அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி
சென்னை, மார்ச் 23: அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ( AIEEE-2009 ),"எய்ம்ஸ் கல்வி நிறுவனம்” ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கிறது.
தேசிய தொழில்நுட்ப கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக சி.பி.எஸ்.இ. சார்பில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 2 முடித்த சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.
நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு எய்ம்ஸ் கல்வி நிறுவனம் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 14 முதல் 24 வரை பயிற்சி வகுப்பு நடத்துகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தும் மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளிப்பர்.
பயிற்சியின் முடிவில், முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப், ஐ-பாட் பரிசு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மேலும் விவரங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம்.
www.topperlearning.com