Wednesday, February 18, 2009

துபாயில் வானலை வளர்தமிழ் கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் வானலை வளர்தமிழ் கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு நடத்தும் மாதாந்திர கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் பவனில் 20.02.2009 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிம்மபாரதி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் வானலை வளர்தமிழ் அமைப்பின் தனிச்சுற்று இதழான தமிழ்த்தேரின் பருவம் மற்றும் சாரல் இதழ்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும். மேலும் அமீரக தமிழ்க் கவிஞர்கள் தங்களது கவிதையினை வாசிப்பர்.

அனைவரும் வருகை புரிந்து தமிழ் அமுதம் பருக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு reachsimma@gmail.com