கோடையும் வாடையும்
திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர்
கொளுத்துகின்ற
கோடை வெயில்
கொடுமையானது !
அதனை விட
வரதட்சணையால்
பல பெண்கள்
உயிரோடு கொளுத்தப்பட்டது
கொடுமையானது !
வசந்த காலத்தின்
தென்றலைப் பார்க்க
ஆசைப்பட்டவர்கள்
வரதட்சணை தீயின்
வாடைக் காற்றில்
வாடி வருகிறார்கள் !
மே, ஜூன், ஜூலை வாடைகாற்று
உடலெல்லாம்
வியர்த்து விட்டது !
வரதட்சணைக் கோடையால்
மேனியெல்லாம் தீ ஜூவாலை
சகோதரிகள் பலரின் உயிரை
கரித்து விட்டது !
எத்தனை டிகிரி
வெயிலடித்தடித்தாலும்
அது குறைவானதுதான் !
படித்த டிகிரிக்கு
வரதட்சணை வாங்குவதுதான்
மிகவும் மோசமானது !
கோடையின்
கத்திரி வெயில் அடித்தது !
அனலால்
வீட்டில் இருக்க முடியவில்லை
எங்கள்
புத்திரிக்கு திருமணம் நடந்தது
வரதட்சணையால்
வீட்டை விற்காமல் இருக்கமுடியவில்லை !
அறுபது டிகிரி
வெயிலடித்தால்
குளிர் பானத்தை குடிக்கலாம் !
அறுபது பவுன்
வரதட்சணை கொடுத்தால்
பணத்துக்கு எங்கே போவது !
கோடையில்
குளிர்ச்சிக்கு
ஊட்டிக்கு போகிறார்கள்
வரதட்சணையால்
வீட்டையே விற்றவர்கள்
வசிக்க எங்கே போவார்கள் !
மகனுக்கு
நிலாவைக் காட்டும்
அன்பான அம்மாக்கள்
மாமியாராகும் போது
மருமகளுக்கு
சூரியனாகி விடுகிறார்கள் !
தாய் பேச்சை
கேட்காத பிள்ளைகளும்
வரதட்சணை என்று வரும் போது
வாய் மூடி விடுகிறார்கள் !
பாலையில்
கானல் நீர் அங்கே !
ஆம் அங்கே நீரில்லை
கல்யாணத்தில்
பெண்ணைப் பெற்றவர்கள்
சிரிக்கிறார்கள்
ஆனால்
அவர்களுக்குள்
சிரமங்கள் மறைந்திருக்கிறது
கோடை மழை
இன்று வரும்
வானிலை அறிக்கையில்
உள்ளம் குளிர்ந்தது !
கொடுமையான
இந்நிலை என்று மாறும்
உள்ளம் கொதிக்கிறது !
கோடையின்
வாடை !
காய்ந்து போகும்
இலை !
மயக்கம் தலைவலி
என்ற நிலை - அவை
கொடியதல்ல
வரதட்சணையைவிட !
பெண் சிசுக்கொலை
இளம் பெண்களின்
தற்கொலை !
கணவன், மாமியார்
செய்யும் படுகொலை
கொடியது மட்டுமல்ல
கோடையை விட !
கொதிக்கும் கோடையின்
அக்கினியின் கொடுமையை
குளிர்பானம் குடித்து
தணித்து விடலாம் !
சகோதரா
கொதித்தெழு – இந்த
அக்கிரமத்தை எதிர்த்து நீ
எப்போது குரல் கொடுப்பாய்?
நீ மனம் வைத்தால்
தடுத்து விடலாம் !
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label கோடை. Show all posts
Showing posts with label கோடை. Show all posts
Saturday, August 1, 2009
Monday, July 14, 2008
ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா
ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா
ஷார்ஜாவில் அமைந்துள்ள கலாச்சாரப் பகுதி கனத் அல் கஸ்பா ( www.qaq.ae ) . இங்கு கோடை விழா ஜுலை 11 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கனத் அல் கஸ்பாவில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தினமும் நள்ளிரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், கார்ட்டூன் சினிமா, குடும்பத்தினருடன் செல்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு உணவு பொருட்கள், அரபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகளில் எண்ணெய் பலகாரம் உள்ளிட்டவை விற்பனைக்கு கிடைக்கின்றன. எண்ணெய் பலகாரத்தில் தமிழகத்தின் போண்டா போன்று சிறிய அளவில் தயார் செய்யப்படும் இனிப்பு சேர்க்கப்படாத போண்டாவின் மேல் தேனை தெளித்து வழங்குகின்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோன்ற அரேபிய உணவுப் பொருட்கள் தமிழக உணவுப் பொருட்களுடன் தொடர்புடையதால் அரபிய கலாச்சாரத்திற்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
கண்காட்சிக்கு வந்திருந்த தமிழகப் பிரமுகர் ஹுசைன் பாஷா ஆராய்ச்சியாளர்கள் அரபிய மற்றும் தமிழக கலாச்சாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=825&Country_name=Gulf&cat=new
ஷார்ஜாவில் அமைந்துள்ள கலாச்சாரப் பகுதி கனத் அல் கஸ்பா ( www.qaq.ae ) . இங்கு கோடை விழா ஜுலை 11 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது.
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கனத் அல் கஸ்பாவில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தினமும் நள்ளிரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், கார்ட்டூன் சினிமா, குடும்பத்தினருடன் செல்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு உணவு பொருட்கள், அரபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகளில் எண்ணெய் பலகாரம் உள்ளிட்டவை விற்பனைக்கு கிடைக்கின்றன. எண்ணெய் பலகாரத்தில் தமிழகத்தின் போண்டா போன்று சிறிய அளவில் தயார் செய்யப்படும் இனிப்பு சேர்க்கப்படாத போண்டாவின் மேல் தேனை தெளித்து வழங்குகின்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோன்ற அரேபிய உணவுப் பொருட்கள் தமிழக உணவுப் பொருட்களுடன் தொடர்புடையதால் அரபிய கலாச்சாரத்திற்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
கண்காட்சிக்கு வந்திருந்த தமிழகப் பிரமுகர் ஹுசைன் பாஷா ஆராய்ச்சியாளர்கள் அரபிய மற்றும் தமிழக கலாச்சாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=825&Country_name=Gulf&cat=new
Subscribe to:
Posts (Atom)