Friday, January 18, 2008

indian union muslim league Political Members Details

indian union muslim league Political Members Details

MP - 2 (E.Ahamed and K.M. Kader Mohideen)
Rajya Sabha MP - Abdul Wahab ( Kerala )
MLA - 2 (Abdul Basid and Kalilur Rahman)

Ma Nagaratchi (City Corporation) Members

Nellai - 3
Kovai - 2
Salem - 2
Chennai - 1
Madurai - 1

Corporation (Nagaratchi)

Kayal pattinam -12
Tenkasi -6
Kadayanallur -6
Puliangkudi- 6
Vellur- 2
Ambur -7
Vaniyambadi -6
Thiruppur -2
and also
Manparai, tuticorin, ramanathapuram, mudukulathur, kilakarai, pudukottai, aranthangi, seerkalai, villupuram, chinnasalem, ulundurpet, thiyagathuruvom, thiruvannamalai, saiyaru, melvizaram, nagapattinam, coodalur, kunnoor, muthupet are 1 members

Panchayath board

coodalur - above 43

Peruratchi
pallapatti, laalpet, pallikondan, athiyuthu, annavasal, -1
oneriyam

Enamkulathur, Papanasam, -1


Message from

muba rasvi
Marumalarchi

துபாயில் மேலும் ஒரு இஸ்லாமிய வங்கி

துபாயில் மேலும் ஒரு இஸ்லாமிய வங்கி

துபாயில் ஷரிஅத் அடிப்படையில் செயல்படும் ஆறாவது இஸ்லாமிய வங்கியான நூர் இஸ்லாமிய வங்கி" ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

நூர் இஸ்லாமிய வங்கி ஒரு பில்லியன் டாலர் மூலதனத்துடன் துபாயில் ஆறு கிளைகள் உட்பட அமீரகத்தில் பத்து கிளைகளைக் கொண்டதாக துவங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குள் இந்த கிளைகள் இருபதாக விரிவடையும்.
நூர் இஸ்லாமிய வங்கி பல்வேறு முஸ்லிம் நாடுகளிலும் தனது சேவையை துவங்க ஆவல் கொண்டுள்ளது.

துபாய் இஸ்லாமிய வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி,ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, துபாய் வங்கி ஆகியவை ஏற்கனவே அமீரகத்தில் ஷரிஅத் அடிப்படையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் குறிப்புகளை அறிய உதவும் இணையத்தளம்

சமையல் குறிப்புகளை அறிய உதவும் இணையத்தளம்

இன்றைய அறிவியல் யுகத்தில் இணையத்தளம் ஒரு தவிர்க்க இயலாததாகி விட்டது. பல்வேறு தரப்பினருக்கும் ஏற்றவகையில் பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலாவருகிறது.
சமையல் குறிப்புகளைக் கொண்டு www.tamilkudumbam.com எனும் இணையத்தளம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்து வருகிறது.

நீங்களும் இவ்விணையத்தளத்தில் உங்களது சமையல் குறிப்புகளை பதிவு செய்யலாம்.

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு
கல்வி உதவி தொகை

+1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 2007 - 2008 முதல் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2876 மாணவர்களுக்கு, இவ்வுதவிகள் கிடைக்கும். அதில் 1372 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பங்களுக்கும் தொடர்பு கொள்க:

http://www.minorityaffairs.gov.in/

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) ஏற்பாடு செய்யும்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) ஏற்பாடு செய்யும்
'' நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகளின் 75 வது வார சிறப்பு நிகழ்ச்சி ''

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-01-2008 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை யைத் தொடர்ந்து குவைத் , ஹவல்லி (ஸாதிக் ரவுண்டானா மற்றும் ஷுவூன் அலுவலகம் அருகில் அமைந்துள்ள) மஸ்ஜித் அஷ்-ஷைக்கா அஷ்-ஷபீக்கா பள்ளிவாசல் வளாகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic) ஹவல்லி கிளை ஏற்பாடு செய்யும் '' நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகளின் 75 வது வார சிறப்பு நிகழ்ச்சி '' நடைபெற இருக்கின்றது. (இப்பள்ளிவாசலில் கடந்த 75 வாரங்களாக ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் கண்ணியமிக்க உலமா பெருமக்கள் மூலமாக தமிழில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது).

சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் பேராசிரியர் மவ்லவீ அஷ்ஷைக் A. அப்துஸ் ஸலாம் தாவூதி ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.

இச்சிறப்பு மிகு நிகழ்வில் குவைத் வாழ் இந்திய , இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் ஹவல்லி கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com லும் நிகழ்ச்சி குறித்த செய்தியையும், (பேரூந்து என்களுடன்) நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் , மேலதிக விபரங்களுக்கு q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ மற்றும் 9430786 , 7872482, 7738420, 7302747, 7684739, 7841399 , 5088149, 9383812 , 7243382, 7585914 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் சங்க செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic )
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group


குறிப்பு :

இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை காண வாய்ப்பு

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை காண வாய்ப்பு

29 வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.
இப்போட்டியை நேரில் காணும் வாய்ப்பை சீன வானொலி நிலையம் ஏற்படுத்தியுள்ளது. இவ்வானொலி நிலையம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்புப் பரிசுகளையும் பெறும் வாய்ப்புள்ளது.

சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு தினமும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒலிபரப்பாகிவருகிறது.
மேலும் விபரங்களுக்கு

http://tamil.cri.cn/other/contest2008/

கான் பாகவி இல்ல மணவிழா

ரஹ்மத் அறக்கட்டளையின் தலைமை மொழீபெயர்ப்பாளர் ஹஸ்ரத் முகம்மது கான் பாகாவியின் மகனின் திரு
மண வைபவம் தேனீயில் நடைபெற்றது. தமிழக முஸ்லிம் சமூக-கலாச்சார-இலக்கியப் பிரமுகர்கள் பலர்
வருகை தந்திருந்தனர். விழா அராங்கம் மவுலவிகள் மாநாடு போலவே கட்சியளித்தது சிறப்பு

அன்று மாலை உத்தமபாளையம் ஹாஜி கறுத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி வளாகத்தில், கல்லூரியின்
தாளாளரும் செயலருமான ஹாஜீ தர்வேஷ் மொஹிதீன், தலைவர் ஹாஜி ஷேக் மொஹிதீன் தலைமையில்
தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த 65 ஜமா'அத்துகளின் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

கவிக்கோ அப்துர்ரஹுமான், எஸ்.எம்.,ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நான்,சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து
கொண்டோம். பேராசிரியர் அப்துல் சமது வரவேற்றார். அமைப்பின் செயலர் ஜனாப் பொன்ராஜ் கொந்தாளம்
செயல் திட்டங்களை விரித்துரைத்தார்.

கவிகோவும், ஹிதாயத்துல்லாவும் மத்திய - மாநில அரசுகள் எத்தகைய நலத் திட்டங்களை அறிவித்துள்ளன.
அறியாமை காரணமாக நாம் எதையெல்லாம் தவற விட்டு விட்டோம். இனி எவ்வாறு விழிப்புடனிருந்து
இவற்றின் பயன் பாட்டை முழு அளவில் எப்படிப் பெற்றுக் கொள்வது என்பன பற்றியெல்லாம் எடுத்துச்
சொன்னார்கள் - தன்களது நீண்ட, உணர்ச்சி மிகு உரைகளில் !.

உடனடியாக, அரசின் இட ஒதுக்கீடு காரணமாக, வரும் கல்வியாண்டில் ச்மார் 70 மருத்துவப் படிப்பு இடங்களும் சுமார் 700 பொறியியல் படிப்பு இடங்களும் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் இந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முஸ்லிம் சமூகம் எந்த அளவுக்குத் தயார் என்பது
கேள்விக்குறியாகவே உள்ளது.

இருட்டை சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உத்தமம் என்ற கூற்றுக்கு ஏற்ப,
தமிழகமெங்கும் இதுவரை ஏழு மாவட்டங்களில் PLUS-2 மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்
பட்டுள்ளன. தேனீ மாவட்டத்தில் மட்டும், கம்பம், போடி, தேனி, உத்தமபாளையம்,சின்னமனூர் ஆகிய
ஊர்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை பள்ளி வளாகங்களில் வைத்து நடத்தப்
படுகின்றன. ஆகவே நம் மக்கள் மாத்திரமே வருகிறார்கள். எல்லோருமே தொழும் வழக்கத்தையும்,
பெண்கள் புர்கா அணிவதையும் கடைப்பிடிக்கிறாகள். அல்ஹம்துலில்லாஹ். நல்ல் ஏற்பாடு.

PLUS-2 பரீட்சைக்கு ஏறக்குறைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த்க் கால. அளவு போதுமா
என்பது சந்தேகமே. என்றாலும் ஒன்றை ஆரம்பித்து வைத்து விட்டால் இந்த ஆண்டில் இல்லாவிட்டாலும்
இனி வரும் காலங்கள் இவை சிறப்பாக்ச் செயல் பட ஏதுவுண்டு.

மத்திய - மாநில அரசுகளிடமிருந்து முஸ்லிம்கள் எத்தகைய சலூகைகளைப் பெறமுடியும் என்பதை பிறகு
எழுதுகிறேன். இப்போது உதாரணத்துக்கு ஒன்று:

Auto-rikshaw/ Taxi/ Van/ Mini-bus ஆகியவை வாங்க சில நிபந்தனைக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் மத்திய
அரசு 85% ம் மாநில அரசு 10% ம் மான்யம் வழங்குகின்றன. நம் முதலீடு 5% தான். இந்த 5% ஐயும் கடனாகாத்
தர வங்கிகள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சலுகைகளை முஸ்லிம்கள் படுத்தாததால் சென்ற ஆண்டு சுமார் 110 கோடி ரூபாய் மத்திய அரசுக்கே திரும்பஅனுப்பப் பட்டு விட்டதாக ஹிதாயத்துல்லாஹ் கூட்டத்திலேயே ஒரு தகவலைச் சொன்னார்.

ஒருவனுக்கு மீனைத் தின்னக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுக்கப்
பிழைத்துக் கொள்வான் என்று ஒரு சொலவடை உண்டு. ஆகவே, வெளிநாடுகளில் வாழும் அன்பர்களுக்கு ஓர்
வேண்டுகோள்;

உங்கள் ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு இயன்றபோதெல்லாம் நீங்கள் உதவி வந்திருக்கக் கூடும். ஆனால்
அதை விட அவர்களுக்கு ஒரு வாழ்வு ஆதாரத்தைக் கை காட்டி விட்டீர்களென்றால் கியாமத் நாள் வரை
அது பயனுள்ளதாக - பலன் தருவதாக இருக்கும்.

விதவைகள் மற்றும் முதியோர் ஓய்வு ஊதியம் மாதம் 400/- ஓய்வு பெற்ற உலமாக்களுக்கு மதம் 750/-
பிரசவ உதவி 6,000/- திருமண உதவி 15,000/- இப்படி எத்தனையோ. இதில் சோகம் என்னவென்றால்
சம்பந்தப் பட்டவர்களுக்கே இப்படி சில இருப்பது தெரியாது

எனவே, உங்கள் ஊர்களில் சில அமைப்புகளை ஏற்படுத்துங்கள். அருகதைப் பட்டவர்களைத் தேடிப் பிடியுங்கள்
அவர்களுக்கு இந்த உதவிகள் கிடைப்பதற்கான ஆவன செய்யுங்கள். ஆண்டவன் உங்கள் தலைமுறை -
தலைமுறைக்கும் நல் அருள் பாலிப்பான்.

வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிஸ். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
abjabin@gmail.com

கணினியில் தமிழில் எழுத ...........

http://software.nhm.in/writer.html இறக்கி நிறுவினீங்கன்னா தானா உங்கள் கணினியில் தமிழ் unicode முடுக்கப்படும்.

அப்புறம் நேரடியா எங்க வேணா எழுதலாம்

Latest version (v1.2 beta) of w3Tamil Web Keyboard has released on 15th January, 2008 with its new features after one year period of gap. Now it supports for the Tamil99 Keyboard standard.

URL: http://wk.w3tamil. com

This little web keyboard will help you to write Tamil texts in Tamil Unicode encoding when you are away from your own Tamil Unicode enabled computer - for example in an Internet cafe in a foreign country. Also for users who are not familiar with the Tamil99 keyboard layout, w3TamilWK provides Virtual/onscreen keyboard interface to directly enter the Tamil Unicode text into the text area by clicking mouse on the Web Keyboard.

Also you can use it as a typing tutor to practice the Tamil99 Keyboard Layout Typing without installing any additional software in your computer.

Regards.

S.M. Arif Maricar
http://arifmaricar.blogspot.com