இறைவனின் நினைப்பு!
----------------------------
செவிடர் குருடர் ஊமையர்
மூளை வளர்ச்சி குன்றியோர்
பக்கவாதம் கீழ்வாதம் முகவாதம்
இளம்பிள்ளை வாதம்
விபத்திலோ சர்க்கரையினாலோ
கைகால்கள் துண்டிக்கப்பட்டோர்
தொழுநோயாளர் போன்ற
ஊனமுற்றோரைச் சந்திக்க நேர்கையில்
மனம் வெதும்பார்
உள்ளம் உருகார்
வேதனை படார் தான் யார்?
இப்படியும் படைத்திருக்கின்றானே!
இதுவென்ன?
அச்சுறுத்தலா? தண்டனையா?
சமுதாயத்துக்கோர் பாடமா? உதாரணமா?
கல்மனம் கொண்டவனா?
மனமே இல்லாதவனா?
இவன் இறைவன் தானா? என
நொந்துபோய்ப் பேசுவதும்
படைத்தவனை நோதலும்
நியாயம் தான்! -ஆயினும்
ஊனமின்றி இருக்கும் நம்மில்
எத்தனை பேர்
இதனை உணர்கின்றார்?
இறைவனை நினைக்கின்றார்?
நன்றி செலுத்துகின்றார்?
வலியிலும் இன்னலிலும் மட்டுமே
இறைவனை நினைப்பவரன்றோ? நாம்!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
கனிம நீர்!
-------------
குடிக்க குளிக்க
சமைக்க சலவைக்காக
கழுவ சுத்தமாயிருக்க
இறைவன் அளித்த கொடை
நீர்!
ஆறாய் வரும் வழியில்
கழிவுகளையும் இரசாயனங்களையும்
கலக்கச் செய்கின்றார்
மனிதர்களில்
ஓர் சாரார்!
விவசாயத்துக்கும்
மனிதத் தேவைகட்காகவும்
பயன்படுத்திக்
கொள்கின்றார்
ஓர் சாரார்!
புட்டியில் அடைத்து
'கனிம நீர்'
எனும் பெயரில்
காசுக்கு விற்கின்றார்
ஓர் சாரார்!
அதில் அடைந்து கிடக்கும்
நுண்கிருமிகள் எத்தனை?
அறியாமலேயே வாங்கி
பருகிக் கொண்டிருக்கின்றார்
ஓர் சாரார்!
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
Last update : 23-09-2008 22:49
Users' Comments
நன்றி: அதிகாலை.
அன்புடன்,
இமாம்.
http://thamizheamude.blogspot.com/
drimamgm@hotmail.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts
Wednesday, September 24, 2008
Sunday, July 27, 2008
திருக்குர்ஆனும் - திருக்குறளும்
திருக்குர்ஆனும் - திருக்குறளும்
தொகுப்பு : எம். முஹம்மது மஸ்தான், எம்.ஏ., பிஎஸ்ஸி
தலைமையாசிரியர் - ஓய்வு
விதிப்பற்றி திருக்குரானும்,திருக்குறளும்
இறைவன் கொடுத்ததை தடுப்பவன் எவனுமில்லை.
இறைவன் தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.
இறைவனின் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை.
இதை திருக்குர்ஆன்( 15 145 ) தெளிவு படக் கூறுகிறது.
மேலும் எந்த ஆன்மாவும் ( முன்னரே ) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் நற்பலனை ( மட்டும் ) விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்கிவிடுவோம். இன்னும் எவர் மறுமையினையும், நன்மையையும் விரும்புகிறானோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாய் நற்கூலி கொடுக்கிறோம்.
இதையே வள்ளுவர் தமது வான்மறையில் ஒரு கோடி பொருளை சேர்த்து ஒழுங்குப்படுத்தி வைத்திருந்தாலும் இறைவன் விதித்த வகையால் அல்லாமல் அவற்றை அனுபவிக்க முடியாது என்ற கருத்தை -
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
கொடுத்தார்க்கும் துய்த்தல் அரிது
என்ற குறலால் விளக்கப்படுகிறது.
கஞ்சத்தனமும், ஊதாரித்தனமும்
திருக்குர் ஆனில் ‘கஞ்சத்தனமுமாக உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர். உம்முடைய வாயை முற்றிலும் விரித்து விடாதீர் ( 17 : 29 ) இதனை வள்ளுவர் கஞ்சத்தனமிக்கவன் இந்த பூமிக்கு பாரம் என்பதை -
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
என்ற குறளிலும் ஊதாரித்தனம் இல்லாமல் முறையாக செலவு செய்வது பற்றி
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
என்ற குறளிலும் தெளிவாக விளக்குகிறார்.
தீயசெயல் பற்றி திருக்குரானும், திருக்குறளும்
மனிதர்களே : உங்களுடைய அடாத செயல்கள் ( தீய செயல்கள் ) உங்களுக்கே கேடாக முடியும் குரான் ( 10 : 23 ) இதனை வள்ளுவர்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
என்ற குறளில் தீயைக் காட்டிலும் தீயவை கொடுமையானது என்று கூறுகிறார்.
புறங்கூறுதல் பற்றி குரானும், குறளும்
பிறர் குறைகளை நீங்கள் துருவித் துருவி கொண்டிராதீர். அன்றியும் சிலர் சிலரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம் 50 : 2(16) இது பற்றி திருக்குறள் கீழ்வரும் குறள்களில் தெளிவாக விளக்குகிறது. பிறர் குறைகளைக் காண்பதுபோல் தம் குறைகளைக் கண்டு உணர்ந்தால் இந்த மண்ணுலகில் தீதில்லை என்பதை -
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டா மன்னும் உயிர்க்கு ?
என்ற குறளிலும், ஒருவன் தர்மம் என்னும் சொல்லைக்கூட சொல்லாமல் தீயவை செய்து ஒழுகினாலும் அவன் புறங்கூறமாட்டான் என்று நற்பெயர் எடுப்பதே நல்லது என்பதை -
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
இக்குறளிலும் விளக்குகிறார்.
இன்னா செய்யாமை பற்றி இறைமறையும் இனிய குறளும் :
இறைமறையில், நன்மையும், தீமையும் சம்மாகமாட்டா. நீங்கள் ( தீமையை ) தன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் நண்பரே போல் ஆகிவிடுவார். 41:5(34) இதை திருக்குறள் நமக்கு தீங்கு செய்பவரை தண்டிப்பது அவர் வெட்கம் அடையும்படி அவருக்கு நல்லதைச் செய்தலே ஆகும். இதனால் அவர் தாம் செய்த செயலுக்கு வருந்தி வெட்கப்பட்டு திருந்துவார் என்பதை -
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
என்ற குறளில் விளக்குகிறார்.
ஷக்கராத் பற்றி திருக்குறள்
எல்லா மனிதருக்கும், இறக்கும் தருவாயில் ‘சக்கராத்' என்ற நிலை ஏற்படும். அந்த நிலை வருவதற்கு முன்பாக எல்லாம் வல்ல இறைவன்பால் ஈமான் கொண்டு நல்வினை ஆற்றிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது திருக்குரான். இதனையே திருவள்ளுவார் நாக்கு பேசமுடியாமல் செத்துவிக்கும் முன்பே நல்ல செயல்களை செய்திடல் வேண்டும் என்ற கருத்து மேலோங்கி கீழ்வரும் குறளில் சொல்லுகிறார்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
எல்லாப்புகழும் இறைவனுக்கே :
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று திருக்குர்ஆன் ‘அல்ஹம்துலில்லாஹ்' என்ற வாக்கியத்தின் மூலம் இயம்புகிறது. இதனை திருவள்ளுவர் தலைமைக் குணங்களுடைய இறைவனின் மெய்யான புகழை இடைவிடாது அன்போடு சொல்லுபவர்பால் ‘இருள்சேர் இருவினையும் சேரா'என்பதை சொல்லுவது மூலம் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதை வலியுறுத்துகிறது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பரிந்தோர் மாட்டு
என்ற குறளில் தெளிவுபடக் கூறுகிறார்.
நன்றி : இஸ்மி
ஜூலை 2005
தொகுப்பு : எம். முஹம்மது மஸ்தான், எம்.ஏ., பிஎஸ்ஸி
தலைமையாசிரியர் - ஓய்வு
விதிப்பற்றி திருக்குரானும்,திருக்குறளும்
இறைவன் கொடுத்ததை தடுப்பவன் எவனுமில்லை.
இறைவன் தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.
இறைவனின் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை.
இதை திருக்குர்ஆன்( 15 145 ) தெளிவு படக் கூறுகிறது.
மேலும் எந்த ஆன்மாவும் ( முன்னரே ) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் நற்பலனை ( மட்டும் ) விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்கிவிடுவோம். இன்னும் எவர் மறுமையினையும், நன்மையையும் விரும்புகிறானோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாய் நற்கூலி கொடுக்கிறோம்.
இதையே வள்ளுவர் தமது வான்மறையில் ஒரு கோடி பொருளை சேர்த்து ஒழுங்குப்படுத்தி வைத்திருந்தாலும் இறைவன் விதித்த வகையால் அல்லாமல் அவற்றை அனுபவிக்க முடியாது என்ற கருத்தை -
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
கொடுத்தார்க்கும் துய்த்தல் அரிது
என்ற குறலால் விளக்கப்படுகிறது.
கஞ்சத்தனமும், ஊதாரித்தனமும்
திருக்குர் ஆனில் ‘கஞ்சத்தனமுமாக உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர். உம்முடைய வாயை முற்றிலும் விரித்து விடாதீர் ( 17 : 29 ) இதனை வள்ளுவர் கஞ்சத்தனமிக்கவன் இந்த பூமிக்கு பாரம் என்பதை -
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
என்ற குறளிலும் ஊதாரித்தனம் இல்லாமல் முறையாக செலவு செய்வது பற்றி
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
என்ற குறளிலும் தெளிவாக விளக்குகிறார்.
தீயசெயல் பற்றி திருக்குரானும், திருக்குறளும்
மனிதர்களே : உங்களுடைய அடாத செயல்கள் ( தீய செயல்கள் ) உங்களுக்கே கேடாக முடியும் குரான் ( 10 : 23 ) இதனை வள்ளுவர்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
என்ற குறளில் தீயைக் காட்டிலும் தீயவை கொடுமையானது என்று கூறுகிறார்.
புறங்கூறுதல் பற்றி குரானும், குறளும்
பிறர் குறைகளை நீங்கள் துருவித் துருவி கொண்டிராதீர். அன்றியும் சிலர் சிலரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம் 50 : 2(16) இது பற்றி திருக்குறள் கீழ்வரும் குறள்களில் தெளிவாக விளக்குகிறது. பிறர் குறைகளைக் காண்பதுபோல் தம் குறைகளைக் கண்டு உணர்ந்தால் இந்த மண்ணுலகில் தீதில்லை என்பதை -
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டா மன்னும் உயிர்க்கு ?
என்ற குறளிலும், ஒருவன் தர்மம் என்னும் சொல்லைக்கூட சொல்லாமல் தீயவை செய்து ஒழுகினாலும் அவன் புறங்கூறமாட்டான் என்று நற்பெயர் எடுப்பதே நல்லது என்பதை -
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
இக்குறளிலும் விளக்குகிறார்.
இன்னா செய்யாமை பற்றி இறைமறையும் இனிய குறளும் :
இறைமறையில், நன்மையும், தீமையும் சம்மாகமாட்டா. நீங்கள் ( தீமையை ) தன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் நண்பரே போல் ஆகிவிடுவார். 41:5(34) இதை திருக்குறள் நமக்கு தீங்கு செய்பவரை தண்டிப்பது அவர் வெட்கம் அடையும்படி அவருக்கு நல்லதைச் செய்தலே ஆகும். இதனால் அவர் தாம் செய்த செயலுக்கு வருந்தி வெட்கப்பட்டு திருந்துவார் என்பதை -
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
என்ற குறளில் விளக்குகிறார்.
ஷக்கராத் பற்றி திருக்குறள்
எல்லா மனிதருக்கும், இறக்கும் தருவாயில் ‘சக்கராத்' என்ற நிலை ஏற்படும். அந்த நிலை வருவதற்கு முன்பாக எல்லாம் வல்ல இறைவன்பால் ஈமான் கொண்டு நல்வினை ஆற்றிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது திருக்குரான். இதனையே திருவள்ளுவார் நாக்கு பேசமுடியாமல் செத்துவிக்கும் முன்பே நல்ல செயல்களை செய்திடல் வேண்டும் என்ற கருத்து மேலோங்கி கீழ்வரும் குறளில் சொல்லுகிறார்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
எல்லாப்புகழும் இறைவனுக்கே :
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று திருக்குர்ஆன் ‘அல்ஹம்துலில்லாஹ்' என்ற வாக்கியத்தின் மூலம் இயம்புகிறது. இதனை திருவள்ளுவர் தலைமைக் குணங்களுடைய இறைவனின் மெய்யான புகழை இடைவிடாது அன்போடு சொல்லுபவர்பால் ‘இருள்சேர் இருவினையும் சேரா'என்பதை சொல்லுவது மூலம் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதை வலியுறுத்துகிறது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பரிந்தோர் மாட்டு
என்ற குறளில் தெளிவுபடக் கூறுகிறார்.
நன்றி : இஸ்மி
ஜூலை 2005
Saturday, January 19, 2008
எல்லாப் புகழும் இறைவனுக்கே !
எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இந்தி நட்சத்திரம் அமீர் கானின் இயக்கத்தில் வெளிவந்துள்ள "தாரே ஸ்மீன் பர்" இந்தியாவையே கலக்கிக்
கொண்டிருக்கிறது. அத்வானியே பார்த்து, உணர்ச்சி வச்ப்பட்டு கண் கலங்கினார் என்றால் மற்றவற்றை நாம்
ஊகித்துக் கொள்ளலாம். ஒரு பிஞ்சு உள்ளத்தின் எண்ணத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது
இந்தப் ப்டம்.
இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்துள்ள என் பேரன் (உண்மையில் என் 'பெயரனும்' கூட) அந்த இளம்
கதாநாயகனின் அணுகுமுறையை தனதாகவே ஆக்கிக் கொண்டு, நெஞ்சில் அறைகிறார் போல் முன் வைத்த
கேள்வி, "பெற்றோருக்கு பந்தயத்தில் ஆசை என்றால் குதிரைகளை வளர்க்க வேண்டியது தானே அல்லாமல்
ஏன் ' மார்க்' ' மார்க்' என்று குழந்தைகளின் உயிரை எடுக்கிறார்கள்?
இப்போது அல்லாமா இக்பால் எழுதிய ஒரு கவிதையின் ஆங்கிலப் படிவத்தை எனக்கு அனுப்பி இருக்கிறான். குழந்தைகள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். இதோ
அதன் தமிழ் மொழிபெயர்ப்பு -- என்னால் முடிந்த வரை.
என் உள்ளத்தின் ஆழத்தில் ஊறிக்கிடக்கும் சிந்தனைகள் தான் என் உதட்டின் மேற்பரப்புக்கு வருகின்றன.
இறைவா ! என் வாழ்க்கையே ஓர் ஒளி விளக்காய் ஒளிர வேண்டும்; இருளே சூழ்ந்து வீடக் கூடாது.
உலகின் ஒட்டு மொத்த இருளும் என் முன்பிலிருந்து மறைந்து போகட்டும்
என்னுடைய ஒளிமயமான பிரசன்னத்தில் எல்லாமே 'தக்-தக' வென்று மின்னட்டும்.
தனித்து நிற்கும் ஒவ்வொரு மலரும் கூட ஒட்டு மொத்த பூங்காவுக்கும் அழகு சேர்க்கிறது
அதுபோல ஞானத்தின் இருப்பிடமாய் என் வாழ்வு மலர்ந்து மனித சமூகத்துக்கு பெருமை சேர்க்கட்டும்
வெளிச்சத்தை நாடி ஓடித் திரியும் நல்ல உள்ளங்கள் என்னைச்சுற்றி வலம் வரட்டும்.
அத்தகைய ஒளி மிக்கதாய் என் வாழ்க்கை மலரட்டும் - வளரட்டும்
இறைவா ! அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆசையை என்னில் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிய விடு.
நீ தந்த சக்தியின் பயனாய் ஞானத்தை - அறிவை தொடர்ந்து தேடும் வல்ல்மையை எனக்குக் கொடு.
வாழ்வு தேடி, ஆனால் வறுமையில் சிக்கித் தவிக்கும் அத்தனை பேருக்காகவும் என் வாழ்க்கையை
அர்ப்பணிக்கும் மனத் திண்மையைக் கொடு. ஏழை - எளியோர் - இயலாதோர் - பசி முதலான அத்தனை
பிணிகளிலும் அல்லல் படுவோருக்கு கடைசிவரை நான் துணை நிற்க நீ எனக்கு கிருபை செய்.
இறைவா ! நீ ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்களை எங்களுக்குத் தந்துள்ளாய் அவற்றை நாங்கள் தவறாகப்
பயன்படுத்தி விடாமல் எங்களைக் காப்பாற்று. நல்ல வழிகளிலேயே செல்ல கருணை செய்.எல்லோருக்கும்
நன்மையே செய்ய அருளாசி தா.
அல்லாமா இக்பால் மகத்தான கவிஞர். அதில் தர்க்கமில்ல. ஆனால் அந்தக் கவிதையை இந்தப் பிஞ்சு
உள்ளம் தேர்ந்து எடுத்து இருக்கிறது பாருங்கள் அதுதான் என்னை மிகவும் நெகிழ வைக்கிறது.
என் பேரன் அப்துல் ஜப்பார் (செல்லமாக "அபி") என் மூத்த மகன் ஆசிஃப் மீரானின் மூத்த மகன். எல்லாப்
புகழும் இறைவனுக்கே !
அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
இந்தி நட்சத்திரம் அமீர் கானின் இயக்கத்தில் வெளிவந்துள்ள "தாரே ஸ்மீன் பர்" இந்தியாவையே கலக்கிக்
கொண்டிருக்கிறது. அத்வானியே பார்த்து, உணர்ச்சி வச்ப்பட்டு கண் கலங்கினார் என்றால் மற்றவற்றை நாம்
ஊகித்துக் கொள்ளலாம். ஒரு பிஞ்சு உள்ளத்தின் எண்ணத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது
இந்தப் ப்டம்.
இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்துள்ள என் பேரன் (உண்மையில் என் 'பெயரனும்' கூட) அந்த இளம்
கதாநாயகனின் அணுகுமுறையை தனதாகவே ஆக்கிக் கொண்டு, நெஞ்சில் அறைகிறார் போல் முன் வைத்த
கேள்வி, "பெற்றோருக்கு பந்தயத்தில் ஆசை என்றால் குதிரைகளை வளர்க்க வேண்டியது தானே அல்லாமல்
ஏன் ' மார்க்' ' மார்க்' என்று குழந்தைகளின் உயிரை எடுக்கிறார்கள்?
இப்போது அல்லாமா இக்பால் எழுதிய ஒரு கவிதையின் ஆங்கிலப் படிவத்தை எனக்கு அனுப்பி இருக்கிறான். குழந்தைகள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். இதோ
அதன் தமிழ் மொழிபெயர்ப்பு -- என்னால் முடிந்த வரை.
என் உள்ளத்தின் ஆழத்தில் ஊறிக்கிடக்கும் சிந்தனைகள் தான் என் உதட்டின் மேற்பரப்புக்கு வருகின்றன.
இறைவா ! என் வாழ்க்கையே ஓர் ஒளி விளக்காய் ஒளிர வேண்டும்; இருளே சூழ்ந்து வீடக் கூடாது.
உலகின் ஒட்டு மொத்த இருளும் என் முன்பிலிருந்து மறைந்து போகட்டும்
என்னுடைய ஒளிமயமான பிரசன்னத்தில் எல்லாமே 'தக்-தக' வென்று மின்னட்டும்.
தனித்து நிற்கும் ஒவ்வொரு மலரும் கூட ஒட்டு மொத்த பூங்காவுக்கும் அழகு சேர்க்கிறது
அதுபோல ஞானத்தின் இருப்பிடமாய் என் வாழ்வு மலர்ந்து மனித சமூகத்துக்கு பெருமை சேர்க்கட்டும்
வெளிச்சத்தை நாடி ஓடித் திரியும் நல்ல உள்ளங்கள் என்னைச்சுற்றி வலம் வரட்டும்.
அத்தகைய ஒளி மிக்கதாய் என் வாழ்க்கை மலரட்டும் - வளரட்டும்
இறைவா ! அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆசையை என்னில் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிய விடு.
நீ தந்த சக்தியின் பயனாய் ஞானத்தை - அறிவை தொடர்ந்து தேடும் வல்ல்மையை எனக்குக் கொடு.
வாழ்வு தேடி, ஆனால் வறுமையில் சிக்கித் தவிக்கும் அத்தனை பேருக்காகவும் என் வாழ்க்கையை
அர்ப்பணிக்கும் மனத் திண்மையைக் கொடு. ஏழை - எளியோர் - இயலாதோர் - பசி முதலான அத்தனை
பிணிகளிலும் அல்லல் படுவோருக்கு கடைசிவரை நான் துணை நிற்க நீ எனக்கு கிருபை செய்.
இறைவா ! நீ ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்களை எங்களுக்குத் தந்துள்ளாய் அவற்றை நாங்கள் தவறாகப்
பயன்படுத்தி விடாமல் எங்களைக் காப்பாற்று. நல்ல வழிகளிலேயே செல்ல கருணை செய்.எல்லோருக்கும்
நன்மையே செய்ய அருளாசி தா.
அல்லாமா இக்பால் மகத்தான கவிஞர். அதில் தர்க்கமில்ல. ஆனால் அந்தக் கவிதையை இந்தப் பிஞ்சு
உள்ளம் தேர்ந்து எடுத்து இருக்கிறது பாருங்கள் அதுதான் என்னை மிகவும் நெகிழ வைக்கிறது.
என் பேரன் அப்துல் ஜப்பார் (செல்லமாக "அபி") என் மூத்த மகன் ஆசிஃப் மீரானின் மூத்த மகன். எல்லாப்
புகழும் இறைவனுக்கே !
அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
Labels:
அமீர்கான்,
அல்லாமா இக்பால்,
இறைவன்,
புகழ்,
பேரன்
Subscribe to:
Posts (Atom)