Saturday, January 9, 2010

Higher Education - awareness Programme

Higher Education - awareness Programme

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


முனைவ‌ர் பேராசிரிய‌ர் டாக்ட‌ர் எஸ். ஆபிதீன் இளையான்குடி டாக்ட‌ர் ஜாகிர் உசேன் க‌ல்லூரியில் வில‌ங்கிய‌ல் துறைப் பேராசிரியராக‌ ப‌ணிபுரிந்து வ‌ருகிறார்.

என்ன‌ ? எங்கே ? எப்ப‌டி ? ப‌டிக்க‌லாம், ஆதாம் பால‌மா ? ராம‌ர் பாலமா ? , ப‌ச்சை ர‌த்த‌ம் , உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நூல்க‌ளை எழுதியுள்ளார்.

ப‌ள்ளி, க‌ல்லூரி மாணாக்க‌ர்க‌ளுக்கு உய‌ர்க‌ல்வி குறித்த‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ளை ந‌ட‌த்தி வ‌ருப‌வ‌ர். இப்ப‌யிற்சி வ‌குப்புக‌ளை த‌ங்க‌ள‌து ஊரிலும் ந‌ட‌த்தி ச‌முதாய‌ மாண‌வ‌ர்க‌ள் உய‌ர்நிலையை அடைய‌ பேரா.எஸ். ஆபிதீனைப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

முதுவை ஹிதாய‌த்
050 51 9 6 433



நான் தற்பொழுது 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பது பற்றிய மேற்படிப்பு குறித்த கல்வி விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டின் மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறேன். சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டுகளில் தென்காசி , புளியங்குடி , திருவாருர் அடியக்கமங்களம் முத்துப்பேட்டை மதுரை இராமநாதபுரம் காரைக்குடி பரமக்குடி விருதுநகர் திண்டுக்கல் தேவிபட்டிணம் ஆர்எஸ் மங்களம் பெரம்பலூர் தோப்புத்துறை விருதுநகர் உட்பட இன்னும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊரின் தொண்டு நிறுவணங்களின் ஏற்பாட்டில் இது போன்ற கல்விக் கருத்தரங்கு நடத்தி வருகிறோம்.


சுமார் இரண்டரைமணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெறும் இந்த ஆலேசனை நிகழ்ச்சி 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பிற்குப் பிறகு என்ன எங்கே எப்படி படிக்கலாம் போன்ற மேற்கல்வி குறித்த ஆலோசனைகளை கம்ப்யூட்டரில் அனிமேசன்களுடன் கூடிய அனைத்து விபரங்களையும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வடிவில் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தமிழக வேறு பல பகுதிகளில் இது போன்ற நிகழ்சியினை நடத்தி நமது மாணவர்களுக்கு என்ன எங்கே எப்படி படிக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கிட துபாயில் உள்ள அந்தந்த ஊரின் சமுதாய ஆர்வலர்கள் விரும்பினால் , இது போன்ற நிகழ்ச்சியினை அவரவர் ஊர்களில் நடத்தித்தர தயாராக உள்ளோம்.

இது குறித்த மேலும் விபரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும். எனது கைபேசி எண் : 9965892706.

மக்கள் சேவை மையம்

மக்கள் சேவை மையம்

மக்கள் சேவை மையத்தின் நோக்கம்

பொதுவான சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது

இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி அறிவூட்டுவது

இயற்கை விவசாயப் பயிற்சி அளிப்பது

அடிப்படை சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வாழ்வு பற்றிய அறிவூட்டுவது

பல் மற்றும் கண் சோதனை முகாம்கள் நடத்துவது மற்றும் ஆலோசனை வழங்குவது

தொழில் பயிற்சி நிலையம் அமைத்து திறமைகளின் அடிப்படையில் சுயமரியாதையோடு வாழ வழிகாட்டுவது

பயனீட்டாளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது

நூல் நிலையம் மூலம் பயனுள்ள பல நூல்களை மக்கள் வாசிக்க வாய்ப்பளிப்பது.

வட்டியில்லா கடன் மூலம் முடிந்தவரை சிரமத்திலிருப்போருக்கு உதவியளிப்பது.

. வருடம் ஒருமுறை ஏழை எளியோருக்கு ஜகாத் வழங்குவது.

மக்கள் சேவை குடில் மூலம் தொண்டூழியர் பயிற்சி அளித்து நற்குடிமக்களை உருவாக்க முயற்சிப்பது

உண்மையான திறமைகளுக்கு தொடர்பில்லாத சான்றிதல் கல்வியின் போலித்தன்மைகளை விளக்கி அதனை மாற்ற இயன்ற அனைத்தையும் முயற்சிப்பது

குழந்தை வளர்ப்பு, திருமண வாழ்க்கை, வியாபாரம் செய்தல் மற்றும் குடும்ப பொருளாதாரத்தை நிர்வகித்தல் ஆகிய வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய
துறைகளில் பயிற்சி அளிப்பது

இத்தகைய பணிகளில் ஈடுபடுவோருடன் ஒத்துழைப்பது


http://www.makkalsevai.org

எங்களை தொடர்பு கொள்ள

முகவரி

மக்கள் சேவை மையம்
திருவள்@ர் சாலை
இளையான்குடி-630702
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா

Phone : +91-9786489493
Email : contactus@makkalsevai.org

Tel:9443117984 / 9786489493