Monday, May 4, 2009

6 Tips for Deep Sleep

6 Tips for Deep Sleep
By Maoshing Ni, L.Ac., D.O.M., ABAAHP, Ph.D.

Would you like to sleep like a baby without taking drugs? Americans spend upwards of 3 billion dollars a year on sleep medications, but to avoid the side effects, there are a number of natural remedies you can try first. Read on to learn some of the ways to get a good quality night's sleep.

1. Relaxing Rituals to Rest Easy

In Chinese Medicine, nighttime is yin time—or, simply, when the body takes care of itself instead of your desires. Proper sleep is required for your body to repair itself and regenerate. To reach deep restful sleep, your spirit and heart must be calm. Excessive worry, anxiety, and depression can all disturb the spirit and activate the mind—making it near impossible to fall asleep and stay asleep. Rituals to soothe your spirit and induce a sleep response before bed include soaking your feet in Epsom salts for 15 minutes, writing all of your thoughts in a journal to get them out of your head, and practicing relaxation before bed, like the Stress Release meditation below.

2. When Food Disturbs Sleep

When you eat late, you wake up tired. Your body will be busy digesting your dinner while you are trying to sleep, so you won't feel rested in the morning. Do not eat anything for at least three hours before bedtime. Also, cut back on eating bacon, cheese, chocolate, ham, potatoes, tomatoes, and sausage, especially before bed. These foods contain tyramine, which inhibits neurochemicals like norepinephrine and can cause insomnia. And, of course if you have sleep problems, caffeine should be cut out.

Eat for sleep! Try eating more grains at dinner; carbohydrates tend to make people sleepy. Another snooze snack is a warm cup of milk; because milk is rich in the amino acid tryptophan, it can sometimes aid in deep sleep. Mix in natural vanilla flavoring for a soothing snack. Or if you prefer, eat 1 cup of natural yogurt an hour before bedtime.

3. A Peaceful Place for Sleep

Your sleeping environment makes a huge difference to the quality of your sleep. Do everything you can to create a quiet and cozy atmosphere. Ideally, your bedroom should be located in the quietest area of your home. Keep the décor minimal. Lighting should be dim and any music that is played should be soothing. Research has found that lavender, vanilla, and green apple are among the best scents to help lower anxiety and induce sleep, making these smells a good choice for a scented candle or heated essential oil. Try to limit your pets to outside of the bedroom because their movements can keep your body from fully relaxing into deep R.E.M. sleep. As much as possible, your bedroom should be only for sleep.

4. Exercise Enables Sleep

People with regular exercise routines often sleep better and have fewer incidents of insomnia than those don't get regular physical activity. Exercise promotes sleep and improves sleep quality by altering brain chemistry. Exercising moderately for 20 to 30 minutes three times a day, combined with meditation or tai chi in the evening, will not only help you fall and stay asleep, but will also increase the amount of time you spend in R.E.M. sleep. In fact, for some people, exercise alone is enough to overcome sleep problems. Exercise in the morning or afternoon, but do not exercise for at least two hours before bed.

5. Herbs to Sleep Tight

A calming tea before bedtime can ensure a good night's sleep. Drink valerian or passionflower (or passiflora) tea before bedtime every night for one month. Simply steep 1 to 2 tablespoons of the dried herbs in one cup of hot water and drink just before bed. Or look for one with the traditional Chinese herbs zizyphus or jujube seed, bamboo shavings, and oyster shell, which soothe the mind and spirit.

You might also try Calm-Fort/Sleep formula with useful herbs like lily bulbs, polygala and turmeric that help manage stress and calm the spirit while relieving restlessness and insomnia.

6. A Sleep-Friendly Meditation
I had one patient with insomnia who also felt anxious and even a little depressed. In addition to acupuncture and herbal therapies, I decided to teach her a stress release meditation that she could do before bedtime to help with her anxiety. I am happy to report that she is now sleeping like a baby.

Try this Stress Release meditation, which works for the majority of my patients who have sleeping problems:

Sit comfortably or lie down on your back. Slow your respiration to deep, abdominal breathing. Utter the word "calm" in your mind with every exhalation. Focus on relaxing each area of your body in sequence, from the top of your head to your toes. Starting with the top of your head, inhale and then exhale while visualizing your scalp muscles relaxing. Say "calm" in your mind. Repeat this with each body part as you move down through all body parts, front, back, and sides, in succession: your face, throat, chest, arms, stomach, abdomen, thighs, knees, legs, ankles, until finally you reach your feet. When you've relaxed your feet, visualize all the tension in your body leaving through your toes as dark smoke. Practice this for at least 15 minutes before bedtime.

It will have you sleeping in no time. If you do better with meditative visualizations that are narrated, try my Stress Release CD.

I hope you find the ways to resting easy and waking up refreshed!

May you stay healthy, live long, and live happy!

Regards
A.Mohamed niyaz

Arabic Typing and Arabic E-teaching

Assalaamu alaykum Islamic Brothers and sisters.

I welcome all those who want to learn Arabic through Online. The Arabic language is very important one. Our Prophet Mohammed (sal) said: Learn Arabic for 3 reasons.
1. The Holy Quran In Arabic 2. The Prophet's sayings are in Arabic. 3. The language of paradise is Arabic. (Baihaquee)

so, we have to learn Arabic. kindly open the attached file.

N. Abdul hadi Baquavi
Chennai. 81.
4 05 2009
hadi2abshar@gmail.com

ஜி-மெயிலில் ஆர்க்கிவ் (archive) பட்டன் ஏன்? எதற்காக?

ஜி-மெயிலில் ஆர்க்கிவ் (archive) பட்டன் ஏன்? எதற்காக?
எழுதியவர் : கார்த்திக் 04 May 2009

ஜிமெயிலின் ஒரு பெரிய வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக்கும் (கொடவுண்) இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெயிலைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் பலருக்கு இது புதிராகவே இருக்கும். இந்த ஆர்க்கிவ் என்பது உங்கள் மெயில்களைப் பல ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருக்கும் என்பதல்ல. அவற்றை அது விடவே விடாது; என்றும் விட்டு விடாது என்று எண்ண வேண்டாம்.


இந்த ஆர்க்கிவ் பட்டனை உங்கள் ஜிமெயிலின் இன்பாக்ஸ் தோற்றத்தில் காணலாம். இதில் கிளிக் செய்தால் அது அப்போது கர்சர் உள்ள இமெயில் செய்தியை இன்பாக்ஸிலிருந்து எடுத்துவிடுகிறது. அப்புறம் என்ன செய்கிறது? ஏன் எடுக்கிறது? இது உங்கள் இமெயில்களை ஒரு ஒழுங்கு செய்திடும் வேலை தான். நீங்கள் ஆச்சரியப்படலாம். இன்பாக்ஸிலிருந்து எடுக்கப்பட்ட இமெயில் எங்கு செல்கிறது என்று பார்க்க விரும்பலாம். இது நீங்கள் அந்த இமெயில் செய்திக்கு ஏதேனும் லேபிள் பெயர் தந்திருக்கிறீர்களா என்பதைப் பொறுத்து உள்ளது. நீங்கள் அதற்கு லேபிள் கொடுத்திருந்தால் அது அந்த லேபிளுக்கான பாக்ஸிற்குச் செல்கிறது.இதனை ஆல் மெயில் பிரிவிலும் (All Mail) பார்க்கலாம்.

இதனைக் கொஞ்சம் இன்னும் பின்னோக்கிச் சென்று விளக்கமாகப் பார்க்கலாம். உங்கள் ஜிமெயிலுக்கு ஒரு இமெயில் செய்தி வந்தவுடன் அது தானாகவே இன்பாக்ஸ் லேபிலை வாங்கி கொண்டு இன்பாக்ஸ் பிரிவில் வைக்கப்படுகிறது. இதனுடைய லேபிளை மாற்றாதவரை அது வேறு எந்த பிரிவிற்கும் மாற்றப்படுவதில்லை. இதற்கு ஒரு லேபிள் தராமல் ஆர்க்கிவ் பட்டன் அழுத்தி ஆர்க்கிவ் பிரிவிற்கு அனுப்பினால் ஆல் மெயில் வியூவில் மெசேஜிற்கு அடுத்தபடியாக "Inbox என்று இருப்பதைக் காணலாம். இது எதற்காக என்றால் உங்களின் அனைத்து மெயில்களையும் நீங்கள் அவை எங்கிருந்து வந்தவை என்று பார்ப்பதற்காக. அதே நேரத்தில் அவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படுகின்றன.

இதனை இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்ளவும் இந்த ஏற்பாட்டினைச் சோதித்துப் பார்க்கவும் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன் பாக்ஸ் சென்று ஏதேனும் ஒரு இமெயில் மெசேஜைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஒரு லேபில் கொடுக்கவும். ஆனால் ஆர்க்கிவ் செய்திட வேண்டாம். இனி நீங்கள் கொடுத்த லேபில் வியூ சென்று அங்கு உள்ள பட்டியலில் இந்த இமெயில் செய்தி இடம் பெற்றிருப்பதனைக் காணுங்கள். இங்கு நீங்கள் கொடுத்த லேபிலும் முதலிலேயே அதற்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபிலும் காட்டப்படுவதனைக் காணலாம். இவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படும்.


இப்போது மீண்டும் இன் பாக்ஸ் சென்று இன்னொரு மெசேஜைத் தேர்ந்தெடுங்கள். இப்போது அதற்கு ஒரு லேபில் அமைத்து ஆர்க்கிவ் பட்டனையும் அழுத்தி ஆர்க்கிவ் செய்திடுங்கள். அடுத்து லேபில் வியூவில் சென்று பார்த்தால் நீங்கள் அதற்குக் கொடுத்த லேபில் இருக்கும். ஆனால் இன்பாக்ஸ் லேபில் இருக்காது. ஒரு மெசேஜை ஆர்க்கிவ் செய்திடுகையில் அந்த இமெயில் செய்திக்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபில் நீக்கப்படுகிறது.இதனால் இந்த இமெயில் மெசேஜ் இன்பாக்ஸில் தொடர்ந்து காட்டப்படமாட்டாது. நீங்கள் தான் அதனை கொடவுணில் போட்டு விட்டீர்களே.

அப்படியானால் ஆர்க்கிவ் செய்ததை மீண்டும் மீட்டு இன்பாக்ஸ் கொண்டு வர முடியாதா? கொண்டு வந்து அதற்கு வேறு ஒரு லேபில் வழங்க முடியாதா? என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. தாராளமாகக் கொண்டு வரலாம். ஆர்க்கிவ் சென்று மீட்க விரும்பும் மெசேஜில் கர்சரைக் கொண்டு செல்லவும். அங்கு More Actions என்று ஒரு லிங்க் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் உள்ள Move to Inbox என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் அந்த மெசேஜிற்குச் செய்ததெல்லாம் மீண்டும் ரிவர்ஸ் ஆகி அந்த மெசேஜ் இன்பாக்ஸிற்குச் சென்றுவிடும்.

ஆர்க்கிவ் பட்டன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட சில இமெயில்களை எடுத்துச் சென்று தனியே பிரித்தெடுத்து வைக்க முடிகிறது. முயற்சி செய்து பார்த்தால் இதனை நீங்கள் விரும்புவீர்கள்.

பேராசிரியர் பெரியார்தாசன் பேச்சு

பேராசிரியர் பெரியார்தாசன் பேச்சு

RIYADH
Mon, May 4, 2009 at 9:53 PM

தனித்தனி அழைப்புகளால் வந்தவர்களாலேயே நிறைந்துவிட்டிருந்தது அரங்கு. சில நாள்களாக ரியாத்தில் மையங்கொண்டிருக்கும் பெரியார்தாசன் என்னும் பேச்சுப்புயலில் தங்களுக்கான/தங்கள் சமூகத்திற்கான அறிவுரைமழையை எதிர்பார்த்து தமுமுக என்கிற முஸ்லிம் பொதுமக்கள் சமூக அமைப்பு ஞாயிறு இரவு பத்தாவில் இந்தக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த வியாழன் இரவு, ரியாத் தமிழ்ச்சங்கத்தின் பொன்மாலைப் பொழுதிலும், மறுநாள் எழுத்துக்கூடத்தின் வெள்ளிமாலையிலும் பேராசிரியரின் பேச்சைக் கேட்டு சிந்தை நிறைந்தவர்கள் வந்திருந்து இந்த அரங்கையும் நிறைத்திருக்க, இந்திய அரசியலின் புரட்டுத்தனங்களை தன் பேச்சில் பட்டியலிட்டார் பேராசிரியர்.

முஸ்லிம்கள், குறிப்பாக தமிழக முஸ்லிம்களைக் குறித்து கூறும்போது, இறையியல் தத்துவம், வணக்க வழிபாடுகள், மறுமை நம்பிக்கை என்கிற மூன்று அம்சங்களிலேயே மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்களே தவிர, இரத்தமும் சதையும் உள்ள சகதமிழர்களாக, அவர்தம் தொப்புள்கொடி உறவாகத்தான் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றார் பேராசிரியர்.

இஸ்லாமிய தத்துவத்தின் தாக்கம்

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்...
என்று தொடங்கும்

நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலும் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் என்ற திருநாவுக்கரசின் சைவப் பாடலிலும் இருப்பதைச் சுட்டிவைத்தார்.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், கடத்தல்காரர்களாகவும், பலதார மணமுடிப்பவர்களாகவும் கருதும் போக்கு கடந்த சில வருடங்களாகத்தான் கட்டிஎழுப்பப்பட்டது என்ற பேராசிரியர், பாபர்மசூதி இடிப்பு அதன் தொடர்ச்சியே என்றார்.

முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகிய ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைவதன் மூலமே தங்கள் உரிமைகளை சரியாகப் பெற முடியும் என்ற பேராசிரியர் அப்படி ஒன்றிணைந்துவிடாமல் சுட்டா'ராம்' கட்சியும், செத்தா'ராம்' கட்சியும் சூழ்ச்சி வலை பின்னுவதை எளிதாக விளக்கினார். "நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன், நீ அழற மாதிரி அழு" கதை தான்.

செத்தவனும் ராம் ராம் என்று சொன்னான், சுட்டவனும் ராம் ராம் என்று தான் சொன்னான். ஆக, இந்த சூனாராம் சேனாராம்களே இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதை 'நாம்' தெளிவாக உணர்ந்துகொள்ளவேண்டும் என்றார். இங்கே, 'நாம்' என்பது ஒடுக்கப்பட்ட அனைவரும்.

ஒரு அரசின் மூன்று அங்கங்களாக ஆட்சித்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்ற மூன்று துறைகள் விளங்குவதைக் குறிப்பிட்ட பேராசிரியர், சட்டங்கள் இயற்றும் அவைகளில் இடம்பெற முஸ்லிம்கள் இப்போது முனைப்பு காட்டினாலும், மற்ற இருதுறைகளிலும் அதேபோல முன்வரவேண்டும் என்றார். முழுமையான முன்னேற்றம் மூன்றிலும் தம் விகிதத்தை உயர்த்திக்கொள்வதில் தான் இருக்கிறது என்ற உண்மையைச் சொன்னார்." இல்லேன்னா, அவன் விட்டால் இவன் விடமாட்டான், அவனும் இவனும் விட்டா மூணாவது ஆளை வைத்து ஸ்டே வாங்குவான்"

ஆட்சியாளர்கள், நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகள், நீதித்துறை என்று எந்த இடத்திலும் இடர்ப்பாடுகள் நேரலாம் என்பதையும் விளங்க வேண்டும் என்றார்.

1916லிருந்து 1952 வரை இடஒதுக்கீடு பெற்றிருந்தும் முஸ்லிம் சமூகம் நிர்வாகத்துறையில் குறிப்பிடத்தக்க இடம்பெறவில்லை என்ற பேராசிரியர், அதன்பிறகு முஸ்லிம்களின் வளமை பற்றிய போலித்தோற்றத்தால்; மாயையால் அந்த இடஒதுக்கீடு பறிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.

சச்சார் கமிட்டி அறிக்கை முஸ்லிம்களின் யதார்த்தமான பொருளாதார நிலையைப் படம்பிடித்து காட்டும்வரை, முஸ்லிம்கள் கூட தங்களின் உண்மைநிலையைத் தெரிந்துகொள்ளாமல் தான் இருந்தார்கள் என்பதையும் பெரியார்தாசன் சுட்டுவதற்குத் தவறவில்லை.

அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு அம்பேத்கர் தேர்வு பெற்று விடாமல் ஆதிக்கவாதிகள் சூழ்ச்சி செய்து தோற்கடித்தபோது, படித்தவராக, நுண்ணறிவு மிக்கவராக விளங்கிய அம்பேத்கர் அதை முறியடித்து அந்த சபைக்கே தலைவராக வந்த விதம் பற்றி பேராசிரியர் விளக்கியபோது அதில் சமூகத்துக்கு ஒரு செய்தி இருந்தது.

" முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களுக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள் ஆதிக்க வாதிகள். அப்படிப்பட்ட முஸ்லிம்களைத் தான் தம் இயக்கத்தில்; கட்சியில் பதவியில் வைத்து அழகு பார்ப்பார்கள்" என்றார் பேராசிரியர்

ஒற்றுமை என்னும் விழிப்புணர்ச்சி பற்றி கருத்து சொல்லவந்த போது முஸ்லிம்களின் இயக்கவெறி மாய்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அழகாக குட்டவும் சுட்டவும் செய்தார் பேராசிரியர்.
"ஒரு ஊரில் மூன்று முஸ்லிம்கள் தான் இருக்கிறார்கள். ஆனால், நான்கு இயக்கங்கள் இருக்கின்றன. நாலாவதாக வெளியிலிருந்து வந்தவன், இந்த மூன்று பேரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காகவே இயக்கம் கண்டதாகச் சொல்கிறான்"

உரை முடிந்ததும் இதே கருத்தில் மீண்டும் வினாவெழுப்பிய ஒரு சகோதரருக்கு "இதுபற்றி தான் பேசியிருக்கிறேன், ஒலிநாடா கேளுங்கள்" என்றார் பேராசிரியர்.

இன்றைக்கு இளைஞர்கள் விழிப்புணர்ச்சி பெற்று அனைத்து ஒடுக்கப்பட்டவர்களையும் இணைத்து களம் காண்பது காலத்தின் தேவையாக இருப்பதைச் சொன்ன பேராசிரியர் மேலும் தொடர்ந்து........
"இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது" என்று சொல்கிற ஒரு முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒருதலைவர், அதுவும் பேராசிரியராக இருந்தவர் இடஒதுக்கீட்டுக்காக முதல்வரைப் புகழும்போது சொன்ன வார்த்தைகளைச் சொன்ன பேச்சாளர் 'ஒரு முஸ்லிம் இப்படியெல்லாம் பேசலாமா?' என்ற தன் ஆதங்கத்தையும் வெளியிட்டார்.


தம் சமூக நலனை முன்னெடுத்துச்செல்ல களம் காண்கிற இளைஞர் பட்டாளத்தைப் பாராட்டிய பேராசிரியர் உரையில் நம்மைப் போன்றவர்களுக்குப் பாடமும், ஊக்கமும் இருந்தது என்றால் மிகையில்லை.







--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.com
fakhrudeen.h@gmail.com

எண்ணம் பொறுத்ததாம் எச்செயலும் அத்துடன் உன்னைப் பொறுத்தே உலகு!

நியாயம்தான் சட்டம்

நியாயம்தான் சட்டம்
வாரண்ட் பாலா

உலகில் ஒருவர் எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருந்தாலும் அவருக்கு, அவருடைய நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளையும் வழங்கும் ஒரே நாடு நமது இந்தியா தான்.

இதன் அடிப்படையில் இந்தியக் குடிமகன்

அல்லது குடிமகள் என்பதற்காக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் நமது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமாவது பெருமைப்படுவார்களா? என்பது சந்தேகமே. காரணம் ஒவ்வொரு மதத்திற்கும் எனத் தனித்தனியாகச் சட்டம் இருந்தாலும் கூட அது பற்றிய விழிப்புணர்வு இன்மையே.

நாமெல்லாம் சட்டப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் உங்களால் நம்ப இயலாது. ஆனால் அது உண்மை. ஆம்! சட்டப்படி வாழ்வதால்தான் ""வெளியில் இருக்கிறோம்'' இல்லையென்றால் ""சிறையில்தானே இருப்போம்?''

சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து வரும் நமக்கு, சட்டத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்? ஒன்றுமே இல்லை என்பது தான் எனது ஆணித்தரமான கருத்து.

நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரையறைதான் "சட்டம்'.

எனவே, சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை என்பதெல்லாம் அதை கையாள்பவர்களின் கையாலாகாத்தனமே தவிர சட்டத்தின் தன்மையல்ல.

நாம் முன்னரே படித்தவாறு சட்டம் என்பது எல்லாம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக யார், யார் எப்படிச் செயல்பட வேண்டும் என எழுதப்பட்ட அதிகார வரையறை தொகுப்பே. இந்த அதிகாரத்தை எவர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தினாலும் சட்டம் ஒன்றும் செய்யாது. செய்யவும் முடியாது. காரணம் அது எழுத்து மூலமான ஓர் அறிவுறுத்தல் தொகுப்புத்தானே தவிர, நம்மைப்போல் வாய் உள்ள நபர் அல்ல என்பதை முதலில் நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாட்டில் எந்த விதத்திலும் யார் பெரிய ஆள் என்று கேட்டால், நமது நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் முதல் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடிமகன் வரை ஒவ்வாருவரும் ஒவ்வொரு விதத்தில் பெரியாளாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லாருமே ஒன்றுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால், அது சட்டத்துக்கு மட்டும் தான்.

சட்டம் என்பது நாம் நினைப்பது போல் மிகவும் கடினமான ஒன்றல்ல. எளிமையான விஷயமே. சட்ட விழிப்புணர்வு பெற இருக்கிற சட்டங்களை எல்லாம் கரைத்துக் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நமது உடம்பில் எப்படி ஐம்புலன்கள் முக்கியமோ அதுபோல, நாட்டில் நாம் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால், இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள், உரிமையியல் விசாரணை முறை விதிகள் என்ற இந்த 5 சட்டங்கள் மிகமிக முக்கியம்.

இந்திய அரசமைப்புதான் இந்தியாவின் தலையாய சட்டம். இதில் சொல்லப்பட்டுள்ளபடிதான் நாடு இயங்க வேண்டும். நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் முதல் அனைத்து விதமான உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதோடு தமக்கென விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்ற வேண்டும்.

இதில் என்ன விசித்திரம் என்றால், சட்ட விழிப்புணர்வு இல்லாதவர்கள் கூட உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஆனால் கடமையைச் செய்வதில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.

உரிமையை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் கூட அதற்காக வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது அல்லவா? இதற்கு என்ன காரணம்? யாருமே கடமையைச் செய்யாதுதான். ஒருவர் தான் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றினால் மட்டும்தானே அதன் மூலமாக பல பேருக்கு கிடைக்க வேண்டிய உரிமை பலனாகக் கிடைக்கும். எல்லோருமே உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தால் உரிமை எப்படிக் கிடைக்கும்?

சாதாரண ஆவணம் முதல் சான்று ஆவணங்கள் வரை, ஆண்டி முதல் அரசன் வரையிலான சாட்சிகள் எவை எவை எத்தன்மை வாய்ந்தது என்று வகைப்படுத்தப்பட்டு நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை இந்திய சாட்சிய சட்டம் வழங்குகிறது.

இந்திய தண்டனைச் சட்டமோ, நாம் எதையெல்லாம் செய்யக் கூடாது, எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாததை செய்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும்? செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும்? இவைகளுக்கு என்ன தண்டனை என்பதை விளக்குகிறது.

எந்த ஒரு சட்டத்தின் கீழும் தண்டிக்கத்தக்க குற்றம் நடக்கும் போது அதற்கான முதல் தகவல் அறிக்கை, புலனாய்வு, கைது, பிணை, விசாரணை, தண்டனை அல்லது விடுதலை ஆகியவை குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்குவதே குற்ற விசாரணை முறை விதிகள்.

எந்த ஒரு சட்டத்தின் கீழ் நமது உரிமையைக் கோருவதாக இருந்தாலும், அதற்கு மனு தாக்கல், பதில் மனு தாக்கல், சாட்சிகள் விசாரணை, ஆவணங்கள் ஆய்வு, தீர்ப்புரை என அனைத்தும் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துவது உரிமையியல் விசாரணை விதிமுறைகள்.

இந்த ஐந்து சட்ட விஷயங்களை சாதாரணமாகத் தெரிந்து வைத்திருந்தாலே போதும். தப்பு தண்டா ஏதும் செய்து விடாமல் நல்ல முறையில் நமது வாழ்க்கையை கழித்துவிடலாம்.

ஒருவேளை தப்பு தண்டா ஏதும் செய்துவிட்டால்கூட அதற்காகப் பயப்படத் தேவையில்லை. நேராக நீதிமன்றம் சென்று ஒப்புக் கொண்டு விட்டால் "" முதல் குற்றம் என்ற காரணத்தால் அதிகபட்சம் மன்னிக்க வாய்ப்புண்டு அல்லது மிகக்குறைந்த தண்டனையே கொடுப்பார்கள். அத்தண்டனை நாம் நமது தவறுகளைச் சரி செய்து கொள்வதற்கு வழிகோலாக அமையும்''.

நாமே நேரடியாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொள்ள முடியுமா? என்று உங்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வரலாம். குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு மட்டுமல்ல, நமது பிரச்னைக்காக "நாமே எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் வாதாடலாம்!''

நம் வழக்குக்காக நாமே வாதாடுவதற்கு எந்தவிதத் தடையும் கிடையாது. இனி விதிக்கவும் முடியாது. ஏன் தெரியுமா?

உங்களிடம் நான் தற்போது எதன் அடிப்படையில் பேசிக் கொண்டு இருக்கிறேனோ அதே அடிப்படையில் நீங்கள் நீதிபதிகளிடம் மட்டுமல்ல, யாரிடம் வேண்டுமானலும் உங்களின் நியாயத்துக்காக வாதாட முடியும். இப்படி வாதாடுவது உங்களின் அடிப்படை உரிமை.

அடிப்படை உரிமை என்றால் நமக்குத் தேவையானதை யாரிடமும் அனுமதி கேட்காமல் நாமே எடுத்துக் கொள்வதாகும்.

நீங்களே வாதாடும் போது முக்கியமாக செலவு கிடையாது. உங்களை எதிர் தரப்பினர் விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் ஏமாற வாய்ப்பில்லை. வழக்கு முடியும்வரை வேறு வேலை கிடையாது என்பதால், வாய்தா வாங்கமாட்டீர்கள். வழக்கு விரைவில் முடியும்.

வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை அடுத்து பல்வேறு தரப்பினரும் தாங்களே வாதாடி ஒரே நாளில் நிவாரணம் பெற்றனர்.

"நியாயம்தான் சட்டம். அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம்' என்ற கருத்தை ஆழமாக உணர்ந்து வாதாடியவர்களே, செலவில்லாமல், ஏமாறாமல், விரைவாக தனக்கான நீதியைப் பெற்றார்கள். இந்த நற்கொள்கை மிக்க உணர்வை ஏன் இந்தியக் குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் பின்பற்றக் கூடாது. கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

நமக்குள்ள அளவுகடந்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பது மிகவும் முக்கியம். அப்படி பாதித்து விட்டால் அதுதான் "குற்றம்'.

அதேபோல தனக்கு இருக்கும் உரிமை அடுத்தவருக்கும் உண்டு என நினைக்க வேண்டும். அப்படி இல்லை என்று நினைக்கிற இடம்தான் "பிரச்னையின் ஆரம்பம்'.

குற்றம், பிரச்னை ஆகிய இரண்டும் முற்றிலுமாகக் களையப்பட வேண்டும். குடிமக்கள் அனைவரும் சண்டை, சச்சரவு இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும். உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

”ஓட்டு” களுக்காக இறையருளை இழக்க வேண்டாம் !

”ஓட்டு” களுக்காக இறையருளை இழக்க வேண்டாம் !

தமுமுகவினருக்கு கீழை ஜஹாங்கீர் அரூஸி வேண்டுகோள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொது செயலாளர் மற்றும் தொண்டர்களுக்கு மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சலாத்துடன் எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இம்மடல் காணும் உங்கள் அனைவரின் மீதும் சமாதானம் நிலவிட துஆ செய்கிறேன்.கடந்த 16 ஆண்டுகளாக தங்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், ஆம்புலன்ஸ் சேவை போன்ற பொது சேவைகளை சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் செய்து வருவதை எல்லோரும் நன்கறிவோம். இச்சேவைகளுக்கான நற்கூலி நாளை மறுமையில் கிடைக்கும். என்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தான் தாங்கள் செய்திருப்பீர்கள் என திடமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இது தான் உண்மையென்றால் அனைவருக்கும் சந்தோஷமே! மனிதன் செய்யும் ஒவ்வொரு அமல்களுக்கும் நிச்சயமாக கூலி வழங்குபவன் அல்லாஹ் ஒருவனே! அதற்குரிய நற்கூலியை நாளை மறுமையில் வழங்கப்படும் போது நல் அமல்களில் ஈடுபட்ட மனிதர்களின் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது ! இதையெல்லாம் உணர்ந்து தான் தாங்கள் பகிரங்கமாகவே அரசியலுக்கு வர மாட்டோம் இது அல்லாஹ்வின் மீது சத்தியம் ! என்று பிரகடனம் செய்தீர்கள். ஒருவேளை மனம் மாறி அரசியலுக்கு வந்து விட்டால் இதற்காகத்தான் தமுமுகவினர் இரத்ததான முகாம், ஆம்புலன்ஸ் போன்ற சேவைகளை செய்திருக்கின்றனர். என்ற எண்ணம் பொது மக்களிடம் ஏற்பட்டு நாளை மறுமையில் இறைவனின் அருள் கிடைக்காமல் போய் விடலாம் என்ற அச்சத்தின் விளைவாகத் தானே நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அறிவித்த அரசியலுக்கு வர மாட்டோம் இது அல்லாஹ் மீதாணை என்ற சத்தியம். அந்த நேரத்தில் உங்களது குரலில் இருந்த வீரியத்தை வர்ணிக்க வார்த்தை கிடையாது ! ஆனால் இன்றோ, அந்த சத்தியம் என்னாயிற்று? ஏன் சத்தியத்தை முறித்தீர்கள்? ஒரு முஸ்லிம் சத்தியத்தை முறிக்க நினைத்தால் அதற்கான பரிகாரத்தை நிறைவேற்றிய பின்னரே சத்தியத்தை முறித்ததற்கான காரண காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற அல்குர்ஆனின் வசனத்தை படித்துப் பாருங்கள். குர்ஆனின் அடிப்படையில் வாழ வேண்டிய நீங்கள் உங்களது சத்திய முறிவுக்கான பரிகாரத்தை நிறைவேற்றினீர்களா? இதை நீங்கள் மட்டுமல்ல உங்கள் சத்திய பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு தொண்டரும் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும். சத்தியத்தை முறிப்பது பாவம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் முறித்த சத்தியத்திற்கான பரிகாரத்தை செய்யாமல் இருப்பது மிகப்பெரிய பாவம் என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது ! உங்களின் சத்திய முறிவுக்கான பரிகாரத்தை இதோ அல்குர்ஆன் கூறுகிறது பாருங்கள்! ஏதாவதொன்றை உறுதிபடுத்து வதற்காகச் செய்யும் சத்தியத்திற்காக (அவற்றில் தவறினால்) அல்லாஹ் உங்களை பிடிப்பான். எனவே (சத்தியத்தை முறித்தால்) அதனுடைய பரிகாரமாவது உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் உணவில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பதாக இருக்கும். அல்லது பத்து ஏழைகளுக்கு உடுத்த உடை கொடுப்பதாயிருக்கும். அல்லது ஓர் அடிமையை உரிமை விடுவதாயிருக்கும். ஆனால் எவர் இம்மூன்றில் எதனையும் செய்ய சக்தி பெற்றுக் கொள்ளவில்லையோ? அப்போது மூன்று நாட்கள் நோன்பு (வைப்பது பரிகாரம் ஆகும்) இது தான் உங்களுடைய சத்தியங்களுக்கு அவற்றை நீங்கள் முறித்தால் பரிகாரமாகும். ஆகவே உங்களுடைய சத்தியங்களைப் பேணி காத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:89) இவ்வளவு பெரிய விஷயத்தை சடாரென உதறிவிட்டு நாளை மறுமையின் விளைவுகளை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இவ்வுலக அரசியல் பதவிகளுக்காக ஆசைப்பட்டு இறையருளை இழக்க துணிந்திருப்பது எவ்வகையில் நியாயம்? இதை உங்களில் ஒருவன் என்ற சகோதர உரிமையோடு கேட்கிறேன். அரசியல் என்னும் சாக்கடைக்குள் மூழ்கியதும் உங்களின் அணுகுமுறைகளை கொஞ்சம் யோசித்து பார்த்தீர்களா? உங்களது 16 வருட பொது சேவைக்குரிய நற்கூலி வெறும் ஒரேயொரு சீட் ஒதுக்கீடு மட்டுமே! இப்போது அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது. நான் கூறுவது நீங்கள் எடுத்த திமுகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையைப் பற்றி! உங்களின் கண்ணியத்தையும், செல்வாக்கையும் திரைப்பட நடிகர் சரத்குமாரிடம் நீங்கள் நடத்திய கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே தமிழக முஸ்லிம் சமுதாயம் நன்கு தெரிந்து கொண்டது! உங்கள் கட்சியின் வலிமையை தெரிந்து கொண்ட சரத்குமார் உங்களுடன் கூட்டணியே வேண்டாமென்று தலை தெறிக்க ஓடியதையும் மக்கள் நன்கறிவர். இவ்வளவு அவமானங்களும் உங்களுக்கு ஏன் எதனால் ஏற்பட்டது? இறைவன் மீது செய்த சத்தியத்தை கேவலம் அரசியலுக்காக முறித்துக் கொண்டதால் வந்த வினையால் தான்! தமுமுகவினரின் பொது சேவைக்குரிய நற்கூலியை அரசியல் மூலம் பெறுவதைவிட நாளை மறுமையில் இறைவனிடம் பெறுவதுதான் உயர்வு! இப்போதும் கெட்டு விடவில்லை உடனடியாக உங்கள் கட்சியை கலைத்து விட்டு நீங்கள் செய்த சத்தியத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் தேர்தலில் இருந்து விலகி கொள்ளுங்கள். மீண்டும் தமுமுகவின் மூலமே பொது சேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற லட்சியப் பயணத்தை தொடருங்கள். அரசியல் எனும் சாக்கடைக்காக இறையருளை இழக்க வேண்டாம் என மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை

நோயில்லா உலகம் படைப்போம்

நோயில்லா உலகம் படைப்போம்
வழி காட்டும் சீன மருத்துவம்


இன்று நம்மில் பல்வேறு நபர்கள் நோயினால் அவதிப்பட்டு, ஆங்கில மருந்துகளின் பின்விளைவுகளாலும் மற்றும் அதற்கு சிகிற்சை அளிக்க போதிய வருமானமில்லாது இறந்து போகும் நிலமையையும் நாள்தோறும் கண்டுவருகிறோம்.

இதற்கெல்லாம் விடைகொடுக்கும் விதமாக, எளிமையான எந்த பக்க விளைவுகளுமின்றி நாடி முறைப்படி நோயறிந்து அதற்கு தகுந்த முறையில் அக்குபஞ்சர் சிகிற்சை அளித்து பூரண குணப்படுத்தி வருகிறோம். நோயாளிக் கூறாமலேயே அவர்களது உடலில் உள்ள நோய்களை பட்டியலிட்டு கூற இயலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்புக் கருவியின்மூலம். பின் கண்டறியப்பட்ட நோய்களுக்குத் தகுந்த முறையில் சிகிற்சையும் அளிக்கிறோம்.

ஒருவரது உணவுப்பழக்கமும், உடல்பயிற்சியும், நல்ல தூக்கமும் நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஐவேளை தொழும்பொழுது மனதை ஒருமுகப்படுத்தி கட்டுபடுத்தவும் முடியும். சரியான வேளையில் தொழுகையை நடத்த கூறுவதுபோல், சரியான வேளையில் உணவையும் உட்கொள்ளவேண்டும். அப்போது நாம் சந்திக்கும் பற்பல நோய்களிலிருந்தும், விடுபடலாம் இன்ஷா அல்லாஹ். இது மிகவும் இன்றியமையாதது.

மேலும் அதிக விபரத்திற்கு அல்லது அக்குபஞ்சர் சிகிற்சைக்கு தொடர்பு கொள்ளவும் >

மருத்துவர் சாதிக் > 09443389935

"தாருல்ஸஃபா அக்குபஞ்சர் சிகிற்சை நிலையம்" > நாகர்கோவில்.

சிகிற்சையின் போது தகுந்த ஆலோசனைகளும் அளிக்கப்படும். அப்போது மீண்டும் நோய் வருவதிலிருந்து உங்களைப்பேணி பாதுகாத்துக் கொள்ளலாம். BP, Diabetics-ற்கு தொடர்ந்து மருந்து சாப்பிடத் தேவையில்லை. இம்மருத்துவம் செய்வதன்மூலம் முழுமையாக அந்த மாத்திரைகளை நிறுத்தி சிறந்த உடல்நலத்தோடு வாழலாம். BP மற்றும் Diabetics-ற்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதன்மூலம் இறுதியில் சிறுநீரகத்தை இழக்க நேரிடும் என்பதையும் மறவாதீர்கள்.

உங்களது இடத்தில் ஒருநாள் இலவச அக்குபஞ்சர் விழிப்புணர்வு முகாம் நடத்தவும் மேற்குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு தேதியைப் பெற்றுக்கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களது ஆவல்; நோயற்ற உலகம் படைப்போம் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து மருத்துவர் சாதிக்.
Mobile: 09443389935.