Showing posts with label திருவிழா. Show all posts
Showing posts with label திருவிழா. Show all posts

Thursday, March 5, 2009

திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மார்ச் 13-ல் உணவு திருவிழா

திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மார்ச் 13-ல் உணவு திருவிழா


நாகர்கோவில், மார்ச் 4: திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் 3 நாள் உணவு திருவிழா இம் மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து, கல்லூரித் தாளாளர் மற்றும் செயலர் எச். முகம்மது அலி நாகர்கோவிலில் புதன்கிழமை அளித்த பேட்டி:

இக் கல்லூரி ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவியல் துறை நடத்தும் இந்த அறுசுவை உணவு திருவிழாவை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தொடக்கிவைக்கிறார்.

இதையொட்டி, 100 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. பண்டைய கால உணவு வகைகளில் இருந்து பலவகையான வடஇந்திய, தென்னிந்திய மற்றும் பண்பாட்டு உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

திருவிழாவையொட்டி பலவித கலை நிகழ்ச்சிகளும், மாயாஜால நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம் என்றார் அவர்.