Tuesday, May 6, 2008

துபாய் வானலை வளர்தமிழ் - மே 2008 மாத கவிதைத் தலைப்பு 'இயற்கை'

துபாய் வானலை வளர்தமிழ் - மே 2008 மாத கவிதைத் தலைப்பு 'இயற்கை'

துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பும், தமிழ்த் தேர் மாத இதழும்
கடந்த இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து
வைத்துள்ளது.

மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் இவ்விலக்கிய நிகழ்வில் மே மாதத்திற்கான கவிதைத் தலைப்பு இயற்கை.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சிவ் ஸ்டார் பவனில் நடைபெற உள்ளது.

இயற்கை எனும் தலைப்பில் கவிதை
வாசிக்க விரும்பும் ஆர்வலர்கள் காவிரி மைந்தனை 050 251 96 93 அல்லது
kavirimaindhan@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.