Saturday, December 20, 2008

இளைஞர் முழக்கம் டிசம்பர் 2008 இதழ்

இளைஞர் முழக்கம் டிசம்பர் 2008 இதழ்


சட்டக்கல்லூரி: ரேஜீஸ்குமார்

மாறாக இரட்டை டம்ளர் முறை உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடிய தந்தை பெரியாரின் வாரிசுகளாக தங்களை காட்டிக் கொள்ளும் இவர்கள் சட்டக் கல்வியில் இரட்டைக் கல்லூரி முறையையே கொண்டு வந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இண்டர்நெட் வசதி, சட்ட இதழ்கள் கொண்ட நூலகம், முழுநேர வகுப்பு, மாதிரி நீதிமன்றம் என எல்லாவித வசதிகளுடன் வசதிபடைத்த மேல்தட்டு மக்கள் மட்டுமே கல்வி பயிலும் பி.எல். ஹானர்ஸ் ஒரு புறம். எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் சட்டக் கல்லூரிகள் மறுபுறம் என இரண்டு விதமான சட்டக் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பெரியாரின் சீடர்கள்.

மும்பை மாலேகாவ்: கணேஷ்

கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகத்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான திருப்புமுனை சமீபத்தில் ஏற்பட்டது. பொதுவாக, ஒரு இடத்தில் குண்டு வெடித்தால் உடனேயே அது இஸ்லாமியர்கள்தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும் என்று பலரின் மனதில் விதைக்கப்பட்டு இருந்தது. இந்த வேலையை பெரும்பாலான ஊடகங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல செய்தன. மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவில் நடந்த குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணை இந்துத்துவா அமைப்புகளை நோக்கி அழைத்துச் சென்றது. ஐதராபாத் மெக்கா மசூதி, கான்பூர், தென்காசி போன்ற இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள் மட்டுமில்லாமல் சம்ஜோதா எக்ஸ்பிரசில் குண்டு வெடித்ததும் இவர்களின் கைங்கர்யம்தான் என்ற சதி அம்பலமானது.

வாஷிங்டன் நெருக்கடியும், வாடிப்பட்டி செல்வராசும் : க.சுவாமிநாதன்

சப் ப்ரைம் கடன்கள் என்றால் தகுதியற்ற கடன்கள் என்று புரிந்து கொள்ளலாம். நம்ம வங்கிகளில் கடன் வாங்குவதென்றால் இன்கம் சர்டிபிகேட் கொண்டுவா! ரேசன் கார்டு கொண்டுவா! சுயூரிட்டி யார்? அவர் வருமானம் என்ன? என்று குடைந்து விடுகிறார்கள் அல்லவா! ஆனால் அமெரிக்க வீட்டு வசதிக் கடன்கள் நிஞ்சாக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அதாவது வருமானம் இல்லை, வேலையில்லை, சொத்து இல்லை இவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கப் பட்டால் உருப்படுமா? இக்கடன்கள் வழங்கப்படுவதற்காக வட்டி விகிதங்கள் செயற்கையாகக் குறைக்கப்பட்டன. வீட்டுக் கட்டுமானத் தொழில் துவக்கத்தில் ஜாம் ...ஜாம்... என்று வளர்ந்தது. இது முதற்கட்டம்.

என்ன செய்யப்போகிறார் ஒபாமா? : எஸ்.வி.சசிக்குமார்

பொருளாதாரக் கொள்கையில் புஷ்ஷின் கொள்கையை ஒபாமாதான் ஏற்கவில்லை என்று சொல்லியிருந்தாலும் அவரது மாற்றுக் கொள்கை எப்படியிருக்குமென்று சூசகமாகக் கூட அவர் இதுவரை சுட்டிக்காட்டியதில்லை. அமெரிக்காவின் ஏகபோக வர்த்தக நிறுவனங்களின், சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியோடு கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டுவரும் நாசகரக் கொள்கையான உலகமயமாக்கல் கொள்கையைக் கைவிடுவதற்கு, ஒபாமா தலைமையிலான அரசிற்கு என்ன மாற்றுக் கொள்கை இருக்கிறது என்பது புலப்படவில்லை. ஒபாமா அமெரிக்காவின் பொருளாதாரச் சிக்கலை எப்படித் தீர்த்து வைக்கப்போகிறார் என்பது இன்னமும் புரியாத புதிர்தான்.

நாங்கள் தகர்ப்போம் காரணம் நாங்கள் வலிமையானவர்கள்: ஏ.பாக்கியம்

பிரெஞ்ச் நாட்டு இளைய தலைமுறையை பற்றி எழுதுகிறபோது 1866இல் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: பாரிஸ் மாணவர்கள் குழப்பமான சூழலிலும், அவர்களது உரிமைகள் பறிபோகிற சூழலிலும் கூட தொழிலாளர் பக்கமே நின்றுள்ளனர் என்பது முக்கியமானது என்று மார்க்ஸ் எழுதுகிறார். 1865_-66ல் பாரிசில் அகடமி கல்லூரி மாணவர்களின் எழுச்சியையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை பற்றியும் எழுதும்போது இக்கருத்தை வெளியிடுகிறார். இளம் இத்தாலியை போன்று இளம் பிரான்ஸ் ஒரே அமைப்பாக செயல்படவில்லை. பல அமைப்புகளாகவும் , பல கருத்தோட்டங்களை கொண்டதாகவும் அமைந்-திருந்தது. மூன்றுவிதமான முக்கிய பிரிவுகள் இளம் தலைமுறையினரிடம் காணப்பட்டது.

மேலும் படிக்க, http://dyfi.keetru.com

அஜீரணத்தை போக்கும் இஞ்சி

அஜீரணத்தை போக்கும் இஞ்சி
இயற்கை நமக்கு அளித்துள்ள மருத்து குணமுள்ள பொருள் இஞ்சி. இது அஜீரணத்தை போக்கி, உடல் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

சில வீடுகளில் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதற்கு பதில் இஞ்சிச் சாறு பருகுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலான வீடுகளிலும், கடைகளிலும் இஞ்சி டீயை பலர் விரும்பி சாப்பிடுவதை அறிந்திருக்கலாம்.

இஞ்சியில் அத்தனை நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. வயிற்றுக்குள் செல்லும் இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணரவும் உதவுகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச் சிக்கலை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

அசைவ உணவு வகைகளில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், அது உடலில் தேவையற்ற சதையை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சி சாப்பிடுவதால் அவை ஜீரணமாகி உடலின் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

நீங்களும் நூறாண்டு காலம் வாழலாமே..!
- தொகுப்பு : எஸ்.சரவணன்

நூறாண்டு காலம் நலம் காத்து ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு, எளிதில் பின்பற்றக் கூடிய சில வழிமுறைகளை, டாக்டர் த்ரிஷா மெக்னாயர் என்பவர் எழுதிய "தி லாங் லைஃப் ஈக்குவேஷன்" என்ற புத்தகம் எடுத்துரைத்துள்ளது.

அதன்படி, ஒருவர் நூறாண்டு காலம் நலமுடன் வாழ்வதற்கு, அவர் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும்; அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்; கைகளை கழுவுதல் வேண்டும்; தினமும் பல் துலக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார், அந்த மருத்துவர்.

ஆய்வு ஒன்றினை மேற்கொள் காட்டி, டாக்டர் த்ரிஷா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது இதுவே:

* கைகளை நன்றாக கழுவி, எப்போதும் தூய்மையுடன் இருந்தால், ஆயுளில் 2 ஆண்டுகள் கூடுகிறது.

* பற்களை சுத்தமாக பராமரித்து வந்தால், வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் உயர்கிறது.

* பெண்ணாக இருந்தால் அவரது கணவரும், ஆணாக இருந்தால் அவரது மனைவியும் நிலையான ஒரு துணையாக அமைந்துவிட்டால், ஆயுளில் எட்டு ஆண்டுகள் கூடுவது உறுதி.

* அன்றாடம் தவறாமல் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், வாழ்நாளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கூடும்.

அதேநேரத்தில் புகைப்பழக்கம், துரித உணவுகள் உட்கொள்ளுதல், உடற்பயிற்சி மேற்கொள்ளாமை மற்றும் மன அழுத்தம் நிறைந்த சூழலோடு வாழ்வது ஆகியவை நமது வாழ்நாளில் 20 ஆண்டுகளை குறைத்துவிடும் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IT Personal required

The Western School - Madukkur is looking for IT Personal for their IT team with the following knowledge /experience:

Job Description: Administrating IT Center at Pattukkottai; Implementing Accounting System; Email Communication; Liaison with School IT Team and administrative works
Required Knowledge: Knowledge of Microsoft Office; Email; Application usage and Training; Programming skill and Web Designing as definite advantage

Qualification: IT Related

Interested candidate please send your application to : eshackmkr@gmail.com with your latest CV.

ப‌த்து ஆண்டுக‌ளை நிறைவு செய்த‌ காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம்

ப‌த்து ஆண்டுக‌ளை நிறைவு செய்த‌ காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம்

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்

காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் (http://kayalpatnam.com) எனும் இணைய‌த்த‌ள‌ம் ப‌த்து ஆண்டுக‌ளை நிறைவு செய்துள்ள‌து அல்ஹ‌ம்துலில்லாஹ்.

இன்றைய‌ சூழ‌லில் சேவை அடிப்ப‌டையில் ஒரு இணைய‌த்த‌ள‌த்தை இய‌க்குவ‌த‌ற்கு பொருளாதார‌ம் இருந்தாலும் அத‌ற்கு தேவை அனைத்து த‌ர‌ப்பின‌ரின் ஒத்துழைப்பு. அந்த‌ வ‌கையில் காய‌ல் வாசிக‌ளின் அனைவ‌ரது ஒத்துழைப்புட‌ன் காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் த‌ன‌து ப‌த்து ஆண்டு சேவையினை நிறைவு செய்துள்ள‌து.

காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் குறித்த‌ அனைத்து வித‌ த‌க‌வ‌லை உட‌னுக்குட‌ன் உல‌கெங்கிலும் வாழ்ந்து வ‌ரும் காய‌ல‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி வ‌ரும் பாணி மிக‌வும் பாராட்ட‌த்த‌க்க‌து. ஒரு இணைப்புப் பால‌மாக‌ இவ்விணைய‌த்த‌ள‌ம் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து.

இந்த‌ வ‌ரிசையில் இளையான்குடி.ஆர்க், சித்தார்கோட்டை.காம், ம‌துக்கூர்.காம், நெல்லைஏர்வாடி.காம், முதுகுள‌த்தூர்.காம், முதுவைவிஷ‌ன்.காம், லால்பேட்டை, நீடுர் ஆன்லைன்.காம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ஊர்க‌ளின் இணைய‌த்த‌ள‌ சேவைக‌ள் அந்ந்த‌ந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு செய்திக‌ளை வ‌ழ‌ங்கி வ‌ருகின்ற‌ன‌. இத‌ற்கெல்லாம் காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் ஒரு முன்மாதிரி என்றால் மிகைய‌ல்ல‌.

தொட‌ர்ந்து காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம் ப‌ல‌ ந‌ல்ல‌ ப‌ணிக‌ளை இணைய‌ம் வ‌ழியே ஆற்ற‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னிம் பிரார்த்திக்கிறோம்.
ஈமான் டைம்ஸுக்காக‌

முதுவை ஹிதாய‌த்
ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர்
இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன்
துபாய்




---------- Forwarded message ----------
From:
Date: Fri, Dec 19, 2008 at 10:39 PM
Subject: Kayal on the Web completes 10 years!
To: muduvaihidayath@gmail.com


Kayal on the Web, the community portal of Kayalpatnam, completes 10 years today (December 20, 2008), Alhamdulillah! We thank you for your continued support!!

A new editorial - The Journey So Far! - is online. Click here to read

To share your views about Kayalpatnam.com, Click here


The Journey So Far!
(Posted on Saturday, December 20, 2008)
Kayal on the Web went online on December 20, 1998. With a few pages of static information, its journey began. The news about the Website was passed on through words of mouth and emails to friends and friends of friends. Ten years on, Kayalpatnam.com has nearly 1400 registered users and receives over 1.5 million pageviews per year, Alhamdulillah!

Over the years, Kayal on the Web has introduced a wide variety of content: News about Weddings, Deaths, New Births, Images, Jummah Bayans, Discussion Board and lots more. Yet, it was for the news about Kayalpatnam for which the users visited Kayal on the Web the most for. For nearly 8 years, Master Computer Academy has been updating the news straight from Kayalpatnam. We acknowledge the help rendered by Mr.Malik and Mr.Mohamed Ali all these years. It is wonderful of them. Since last year, Mr.S.K.Salih has also been updating the news from Kayalpatnam. We thank him too!

Thanks are also due to Kayalpatnam professionals (Mr.Hameed Sultan, Mr.Javed Nazeem, Mr.Imthias, Mr.Seyed Ibrahim, Dr.Kizhar, Dr.Ziyad Abubacker, Dr.Meerasahib and Dr.P.M.Syed Ahamed) - who have spared their valuable time all these years - to answer queries in the Q&A section of the Website. We thank them!

We thank various Kayal organisations - both in India and overseas - for supporting us enthusiastically, by providing us news, views and timely suggestions. We value that!

We thank the visitors to this Website, the Kayalites - both from India and the Overseas. We wanted you to feel home when you are here and we hope we make you feel home when you are here. We strive for that!

Since 2006, Kayalpatnam.com has been hosting advertisements. These advertisements are the primary sources of revenue for The Kayal First Trust, the charitable Trust that now owns Kayalpatnam.com. We thank our advertisers for their support!

Through advertisements in two of the Websites (Kayalpatnam.com and ToppersTalk.com), The Kayal First Trust generates revenue for its various activities. The annual contribution of the Trustees also form part of the Trust's budget. In the financial year 2006-2007, The Kayal First Trust generated Rs.17,400 through advertisements. In 2007-2008, this rose to Rs.39,800 and in the current financial year, we hope to touch Rs.1,20,000. None of the expenses of the Trustees are covered in the budget. The Trust's accounts are audited by a reputed Chartered Accountant.

In addition to Media, The Kayal First Trust has focussed on Education (Meet The State Toppers event was conceived by the Trust, this year we disbursed scholarships through Iqra Educational Society), Health Awareness Programs and Youth (Kayalpatnam Astronomy Society). We at The Kayal First Trust hope to diversify and cover hitherto untouched areas, Insha Allah, in the coming year. The vision of The Kayal First Trust is to develop and offer a wide spectrum of services, experiences from which - could stand and serve as model for other societies to possibly replicate.

As we step into a new decade, we look forward to the continued support of everyone who had made the journey of the last ten years possible. If we err, let us know. If we are found wanting, let us know. Oh yes, the current design is old and a new one is due for long. Insha allah, we should have it early in the New Year :-)