Showing posts with label தோல்வி. Show all posts
Showing posts with label தோல்வி. Show all posts

Sunday, May 11, 2008

தேர்வில் தோல்வியும், தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்கள்

தேர்வில் தோல்வி : தற்கொலை செய்து கொள்ளும் மாணாக்கர்கள்

ஸ்ரீவில்லி அருகே தேர்வில் தோல்வி பிளஸ் டூ மாணவி தீக்குளித்து சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமீபத்தில் வெளியான பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் மாணவி தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கிருஷ்ணன் கோவில். இந்த பகுதியை சேர்ந்தவர் ஏட்டையா ராசுத்தேவர். லோடுமேன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மூத்த மகள் கருப்பாயி(19). உடல் ஊனமுற்ற இளம் பெண். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் டூடோரியல் கல்லூரியில் பிளஸ் டூ படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பிளஸ் டூ முடிவில் காமர்ஸ் பாடத்தில் கருப்பாயி தோல்வி அடைந்ததார்.


இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட அருகில் உள்ளோர் அவரை தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பாயி இறந்தார். இது குறித்து நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.