Showing posts with label யாசர் அரஃபாத். Show all posts
Showing posts with label யாசர் அரஃபாத். Show all posts

Monday, September 20, 2010

விடைக்கொடுக்க முடியாமல்..

விடைக்கொடுக்க முடியாமல்..

அடை மழையிலும்
வேலைக்கு விடைக்கொடுக்க
முடியாமல் நான்!

வறுமைக்கு
வாக்கப்பட்டதால்
வயதானக் காலத்தில்
இப்படி!

உயர்வேதும் இல்லை பதவியில்;
உயரம் கூடினாலே
அன்றி!

வரம்பேதும் இல்லை வயதிற்கு;
மூட்டுக்கு
முடிச்சி விழும்
வரை!

இல்லாத செல்வத்தால்
பொல்லாத வறுமை;
இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமேன்று!

கனவேதும் பெரியதில்லை
ஒருநாள் உழைத்ததைக் கொண்டு
மறுநாளும் உண்ண வேண்டும்;
தினக்கூலி என்றப் பெயர் மாறவேண்டும்!

- யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com


இப்போது
அழுதாலும் கவலையில்லை
மழையோடு சேர்ந்து
மறைந்துவிடுமேன்று!
மறைந்துவிடுமென்று!


திருத்திக் கொள்ளவும்..


இஸ்லாமிய சகோதரன்
யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.கம