Wednesday, September 24, 2008

இறைவனின் நினைப்பு!

இறைவனின் நினைப்பு!
----------------------------
செவிடர் குருடர் ஊமையர்

மூளை வளர்ச்சி குன்றியோர்

பக்கவாதம் கீழ்வாதம் முகவாதம்

இளம்பிள்ளை வாதம்

விபத்திலோ சர்க்கரையினாலோ

கைகால்கள் துண்டிக்கப்பட்டோர்

தொழுநோயாளர் போன்ற

ஊனமுற்றோரைச் சந்திக்க நேர்கையில்

மனம் வெதும்பார்

உள்ளம் உருகார்

வேதனை படார் தான் யார்?


இப்படியும் படைத்திருக்கின்றானே!

இதுவென்ன?

அச்சுறுத்தலா? தண்டனையா?

சமுதாயத்துக்கோர் பாடமா? உதாரணமா?

கல்மனம் கொண்டவனா?

மனமே இல்லாதவனா?

இவன் இறைவன் தானா? என

நொந்துபோய்ப் பேசுவதும்

படைத்தவனை நோதலும்

நியாயம் தான்! -ஆயினும்


ஊனமின்றி இருக்கும் நம்மில்

எத்தனை பேர்

இதனை உணர்கின்றார்?

இறைவனை நினைக்கின்றார்?

நன்றி செலுத்துகின்றார்?

வலியிலும் இன்னலிலும் மட்டுமே

இறைவனை நினைப்பவரன்றோ? நாம்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.





கனிம நீர்!
-------------

குடிக்க குளிக்க
சமைக்க சலவைக்காக
கழுவ சுத்தமாயிருக்க
இறைவன் அளித்த கொடை
நீர்!


ஆறாய் வரும் வழியில்
கழிவுகளையும் இரசாயனங்களையும்
கலக்கச் செய்கின்றார்
மனிதர்களில்
ஓர் சாரார்!


விவசாயத்துக்கும்
மனிதத் தேவைகட்காகவும்
பயன்படுத்திக்
கொள்கின்றார்
ஓர் சாரார்!


புட்டியில் அடைத்து
'கனிம நீர்'
எனும் பெயரில்
காசுக்கு விற்கின்றார்
ஓர் சாரார்!


அதில் அடைந்து கிடக்கும்
நுண்கிருமிகள் எத்தனை?
அறியாமலேயே வாங்கி
பருகிக் கொண்டிருக்கின்றார்
ஓர் சாரார்!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.



Last update : 23-09-2008 22:49







Users' Comments

நன்றி: அதிகாலை.




அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/

drimamgm@hotmail.com

No comments: