Sunday, September 21, 2008

ESPN தொலைக்காட்சி தமிழில் அலைபேசி செய்திச்சேவை

விளயாட்டு ஒளிபரப்பில் முன்னணியில் இருக்கும் ESPN தொலைக்காட்சி தமிழில்,
அலைபேசியில், செய்திச்
சேவையை தொடங்கி இருக்கிறது.

இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கு உள்ளூர், தேசீய, சர்வதேச,
பொழுதுபோக்கு மறூம் விளையாடுச் செய்திகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும்
இரண்டிரண்டு நிமிடங்கள் வீதம் பதே நிமிடங்கள். பதினோறு மணிக்கு வர்த்தகச்
செய்திகள். பிற்பகல் இரண்டு மணிக்கு உள்ளூர் மற்றும் தேசியச் செய்திகள்.
மாலை ஐந்து மணிக்கு மீண்டும் வர்த்தகச் செய்திகள். மாலை ஏழுமணிக்கு
மீண்டும் அனைத்துச் செய்திகள்.இந்தச் செய்திகளை தென்னகத்தில் எந்த
அலைபேசி எண்ணில் கேட்கலாம் என்பதை இனித்தான் அறிவிக்க இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் மூன்று செய்திகள் இருக்க வேண்டும். அதாவது நாற்பது
நொடிகளுக்குள் செய்தியின்
எந்த அம்சத்தையும் விட்டு விலாமல் ஒரு முழுமையைக் கொண்டு வரவேண்டும்.
சவால்தான். என்றாலும்
பத்திரிகைகள் எந்த அளவுக்கு அநாவசியமாக வார்த்தைகளைப்போட்டு இடத்தை
நிரப்புகிறார்கள் என்பது
இப்போதுதான் தெரிகிறது.

ஒரு சௌகரியம்: நான் வீட்டிலிருந்து கொண்டே அனைத்தையும் செய்யலாம். ஒரு
அசௌகரியம்: காலை முதல்
மாலை ஏழு மணி செய்தி முடியும் வரை நான் எங்கும் செல்ல முடியாது. தனியாகவே
அனைத்தையும் செய்வதால்
சனி - ஞாயிறு - விடுமுறை எதுவும் கிடையாது.

கழுகுக் கண்களுடன் செய்திகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்போம்.
என்றாலும் உங்களுக்கு ஏதேனும்
வித்தியாசமான செய்திகள் தெரிய வந்தால் தயவு செய்து என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிஸ் - சத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746.

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591.

இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார்.

இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார்.

இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செயலற்ற நிலையில் அரசு ஆம்புலன்ஸ்...!

செயலற்ற நிலையில் அரசு ஆம்புலன்ஸ்...!

சென்னை, செப். 20: அரசு மருத்துவமனைகளில் "ஆம்புலன்ஸ்' சேவை மோசமான நிலையை எட்டி வருகிறது. ஆபத்தான நிலையிலும் கூட மருத்துவமனைகளில் அனுமதிக்க காசு கேட்பது போன்ற செயல்கள் தொடர்கதையாகி வருகின்றன.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் "ஆம்புலன்ஸ்' வாகனங்கள் உள்ளன. சாலை விபத்து போன்ற அவசர காலங்களில், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் எடுத்துச் செல்ல "ஆம்புலன்ஸ்' பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது, அவைகளில் பெரும்பாலானவை செயலற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமும் நடைபெறும் சம்பவங்கள்... திருவள்ளூர் அருகே ஞாயிற்றுக்கிழமை (செப்.14) நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்தோர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு, முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மருத்துவமனையில் இருந்து (டி.என்.01 - ஜி.1156) என்ற எண் கொண்ட, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உரிய ஆம்புலன்ஸில் சென்னைக்கு அனுப்பப்பட்டனர். ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ. 800-ம், கூடுதல் பணமாக ரூ. 200-ம் டிரைவர் கேட்டுள்ளார். வேறு வழியின்றி, அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளனர்.

ஆனாலும், மருத்துவமனையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸில் டீசல் இல்லை; ஒலி எழுப்பான் இல்லை என்று புகார் தெரிவித்துள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர். அரை மணி நேரத்துக்கும் மேலாக, ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்கு போராடிய நிலையில் காயமடைந்தவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். வேறு ஆம்புலன்ஸ் வந்த பின்பே, சென்னை கொண்டு வரப்பட்டுள்ளனர்.

""இன்னும் 5 அல்லது 10 நிமிடங்கள் தாமதித்து இருந்தால், உயிருக்கு ஆபத்தாகி இருக்கும்'' என்று கதறினர் காயமடைந்தவர்கள்.

தலைக் காயத்துக்கும் காசு... சாலை விபத்துகளின் போது, தலைக் காயம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் சேவைக்கு பணம் வாங்கக் கூடாது. ஆனால், காயமடைந்தவர்களிடம் தலைக் காயம் முதல் எந்தக் காயம் ஆனாலும் காசு வசூலிக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தச் செயல்கள் மாவட்டத் தலைநகரங்கள், சிறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

என்ன காரணம்? ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க டிரைவர்கள் இல்லாதது, போதிய டீசல் வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசின் "ஆம்புலன்ஸ்' சேவை கேள்விக் குறியாகி இருக்கிறது.

போதுமான அளவு டிரைவர்களையும், வண்டிகளுக்கு டீசலையும் அளித்தால், அரசின் ஆம்புலன்ஸ் சேவை உயிர் பெறும் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர் அரசு மருத்துவமனை டாக்டர்கள்.

Contact Lens User Be Careful

Contact Lens User Be Careful

A 21 year old guy, he used to wear a pair of contact lenses, during a
barbecue party.

While, barbecuing he stared at the fire charcoals continuously for 2-3
minutes. After a few minutes,

he started to scream for help and moved rapidly, jumping up and down.
No one in the party knew why he was doing this ? Then he admitted into
the Hospital,
the doctor said he'll be blind permanently because of the contact
lenses that he had worn.

Contact lenses are made by plastics, and the heat from the charcoal
melted his contact lenses.

So, send this information to all your friends..... DO NOT WEAR CONTACT
LENSES WHERE OVERHEATING AND FLAMES ARE CONCERNED.....OR WHILE COOKING...!

Friends if this information is important.....please pass this message
to all your near & dear ones.