Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

Tuesday, April 20, 2010

துபாய் ஹோர் அல் அன்ஸ் / அல் முத்தீனா ப‌குதியில் குழ‌ந்தைக‌ள் அர‌பி மொழி ப‌யில‌..

துபாய் ஹோர் அல் அன்ஸ் / அல் முத்தீனா ப‌குதியில் குழ‌ந்தைக‌ள் அர‌பி மொழி ப‌யில‌..

துபாய் ஹோர் அல் அன்ஸ் ம‌ற்றும் அல் முத்தீனா ப‌குதியில் குழ‌ந்தைக‌ளுக்கு அர‌பி மொழியினை த‌ஜ்வீத் முறைப்ப‌டி சொல்லித் த‌ருவ‌த‌ற்கு த‌மிழ‌க‌த்தின் ப‌ர‌ங்கிப்பேட்டையைச் சேர்ந்த‌ ஹாபிஸ் உள்ளார்.


இவ்வாய்ப்பினை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ விரும்புவோர் ஹாபிஸ் அப்துல் ர‌ஷீது அவ‌ர்க‌ளை 050 3024352 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.
--

Sunday, April 18, 2010

துபாயில் ஜுன் மாத‌ம் இந்திய‌ப் பொருட்க‌ள் க‌ண்காட்சி

துபாயில் ஜுன் மாத‌ம் இந்திய‌ப் பொருட்க‌ள் க‌ண்காட்சி

துபாய் : துபாயில் ஜும் மாத‌ம் 8 ஆம் தேதி முத‌ல் 10 ஆம் தேதி வ‌ரை இந்திய‌ப் பொருட்க‌ள் க‌ண்காட்சி துபாய் இண்ட‌ர்நேஷ‌ன‌ல் க‌ன்வென்ஷ‌ன் & எக்ஸிபிஷன் சென்ட‌ரில் ந‌டைபெற‌ இருப்ப‌தாக‌ இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ச‌ஞ்ச‌ய் வ‌ர்மா செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார். இத‌னை பெட‌ரேஷ‌ன் ஆஃப் இந்திய‌ன் எக்ஸ்போர்ட்ஸ் ஆர்க‌னைசேஷ‌ன் ஏற்பாடு செய்துள்ள‌து. இதில் 250 பெரிய‌ ம‌ற்றும் சிறிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்க‌ இருக்கின்ற‌ன‌.

இந்நிக‌ழ்வினை நிதிய‌ வ‌ர்த்த‌க‌ அமைச்ச‌ர் ஆன‌ந்த் ச‌ர்மா துவ‌க்கி வைக்கிறார். இக்க‌ண்காட்சியில் வீட்டு உப‌யோக‌ப்பொருட்க‌ள், அன்ப‌ளிப்பு பொருட்க‌ள், பேஷ‌ன், கார்மெண்ட்ஸ், உண‌வுப் பொருட்க‌ள், என்ஜினிய‌ரிங், ஆட்டோ பாக‌ங்க‌ள், த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு துறைக‌ளிலான‌ பொருட்க‌ள் க‌ண்காட்சியில் இட‌ம்பெறும்.

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் : துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையத்தை பர்மாவைச் சேர்ந்த சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் ஐந்து வயது மாணவர்கள் முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.

சில பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.

மேலும் விபரங்களுக்கு :

தொலைபேசி : 04 – 2645 777 / 050 797 5677

மின்னஞ்சல் : burmacentre.dubai@hotmail.com

Burmacentre.dubai@gmail.com

Friday, April 2, 2010

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் : துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையத்தை பர்மாவைச் சேர்ந்த சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் ஐந்து வயது மாணவர்கள் முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.
சில பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.
மேலும் விபரங்களுக்கு :
தொலைபேசி : 04 – 2645 777 / 050 797 5677
மின்னஞ்சல் : burmacentre.dubai@hotmail.com
Burmacentre.dubai@gmail.com

Saturday, March 13, 2010

மார்ச் 18 முதல் 20 வரை துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு

மார்ச் 18 முதல் 20 வரை துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு

துபாய் : துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு மார்ச் 18 முதல் 20 வரை துபாய் ஏர்போர்ட் எக்ஸ்போவில் நடைபெற இருக்கிறது.
இதனையொட்டி கருத்தரங்கு, கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
இதில் மக்கா இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதேஸ், குவைத் இமாம் ஷேக் மிஸேரி ராஷித் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.
மேலும் யூசுப் எஸ்டேஸ் ( அமெரிக்கா ), அப்துல் ரஹீம் கிரீன் ( இங்கிலாந்து ), அஹ்மது ஹமீத் ( இந்தியா ), ஹுசைன் யீ ( மலேசியா ) , டாக்டர் ஹமீத் ஹுசைன் ( எகிப்து ), எம்.எம். அக்பர் ( இந்தியா ), யாசிர் காதி ( அமெரிக்கா ), சயித் ரகிஆ ( கனடா ) உள்ளிட்ட சர்வதேச பேச்சாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
அனைத்து மத/மார்க்க நம்பிக்கை கொண்டவர்களும் இதில் பங்கேற்கலாம். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 04-3394767 / 04 – 608 7602
மின்னஞ்சல் : info@peaceconvention.com / www.peaceconvention.com

Thursday, March 11, 2010

துபாயில் நான்…

துபாயில் நான்…

இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…
அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,
அன்னிய மண்ணில்- நான்
வேர்ப்பட்டதும்,
விமானம் ஏற‌
தீர்மானம் செய்ததால்…
அன்று அரும்பாக இருக்கையிலே
ஆகாய பார்வையிலே
அலைபாய்ந்த ஆசையிலே
அழகாக தோன்றிய‌
ஆகாய ஊர்தியும்,
அரங்கேறி போகையிலே
ஆனந்த்தம் இல்லாத‌
அனுபவம் ஆனது.
அதில் அலங்காரம் செய்துதான்
ஆகாரம் வந்தது,
ஆசைபட்டு தீர்த்திடாமல்
அசை போட்டு தீர்த்துவிட்டேன்…
இறங்கும் நேரம் வந்து விட‍- அன்று
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு
இயற்கை என்று ஒன்றும் இல்லை…
மணல் நகரின் அனல் காட்சி
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி…
அன்று நிவார‌ண‌ம் தேடி வந்த‌ ந‌க‌ர‌ம்
இன்று நிரந்த‌ர‌ம் ஆகிப்போன‌ ந‌க‌ர‌ம்,
நாள் ‍ விடிந்தாலும் முடிந்தாலும்
ஒரே போல‌ இருக்கும்,
அட‌ அறைக்குள்ளே சிறைவைத்தால்
வேறென்ன‌ இருக்கும்…
உற‌வோடு உற‌வாட‌
தொலைபேசி என‌க்கு,
அதில் போன‌ காசுக்கு
இங்கேது க‌ண‌க்கு…
இங்கே ம‌னைவியோடு உற‌வாடி
பிள்ளை பெற‌முடியாம‌ல்,
பில்லை பெற்ற‌வ‌ர் ஆயிர‌ம்…
இள‌மையும் வேலைக்கு
இரையாகி போச்சு,
கால‌மும் காசுக்கு
க‌ரியாகி போச்சு,
த‌லையெல்லாம் அத‌ற்குள்ளே
ந‌ரையாகி போச்சு,
காசாவ‌து மீந்த‌தா
செல‌வாகி போச்சு…
வ‌ருமான‌ம் வ‌ருமுன்னே
செல‌வு வ‌ந்து சேர்ந்திடும்,
வெறுமாக‌ ஊர் சென்றால்
உற‌வு வ‌ந்து சேருமா?
காசுக் க‌ண‌க்குக‌ள்
க‌வ‌லை த‌ருகிற‌து,
க‌ட‌ந்த‌ கால‌ம்தான்
க‌ண்ணில் வ‌ருகிற‌து…
இனி இஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
ந‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌து திரும்பாது…
எந்நாடு சென்றாலும்
என் நாடு ஆகாது,
சொர்க‌மே த‌ந்தாலும் ‍ ம‌ன‌தில்
தாய் நாடு சாகாது…


( எழுதியது : யாரோ )

Monday, January 4, 2010

துபாயில் தொழிலாள‌ர்க‌ளுக்காக‌ இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம்

துபாயில் தொழிலாள‌ர்க‌ளுக்காக‌ இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம்

துபாய் : துபாய் இந்திய‌ பெண்க‌ள் அமைப்பு தொழிலாள‌ர்க‌ளுக்காக‌ ஏழாவ‌து இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாமினை 08.01.2010 வெள்ளிக்கிழ‌மை காலை 8 ம‌ணி முத‌ல் 12 ம‌ணி வ‌ரை இந்திய‌ க‌ன்சுலேட் ஆடிட்டோரிய‌த்தில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.

இம்முகாம் இர‌ண்டாயிர‌த்துக்கும் குறைவாக‌ ச‌ம்ப‌ள‌ம் பெறுவோருக்கும், ம‌ருத்துவ‌ காப்பீடு பெற‌ வ‌ச‌திய‌ற்ற‌வ‌ர்க‌ளுக்காக‌ ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து.

நீரிழிவு நோய் இருப்ப‌வ‌ர்க‌ளும், 40 வ‌ய‌துக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் எதுவ‌ம் சாப்பிடாம‌ல் ம‌ருத்துவ‌ முகாமில் க‌ல‌ந்து கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். ஏற்க‌ன‌வே ம‌ருத்துவ‌ரிட‌ம் காண்பித்த‌ ரிப்போர்ட் இருப்பின் அத‌னை அவ‌சிய‌ம் எடுத்து வ‌ர‌வேண்டும்.
ம‌ருத்துவ‌ முகாமில் ப‌ங்கேற்க‌ விரும்புவோர் ஜ‌ன‌வ‌ரி 5 ம‌ற்றும் 6 ஆகிய‌ தேதிக‌ளில் காலை ஒன்ப‌து ம‌ணி முத‌ல் ந‌ண்ப‌க‌ல் ஒரு ம‌ணி வ‌ரை 050-1152021 அல்ல‌து 056 -6945125 ஆகிய‌ அலைபேசியில் தொட‌ர்புகொண்டு முன்ப‌திவு செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Tuesday, November 24, 2009

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் வேலூர் எம்பிக்கு பாராட்டு விழா ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சி

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் வேலூர் எம்பிக்கு பாராட்டு விழா ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சி
துபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் அமீர‌க‌த்தின் 38 ஆவ‌து தேசிய‌ தின‌ம், வேலூர் எம்.பி. எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு பாராட்டு விழா ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சிக‌ளை டிச‌ம்ப‌ர் 2 ஆம் தேதி இந்திய‌ உய‌ர்நிலைப்ப‌ள்ளி ஷேக் ராஷித் அர‌ங்கில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.

இம்மாபெரும் விழாவில் அமீர‌க‌த்தில் வாழ்ந்து வ‌ரும் இந்திய‌ ம‌க்க‌ளுக்குப் ப‌ல்வேறு சேவைக‌ளை ஆற்றிவ‌ரும் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி, தொழில்துறை ம‌ற்றும் ம‌னித‌நேய‌ப்ப‌ணிக‌ளுக்கு உத‌வி வ‌ரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ நிர்வாக‌ இய‌க்குந‌ர் செய்ய‌து எம். ஸ‌லாஹுத்தீன், ச‌மூக‌ சேவைக்காக‌ இந்திய‌ க‌ம்யூனிட்டி வெல்ஃபேர் க‌மிட்டியின் க‌ன்வீன‌ர் கே. குமார் உள்ளிட்டோர் கௌர‌வ‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ உள்ள‌ன‌ர்.
மேலும் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு பாராட்டு நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ உள்ள‌து.

இவ்விழாவிற்கு க‌லைப்புலி தாணு சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ங்கேற்கிறார். ச‌ன்டிவி க‌ல்யாண‌மாலை புக‌ழ் வாசுகி ம‌னோக‌ர‌ன் குழுவின‌ரின் ப‌ட்டிம‌ன்ற‌ம், இசைய‌மைப்பாள‌ர் க‌ங்கை அமர‌ன் த‌லைமையில் பாட்டுக்கு பாட்டு நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ உள்ள‌து. துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ குழ‌ந்தைக‌ளின் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சியும் இட‌ம்பெற‌ இருக்கிற‌து.

அனும‌திச் சீட்டு உள்ள‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே அர‌ங்கினுள் அனும‌திக்க‌ப்ப‌டுவ‌ர். அனும‌திச் சீட்டுக‌ளை பெற‌ துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ர் சி. ஜெக‌நாத‌ன் 050 5787657 / விழாக்குழு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா 050 467 4399 / 050 51 96 433 / dubaitamilsangam@gmail.com உள்ளிட்ட‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொண்டு பெற‌லாம்.

Thursday, August 6, 2009

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சியினை ஹிஜ்ரி 1430 ஷ அபான் பிறை 15, 05.08.2009 புதன் மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) சிறப்புற நடத்தியது

மஃரிபு தொழுகைக்குப் பின்னர் நடத்திய முதல் அமர்வில் மூன்று முறை யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது. முதலாம் யாசீன் ஸலாமத்தான நீண்ட ஆயுளுக்காகவும், இரண்டாம் யாசீன் பலா முசீபத் கஷ்ட நஷ்டங்கள் நீங்கிடவும், மூன்றாம் யாசீன் ரிஸ்க் விஸ்தீரனம் வேண்டியும் துஆ செய்யப்பட்டது.

இரண்டாம் அமர்வு இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்றது. இச்சிறப்புமிகு நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் கத்தீம் தலைமை வகித்தார். ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி, மவ்லவி ஏ.எஸ். முத்து அஹ்மது ஆலிம் மஹ்ழரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் நன்றி கூறினார்.

பயானுக்குப் பின்னர் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

துபாய் கோட்டைப் பள்ளி :

துபாய் கோட்டைப் பள்ளியில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற பராஅத் இரவு சிறப்பு நிகழ்வில் சேலம் ஜாமிஆ மளாஹிருல் உலூம் முதல்வர் மவ்லானா அனீசுர் ரஹ்மான் ஹஜ்ரத் காஸிமி, சொல்லின் செல்வர் செங்கோட்டை சிங்கம் மணிமொழி மவ்லானா ஆவூர் ஏ. அப்துஷ் ஷுக்கூர் மன்பஈ ஹஜ்ரத், கீழக்கரை முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

அஸ்கான் டி பிளாக் :

சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சியில் வடகரை மவ்லானா எம். மீரா முஹ்யித்தீன் பைஜி ஹஜ்ரத், ஏ. முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

அபுதாபி அய்மான்

அபுதாபி அய்மான் அமைப்பின் சார்பில் அபுதாபி கலீஃபா மஸ்ஜிதில் பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சியினையொட்டி சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tuesday, July 28, 2009

துபாயில் ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாயில் ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜமாஅத் பேரவையின் சார்பில் 29.07.2009 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாள‌ர் காஞ்சி ம‌வ்ல‌வி அப்துல் ர‌வூஃப் பாக‌வி அவ‌ர்க‌ள் 'ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார்.

இந்நிகழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ந்த‌ காஞ்சி ர‌வூஃப் பாக‌வி இம்மாத‌ இறுதியில் அமீர‌க‌ப் ப‌ணியில் இருந்து விருப்ப‌ ஓய்வு பெற்று தாய‌க‌ம் செல்ல‌ இருக்கிறார்.

Sunday, July 26, 2009

துபாய் தேராவில் வீடு வாட‌கைக்கு

துபாய் தேராவில் வீடு வாட‌கைக்கு

துபாய் தேரா ப‌குதியில் வீடு வாட‌கைக்கு உள்ள‌து. த‌மிழ‌க‌ குடும்ப‌த்தின‌ர் உள்ள‌ இல்ல‌த்தில் உள்ள‌ அறை வாட‌கைக்கு உள்ள‌து.

மாத‌ வாட‌கை ரூ. 2500

மேலும் விபர‌ங்க‌ளுக்கு
050 1818225

Monday, July 13, 2009

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் சிற‌ப்பித‌ழ் வெளியீடு

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் சிற‌ப்பித‌ழ் வெளியீடு

துபாய் : துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் 'கோடையும் வாடையும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புக் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் த‌மிழ்த்தேர் சிற‌ப்பித‌ழ் வெளியீடு 10.07.2009 வெள்ளிக்கிழ‌மை காலை க‌ராமா சிவ் ஸ்டார் ப‌வ‌னில் ந‌டைபெற்ற‌து.

கோடையும் வாடையும் என்ற‌ சிற‌ப்பு க‌விதை நிக‌ழ்ச்சியின் ந‌டுவ‌ர்க‌ளாக‌ திருப்ப‌த்தூர் அப்துல் வாஹித், ப‌ழ‌னி ஆகியோர் இருந்த‌ன‌ர். க‌விஞ‌ர்க‌ள் சிம்ம‌ பார‌தி, ஜியா, ச‌ந்திர‌சேக‌ர், க‌மால், ந‌ர்கிஸ், ம‌லிக்கா, நிலாவ‌ண்ண‌ன், அமுதா ப‌த்ம‌நாப‌ன், ஜெயா ப‌ழ‌னி, வேலூர் க‌ந்த‌நாத‌ன், கிளிய‌னூர் இஸ்ம‌த், ராஜா க‌மால் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌விதை வாசித்த‌ன‌ர்.

அத‌னைத் தொட‌ர்ந்து த‌மிழ்த்தேர் சிற‌ப்பித‌ழ் வெளியீடு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்ச்சியின் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ டாக்ட‌ர் சுப்புல‌ட்சுமி பாலா, க‌ராமா மெடிக்க‌ல் சென்ட‌ர் டாக்ட‌ர் ச‌ம்ப‌த் குமார், முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளி ஓய்வுபெற்ற‌ ஆசிரியை அப‌ர‌ஞ்சி உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

த‌மிழ்த்தேர் இத‌ழை டாக்ட‌ர் சுப்புல‌ட்சுமி பாலா வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை உத‌ய‌குமார் பெற்றுக்கொண்டார்.

சிற‌ப்புவிருந்தின‌ர்க‌ள் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்கியும் கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ள் குறித்த‌ அறிமுக‌த்தை க‌லைய‌ன்ப‌ன் ம‌ற்றும் முதுவை ஹிதாய‌த் ஆகியோர் செய்த‌ன‌ர்.

க‌விஞ‌ர் நிலாவ‌ண்ண‌ன் தாய‌க‌ம் செல்வ‌தையொட்டி அவ‌ருக்கு பிரியாவிடை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. அவ‌ருக்கு நினைவுப் ப‌ரிசும் வ‌ழ‌ங்கப்ப‌ட்ட‌து. அத‌னைத்தொட‌ர்ந்து அவ‌ர் ஏற்புரை நிக‌ழ்த்தினார்.
செயலாள‌ர் ச‌ந்திர‌சேக‌ர் ந‌ன்றி கூறினார். நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ஜியாவுத்தின், சிம்ம‌பார‌தி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ஏற்பாடு செய்த‌ன‌ர்.













Thursday, July 2, 2009

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை துபை தேரா அல் முதினாவில் உள்ள அஸ்கான் D பிளாக்கில் நடைபெற்றது.
அற‌ந்தாங்கி இஸ்லாமிய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் தலைவர் ஜனாப் முஹ‌ம்ம‌து சாலிஹ் தலைமை வ‌கித்தார். முன்ன‌தாக‌ முஹ‌ம்ம‌து சாலிஹ் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.

ஜனாப் எம். சைய‌து அபூதாகிர் வரவேற்புரை நல்கினார். ஜனாப் பைசல் அஹ்ம‌த் அமைப்பின் செயல்பாட்டினை தொகுத்து வழங்கினார்.

கீழக்கரை ஜமாஅத் நிர்வாகி ஜனாப் ஹமீத் யாஸீன்,ஐக்கிய‌ முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செய‌லாள‌ர் ஜனாப் கே. முஹ‌ம்ம‌து ஹிதாயத்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்கின‌ர்.

திருக்குர்ஆன் ஆய்வாள‌ர் ஜனாப் காஞ்சி அப்துல் ர‌வூப் பாக்கவி அவ‌ர்க‌ள் த‌ன‌து சிற‌ப்புரையில் இஸ்லாமிய‌ வ‌ங்கி முறையினைப் பின்ப‌ற்றி க‌ட‌ன் உள்ளிட்ட‌வ‌ற்றை மேற்கொண்டு வ‌ருவ‌த‌ற்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ப் பேச்சாள‌ர் ம‌வ்ல‌வி ஜஹாங்கீகீர் அரூஸி அவ‌ர்க‌ள் த‌ன‌து சிற‌ப்புரையில் பொதுந‌ல‌நோக்குட‌ன் செய‌லாற்றி வ‌ரும் அற‌ந்தாங்கி இஸ்லாமிய‌ ச‌மூக‌ ந‌ல‌ இய‌க்க‌த்தின‌ரைப் பாராட்டினார்.

அமைப்பின் பொருளாளர் ஜ‌னாப் அபூதாகிர் தொகுத்து வழங்க, ஜனாப் கலந்தர் மைதீன் நன்றி உரை வழங்க, விழா இனிதே முடிவடைந்தது


Warm Regards,

FAISAL AHMAD.S.A
M/S SHAHEEN EXCHANGE LLC,
UNITED ARAB EMIRATES,
DUBAI, DEIRA, NAIF ROAD,
POST BOX NO. 28478,
TEL NO. 9714 2266488,
MOB NO. 97150 6579841,
Alternate Email. fasa@india.com

Tuesday, May 19, 2009

துபாயில் எமிரேட்ஸ் இந்தியா பிரடெர்னிடி பாரம் நடத்திய வெளிநாடு வாழ் இந்தியர்க்கான கருத்தரங்கு





துபாயில் எமிரேட்ஸ் இந்தியா பிரடெர்னிடி பாரம் நடத்திய வெளிநாடு வாழ் இந்தியர்க்கான கருத்தரங்கில் ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத்

நாள் : 15 மே 2009
லேண்ட்மார்க் ஹோட்டல்
தேரா,துபாய்

துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )

துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )

துபாயில் வாரந்தோறும் புதன்கிழமை அஸ்கான் டி பிளாக்கில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

20.05.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்கள்

கல்வி ஒன்றே வாழ்வின் ஒளிவிளக்கு
எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை செய்துள்ளது.

கோட்டைப் பள்ளி

21.05.2009 வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் பிரதி வார ஸஹீஹுல் புஹாரி அல் ஹதீஸ் விளக்கவுரை மஜ்லிஸ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்களும், கீழக்கரை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஆகியவை செய்துள்ளன.

துபாயில் நடைபெறும் சமுதாய நிகழ்வுகளின் தொகுப்புகளை www.tamilislamicaudio.com எனும் இணையத்தளத்தில் காணலாம்.

குறிப்பு : ரமலான் மாத உம்ரா செய்ய விரும்புவோர் 050 467 6618 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, May 8, 2009

துபாய் க‌ல்விக் க‌ண்காட்சியில் சென்னை பி.எஸ். அப்துல் ர‌ஹ்மான் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம்





துபாய் க‌ல்விக் க‌ண்காட்சியில் சென்னை பி.எஸ். அப்துல் ர‌ஹ்மான் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம்

துபாய் க‌ல்விக் க‌ண்காட்சியில் திருச்சி அண்ணா பல்க‌லைக்க‌ழ‌க‌ம்



துபாய் க‌ல்விக் க‌ண்காட்சியில் திருச்சி அண்ணா பல்க‌லைக்க‌ழ‌க‌ம்

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள்


துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள்

துபாயில் தேரிழ‌ந்தூர் ஜ‌மாஅத் ந‌ட‌த்திய‌ க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கு




துபாயில் தேரிழ‌ந்தூர் ஜ‌மாஅத் ந‌ட‌த்திய‌ க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கு

துபாயில் தேரிழ‌ந்தூர் ஜ‌மாஅத் ந‌ட‌த்திய‌ க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கில் எஸ்.எம். இதாய‌த்துல்லா, அல்ஹாஜ் செய்ய‌து அப்துல் காத‌ர் ( சினா தானா )