Wednesday, September 3, 2008

துபாயில் நாளை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் நாளை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி


துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நாளை 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

சிறப்பு விருந்தினராக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிறுவனர்களில் ஒருவரும், பாபநாசம் ஆர்.டி.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் முனைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா, ஈடிஏ ஸ்டார் சர்வதேசப் பள்ளிகளின் கல்வி இயக்குநர் பேராசிரியர் எஸ்.எம். கலந்தர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050-5489609/050-5356650 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





The Organizing Committee of

Alumni of Jamal Mohamed College

UAE Chapter

has the pleasure to invite all the Jamalians to

A Grand IFTHAR Party

Guest of Honour

Dr. M.A. Dawood Batcha

(Founder Patron - JMC Alumni, UAE Chapter)

(Founder & Chairman, RDB College, Papanasam)



Prof. S.M. Khalanthar

(Director of Education – SEMS Group)

(ETA Star International Schools, U.A.E)

will preside over the function

Venue: Landmark Hotel, Level-1

(Nasser Square, Deira, Dubai)

Date: 4th Sep 2008 (Thursday) at 06:00 pm

“We meet to reminisce our college days”

“Your pleasing presence will be cherished by each one of our fellow Jamalians”

For further information, please contact 050-5489609/050-5356650

தினமலரைப் புறக்கணிப்போம்!

தினமலரைப் புறக்கணிப்போம்!

டென்மார்க் நாளிதழ் ஒன்றில் வெளியாகி உலகெங்கும் முஸ்லிம்களின் எதிர்ப்பினை சம்பாதித்த கேலிச்சித்திரங்களில் ஒன்றை, மிகச்சரியாக ரமலான் முதல் நாள் அன்று வெளியிட்டு, தனது இஸ்லாமிய எதிர்ப்புணர்வை மிகத் தெளிவாக மீண்டுமொருமுறை பறைசாட்டியிருக்கிறது தினமலர் நாளேடு!

ஆம், இது முதல் முறையல்ல! சென்ற வருடம் அக்டோபரில், நோன்புப் பெருநாள் நேரத்தில் மற்றொரு டென்மார்க் கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருந்தது தினமலர். அப்போது அதற்கு பெரிதாக எதிர்ப்புக்குரல் எழும்பாததாலோ என்னவோ, மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் தனது செயலை இந்த வருடமும் அரங்கேற்றியிருக்கிறது இந்த பார்ப்பனீய நாளேடு!

பலமான எதிர்ப்பு கிளம்பிய பிறகு அதற்கு 'வருத்தம்' தெரிவித்த தினமலர் ஆசிரியர், 'தவறான கார்ட்டூன் வெளியிட்டதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவர்தான் காரணம்' என சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.

என்ன கொடுமை சார் இது? தினமலரில் என்ன கார்ட்டூன் போடுவது என்பதை ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்தான் முடிவு செய்கிறாராமா?

அப்படம் வெளியான 'கம்ப்யூட்டர் மலருக்கு' பொறுப்பாசிரியர் யாரும் கிடையாதா?

வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம், ஆகிய நான்கு பதிப்புகளின் பொறுப்பாளர்கள் யார்?

இவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டா இப்படம் வெளியானது?

இது தெரியாமல் நடந்த தவறு என்றால், தொடர்ந்து இரண்டு வருடங்களாக சரியாக ரமலான் நேரத்தில் இது ஏன் நடக்க வேண்டும்?

மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் தினமலர் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு நச்சுக் கிருமி!

நன்றி: அபூமுஹை

http://maricair.blogspot.com/2008/09/blog-post.html