Thursday, May 15, 2008

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு


அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா அவர்கள் எழுதிய ' கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்ட்ஸில் உள்ள 'காயிதேமில்லத் (ரஹ்) அரங்கில்' நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். சமுதாயப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. 'கண்ணியத்திற்குரிய காயிதேமில்லதின் கருத்துரைகள்' நூலை வெளியிட்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவில் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம், குவைத் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் ( K-Tic ) பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மௌலவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவி உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.

பொருளாளர் கவிஞர் ராஜகிரி அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

விழா குறித்த மேலதிக விபரம் பெற 050 452 4990 / 050 644 04 15 / 050 467 43 99 / 050 51 96 433 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.