Monday, May 26, 2008

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

உங்களின் ஆக்கங்களை உடன் அனுப்பி வையுங்கள்.

கீழ்காணும் இலக்கங்களில் மலர்க்குழுவை தொடர்பு கொள்ளுங்கள்:

ஹாஜி S.A.இக்பால் கைபேசி: +919443123763

ஜாமிஆ மஸ்ஜித் தொலைபேசி: +914364250107


http://niduronline.com/?p=559

சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் ஷேக் அப்துல்லா பலி

சென்னையில் பஸ் மோதி எம்பிபிஎஸ் மாணவர் பலி

சென்னையில் பைக்கில் சென்ற முதலமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் அரசுப் பேருந்து மோதி பலியானார்.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இச் சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டார்.

கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (21) என்ற அந்த மாணவர், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று காலை தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆற்காடு ரோட்டில் சென்றபோது அய்யப்பன்தாங்கல் செல்லும் 11 எச் அரசுப் பேருந்து பின்னால் இருந்து பைக் மீது மோதியது.

இதில் அப்துல்லா அந்த இடத்திலேயே பலியானார்.