Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts

Friday, May 22, 2009

ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்ட‌ர் அமீர்ஜ‌ஹான்..........

ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்ட‌ர் அமீர்ஜ‌ஹான்..........


ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் டாக்ட‌ர் எக்ஸ் எனும் நிக‌ழ்ச்சியில் முதுகுள‌த்தூர் டாக்ட‌ர் ஏ. அமீர்ஜ‌ஹான் ப‌ங்கேற்று நேய‌ர்க‌ளின் பாலிய‌ல் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் அளிக்கிறார்.

இந்நிக‌ழ்ச்சி இந்திய‌ நேர‌ப்ப‌டி இன்று ( ச‌னிக்கிழ‌மை ) இர‌வு 10.30 ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பாக‌ இருக்கிற‌து.
( அமீர‌க‌ நேர‌ம் இர‌வு 9 ம‌ணி )

Sunday, September 21, 2008

ESPN தொலைக்காட்சி தமிழில் அலைபேசி செய்திச்சேவை

விளயாட்டு ஒளிபரப்பில் முன்னணியில் இருக்கும் ESPN தொலைக்காட்சி தமிழில்,
அலைபேசியில், செய்திச்
சேவையை தொடங்கி இருக்கிறது.

இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கு உள்ளூர், தேசீய, சர்வதேச,
பொழுதுபோக்கு மறூம் விளையாடுச் செய்திகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும்
இரண்டிரண்டு நிமிடங்கள் வீதம் பதே நிமிடங்கள். பதினோறு மணிக்கு வர்த்தகச்
செய்திகள். பிற்பகல் இரண்டு மணிக்கு உள்ளூர் மற்றும் தேசியச் செய்திகள்.
மாலை ஐந்து மணிக்கு மீண்டும் வர்த்தகச் செய்திகள். மாலை ஏழுமணிக்கு
மீண்டும் அனைத்துச் செய்திகள்.இந்தச் செய்திகளை தென்னகத்தில் எந்த
அலைபேசி எண்ணில் கேட்கலாம் என்பதை இனித்தான் அறிவிக்க இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் மூன்று செய்திகள் இருக்க வேண்டும். அதாவது நாற்பது
நொடிகளுக்குள் செய்தியின்
எந்த அம்சத்தையும் விட்டு விலாமல் ஒரு முழுமையைக் கொண்டு வரவேண்டும்.
சவால்தான். என்றாலும்
பத்திரிகைகள் எந்த அளவுக்கு அநாவசியமாக வார்த்தைகளைப்போட்டு இடத்தை
நிரப்புகிறார்கள் என்பது
இப்போதுதான் தெரிகிறது.

ஒரு சௌகரியம்: நான் வீட்டிலிருந்து கொண்டே அனைத்தையும் செய்யலாம். ஒரு
அசௌகரியம்: காலை முதல்
மாலை ஏழு மணி செய்தி முடியும் வரை நான் எங்கும் செல்ல முடியாது. தனியாகவே
அனைத்தையும் செய்வதால்
சனி - ஞாயிறு - விடுமுறை எதுவும் கிடையாது.

கழுகுக் கண்களுடன் செய்திகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்போம்.
என்றாலும் உங்களுக்கு ஏதேனும்
வித்தியாசமான செய்திகள் தெரிய வந்தால் தயவு செய்து என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிஸ் - சத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

Saturday, April 26, 2008

இருக்கும் இம்சைகள் போதாதென்று........

அன்பர்களே,
இருக்கும் இம்சைகள் போதாதென்று
இன்னுமொரு தொலைக்காட்சி
இங்கே வந்து வசந்தத்தை வீசுகின்றது
சோதனை ஒளிபரப்பாம் !
சோதனை யாருக்கு ?
எது எப்படியாயினும் வசந்தத்தைக்
கண்டு நாம் மகிழ முயன்றிடுவோம்.

தொழில்நுட்ப குறிப்புகள் :
ஆதாம்பா. . . நம்ம கலைஞர் / மக்கள் / விண் / ஏசியானெட் எல்லாம் வர்ற கொடையிலே இதுவும் வர்து.
Satellite : INSAT 2E at 83 degrees East
Frequency: 4050, Symbol Rate: 5084, FEC: 7/8

Enjoy ... Ravi Shankar

a_ravishan@hotmail.com


நன்றி! அன்பரே, தொடர்ந்து ஓசியில் வச்தால் சரி... கொஞ்சநாள் கழித்து அட்டையை போடுடா என்றால்?..............

iqbal.masthan@gmail.com

Wednesday, February 13, 2008

துபாயில் இந்தியர் வாழ்க்கை முறை குறித்து சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனம் குறும்படம் தயாரிப்பு

துபாயில் இந்தியர் வாழ்க்கை முறை குறித்து சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனம் குறும்படம் தயாரிப்பு


துபாய் மற்றும் வளைகுடாவில் வாழ்ந்து வரும் இந்தியர் வாழ்க்கை முறை குறித்த தகவல்களை குறும்படமாக தயாரித்து வசந்தம் செண்டரல் எனும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட இருக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

மேற்கண்ட தகவலை குறும்பட நிகழ்ச்சியினை தயாரித்து வரும் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2008/02/13/wrold-singapore-tamil-tv-programme-on-gulf-indians.html

Monday, February 11, 2008

துபாயில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் நூல் வெளியீடு


துபாயில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் நூல் வெளியீடு

துபாய் சங்கமம் தொலைக்காட்சியின் சார்பில் கீழை சீனா தானாவின் 'மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா லேண்ட் மார்க் ஹோட்டலில் 08.02.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பவித்ரா வரவேற்புரை நிகழ்த்தினார்.

கந்தநாதன் தனது நூல் விமர்சன உரையில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் மனித நேயம், மதநல்லிணக்கம், இறைநம்பிக்கையினை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.

மணிப்பால் பல்கலைக்கழக பேராசிரியை மலிகா சபியுதீன் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளைக் கொண்ட இதுபோன்ற புத்தகங்களை வாரம் ஒருமுறை குழந்தைகளிடம் வாசித்துக் காண்பித்து இக்கணினி யுகத்தில் அவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த முயல வேண்டும் என்றார்.

பொறியாளர் ஆல்பர்ட் இந்நூலை வாசிப்பவர் தனித மனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவார் என்பதில் ஐயமில்லை என்றார்.

'மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்' நூலை நூலாசிரியர் கீழை சீனா தானா அவர்கள் வெளியிட தொழிலதிபர் முரளி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் மர்சூக், பாபநாசம் அப்துல் ஹமீது, அஜ்மான் மூர்த்தி, டாக்டர் வில்லியம்ஸ், இலங்கை எழுத்தாளர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

மர்சூக் அவர்கள் தனது உரையில் இந்நூல் தனக்கு ஒரு ஊக்க சக்தியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து டாக்டர் வில்லியம்ஸ், அஜ்மான் மூர்த்தி, அப்துல் வாஹித், கவிஞர் இஸ்மத், கமருல் ஜமான், உஸ்மான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

நூலாசிரியர் கீழை சீனா தானா ஏற்புரை நிகழ்த்தினார்.

சங்கமம் தொலைக்காட்சி ( 04 3530607 ) நிர்வாக இயக்குநர் கலையன்பன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

http://www.puduvaitamilsonline.com/news8.html