Saturday, May 16, 2009

பள்ளிவாசல் பணியாளர் சங்கம்

பள்ளிவாசல் பணியாளர் சங்கம்

சட்ட ஆலோசகர் சந்திர குமாரிடம் நேரடி உரையாடல்!

பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்தின் நோக்கமென்ன? கோரிக்கை என்ன?

தமிழகம் முழுக்கவுள்ள ஏறத்தாழ 7,500 பள்ளிவாசல்களில் பணிசெய்யும் இமாம்கள், முஅதீன்கள், மதரஸாக்களில் பணி செய்யும் ஒஸ்தாது, பள்ளி கணக்கர், சந்தா வசூலர், மையத்தை குளிப்பாட்டுபவர், கபர்க்குழி வெட்டுபவர் என தமிழகம் தழுவி ஏறத்தாழ 30,000 பேர் பணி செய்கின்றனர். இவர்களுக்கு அரசு சலுகை கிடைப்பது என்பது அதிகாரி களின் மனோநிலையைப் பொறுத்து அமைகிறது. ஆனால் உத்தரவாதமில்லை. மற்ற பணியாளர்களைப் போல் இவர்கள் போராட்டம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத நிலை இவர்கள் இறைப்பணியாளர்களாக இருப்பதால்

இவர்கள் ஏதாவது ஓர் அமைப்பு சார்ந்து செயல்பட்டால் தான் குறவர், கோயில்பூசாரி, ஓவியர், இதரப் பணியாளர்கள் தங்களுக்கான நலவாரியம் பெற்றது போல் பெற முடியும். இதனைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே பள்ளி வாசல் பணியாளர் சங்கம். இது கடந்த ஏழு வருடமாக இயங்கி வருகிறது இச்சங்கத்தின் தலைவராக சென்ற ஓரிரு நாட்களுக்கு முன்பு நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தஞ்சை மேட்டுப் பள்ளிவாசல் இமாம் ஏ.எம்.எஸ்.அஹமது லியாகத்தலி நூரி அவர்கள் இருக்கின்றார்கள்.

வலது சாரி தளத்தைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ.உலகநாதன் சட்டசபையில் இவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டுமெனப் பேசினார். அவரது பேச்சை செவிமடுத்த அரசு முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிவாசல் பணியாளர்களைக் கணக் கெடுக்கும்படி வக்ஃபு வாரியத்தை பணித்தது. வக்ஃபு வாரியத்தைச் சேர்ந்தவர்கள் கணக்கெடுக்கச் செல்லும்போது பள்ளி நிர்வாகிகள் பயந்து கொண்டு உண்மையான கணக்கைக் கூறாது மறைத்து விட்டனர். இதனால் கணக்கெடுப்பு பாதியிலேயே நின்று விட்டது. இதுபற்றி விரிவாக எழுதி சமீபத்தில் தஞ்சைப் பகுதிக்கு வருகை தந்திருந்த உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வசம் மனுக்கொடுத்துள்ளோம். அதனில்,கணக்கெடுப்பை அரசு தான் செய்ய வேண்டும். அது எளிமையானதும் கூட ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஹெட்மேன் (V.A.O)மூலமாகவும் நகரப்பகுதிகளில் கார்ப்பரேஷன் அலுவலர்கள் மூலமாகவும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். என்று மனுவில் கூறியிருக்கிறோம்.

ஏழு வருடமாக பள்ளிவாசல் பணியாளர் சங்கத்துக்கு பெயர் பதிவைத் தமிழக அரசு மறுப்பதாகக் கூறப்படுகிறதே?

சங்கப் பதிவு சுணக்கத்திற்குக் காரணம், அவர்கள் கேட்கும் பதிவு தொழிலாளர் நலச் சட்டத்துக்குள் வருமா? என்ற சந்தேகம் தான். எவ்வளவு நேரம் பணி செய்கின்றார்கள். எத்தனை பேர் பணி செய்கின்றார்கள் என்று எப்படி நாங்கள் மசூதிக்குள் சென்று செக்கப் செய்வது என்ற கேள்விகளை அரசு அதிகாரிகள் முன் வைத்தனர். பள்ளிவாசல்களில் 8மணி நேரம் வேலை போன்ற கணக்கெல்லாம் கிடையாது. ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை பேர் பணி, என்ன பணி என்பதற்கு ஆதாரமாக பள்ளி நிர்வாகம் தனது லெட்டர் ஹெட்டில் எழுதிக் கொடுத்து விடும். அதை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளோம். ஆகவே தர மறுக்கின்றார்கள் என்பதெல்லாம் சரியல்ல.

ஏகப்பட்ட வாரியங்களை அமைத்திருக்கும் அரசு முஸ்லிம் களுக்கு ஒரு வாரியம் கொடுப்பதில் மட்டும் தடுமாற்றம் அடைவது ஏன்?

தடுமாற்றம் நமக்குள்தான். இந்த வாரியத்தை வாங்கலாமா வாங்கக் கூடாதா? மதப்படி சரியா? சரியில்லையா? என்ற ஊசலாட்டம் பலரிடம் நிகழ்கிறது. இதன் காரணமாகச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மசூதிகளுக்குச் சென்று தெளிவுபடுத்தி வருகிறோம். ஒரு பள்ளியில் 20 வருடம் வேலை பார்த்ததாகச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் தான் உலமா, முஅதீன் ஓய்வூதியம் 750/- பெறமுடிகிறது. ஒரே பள்ளியில் ஒரு இமாமோ, முஅதினோ 20 வருடம் பணி செய்வது என்பது இயலாது காரியம். அதனால் ஒரு இமாம் எந்தெந்த பள்ளியில் எத்தனை வருடம் பணி செய்திருக்கிறார் என்று சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் அது மொத்தமாக 20 வருடம் இருக்கும் பட்சத்தில் ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. இந்த ஓய்வூதியம் விண்ணப்பிப்பதற்கான இலவசப் படிவத்தை 100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அதனை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம்.

தமிழக அரசு இப்போதைய சூழ்நிலையில் வாரியம் அமைத்தால், அது வலிமையானதாக இருக்குமா?

வாரியங்களுடைய வருமானத்தை பெருக்கும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 வாரியங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் மட்டுமே 219 கோடி நிதியுள்ளது. இந்த வாரியத்தில் மட்டும் இவ்வளவு நிதி சேர்ந்துள்ளதற்குக் காரணம் ஒவ்வொரு கட்டிடமும் கட்ட பிளான் அப்ரூவல் கொடுக்கும் போது கட்டிடத் தொழிலாளர் வாரியத்துக்காக 1003/- (ஆயிரத்து மூன்று ரூபாய்) நிதி பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து எடுத்து மற்ற வாரியங்களுடைய அலுவலகச் செலவை மேற்கொள்ளலாம் எனப் பேசப்பட்டுள்ளது. இதற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் எங்களது நிதியை மற்ற வாரியங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாரியங்களுடைய அலுவலகச் செலவுக்கே திண்டாடும் போது பள்ளிவாசல் பணியாளர்களுக்கு வாரியம் அமைக்கப் பட்டால் மட்டும் என்ன நன்மைகள் கிடைக்கும்?

முதலில் வாரியம் அமைக்கப்பட வேண்டும். வாரியம் அமைப்பதற்கு முன்னதாக நாம் என்ன கோரிக்கை வைக்கிறோம் என்பதைத் தெளிவாகப் பிரேம் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு தனித்தனியாகச் சென்று குரல் கொடுக்காமல் அனைவரும் ஒட்டு மொத்தமாகச் சென்று கேட்டுப் பெற வேண்டும்.இதற்கு அமைப்பு ரீதியாகச் செயல் படவேண்டும். வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால் பலரிடமும் சிக்கி வீணாகும் வக்ஃபு சொத்துக்களை வாரியத்துக்குக் கொடுங்கள் எனக்கேட்டு வாங்கலாம். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாரியத்தை செயல்படுத்தலாம். இன்னும் ஒன்றாக அமர்ந்து பேசி செயல்பட நிரம்ப வாய்ப்புகள் உள்ளன.

வாரியம் அமைக்கப்பட்டால் பள்ளிவாசல் பணியாளர்கள் என்னென்ன நன்மைகளைப்
பெறமுடியும்?

வாரியத்தில் பதிவு செய்து ஐந்து வருடம் ஆகியிருக்க வேண்டும். அவர்களுக்கு 400/- ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வூதியம் பெற 60 வயது நிரம்பியிருக்க வேண்டும். வாரிய உறுப்பினர்கள் விபத்தில் இறந்தால் ஒரு லட்சம் ரூபாயும், இயற்கை மரணத்துக்கு 15,000 + 2,000 மொத்தம் 17,000மும் 10 ஆவதுக்கு மேல் படிக்கும் வாரிய உறுப்பினர்களுடைய குழந்தைகள் இருவருக்கு 6000 த்திலிருந்து 10,000/-ம் வரைக்கும் கிடைக்கும். இரண்டு பெண் குழந்தைகளுடைய திருமணத்துக்கு 2,000/- வீதம் கிடைக்கும். பிரசவத்துக்கு 6,000/-ம் கிடைக்கும். வாரிய உறுப்பினர் பதிவை 2 வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

இந்த சங்கத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? சங்கத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபலப்படுத்து வதற்கு என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

30 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600 உறுப்பினர்கள் இச்சங்கத்தில் உள்ளனர். சங்க வருடச் சந்தா 120/- ரூபாய். சங்கத்திற்கு அலுவலகம் இல்லை. தற்போதைக்கு தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்துக்கு கீழ் தளத்தில் இயங்கி வருகிறது. விரைவில் தனி அலுவலகம் ஏற்பாடு செய்ய உள்ளார்கள். மாவட்டந்தோறும் சென்று, பள்ளிவாசல் இமாம், முஅதீன், மற்றுமுள்ளோரைச் சந்தித்து பேசி வருகிறார்கள். – விரைவில் தனி அலுவலகத்தில் இயங்கும்.

(குறிப்பு) : ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் துணைத்தலைவராகப் பணி செய்பவர் திரு.வழக்கறிஞர் சந்திரகுமார் அவர்கள். இவர் பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்துக்கு சட்ட ஆலோசகராகச் சேவையாற்றுகிறார்.)

பள்ளிவாசல் பணியாளர் சங்கப் பொதுச் செயலாளரோடு நேரடி உரையாடல்!

தங்களது சங்கத்தின் செயல்பாடுகள்; இது வரை என்ன விதமான பணிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள்?

பிலால் சங்கம் என்று முதலில் ஆரம்பித்தோம். எங்களது செயல்பாடுகளைப்
பார்த்து இமாம்கள் எங்களோடு இணைய ஆரம்பித்தார்கள். பிலால் என்று மட்டும் இருந்தால் சரியாக இருக்காது. பள்ளிவாசலில் பணிசெய்யக்கூடிய அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பள்ளிவாசல் பணியாளர் சங்கம் எனப் பெயர் மாற்றிக் கொண்டுள்ளோம். ஜெயலலிதா அம்மா அவர்களது ஆட்சி காலத்தில் 6 கோரிக்கைகளை முன்வைத்தோம். உலமா ஓய்வூதியம் 500 ஆக உள்ளதை 1,000/- ம் ஆக உயர்த்திக் கொடுக்க வேண்டும். உலமாக்கள் இறந்த பிறகு ஓய்வூதியம் நிறுத்தப்படுகிறது. இறந்த பிறகு உலமா மனைவிக்கு வழங்கப்படவேண்டும். உலமா பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, உலமா பெண் பிள்ளைகளுக்கு திருமண உதவித் தொகை, இமாமாகப் பணி செய்யும் உலமாக்களுக்கு வக்ஃபு வாரிய நிலங்களை கையகப்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். சங்கத்துக்கு பதிவு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம் இக்கோரிக்கைகளை ஓய்வூதியம் 1,000ம் ஆக உயர்த்த வேண்டும் என்பதை மட்டும் 750/- ரூபாய் ஆக உயர்த்திக் கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
உலமாக்கள் மத்தியில் உங்களுக்கு எப்படி ஆதரவுள்ளது?

உலமா ஒருவர் தான் இச்சங்கத்துக்கு இப்போது புதிய தலைவர் சமீபத்தில் உலமா வாரியம் கேட்டு மாநாடு போட்டார்கள். பலரும் தீர்மானம் போட்டுக் கொண்டிருக் கிறார்கள். நாங்கள் அவர்களிடம் உலமா வாரியம் என்று கேட்காதீர்கள் பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கம் என்று கேளுங்கள், ஏழு வருடமாக முயற்சிக்கிறோம் எங்களது கோரிக்கைகள் செக்ரட்டிரியேட்டில் உள்ளன. வீணாக்கி விடாதீர்கள் என தொலைபேசியில் கூறினோம்.ஒரு சிலர் ஒத்துக் கொண்டாலும் ஒரிருவர் ஒத்துக்கொள்ளவில்லை. உலமா சபைத் தலைமையை அணுகினோம். உங்களது பாதை எங்களுக்கு ஒத்துவராது உங்களுக்குப் பின்னால் நாங்கள் வரமாட்டோம் என்றார்கள்.

இதற்குக் காரணம் என்ன?

எங்களைக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதுவது தான். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மூலமாகவே ப.ப. சங்கப்பிரச்சனைகளை அணுகி வருகிறோம் இந்த மாதிரி பொது அமைப்போடு சேர்ந்து செயல்பட்டு தான் பெற முடியும். முஸ்லிம் அமைப்புகளுக்குள் ஒற்றுமை இல்லை. அவர்கள் கேட்டாலும் அரசும் அதிகாரிகளும் செவி சாய்க்கப் போவதில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதனால்தான் இவ்வகையில் முயற்சிக்கிறோம். எங்களது அலுவலகம் ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடத்திற்குக் கீழாக அலுவலகம் இல்லாத காரணமாக தற்காலிகமாக இயங்கி வருகிறது. அவர்கள் தான் எங்களுக்கு உதவி வருகிறார்களே தவிர நாங்கள் அவர்கள் கட்சிக் கூட்டத்திற்கோ, தேர்தல் விளம்பரத்திற்கோ, கட்சிப் போராட்டங்களிலோ கலந்து கொள்வதில்லை. இது தான் உண்மை. எங்களது நோக்கம் இறையில்லப் பணியாளர்களாக விளங்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான். ஒரு முக்கியமான செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உலமா ஓய்வூதியத்துக்காக ஒருவர் விண்ணப்பிக்கும் போது 20 வருடப் பணிசெய்தல் அவசியம் என்ற சட்டம் ஒருபுறம். விண்ணப்பிக்கும் உலமா, வக்ஃபு வாரியத்தில் வரி கட்டும் பள்ளிவாசலில் பணி செய்தால் தான் அந்த ஓய்வூதியமும் கிடைக்கும் என்பது மறுபுறம். வருமானம் இல்லாத காரணத்தால் வரி கட்டாது வெறுமனே வக்ஃபு வாரிய சர்வே பதிவோடு இயங்கும் பள்ளிகள் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இதனில் பணிசெய்யும் இமாம் களுக்கு இல்லை எனச் சொல்லும் வக்ஃபு வாரியச் சட்டமும் மாற்றப்பட வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.

எங்களது சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாவட்டத்துக்கு ஐந்து பேர் என 150 பேர் உள்ளனர்.

குறிப்பு : பள்ளிவாசல் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஷேக் அப்துல் காதர் என்ற இவர், முன்னாள் முஅதீனாக இருந்து இப்போது இச்சங்கத்துக்கு முழு நேர ஊழியராகப் பணி செய்கின்றார். இச்சங்கம் தற்போது இயங்குவது நெ.117, கீழ வாசல் வீதி, தஞ்சாவூர்.

நன்றி : முஸ்லிம் முரசு – ஜனவரி 2009

ராசல் கைமாவில் மதுரை பல்கலை வளாகம் துவக்கம்

ராசல் கைமாவில் மதுரை பல்கலை வளாகம் துவக்கம்
Thursday, 14 May 2009

துபாய், இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஐக்கிய அரபுக் குடியரசின் ராஸ் அல்கைபாவின் கல்வி நிலையங்கள் பகுதியில் தனது வளாகத்தைத் தொடங்கியுள்ளது.


பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆர்.கற்பக குமாரவேல் இந்த வளாகத்தை சிறப்புப் பகுதியில் தொடங்கி வைத்தார். மாணவர்கள் அனுமதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் மே மாத இறுதியில் துவங்குகின்றன.

இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ பட்ட வகுப்புகள் இந்த வளாகத்தில் அளிக்கப்படும். வணிகம், கணினி வணிகம், மேலாண்மை, சில்லறை விற்பனை, சுற்றுலா சேவை மேலாண்மை மற்றும் கணினிக் கல்வி இளங்கலைப் படிப்பின் முக்கியப் பாடங்களாகும். எம்.பி.ஏ பிரிவில் மனிதவள மேம்பாடு, சில்லறை வணிக மேலாண்மை, நிதி, உற்பத்தி மற்றும் விற்பனை மேலாண்மைப் பிரிவகளில் பாடங்கள் அளிக்கப்படும்.

ஐக்கிய அரபுக் குடியரசில் பிலானியின் பிட்ஸ், மேஸ்ரா பிட்ஸ், மணிபால் பல்கலை, மகாத்மா காந்தி பல்கலை மற்றும் எஸ்பிஜெயின் மேலாண்மைப் பள்ளி ஆகியவை ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.

INDIAN AIR FORCE

INDIAN AIR FORCE
Indian Air Force (IAF) invites applications from unmarried male candidates for selection test in August 2009 to join as Airman inGroup 'Y' trades.

Qualification : Candidates should have passed Intermediate/ 10+2/ Equivalent examination with minimum 50% marks in aggregate with Science, Arts or Commerce subjects or vocational cources with minimum 50% marks. Vocational cources conducted by CBSE and Kerala Board recognised by Association of Indian Universities (AIU) only are eligible.
Age : Born between 01 January 1989 and 28 February 1993 (both date inclusive)
Medical Standards : Height :Minimum acceptable height : 152.5 cm, Chest : Minimum range of expansion : 5 cm, Vision : 6/36 each eye., Correctable with spectacles : at least 6/9 each eye., Diopteric power : not exceeding +3.5
Training : Initial Joint Basic Phase Training (JBPT) will be provided at Airmen Training School, Belgaum (Karnataka) for 12 weeks. After it Trade Training will be provided.
Selection Procedure : Written Test : Test will be held during August 2009. Physical Fitness Test (PFT) : those who pass written test will undertake Physical Fitness Test. It consist of 1.6 Km run to be completed in 8 min., Interview : Those who pass both the written and PFT will be called for interview.
How to Apply : Candidate must indicate three choices of the examination centre in order of preference. Application form which is predefined should be typed on A4 size paper only. Last date for receipt of applications at the Central Airmen Selection Board is 05/06/2009. Last date for candidates of far flung areas is 12/06/2009. Application completed in all respect and outside the envelope containing the application write clearly (i) "FOR GROUP `Y' TRADES" (ii) "AGGREGATE PERCENTAGE OF MARKS …….…% IN CLASS XII/EQUIVALENT EXAMINATION (iii) "Son of Serving/Discharged/ Deceased Officer/Airman/ NC(E)/Air Force Unit Cadre Civilian {SOAFP}" (if applicable) to be annotated in RED INK and should be sent by ordinary post to :

President
Central Airmen Selection Board,
Post Box No. 11807, New Delhi - 110010

For further information, kindly visit http://www.careerai rforce.nic. in/home.htmland Application Form is available at http://indianairfor ce.nic.in/ pdf/FORMAT_ OF_APPLICATION_ AIRFORCE. pdf

உடலுக்கு எடை உண்டு செயலுக்கு எடை உண்டா…?

உடலுக்கு எடை உண்டு செயலுக்கு எடை உண்டா…?

எவருடைய (நன்மையின்) எடை கனமானதோ அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார். எவருடையின் நன்மையின் எடை இலேசாகி (ப் பாப எடை கனத்து) விட்டதோ அவன் தங்குமிடம் ஹாவியா தான். (30-101-6.7.8)

யார் கண்களுக்கும் தெரியாமல் எல்லா மனிதர்களிடமும் ஒரு தராசு இருக்கிறது. அந்த தராசால் மனிதர்கள் தினசரி எடைபோட்டுத் திரிகின்றனர். அந்தத் தராசு மனிதனின் உள்ளம் - அவனது மனம் ! காலையிலிருந்து இரவு வரை மனிதர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தனையால் எடைப் போட்டு தீர்மானிக்கின்றனர்.

கடையில் வேலை செய்யும் ஊழியர் முதலாளியிடம் வந்து ஒருவாரம் லீவு கேட்கிறார். முதாலாளி அப்போது அந்த பணியாளர் இதுவரை நடந்த நடத்தையை எடைபோடுகிறார். ஒருவர் திடிரென நம்மிடம் வந்து ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறார் உடனே மனதிற்குள் அவரது நாணயத்தை எடைபோட்டுப் பார்க்கிறோம்.

நம் நண்பரைப் பற்றி ஒருவர் நம்ப முடியாத குற்றச்சாட்டைக் கூறுகிறார் அப்போது சொல்பவரின் வார்த்தையையும் நண்பரின் பழக்க வழக்கங்களையும் எடைபோட்டுப் பார்த்து முடிவுக்கு வருகிறோம்.

இப்படி நம் மனத்தராசில் ஒவ்வொன்றையும் நிறுத்து எடைபார்த்து முடிவு செய்கிறோம்.

புவியிர்ப்பு உலகில் பொருள்களுக்குத்தான் எடையிருப்பதாகப் படித்திருக்கிறோம். ஆனால் செயல்களுக்கும் எடையிருப்பதை அனுபவப்பூர்வமாக நாம் உணர்ந்திருக்கிறோம்.

சுpலரை வெயிட்பார்ட்டி என்போம் சிலரை இலேசாக க் கருதுவோம். இவையெல்லாம் மனத்தராசின் எடை முடிவுகள் தாம்.

ஆத்தியவாசியமான வேலை முடிந்ததும் அப்பாடா…என அமர்வோம். அதுவரை நாம் மனதிற்குள் சுமந்த பாரம் நீங்கியதற்கான ஆசுவாச வெளிப்பாடுதான் அது.

எனவே மனதிற்குள்ளே பெரும் சுமை – விஷயங்களின் வெயிட்டைப் பொறுத்தது.

சிலர் கண்களாலே எடைபோடுவதும் உண்டு. பார்வையாலே மனிதர்களை அளப்பவர்களும் உண்டு.

நீதி தேவதை கண்களில் கறுப்புத்துணி அணிந்து ஒரு கையில் தராசைப் பிடித்திருக்கும் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தம்அதிகம் எடைபோடுபவர்கள். அவர்களால் குற்றங்களையும் - நியாயங்களையும் எடைபோட்டுப் பார்க்க முடியும். சில தலைவர்களுக்கு மக்கள் அதிகம் மதிப்புக் கொடுப்பது அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகத்தை எடைபோட்டுப் பார்ப்பதால்.

மனிதர்களாகிய நாமே இப்படி எடை பார்க்கும் திறன் உடையவர்களாக இருக்கும் போது. மனிதர்களைப் படைத்த இறைவன் எடை பார்க்காமல் இருப்பானா?

இதைத்தான் நாம் மேலே படித்த திருமறை வசனத்தில் இறைவன் அழகாக விபரிக்கின்றான்.

இந்த உலகில் நாம் செய்த நன்மைகளையும் - தீமைகளையும் மறுமையில் இறைவன் தனது துல்லிதமான தராசில் எடைபோட்டு யாரது தட்டு கனமாக இருக்கிறதோ அவர்களுக்கு சுவனத்தைப் பரிசாகத் தருகிறான்.

நன்மை தீமைகளை எடைபோட முடியுமா ? என குதர்க்க வாதம் பேசுபவர்கள் தங்களை தாங்களே உற்றுப் பார்த்தால் …மனிதர்களின் செயல்களை எடைபோடும் மனத்தராசு தங்களிடம் இருப்பதை புரிந்துக் கொண்டால்…

இறைவனின் தராசில் எடை கனமாக இருக்கப்போகும் நற்செயல்களை அதிகம் செய்ய இன்றே முன்வருவார்கள்.
-ஆலிம் புலவர்
-மறைஞானப்பேழை ஏப்ரல் 2009

மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்

மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம்


சென்னை, மே 13: பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும்
மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம்
அறிவித்துள்ளது.

இந் நிறுவனத்தின் சார்பில் பிளஸ் டூ தேர்வில் தமிழகத்திலேயே முதல் மூன்று
இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு
வழங்கப்படும்.

மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம்
இடம் பெறும் மாணவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

மேலும் இந்தக் கல்வியாண்டு முதல் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம்,
பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதியின்றி படிப்பைத்
தொடர முடியாத 10 மாணவர்களின் முழுப் படிப்புச் செலவையும்
எஸ்.டி.கூரியர்ஸ் நிறுவனம் ஏற்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் கே. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்

விவசாயம்: இலவச பயிற்சி கோடை: நெல் சாகுபடி

விவசாயம்: இலவச பயிற்சி கோடை: நெல் சாகுபடி

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மே 12-ம் தேதி, துல்லியப் பண்ணைய முறையில் காய்கறிகள் சாகுபடி, 15-ம் கறவை மாடு வளர்ப்பு, 19-ம் தேதி வான்கோழி வளர்ப்பு; 27-ம் தேதி, கோடையில் நெல் சாகுபடி: 28-ம் தேதி தென்னையில் காணப்படும் சத்துக் குறைபாடுகளும், நிவர்த்தி முறைகளும் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சியின் போது காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், தொலைபேசி: 04577 -264288.

தமிழ் முஸ்லிம் டியூபில் இந்த வார வீடியோ தொகுப்புகள்

தமிழ் முஸ்லிம் டியூபில் இந்த வார வீடியோ தொகுப்புகள்
This week play list in your favorite Tamil Muslim Tube



கட்டாயம் காண வேண்டியது - "இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு" - ஷெய்க் A.C. அகார் முஹம்மது
http://www.tamilmuslimtube.com/video/111-Sheikh-A-C-Agar-Mohamed

கட்டாயம் காண வேண்டியது - "திருக்குர்'ஆனில் விளையாடும் குழப்பவாதிகள்" - பி.ஜே. யின் மூன் பப்ளிகேசன் வெளியிட்ட தர்ஜுமாவில் உள்ள இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் பற்றி முஃப்தி உமர் ஷெரீப் காசிமி அவர்களின் விரிவான ஆய்வு வீடியோ 4 பாகங்களில் பிரத்யேகமாக
http://www.tamilmuslimtube.com/video/14-298030072992300929653021-296

அல் குர்'ஆனின் அற்புதங்கள் - ஹாருன் யஹ்யாவின் வீடியோ தமிழில்
http://www.tamilmuslimtube.com/video/QURANIN-ARPUTHAM-1

அண்ணல் நபியின் அற்புதங்கள் - காயல் ஷெய்க் H.A. அப்துல் காதர் மஹ்லரி.
http://www.tamilmuslimtube.com/video/AnnalarinArputhangal-1

சகோதர சமுதாயத்தவர் ஆட்சேபிக்கும் 24 குர்'ஆன் வசனங்கள் - ஷெய்க் கலீல் அஹமது கீரனூரி அவர்களின் உணர்ச்சி உரை
http://www.tamilmuslimtube.com/video/111-24



Must see Video “Islathil Kuzhanthai valarpu” - Sheikh ACAgar Mohamed
http://www.tamilmuslimtube.com/video/111-Sheikh-A-C-Agar-Mohamed

Must see Video “Quranil Vizhaiyadum Kuzhappavathikal” – exclusive 4 part complete research video on PJ’s Moon publication’s Tharjuma by Mufti Omar sherif Qasimi.
http://www.tamilmuslimtube.com/video/14-298030072992300929653021-296

“ Al Quran Arputhangal” – Sheikh Harun Yahya video in Tamil
http://www.tamilmuslimtube.com/video/QURANIN-ARPUTHAM-1

“Annal Nabiyin Arputhangal” – Bayan by Kayal Sheikh H.A.Abdul Kader Mahlari
http://www.tamilmuslimtube.com/video/AnnalarinArputhangal-1

“Sakothara Samuthayaththavar Atchepikkum 24 Quran vasanagal” Emotional speech by Sheikh Kaleel Ahmed Keeranoori
http://www.tamilmuslimtube.com/video/111-24



இனிய நபி மொழி 28 - மெளலானா S.சம்சுதீன் காசிமி
Iniya Nabi Mozhi 28 – Explained by Sheikh S.Samsudeen Kasimi
http://www.tamilmuslimtube.com/playlist/2951298530072991-298429863007-2

முன் மாதிரி முஸ்லிம் பெண்மணி – ஷேக் A.C. அகார் முஹம்மது
Munmathi Muslim Penmani – Role Model Muslim Woman – Sheikh A.C.Agar Mohamed.
http://www.tamilmuslimtube.com/playlist/Munmathiri-Muslim-penmani-Sheik

இஸ்லாம் & சூஃபித்துவம் - டாக்டர். தீன் முஹம்மது அஸ்கரி Ph.D
Islam & Thasawwuf - Dr.Deen Mohamed Azhari Ph.D
http://www.tamilmuslimtube.com/playlist/Islam-Tasawwuf-Dr-Sheen-Mohamme

தவ்ஹீத்,ஷிர்க் & குஃப்ர் - முஃப்தி A. உமர் ஷெரீஃப் காஷிமி
Towheed, Shirk & Kufr – Mufti A.Omar Kasimi.
http://www.tamilmuslimtube.com/playlist/Tawheed-Shirk-Kufr-Mufti-Omar-S

உண்மையான் அகீதா - ஷேக் கலந்தர் மஸ்தான் ரஹ்மானி
Real Aqeedha – Sheikh Kalandar Mastan Rahmani
http://www.tamilmuslimtube.com/playlist/Real-Aqeedha-Sheikh-S-S-Kalanda

ஆதம் நபி (அலை) வரலாறு - ஷெய்க் ஷம்சுதீன் காசிமி

http://www.tamilmuslimtube.com/video/1-8

திரித்து கூறப்படும் குர்'ஆன் வரலாறு - ஷெய்க் ஜமால் முஹம்மத் மதனி

http://www.tamilmuslimtube.com/video/12-2980300729923007298030212980

ஷெய்க் ஷைஃபுத்தீன் ரஷாதி கேள்வி பதில்

பாவலர் 100

பாவலர் 100


கம்பீரமாக நிற்கிறார் அந்த மனிதர். சுற்றிலும் நூற்றுக் கணக்கான தமிழறிஞர்கள். அவரை நோக்கி கேள்விக் கணை கள் நீள்கின்றன. வந்து விழுகின்ற கேள்விகளுக்கு எல்லாம் சுளீர் பதில்கள் தெறிக்கின்றன அவரிடமிருந்து. தன்னிடம் கேள்வி கேட்ட 100 பேருக்கும் ஒரே மூச்சில் வரிசையாகப் பதில் சொல்லி அசத்த... கூடி நின்ற அறிஞர்கள் கூட்டம் ஆச்சர் யத்தில் திக்குமுக்காடுகிறது. சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார். 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாள் சொன்னால், அடுத்த நொடி கிழமையைச் சரியாகச் சொல்வார். அவர்தான் செய்குத் தம்பிப் பாவலர். அதிசயிக்கவைக்கும் சாதனைத் தமிழர். அவருக்குத் தபால் தலை வெளியிட்டுக் கௌரவித்திருக்கிறது மத்திய அரசு!

அடுத்தடுத்து பெரிய எண்களை வரிசையாகச் சொன்னால், அவற்றின் கூட்டுத் தொகை, பெருக்குத் தொ¬ககளை உடனே சொல்வது, நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது கொடுக்கப்படும் நீரை ருசி பார்த்துவிட்டு, இறுதியில் அது எந்தப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று சரியாகச் சொல்வது, நிகழ்ச்சியின் இடையில் தன் மீது வீசப்பட்ட நெல்மணிகள், பட்டாணிகள், கற்கள் எத்தனை என கணக்குச் சொல்வது என இவர் ஆச்சர்யங்களால் நிறைந்தவர். இப்படி எட்டு விஷயங்களை நினைவில் வைத்துச் சொல்வதற்கு அஷ்டாவதானி என்று பெயர். பத்து என்றால் தசாவதானி. இவர் இப்படி 100 விஷயங்களை நினைவில் வைத்து, ஒரே மூச்சில் திரும்பச் சொல்லக் கூடியவர் என்பதால் 'சதாவதானி'.

செய்குத் தம்பிப் பாவலர் இந்தச் சாதனையை நிகழ்த்தி 100 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதைப் போற்றும் விதமாக தமிழக அரசு இவர் எழுதிய நூல்களை நாட்டுடமை ஆக்கி உள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்திருக்கிறது. சென்னையில் வசிக்கும் பாவலரின் மகள் பாத்திமா பீவியைச் சந்தித்தேன்.

''கன்னியாகுமரி மாவட்டம் கோட் டார் பக்கத்தில் உள்ள இடலாக்குடிதான் அப்பாவுக்குச் சொந்த ஊர். மலையாள வழியில் பள்ளிப் படிப்பைப் படிச்சாலும், அவருக்குத் தமிழ் மேலதான் காதல். வீட்டு வறுமைக்கு இடையில் திண்ணைப் பள்ளிக்கூடத்துல தமிழ் கத்துக்கிட் டார். 15 வயதிலேயே செய்யுள் எழுதும் அள வுக்கு தமிழில் புலமை. பிறகு மாதம் 60 ரூபாய் சம்பளத்துக்குப் பிழை திருத்தும் வேலை பார்த்துக் கிட்டே சீறாப் புராணத்துக்கு உரை எழுதினார். 'யதார்த்தவாதி', 'இஸ்லாமிய மித்ரன்'னு ரெண்டு பத்திரிகைகளையும் நடத்தியிருக்கிறார்.


அதைத் தொடர்ந்துதான் தசாவதானம், சதாவதானம்னு பல சாதனைகளைச் செய்தார். சென்னை விக்டோரியா ஹாலில் தசாவதானம் செய்தபோது 'தசாவதானி' பட்டம் கொடுத்தாங்க. திரு கோட்டாற்று பதிற்றுப் பத்தந்தாதி, கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், அழகப்பக்கோவை, நாகைக் கோவை என ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். விடுதலைப் போராட்டத்திலும் கலந்துக்கிட்டிருக்கார்.

அந்நிய நாட்டுத் துணிகள் எரிப்புப் போராட்டத்தில் அப்பா பேசும்போது, 'ஒரு நல்ல மணமகன் கைத்தறி வேட்டிதான் அணிவான். பிணமகனுக்குத்தான் மில்துணி போர்த்துவாங்க. நீங்க மணமகனா, பிணமகனா?' எனக் கேட்டதும், கூட்டத்தில் மில்துணி அணிந்திருந்தவர்கள் அதைக் கழற்றி எறிந்தார்களாம். ஜீவா, திரு.வி.க. மாதிரி முக்கியமான தலைவர்கள் அப்பாவின் பேச்சுக்கு ரசிகர்களா இருந்திருக்காங்க.

அப்பாவின் நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபம் கட்டின எம்.ஜி.ஆர்., அங்கே இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அப்பா பேரை வெச்சார். அதே போல கலைஞர், அப்பா எழுதின புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கார்.'' பெருமிதப் புன்னகையுடன் பேசுகிறார் பாத்திமா.

பாவலரின் செய்யுள்களைப் பாடப் புத்த கங்களில் இடம்பெறச் செய்யவேண்டும், விக்டோரியா ஹாலுக்கு பாவலர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் குடும்பத்து உறுப்பினர்கள், www.pavalar.blog.com என்ற வலைப்பூ மூலம் அவர் பற்றிய தகவல் களைத் தொகுத்து வருகிறார்கள்!


Saleem.

தமிழன் ஐ.ஏ.எஸ்!

தமிழன் ஐ.ஏ.எஸ்!

- ஆர்.சரண்

தமிழன் ஐ.ஏ.எஸ்... தமிழர்களுக்குக் கனவாக இருந்த ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுகள் இப்போது மெய்ப்பட ஆரம்பித்திருக்கின்றன. 2006-க்கான ஐ.ஏ.எஸ். தேர்வில் 44 மாணவர்கள் வெற்றிக் கோட்டைத் தொட... இந்த வருடம் வெளியாகியுள்ள 2008-க்கான ரிசல்ட்டில் அது இரட்டிப்பாகி 96 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்!
மே மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை அண்ணாநகரின் ஒவ்வொரு அவென்யூவும் பிஸியாகிவிடும். 'மாப்ளே! ராய்பால் இந்தத் தடவை ரொம்ப லிபரல்... ஜோக்கெல்லாம் அடிச்சுக்கிட்டே கேள்வி கேட்டாரு...' என்று காபி சுவைத்தபடி தெருவோரக் கடைகளில் ஐ.ஏ.எஸ். இன்டர்வியூ பற்றிப் பேச்சு கேட்கும்.

''ஐ.ஏ.எஸ்னா ஐ.ஐ.டி. ரேஞ்ச் பசங்கதான் எழுத முடியும், டெல்லியில்தான் படிக்கணும், ஹிந்தி தெரியணும்னு எக்கச்சக்க பில்ட்-அப் இருந்தது. இப்போ அதெல்லாம் கிடையாது. அண்ணா நகர்ல சின்ஸியரா ஒரு வருஷம் படிச்சாப் போதும். ஏதாவது ஒரு சர்வீஸை நிச்சயம் வாங்கிடலாம். தன்னம்பிக்கையும் உழைப்பும் உங்களை அண்ணாநகர்ல இருந்து டெல்லிக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.'' - பெருமிதமான குரலில் பேசுகிறார் சசிகாந்த் செந்தில். இந்திய அளவில் 9-வது ரேங்க்கும் தமிழ்நாட்டில் முதல் ரேங்கும் எடுத்திருப்பவர்.


காலேஜ் பக்கம் போகாமலே சிவில் சர்வீஸ் தேர்வில் பாஸாகி ஆச்சர்யப்படுத்துகிறார் மைக்கேல் ஜெரால்டு. ''நான் ஒரு மெடிக்கல் ரெப். தினமும் ஒரே மாதிரியான வேலையில் சலிச்சுப்போய் சிவில் சர்வீஸ் எழுத வந்தேன். தபால் வழியில் பி.ஏ., இங்கிலீஷ் லிட்டரேச்சர் முடிச்சுட்டு, அண்ணாநகரில் வந்து சேர்ந்தேன். போன வருஷம் எழுதிய எக்ஸாமில் ஐ.ஆர்.எஸ். கிடைச்சிருக்கு. ஐ.ஆர்.எஸ். கிடைச்ச சந்தோஷத்துல அன்னிக்கு வேகமா பைக் ஓட்டினேன். ஆட்டோக்காரர் ஒருவர் 'மனசுக்குள்ள பெரிய கலெக்டர்னு நினைப்போ?'னு கேட்டார். 'ஆமாண்ணே... நான் வருங்கால கலெக்டர் தாண்ணே'ன்னு சொன்னதும் புரியாம பார்த்தார்!'' - அதிர்வேட்டாகச் சிரிக்கிறார் மைக்கேல் ஜெரால்டு.


வீரபாண்டியனின் கதை தன்னம்பிக்கை டானிக்!

பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக்கொண்டே ப்ளஸ் டூ தேர்வில் மாநில அளவில் சாதனை புரிந்தவர். ''ஐ.ஏ.எஸ். ஆகி மக்களுக்குச் சேவை செய்வேன்'' என்று அப்போது பேட்டி கொடுத்தவர், இப்போ வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ். ''என் அப்பா அலுமினியப் பாத்திரங்களை சைக்கிள்ள வெச்சுக்கிட்டு வீடு வீடாப் போய் வித்துட்டு வருவார். அம்மா கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலில் துப்புரவுத் தொழிலாளியா இருக்காங்க. அப்பாவும் அம்மாவும் முடிஞ்ச வரைக்கும் அவங்க கஷ்டத்தோட நிழல் என் மேல் விழாத மாதிரி பாத்துக்கிட்டாங்க. 'நான் ஐ.ஏ.எஸ். ஆவேன்'னு இன்டர்வியூ கொடுத்ததும், எங்க அப்பாவை எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. 'கூமுட்டக் கோழி வீடு பூரா முட்டை போடஆசைப் பட்டுச்சாம்'னு ஆளாளுக்கு அடிச்ச கிண்டலில் அப்பாவும் அம்மாவும் மனசு உடைஞ்சு போயிட்டாங்க. அவங்க கண்களில் சந்தோஷத்தைப் பார்க்கணும்னு வெறித்தனமாப் படிக்க ஆரம்பிச்சேன். போன நாடாளுமன்றத் தேர்தலப்போ முதல்முறையா ஐ.ஏ.எஸ். தேர்வை எழுத ஆரம்பிச்சேன். தவறுகளைத் திருத்தக் கிடைச்ச வாய்ப்பா ஒவ்வொரு தோல்வியையும் எடுத்துக்கிட்டேன். போன வருஷம் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தப்ப, நல்ல டிரெஸ், ஷூ வாங்கப் பணம் இல்லை. கடன் வாங்கிட்டுப் போனேன். நல்லபடியா, இந்திய அளவில் 54-வது இடத்தைப் பிடிச்சு ஐ.ஏ.எஸ். ஆகிட்டேன். இப்போ அப்பாவைப் பார்க்கிறவங்க, 'வைராக்கியக்காரன்யா நீயி! உன் மகனை கடைசியில கலெக்டர் ஆக்கிட்டியே!'ன்னு சொல்றாங்க. அப்பா, அம்மா முகம் இப்போதான் தெளிவா இருக்கு. நானும் சந்தோஷமா இருக்கேன்!'' - சாதித்த சந்தோஷத்தில் பேசுகிறார் வீரபாண்டியன்.


பாலாஜி ஐ.பி.எஸ்ஸின் கதை வித்தியாசமானது. ''இன்ஜி னீயரிங் முடிச்சுட்டு நல்லா சம்பாதிக்கணும்னு நினைச்சு அண்ணா யுனிவர்சிட்டி வந்தேன். எல்லாரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பத்திப் பேசவும் எனக்கு ஆர்வம் வந்தது. ச்சும்மா டிரை பண்ணினதுக்கு 238-வது ரேங்க் வாங்கிட்டேன். பொதுவா, 'ஐ.பி.எஸ். ஆகணும்னா உயரமா ஆஜானுபாகுவா இருக்கணும்'னு தப்பான எண்ணம் இருக்கு. போலீஸ் ஆகத் தேவைப்படுற உயரத்தைவிட குறைவா இருந்தாலும் ஐ.பி.எஸ். ஆக முடியும். நல்ல சமயோசித புத்தியும் ஆளுமைத் திறனும்தான் ஐ.பி.எஸ். ஆக முதல் தகுதி'' என்கிறார் பாலாஜி.
இளமுருகுவின் வாழ்க்கை நெகிழ்ச்சியானது. எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்த இளமுருகு ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே தொடர்ந்து 5 வருடங்கள் தேர்வு எழுதி, இப்போது வெற்றி பெற்றிருக்கிறார். ''அப்பா என்னை அரசாங்க அதிகாரியாப் பார்க்க ஆசைப்பட்டார். அவருக்காக சிவில் சர்வீஸ் எழுத ஆரம்பிச்சேன். நான் எக்ஸாம் எழுதறதுக்கு முன்னாடியே அப்பா இறந்துட்டார். ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வர்றப்ப அப்பாவை நினைச்சுப்பேன். ரிசல்ட் வந்த மறுநாளே படிக்க உட்கார்ந்திருவேன். இன்னிக்கு எங்க ஒட்டுமொத்தக் குடும்பமும் பூரிப்பா இருக்காங்க. எல்லாம் அப்பா ஆசீர்வாதம்!'' - பேசி முடிக்கும்போது இளமுருகுவின் குரலில் அத்தனை ஆனந்தம்.


''பொம்பளைப் புள்ளைக்கு எதுக்கு இவ்வளவு பிடிவாதம்... வேற ஏதாச்சும் படிச்சுச் சம்பாதிக்கச் சொல்லுங்க. இல்லைன்னா, காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துருங்கன்னு என் அம்மா- அப்பாகிட்டே அட்வைஸ் பண்ணவங்களை இப்போ நினைச்சுப் பார்க்கிறேன். அவங்களுக்கான பதில்... நிர்மலா ஐ.பி.எஸ்!'' - மலர்ந்து சிரிக்கிறார் நிர்மலா.
சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளையில் படித்தவர்களில் இந்த முறை 25 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் பலர் வசதி குறைந்த, விவசாயக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் விசேஷம்.
இவர்களோடு சேர்த்து பி.காம்., படிப்பை 10 வருடங்கள் படித்த சான்பாஷா, 11 வருடங்களாக இடைவிடாமல் சர்வீஸைத் துரத்திய ஸ்ரீதர், இன்டர்வியூ வரை தமிழில் அணுகிய சக்தி போன்றோர் சொல்வதெல்லாம் ஒன்றுதான்...


நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்!



Courtesy Vikatan.

Islamic Summer Course

Darul Islam Foundation Trust
Islamic Summer Course

Date: May 16 - 26
Time: 10 a.m. to 12.30 p.m.
El'ble: Age 8 - 15 boys & girls

Teaching : Islamic History, Moral, Dhuva

Place: Darul Islam Foundation Trust
235, Peters Road, Royapettah
(opp. Ameerunnisa Trust Masjid)

Chennai - 600 014

contact: 044 4 5566 909, 94442 39594 & 98409 55471
sksign@gmail.com

AIMMM Statement on the election results

ALL INDIA MUSLIM MAJLIS-E-MUSHAWARAT
[Umbrella body of the Indian Muslim organisations]
D-250, Abul Fazal Enclave, Jamia Nagar, New Delhi-110025 India
Tel.: 011-26946780 Fax: 011-26947346
Email: mushawarat@mushawarat.com Web: www.mushawarat.com


AIMMM welcomes the election results

New Delhi, Saturday, 16 May 2009: The All India Muslim Majlis-e Mushawarat [umbrella body of Indian Muslim organisations] welcomed the mandate given by the people of India to the UPA in general and the Congress Party in particular.

The AIMMM President Dr Zafarul-Islam Khan said in a statement here that the elections’ outcome is a clear indication that the Indian voter has rejected the divisive and communal politics of the NDA and its allies.

Dr Khan said that the Muslim community all over the country has welcomed the outcome of the elections. Apart from other national and regional issues, the results are to a large extent due to a clear Muslim swing, especially in the north, towards the Congress Party for the first time since the demolition of the Babri Mosque in 1992.

Dr Khan said that the Congress Party’s initiatives as head of the UPA, including the Sachar Report and the measures taken in its wake, e.g., Prime Minister's revised 15 point programme, scholarships scheme for minority students and schools for minority areas, containment of the terrorism scare created by the BJP, especially since the arrival of Mr Chidambram as head of the home ministry, have helped to bring Muslims back to the Congress.

Dr Khan added that the secular image of the Gandhi family, Rahul’s friendly image and attitude towards the community and the poor, and the clean and sincere image of Prime Minsiter Manmohan Singh and his accessibility to the community leaders have gone a long way to convince Muslims to vote again for the Congress.

Dr Khan said that the Congress party should not take this support for granted as the Muslim community will closely watch during the next five years if the party was really serious about its announcements and policies. The community will watch if the now unfettered Congress government was really serious about implementing the plethora of schemes announced by the Prime Minister during the last three years. The community will also watch how fair the new government is in tackling the terrorism scare unleashed by the BJP as a weapon against the Muslim community. This scare is responsible for keeping many innocent Muslim youths behind bars.
[end]

---------------------------------------------------
Issued by the All India Muslim Majlis-e Mushawarat, Delhi
For media comments only please contact zik@zik.in or phone 00-91-9811142151