Wednesday, August 5, 2009

Two-Faces of Barack Obama

Two-Faces of Barack Obama

Politicians rarely make unequivocal statements, because it gives them the option to alter their position with the change of circumstances. They find it difficult to express clear statements and make firm commitments. Are politicians two-faced by their very nature or perhaps they are compelled to be two-faced due to the system in place. In a democracy, politicians hunt for votes from various parties, often with conflicting interests. Thus, they need to appease various factions, sounding sweet enough to win the votes.

In the rare occasion when a politician makes an unequivocal statement, at some point it is clarified. Addressing AIPAC (American Israel Public Affairs Committee) Policy Conference in 2008, Obama as the Presidential candidate made the unequivocal statement[1] with regards to the status of Jerusalem:



"Jerusalem will remain the capital of Israel and it must remain undivided"

The clear implication is, Israel will have full sovereignty over the area, and there is no going back to the 1967 borders in line with the various UN resolutions issued. Of course, this is Israel not Iraq! It is the helpless Jews; the perpetual victims of anti-Semitism who are always in need to be defended from the Arab terrorists as recently seen in the carnage of Gaza!

Obama sounded as if he was handing over the keys of Jerusalem to the Rabbis. Such a statement would leave little to offer to the Arabs. Hence, Obama’s campaign adviser subsequently clarified the statement, and stated:

"Jerusalem is a final status issue, which means it has to be negotiated between the two parties"1

How can the capital of a state be subjected to negotiation? If the negotiation is about sovereignty of the Arabs and Jews, then the reference to undivided capital is false. In line with the two-faced nature of a typical politician, at the Cairo speech Obama said Israel has to implement an immediate and comprehensive settlement freeze. How can Jerusalem be the undivided capital of Israel, if the Israeli Jews cannot occupy parts of it? Obama was either lying at the AIPAC conference or at the Cairo conference!

The issue of freezing Israeli settlement in West Bank was already understood to be a unilateral obligation as per the UN resolutions. This was reinforced by the Cairo statement. However, once again, two-faced nature of Barack Obama surfaces, now the Israeli settlement freeze has a price, which is some sort of concession from the Arab countries[ii].

It is odd that the weaker party in this case, the Palestinians have to initiate the move by offering concession. However, I guess generosity is more often seen as an Arab trait, whereas being miserly is seen as a Jewish trait!

The ping-pong game of who should give what as a starting point continues, there is no sign of any just solution. In the mean time, Israel as the stronger party continues to create new realities on the ground that moves the goal post of discussion. The international community are helpless, all they can do is ‘object’ – are they trembling with fears of being accused of anti-Semitism.

The old Native American saying: white man speaks with two tongues, applying that principle just replace the white man for any politician, black or white, Condoleezza Rice or Dick Cheney, George Bush or Barack Obama, makes no difference. Politicians are dirty, they are two-faced, and no peaceful solution based on justice is likely to emanate from them.

For sure, peace cannot exist without justice, the only alternative being the elimination of one of the conflicting parties. Since justice is unlikely then think of annihilation of one of the parties as the only solution for peace, think of the Palestinian Diaspora, the concentration camp of Gaza, the prisons in West Bank, and the slow holocaust that began from 1948 and continues. This explains the undeclared official Israeli policy of targeting Palestinian children and mothers.

Yamin Zakaria (yamin@radicalviews.org)
London, UK

www.radicalviews.org
http://yaminzakaria.blogspot.com
August 2009





[1]http://www.jpost.com/servlet/Satellite?cid=1212659672984&pagename=JPost%2FJPArticle%2FShowFull

[ii] http://www.haaretz.com/hasen/spages/1103685.html

positive thinking and self contentment

positive thinking and self contentment

I Am Thankful :

For the wife who says it’s hot dogs tonight, because she is at home with me and not roaming around.

For the husband who is on the sofa being a couch potato, because he is at home with me and not out at the bars.

For the teenager who is complaining about doing dishes because it means she is at home, not on the streets.

For the taxes I pay, because it means I am employed.

For the mess to clean after a party , because it means i have been surrounded by friends.

For the clothes that fit a little too snug, because it means I have enough to eat.

For my shadow that watches me work, because it means I am out in the sunshine

For a lawn that needs moving, windows that need cleaning and gutters that need fixing, because it means I have a home.

For all the complaining I hear about the Government because it means we have freedom of speech.

For the parking spot I find at the far end of the parking lot because it means I am capable of walking and I have been blessed with transportation.

For my huge heating bill because it means I am warm.

For the lady behind me in church who sings off key because it means I can hear.

For the pile of laundry and ironing because it means I have clothes to wear.

For Weariness and Aching Muscles at the end of the day because it means I have been capable of working hard.

For the Alarm that goes off in the early morning hours because it means I am alive.

And Finally, for too much email because it means I have friends who are thinking of me.

Send this to some you care about. I just did.

LIVE WELL, LAUGH OFTEM, & LOVE WITH ALL OF YOUR HEART.

அறிவைத் தேடுவோம் !

அறிவைத் தேடுவோம் !

( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ! )


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=171



இறைவனின் படைப்புகளில் எத்தனை விதமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்கின்றன. விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை பகுத்தறிவென்னும் ஓர் அறிவை அதிகப்படுத்தி ஆறறிவு படைப்பாகவும் படைத்துள்ள இறைவன் அறிவையும், அனுபவத்தையும் தேடும் விஷயத்தில் மட்டும் மனிதனை விட விலங்குகள், பறவைகளை சிறப்பித்தே வைத்திருக் கிறான். மனிதன் பிறந்து வளர்ந்து வரும் பருவத்திலேதான் கொஞ்சம், கொஞ்சமாய் அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். அதுவும் அவனாக முயற்சி செய்யும் பொருட்டே அவனுக்கு அது வசமாகிறது. ஆனால் விலங்குகள், பறவைகளுக்கு அப்படியல்ல அவைகள் பிறக்கும் போதே அடிப்படை அறிவையும், அனுபவத்தையும் கொண்டே பிறந்து விடுகின்றன.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம் ! பசி என்ற உணர்தல் உயிருள்ள எல்லாவற்றிற்கும் பொதுவானது. தாவரங் களுக்கும் கூட பொருந்தும். சரியான முறையில் தாவரங்களான செடி, கொடிகளுக்குரிய உணவு ஆதாரமான நீரை சரிவர கொடுக்கவில்லை யென்றால் அது தானாகவே வாடி கருகி அழிந்துவிடும். ஆக பசியென்பது உயிருள்ளவைகளுக்கு பொதுவானதே ! இதனடிப்படையில் பசி என்ற உணர்தல் ஏற்படும்போது பிறந்த குட்டிகளை தேடிப்போய் விலங்குகள் பாலூட்டுவதில்லை. குட்டிகளே தாயின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து பசி போக்கிக்கொள்ளும். ஆனால் மனிதனின் நிலையோ தலைகீழ் ! பசியை உணரும் குழந்தை தாயின் மடுவை தேடிப்போய் குடிப்பதில்லை. பசியால் அழும் குழந்தையை ஓடிப்போய் தூக்கி கொள்ளும் தாய் தன் மடியில் போட்டு பாலூட்டுகிறாள். தன் மடுவை குழந்தையின் வாயில் வைப்பது கூட தாய்தான் ! மடுவை தேடிப்போய் வாய் வைக்கும் அறிவை மனிதனாய் பிறந்த குழந்தைக்கு இறைவன் கொடுக்கவில்லை !
இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் ! விலங்குகளில் பூனை தனி ரகமாகும். பூனை மலம் கழிக்கும் முன்பே மண்ணில் குழிதோண்டி விட்டு அந்தக் குழிக்குள் தான் மலம் கழிக்கும் பிறகு அந்தக் குழியை தோண்டிய மண்ணைக் கொண்டே மூடி விடும். மூடிய பிறகு அந்த இடத்தை முகர்ந்து பார்க்கும். மலக்கழிவின் வாடை வந்தால் மீண்டும் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடும். வாடை வராவிட்டால் போய்விடும் ! இந்த அறிவையும் அனுபவத்தை யும் எந்த தாய் பூனையும் குட்டிகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. விலங்குகள் தானாகவே அந்த அறிவைப் பெற்று விடுகின்றன. ஆனால் மனிதன் குழந்தையாய் தவழும் பருவத்தில், தான் கழித்த மலத்தை தானே எடுத்து வாயில் வைக்கும் காட்சிகளை பார்த்து தான் மனிதன் பிறக்கும் போது அறிவில்லாதவனாகவே பிறக்கிறான். என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

மனிதன் வளரும் போது தான் அறிவைப் பெறுகிறான். மலம், ஜலம் கழிக்கும் விஷயத்தில் சாதாரண ஒரு பூனைக்கு இருக்கும் நாகரீகம் கூட இன்று ஆறறவுக்கு சொந்தமான மனிதனிடம் இருப்பதில்லை. என்பதை நினைக்கும் போது விலங்குகளை விடவா மனிதன் கேவலமாக போய் விட்டான்? என வெட்கப்பட வேண்டியுள்ளது. அதனால் தான் மனிதன் தெருக்களிலும், நடைபாதைகளிலும் மலம் ஜலம் கழித்து விட்டு அதை அப்படியே போட்டு விட்டு போய் விடுகிறான் ! பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்கும் கேவலத்தை மனிதன் எங்கிருந்து கற்றானோ? தெரியவில்லை? நிச்சயம் விலங்குகளிடமிருந்து கற்றிருக்க மாட்டான் ! காரணம் பூனை போன்ற நாகரீக விலங்குகள் அதற்கு இடம் கொடுக்காது ! இன்னொரு விஷயத்தையும் நாம் யோசிப்போம் ! விலங்குகள், பறவைகள் தான் ஈன்ற குட்டிகளையோ, குஞ்சுகளையோ பிற விலங்குகள் அல்லது மனிதர்கள் தொட முயற்சித்தால் கூட தாய் பறவை அல்லது தாய் விலங்கு நம்மீது பாய்ந்து பிராண்டி விடும். தன் குஞ்சுகளை, குட்டிகளை பாதுகாப்பதில் அப்படியொரு அக்கறை உணர்வை அவைகளுக்கு இறைவன் கொடுத்துள்ளான்.

ஆனால் ஆறறிவு பெற்றுள்ள மனித சமுதாயமோ தான் பெற்ற குழந்தையை “பெண் சிசு” என்ற காரணத்தினால் தானே கள்ளிப்பால் கொடுத்து படு கொலை செய்து வரும் கொடுமைகளை என்னவென்று சொல்வது? இந்த ஈனச்செயலை மனிதன் எங்கிருந்து கற்றான்? விலங்குகளிட மிருந்தா? சீ…. சீ நிச்சயமாக இருக்காது ! மனிதனை விட மிருகங்கள் எவ்வளவோ மேல் ! சிறுத்தை குட்டிகளுக்கு பாலூட்டிய நாய், நாய்க் குட்டிகளுக்கு பாலூட்டிய ஆடு என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோமே, இது விலங்குகளிடமிருக்கும் இரக்கப் பண்புகள் தானே? ஆனால் இதே ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த தாயை இழந்த குழந்தைக்கு மேல் ஜாதி பெண்ணொருத்தி பாலூட்டி உயிர் காப்பாற்றி விடுவாரா? விலங்குகளிடமிருக்கும் ஈவு இரக்கம் கூட மனிதர்களிடம் இல்லாதிருப்பது வெட்கக் கேடல்லவா? மனிதன் வளரும் போதே அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது நியதி ! மனிதன் தேடும் அறிவு அது அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள் ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அறிவை தேடும் முயற்சியில் ஒவ்வொரு மனிதனும் சிரத்தை எடுத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் !
சீனா சென்றேனும் சீர்கல்வி (அறிவு) தேடுக என முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதும், எவனொருவன் அறிவை தேடும் முயற்சியில் ஒரு அடி எடுத்து வைக்கிறானோ? அம்மனிதன் சுவர்க்கம் செல்வதற்கு ஒரு அடியை இறைவன் சுலபமாக்கி கொடுக்கிறான் என்றும் முகம்மது நபி (ஸல்) அவர்களே கூறி இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அறிவை தேடிக்கொள்வது எவ்வளவு அவசிய மென்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது ! அறிவென்னும் தேடலை காலத்திற்குத் தகுந்தாற் போல அமைத்துக் கொள்வது தான் மிகவும் புத்திசாலித்தனம். தற்போதைய அறிவுத்தேடல் என்பது கம்ப்யூட்டர் (கணிணி) மயமாகி விட்டது. ஒரு மனிதனின் அறிவுப் பசிக்குத் தேவையான தீனியை (கணிணி) உலகம் குறைவின்றி வழங்குகிறது என்பது மிகையல்ல !

“கரணம் தப்பினால் மரணம்” என்ற பழமொழி கம்ப்யூட்டரை நாடும் மனிதனுக்கும் பொருந்தும். கணிணி மூலம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல அறிவாற்றலையும் பெற முடியும் ! அதே நேரத்தில் தம் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதற் கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி கொள்ள முடியும். உலகின் மூலை முடுக்குகளில் நடக்கும் எந்தவொரு விஷயமானாலும் அடுத்த நிமிடமல்ல, நேரடியாகவே (கணிணி) இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இணையதளத்தின் அடிப்படை அறிவு மிகவும் முக்கியம் ! இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இணையதள அறிவை தேடும் இன்றைய இளைஞர்களில் பெரும் பாலானோர் தமது விலை மதிப்பில்லா நேரத்தை ஆபாச காட்சிகளை பார்ப்பதற்கும், ஆபாச நாரசார செய்திகளை படிப்பதற்கும் செலவிடுவ தென்பது தன் விரல் கொண்டு தன் கண்ணையே குருடாக்கி கொள்வதற்கு ஒப்பாகும். ஆக்கப்பூர்வமான அறிவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட “டேட்டிங்” வசதியை காதலர்களின் காம உணர்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் ஹைவே (high way) யாக மாற்றிக்கொள்வது அபத்தமானதில்லையா? கணிணி மூலம் கடலை போடும் காதலர்களே ! கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?

”டேட்டிங்” மூலம் தன் கற்பை பறி கொடுத்த அபலை பெண்களின் பரிதாப நிலையை என்னவென்று சொல்வது? தெருவுக்கு தெரு மளிகை கடைகள் வைத்த காலம் போய், “புரெளசிங் சென்டர்” வைக்கும் காலம் மாறிவிட்டது. இத்தகைய இண்டர்நெட் சென்டர் களெல்லாம் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்புக்குட் படுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வருவது ஏன்? அறிவை தேட வேண்டிய சென்டர்களுக்குப் போய் அழிவை தேடிக் கொள்ளும் இளம் ஆண்களையும், பெண்களையும் பாதுகாக்கவே காவல் துறையினரின் இந்த கண்காணிப்பு நடவடிக்கை ! வேறு வழியின்றி இதை நமது எதிர்கால தலைமுறையினரின் ஒழுக்க வாழ்வியலுக்குரிய பாதுகாப்பு அரணாக எடுத்துக் கொள்ளவேண்டும். இணையதளங்கள் வந்தபிறகு தான் பெரும்பாலான இளைஞர்கள் வழி தவறி போய்க்கொண்டிருக் கிறார்கள் என்ற பெரியோர்களின் குற்றச்சாட்டையும் புறக்கனித்துவிட முடியாது ! அதற்காக இணைய தளங்களே வேண்டாமென சொல்லிட முடியாது.

ஒரு மனிதனின் அறிவுத்தேடல் என்பது தொடக்கப்பள்ளி யிலிருந்து கல்லூரி வரை தான் என நினைத்தால் நிச்சயமாக அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் மரணிக்கும் வரை அறிவை தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என சொல்கிறார் ஹஸ்லிட் எனும் அறிஞர். மேலும் நம்மில் பலர் படித்து பட்டம்பெற்று ஒரு வேலையில் சேர்ந்த பின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாட செய்திகளை கூட படிப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் இறந்து விட்டால், இவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் இவர்களின் கல்லறைகளில் 30 வயதில் இறந்துபோன இம்மனிதனை 60 வயதில் அடக்கியுள்ளோம் என எழுதி வைக்க வேண்டும் என்கிறார். ஹஸ்லிட் எனும் பிரபல அறிஞர். இவரது கூற்று மனிதன் தன் மரணம் வரைக்கும் அறிவை தேடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தான். அத்தகைய அறிவை நூலகங்களுக்கு (Library) சென்று தேட முயற்சிக்க வேண்டும்.

அவசர யுகத்தில் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியா விட்டால் குறைந்தபட்சம் அன்றாட நாட்டுநடப்பு செய்திகளையாவது கேட்க, படிக்க ஆர்வம் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு தொலைக் காட்சிப்பெட்டி வைத்தது தொலை தூரத்தில் நடக்கும் செய்திகளை தெரிந்து கொள்ளத்தானே தவிர, தொல்லை தரும் காட்சிகளை பார்த்து வீணாவதற்கல்ல ! ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் செய்தி கேட்பதா? (சீரியல்) தொடர் பார்ப்பதா? என வாக்கெடுப்பு நடத்தினால் அதிக வாக்கெடுப்பு வித்தியாசத்தில் அல்ல. மொத்த வாக்குகளும் (சீரியல்) தொடருக்கு கிடைத்து விடும். அதன் விளைவு கள்ளக்காதலை கண்டித்த மகனை தாயும்,கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தது. கள்ளக்காதலை கண்டித்த புருஷனை மனைவியும், அவளது காதலனும் சேர்ந்து துண்டுதுண்டாக வெட்டி வீசியது போன்ற கொடூரமான செய்திகளே இன்றைய நாளிதழ்களின் முக்கிய நிகழ்வுகளாய் பதிவாகி வருகின்றன. இது போன்ற கேடுகெட்ட வக்கிரமான செயல்கள் நடப்பதற்கு முழுக்காரணமும் சினிமா படங்களும், டி.வி. சீரியல் தொடர்களும் தான் ! தற்போதைய டி.வி. தொடர்களில் அதிகமாக வரும் கதாபாத்திரங்கள் ஒருவனை இரண்டு பெண்கள் அடைய முயற்சிப்பதும் ஒருத்தியை இரண்டு ஆண்கள் அடைய முயற்சிப்பது மான படுகேவலமான கன்றாவிகளை கதையென ஒளிபரப்பி வருபவர் களின் மூளையைச் சுற்றி மண்டைக்குள் ஓடிக் கொண்டிருப்பது நிச்சயம் சாக்கடை கழிவு நீராகத்தானிருக்கும். இப்படிப்பட்ட கீழ்த் தரமான சீரியல் தொடர்களுக்காக நேரத்தை செலவிடுபவர்கள் அதில் கொஞ்சத்தையேனும் அறிவை வளர்க்கும் சிறந்த நூல்களை படிக்க செலவிட்டால் போதும் !

தன்னைச் சுற்றியுள்ள மாசுக்களை களைந்து விடலாம். எதிர்காலத்தில் ஆரோக்கியமான அறிவுள்ள சமுதாயம் உருவாக இப்போதே நாம் எல்லோரும் அறிவை தேடி பயணிப்போம் !

அல்குர்ஆன் ஓர் அற்புதம் - “இறையருட் கவிமணி” தமிழ்ச் செம்மல் பேராசிரியர் கா. அபதுல் கபூர், எம்.ஏ.டி.லிட்.

அல்குர்ஆன் ஓர் அற்புதம் - “இறையருட் கவிமணி” தமிழ்ச் செம்மல் பேராசிரியர் கா. அபதுல் கபூர், எம்.ஏ.டி.லிட்.

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=114


வையகத்து மக்கள் வாய்பிளந்து வியக்கின்ற அற்புதங்கள் பலவற்றை ஏடுகள் எடுத்துக் காட்டுகின்றன. எகிப்து நாட்டில் ஏற்றத்துடன் மிளிர்கின்ற பிரமிடுகள் எனப்படும் பட்டைக் கோபுரங்கள். அவற்றின் அருகாமையில் 66 அடி உயரத்திலும் 175 அடி நீளத்திலும் ஒற்றைக் கல்லில் உருவாக்கப் பட்டுள்ள ஸஃபிங்கஸ் எனப்படும் சிங்க வடிவச் சிலை. இராக் நாட்டில் புராத் நதிக்கரையில் திகழ்ந்த பண்டைய பாபிலோனியாவின் தொங்குதோட்டம். கிரேக்க நாட்டில் 127 சலவைக் கற்களின் மீது நிறுவப்பட்டிருக்கும் 60 அடி உயரமுடைய ஆர்ட்டிமிஸ் ஆலயம். ஹெலிகார்னஸஸ் என்னுமிடத்தில் எழில்மிகு தோற்றத்துடன் எழுப்பப்பட்ட மெளஸலஸ் மண்ணறை. ரோட்ஸ் நகரத்தில் கிரேக்கர்களின் கதிர்க்கடவுளுக்காக 109 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வெண்கலச் சிலை. அலெக் சாந்திரியாவில் 600 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம். சீன நாட்டின் வட எல்லையில் 2550 மைல் நீளத்தில் நிருமாணிக்கப்பட்ட உயரமான நெடுஞ்சுவர். பைசா நகரத்தில் 116 அடி உயரத்தில் சாய்ந்து நிற்கின்ற கோபுரம். பேரரசர் ஷாஜஹான் துணைவியார் மீது கொண்ட காதற் சின்னம் கண்ணீர்த்துளியாக உறைந்துவிட்ட தாஜ் மஹால். இவைகளெல்லாம் பாருலகம் கண்ட பேரற்புதங் களாகப் போற்றப்படுகின்றன. இவற்றினும் மேலான சில அற்புதங்களைப் பற்றி மனிதன் சிந்திப்பதே இல்லை.
மலைகளைப் போன்று உயரமாக எழுந்த அலைகளின் நடுவே மரத்தாலும் ஆணிகளாலும் அமைக்கப்பட்ட ஒரு கலத்தில் நபி நூஹ் (அலை) அவர்களும் குழுவினரும் எத்தகைய இடையூறுமின்றிக் காப்பாற்றப்படுகின்றனர். கொடியோன் நம்ரூதின் ஆணைப்படிக் கோபுரமாகக் கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குண்டத்தில் இறைநேயர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கி எறியப்பட்டபோது நெருப்புக் குண்டம் குளிர்ச்சிமிக்க தண்ணீர்க் குளம் போன்று மாறிவிடுகின்றது. அட்டதிசை போற்றும் சுலைமான் நபி (அலை) அவர்களின் அரசவையில் ஸபா நாட்டரசி பல்கீஸின் அரியணை நாடியவுடன் கொணரப்படுகிறது. முன்னவன் தூதர் மூஸா (அலை) அவர்களின் ஆஸாக் கோல் பாம்பாக மாறுகின்றது. பாறையில் அடித்தவுடன் நீரூற்றுக்கள் தோன்றுகின்றன. இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றியே பிறக்கின்றார்கள். தொட்டிற் பருவத்திலேயே தெளிவாக உரையாடுகின்றார்கள். இறை யாணைப்படி இறந்தோரை எழுப்புகின்றார்கள். பிறவிக் குருடர்களையும், பெரு நோயாளிகளையும் குணப்படுத்து கின்றார்கள்.
பாலைவன நாட்டின் பாரான் பள்ளத்தாக்கில் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தன்னந்தனியாகக் கிடந்த புனிதக் குழவியொன்றன் பூவடிகள் பட்டுப் பொங்கியெழுந்த நீரூற்றொன்று, இற்றைநாள் வரையில் வற்றாமலிருந்து வையகத்து மக்களுக்கெல்லாம் வாய்கமழ, மனங்குளிர ஜம்ஜம்மென்று நீரூட்டி வருகின்றது. அந்த ஜம்ஜம் ஊற்றின் கரையிலேயே எழுந்த மக்கமா நகரத்தில் அனாதையாகப் பிறந்து எழுதப் படிக்கத் தெரியாதிருந்த ஒருவரால் தோற்று விக்கப்பட்ட இஸ்லாமிய நாகரீகம் இன்று உலகளாவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் நெறியின் அடிப்படை யாகவும், ஆதாரமாகவும் அமைந்துள்ள அல்- குர்- ஆன் என்னும் அருள்மறை அவனியிலுள்ள நூல்கள் அனைத் திற்கும் அன்னையாகத் திகழ்ந்து அற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக் குலுங்கும் அறிவு வளர்ச்சியினால் புதுமை மாறிவிடாமல், இன்றளவும் இணையற்ற நூலாய் விளங்கி வருகின்றது. இத்தகைய அற்புதங்களை ஆறறிவு படைத்த அற்புத மனிதன் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
இறைத் தூதர்களாக இவ்வுலகில் வாழ்ந்த நபிமார் களெல்லாம் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக் கேற்ற அற்புதங் களைக் காட்டிச் சென்றார்கள். இசை இன்பத்தில் இதயத்தைப் பறிகொடுத்து வாழ்ந்த மக்களிடையே தோன்றிய ஹலரத் தாவூத் (அலை) அவர்கள் நாத வேதமாகிய சபூர் மறையை ஓதிக் காட்டினார்கள். மந்திரவாதிகளின் மாயத் தந்திரங் களெல்லாம் மேலோங்கி நின்ற காலத்தில் வாழ்ந்த ஹலரத் மூஸா (அலை) ஆஸாக் கோலால் அற்புதம் செய்தார்கள். மருத்துவத் துறையில் மனத்தைச் செலுத்திய மக்களிடையே வாழ்ந்த ஹலரத் ஈஸா (அலை) அவர்கள் தீராப் பிணிகளைத் தீர்த்து வைத்தார்கள். மொழி வெறியிலும், இலக்கிய இன்பத் திலும், கவிதைச் சுவையிலும் மெய்ம்மறந்து திளைத்திருந்த மக்களுக்கு அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறையருள் இலக்கியமாகிய திருக்குர்ஆனை வழங்கினார்கள். பிற நபிமார் காட்டிய அற்புதங்களெல்லாம் ஏடு கமழும் பேருண்மைகளாக விளங்க அண்ணலார் காட்டிய அற்புதம் என்றும் எல்லோரும் நேரிற் காணும் பாருண்மையாக நிலைத்து விட்டது.
“அற்புதங்கள் யாவினையும் அவைமிகைத்து நிற்பனவாம் நிற்கவில்லை முந்தைநபி நிகழ்த்துமற்றை அற்புதமே”
என்பது காலமெல்லாம் கமழும் கஸீதத்துல் புர்தா என்னும் கவிதைச் செல்வம் வழங்கியுள்ள இமாம் பூஸ்ரீ (ரஹ்) அவர்கள் ’தாமத்ல தைனா’ எனத் தொடங்கும் பாவடிகளில் பதித்துள்ள கருத்தாகும். பெற்றெடுத்த குழவிகளையே உயிருடன் குழிதோண்டிப் புதைத்துக் கொடுமையின் கொடு முடியிலேறிக் கொக்கரித்து நின்ற கொடியவர்களின் கன் னெஞ்சங்களைத் தண்ணீர் போல மாற்றிய அற்புதத்தை மாநிலத்தில் வேறெங்கே காண முடியும்?
பளிச்செனத் தோன்றிய வான்மறையின் வெளிச்சத்திற்கு முன்னால் இலக்கிய அரக்கர்களெல்லாம் கண்ணைத் திறக்க முடியாமல் வாயை மூடி மெளனிகளாயினர். நானில நாயனின் மறை நாதத்தைச் செவிமடுத்த மாத்திரத்தில் ஆடிய அவர்களின் நாடிகளெல்லாம் அடங்கியொடுங்கி இதயங்களெல்லாம் இளகியோடின. வானின்று இறங்கிய பேரமுதம் அவர்களுக்குத் தேனினும் பாலினும் தெவிட்டாக் கனியிலும் தித்தித்தது. வள்ளல் நாயகமவர்களின் தலையைக் கொய்வதற்காக வஞ்சினங் கூறி வாளேந்திப் புறப்பட்டுச் சென்ற மாவீரர் உமறு, திருமறை வசனங்கள் சிலவற்றைக் கேட்டதும் மனந்திருந்தி மாநபியின் தாளடைந்து மறை நெறியைத் தழுவுகின்றார். திருநபியைத் திருத்துவதற்காகத் திட்டமிட்டு வந்த தீரர் உத்பா, திருமறை ஓதக் கேட்டதும் ஊமையைப் போல் ஒன்றும் பேசாமல், சிங்கத்தைக் கண்ட வரையாடு போன்று அசையாமல் நிற்கின்றார். உத்தமத் திருநபிக்குப் புத்தி கூற வந்த வலீதிப்னு முகைரா,”தேனீ” என்னும் அத்தியாயத்தைக் கேட்டு மறைமலர் நுகரும் தேனீயாக மாறிவிடுகிறார். பிரசித்தி பெற்ற மந்திரவாதி லம்மாதிப்னு ஸஃலத்துல் அஜ்தீ, துமாமத் இப்னு உதால், அபூ தர்ருல் கப்பார் முதலிய ஆயிரக்கணக்கானோரின் திசைமாறிய வாழ்க்கையில் திருமறையே ஒரு திருப்பு மையமாக அமைந்தது. கவிதச் செருக்கு மண்டையிலேறி யிருந்த அண்டாக்கவிஞன் இன்பத் திருமறையில் ஈரைந்து சொற்களைக் கொண்டிலங்கும் “அல் கவ்தர்” அத்தியாயத்தைச் செவி மடுத்ததும் ”மானிடர் மொழி யீதன்று” (மா ஹாதா கவ்லுல் பஷர்) என்பதாக வியந்து மொழிந்து தலைகுனிந்த நிகழ்ச்சியை அறிகின்றோம்.
அருமை நாயகமவர்களின் திருமறை வெளிப்பாடெனக் கூறுவதெல்லாம் கற்பனையின் களியாட்டே யென்றும், பித்தரின் பிதற்றலென்றும் சூனியக்காரரின் சூழ்ச்சி யென்றும் குறை கூறிக் கொண்டிருந்த மக்கத்து மக்களுக்கு மாபெரியோன் விடுத்த அறைகூவல் உலையாத இறை மறையில் நிலையாக இடம்பெற்றுள்ளது.
”நாம் நம் அடியாருக்கு அருளியதில் நீங்கள் ஐயம் கொண்டு நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அல்லாஹ்வைத் தவிர - உங்கள் உதவியாளர்களையும் நீங்கள் துணைக் கழைத்துக் கொண்டு இதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்” (2:23)
இவ்வறை கூவலை ஏற்கும் வகையில் தொடக்கத்திலே தோன்றிய ஓரிரு சலசலப்புகள் மக்கள் மன்றத்திலே நகைப்பிற் கிடமாகி அழிந்தொழிந்தன. பிற்காலத்தில் திரு மறையின் அறைகூவலை ஏற்கும் வகையில் வரிந்து கட்டிக் கொண்டு வந்த வில்லியம் மூர் போன்ற பாதிரிமார்களும் வித்தகர்களும் படுதோல்வி கண்டதோடு மட்டுமன்றி வான் மறையை வாய்விட்டுப் பாராட்டவும் தொடங்கினர். “There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text” (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது) என்பார் பாதிரியார் வில்லியம் மூர் “That the best of Arab writers has never succeded in producing anything equal in merit to the Holy Quran itself is not surprising” (மிகச்சிறந்த அரபி எழுத்தாளர் ஒருவர் கூடப் புனிதக் குர்ஆனின் ஆற்றலுக்கு ஈடானதொன்றை ஆக்கியளிப்பதில் என்றுமே வெற்றி கண்ட தில்லை என்பது வியப்பிற்குரியதல்ல”) என்பதாக பால்மர் என்பார் திருக்குர்ஆன் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
“மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து இதைப் போன்ற ஒரு குர்ஆனை உண்டாக்க முயன்றாலும் அவ்வாறு உண்டாக்கவே முடியாது அவர்களில் சிலர் சிலருக்கு உதவி செய்த போதிலும் சரியே” (17:88) என்னும் இறை தீர்ப்பு எக்காலமும் நிலைத்திருப்பதல்லவா?
மனித குலத்தின் மனப் பக்குவத்திற் கேற்பக் காலத்திற் கேற்ற முறையில் தூதர்கள் வாயிலாக வழிகாட்டி வந்த இறைவன், நிறைவான அறவுரைகள் அனைத்தையும் பெறு வதற்கு மனிதகுலம் தகுதியைப் பெற்றுவிட்ட தருணத்தில் இறுதித் தூதராகிய அண்ணல் நாயகமவர்கள் வாயிலாக வளமும் வனப்பும் செறிந்த உயர்தனிச் செம்மொழியாகிய அரபியில் நிறைவு பெற்ற இறுதி மறையை இறக்கினான். ஆகவே உலகின் இறுதி வரையிலே மனித குலத்திற்குத் தேவையான அறவுரைகள் அனைத்தும் அதில் இடம் பெற்றன. அதனை மாசுபடாமல், மாறுபடாமல் இறைவன் ஏற்றெடுத்தான்.
“அறிவுவகை யெத்தனையென் றறியவகை யில்லை
அத்தனையும் அவனுரைத்த அருள்மறையி லடக்கம்
எத்தனையோ கோடிமறை இறையுரைத்த தெல்லாம்
எடுத்தொடுக்கிக் குர்ஆனை இறையிறக்கிக் கொடுத்தான்
முத்தான குர்ஆனுக் குயர்ந்தமறை யில்லை”
என்பது ஞானமேதை பீரப்பா அவர்களின் சத்தான பாடல். அறிஞர்களால் ஆக்கப்படும் நூல்கள், யாதேனும் ஓரிரு பொருட்கள் பற்றிப் பேசுவதைப் பொதுவாகக் காணலாம். அனைத்துலகுக்கும் உலக முடிவு வரையில் வழிகாட்டும் ஆற்றல் பெற்றிருக்கும் ”நூல்களின் தாய்” (உம்முல் கிதாப்) என நுவலப்படும் இறைவனின் அருள்மறை தொட்டுக் காட்டாத பொருட்களே உலகத்திலில்லை. அறிவியல், அரசியல், அருளியல், பொருளியல், உயிரியல்,ஒழுக்கவியல், சட்டவியல், சமூகவியல் முதலிய எல்லாப் பொருட்களை யும் தன்னகத்தே தாங்கியுள்ளது ஏகநாயகனின் எழில்மறை, ஒருவன் யார் யாரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை விரிவாக எடுத்துக் கூறுவதிலிருந்து தன்னுடைய தல்லாத இல்லத்தில் நுழைகின்றபோது எத்தகைய ஒழுக்கத் துடன் நுழையவேண்டு மென்பது வரையில் எல்லாப் பொருள் பற்றியும் நுட்பமாக நுவல்லது அல்லாஹ்வின் அருள்மறை மனிதகுல ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத் துவம், உயிர்களின் உற்பத்தி, வான்வெளிப் பயணம், வானுக்கும் மண்ணுக்கு மிடையே உயிரினங்கள், அனைத்துயிர்களிலும் ஆண், பெண் அமைப்பு, அன்னையின் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி, உலோகங்களின் பயன், பொறியின் செயற்பாட்டால் விளையும் வீரியம் – போன்ற பல்வேறு பொருள்பற்றி இன்று விஞ்ஞானிகள் வெளியிடும் கருத்துக்களுக்குரிய கருவனைத்தையும் திருமறையில் காணலாம் நூஹ் நபியின் கப்பல், உரோமர்கள்மீது வெற்றி ஃபிர்அவ்வின் சடலம் ஆகியவை பற்றிய தீர்க்கதரிசனங்கள் காலப் போக்கிலே வெளிப்பட்டுள்ளன.
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்” என்னும் இலக்கணத்திற்குப் பொருத்தமாக ஒரே நூல் பொய்யகற்றும் திருமறை யென்பதில் ஐயமே இல்லை. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய நூல்களுக்குரிய பத்து வனப்பாலும் பொலிவினைப் பெற்று ”குன்றக் கூறல், மிகைபடக் கூறல்” முதலிய குற்றங்கள் பத்தும் இல்லாததாக இலங்குகின்ற நூல் இறைமறையேயாகும். வரலாற்றைக் கூறினாலும் வாக்குறுதிகளை வழங்கினாலும் அச்சுறுத்தி எச்சரிக்கை செய்தாலும், ஆகுமானவற்றை அறிவித்தாலும், நன்மையை ஏவினாலும், தீமையைத் தடுத்துரைத்தாலும், இறை புகழை இயம்பினாலும் திருமறையில் ஒரு தனித்தன்மையைக் காணலாம். ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்ற முறையில் தேவையான உவகை உருவகங்களுடன் உலகின் எப்பகுதி மக்களும் புரிந்துகொள்ளும் தன்மையில் அமைந்துள்ளன திருமறையின் போதனைகள்.
தீயானது தொட்டவரை மட்டும் சுட்டிடும் தன்மை வாய்ந்தது. தீமையோ, செய்தாரை மட்டுமின்றி அவர் வழி வந்தோரையும் வாட்டி வதைக்கும் இயல்புடையது. மனிதப் புனிதர்களாகிய இறை தூதர்களுக்குத் தீங்கிழைத்ததன் காரணமாகப் பூண்டோடழிந்த மக்களைப் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் எடுத்துரைக்கப்பட்டு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. நூஹ் நபியின் காலத்தில் வெள்ளப் பெருக்கால் அழிந்தவர்களையும், ஆத் கூட்டத்தினர் புயலினால் அழிந்த தையும், தமூத் கூட்டத்தினர் இடியோசை கேட்டு ஈரல்கள் வெடித்துக் குடல்கள் தெறித்துச் சிதறி அழிந்ததையும், லூத் நபியின் பகைவர் கல்மாரியினால் அழிந்ததையும், ஷுஐப் நபியின் பகைவர் நெருப்பு மாரியால் மடிந்ததையும், மூஸா நபியின் பகைவர்கள் நீலாற்றில் மூழ்கி இறந்ததையும், காரூன் குழுவினரை நிலமே விழுங்கியதையும் திருமறை யானது எடுத்துரைத்து எச்சரிக்கும் பகுதிகள் எவரையும் நடுங்கச் செய்வனவாகும்.
உலகின் எப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கும் தோன்று கின்ற எவ்வகைச் சிக்கலுக்கும் ஓரிரு சொற்களில் வழிகாட்டுகின்ற அற்புதத்தைத் திருமறையில் காணமுடியும். ஒரு போது ஆண், பெண் ஆகிய இரு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மாரிடையே ஆண் குழந்தைக்குரியவன் யாரெனும் ஐயம் எழுந்தபோது, எடையிலே மிகுந்த தாய்ப் பாலுக்குரிய அன்னையே ஆண் குழந்தைக்குரியவள் என்னும் தீர்ப்பினை வழங்குவதற்குக் காரணமாக இருந்தது. ”அர்ரிஜாலு கவ்வாமூன அலந் நிஸா (ஆண்களே பெண்களின் நிர்வாகிகள்) 4:34, என்னும் திருமறைத் தொடராகும்.
குழப்பங்களைத் தெளிவு படுத்துவதற்கும் மயக்க நிலையில் நல்ல தீர்ப்புகள் வழங்குவதற்கும் காரணமாக இருந்த மறைத்தொடர்கள் பலப்பல திருமறையின் ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு சொல்லும் விளைக்கின்ற பயன்களும் அற்புதமாகவே அமைந்துள்ளன. மனிதர்களே உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்திருக்கிறது. உங்கள் இருதயங்களிலுள்ள நோய்க்கு அது ஒரு சஞ்சீவியாகும். மேலும் (அது) விசுவாசம் கொண்டவர் களுக்கு நேர்வழி காட்டியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது. (10:57) இவ்விறை மொழிக்கேற்ப இதயப் பிணிகளைப் போக்கும் ஆத்மீக மருந்தும் இம்மையையும் மறுமையையும் செம்மையாக்கும். அறவுரைகளும் வான் மறையில் நிறைந்துள்ளன. “லஹா மஆனின்” என்பதாகத் தொடங்கும் கஸீதத்துல் புர்தாவின் கவின்மிகு பாடலைக் காண்போம்.
“கடலின் அலைபோன்றதுவாம் கத்தன் மறை வாக்கருத்தம்
சுடருமுத்தின் மேலதுவாம் சொல்லழகினால் மதிப்பால்”
பரந்து விரிந்து கிடக்கும் ஆழ்கடலின் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வருவதையும் முன்னால் வந்த அலைகளைத் தழுவியே பின்னால் வரும் அலைகள் எழுவதையும் பார்க்கின்றோம். அதுபோன்ற திருமறையின் வசனங்களுக்குத் தொடர்ந்து பல விளக்கங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதையும் அவ்விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஆதரவாக இருப்பதையும் காண்கிறோம். அழகிலும் விலைமதிப்பிலும் திருமறையின் மணியான கருத்துக்கள் முத்துக்களை வென்றுவிடப் பார்க்கின்றோம். “ஸிப்கத்தல்லாஹ்” (இறைவனின் வண்ணத்தை அடைவீர்) 21:38, “வஜிபால அவ்தாத” (மேலும் மலைகள் முளைகள்) 78:7 இவைபோன்று எத்தனையோ சிறுதொடர்களுள் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்கள் ஆய்வாளர்களை வியப்பில் மூழ்கச் செய்கின்றன.
ஆசிரியர் ஒருவர் ஒரு நூலை எழுதி முடித்தபின் அந்நூலினை ஆயும் அறிஞர்கள் அதிலுள்ள பிழைகளையும், முரண்பாடுகளையும் எடுத்துரைப்பதற்குத் தவறுவதில்லை. ஓர் ஆசிரியரின் வாழ்நாளிலேயே அவர் நூலின் கருத்துக்கள் மறுக்கப்படுவதையும் வெறுக்கப்படுவதையும் பார்க்கின்றோம். அவர் மறைவுக்குப் பின் அந்நூல் திருத்தப்படுவதையும் இடைச் செருகல்கள் நுழைக்கப்படுவதையும் காண்கின்றோம். இறைவனால் இறக்கப்பட்ட மறைநூல்கள் கூட மனிதர்களின் கைபட்டுத் தூய்மையிழந்து உருக்குலைந்து விட்டன. ஆனால் இறைவனின் இறுதி மறையாகிய திருக்குர்ஆன் தோன்றி 1450 ஆண்டுகள் சென்ற பின்பும் அதன் ஒரு சொல்லோ, எழுத்தோ, புள்ளியோ, கோடோ மாற்றப்படாமல் காக்கப்பட்டு வருகின்றது. அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலேயே அந்தாகியா என்னும் ஊரிலிருந்து வந்த ஒரு குழுவினர் திருமறை கூறும் வரலாற்றுக் குறிப்பின் காரணமாகத் தங்கள் ஊருக்கு ஏற்படுகின்ற பழியைப் போக்குவதற்காக “அபல்” என்னும் சொல்லை “அதவ்” என்பதாக மாற்றுவதற்கு எவ்வளவோ வேண்டியும் அண்ணலார் அவர்கள் அதற்கிசையவில்லை.
நிச்சயமாக நாமே இந்நினைவூட்டியை இறக்கினோம். நிச்சயமாக நாமே இதனைப் பாதுகாப்போம்” (15:9) என்பது ஆற்றல் மிக்கோனின் அருள் வாக்கல்லவா? இவ்வசனத்தின் அடிப்படையில் இறைவன் திருமறையைக் காப்பாற்றி வருகின்ற முறைகள் பலவாகும். திருமறை முழுவதையும் மனத்திலே பதித்துள்ள ஹாபிளுகள் இஸ்லாமிய உலகில் என்றும் ஆயிரக்கணக்கிலே இருந்து வருகின்றார்கள். அவனி யிலுள்ள அனைத்து நூல்களும் அழிந்துவிட்ட போதிலும் உயர் மறையை உள்ளத்திற் பதித்துள்ள நானூறு ஹாபிளுகள் ஓரிடத்திலே சேர்ந்துவிட்டால் ஆளுக்கு ஈரெட்டு வசனங்களாகப் பகுத்து ஒரு மணி நேரத்திற் குள்ளாகத் திருமறை முழுவதையும் திருப்பி எழுதிவிட முடியும்.
திருமறையின் ஓர் எழுத்தைக் கூட எவரும் மாற்றிவிடாத நிலையில் அதன் கட்டுக்கோப்பு அமைந்திருப்பது மிகப் பெரும் அற்புதமாக இருந்து வருவதை இன்றைய ஆராய்ச்சி யாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். திருமறைக்கும் திருமறையிலுள்ள ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் சிறப்புத் தொடராகவும் காப்பு மொழியாகவும் அனைத்தும் வல்ல நாயனின் அரசு முத்திரையாகவும் அமைந்துள்ள பஸ்மலா என்னும் ஆணித்திறவுகோல் (Master – key) கொண்டு திருமறைப் பகுதிகளைத் திறந்து பார்ப்பவர்கள் மாமறைக் கருவூலத்தில் மண்டிக்கிடக்கும் மாமணிக் குவியல்களைக் கண்டு பெருவியப்படைவார்கள். “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்” என்னும் அரபித் தொடர் நான்கு சொற்களையும் 19 எழுத்துக்களையும் பெற்றதாக அமைந்துள்ளது. எண்களின் வரிசையில் மிகச்சிறிய எண்ணாகிய ஒன்றும் மிகப்பெரிய எண்ணாகிய ஒன்பதும் இணைவதே பத்தொன்பது. மேலும் அவ்வெண் வேறெந்த எண்ணாலும் வகுத்தற் கியலாத ஒற்றைப் பட்ட எண்ணாகத் தத்துவங்கள் பலவற்றைப் பொதிந்துள்ளது. காலத்தின் அளவுகோலாக அமைந்த ஒரு வாரத்தின் ஏழு நாட்களையும் ஒரு ஆண்டின் பன்னிரு மாதங்களையும் கூட்டினால் பெறுவது பத்தொன்பது. மனிதர்கள் பெற்றுள்ள தத்துவங்கள் 19 என்றும், மனிதன் உறுதிகொள்ள வேண்டிய நம்பிக்கைகள் 19 என்றும், அர்சு, குர்சு, எழுவான், மண், தண்ணீர், காற்று, நெருப்பு, ஜீவாதாரத் தாது இனங்கள், மானிட இதயம், ஈரல், மூளை ஆகிய வற்றிற்குரிய காவலர்களாகிய அமரர்கள் 19 என்றும் அறிஞர்கள் பகர்ந்துள்ளனர். காலத்தை வென்று ஞாலத்தை வாழவைக்கும் சீலத்திருமறையுடன்19 பிணைக்கப்பட்டுள்ளது. பஸ்மலாத் தொடரில் அடங்கியுள்ள இஸ்ம். அல்லாஹ், ரஹ்மான், ரஹீம், - ஆகிய நான்கு தொடர்களும் திருமறைக் குள் பத்தொன்பதன் பெருக்கமாகவே இடம்பெற்றுள்ளன.
இஸ்ம் 19 x 1 = 19 தடவையும், அல்லாஹ் 19 x 142 = 2698 தடவைகளும், ரஹ்மான் 19 x 3 = 57 தடவைகளும், ரஹீம் 19 x 6 = 114 தடவைகளும் திருமறைக்குள் இடம் பெற்றுள்ளன. அரபி நெடுங்கணக்கில் 28 எழுத்துக்கள். 114 சூறாக்கள் ஆகிய வற்றின் கூட்டுத்தொகையாகிய 142 ன் பெருக்கமாகவே அல்லாஹ் 2698 தடவைகள் இடம்பெற்றுள்ளதும் ரஹ்மான் என்பதன் இரட்டிப்பாக ரஹீம் அமைந்திருப்பதும் குறிப்பிடத் தகுந்ததாகும்.
பாருலகின் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றான விந்தைக்குரிய அரபி மொழி எழுத்துக்களின் ஒலி, வரி வடிவங்கள், தத்துவங்கள் பலவற்றைத் தாங்கியுள்ளன. நேர் கோடு ஒன்றை அகரமாகத் தலைப்பிலே நிறுத்திப் பின்னர் அதனையே படுத்தும் வளைத்தும் நெளித்தும் புள்ளிகள் இல்லாமலும் அமைந்துள்ள எழுத்துக்களின் வரிவடிவம் ஒரு வகைச் சுருக்கெழுத்தாகவே விளங்குகின்றது. அவ்வெழுத்துக் களுக்கு அமைக்கப்பட்டுள்ள “அப்ஜதீ” என்னும் எண் கணிதமும் ஒருபெரும் அற்புதமாகும். எழுத்துக்களைச் சூரிய எழுத்துக்கள், சந்திர எழுத்துக்கள், இருள் எழுத்துக்கள், ஒளி எழுத்துக்கள் என்பதாக வகைப்படுத்துவதும் உண்டு. “ஸப் அன் மினல் மதானி” எனப்படும் திருப்பித் திருப்பி ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்ட பாத்திஹா சூறாவில் இருள் எழுத்துக்கள் இடம் பெறாமலிருப்பதை எடுத்துக்காட்டுவதும் உண்டு. 28 அரபி எழுத்துக்களின் நேர்பாதியாகிய 14 எழுத்துக்கள் “ஹுருப்ஃபுல் முகத்த ஆத்” (சங்கேத எழுத்துக்கள்) என்பதாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை பதினான்கினையும் எழுத்துக்களின் சுரங்கமென்றும் பேச்சு மொழியின் தொடக்கமென்றும் ஹலரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக அல்லாமா சுயூத்தி அவர்கள் இத்கானில் எடுத்துரைத்துள்ளார்கள். அலீஃப், லாம், மீம், யா, ஸீன் இச்சங்கத்தே எழுத்துக்கள் பதினான்கும் பதினான்கு வகையான இணைப்புகளைப் பெற்று திருமறை யின் 29 சூறாக்களின் தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்துவரும் அத்தியாயத்திற்குள் இருக்கும் எழுத்துக்கள் வெளியேறி விடாமலும், வெளியிலிருந்து பிற நுழைந்து விடாமலும் அவை திறம்படக் காவல் புரிகின்றன.
குர்ஆன் என்னும் சொல்லின் முதலெழுத்து காஃப், ஈற்றெழுத்து நூன், சூறா 68-நூன் என்னும் எழுத்துடன் தொடங்குகிறது. அந்த அத்தியாயத்திலுள்ள நூன்களின் எண்ணிக்கை 133, அதாவது 19 x 7=133 சூறா 50-காஃப் என்னும் எழுத்துடன் தொடங்குகிறது. அந்த அத்தியாயத்திலுள்ள காஃப் களின் எண்ணிக்கை 57. அதாவது 19 x 3= 57 ஹா மீம் ஐன் ஸீன் காஃப் எனத் தொடங்கும் 42-வது சூறாவில் 57 காஃப்கள் உள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட இரு சூறாவில் 57காஃப்கள் உள்ளன. ஆகவே மேற்குறிப்பிட்ட இரு சூறாக்களிலுமுள்ள 114 காஃப்களும் குர்ஆனிலுள்ள சூறாக்களைக் குறிக்கும் இஷாராவாக உள்ளன. சங்கேத எழுத்துக்களுடன் தொடங்கும் எல்லா சூறாக்களிலும் தலைப்பிலுள்ள சங்கேத எழுத்துக்கள் பத்தொன்பதன் பெருக்கமாகவே அந்த சூறாக்களின் உள்ளே இடம் பெறுகின்றன. இத்தகைய அற்புதமான கட்டுக்கோப்பு டன் எழுத்துக்கள் அமைக்கப்பட்டிருப்பதால் திருமறைக்குள் ஓர் எழுத்தைப் புகுத்தினாலும், அகற்றினாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இவை மட்டுமின்றித் திருமறை யினுள் பல சொற்களும் அவற்றின் எதிர்ச்சொற்களும் ஒரே அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன எடுத்துக்காட்டாக, இம்மை யைக் குறிக்கும் துன்யா-115 தடவைகள்; மறுமையைக் குறிக்கும் ஆகிரத்-115 தடவைகள்; வாழ்க்கையைக் குறிக்கும் ஹயாத்-145; இறப்பைக் குறிக்கும் மெளத்து-145; நன்மையைக் குறிக்கும் ஸாலிஹாத்-167; தீமையைக் குறிக்கும் ஸையிஆத் -167; கடுமையைக் குறிக்கும் ஷித்தத்-102; பொறுமையைக் குறிக்கும் ஸப்ரு-102; துன்பத்தைக் குறிக்கும் முஸீபத்து-75; நன்றியைக் குறிக்கும் ஷுக்ரு-75.
எதிர்ச்சொற்களின் எண்ணிக்கையில் சமநிலை இருப்பது போன்றே தொடர்புடைய பல சொற்களிலும் ஒரு சமநிலை யைக் காண்கிறோம். நபாத் (முளை) ஷஜர் (மரம்) இரண்டும் 26 தடவைகள்; ரஹ்மத் (கருணை) ஹுதா (நேர்வழி) இரண்டும் 79 தடவைகள் பிர்ரு (நற்செயல்), தவாப் (நன்மை) இரண்டும் 20 தடவைகள்.
இவை போன்று நூற்றுக்கணக்கான சொற்களில் சமநிலை யைக் காண்கின்றோம். மேலும் ஓர் ஆண்டில் அமைந்துள்ள 12 மாதங்களும் இஷாராவாக ஷஹ்ர் (மாதம்) என்னும் சொல் 12 தடவைகளும் ஓர் ஆண்டிலுள்ள 365 நாட்களுக்கு இஷாராவாக யவ்ம (நாள்) என்னும் சொல் 365 தடவைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்பின்னணியில் கவிதையுலகில் முன்னணியில் நிற்கும் புனித இலக்கியமாகிய கஸீதத்துல் புர்தாவில் ”ஃபலாது அத்து” எனத் தொடங்கும் பாவடிகளைப் பாடுகின்றபோது மெய் சிலிர்த்து விடுகின்றது.
“கத்தன்மறை அற்புதங்கள் கணிப்புக்கள வுக்கடங்கா;
நித்தமதை ஓதிவரும் நேயர் அடையார் அலுப்பே”
சாதாரண ஆசிரியர் ஒருவரின் நூலை இரண்டாவது முறை யாகப் படிக்கும்போது சலிப்படைகின்ற நாம் திருமறையின் ஒரு சூறாவை – பாத்திஹா சூறாவை –ஓராயிரம் தடவைகள் ஓதினாலும் உள்ளம் சலிப்படையாமலிருப்பதன் இரகசியம் இறைமறையின் அற்புதமேயாகும். இவ்வற்புதத்திற்கு இணை யான தொன்றை எங்கும் எவரும் எப்போதும் காணமுடியுமா தென்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வல் ஹம்துலில்லாஹ்!



( அல் குர்ஆன் ஓர் அற்புதம் எனும் நூலிலிருந்து ……….. )

பதிப்பாசிரியர் :

பேராசிரியர் மு. கலீல் அகமது எம்.ஏ
தமிழ்த்துறை
புதுக்கல்லூரி
சென்னை 600 014

வெளியீடு :
நன்னெறிப் பதிப்பகம்
17-18 B, பாறையடித் தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்

shab-e-bara'at

ahmed muhammad mahroof
tosirajudin b

Assalamu Alaikkum

Dear brothers, first and foremost be clarified that we are not "CELBRATING" shab-e-bara'at.
This termonology is always used by these brothers leading to misguide. We are only advised and trying to do more righteous deeds on these particular days. Regarding the hadiths being week or strong, or about the validity of reciting Sura Yaseen,what is the real meaning of "Bid'ah" "good innovations" "bad innovations" leave it to the scholars.

Secondly, As per Qur'an teaching we muslims should obey who has authority over us, A doctor has authority over us regarding our health, a teacher has authotiy over a student, an auditor has authority over your wealth, earnings,trade, a lawyer has authority over our court cases,litigations if any etc. If the concerned person acts against these people it is he who suffersand not the doctor,nor teacher nor auditor nor lawer. Likewise an Alim i.e religious scholar has authority over us regarding religious affairs.

However you will agree that you cannot have two doctors, or two teachers, or two auditors or two lawers with opposite and contradicting views to obey. which will lead to confution.

So you decide whether you want to follow the religious scholars who are advising to increase the religious deeds or the ones who always want to reduce your religious deeds. Do you think that Allah is going to punish us for reciting the Holy Qur'an and thasbeeh,and asking Dua on a particular day.

Even after all the above clarification you feel it may be a bid'ah, the scholars who advised us are going to be taken to task by Allah and not us.

So be relaxed and attend the shab-e-bara'at programmes (not celebrations) arranged tonight at D'Block, Kottai pallivasal and Kuwait pallivasal
wassalam/best regards

A.Mahroof


--- On Wed, 8/5/09, sirajudin b wrote:


From: sirajudin b

Subject: Shab-e-Bara'at - Can we celebrate or no ?
To: mahroof1958@yahoo.com
Cc: muduvaihidayath@gmail.com, bilaliyam@gmail.com

Date: Wednesday, August 5, 2009, 2:18 AM


Assalamu alaikum,

I received this mail.I'm following sunath wal jamath Please i need clarification for this mail.
I got confused about this matter

Islamic Banking seminar at Bhatkal: (Urdu)

Iqbal Soofi
dateTue, Aug 4, 2009 at 10:17 PM
subject[nrindians] Islamic Banking seminar at Bhatkal: (Urdu)


please click the link:

http://www.sahilonline.org/urdu/news.php?catID=coastalnews&nid=2366&viewed=0



----------------------------------
-- Iqbal Soofi
o State of Kuwait