்றிலும் நீங்கியிருப்பது ஒன்று. பெருமை இல்லாததுபோல் பாவனை செய்வது பிறிதொன்று. இதில் நம்மில் பலர் வேடதாரிகளாகத்தான் இருக்கிறோமே தவிர, முற்றிலும் பெருமை இல்லாதிருப்போர் வெகு சொற்பமே. சொற்கள் ஒலிப்பதென்னவோ அடக்கமாகத்தான். ஆனால் இதயம் முழுக்க அகங்காரம்தான். ஆனாலும் இந்த வேஷம் அதிக நாட்களுக்குத் தாங்காது. சீக்கிரத்திலேயே சாயம் வெளுத்துப் போகும்.

புதிதாய்த் திறக்கப்பட்ட அந்த அலுவலகத்தின் சீட்டில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தார் அந்த அதிகாரி. அந்த நேரம் பார்த்து அவரைப் பார்க்க யாரோ ஒருவர் வர, மணியே அடிக்காத தொலைபேசி ரிசீவரைக் காதில் வைத்தபடி பந்தாவாய் பாவ்லா பண்ணினார் பாவி மனுஷன். ஒரு வழியாக ரிசீவரைக் கீழே வைத்துவிட்டு, வந்தவரைப் பார்த்து வாங்க, உங்களுக்கு என்ன வேண்டும்? என்றார். வந்தவரோ சாவகாசமாய் ஒண்ணும் வேண்டாம் சார். உங்க தொலைபேசிக்கு இணைப்புக் கொடுப்பதற்காக தொலைபேசி அலுவலகத்திலிருந்து நான் வருகிறேன் என்றார். அந்த அதிகாரி முகத்தில் எத்தனை கிலோ அசடு வழிந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். வெற்று பந்தாப் பேர்வழிகளின் பாடு பெரும்பாலும் இப்படித்தான்.

நான் ரொம்ப அடக்கமானவன். இறைவன் என்னைப் பெருமையை விட்டுக் காப்பாற்றினான் என்பதையே பெருமையோடு சொல்பவர்களும் நம்மில் பலருண்டு. நான் அடக்கமானவன் என்று சொல்லிக் கொள்வது பணிவல்ல; அடக்கம் இதயத்தில் அழுந்தப் பதிந்திருப்பதே உண்மையான பணிவு. பெருமை கொள்வோர் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் இறுதியில் அவர்களுக்கு எல்லா வகையிலும் அவமானமே மிஞ்சும்.

பெஞ்சமின் பிராங்க்ளின் அழகாய்ச் சொன்னார். ”தற்பெருமை பூக்கும் ஆனால் காய்க்காது” மற்றொரு அறிஞர் சொன்னார் தற்பெருமை ஒருவனை ஊதச்செய்யும். ஆனால் அவனை உயர்த்தாது.

பெருமையை விட்டு நீங்கி ஆன்மிக ரீதியில் நம்மை உயர்த்திக்கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அழகானதொரு வழிமுறை சொல்லித் தருகிறார்கள். உலகியல் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு கீழுள்ளவர்களைப் பாருங்கள். வணக்க வழிபாடுகள் விஷயத்தில் உங்களுக்கு மேலுள்ளவர்களைப் பாருங்கள். இப்படிப் பார்க்கிறபோது நமக்குக் கீழுள்ளவர்களைப் பார்த்து அவர் நிலைக்கு என் நிலை எவ்வளவோ தேவலை என்கிற திருப்தியோடு நாம் வாழ முடியும். வணக்க வழிபாடுகள் விஷயத்தில் நமக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கிறபோது அவர் அளவுக்கு வணங்க வேண்டும் எனும் ஆசையில் நமது வணக்க நிலையை மேலும் நாம் உயர்த்திக் கொள்ள முடியும்.

ஆனால் நமது நிலையோ இதற்கு நேர்மாற்றம். உலகம் சார்ந்த விஷயங்களில் நம்மைவிட மேலானவர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி பொறாமையோடும் அதிருப்தி யோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் வணக்க விஷயங்களில் நமக்குக் கீழுள்ளவர்களைப் பார்த்து மகா திருப்தி. திருப்தியாவது பரவாயில்லை. பெருமை வேறு. வணக்க வழிபாடுகள் விஷயத்தில் பெருமை கொள்வது மிகவும் மோசமானது.

ஆதம் பெறும் மக்களெல்லோரிலும்
நம்மையன்பு கொண்டே
வேத நபி ரசூலின்
உம்மத்தாக்கும்
வெகு நன்றிக்குப்
பாதங்கள் மேலும்
சிரம் கீழுமாய்ப் பத்து நூறாயிரமாண்டோதி
தவஞ் செய்தாலும்
போதாது.

என்று தக்கலைப் பீரப்பா வருந்திப் பாடுவதுபோல எத்தனை வணங்கினாலும் வழங்கினாலும் அது இறைவன் நமக்களித் திருக்கும் அருட்கொடைகளுக்கு முன்பு சொற்பமே என்கிற எண்ணம் வேண்டும்.

தன்மதிப்பு போற்றப்பட வேண்டியதுதான். அது ஒன்றும் பிழையல்ல. ஆனால் நம்மைப் போன்றே பிறரையும் மதிக்க வேண்டும். எனக்கு சில சிறப்புகள் இருப்பதுபோல அவருக்கும் சில சிறப்புகளை இறைவன் தந்திருக்கலாம். என்கிற எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். நாம் போட்டிருக்கிற செருப்பு அறுந்து போனால் அதை நம்மால் சரி செய்ய முடிகிறதா? அதைக் கையில் தூக்கிக் கொண்டு செருப்பு தைப்பவர் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கொண்டு செல்கிறோமே. இந்த இடத்தில் நம்மைக் காட்டிலும் அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி உயர்ந்து விடவில்லையா?

என்னுடைய ஆற்றல்களையும் அரும் சாதனைகளையும் பற்றிப் பொதுமக்கள் கொண்டுள்ள மதிப்பீட்டுக்கும் உண்மை நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு பயங்கரமானது என்கிறார் ஐன்ஸடீன். உலகம் போற்றும் அறிஞர் பெருமக்கள் அனைவருமே இந்த நிலையை உணர்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள்.

காந்தி என்றால் மகாத்மா என்கிற அடைமொழியும் கூடவே ஒட்டிக்கொண்டு நம் கவனத்திற்கு வருகிறது. ஆனால் அவர் வாக்குமூலத்தைக் கேளுங்கள். ’’நான் மகாத்மா என்றோ மற்றவர்கள் அல்ப ஆத்மா என்றோ நான் ஒருபோதும் கனவில் கூட எண்ணியதில்லை’’இந்த தன்னடக்கம்தான் அவரை மகாத்மாவாக்கியது. இந்த மேதை களெல்லாம் தங்களைப் பற்றி இப்படி பணிவான அபிப்ராயம் கொண்டிருந்ததால்தான் இன்று உலக மக்களால் மேதைகளாய் மதிக்கப்படுகிறார்கள். இயற்கை விதி இப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

நமது நபிகளார் (ஸல்) அவர்கள் சொல்வதைப் பாருங்கள்:

எவனொருவன் தன்னைப்பற்றித் தானே உயர் மதிப்பீட்டுடன் வாழ்கிறானோ அவனை இறைவன் தாழ்த்தி விடுவான். மக்களெல்லோரும் அவனைத் தாழ்வாகவே பார்ப்பார்கள். இதற்கு மாற்றமாக எவரொருவர் தன்னைப் பற்றித் தாழ்வான அடக்கமான மதிப்பீடு கொண்டிருக்கிறாரோ அவரை இறைவன் உயர்த்துவான். மக்களின் பார்வையில் அவர்கள் மகத்தான மனிதர்களாகவே பார்க்கப்படுவார்கள்.

தன்னடக்கம் தானாக வர வேண்டும். அதைக் கற்றுத் தரவோ போதனைகள் மூலம் உருவாக்கவோ முடியாது. தானாக வருவதற்கு நம்மைப் பற்றிய உண்மையான மதிப்பீடு வேண்டும். அளவு கடந்த சுய மதிப்பீடு ஆபத்தானது. அதுதான் தற்பெருமையாய் தலை தூக்கி நிற்கிறது. நம்மைப் பெருமை கொள்ளச் செய்கிற எந்தத் தகுதியாக இருந்தாலும் அது இடையில் வந்தது என்பதை உணர வேண்டும். நாம் பிறக்கிற போதே அந்தத் தகுதிகளோடு பிறக்கவில்லை. எத்தனைத் தகுதிகள் இருப்பினும் இது என் இரட்சகனின் அருட்கொடை என்றெண்ண வேண்டும்.

தன்னம்பிக்கை வேறு. தற்பெருமை வேறு. இரண்டுக்கும் நூலிழை வித்தியாசம்தான்.
தன்னம்பிக்கை போற்றுதலுக்குரியது. தற்பெருமை இகழ்ச்சிக்குரியது.
தன்னால் முடியும் என்றெண்ணுவது தன்னம்பிக்கை. தன்னால் மட்டுமே முடியும் என்றெண்ணுவது தற்பெருமை.

தன்னம்பிக்கை கொண்டவரை எப்பொழுதும் உற்சாகம் கொண்டவராகக் காணலாம். அந்த உற்சாகம் ரசனைக் குரியதாகும். தற்பெருமை ரசிக்கத்தக்கதல்ல. வெறுப்புக்குரியது.

தன்னம்பிக்கையோடு வாழ்வோம். தற்பெருமை தவிர்ப்போம்.

மின்மடலுக்கு : smrbaqavi@gmail.com


ந‌ன்றி : ச‌ம‌நிலைச் ச‌முதாய‌ம்
ஏப்ர‌ல் 2009

துபாயில் எமிரேட்ஸ் இந்தியா பிரடெர்னிடி பாரம் நடத்திய வெளிநாடு வாழ் இந்தியர்க்கான கருத்தரங்கு





துபாயில் எமிரேட்ஸ் இந்தியா பிரடெர்னிடி பாரம் நடத்திய வெளிநாடு வாழ் இந்தியர்க்கான கருத்தரங்கில் ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத்

நாள் : 15 மே 2009
லேண்ட்மார்க் ஹோட்டல்
தேரா,துபாய்

துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )

துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )

துபாயில் வாரந்தோறும் புதன்கிழமை அஸ்கான் டி பிளாக்கில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

20.05.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்கள்

கல்வி ஒன்றே வாழ்வின் ஒளிவிளக்கு
எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை செய்துள்ளது.

கோட்டைப் பள்ளி

21.05.2009 வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் பிரதி வார ஸஹீஹுல் புஹாரி அல் ஹதீஸ் விளக்கவுரை மஜ்லிஸ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்களும், கீழக்கரை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஆகியவை செய்துள்ளன.

துபாயில் நடைபெறும் சமுதாய நிகழ்வுகளின் தொகுப்புகளை www.tamilislamicaudio.com எனும் இணையத்தளத்தில் காணலாம்.

குறிப்பு : ரமலான் மாத உம்ரா செய்ய விரும்புவோர் 050 467 6618 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, May 16, 2009

பள்ளிவாசல் பணியாளர் சங்கம்

பள்ளிவாசல் பணியாளர் சங்கம்

சட்ட ஆலோசகர் சந்திர குமாரிடம் நேரடி உரையாடல்!

பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்தின் நோக்கமென்ன? கோரிக்கை என்ன?

தமிழகம் முழுக்கவுள்ள ஏறத்தாழ 7,500 பள்ளிவாசல்களில் பணிசெய்யும் இமாம்கள், முஅதீன்கள், மதரஸாக்களில் பணி செய்யும் ஒஸ்தாது, பள்ளி கணக்கர், சந்தா வசூலர், மையத்தை குளிப்பாட்டுபவர், கபர்க்குழி வெட்டுபவர் என தமிழகம் தழுவி ஏறத்தாழ 30,000 பேர் பணி செய்கின்றனர். இவர்களுக்கு அரசு சலுகை கிடைப்பது என்பது அதிகாரி களின் மனோநிலையைப் பொறுத்து அமைகிறது. ஆனால் உத்தரவாதமில்லை. மற்ற பணியாளர்களைப் போல் இவர்கள் போராட்டம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத நிலை இவர்கள் இறைப்பணியாளர்களாக இருப்பதால்

இவர்கள் ஏதாவது ஓர் அமைப்பு சார்ந்து செயல்பட்டால் தான் குறவர், கோயில்பூசாரி, ஓவியர், இதரப் பணியாளர்கள் தங்களுக்கான நலவாரியம் பெற்றது போல் பெற முடியும். இதனைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே பள்ளி வாசல் பணியாளர் சங்கம். இது கடந்த ஏழு வருடமாக இயங்கி வருகிறது இச்சங்கத்தின் தலைவராக சென்ற ஓரிரு நாட்களுக்கு முன்பு நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தஞ்சை மேட்டுப் பள்ளிவாசல் இமாம் ஏ.எம்.எஸ்.அஹமது லியாகத்தலி நூரி அவர்கள் இருக்கின்றார்கள்.

வலது சாரி தளத்தைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ.உலகநாதன் சட்டசபையில் இவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டுமெனப் பேசினார். அவரது பேச்சை செவிமடுத்த அரசு முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிவாசல் பணியாளர்களைக் கணக் கெடுக்கும்படி வக்ஃபு வாரியத்தை பணித்தது. வக்ஃபு வாரியத்தைச் சேர்ந்தவர்கள் கணக்கெடுக்கச் செல்லும்போது பள்ளி நிர்வாகிகள் பயந்து கொண்டு உண்மையான கணக்கைக் கூறாது மறைத்து விட்டனர். இதனால் கணக்கெடுப்பு பாதியிலேயே நின்று விட்டது. இதுபற்றி விரிவாக எழுதி சமீபத்தில் தஞ்சைப் பகுதிக்கு வருகை தந்திருந்த உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வசம் மனுக்கொடுத்துள்ளோம். அதனில்,கணக்கெடுப்பை அரசு தான் செய்ய வேண்டும். அது எளிமையானதும் கூட ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஹெட்மேன் (V.A.O)மூலமாகவும் நகரப்பகுதிகளில் கார்ப்பரேஷன் அலுவலர்கள் மூலமாகவும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். என்று மனுவில் கூறியிருக்கிறோம்.

ஏழு வருடமாக பள்ளிவாசல் பணியாளர் சங்கத்துக்கு பெயர் பதிவைத் தமிழக அரசு மறுப்பதாகக் கூறப்படுகிறதே?

சங்கப் பதிவு சுணக்கத்திற்குக் காரணம், அவர்கள் கேட்கும் பதிவு தொழிலாளர் நலச் சட்டத்துக்குள் வருமா? என்ற சந்தேகம் தான். எவ்வளவு நேரம் பணி செய்கின்றார்கள். எத்தனை பேர் பணி செய்கின்றார்கள் என்று எப்படி நாங்கள் மசூதிக்குள் சென்று செக்கப் செய்வது என்ற கேள்விகளை அரசு அதிகாரிகள் முன் வைத்தனர். பள்ளிவாசல்களில் 8மணி நேரம் வேலை போன்ற கணக்கெல்லாம் கிடையாது. ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை பேர் பணி, என்ன பணி என்பதற்கு ஆதாரமாக பள்ளி நிர்வாகம் தனது லெட்டர் ஹெட்டில் எழுதிக் கொடுத்து விடும். அதை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளோம். ஆகவே தர மறுக்கின்றார்கள் என்பதெல்லாம் சரியல்ல.

ஏகப்பட்ட வாரியங்களை அமைத்திருக்கும் அரசு முஸ்லிம் களுக்கு ஒரு வாரியம் கொடுப்பதில் மட்டும் தடுமாற்றம் அடைவது ஏன்?

தடுமாற்றம் நமக்குள்தான். இந்த வாரியத்தை வாங்கலாமா வாங்கக் கூடாதா? மதப்படி சரியா? சரியில்லையா? என்ற ஊசலாட்டம் பலரிடம் நிகழ்கிறது. இதன் காரணமாகச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மசூதிகளுக்குச் சென்று தெளிவுபடுத்தி வருகிறோம். ஒரு பள்ளியில் 20 வருடம் வேலை பார்த்ததாகச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் தான் உலமா, முஅதீன் ஓய்வூதியம் 750/- பெறமுடிகிறது. ஒரே பள்ளியில் ஒரு இமாமோ, முஅதினோ 20 வருடம் பணி செய்வது என்பது இயலாது காரியம். அதனால் ஒரு இமாம் எந்தெந்த பள்ளியில் எத்தனை வருடம் பணி செய்திருக்கிறார் என்று சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் அது மொத்தமாக 20 வருடம் இருக்கும் பட்சத்தில் ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. இந்த ஓய்வூதியம் விண்ணப்பிப்பதற்கான இலவசப் படிவத்தை 100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அதனை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம்.

தமிழக அரசு இப்போதைய சூழ்நிலையில் வாரியம் அமைத்தால், அது வலிமையானதாக இருக்குமா?

வாரியங்களுடைய வருமானத்தை பெருக்கும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 வாரியங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் மட்டுமே 219 கோடி நிதியுள்ளது. இந்த வாரியத்தில் மட்டும் இவ்வளவு நிதி சேர்ந்துள்ளதற்குக் காரணம் ஒவ்வொரு கட்டிடமும் கட்ட பிளான் அப்ரூவல் கொடுக்கும் போது கட்டிடத் தொழிலாளர் வாரியத்துக்காக 1003/- (ஆயிரத்து மூன்று ரூபாய்) நிதி பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து எடுத்து மற்ற வாரியங்களுடைய அலுவலகச் செலவை மேற்கொள்ளலாம் எனப் பேசப்பட்டுள்ளது. இதற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் எங்களது நிதியை மற்ற வாரியங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாரியங்களுடைய அலுவலகச் செலவுக்கே திண்டாடும் போது பள்ளிவாசல் பணியாளர்களுக்கு வாரியம் அமைக்கப் பட்டால் மட்டும் என்ன நன்மைகள் கிடைக்கும்?

முதலில் வாரியம் அமைக்கப்பட வேண்டும். வாரியம் அமைப்பதற்கு முன்னதாக நாம் என்ன கோரிக்கை வைக்கிறோம் என்பதைத் தெளிவாகப் பிரேம் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு தனித்தனியாகச் சென்று குரல் கொடுக்காமல் அனைவரும் ஒட்டு மொத்தமாகச் சென்று கேட்டுப் பெற வேண்டும்.இதற்கு அமைப்பு ரீதியாகச் செயல் படவேண்டும். வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால் பலரிடமும் சிக்கி வீணாகும் வக்ஃபு சொத்துக்களை வாரியத்துக்குக் கொடுங்கள் எனக்கேட்டு வாங்கலாம். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாரியத்தை செயல்படுத்தலாம். இன்னும் ஒன்றாக அமர்ந்து பேசி செயல்பட நிரம்ப வாய்ப்புகள் உள்ளன.

வாரியம் அமைக்கப்பட்டால் பள்ளிவாசல் பணியாளர்கள் என்னென்ன நன்மைகளைப்
பெறமுடியும்?

வாரியத்தில் பதிவு செய்து ஐந்து வருடம் ஆகியிருக்க வேண்டும். அவர்களுக்கு 400/- ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வூதியம் பெற 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். வாரிய உறுப்பினர்கள் விபத்தில் இறந்தால் ஒரு லட்சம் ரூபாயும், இயற்கை மரணத்துக்கு 15,000 + 2,000 மொத்தம் 17,000மும் 10 ஆவதுக்கு மேல் படிக்கும் வாரிய உறுப்பினர்களுடைய குழந்தைகள் இருவருக்கு 6000 த்திலிருந்து 10,000/-ம் வரைக்கும் கிடைக்கும். இரண்டு பெண் குழந்தைகளுடைய திருமணத்துக்கு 2,000/- வீதம் கிடைக்கும். பிரசவத்துக்கு 6,000/-ம் கிடைக்கும். வாரிய உறுப்பினர் பதிவை 2 வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

இந்த சங்கத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? சங்கத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபலப்படுத்து வதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

30 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600 உறுப்பினர்கள் இச்சங்கத்தில் உள்ளனர். சங்க வருடச் சந்தா 120/- ரூபாய். சங்கத்திற்கு அலுவலகம் இல்லை. தற்போதைக்கு தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்துக்கு கீழ் தளத்தில் இயங்கி வருகிறது. விரைவில் தனி அலுவலகம் ஏற்பாடு செய்ய உள்ளார்கள். மாவட்டந்தோறும் சென்று, பள்ளிவாசல் இமாம், முஅதீன், மற்றுமுள்ளோரைச் சந்தித்து பேசி வருகிறார்கள். – விரைவில் தனி அலுவலகத்தில் இயங்கும்.

(குறிப்பு) : ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் துணைத்தலைவராகப் பணி செய்பவர் திரு.வழக்கறிஞர் சந்திரகுமார் அவர்கள். இவர் பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்துக்கு சட்ட ஆலோசகராகச் சேவையாற்றுகிறார்.)

பள்ளிவாசல் பணியாளர் சங்கப் பொதுச் செயலாளரோடு நேரடி உரையாடல்!

தங்களது சங்கத்தின் செயல்பாடுகள்; இது வரை என்ன விதமான பணிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள்?

பிலால் சங்கம் என்று முதலில் ஆரம்பித்தோம். எங்களது செயல்பாடுகளைப்
பார்த்து இமாம்கள் எங்களோடு இணைய ஆரம்பித்தார்கள். பிலால் என்று மட்டும் இருந்தால் சரியாக இருக்காது. பள்ளிவாசலில் பணிசெய்யக்கூடிய அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பள்ளிவாசல் பணியாளர் சங்கம் எனப் பெயர் மாற்றிக் கொண்டுள்ளோம். ஜெயலலிதா அம்மா அவர்களது ஆட்சி காலத்தில் 6 கோரிக்கைகளை முன்வைத்தோம். உலமா ஓய்வூதியம் 500 ஆக உள்ளதை 1,000/- ம் ஆக உயர்த்திக் கொடுக்க வேண்டும். உலமாக்கள் இறந்த பிறகு ஓய்வூதியம் நிறுத்தப்படுகிறது. இறந்த பிறகு உலமா மனைவிக்கு வழங்கப்படவேண்டும். உலமா பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, உலமா பெண் பிள்ளைகளுக்கு திருமண உதவித் தொகை, இமாமாகப் பணி செய்யும் உலமாக்களுக்கு வக்ஃபு வாரிய நிலங்களை கையகப்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். சங்கத்துக்கு பதிவு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம் இக்கோரிக்கைகளை ஓய்வூதியம் 1,000ம் ஆக உயர்த்த வேண்டும் என்பதை மட்டும் 750/- ரூபாய் ஆக உயர்த்திக் கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
உலமாக்கள் மத்தியில் உங்களுக்கு எப்படி ஆதரவுள்ளது?

உலமா ஒருவர் தான் இச்சங்கத்துக்கு இப்போது புதிய தலைவர் சமீபத்தில் உலமா வாரியம் கேட்டு மாநாடு போட்டார்கள். பலரும் தீர்மானம் போட்டுக் கொண்டிருக் கிறார்கள். நாங்கள் அவர்களிடம் உலமா வாரியம் என்று கேட்காதீர்கள் பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கம் என்று கேளுங்கள், ஏழு வருடமாக முயற்சிக்கிறோம் எங்களது கோரிக்கைகள் செக்ரட்டிரியேட்டில் உள்ளன. வீணாக்கி விடாதீர்கள் என தொலைபேசியில் கூறினோம்.ஒரு சிலர் ஒத்துக் கொண்டாலும் ஒரிருவர் ஒத்துக்கொள்ளவில்லை. உலமா சபைத் தலைமையை அணுகினோம். உங்களது பாதை எங்களுக்கு ஒத்துவராது உங்களுக்குப் பின்னால் நாங்கள் வரமாட்டோம் என்றார்கள்.

இதற்குக் காரணம் என்ன?

எங்களைக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதுவது தான். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மூலமாகவே ப.ப. சங்கப்பிரச்சனைகளை அணுகி வருகிறோம் இந்த மாதிரி பொது அமைப்போடு சேர்ந்து செயல்பட்டு தான் பெற முடியும். முஸ்லிம் அமைப்புகளுக்குள் ஒற்றுமை இல்லை. அவர்கள் கேட்டாலும் அரசும் அதிகாரிகளும் செவி சாய்க்கப் போவதில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதனால்தான் இவ்வகையில் முயற்சிக்கிறோம். எங்களது அலுவலகம் ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடத்திற்குக் கீழாக அலுவலகம் இல்லாத காரணமாக தற்காலிகமாக இயங்கி வருகிறது. அவர்கள் தான் எங்களுக்கு உதவி வருகிறார்களே தவிர நாங்கள் அவர்கள் கட்சிக் கூட்டத்திற்கோ, தேர்தல் விளம்பரத்திற்கோ, கட்சிப் போராட்டங்களிலோ கலந்து கொள்வதில்லை. இது தான் உண்மை. எங்களது நோக்கம் இறையில்லப் பணியாளர்களாக விளங்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான். ஒரு முக்கியமான செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உலமா ஓய்வூதியத்துக்காக ஒருவர் விண்ணப்பிக்கும் போது 20 வருடப் பணிசெய்தல் அவசியம் என்ற சட்டம் ஒருபுறம். விண்ணப்பிக்கும் உலமா, வக்ஃபு வாரியத்தில் வரி கட்டும் பள்ளிவாசலில் பணி செய்தால் தான் அந்த ஓய்வூதியமும் கிடைக்கும் என்பது மறுபுறம். வருமானம் இல்லாத காரணத்தால் வரி கட்டாது வெறுமனே வக்ஃபு வாரிய சர்வே பதிவோடு இயங்கும் பள்ளிகள் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இதனில் பணிசெய்யும் இமாம் களுக்கு இல்லை எனச் சொல்லும் வக்ஃபு வாரியச் சட்டமும் மாற்றப்பட வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.

எங்களது சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாவட்டத்துக்கு ஐந்து பேர் என 150 பேர் உள்ளனர்.

குறிப்பு : பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஷேக் அப்துல் காதர் என்ற இவர், முன்னாள் முஅதீனாக இருந்து இப்போது இச்சங்கத்துக்கு முழு நேர ஊழியராகப் பணி செய்கின்றார். இச்சங்கம் தற்போது இயங்குவது நெ.117, கீழ வாசல் வீதி, தஞ்சாவூர்.

நன்றி : முஸ்லிம் முரசு – ஜனவரி 2009

ராசல் கைமாவில் மதுரை பல்கலை வளாகம் துவக்கம்

ராசல் கைமாவில் மதுரை பல்கலை வளாகம் துவக்கம்
Thursday, 14 May 2009

துபாய், இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஐக்கிய அரபுக் குடியரசின் ராஸ் அல்கைபாவின் கல்வி நிலையங்கள் பகுதியில் தனது வளாகத்தைத் தொடங்கியுள்ளது.


பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆர்.கற்பக குமாரவேல் இந்த வளாகத்தை சிறப்புப் பகுதியில் தொடங்கி வைத்தார். மாணவர்கள் அனுமதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் மே மாத இறுதியில் துவங்குகின்றன.

இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ பட்ட வகுப்புகள் இந்த வளாகத்தில் அளிக்கப்படும். வணிகம், கணினி வணிகம், மேலாண்மை, சில்லறை விற்பனை, சுற்றுலா சேவை மேலாண்மை மற்றும் கணினிக் கல்வி இளங்கலைப் படிப்பின் முக்கியப் பாடங்களாகும். எம்.பி.ஏ பிரிவில் மனிதவள மேம்பாடு, சில்லறை வணிக மேலாண்மை, நிதி, உற்பத்தி மற்றும் விற்பனை மேலாண்மைப் பிரிவகளில் பாடங்கள் அளிக்கப்படும்.

ஐக்கிய அரபுக் குடியரசில் பிலானியின் பிட்ஸ், மேஸ்ரா பிட்ஸ், மணிபால் பல்கலை, மகாத்மா காந்தி பல்கலை மற்றும் எஸ்பிஜெயின் மேலாண்மைப் பள்ளி ஆகியவை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.

INDIAN AIR FORCE

INDIAN AIR FORCE
Indian Air Force (IAF) invites applications from unmarried male candidates for selection test in August 2009 to join as Airman inGroup 'Y' trades.

Qualification : Candidates should have passed Intermediate/ 10+2/ Equivalent examination with minimum 50% marks in aggregate with Science, Arts or Commerce subjects or vocational cources with minimum 50% marks. Vocational cources conducted by CBSE and Kerala Board recognised by Association of Indian Universities (AIU) only are eligible.
Age : Born between 01 January 1989 and 28 February 1993 (both date inclusive)
Medical Standards : Height :Minimum acceptable height : 152.5 cm, Chest : Minimum range of expansion : 5 cm, Vision : 6/36 each eye., Correctable with spectacles : at least 6/9 each eye., Diopteric power : not exceeding +3.5
Training : Initial Joint Basic Phase Training (JBPT) will be provided at Airmen Training School, Belgaum (Karnataka) for 12 weeks. After it Trade Training will be provided.
Selection Procedure : Written Test : Test will be held during August 2009. Physical Fitness Test (PFT) : those who pass written test will undertake Physical Fitness Test. It consist of 1.6 Km run to be completed in 8 min., Interview : Those who pass both the written and PFT will be called for interview.
How to Apply : Candidate must indicate three choices of the examination centre in order of preference. Application form which is predefined should be typed on A4 size paper only. Last date for receipt of applications at the Central Airmen Selection Board is 05/06/2009. Last date for candidates of far flung areas is 12/06/2009. Application completed in all respect and outside the envelope containing the application write clearly (i) "FOR GROUP `Y' TRADES" (ii) "AGGREGATE PERCENTAGE OF MARKS …….…% IN CLASS XII/EQUIVALENT EXAMINATION (iii) "Son of Serving/Discharged/ Deceased Officer/Airman/ NC(E)/Air Force Unit Cadre Civilian {SOAFP}" (if applicable) to be annotated in RED INK and should be sent by ordinary post to :

President
Central Airmen Selection Board,
Post Box No. 11807, New Delhi - 110010

For further information, kindly visit http://www.careerai rforce.nic. in/home.htmland Application Form is available at http://indianairfor ce.nic.in/ pdf/FORMAT_ OF_APPLICATION_ AIRFORCE. pdf

உடலுக்கு எடை உண்டு செயலுக்கு எடை உண்டா…?

உடலுக்கு எடை உண்டு செயலுக்கு எடை உண்டா…?

எவருடைய (நன்மையின்) எடை கனமானதோ அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார். எவருடையின் நன்மையின் எடை இலேசாகி (ப் பாப எடை கனத்து) விட்டதோ அவன் தங்குமிடம் ஹாவியா தான். (30-101-6.7.8)

யார் கண்களுக்கும் தெரியாமல் எல்லா மனிதர்களிடமும் ஒரு தராசு இருக்கிறது. அந்த தராசால் மனிதர்கள் தினசரி எடைபோட்டுத் திரிகின்றனர். அந்தத் தராசு மனிதனின் உள்ளம் - அவனது மனம் ! காலையிலிருந்து இரவு வரை மனிதர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தனையால் எடைப் போட்டு தீர்மானிக்கின்றனர்.

கடையில் வேலை செய்யும் ஊழியர் முதலாளியிடம் வந்து ஒருவாரம் லீவு கேட்கிறார். முதாலாளி அப்போது அந்த பணியாளர் இதுவரை நடந்த நடத்தையை எடைபோடுகிறார். ஒருவர் திடிரென நம்மிடம் வந்து ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறார் உடனே மனதிற்குள் அவரது நாணயத்தை எடைபோட்டுப் பார்க்கிறோம்.

நம் நண்பரைப் பற்றி ஒருவர் நம்ப முடியாத குற்றச்சாட்டைக் கூறுகிறார் அப்போது சொல்பவரின் வார்த்தையையும் நண்பரின் பழக்க வழக்கங்களையும் எடைபோட்டுப் பார்த்து முடிவுக்கு வருகிறோம்.

இப்படி நம் மனத்தராசில் ஒவ்வொன்றையும் நிறுத்து எடைபார்த்து முடிவு செய்கிறோம்.

புவியிர்ப்பு உலகில் பொருள்களுக்குத்தான் எடையிருப்பதாகப் படித்திருக்கிறோம். ஆனால் செயல்களுக்கும் எடையிருப்பதை அனுபவப்பூர்வமாக நாம் உணர்ந்திருக்கிறோம்.

சுpலரை வெயிட்பார்ட்டி என்போம் சிலரை இலேசாக க் கருதுவோம். இவையெல்லாம் மனத்தராசின் எடை முடிவுகள் தாம்.

ஆத்தியவாசியமான வேலை முடிந்ததும் அப்பாடா…என அமர்வோம். அதுவரை நாம் மனதிற்குள் சுமந்த பாரம் நீங்கியதற்கான ஆசுவாச வெளிப்பாடுதான் அது.

எனவே மனதிற்குள்ளே பெரும் சுமை – விஷயங்களின் வெயிட்டைப் பொறுத்தது.

சிலர் கண்களாலே எடைபோடுவதும் உண்டு. பார்வையாலே மனிதர்களை அளப்பவர்களும் உண்டு.

நீதி தேவதை கண்களில் கறுப்புத்துணி அணிந்து ஒரு கையில் தராசைப் பிடித்திருக்கும் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தம்அதிகம் எடைபோடுபவர்கள். அவர்களால் குற்றங்களையும் - நியாயங்களையும் எடைபோட்டுப் பார்க்க முடியும். சில தலைவர்களுக்கு மக்கள் அதிகம் மதிப்புக் கொடுப்பது அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகத்தை எடைபோட்டுப் பார்ப்பதால்.

மனிதர்களாகிய நாமே இப்படி எடை பார்க்கும் திறன் உடையவர்களாக இருக்கும் போது. மனிதர்களைப் படைத்த இறைவன் எடை பார்க்காமல் இருப்பானா?

இதைத்தான் நாம் மேலே படித்த திருமறை வசனத்தில் இறைவன் அழகாக விபரிக்கின்றான்.

இந்த உலகில் நாம் செய்த நன்மைகளையும் - தீமைகளையும் மறுமையில் இறைவன் தனது துல்லிதமான தராசில் எடைபோட்டு யாரது தட்டு கனமாக இருக்கிறதோ அவர்களுக்கு சுவனத்தைப் பரிசாகத் தருகிறான்.

நன்மை தீமைகளை எடைபோட முடியுமா ? என குதர்க்க வாதம் பேசுபவர்கள் தங்களை தாங்களே உற்றுப் பார்த்தால் …மனிதர்களின் செயல்களை எடைபோடும் மனத்தராசு தங்களிடம் இருப்பதை புரிந்துக் கொண்டால்…

இறைவனின் தராசில் எடை கனமாக இருக்கப்போகும் நற்செயல்களை அதிகம் செய்ய இன்றே முன்வருவார்கள்.
-ஆலிம் புலவர்
-மறைஞானப்பேழை ஏப்ரல் 2009

மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்

மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்


சென்னை, மே 13: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும்
மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம்
அறிவித்துள்ளது.

இந் நிறுவனத்தின் சார்பில் பிளஸ் டூ தேர்வில் தமிழகத்திலேயே முதல் மூன்று
இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு
வழங்கப்படும்.

மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம்
இடம் பெறும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

மேலும் இந்தக் கல்வியாண்டு முதல் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம்,
பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதியின்றி படிப்பைத்
தொடர முடியாத 10 மாணவர்களின் முழுப் படிப்புச் செலவையும்
எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் ஏற்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்

விவசாயம்: இலவச பயிற்சி கோடை: நெல் சாகுபடி

விவசாயம்: இலவச பயிற்சி கோடை: நெல் சாகுபடி

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மே 12-ம் தேதி, துல்லியப் பண்ணைய முறையில் காய்கறிகள் சாகுபடி, 15-ம் கறவை மாடு வளர்ப்பு, 19-ம் தேதி வான்கோழி வளர்ப்பு; 27-ம் தேதி, கோடையில் நெல் சாகுபடி: 28-ம் தேதி தென்னையில் காணப்படும் சத்துக் குறைபாடுகளும், நிவர்த்தி முறைகளும் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சியின் போது காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், தொலைபேசி: 04577 -264288.

தமிழ் முஸ்லிம் டியூபில் இந்த வார வீடியோ தொகுப்புகள்

தமிழ் முஸ்லிம் டியூபில் இந்த வார வீடியோ தொகுப்புகள்
This week play list in your favorite Tamil Muslim Tube



கட்டாயம் காண வேண்டியது - "இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு" - ஷெய்க் A.C. அகார் முஹம்மது
http://www.tamilmuslimtube.com/video/111-Sheikh-A-C-Agar-Mohamed

கட்டாயம் காண வேண்டியது - "திருக்குர்'ஆனில் விளையாடும் குழப்பவாதிகள்" - பி.ஜே. யின் மூன் பப்ளிகேசன் வெளியிட்ட தர்ஜுமாவில் உள்ள இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் பற்றி முஃப்தி உமர் ஷெரீப் காசிமி அவர்களின் விரிவான ஆய்வு வீடியோ 4 பாகங்களில் பிரத்யேகமாக
http://www.tamilmuslimtube.com/video/14-298030072992300929653021-296

அல் குர்'ஆனின் அற்புதங்கள் - ஹாருன் யஹ்யாவின் வீடியோ தமிழில்
http://www.tamilmuslimtube.com/video/QURANIN-ARPUTHAM-1

அண்ணல் நபியின் அற்புதங்கள் - காயல் ஷெய்க் H.A. அப்துல் காதர் மஹ்லரி.
http://www.tamilmuslimtube.com/video/AnnalarinArputhangal-1

சகோதர சமுதாயத்தவர் ஆட்சேபிக்கும் 24 குர்'ஆன் வசனங்கள் - ஷெய்க் கலீல் அஹமது கீரனூரி அவர்களின் உணர்ச்சி உரை
http://www.tamilmuslimtube.com/video/111-24



Must see Video “Islathil Kuzhanthai valarpu” - Sheikh ACAgar Mohamed
http://www.tamilmuslimtube.com/video/111-Sheikh-A-C-Agar-Mohamed

Must see Video “Quranil Vizhaiyadum Kuzhappavathikal” – exclusive 4 part complete research video on PJ’s Moon publication’s Tharjuma by Mufti Omar sherif Qasimi.
http://www.tamilmuslimtube.com/video/14-298030072992300929653021-296

“ Al Quran Arputhangal” – Sheikh Harun Yahya video in Tamil
http://www.tamilmuslimtube.com/video/QURANIN-ARPUTHAM-1

“Annal Nabiyin Arputhangal” – Bayan by Kayal Sheikh H.A.Abdul Kader Mahlari
http://www.tamilmuslimtube.com/video/AnnalarinArputhangal-1

“Sakothara Samuthayaththavar Atchepikkum 24 Quran vasanagal” Emotional speech by Sheikh Kaleel Ahmed Keeranoori
http://www.tamilmuslimtube.com/video/111-24



இனிய நபி மொழி 28 - மெளலானா S.சம்சுதீன் காசிமி
Iniya Nabi Mozhi 28 – Explained by Sheikh S.Samsudeen Kasimi
http://www.tamilmuslimtube.com/playlist/2951298530072991-298429863007-2

முன் மாதிரி முஸ்லிம் பெண்மணி – ஷேக் A.C. அகார் முஹம்மது
Munmathi Muslim Penmani – Role Model Muslim Woman – Sheikh A.C.Agar Mohamed.
http://www.tamilmuslimtube.com/playlist/Munmathiri-Muslim-penmani-Sheik

இஸ்லாம் & சூஃபித்துவம் - டாக்டர். தீன் முஹம்மது அஸ்கரி Ph.D
Islam & Thasawwuf - Dr.Deen Mohamed Azhari Ph.D
http://www.tamilmuslimtube.com/playlist/Islam-Tasawwuf-Dr-Sheen-Mohamme

தவ்ஹீத்,ஷிர்க் & குஃப்ர் - முஃப்தி A. உமர் ஷெரீஃப் காஷிமி
Towheed, Shirk & Kufr – Mufti A.Omar Kasimi.
http://www.tamilmuslimtube.com/playlist/Tawheed-Shirk-Kufr-Mufti-Omar-S

உண்மையான் அகீதா - ஷேக் கலந்தர் மஸ்தான் ரஹ்மானி
Real Aqeedha – Sheikh Kalandar Mastan Rahmani
http://www.tamilmuslimtube.com/playlist/Real-Aqeedha-Sheikh-S-S-Kalanda

ஆதம் நபி (அலை) வரலாறு - ஷெய்க் ஷம்சுதீன் காசிமி

http://www.tamilmuslimtube.com/video/1-8

திரித்து கூறப்படும் குர்'ஆன் வரலாறு - ஷெய்க் ஜமால் முஹம்மத் மதனி

http://www.tamilmuslimtube.com/video/12-2980300729923007298030212980

ஷெய்க் ஷைஃபுத்தீன் ரஷாதி கேள்வி பதில்

பாவலர் 100

பாவலர் 100


கம்பீரமாக நிற்கிறார் அந்த மனிதர். சுற்றிலும் நூற்றுக் கணக்கான தமிழறிஞர்கள். அவரை நோக்கி கேள்விக் கணை கள் நீள்கின்றன. வந்து விழுகின்ற கேள்விகளுக்கு எல்லாம் சுளீர் பதில்கள் தெறிக்கின்றன அவரிடமிருந்து. தன்னிடம் கேள்வி கேட்ட 100 பேருக்கும் ஒரே மூச்சில் வரிசையாகப் பதில் சொல்லி அசத்த... கூடி நின்ற அறிஞர்கள் கூட்டம் ஆச்சர் யத்தில் திக்குமுக்காடுகிறது. சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார். 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாள் சொன்னால், அடுத்த நொடி கிழமையைச் சரியாகச் சொல்வார். அவர்தான் செய்குத் தம்பிப் பாவலர். அதிசயிக்கவைக்கும் சாதனைத் தமிழர். அவருக்குத் தபால் தலை வெளியிட்டுக் கௌரவித்திருக்கிறது மத்திய அரசு!

அடுத்தடுத்து பெரிய எண்களை வரிசையாகச் சொன்னால், அவற்றின் கூட்டுத் தொகை, பெருக்குத் தொ¬ககளை உடனே சொல்வது, நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது கொடுக்கப்படும் நீரை ருசி பார்த்துவிட்டு, இறுதியில் அது எந்தப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று சரியாகச் சொல்வது, நிகழ்ச்சியின் இடையில் தன் மீது வீசப்பட்ட நெல்மணிகள், பட்டாணிகள், கற்கள் எத்தனை என கணக்குச் சொல்வது என இவர் ஆச்சர்யங்களால் நிறைந்தவர். இப்படி எட்டு விஷயங்களை நினைவில் வைத்துச் சொல்வதற்கு அஷ்டாவதானி என்று பெயர். பத்து என்றால் தசாவதானி. இவர் இப்படி 100 விஷயங்களை நினைவில் வைத்து, ஒரே மூச்சில் திரும்பச் சொல்லக் கூடியவர் என்பதால் 'சதாவதானி'.

செய்குத் தம்பிப் பாவலர் இந்தச் சாதனையை நிகழ்த்தி 100 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதைப் போற்றும் விதமாக தமிழக அரசு இவர் எழுதிய நூல்களை நாட்டுடமை ஆக்கி உள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்திருக்கிறது. சென்னையில் வசிக்கும் பாவலரின் மகள் பாத்திமா பீவியைச் சந்தித்தேன்.

''கன்னியாகுமரி மாவட்டம் கோட் டார் பக்கத்தில் உள்ள இடலாக்குடிதான் அப்பாவுக்குச் சொந்த ஊர். மலையாள வழியில் பள்ளிப் படிப்பைப் படிச்சாலும், அவருக்குத் தமிழ் மேலதான் காதல். வீட்டு வறுமைக்கு இடையில் திண்ணைப் பள்ளிக்கூடத்துல தமிழ் கத்துக்கிட் டார். 15 வயதிலேயே செய்யுள் எழுதும் அள வுக்கு தமிழில் புலமை. பிறகு மாதம் 60 ரூபாய் சம்பளத்துக்குப் பிழை திருத்தும் வேலை பார்த்துக் கிட்டே சீறாப் புராணத்துக்கு உரை எழுதினார். 'யதார்த்தவாதி', 'இஸ்லாமிய மித்ரன்'னு ரெண்டு பத்திரிகைகளையும் நடத்தியிருக்கிறார்.


அதைத் தொடர்ந்துதான் தசாவதானம், சதாவதானம்னு பல சாதனைகளைச் செய்தார். சென்னை விக்டோரியா ஹாலில் தசாவதானம் செய்தபோது 'தசாவதானி' பட்டம் கொடுத்தாங்க. திரு கோட்டாற்று பதிற்றுப் பத்தந்தாதி, கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், அழகப்பக்கோவை, நாகைக் கோவை என ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். விடுதலைப் போராட்டத்திலும் கலந்துக்கிட்டிருக்கார்.

அந்நிய நாட்டுத் துணிகள் எரிப்புப் போராட்டத்தில் அப்பா பேசும்போது, 'ஒரு நல்ல மணமகன் கைத்தறி வேட்டிதான் அணிவான். பிணமகனுக்குத்தான் மில்துணி போர்த்துவாங்க. நீங்க மணமகனா, பிணமகனா?' எனக் கேட்டதும், கூட்டத்தில் மில்துணி அணிந்திருந்தவர்கள் அதைக் கழற்றி எறிந்தார்களாம். ஜீவா, திரு.வி.க. மாதிரி முக்கியமான தலைவர்கள் அப்பாவின் பேச்சுக்கு ரசிகர்களா இருந்திருக்காங்க.

அப்பாவின் நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபம் கட்டின எம்.ஜி.ஆர்., அங்கே இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அப்பா பேரை வெச்சார். அதே போல கலைஞர், அப்பா எழுதின புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கார்.'' பெருமிதப் புன்னகையுடன் பேசுகிறார் பாத்திமா.

பாவலரின் செய்யுள்களைப் பாடப் புத்த கங்களில் இடம்பெறச் செய்யவேண்டும், விக்டோரியா ஹாலுக்கு பாவலர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் குடும்பத்து உறுப்பினர்கள், www.pavalar.blog.com என்ற வலைப்பூ மூலம் அவர் பற்றிய தகவல் களைத் தொகுத்து வருகிறார்கள்!


Saleem.

தமிழன் ஐ.ஏ.எஸ்!

தமிழன் ஐ.ஏ.எஸ்!

- ஆர்.சரண்

தமிழன் ஐ.ஏ.எஸ்... தமிழர்களுக்குக் கனவாக இருந்த ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுகள் இப்போது மெய்ப்பட ஆரம்பித்திருக்கின்றன. 2006-க்கான ஐ.ஏ.எஸ். தேர்வில் 44 மாணவர்கள் வெற்றிக் கோட்டைத் தொட... இந்த வருடம் வெளியாகியுள்ள 2008-க்கான ரிசல்ட்டில் அது இரட்டிப்பாகி 96 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்!
மே மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை அண்ணாநகரின் ஒவ்வொரு அவென்யூவும் பிஸியாகிவிடும். 'மாப்ளே! ராய்பால் இந்தத் தடவை ரொம்ப லிபரல்... ஜோக்கெல்லாம் அடிச்சுக்கிட்டே கேள்வி கேட்டாரு...' என்று காபி சுவைத்தபடி தெருவோரக் கடைகளில் ஐ.ஏ.எஸ். இன்டர்வியூ பற்றிப் பேச்சு கேட்கும்.

''ஐ.ஏ.எஸ்னா ஐ.ஐ.டி. ரேஞ்ச் பசங்கதான் எழுத முடியும், டெல்லியில்தான் படிக்கணும், ஹிந்தி தெரியணும்னு எக்கச்சக்க பில்ட்-அப் இருந்தது. இப்போ அதெல்லாம் கிடையாது. அண்ணா நகர்ல சின்ஸியரா ஒரு வருஷம் படிச்சாப் போதும். ஏதாவது ஒரு சர்வீஸை நிச்சயம் வாங்கிடலாம். தன்னம்பிக்கையும் உழைப்பும் உங்களை அண்ணாநகர்ல இருந்து டெல்லிக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.'' - பெருமிதமான குரலில் பேசுகிறார் சசிகாந்த் செந்தில். இந்திய அளவில் 9-வது ரேங்க்கும் தமிழ்நாட்டில் முதல் ரேங்கும் எடுத்திருப்பவர்.


காலேஜ் பக்கம் போகாமலே சிவில் சர்வீஸ் தேர்வில் பாஸாகி ஆச்சர்யப்படுத்துகிறார் மைக்கேல் ஜெரால்டு. ''நான் ஒரு மெடிக்கல் ரெப். தினமும் ஒரே மாதிரியான வேலையில் சலிச்சுப்போய் சிவில் சர்வீஸ் எழுத வந்தேன். தபால் வழியில் பி.ஏ., இங்கிலீஷ் லிட்டரேச்சர் முடிச்சுட்டு, அண்ணாநகரில் வந்து சேர்ந்தேன். போன வருஷம் எழுதிய எக்ஸாமில் ஐ.ஆர்.எஸ். கிடைச்சிருக்கு. ஐ.ஆர்.எஸ். கிடைச்ச சந்தோஷத்துல அன்னிக்கு வேகமா பைக் ஓட்டினேன். ஆட்டோக்காரர் ஒருவர் 'மனசுக்குள்ள பெரிய கலெக்டர்னு நினைப்போ?'னு கேட்டார். 'ஆமாண்ணே... நான் வருங்கால கலெக்டர் தாண்ணே'ன்னு சொன்னதும் புரியாம பார்த்தார்!'' - அதிர்வேட்டாகச் சிரிக்கிறார் மைக்கேல் ஜெரால்டு.


வீரபாண்டியனின் கதை தன்னம்பிக்கை டானிக்!

பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக்கொண்டே ப்ளஸ் டூ தேர்வில் மாநில அளவில் சாதனை புரிந்தவர். ''ஐ.ஏ.எஸ். ஆகி மக்களுக்குச் சேவை செய்வேன்'' என்று அப்போது பேட்டி கொடுத்தவர், இப்போ வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ். ''என் அப்பா அலுமினியப் பாத்திரங்களை சைக்கிள்ள வெச்சுக்கிட்டு வீடு வீடாப் போய் வித்துட்டு வருவார். அம்மா கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலில் துப்புரவுத் தொழிலாளியா இருக்காங்க. அப்பாவும் அம்மாவும் முடிஞ்ச வரைக்கும் அவங்க கஷ்டத்தோட நிழல் என் மேல் விழாத மாதிரி பாத்துக்கிட்டாங்க. 'நான் ஐ.ஏ.எஸ். ஆவேன்'னு இன்டர்வியூ கொடுத்ததும், எங்க அப்பாவை எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. 'கூமுட்டக் கோழி வீடு பூரா முட்டை போடஆசைப் பட்டுச்சாம்'னு ஆளாளுக்கு அடிச்ச கிண்டலில் அப்பாவும் அம்மாவும் மனசு உடைஞ்சு போயிட்டாங்க. அவங்க கண்களில் சந்தோஷத்தைப் பார்க்கணும்னு வெறித்தனமாப் படிக்க ஆரம்பிச்சேன். போன நாடாளுமன்றத் தேர்தலப்போ முதல்முறையா ஐ.ஏ.எஸ். தேர்வை எழுத ஆரம்பிச்சேன். தவறுகளைத் திருத்தக் கிடைச்ச வாய்ப்பா ஒவ்வொரு தோல்வியையும் எடுத்துக்கிட்டேன். போன வருஷம் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தப்ப, நல்ல டிரெஸ், ஷூ வாங்கப் பணம் இல்லை. கடன் வாங்கிட்டுப் போனேன். நல்லபடியா, இந்திய அளவில் 54-வது இடத்தைப் பிடிச்சு ஐ.ஏ.எஸ். ஆகிட்டேன். இப்போ அப்பாவைப் பார்க்கிறவங்க, 'வைராக்கியக்காரன்யா நீயி! உன் மகனை கடைசியில கலெக்டர் ஆக்கிட்டியே!'ன்னு சொல்றாங்க. அப்பா, அம்மா முகம் இப்போதான் தெளிவா இருக்கு. நானும் சந்தோஷமா இருக்கேன்!'' - சாதித்த சந்தோஷத்தில் பேசுகிறார் வீரபாண்டியன்.


பாலாஜி ஐ.பி.எஸ்ஸின் கதை வித்தியாசமானது. ''இன்ஜி னீயரிங் முடிச்சுட்டு நல்லா சம்பாதிக்கணும்னு நினைச்சு அண்ணா யுனிவர்சிட்டி வந்தேன். எல்லாரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பத்திப் பேசவும் எனக்கு ஆர்வம் வந்தது. ச்சும்மா டிரை பண்ணினதுக்கு 238-வது ரேங்க் வாங்கிட்டேன். பொதுவா, 'ஐ.பி.எஸ். ஆகணும்னா உயரமா ஆஜானுபாகுவா இருக்கணும்'னு தப்பான எண்ணம் இருக்கு. போலீஸ் ஆகத் தேவைப்படுற உயரத்தைவிட குறைவா இருந்தாலும் ஐ.பி.எஸ். ஆக முடியும். நல்ல சமயோசித புத்தியும் ஆளுமைத் திறனும்தான் ஐ.பி.எஸ். ஆக முதல் தகுதி'' என்கிறார் பாலாஜி.
இளமுருகுவின் வாழ்க்கை நெகிழ்ச்சியானது. எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்த இளமுருகு ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே தொடர்ந்து 5 வருடங்கள் தேர்வு எழுதி, இப்போது வெற்றி பெற்றிருக்கிறார். ''அப்பா என்னை அரசாங்க அதிகாரியாப் பார்க்க ஆசைப்பட்டார். அவருக்காக சிவில் சர்வீஸ் எழுத ஆரம்பிச்சேன். நான் எக்ஸாம் எழுதறதுக்கு முன்னாடியே அப்பா இறந்துட்டார். ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வர்றப்ப அப்பாவை நினைச்சுப்பேன். ரிசல்ட் வந்த மறுநாளே படிக்க உட்கார்ந்திருவேன். இன்னிக்கு எங்க ஒட்டுமொத்தக் குடும்பமும் பூரிப்பா இருக்காங்க. எல்லாம் அப்பா ஆசீர்வாதம்!'' - பேசி முடிக்கும்போது இளமுருகுவின் குரலில் அத்தனை ஆனந்தம்.


''பொம்பளைப் புள்ளைக்கு எதுக்கு இவ்வளவு பிடிவாதம்... வேற ஏதாச்சும் படிச்சுச் சம்பாதிக்கச் சொல்லுங்க. இல்லைன்னா, காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துருங்கன்னு என் அம்மா- அப்பாகிட்டே அட்வைஸ் பண்ணவங்களை இப்போ நினைச்சுப் பார்க்கிறேன். அவங்களுக்கான பதில்... நிர்மலா ஐ.பி.எஸ்!'' - மலர்ந்து சிரிக்கிறார் நிர்மலா.
சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளையில் படித்தவர்களில் இந்த முறை 25 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் பலர் வசதி குறைந்த, விவசாயக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் விசேஷம்.
இவர்களோடு சேர்த்து பி.காம்., படிப்பை 10 வருடங்கள் படித்த சான்பாஷா, 11 வருடங்களாக இடைவிடாமல் சர்வீஸைத் துரத்திய ஸ்ரீதர், இன்டர்வியூ வரை தமிழில் அணுகிய சக்தி போன்றோர் சொல்வதெல்லாம் ஒன்றுதான்...


நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்!



Courtesy Vikatan.