Showing posts with label கழகம். Show all posts
Showing posts with label கழகம். Show all posts

Friday, June 13, 2008

இஸ்லாமிய இலக்கியக் கழகம்

இஸ்லாமிய இலக்கியக் கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணாசாலை
சென்னை 600 002

தொலைபேசி : 284 60128
தொலைநகல் : 234 60128
செல் : 98 400 400 67


முனைவர் ஹமு நத்தர் சா : 94441 76646

Friday, May 23, 2008

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி
























துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி :
முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் பங்கேற்பு
நபிகள் நாயகம் ( ஸல் ) நூல் வெளியீடு

துபாயில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பழைய மாணவர் பயின்றோர் கழக சந்திப்பு நிகழ்ச்சி தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் 23.05.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகி திருவிதாங்கோடு அப்துல் காதர் இறைவசனங்களை ஓதினார். அமீர் பாட்சா தலைமை தாங்கினார். அவர் தலைமை உரையில் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் வெற்றியின் இலக்கணமாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் நிர்வாகத்தினர் நமது முயற்சிகளுக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரகத்தில் நாம் ஒருங்கிணைந்து செய்லபட்டு வருவது எதிர்காலத்தில் இந்த பழைய மாணவர் பயின்றோர் கழகம் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளிலும் விரிவடையும் வாய்ப்புகள் உருவாகும் என்றார்.

அமீரகத்தில் 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் கல்லூரியின் முதல் மாணவர் ரஹ்மத்துல்லாஹ் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இருந்த தனது குடும்பத்தினர் சில சூழ்நிலையின் காரணமாக தமிழகத்திற்கு 1970 ஆம் ஆண்டு வந்தோம். அப்பொழுது திருநெல்வேலியில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி இடம் கிடைக்காத சூழநில் தன்னை அரவணைத்துக் கொண்ட சதக்கத்துல்லா அப்பா கல்லூரியினை நினைவு கூர்ந்தார். இன்றைக்கு தனது வாழ்வின் உயர்வில் முக்கியப் பங்காற்றிவருகிறது என்று சொன்னால் மிகையில்லை.

உலகில் முடியாதது எதுவுமில்லை. நாம் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நாம் உயர்வடைவோம். உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார் ரஹ்மத்துல்லாஹ். நமது கல்லூரியின் பழைய மாணவர் பயின்றோர் கழகத்திற்காக இணையத்தளம் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டலில் உருவாக்கப்பட வேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் விடுத்தார்.

பழைய மாணவர் பயின்றோர் கழக ஆலோசகரும், துபாய் சென்ட்ரல் பள்ளியின் தலைமையாசிரியருமான நுஸ்கி ஜமால் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் தனது முதிய வயதிலும் ஓய்வில்லாது சமதாயப் பணியாற்றி வருவதை பாராட்டினார். தாயகத்திலிருந்து கல்வி வளர்ச்சிப் பணிக்காக அமீரகம் வந்திருக்கும் முன்னாள் முதல்வரது பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவர்களுக்கு பழைய மாணவர் பயின்றோர் கழகம் செய்து வரும் பணிகளைக் கூறினார்.

பழைய மாணவர்கள் திருவிதாங்கோடு அப்துல் காதர், மேலப்பாளையம் முஹம்மது இஸ்மாயில், குளச்சல் ஹமீது, உள்ளிட்ட பழைய மாணவர்கள் கல்லூரியில் மறக்க முடியாத தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்கள் எழுதிய நபிகள் நாயகம் ( ஸல் ) எனும் நூலை அலோசகர் நுஸ்கி ஜமால் வெளியிட முதல் பிரதியை அமீர் பாட்சா மற்றும் ரஹ்மத்துல்லாஹ் பெற்றுக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசுகளை அமீர் பாட்சா வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் அமீரகத்தில் துவங்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தினரின் அரும்பணிகளைப் பாராட்டினார்.

கல்லூரி முதல்வராக இருந்த போது அப்போதைய காவல்துறை அதிகாரியாக இருந்த சைலேந்திர பாபுவுடன் இணைந்து மாணவர் போராட்டத்தினை முறியடித்த வெற்றிகரமான நிகழ்வை நினைவு கூர்ந்த அவர். திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் தங்களது சமுதாய மாணவர்களுக்கு மட்டுமே இடம் அளித்து வந்தாலும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மட்டுமே அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து அவர்களுக்கு உரிய படிப்புகளை வழங்கி வரும் பணியினைச் செய்து வருகிறது. உமா சங்கர் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நமது கல்வி நிலையத்தின் பயின்ற மாணவர் என்பதனை இங்கு பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்கு கல்லூரியில் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கல்வி வருவது அவர்கள் உயர்கல்வி படிப்பதில் எவ்வளவு ஆர்வமாகக் காணப்படுகின்றனர் என்பது விளங்கும்.பெண்களின் இத்தகைய கல்வி ஆர்வத்தின் காரணமாக கீழக்கரை, காயல்பட்டணம், மேலப்பாளையம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கான கல்லூரிகளை சமுதாயத்தின சார்பில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் பல்கலைக்கழக அளவில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்று வருவதும் பாராட்டுக்குரியது.

நமது கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் நசீர் அஹமது சிறப்பான என்.எஸ்.எஸ். பணிக்காக பல்கலைக்கழக அளவில் கௌரவப்படுத்தப்பட்டதினை நினைவு கூர்ந்தார். கல்வி உதவியானது காலத்தால் அழியாதது.

ஆரம்ப காலத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பேராசிரியர் கல்லூரியில் பல்வேறு படிப்புகளுக்காக தனது ஆசானும், மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தருமான மு. வ. அவர்களின் பங்களிப்பினையும், கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் காக்கா, ETA ASCON STAR குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், காயல்பட்டிண பிரமுகர்கள், உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் கல்லூரியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருவதினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இன்றைக்கு கல்லூரி தன்னாட்சி பெற்று சிறப்புற செயல்பட்டு வருகிறது. அன்றைக்கு அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் நமது கல்லூரி விழாவில் இக்கல்லூரி பல்கலைக்கழகமாகும் என வாழ்த்தி துஆச் செய்தார். அத்தகைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி கல்லூரி செயலாளர் பத்ஹூர் ரப்பானி மற்றும் நிர்வாகத்தின் முயற்சியில் வீறுநடைபோற்று வருகிறது. கல்லூரியின் முதல்வராக பணியாற்ற்சி சேவையாற்றிய பலரையும் நினைவு கூர்ந்தார். தற்போதைய முதல்வராக இருக்கும் முனைவர் உதுமான் அவர்கள் சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் அன்பழகன் தனது ஆசிரியராவார். முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன், அமைச்சர் துரைமுருகன் தனது கல்லூரித் தோழர்கள். இத்தகைய நண்பர்களின் மூலமாக நல்ல பலவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

துபாயில் உள்ள் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் 66,000 குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருவதை ETA HRM Executive Director அல்ஹாஜ் எம். அக்பர் கான் மூலம் அறிந்து கொண்டேன். தான் துபாய் குறித்தும், அரபி இலக்கிய வரலாறு, உமறுப்புலவர் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதி வருவதாக குறிப்பிட்டார். இதற்காக பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வரும் நல்லுங்களைப் பாராட்டினார்.

செயலாளர் மசூத் நன்றி கூறினார்.

தொடர்புக்கு :


தவ்ஹீத் 050-2574493
ஜமீல் 050-5284560
சிராஜுதீன் 050-2090512
முஹம்மது ரியாஸ் 050-9603161

மின்னஞ்சல் - ha_jabbar@yahoo.co.in

Monday, March 31, 2008

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்று
இஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்
பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய
மாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்
என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடு
மே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.

சிறப்பு நிகழ்வுகள்

கருத்தரங்கம் : கருத்தரங்கக் கரு

தமிழக இலக்கிய, சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு என்பது இம்மாநாட்டுக் கருத்தரங்கப் பொருளாக ( Theme
of the Conference ) இருக்கும்.

1. இதுவரை ஆய்வு செய்யப்படாத இஸ்லாமிய இலக்கியங்கள்
2. தமிழகக் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்ட
முஸ்லிம் சான்றோர்கள்
3. கல்வி வளர்ச்சியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு
4. மார்க்கக் கல்வி வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்களிப்பு
5. தமிழகப் பண்பாட்டு ( உணவு, உடை,அணி,இசை, கட்டிடக் கலை, கைவினைப்
பொருள், நாடகம், பிறப்பு, திருமணச் சிறப்புச் சடங்குகள், ஈத், கந்தூரி,
விளையாட்டு, குடிப்பெயர், தொழில், வணிகம், மொழி) வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு
6. முஸ்லிம்களின் மத நல்லிணக்கப் பணிகள்
7. நாட்டுப்புறவியல்
8. மார்க்க இலக்கியம்
9. நவீன இஸ்லாமிய இலக்கியம்

பேராளர் :

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களும், புரவலர்களும் மட்டுமே
பேராளர்களாகக் கலந்து கொள்ள முடியும். பேராளர்களுக்கும்,
வெளியூர்க்காரர்களுக்கும் உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்து
தரப்படும்.

பேராளர்களுக்கெனத் தனிக் கட்டணம் இல்லை

கட்டுரைகள் ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல், கணினி அச்சு செய்து
அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளைத் திருத்த ஆய்வரங்கக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

மாநாட்டுச் சிறப்பு மலர் :

சிறப்பு மலருக்குப் பொருத்தமான வகையில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்கு
மிகாமல் ஒளியச்சு செய்த கட்டுரைகள், 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன.

விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரக் கட்டணப்பட்டியல்

மலர் அளவு : 22 செ மீ x 28 செ மீ

ஒரு பக்க வண்ண விளம்பரம் ரூ 8000
ஒரு பக்க கறுப்பு வெள்ளை விளம்பரம் ரூ 5,000
அரைப் பக்க விளம்பரம் ரூ. 3,000

மாநாட்டு மலருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பரக் குழு

அல்ஹாஜ் நூர் முஹம்மது, ஒலிம்பிக் கார்ட், சென்னை
அல்ஹாஜ் அஹ்மது ரிபாயி
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹாஜியானி பாத்திமா முஸாஃபர்
அல்ஹாஜ் பி. அப்துல் காதர், எம்.எம்.எஃப் லெதர்ஸ்

வரைவோலை / காசோலை : ISLAMIA ILAKKIYA KHAZHAGAM
என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க அளவில் அனுப்பப்பட வேண்டும்
( விளம்பரச் செய்தியைத் தனியாகத் தட்டச்சு செய்து தர வேண்டுகிறோம் )





செயல்திட்டங்கள்

1 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 'இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப்
பண்பாட்டு இருக்கை'யினை நிறுவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2. இயங்காமல் இருந்த தஞ்சைப் பல்கலைக்க கழக 'இஸ்லாமிய ஆய்வு இருக்கை'யை
பிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் ஜனாப் அபுபக்கர் வாயிலாகப் ( துணைத்தலைவர்,
இஸ்லாமிய இலக்கியக் கழகம்) புதிதாக நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு
விட்டது.

3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக வேண்டுகோளின்படி,
பினாங்கு டத்தோ ஜனாப் பரக்கத் அலி அவர்கள் நிறுவிய மர்ஹூம் ஹாஜி 'மாயின்
அபூபக்கர்' பெயரில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டுச்
சொற்பொழிவிற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.

4. முனைவர் பேராசிரியர் ஜனாப் நெயினார் முஹம்மது பெயரில் ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச்
சொற்பொழிவு நிறுவப்பட உள்ளது.

5. அறங்கக்குடி வள்ளல் ஒய்.எம்.எச். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பெயரில்
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவ ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

6. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, சேலம் ஈ.வெ.ரா.,
கோவை பாரதியார், அண்ணாமலை, அன்னை தெரசா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய எஞ்சியுள்ள பல்கலைக்கழகங்களில்
இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிறுவ
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. வருகிற மே 18 ஆம் தேதி 2008 இல் இவ்விழாவில் சதாவதானி சேகுத்தம்பிப்
பாவலரின் நினைவு அஞ்சல் தலையினை மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.
ராசா அவர்கள் ( தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ) வெளியிடுகிறார்.

8. இவ்வாண்டும் 'அல்ஹாஜ் மர்ஹூம் பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா
அறக்கட்டளை' சார்பாக உமறுப்புலவர் விருதும், ரூபாய் ஒரு இலட்சமும்
வழங்கப்படுகிறது.

9. கல்வித்தந்தை சமூக வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும்,
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை நிறுவிய பெரும்புலவர் சி.நயினார் முஹம்மது
அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

10. பொற்கிழியுடன் கூடிய சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

நூல் வெளியீடு

மாநாட்டில் புதிய நூல்கள் வெளியிடப்படும். நூல்களை வெளியிட விரும்புவோர்
இப்போதே பதிவு செய்ய வேண்டுகிறோம். நூல்கள் 2007,2008 ஆம் ஆண்டுகளில்
வெளிவந்ததாக இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க
வேண்டும். 100 படிகள் பேராளர்களுக்கு வழங்க 2008 ஏப்ரல் இறுதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டும்.

நூல் அன்பளிப்பு

பேராளர்களுக்குத் தங்கள் நூல்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புவோர் 300
படிகளுக்குக் குறையாமல் மாநாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

அரிய நூல் பதிப்பு

இதுவரை அச்சு வடிவம் பெறாத அரிய இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மாநாட்டில்
வெளியிடப்படவிருக்கின்றன.

இஸ்லாமிய இலக்கியக் கழகம்

சிறப்பு நெறியாளர்கள்

பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முஹம்மது
நீதியரசர் சி.மு. அப்துல் வகாப்
டாக்டர் சே.சாதிக்


நெறியாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
தலைவர் : கேப்டன் என்.ஏ. அமீர் அலி
துணைத்தலைவர் : பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர்
பொதுச்செயலாளர் : எஸ்.எம். ஹிதாயத்துல்லா - 044 2846 0128 / 98 400 40067
பொருளாளர் : எஸ்.எஸ். ஷாஜஹான்

அமீரக ஒருங்கிணைப்பாளர்

முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் 050 452 4990
முதுவை ஹிதாயத் 050 51 96 433


விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி :

எஸ்.எம். ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
இஸ்லாமிய இலக்கிய கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 2846 0128 / 98 400 40067




மாநாட்டுப் புரவலர்கள்

1. அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன்
மேலாண் இயக்குநர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்கள்
2. அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்
தலைவர், சதக் அறக்கட்டளை
3. அல்ஹாஜ் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி
தாளாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
4. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் காதர் புஹாரி ( சீதக்காதி அறக்கட்டளை )
5. அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், பேங்காங்
6. அல்ஹாஜ் சேகு நூர்தீன், ஏ.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை
7. அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, ரஹ்மத் அறக்கட்டளை
8. அல்ஹாஜ் ஒய்.எம். ஹபீபுர் ரஹ்மான், அரங்கக்குடி
9. அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், புரபஷனல் கொரியர்
10. அல்ஹாஜ் ஆர். தாவூத் பாட்சா , நிறுவனர் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரி
11. அல்ஹாஜ்.எல்.கே.எஸ். சையது அஹமது, திநகர் எல்கேஎஸ். கோல்டு ஹவுஸ் பி லிட்
12. அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஜலீல், தாளாளர் , சேது பொறியியல் கல்லூரி
13. அல்ஹாஜ் ஏ. அபூபக்கர், தலைவர், பிரசிடெண்ட் ஹோட்டல்
14. அல்ஹாஜ் ஹெச். நூர் முஹம்மது, எம்.டி, ஒலிம்பிக் கார்ட்,சென்னை
15. அல்ஹாஜ். பஷீர் அஹமத்,யூசிமாஸ்
16. அல்ஹாஜ். ஷாகுல் ஹமீது, நோபிள் மரைன்
17. அல்ஹாஜ். பி. அப்துல் காதர், எம்.எஃப்.லெதர்ஸ்
18. அல்ஹாஜ் ராஜா ஹசன் ( ஐக்கிய ஜமாஅத் தலைவர், மதுரை )
19. டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் ( ரப்பானி வைத்திய சாலை )
20. அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் வாஹித், தலைவர் அல்ஹாஜ் மர்ஹும்
பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா அறக்கட்டளை
21. வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது
அறங்காவலர், வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை
22. சீனாதானா அல்ஹாஜ் எஸ்.எம். செய்யது அப்துல் காதர்
தலைவர், ஸ்கை நிறுவனம்,
23. அல்ஹாஜ். சபியுல்லாஹ் ( நிஜாம் பாக்கு, புதுக்கோட்டை )
24. அல்ஹாஜ். ஒயிட் ஹவுஸ் பாரி
25. அல்ஹாஜ் ரபீக் ( தாஜ்மஹால் புகையிலை, புதுக்கோட்டை )
26. அல்ஹாஜ் அமானுல்லாஹ், ஈரோடு
27. அல்ஹாஜ் கே.கே.எஸ்.கே. ஹைதர், ஈரோடு
28. கே. செய்யது முஹம்மது ( இலாஹி இண்டர்னேஷனல் )