காமராஜர் என்றொரு அரசியல்வாதி!
நான் பிறக்குமுன்பே இறந்துபோன
காமராஜரைப் பற்றித்தான்
இன்றுகூட என் அப்பா
பெருமை பேசிப்பேசி
மாய்கிறார்!
ஒரு பினாமி இல்லை
புறம்போக்கு நிலமுமில்லை
பள்ளி கல்லூரி
எதுவுமில்லை
பட்டாசு கொளுத்திப் போடக்கூட
பட்டாளமில்லை!
பிறகெப்படி நம்புவேன்
இவர் அரசியல்வாதியென்று!
இவர் படிக்காத மேதையாம்!
அரசியலிலிருந்தும்
ஒரு டிகிரி கூட 'வாங்க'த் தெரியாத
இவர் அரசியலில் பேதையென்பேன்!
மதிய உணவு கொடுத்து
பள்ளிக்கு அழைத்தாராமே பிள்ளைகளை?
படிக்காத கூட்டமிருக்கும்வரையே
பதவி நிலைக்குமென்ற
அரிச்சுவடி கூட தெரியாத
இவரெல்லாமா அரசியல்வாதி?!
ஒருமுறை கூட
திருமணமாகவில்லை
வாரிசும் இல்லை
சொத்துமில்லை, பத்துமில்லை
சொந்தபந்தத்திற்கு
ஒரு பதவியுமில்லை!
இவரைப் போய்
"கிங் மேக்கர்" என்கிறார்கள்!
இன்றோ
இவர் ஆட்சியை அமைக்க
கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லை
கொள்கையைப் பின்பற்றத்தான்
எவருமில்லை!
இவரணிந்த கதராடையை,
பாதயாத்திரை பக்தர்களின்
சீருடைபோல்
அவ்வப்போது மட்டுமே அணிகிறார்கள்
அடையாளத்திற்கு!
என் அப்பாவிடம் சொன்னேன்
இவர் அன்று
ஒருமுறைதான் தோற்றார்...
இன்றுவரை இருந்திருந்தால்
எல்லாத் தேர்தல்களிலும்
சொல்லிவைத்தாற்போல்
தோற்றுக்கொண்டே இருந்திருப்பார்!
விருந்து வைக்கத்தெரிந்தும்
'மருந்து' வைக்கத் தெரியாத
இவர் அரசியல்வாதியல்ல,
அரசியல் அப்பாவி!
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label அரசியல்வாதி. Show all posts
Showing posts with label அரசியல்வாதி. Show all posts
Sunday, July 18, 2010
Sunday, December 7, 2008
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி
http://thatstamil.oneindia.in/news/2008/12/08/lanka-india-wont-listen-to-political-jokers-in-tn.html
திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 9:37 இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: தமிழகத்தில் உள்ள அரசியல் கோமாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா திமிராக பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும் போக்கை தடுத்து நிறுத்துமாறு கோரி வருவதை அவமதிக்கும் வகையில் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரை நிறுத்துமாறு ஒருபோதும் இந்தியா கூறாது என நம்புகிறேன். விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கும் ஆபத்து உள்ளது.
இதை உணர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கோமாளிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு, இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன். விடுதலைப்புலிகளை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்களின் பேச்சை இந்திய அரசு மதிக்காது என நம்புகிறேன்.
விடுதலைப் புலிகள் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவில் பிரச்சினைகளைக் கொடுத்தவர்கள். எனவே இவர்களால் இந்தியாவுக்கு எந்த வகையிலும் லாபம் இருக்க முடியாது. மாறாக ஆபத்துதான் அதிகம்.
ராணுவ நடவடிக்கையின்போது உயிரிழப்பு நேரிடாமல் ராணுவம் கவனத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், இலங்கை பாதுகாப்புப் படையினர் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டால், நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் நின்று போய் விடும் என்ற அச்சம்.
இந்த நேரத்திலாவது அவர்கள் உண்மையை உணர வேண்டும். விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயல்வது வீண் என்பதை அவர்கள் உணர வேண்டும். விடுதலைப் புலிகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இன்னும் முக்கியமாக, விடுதலைப் புலிகள் பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம், அதில் தலையிடுவது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்பதையும் அவர்கள் உணர் வேண்டும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி
இதற்கிடையே, முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன.
சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர்.
பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார்.
http://thatstamil.oneindia.in/news/2008/12/08/lanka-india-wont-listen-to-political-jokers-in-tn.html
திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 9:37 இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: தமிழகத்தில் உள்ள அரசியல் கோமாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா திமிராக பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும் போக்கை தடுத்து நிறுத்துமாறு கோரி வருவதை அவமதிக்கும் வகையில் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரை நிறுத்துமாறு ஒருபோதும் இந்தியா கூறாது என நம்புகிறேன். விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கும் ஆபத்து உள்ளது.
இதை உணர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கோமாளிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு, இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன். விடுதலைப்புலிகளை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்களின் பேச்சை இந்திய அரசு மதிக்காது என நம்புகிறேன்.
விடுதலைப் புலிகள் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவில் பிரச்சினைகளைக் கொடுத்தவர்கள். எனவே இவர்களால் இந்தியாவுக்கு எந்த வகையிலும் லாபம் இருக்க முடியாது. மாறாக ஆபத்துதான் அதிகம்.
ராணுவ நடவடிக்கையின்போது உயிரிழப்பு நேரிடாமல் ராணுவம் கவனத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், இலங்கை பாதுகாப்புப் படையினர் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டால், நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் நின்று போய் விடும் என்ற அச்சம்.
இந்த நேரத்திலாவது அவர்கள் உண்மையை உணர வேண்டும். விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயல்வது வீண் என்பதை அவர்கள் உணர வேண்டும். விடுதலைப் புலிகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இன்னும் முக்கியமாக, விடுதலைப் புலிகள் பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம், அதில் தலையிடுவது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்பதையும் அவர்கள் உணர் வேண்டும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி
இதற்கிடையே, முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன.
சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர்.
பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார்.
Subscribe to:
Posts (Atom)