Showing posts with label க‌விதை. Show all posts
Showing posts with label க‌விதை. Show all posts

Monday, July 13, 2009

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் சிற‌ப்பித‌ழ் வெளியீடு

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் சிற‌ப்பித‌ழ் வெளியீடு

துபாய் : துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் 'கோடையும் வாடையும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புக் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் த‌மிழ்த்தேர் சிற‌ப்பித‌ழ் வெளியீடு 10.07.2009 வெள்ளிக்கிழ‌மை காலை க‌ராமா சிவ் ஸ்டார் ப‌வ‌னில் ந‌டைபெற்ற‌து.

கோடையும் வாடையும் என்ற‌ சிற‌ப்பு க‌விதை நிக‌ழ்ச்சியின் ந‌டுவ‌ர்க‌ளாக‌ திருப்ப‌த்தூர் அப்துல் வாஹித், ப‌ழ‌னி ஆகியோர் இருந்த‌ன‌ர். க‌விஞ‌ர்க‌ள் சிம்ம‌ பார‌தி, ஜியா, ச‌ந்திர‌சேக‌ர், க‌மால், ந‌ர்கிஸ், ம‌லிக்கா, நிலாவ‌ண்ண‌ன், அமுதா ப‌த்ம‌நாப‌ன், ஜெயா ப‌ழ‌னி, வேலூர் க‌ந்த‌நாத‌ன், கிளிய‌னூர் இஸ்ம‌த், ராஜா க‌மால் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌விதை வாசித்த‌ன‌ர்.

அத‌னைத் தொட‌ர்ந்து த‌மிழ்த்தேர் சிற‌ப்பித‌ழ் வெளியீடு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்ச்சியின் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ டாக்ட‌ர் சுப்புல‌ட்சுமி பாலா, க‌ராமா மெடிக்க‌ல் சென்ட‌ர் டாக்ட‌ர் ச‌ம்ப‌த் குமார், முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளி ஓய்வுபெற்ற‌ ஆசிரியை அப‌ர‌ஞ்சி உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

த‌மிழ்த்தேர் இத‌ழை டாக்ட‌ர் சுப்புல‌ட்சுமி பாலா வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை உத‌ய‌குமார் பெற்றுக்கொண்டார்.

சிற‌ப்புவிருந்தின‌ர்க‌ள் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்கியும் கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ள் குறித்த‌ அறிமுக‌த்தை க‌லைய‌ன்ப‌ன் ம‌ற்றும் முதுவை ஹிதாய‌த் ஆகியோர் செய்த‌ன‌ர்.

க‌விஞ‌ர் நிலாவ‌ண்ண‌ன் தாய‌க‌ம் செல்வ‌தையொட்டி அவ‌ருக்கு பிரியாவிடை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. அவ‌ருக்கு நினைவுப் ப‌ரிசும் வ‌ழ‌ங்கப்ப‌ட்ட‌து. அத‌னைத்தொட‌ர்ந்து அவ‌ர் ஏற்புரை நிக‌ழ்த்தினார்.
செயலாள‌ர் ச‌ந்திர‌சேக‌ர் ந‌ன்றி கூறினார். நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ஜியாவுத்தின், சிம்ம‌பார‌தி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ஏற்பாடு செய்த‌ன‌ர்.













Tuesday, December 30, 2008

பாலஸ்தீன பாலகனே

பாலஸ்தீன பாலகனே

நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால்

நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை

நெஞ்சில் சுமக்கிறாய்.

நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து



எத்துனை வேதனை நீ ஏற்றாயோ

என்னாள் குமுற இயலவில்லை

உன் நெந்சம் துளைத்த ரவைகள்

எம் இதயமும் தொலைத்ததடா



காயத்தின் வேதனையில் நீ உயிர் துறந்தாய்

காலம் உனக்கு விடை தந்து விட்டது

காயம் உனது ஆறி விட்டது

இதயமோ எமது?



படை பட்டாளங்களுக்கு முன்னால்

பாலஸ்தீனனை உன்னால் எறியப்படும்

கற்கள் எம்மாத்திரம் என நினைத்திருந்தேன்

கண்டு கொண்டு விட்டேன் உண்மையை



ஷைத்தானை கல்லால்தான் அடிக்க வேண்டும்

சுவனத்தின் சொந்தகாரனே

ஷஹிதாகி சாய்ந்தவனே

சின்னஞ்சிறு பாலகனே



உன் மரண செய்தி கேட்டு

அன்னை உனது இங்கு

இன்னும் இருந்திருந்தால்

எப்படி துடித்திருப்பாளோ



இன்னும் அதிகமாய் இந்த

இஸ்லாம் சமுதாயம் துடிக்கிறது

இம்மை துறந்த இலவளே

என்றாவது சந்திப்போம்

இல்லை, இல்லை

சுவனத்தில் சந்திப்போம்



முதுவை சல்மான், ரியாத்

Friday, December 12, 2008

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் நிக‌ழ்ச்சி - விதைக‌ள் க‌விதைத் தொகுப்பு வெளியீடு

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் நிக‌ழ்ச்சி - விதைக‌ள் க‌விதைத் தொகுப்பு வெளியீடு

துபாயில் த‌மிழ்க் க‌விஞர்க‌ளை ஒருங்கிணைத்து செய‌ல்ப‌ட்டு வ‌ரும் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் மாதாந்திர ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி க‌ராமா சிவ் ஸ்டார் ப‌வ‌ன் உண‌வ‌க‌த்தில் 12.12.2008 வெள்ளிக்கிழ‌மை காலை ந‌டைபெற்ற‌து.

வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் நிர்வாகி காவிரி மைந்த‌ன் த‌லைமை வ‌கித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமை உரையில் 31வ‌து மாத‌மாக‌ இக்க‌விதை நிக‌ழ்வு துபாயில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தாக‌க் குறிப்பிட்டார். இத்தகைய‌ நிக‌ழ்விற்கு ஆத‌ர‌வு ந‌ல்கி வ‌ரும் புர‌வ‌ல‌ர் கோவிந்த‌ராசு உள்ளிட்டோருக்கும், த‌மிழ‌க‌ ஊட‌க‌ங்க‌ளுக்கும் பாராட்டும், ந‌ன்றியும் தெரிவித்தார். எதிர்வ்ரும் ஏப்ர‌ல் 2009 ல் ந‌டைபெற‌ இருக்கும் ஆண்டு விழாவில் ஒரே நேர‌த்தில் ப‌தினொரு க‌விஞர்க‌ளின் ப‌டைப்புக‌ள் நூலாக‌ வெளியிட‌ப்ப‌ட‌ இருப்ப‌தாக‌ தெரிவித்தார்.

வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் ஊக்க‌த்தின் கார‌ண‌மாக‌ க‌விஞர் பால்ராஜ் ஒரே வார‌த்தில் 80க்கும் மேற்ப‌ட்ட‌ க‌விதைக‌ளைப் ப‌டைத்துள்ளார். இதுபோல் அமீர‌க‌த்தில் உள்ள‌ க‌விஞர்க‌ள் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பினை த‌ள‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி த‌ங்க‌ள‌து க‌வித்திற‌னை வெளிப்ப‌டுத்த‌ கேட்டுக் கொண்டார்.

இம்மாத‌ த‌லைப்பான‌ விதைக‌ள் எனும் த‌லைப்பில் நடைபெற்ற‌ க‌விதை நிக‌ழ்விற்கு அதிரை இளைய‌ சாகுல் ம‌ற்றும் ஜியாவுத்தீன் ஆகியோர் ந‌டுவ‌ர்க‌ளாக‌ செய‌ல்ப‌ட்ட‌ன‌ர்.

விதைக‌ள் எனும் த‌லைப்பில் க‌விஞர்க‌ள் திருச்சி சைய‌து, காவிரிமைந்த‌ன், க‌லைய‌ன்ப‌ன் க‌லாம், அபுமைமூனா, ஜெய‌ராம‌ன் ஆன‌ந்தி, அத்தாவுல்லாஹ், சிம்ம‌பார‌தி, ச‌ந்திர‌சேக‌ர், நாக‌ராஜ‌ன், பால்ராஜ், நில‌வ‌ன், ச‌ஞ்சீவி ர‌வி, முத்துப்பேட்டை ச‌ர்புதீன் உள்ளிட்ட‌ க‌விதைப் ப‌ட்டாள‌ம் க‌விதை வாசித்த‌ன‌ர்.

அத‌னைத்தொட‌ர்ந்து விதைக‌ள் க‌விதைத் தொகுப்பு த‌மிழ்த்தேர் எனும் பெய‌ரில் க‌விஞர் இஸ்ஹாக் வெளியிட‌ முத‌ல் பிர‌தியை பாத்திமா ஹ‌மீத் பெற்றுக்கொண்டார்.

தாய‌க‌ம் செல்லும் க‌விஞர் இஸ்ஹாக்கிற்கு நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. துபாய் ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சி இய‌க்குந‌ர் க‌லைய‌ன்ப‌ன் ர‌ஃபீக் க‌விஞர்க‌ள் க‌விதையை சிற‌ந்த‌ க‌வித்திற‌னுட‌ன் வெளிப்ப‌டுத்த‌ கேட்டுக் கொண்டார்.

சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொண்ட‌ 18 க‌விதை நூல்க‌ளைப் ப‌டைத்த‌ இல‌ங்கைக் க‌விஞர் ஜின்னாஹ் ஷ‌ர்புத்தீன் த‌ன‌து உரையில் அமீர‌க்த்தில் க‌விஞர்க‌ளின் திற‌னை வெளிப்ப‌டுத்த‌ செய‌ல்ப‌ட்டு வ‌ரும் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பு மிக‌ச் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருவ‌த‌ற்கு பாராட்டு தெரிவித்தார். கால் நூற்றாண்டுக்கால‌ம் இல‌ங்கையில் இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ நிர்வாகியாக‌ செய‌ல்ப‌ட்டுவ‌ரும் த‌ன்னால் சாதிக்க‌ முடியாத‌தை க‌ட‌ல்கட‌ந்து அமீர‌க‌ ம‌ண்ணில் சாதித்து வ‌ருவ‌த‌ற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் த‌னித்த‌மிழில் அனைவ‌ரும் உரையாடி வ‌ருவ‌து மிக‌வும் ம‌கிழ்வை ஏற்ப‌டுத்தி வ‌ருகிற‌து. க‌விதையினை இல‌க்க‌ண‌ ந‌டையில் முறையாக‌ அனைவ‌ரும் எழுத‌ ப‌ழ‌கிக் கொள்ள‌ வேண்டும். அத‌ற்காக‌ தான் பாட‌ம் ந‌ட‌த்த‌வும் தயாராய் இருப்ப‌தாக‌வும் தெரிவித்தார்.

அத‌னைத் தொட‌ர்ந்து பால்ராஜ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உரை நிக‌ழ்த்தின‌ர். க‌விஞர் சிம்ம‌பார‌தி ந‌ன்றியுரைத் தொட‌ர்ந்து விருந்த‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து. வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்புட‌ன் தொட‌ர்பு கொள்ள‌ விரும்புவோர் அத‌ன் செய‌லாள‌ர் ச‌ந்திர‌சேக‌ரை 050 874 3990 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌ கொள்ள‌லாம்.
இ மெயில் : reachsimma@gmail.com