Wednesday, October 6, 2010

அரசியல்தனமான தீர்ப்பு!- தினமணி தலையங்கம்

அரசியல்தனமான தீர்ப்பு!- தினமணி தலையங்கம்

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=311421&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.

நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.

அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.
மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.

நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...
அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!

நன்றி -தினமணி

--

குர்ஆன் விரிவுரை !

குர்ஆன் விரிவுரை !
மெளலவி அப்துர் ரஹ்மான்

வலாயெஹ்ஸ பன்னல்ல ஸீன யப்கலூன பிமா.. ஆதாஹு முல்லாஹு மின் பள்லிஹு ஹுவகைரல் லஹும் பல்ஹுவஷர் ருல்ல ஹும். ஸயுதவ்வ கூனமா பகிலூ பிஹு யவ்மல் கியாமா. வலில்லாஹி மீராஸுஸ் ஸமாவாதிவல் அரள் வல்லாஹு பிமாதஃமலூனகபீர்.

அல்லாஹ் வழங்கிய அருட்கொடையிலிருந்து நீங்கள் கஞ்சத்தனம் செய்ய வேண்டாம். மனிதர்கள் தமக்கு வழங்கப்பட்டதாகக் கருதிக் கொள்ள வேண்டாம். கஞ்சத்தனம் செய்பவர்களுக்கு அவையே கழுத்தில் அணிவித்து பாம்பாக மாற்றப்படும்.

தமது மனைவி, மக்கள், குடும்பத்தார்க்கு செல்வத்தை சேமித்து வைக்கின்றனர். அவற்றிலிருந்து வழங்கினால் செல்வம் குறைந்து விடும் எனக் கருதுகின்றனர். இந்த நினைப்பு அவர்களுக்கு தீமையாக முடியும். எதைச் சேமித்து செலவு செய்ய மறுத்தார்களோ அதுவே அவர்கள் கழுத்தில் பாம்பாக மாற்றி அணிவிக்கப்படும் என ரசூல் (ஸல்) கூறி புஹாரி ஹதீஸில் பதிவாகியிருக்கிறது.

கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து அவற்றை விட்டுச் செல்லும் போது அதன் உரிமையாளன் அல்லாஹ் அதற்கு பொறுப்பாளன் நான் தான் எனக் கூறுகிறான். இதை உணராத மனிதர்கள் அந்த சொத்துக்களுக்கு தாங்கள்தான் நிலையான வாரிசு எனக் கூறுகின்றனர்.

அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து நம்மால் இயன்ற அளவு சிறு பேரித்தம் பழத்தின் துண்டைக் கொடுத்தாவது நம்மை நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். ‘சதக்கா’ பற்றிய சிறப்புகள் நிரம்ப உள்ளன. கொடுப்போருக்கு ஒரு போதும் குறைவதில்லை.பன்மடங்கு அல்லாஹ் வழங்குவான்.

ஹக்கீம் நிஜாம் (ரலி) என்ற ஸஹாபி ரசூல் (ஸல்) இடம் மூன்று முறை உதவி கேட்டார். கொடுத்தார்கள். நான்காவது முறை கேட்ட போது என்னிடம் இல்லை இருந்தால் தந்திருப்பேன். நீங்கள் அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். அதற்குப்பின் அந்த ஸஹாபி யாரிடமும் உதவி கேட்டதில்லை. அடுத்து ரசூல் (ஸல்) சந்தித்த போது யாரசூலுல்லாஹ் தங்களிடம் கேட்டதைத் தவிர வேறு எவரிடமும் உதவி கேட்டதில்லை. மரணிக்கும்வரை கேட்கக் கூடாது என்ற முடுவோடு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

பணத்தை செலவழித்தால் வறுமை வந்து விடும் எனச் ஷைத்தான் பயமுறுத்தலுக்கு பணிந்து ஸதக்கா, ஜகாத் கொடுக்க மறுத்து விடுகின்றனர். 2 பெண்கள் நபியைப் பார்க்க வந்த போது நங்கையரின் கைகளில் தங்கக்காப்பு இருப்பதைப் பார்த்து இதற்கு ஜகாத் கொடுத்தீர்களா என்று நபி கேட்க, அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர். நரக நெருப்பை உங்கள் கரங்களில் அணிய வேண்டாம் என்றால் உடனே ஜகாத் கொடுங்கள் என்று கூறினார்கள்.

இரண்டு தங்கக் காப்புகளுக்கே நரக நெருப்பு தீண்டும் என்றால் 100, 200 பவுன் என தமது மனைவிக்கு அணிவித்து அழகு பார்ப்போரும், கிலோ கணக்கில் வைத்திருப்போரும் ஜகாத் கொடுக்கவில்லையெனில் தமக்கு என்ன நிலை எனச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து ஜகாத் கொடுக்க வேண்டும். அபூ வஃபா (ரலி) தாமாக முன் வந்து ஜகாத் கொடுத்தார்கள் ரசூல் (ஸல்) அவருக்காக ‘துஆ’ச் செய்தார்கள்.

அன்று ஜகாத் (ஏழை வரி) வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. அதிகாரத்தோடு கேட்டுப் பெற்றனர். இன்று அது இல்லை. உபதேசம் மட்டுமே செய்யவியலும் அவரவரும் அல்லாஹ்வுக்கு பயந்து தாமாக முன்வந்து
தமது சொத்துக்கள், நகைகள், பணம் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்காதவர்களிடமிருந்து நோய், கலவரம், வழக்கு, விபத்து மூலமாக அல்லாஹ் தனது செல்வங்களைப் பறித்துக்கொள்கிறான். ஐந்து லட்சம் செலவு செய்து தமது உடலில் அறுவை சிகிச்சை செய்து நோயை குணப்படுத்திக் கொள்கின்றனர். அத்தகையோர் ஐந்தாயிரம் ரூபாய் ஸதக்கா வழங்கலாம். அல்லாஹ் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவான். 10 இலட்சம் நோய்க்குக் கொடுக்க தயாராக இருப்போர் 10 ஆயிரம் ஜகாத் கொடுக்க மாட்டேன் என்னும் நிலை அல்லாஹ்விடம் தண்டனையை பெற்றுத்தரும்.

அல்லாஹ் கூறுகிறான் உலகில் உனக்கு படிப்பினை இருக்கிறது என்று 10 வருடத்திற்கு முன்பு நம்முடன் இருந்தவர்கள் இப்போது இல்லை. அப்போதிருந்த உடல்நிலை இப்போது இல்லை. இந்த துன்யா நிரந்தரம் என்று கருதக்கூடாது. முட்டாள் ஆன்மா மட்டுமே அவ்வாறு கருதும். எல்லாவற்றுக்குமான கூலி இங்கேயே கிட்டாது. கியாமத் நாளில் தான் கிடைக்கும். பலனை உடனுக்குடன் எதிர்பார்க்கக்கூடாது.

துன்யாவிற்காக (இந்த உலகத்திற்காக) தமது வாழ்வை தியாகம் செய்து அல்லாஹ்வை மறந்து வாழ்கின்றனர். இது நிலைத்த வாழ்வு என எண்ணி ஏமாறுகின்றனர். நிலையான, நிரந்தரமான வாழ்வு ஆகரத்தில் தான் உள்ளது.

(மண்ணடி மாமூர் பள்ளிவாசலில் 13.06.10 அன்று மஹ்ரிப் தொழுகைக்குப்பின் நடைபெற்ற குர்ஆன் விரிவுரையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 50 நிமிட உரையில் 75 பேர் கலந்து கொண்டனர்)

முரசு நிருபர்

( முஸ்லிம் முரசு ஜுலை 2010 இதழிலிருந்து )

அயோத்தியும் அற்புதத் தீர்ப்பும்

அயோத்தியும் அற்புதத் தீர்ப்பும்

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

http://mudukulathur.com/?p=2515

அயோத்தி பாபரி மஸ்ஜித் சொத்து வழக்கில் அலகபாத் உயர்நீதி மன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ந்தேதி அலாவுதீனும் அற்புத விளக்கும் போல அதிசயத் தீர்ப்பு வழங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதுவும் மூன்று மும்மூர்த்தி ஜட்ஜ்கள் கூடி கையில் கிடைத்த அயோத்தி என்ற அப்பத்தினை மூன்று பகுதியாக பிரித்து மூன்று அமைப்புகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் இஸ்லாமியர் மற்ற இரு அமைப்பினர் ராமர் பக்தர்கள். ஆகவே அப்பம் இரண்டு பகுதி ராமர் பக்தர்களுக்கும்; ஒரு பகுதி இஸ்லாமியருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறுவது மூலம் எப்படி அற்புதமான பங்கீடு என்று அனைவருக்கும் புரிந்திருக்கும். அந்த அப்பத்தினை பங்கிட்ட மூன்று ஜட்ஜ்களில் ஒருவர் முஸ்லிம் இருவர் முஸ்லிம் அல்லாதவர். இப்போது தான் கோர்ட்டுகளில் ஏன் நீதி தேவதையின் சிலையில் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டுள்ளது என உங்களுக்குப் புரிந்திருக்கும். தினமணி 2.10.2010 தேதியிட்ட பத்திரிக்கையில் அலஹபாத் நீதிமன்ற தீர்ப்பினை விமரிசக்கும் போது ‘அந்த தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு’ என விளக்கம் அளிக்கிறது. ஆங்கிலத்தில் கங்காரு கோர்ட் ஜட்ஜ்மெண்ட் என விமரிசிப்பார்கள்.

பாபரி மஸ்ஜித் இடிக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் உ.பி.முதல்வர் கல்யாண் சிங் சொல்கிறார், ராமர் கோயில் கட்ட அந்த இடம் மட்டும் போதாது மீதமுள்ள 66 ஏக்கர் அருகிலுள்ள அரசு நிலமும் வேண்டுமென்கிறார். ஆனால் சர்ச்சைக்குரிய பாபரி மஸ்ஜித் இருந்த இடமே வெறும் இரண்டரை ஏக்க்ர் தான். அதில் மூன்றில் ஒரு பகுதியினைக்கூட விட்டுக் கொடுக்க கல்யாண்சி;ங் தயாரில்லை என உங்களுக்குத் தோனவில்லையா? ஒரு காலத்தில் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங்குடன் கூட்டுச்சேரும் போது அதே கல்யாண்சிங் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதிற்கு வருத்தம் தெரிவித்தவர் தானே! ஆகவே அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவது போல உங்களுக்குத் தோனவில்லையா?

நீதிபதி சர்மா மற்றும் நீதிபதி அகர்வால் அவர்களும் சர்ச்சைக்கரிய இடம் பகவான் ராமர் பிறந்த இடமா என்று கேட்கும் கேள்விக்கு மத நம்பிக்கையின் படி ராமர் என்ற கடவுள் எங்கும் எப்போதும் எந்த உருவத்திலும் நிறைந்துள்ளவர். அந்த நம்பிக்கை அடிப்படையில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22ந்தேதி நடுராத்திரியில் நீதிபதி கான் அவர்கள் சொன்னபடி 1528 ஆம் ஆண்டு பாபராலோ அல்லது அவரது தளபதிகளாலோ இடிந்து கிடந்த இடிபாடுகளுக்கிடையே கட்டப்பட்ட மஸ்ஜிதின் கோபுர நடுவில் வைக்கப்ட்ட ராமர் சிலை இருக்கும் இடத்தில் தான் பிறந்தார் என்ற அதிசய கண்டு பிடிப்பிற்குப் பிறகு தீர்ப்பு நிகழ்த்தியுள்ளார்.

இதில் பொது அறிவிற்கு விளங்காத வாதங்கள் வைக்கப்பட்டது போல உங்களுக்குத் தோனவில்லையா? எல்லாம் வல்ல அல்லாஹ் உருவமற்றவன் அகிலத்தினைப் படைத்து ஆட்சி செய்ய நீக்கமற நிறைந்து இருப்பவன். அவன் இந்த அண்டத்தினை உருவாக்க்p பாரிபாலனம் செய்து நம்மை மனிதப்பிரவியில் படைத்து நல்வாழ்வினைத் தந்ததிற்காக உருவமற்ற பள்ளிவாசல் கட்டி அங்கே இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால் ராமர் என்ற ஒரு சிலையினை இருள் சூழ்ந்த நேரத்தில் வைத்த செயல் தடியெடுத்தவன் தண்டல் காரன் செயலாகவும், சிலையில்லாத பள்ளிவாசலில் சிலையினை வைத்து அதற்கு உரிமையுள்ளது என்று வாதிட்டு அதற்கு சார்பாக தீர்ப்புக்கூறுவது மூலம் எந்த வகையில் நியாயம் என உங்களுக்குத் தோனவில்லையா? அவ்வாறு ராமர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால் கிறித்துவர் சர்ச்சிலிலும், சீக்கியர் கோவிலிலும், சைன, புத்தர் கோயிலிலும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறாரா? ஏன்ற கேள்வி உங்கள் மனதில.; தோன்றவில்லையா?

புhபரி மஸ்ஜித் கட்ட முன்னோட்டமான கர்சேவர்களின் ரதயாத்திரையினை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய முன்னாள் உ.பி. முதல்வர் முலாயம் சிங்யாதவ் சொல்கிறார், இந்த தீர்ப்பு மத அடிப்படையில் சொல்லப்பட்டது அது சட்டத்திற்குட்பட்டு சொல்லவில்iயென்று. பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கிய பங்காற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி அவர்கள,; பாபரி மஸ்ஜித் தீர்ப்பு பற்றி சொல்லும் போது, நம்பிக்கை சட்ட வடிவில் வந்துள்ளது’ என சொன்னதாக 4.10. 2010 தேதியிட்ட இந்து பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. ஆகவே மத நம்பிக்கையில் எழுதப்பட்ட தீர்ப்பினை சட்ட முன்வடிவில் கொண்டு வர ஆரம்ப முயற்சிதான் அவர் அளித்த பேட்டி என உங்களுக்குத் தோனவில்லையா? அந்த தீர்ப்பினை வரவேற்று சில திராவிட அரசியல் கட்சகளும் கூட அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆனால் தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை 4.10.2010 அன்று எல்லா பத்திரிக்கையிலும் வெளி வந்துள்ளது. அதில், ‘நீதிபதி டி.பி. சர்மா கூறிய தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். ஆங்கு பாபரால் கட்டிடம் எழுப்பபட்டுள்ளது. எந்த வருடம் என்று தெரியவில்லை. சர்ச்கைக்குரிய இடத்தில் 1949ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 22ந்தேதி நள்ளிரவில் சிலை வைக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தினை ராமர் பிறந்த இடமாக கருதி, இந்துக்கள் வழிபட்டு உள்ளனர். ராமர் கிருதயுகத்தில் அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன்பு, ராமர் பிறந்த இடம் இது தான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீமன்ற தீர்ப்பு சொல்லும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மக்களாட்சி தத்துவமான குடவோலை தேர்தல் முறை மற்றும் பல் வேறு மக்கள் நல சீர்திருத்தங்கற் அறிமுகப்படுத்திய தென்னகத்தினை ஆண்ட தஞ்சை மன்னன் ராஜ ராஜ சோழன் மறைந்த விதத்தை, அவன் கல்லறை, அவனுக்கு நினைவுத்தூண் அமைத்த இடத்தையோ நம்பமால் இன்னும் காண முடியவில்லை என வருத்தத்துடன’; தெரிவித்துள்ளார். ஏனென்றால் சோழ சாம்ராஜ்ஜியம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் கோலோட்சியது. வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட ராஜராஜசோழன் பற்றி நினைவுச்சின்னம் கூட இந்த நவீன உலகத்தில் கிடைக்காதபோது 17லட்சத்து 28ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ராமரைப்பற்றி அவர் முஸ்லிம் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் கோபுரத்தின் நடுவில் பிறந்தார் என தீர்ப்புக் கூறும் போது முதிர்ந்த நடுநிலையாளர்களுக்கு வியப்பாக இருப்பது நியாயமே! ஆனால் அதற்கு பதில் சொல்லும் விதத்தில் பி.ஜே.பி மாநில தலைவர் 5.10.2010 வெளியிட்ட அறிக்கையில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை மத வேற்றுமையினைத் தூண்டுவதாக இருப்பதாக சொல்லியுள்ளார். உண்னையினைச் சொன்னால் ஒருசாராருக்கு குத்தலும்- குடஞ்சலும் வருவதும் இயற்கையே!

என் நண்பர் ஒருவர் கேட்டார், ‘ஏன் சார், பாபரி மஸ்ஜிதில் 1949ஆம் ஆண்டு இரவில் பள்ளியில் ராமர் சிலை தெரியாமல் வைத்தபோது முஸ்லிம்கள் காலையில் பார்த்து எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே’என்று. அதற்கு நான் சொன்னேன், ‘முஸ்லிம்கள் இந்திய நாட்டின் ஜனநாயத்தில் சம உரிமை பெற்றிருந்தாலும் மைனாரிட்டியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக போகவில்லை. அரசுக்கு முறையாக தெரிவித்து அரசு நியாயமான நடவடிக்கைக்காக காத்திருந்தார்கள். அதற்கு கிடைத்த பரிசுதான் பாபரி மஸ்ஜித் கர்சேவகர்களால் தரைமட்டமாக்கப்பட்டதும், அலஹபாத் நீதிமன்ற அற்புதத் தீர்ப்பும்’ என்றேன். என்னதான் கீழ்கோர்ட்டு தீர்ப்பு சொன்னாலும் மேல் முறையீடு செய்யும் போது உச்ச நீதிமன்றத்திலுமா நமது உண்மைக்கு சரியான முகவரி கிடைக்காது?

தமிழ் நாட்டில் வீட்டுக் குடியுரிமைச்சட்டம் உள்ளது. அதில் பத்தாண்டுகள் அரசு நிலத்தில் குடியிருந்தோருக்கு பட்டா வழங்கப்பட்டு உரிமமும் வழங்கப்படும். அப்படி விவாதத்திற்கு வைப்போமானாலும் பாபரி மஸ்ஜித் சொந்தம் கொண்டாட பத்திர உரிமை இல்லாவிட்டாலும் 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு தொழுகை நடத்திய ஜமாத்திற்குத்தானே அந்த இடம் ஒதுக்க வேண்டும்? அதனை விட்டு விட்டு 1949ஆம் ஆண்டு ராமர் சிலையினை திருட்டுத்தனமாக வைத்தவர்களுக்கு எப்படி வழங்குவது என்பது தான் நடு நிலையாளர்களின் புரியாத கேள்வி?


அலஹபாத் நீதிமன்ற தீர்ப்பு மூலம் சில பாடங்களை நாம் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்:

1) 1990ஆம் ஆண்டு ஒரு நாள் நான் சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் ரோட்டில் போய்க் கொண்டிருந்தேன். லுஹர் நேரம் வந்தது. அருகில் உள்ள ஊரில் பள்ளிவாசல் இருக்கிறதா என கேட்;;;டு அங்கே சென்றேன். ஆனால் அங்குள்ள சிறிய பள்ளிவாசல் மூடியிருந்தது. பள்ளிவாசலினைச் சுற்றியுள்ள வராண்டாவில் ஆட்டு மந்தையிருந்தது. ஆடுகளின் மூத்திரமும், புலுக்கையுமாக இருந்தது. எனது வாகனத்தினைப் பார்த்ததும் ஒரு தாடி வைத்த முதியவர் ஓடி வந்தார். அப்போது அவரிடம் லுஹர் தொழுகை நடத்த வில்லையா எனக் கேட்டேன். அப்போது அவர் சொன்னார் ரெகுலராக தொழுகை நடத்தக் கூட்டம் சேருவதில்லை. ஜூம்மாத்தொழுகைக்கு மட்டும் ஒரு இமாம் சிவகங்கையிலிருந்து வரவழைத்து தொழுகை நடத்துகின்றோமென்றார். இவ்வளவிற்கும் அந்த ஊரில் 20 முஸ்லிம்கள் குடும்பம் உள்ளது. ஆகவே இது போன்ற பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தாதும் ஆள்நடமாட்டம் இல்லாமலும் இருந்தால் மாற்றார் ஆக்கிரமித்து சிலை வழிபாடு நடத்த ஒரு வாய்ப்பு இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே தான் அருகிலுள்ள பெரிய ஜமாத்தார் இது போன்ற சிறிய ஊரில் உள்ளவர்கள் இஸ்லாத்தின் ஐம்பொரும் தூண்களில் இரண்டாவது தூணான தொழுகையினை கண்டிப்பாக நடத்தி வர தூண்டுவது மட்டுமல்லாது அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்து அவர்கள் ஈமான் மாறாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

2) மற்ற பள்ளிகளில் தொழுகை முடிந்ததும் அந்த பள்ளி வளாகத்தினை பாதுகாக்க ஜமாத்தார் காவலாளியினை நியமிக்க வேண்டும். வக்ப் சொத்துக்கள் எது என அறிந்து அதனை ஜமாத்தார் தங்கள் வசப்படுத்த சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3) முன்பெல்லாம் பஜ்ர் தொழுகையினுக்கு ஒரு பள்ளியில் ஒரு வரிசை அல்லது இரண்டு வரிசை ஜமாத் நிற்கும். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக சமுதாய இயக்கங்கள் தோன்றய பிறகு தொழுகையில் இளைஞர்களுக்கு ஒரு ஈடுபாடு ஏற்படுத்திய பயனால் நிறைய இளைஞர்கள் பள்ளிவாசலில் தொழுகைக்கு மிகுந்த ஆர்வத்துடன் வருவதினைக் காணலாம். அந்த இளைஞரகளால்தான் சீதனமில்லாது மகர்கொடுத்து திருமணம் அதிக செலவுமில்லாது-ஆடம்பரமில்லாது திருமணம் நடப்பதினைக் காணலாம். அந்த இளைஞர்கள் பள்ளிக்குத் தொழுகைக்கு வரும்போது அவர்கள் தலையில் தொப்பி யணிந்துதான் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு ஜமாத்தார் ஏற்படுத்துவது மூலம் அந்த இளைஞர்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு மேல் வெறுப்பினை ஏற்படுத்தி விடக்கூடாது. இளைஞரகள் வருங்கால முஸ்லிம் சந்ததிகள். அவர்கள் படித்தவர்கள். சுய வேலை செய்து குடும்ப்பொறுப்பினைக் காப்பவர்கள் மட்டுமல்ல சமுதாயத்திற்கு ஒரு பிரச்னை யென்றால் முன்னின்று குரல் ஏழுப்பக் கூடியவர்கள் என்று சமீப காலத்தில் உணர்த்தியுமுல்லார்கள். அவர்களை ஜமாத்தார் அரவணைத்து அவர்களின் உண்மையான உணர்வுப் பூர்வமான கோரிக்கையினை பொறுமையுடன் கேட்டு நிவர்த்தி செய்யதால் அவர்கள் பிற்காலத்தில் அந்த ஜமாத்தினைக் கட்டிக் காப்பார்கள் என்பது வெள்ளிடை மலை. உதாரணத்திற்கு வியாபார ரீதியாக எதிரிகள் போன்று இருந்த துருபாய் அம்பானி மகன்களான முகேஷ் அம்பானியும் அவருடைய தம்பி அனில் அம்பானியும் தங்கள் தொழிலுக்கு போட்டி ஏற்பட்டு தங்கள் தொழில் நசுங்கி விடும் என்ற நிலை ஏற்பட்ட போது 24.5.2010 தாயார் நிரூபன் மூலம் சமாதான ஒப்பந்தம் செய்து இன்று உலக பணக்காரர்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆகவே ஒரு தாய் மக்கள் போன்றிருக்கம் ஒரு ஊர் ஜமாத்தார் சிறு சிறு பிரச்னைகளுக்காக பிரிந்து நின்று மாற்றான் உங்கள் வேற்றுமையினைப் பயன் படுத்தி உங்களை அழித்து விட
இடம் கொடுக்கக் கூடாது.

சிந்தனை மன்றம்: இளைஞர்கள் பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு வரும் அதே நேரத்தில் அவர்கள் உடைகள் கேசுவலாக டி.சர்ட், தொழுகைக்கு வருபவர் கவனத்தினை ஈர்க்கக் கூடிய படங்கள், எழுத்துக்கள் போட்ட விதம் விதமான பேண்ட் சர்ட்டுகள் அணிந்து வருகின்றனர். சமுதாய அமைப்புகள் நடத்திக் கொண்டிருப்பவர்களும், ஜமாத்தாரும், இமாம்களும் அது போன்ற உடைகள் ஏன் அணிந்து வரக்கூடாது என விளக்க வேண்டும். சமீபத்தில் அண்ணா யுனிவர்சிட்டியில் இது போன்ற உடைகள் உடுத்திக் கொண்டு வரக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதற்கு சில எதிர்ப்பு ஆரம்பத்தில் இருந்தாலும் இன்று அதனை கடைப்பிடித்து வருகிறார்கள். அது போன்ற பல கல்வி நிறுவனங்கள் கூட அமல் செய்துள்ளன. திருப்பதி தேவஸ்தானம் கூட அது போன்ற கட்டுப்பாடு பக்தர்களுக்கு விதித்துள்ளதாக 3.10.2010 செய்திகள் கூறுகின்றன. இஸ்லாத்தில் ஏற்கனவே உருவ வழிபாடு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உருவம் பொறித்த உடைகள் அணிவதினை பள்ளிவாசலுக்கு வெளியே அணிந்தால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆகவே ஏக இறைவனைத் தொழும் பள்ளிவாசலுக்கு அது போன்ற டிரஸ் அணிந்து வருவது முறைகேடானது. ஆகாதா?