Sunday, April 19, 2009

புத்தகங்களை நேசிப்போம்... வாசிப்போம்

புத்தகங்களை நேசிப்போம்... வாசிப்போம்

ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’’

ஹென்றி வார்ட் பீச்சர் (Decoration of the heart)

தனிமைத் தீவில் ஒரு வருடம் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு.

‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல்.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார். பெண் விடுதலைக்கான ஒற்றைவரி தீர்வாக ‘என் மவுனம் நான் வாசித்த புத்தகங்களின் சாரத்தால் ஆனது’ என்ற ஹெலன் கெல்லர் தனது வாய் பேச முடியாத மவுனத்தை வர்ணித்தார்.

‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரி ஏழு நாள் உண்ணாநோன்பிருந்து வென்றார் 29 வருடங்களாக சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா.

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே பெரியது. ஒரு கோடியே நாற்பது லட்சம் நூல்கள்! 150 மொழிகளில் புத்தகங்களை லெனின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றாராம்!

குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம். ஊரை விட்டும் இனத்தை விட்டும் முப்பதாண்டு தள்ளி வைக்கப்பட்டு வேறு பெயரில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டபோது பார்த்த வேலை நூலக உதவியாளர் வேலை!

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அப்போதைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா.

துப்பாக்கிகளைவிட பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங்.

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் சில முகவரிகளைக் கொடுத்தபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

புத்தகங்களை நேசிப்போம்... வாசிப்போம்.

பின்னடைவால் பிரச்னையா?

பின்னடைவால் பிரச்னையா?

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதனால் - வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள்.

சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான்.

வேலை இழந்தவர்கள், வேறு வேலை தேடி அது கிடைக்காமல் போகும் போது அவர்களிடம் தற்கொலை சிந்தனை தலை தூக்குகிறது.

பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிப்பவர்களுக்கு - இதோ இஸ்லாமிய ஆலோசனைகள்!

மனித வாழ்வில் சோதனைகள் தவிர்க்க முடியாதவை. பொருளாதாரப் பின்னடைவும் ஒரு சோதனையே.

"சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள், ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும், நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். என்றாலும் பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (திருக் குர்ஆன் 2: 155).

ஆனால் -

"அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை". (திருக் குர்ஆன் 2: 286).

எனவே கவலையை விடுங்கள்!

சோதனைகள் தற்காலிகமானவையே!

"நிச்சயமாக துன்பத்துடன் இன்பமுண்டு. மெய்யாகவே துன்பத்துடன் இன்பமுமுண்டு". (திருக் குர்ஆன் 94: 5-6).

எனவே இத்துன்பத்திலிருந்து மீண்டு விட முடியும் என்று உறுதியாக நம்புங்கள்.

"ஏன் இந்த சோதனை நமக்கு?" என்று சிந்தியுங்கள்.. இறைவனுக்கு நன்றி செலுத்தத் தவறி விட்டோமா - என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இறைவன் கூறுகிறான்:

"நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகப்படுத்துவேன்" (திருக் குர்ஆன் 14: 7)

இறைவனுக்கு எப்படி நன்றி செலுத்துவது? இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டு நடப்பது தான் அவனுக்கு நன்றி செலுத்துவது ஆகும்!

எனவே -

"ஏதாவது பாவமான காரியங்களில் ஈடுபட்டு விட்டோமா?" என்று பாருங்கள். அது வட்டியா அல்லது ஏதேனும் (இறைவன் தடுத்துள்ள) "ஹராமா" என்று பாருங்கள். ஆம் எனில் - அந்தப் பாவங்களில் இருந்து விலகிட் முயற்சி செய்யுங்கள்.

தடாலடி நடவடிக்கை வேண்டாம். ஆர அமர சிந்தித்து முடிவெடுங்கள்.

பிரச்னைகளில் இருந்து வெளியே வர இரண்டு வழிகள்: ஒன்று நேரான வழி. மற்றொன்று குறுக்கு வழி. குறுக்கு வழி இலகுவானது போல் தோன்றும். நேர் வழி "சுற்று வழி" போல் தோன்றும்.

குறுக்கு வழிகளை நாடாதீர்கள். யாரேனும் அதற்கு ஆலோசனை சொன்னால் - உடன் உங்கள் நினைவுக்கு வர வேண்டியவன் நமது ஆதி பெற்றோர் ஆதம்- ஹவ்வா (அலை) இருவருக்கும் முன்னால் வந்தானே அவன் தான்!

ஆனால், நேர் வழியில் நிலைத்திருந்தால் இறைவன் உங்களைக் கை விட்டு விடுவானா என்ன?

"எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

"எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்கி விடுகின்றான். (திருக் குர்ஆன் 65: 4)

அடுத்து - உங்கள் நலம் நாடும் சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

"அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள். (திருக் குர்ஆன் : 42: 38)

உங்களைக் குத்திக் காட்டுபவர்கள், உங்களின் நலனில் அக்கரை சிறிதும் இல்லாத அறிவீனர்களைப் புறக்கணியுங்கள்..

"இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! (திருக் குர்ஆன் 7: 199)

தேவையற்ற ஆடம்பரப் பொருட்களில் முதலீடு செய்திருந்தால் அவைகளை விற்று விட முயற்சி செய்யுங்கள். விலை உயர்ந்த காராக இருந்தால் விற்று விட்டு விலை குறைந்த கார் அல்லது மோட்டார் சைக்கிள் என்று மாறிக் கொள்ளுங்கள். இதில் கவுரவம் பார்க்கத் தேவையில்லை.

உங்கள் கடனை அடைப்பது குறித்து திட்டமிடுங்கள். கடன் கொடுத்தவர்களையே அணுகுங்கள். ஒத்துழைப்பு கிட்டலாம். இல்லாவிட்டால் சட்ட ஆலோசகர்களை அணுகவும்.

ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடன் பக்கம் செல்லாதீர்கள். சான்றாக நகைக் கடன். வட்டிக்கு வைத்து நகைக் கடன் வாங்குவதை விட அவைகளை விற்று விடுதல் மேல். பிறகு வாங்கிக் கொள்ளலாம் - இன்ஷா அல்லாஹ். கடன்களை அடைத்திட முனைப்பு காட்டுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். கடன் கொடுத்தவர் அதனை மன்னிக்காமல் இறைவன் அதனை மன்னிப்பதில்லை என்பதனை நினைவில் நிறுத்துங்கள்.

தேவையற்ற செலவுகளைக் குறையுங்கள். குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஆளுக்கு ஒரு செல்ஃபோனா, அறைக்கு ஒரு தொலைக் காட்சிப் பெட்டியா - வேண்டாம்!

"அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்".(திருக் குர்ஆன் 17:26)

அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்தியுங்கள்.

முதலில் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோருங்கள். அவனிடம் உதவி தேடி துஆ செய்யுங்கள். ஐந்து வேளையும் நேரம் தவறாது தொழுகைக்குச் செல்லுங்கள்.

"நம்பிக்கையாளர்களே! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கிறான்". (திருக் குர்ஆன் 2:153)

ஏற்கனவே நீங்கள் செய்த வேலை உங்கள் மனதுக்குப் பிடித்திருந்ததா? அவ்வாறு பிடித்திருந்தால் மட்டும் அதே துறையில் வேறு வேலை தேடுங்கள். இல்லாவிட்டால் - பொருளாதாரப் பின்னடைவே உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்திருப்பதாக எடுத்துக் கொண்டு உங்களுக்குப் பிடித்த வேறு துறைகளில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.

உங்களை நீங்களே எடை போடவும் இந்த தருணம் ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. உங்களின் பலம் எது, பலவீனங்கள் என்னென்ன என்பதை சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் வேலை செய்து கொண்டிருந்த துறை சாராத உங்கள் பலங்களைக் கண்டுணர இதுவே வாய்ப்பு. அது போல, உங்கள் பலவீனங்களை உதறிடவும் முயற்சி செய்யுங்கள்.

வாய்ப்புகளைத் தேடிக் காத்திருங்கள். அதற்கென என்னேரமும் தயாராகக் காத்திருங்கள். தயார் நிலையில் இருப்பவர்களே வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்கின்றனர். நாள்தோறும் நாட்டு நடப்புகளை உலக நிகழ்வுகளை குறிப்பாக உங்கள் துறை குறித்த தகவல்களை சேகரிக்கத் தவறாதீர்கள். ("அடடா! எனக்குத் தெரியாமப் போச்சே!")

ஒரே ஒரு முனையில் மட்டும் முயற்சி செய்தால் போதாது. பல முனை முயற்சிகள் தேவைப் படலாம். அவற்றுள் ஏதாவது ஒன்று நிச்சயம் "க்ளிக்" ஆகும் - இன்ஷா அல்லாஹ்.

தாழ்வு மனப்பான்மை வேண்டவே வேண்டாம். எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் நிராசை அடைந்து விடாதீர்கள். இது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

"அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்!" (திருக் குர்ஆன் 39:53)

அதிக கவலை உடல் நலத்தையும் கெடுக்கும். எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஒரு அறிஞர் சொன்னார்: பிரச்னைக்கு தீர்வு இருக்கிறது என்றால் பிறகு ஏன் கவலைப் பட வேண்டும். பிரச்னை தீராது என்றால் கவலைப் பட்டு என்ன பயன்? எனவே விடுங்கள் கவலையை!

ஆனால், இது போன்ற தருணங்களில் பெரும்பாலான மனிதர்கள் உணர்ச்சி வசப் பட்டு விடுகிறார்கள். தங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் எரிந்து விழுந்து நல்ல மனிதர்களின் உறவுகளைக் கெடுத்துக் கொள்கிறார்கள். எனவே உணர்ச்சி வசப் பட வேண்டாம்.

இந்த இடத்தில் பிரச்னைகளில் சிக்கியுள்ளவர்களைச் சுற்றியிருப்பவகளுக்கும் சில ஆலோசனைகள்:

மனைவிமார்களே!

இந்த நேரத்தில் உங்கள் கணவருக்கு உற்ற துணையாக இருங்கள். கவலையுற்றிருக்கும் உங்கள் கணவரை உற்சாகப் படுத்துங்கள். அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எவ்வாறு நபியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் உற்ற மனைவியாகத் திகழ்ந்தார்களோ அது போல் நீங்களும் நடந்து கொள்ளுங்கள். நச்சரிக்காதீர்கள்.. செலவினங்களைக் கட்டுப் படுத்தல் உங்கள் கரங்களில் தான் இருக்கிறது, புதிய
நகைகள் பிறகு செய்து கொள்ளலாம். கணவருக்குத் தெரியாமல் சேமித்து வைத்திருப்பீர்களே, அதை எடுத்துக் கொடுத்தால் அவருக்கு எப்படி இருக்கும்?

பெற்றோர்களே!

தைரியம் ஊட்டுங்கள் உங்கள் மகனுக்கு. அவசிய செலவுகளைத் தவிர்த்து இதர செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள் அல்லது குறைக்கப் பாருங்கள். ("தம்பி, மச்சான் வந்திருக்காக,. ரெண்டு கிலோ கறி வாங்கிட்டு வாயேன், பிரியாணி போடலாம்!")

வளர்ந்து விட்ட மகன்களே- மகள்களே - உங்களைத்தான்!

உங்கள் தந்தை வசதிக்குத் தகுந்தவாறு பாக்கெட்-மணி தந்திருப்பார்கள். ஒரே ஒரு விடுமுறை நாளைக் கழிப்பதற்காக தம் செல்லச் செல்வங்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்கும் தந்தைமார்களும் உண்டு. இப்போது உங்கள் தந்தை விழி பிதுங்கிய நிலையில். நீங்கள் என்ன செய்யலாம்? பாக்கெட் மணி வேண்டாம். அவராகக் கொடுத்தாலும் மறுத்து விடுங்களேன். உங்கள் பாசம் அவர் கவலை போக்கும்
மறுந்தாக அமைந்திடும்.

உறவினர்களே!

உங்களைப் பற்றித் தான் பயமாக இருக்கிறது. குத்திக் காட்டுபவர்கள், உள்ளூர மகிழ்ச்சி அடைபவர்கள் பெரும்பாலும் நீங்களாகத் தான் இருக்கிறீர்கள். ஒரு உறவினர்: "அண்ணே! ச்சீப்பா வந்ததுண்ணேன், ஒரு நாலு மனைக்கட்டு (Plots) வாங்கிப் போடலாம்னு, இந்தப் பத்திரத்தைக் கொஞ்சம் படிச்சுப் பாத்துச் சொல்லுங்கண்ணேன்!"

பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப் பட்டிருக்கும் என்னருமைச் சகோதரர்களே! வேலையும் போய் விட்டது, சேமிப்புகளும் சுருங்கி விட்டது. அடுத்து என்ன செய்வது என்று தானே கேட்கிறீர்கள்.

வெறுங்கையுடன் மக்காவைத் துறந்து மதீனா சென்ற அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் பாருங்கள். அங்கே அவருக்கு உதவிட முன் வந்த அன்ஸாரித் தோழரிடம் எதுவும் பெற்றுக் கொள்ளாமலேயே, வெறும் சாக்குப் பையுடன் கடைத்தெருவுக்கு சென்று, சிறிய அளவில் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி (வெண்ணெய் வியாபாரம் தான்!) பின்னர் - ஒரு பத்து ஆண்டுகளுக்குள்ளேயே மிகப்பெரிய
ஏற்றுமதியாளராகவும், இறக்குமதியாளராகவும் வெற்றி பெற்ற ஒரு வணிகராகத் திகழ்ந்தது உங்கள் சிந்தனைக் கதவுகளைத் திறந்து விடட்டும்.

இந்த வரலாற்றில் உங்களுக்கு மூன்று படிப்பினைகள் உண்டு:

1. வெறுங்கையுடன் கூட நீங்கள் உங்கள் "மறு வாழ்வைத்" துவக்கலாம். கவலை வேண்டாம்.

2. நீங்கள் பணியாற்றிய இடத்தை மாற்றிப் பாருங்கள். ஹிஜ்ரத் வெற்றி தரலாம்.

3. நீங்கள் கம்பெனி கம்பெனியாக வேலை தேடித் தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வியாபாரத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், தக்க ஒரு துணையுடன் துணிந்து இறங்கிப் பார்க்கலாம். சிறிய அளவில் துவங்குவது நல்லது. வியாபாரத்தில் நேர்மையும், தரமும் அவசியம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் இங்கே வலியுறுத்துவது என்னவெனில் - இவ்வுலக வாழ்க்கை அற்பமானது என்பதனை மறந்து விட வேண்டாம். பொருள் மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்! மறுமைக்குக் கொஞ்சம் சேர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.. போதும் என்ற மனம் முக்கியம்.

இக்கட்டான சூழ்நிலைகளிலும் - தர்மம் செய்யுங்கள். அது உங்களின் விதியை மாற்றிட வல்லது.

இதனைப் படிப்பவர்களுடன் சேர்ந்து நாமும் உங்களுக்காக துஆ செய்கிறோம்.

நீங்களும் துஆ செய்யுங்கள்:

"என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்க பலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!" ((திருக் குர்ஆன் 17: 80)


.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆசாத்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆசாத்

நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.

ஆசாத் அவர்கள்தான் தேசக் கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை
1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார். அனைத்துக் கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார்.

10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர். 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.

1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (இண்டியா வின்ஸ் பிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.

முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்தபோது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.

உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.

1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.

அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.

- ஆதாரம்: (www.moulanaazad.blogspot.com)

ராஜகிரி கஸ்ஸாலி

அச்சப்பட வேண்டாம்... ஐ.டி.படிக்கலாம்!

அச்சப்பட வேண்டாம்... ஐ.டி.படிக்கலாம்!



பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அநேக மாணவர்கள் சந்திக்கும் கேள்வி, 'அடுத்து என்ன படிக்கப்போகிறாய்...?' என்பதுதான். கடந்த ஆண்டுவரையில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டவர்கள் தெளிந்த முகத்தோடு, 'ஐ.டி. தான்!' என்றார்கள். ஆனால், இந்த ஆண்டு, அந்த வார்த்தைகள் சிறு தயக்கத்துக்குப் பிறகு வருகிறது, அல்லது 'தெரியலை...' என்பதாக இருக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியால் ஐ.டி. துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு மாணவர்களைக் கொஞ்சம் திகைக்க வைத்திருக்கிறது. 'எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்... மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மாதிரி ஏதாவது மாறிடலாமா..?' என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் மாணவர்கள் பலரும்.

''எல்லாத் துறையிலும் ஆள் குறைப்பு, வேலை வாய்ப்பு இல்லாத நிலை எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கிளாமர் துறையான ஐ.டி-யில் ஆள்குறைப்பு நடந்தாலோ, வேலையிழப்பு ஏற்பட்டாலோ உடனே பெரிய நியூஸ் ஆகிடுது! உலகத்தில் எத்தனையோ பேர் டைவர்ஸ் பண்றாங்க... அதுபற்றி யாரும் விவாதம் செய்வதில்லை. சினிமாக்காரர்கள் டைவர்ஸ் பண்ணினா, உடனே உலகம் முழுக்கத் தெரியற மாதிரி நடந்திருக்கும் விஷயம் இது'' என்று இன்றைய சூழல் பற்றிப் பேச ஆரம்பித்தார் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.

''பொருளாதார மந்தநிலையால் அனைத்து நாடுகளுமே பாதிப்படைந்துள்ளன. ஆனால், மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவும் சீனாவும் அடைந்த பாதிப்பு குறைவுதான். அதோடு, இந்த பாதிப்பு ஒரு தற்காலிகமான சூழல்தான். 1999-2000-ல் டாட் காம் பிரச்னை வந்தபோது ஐ.டி. துறை பெரும் சரிவைக் கண்டது. ஆனால், விழுந்த வேகத்திலேயே எழுந்து 2003-ம் ஆண்டுக்குப் பிறகு உற்சாகமாக மேல்நோக்கிச் செல்லத் தொடங்கியது. அதிலும் 2005, 2006-ம் ஆண்டுகளில் அதன் உச்சத்தை அடைந்தது. இதேபோல, மீண்டும் எழுச்சி ஏற்படத்தான் செய்யும். இந்தச் சுழற்சி நடந்துகொண்டுதான் இருக்கும். இந்த ஆண்டு ஐ.டி-யில் சேரலாமா என்ற குழப்பம் மாணவர் மத்தியில் இருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், கடந்த ஆண்டில் சுமார் 35 மாணவர்கள் மருத்துவம் படிக்கக் கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டு பொறியியல் படிக்க வந்தார்கள். அந்த அளவுக்கு பொறியியல் மீது மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தது.
இப்போது உயர்கல்வியைத் தேடும் மாணவர்கள் முதலில், நம்முடைய இலக்கு என்ன... நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து எந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும், அங்கே லேப் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா, கேம்பஸ் மூலம் தேர்வாகும் வாய்ப்பு இருக்கிறதா என்பதையெல்லாம் பார்க்கவேண்டும். அதற்குப் பிறகுதான் நீங்கள் என்ன பிரிவை எடுத்துப் படிக்கப் போகிறீர்கள் என்பதைப் பார்க்கவேண்டும்...'' என்று சொல்லி முடித்தார்.

கிட்டத்தட்ட மன்னர் ஜவஹரை வழிமொழியும் விதமாகப் பேசினார் வேலைவாய்ப்புகளைக் கண்டறிந்து சொல்லும் 'மாஃபா கன்சல்டன்ஸி' நிறுவனத்தின் சி.இ.ஓ-வான பாலாஜி.
''படிக்கச் செல்லும்போதே என்ன வேலை கிடைக்கும் என்ற மனநிலையில் இருக்காதீர்கள். வேலைக்காகப் படிப்பது என்பது செருப்புக்காக காலை வெட்டுவது மாதிரி. எப்போதுமே படிப்பும் வேலைவாய்ப்பும் ஒரே திசையில் செல்லக் கூடியதில்லை. அதை மாணவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வேலைக்கான இன்டர்வியூவில், '100-ம் பக்கம் 2-வது கேள்விக்கு என்ன பதில்' என்று ஒருபோதும் கேட்பதில்லை. மாறாக குழுவாகச் செயல்படுகிறார்களா என்றுதான் ஆய்வு செய்கின்றனர். எனவே கல்வியைத் தாண்டியும் நாம் திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு நிறுவனத்துக்கு பல நாடுகளில் கிளைகள் இருக்கலாம். எனவே, தேவைகளும் விதவிதமாக இருக்கும். அதை ஈடுசெய்யும் ஊழியர்கள்தான் நிறுவனத்துக்குத் தேவை. அதனால் ஆங்கிலம் அவசியமாகிறது. நான் கிராமப்புறத்தைச் சேர்ந்தவன் என்றெல்லாம் சமாதானம் சொல்லாமல் நம்மை நாமே தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்'' என்றார்.

மாணவர்களின் எதிர்காலம் குறித்து பல கருத்தரங்குகளை நடத்துபவரான விஸ்வநாதன் சொல்லும் கருத்துகள் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. இவர் 'டி.ஆர்.எம். இமேஜிக்விட்டி' (TRM Imagequity) என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார்.
''என்னைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் இந்தியாவுக்குப் பின்னடைவு என்பது வரப்போவதேயில்லை. பின்னடைவு என்று சொல்லக்கூடிய இந்தக் காலத்திலும் புதிய வேலைகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன. செல்போன் புழக்கத்துக்கு வரும் காலத்துக்கு முன்பு இந்தப் பிரிவில் இத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா... ஒருவேளை செல்போன் என்ற கருவி வராமல் இருந்திருந்தால் இத்தனை பேரும் சும்மாவா இருந்திருப்பார்கள்? அதனால், வேலை குறித்த பயம் எப்போதும் யாருக்கும் இருக்கத் தேவையில்லை.

மாணவர்கள் அடிப்படையாக சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும். தங்களிடம் உள்ள தலைமைப் பண்புகளை பள்ளிக்கூட காலத்திலேயே வளர்த்துக்கொள்ளவேண்டும். அந்தக் குணம்தான் நம்மை உயரத்துக்கு அழைத்துச்செல்லும். மேலும் மாணவர்கள் எப்போதும் ஒரு மாற்றுத் திட்டதை (alternative idea) கையில் வைத்துகொள்ளவேண்டும். அதுதான் நம்மைச் சோர்வடையாமல் அடுத்தடுத்த படிகளுக்குச் ஏற்றிச் செல்ல உதவியாக இருக்கும். நல்ல கல்லூரியில் இன்ஜினீயரிங் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. பி.எஸ்ஸி. அல்லது ஏதேனும் ஒரு கலைப் படிப்பு படிக்கலாம். அதை முடித்துவிட்டு எம்.பி.ஏ. படிக்கலாம். இன்ஜினீயரிங் முடித்தால் என்ன வேலையும் சம்பளமும் மரியாதையும் கிடைக்குமோ, அதை எம்.பி.ஏ. மூலம் பெற்றுவிடலாம். இப்படிப்பட்ட மாற்றுத் திட்டம் மனதில் இருந்தால் நல்லது. இதைப் படித்தால் வேலை நிச்சயமாகக் கிடைக்கும் என்று சொல்லக்கூடிய படிப்பு இருக்கவே முடியாது. எந்தப் படிப்பாக இருந்தாலும் அது அறிவை வளர்க்க உதவுவதாகத்தான் இருக்கமுடியும். வேலையைப் பெற்றுத் தருவது படிப்போடு சேர்ந்த வேறு சில விஷயங்கள்தான்... எனவே, எப்போதும் உன்னிப்பான கவனிப்போடு இருங்கள்... எல்லாம் உங்கள் வசப்படும்!'' என்றார்.

இப்போது அச்சமெல்லாம் தீர்ந்து ஐடியா கிடைத்திருக்குமே!




Courtesy : Vikatan

How to make your Wife happy ?

bahrain-circle@googlegroups.com

How to make your Wife happy ?


Beautiful Reception
After returning from work, school, travel, or whatever has separated you:

Begin with a good greeting.
Start with Assalamau 'Aliaykum and a smile. Salam is a sunnah and a du'aa for her as well.
Shake her hand and leave bad news for later!
Sweet Speech and Enchanting Invitations

Choose words that are positive and avoid negative ones.
Give her your attention when you speak of she speaks.
Speak with clarity and repeat words if necessary until she understands.
Call her with the nice names that she likes, e.g. my sweet-heart, honey, saaliha, etc.
Friendliness and Recreation

Spend time talking together.
Spread to her goods news.
Remember your good memories together.
Games and Distractions

Joking around & having a sense of humor.
Playing and competing with each other in sports or whatever.
Taking her to watch permissible (halal) types of entertainment.
Avoiding prohibited (haram) things in your choices of entertainment.
Assistance in the Household

Doing what you as an individual can/like to do that helps out, especially if she is sick or tired.
The most important thing is making it obvious that he appreciates her hard work.
Consultation (Shurah)

Specifically in family matters.
Giving her the feeling that her opinion is important to you.
Studying her opinion carefully.
Be willing to change an opinion for hers if it is better.
Thanking her for helping him with her opinions.
Visiting Others

Choosing well raised people to build relations with. There is a great reward in visiting relatives and pious people. (Not in wasting time while visiting!)
Pay attention to ensure Islamic manners during visits.
Not forcing her to visit whom she does not feel comfortable with.
Conduct During Travel

Offer a warm farewell and good advice.
Ask her to pray for him.
Ask pious relatives and friends to take care of the family in your absence.
Give her enough money for what she might need.
Try to stay in touch with her whether by phone, e-mail, letters, etc..
Return as soon as possible.
Bring her a gift!
Avoid returning at an unexpected time or at night.
Take her with you if possible.
Financial Support

The husband needs to be generous within his financial capabilities. He should not be a miser with his money (nor wasteful).
He gets rewards for all what he spends on her sustenance even for a small piece of bread that he feeds her by his hand (hadeith).
He is strongly encouraged to give to her before she asks him.
Smelling Good and Physical Beautification

Following the Sunnah in removing hair from the groin and underarms.
Always being clean and neat.
Put on perfume for her.
Intercourse

It is obligatory to do it habitually if you have no excuse (sickness, etc.)
Start with "Bismillah" and the authentic du'a.
Enter into her in the proper place only (not the anus).
Begin with foreplay including words of love.
Continue until you have satisfied her desire.
Relax and joke around afterwards.
Avoid intercourse during the monthly period because it haram
Do what you can to avoid damaging her level of Hiyaa (shyness and modesty) such as taking your clothes together instead of asking her to do it first while he is looking on.
Avoid positions during intercourse that may harm her such as putting pressure on her chest and blocking her breath, especially if you are heavy.
Choose suitable times for intercourse and be considerate as sometimes she maybe sick or exhausted.
Guarding Privacy
Avoid disclosing private information such as bedroom secrets, her personal problems and other private matters.
Aiding in the Obedience to Allah

Wake her up in the last third of the night to pray "Qiyam-ul-Layl" (extra prayer done at night with long sujood and ruku'ua).
Teach her what you know of the Qur'an and its tafseer.
Teach her "Dhikr" (ways to remember Allah by the example of the prophet) in the morning and evening.
Encourage her to spend money for the sake of Allah such as in a charity sale.
Take her to Hajj and Umrah when you can afford to do so.
Showing Respect for her Family and Friends

Take her to visit her family and relatives, especially her parents.
Invite them to visit her and welcome them.
Give them presents on special occasions.
Help them when needed with money, effort, etc..
Keep good relations with her family after her death if she dies first. Also in this case the husband is encouraged to follow the sunnah and keep giving what she used to give in her life to her friends and family.
(Islamic) Training & Admonition
This includes:

The basics of Islam
Her duties and rights
Reading and writing
Encouraging her to attend lessons and halaqahs
Islamic rules (ahkam) related to women
Buying Islamic books and tapes for the home library
Admirable Jealousy

Ensure she is wearing proper hijab before leaving house.
Restrict free mixing with non-mahram men.
Avoiding excess jealousy.
Examples of this are:
1- Analyzing every word and sentence she says and overloading her speech by meanings that she did not mean
2- Preventing her from going out of the house when the reasons are just.
3- Preventing her from answering the phone.
Patience and Mildness

Problems are expected in every marriage so this is normal. What is wrong is excessive responses and magnifying problems until a marital breakdown.
Anger should be shown when she exceeds the boundaries of Allah SWT, by delaying prayers, backbiting, watching prohibited scenes on TV, etc..
Forgive the mistakes she does to you.
Correcting her Mistakes

First, implicit and explicit advice several times.
Then by turning your back to her in bed (displaying your feelings). Note that this does not include leaving the bedroom to another room, leaving the house to another place, or not talking with her.
The last solution is lightly hitting (when allowable) her. In this case, the husband should consider the following:
He should know that sunnah is to avoid beating as the Prophet PBUH never beat a woman or a servant.
He should do it only in extreme cases of disobedience, e.g. refusing intercourse without cause frequently, constantly not praying on time, leaving the house for long periods of time without permission nor refusing to tell him where she had been, etc..
It should not be done except after having turned from her bed and discussing the matter with her as mentioned in Qur'an .
He should not hit her hard injuring her, or hit her on her face or on sensitive parts of her body.
He should avoid shaming her such as by hitting her with a shoe, etc.
Pardoning and Appropriate Censure

Accounting her only for larger mistakes.
Forgive mistakes done to him but account her for mistakes done in Allah's rights, e.g. delaying prayers, etc..
Remember all the good she does whenever she makes a mistake.
Remember that all humans err so try to find excuses for her such as maybe she is tired, sad, having her monthly cycle or that her commitment to Islam is growing.
Avoid attacking her for the bad cooking of the food as the Prophet PBUH never blamed any of his wives for this. If he likes the food, he eats and if he doesn't then he does not eat and does not comment.
Before declaring her to be in error, try other indirect approaches that are more subtle than direct accusations
Escape from using insults and words that may hurt her feelings.
When it becomes necessary to discuss a problem wait until you have privacy from others.
Waiting until the anger has subsided a bit can help to keep a control on your words.

மத நல்லிணக்கம்

மத நல்லிணக்கம்


மனுஷனாக
வாழ்வதற்கே சமயங்கள்
மனிதனின்
விருப்பத்திற்கும்
அறிவுக்கும் தக்கவாறு
கொள்கைகளில் நேசங்கள்
நேசக்கரங்களில்
நேர்த்தியாய் செய்யப்பட்ட
அரிவாள் எதற்க்கு…?
அறுக்கப்படுவது பயிர்களா
மனித உயிர்களா…!
அறிவாள் தீர்கப்படவேண்டிய
பிரச்சனைகளை
அரிவாளால்
தீர்த்துக்கட்டப்படுதேன்…!
கருவறையின்
இரகசியத்தை
நம் காதுகள் கேட்பது
எப்போது…?
மழைப் பொழிந்து
அணையில் தேங்கி
நதிகளில் கலந்து
ஆறுகளில் பாய்ந்து
சங்கமிக்கின்றன சமுத்திரத்தில்
அதில்
அணை எங்கே
ஆறு எங்கே
நதி எங்கே…?
இவைகள்
நீரை சமுத்திரத்தில்
சேர்க்கும் வழிகள்
எந்த அணையிலிருந்து
வந்தோம்
எந்த நதியில் இணைந்தோம்
எந்த ஆற்றில் பிரிந்தோம்
என்பதெல்லாம்
சமுத்திரத்தில் கலந்த
நீருக்கு தெரியுமா…?
மமதையர்களின் ஆசைக்கு
மனிதர்கள் பலிஆடா…?
கோவிலும்
பள்ளிவாசலும்
மாதாகோவிலும்
புனிதமாக வழிபாடு செய்யும் போது
ஆறுமுகமும்
அப்துல்லாஹ்வும்
ஆல்பர்ட்டும்
மனிதத்தை மறந்தவர்களா…?
ஆறுமுகம் அறுவடைசெய்வது
அப்துல்லாஹ்வின் வயல்
ஆல்பர்ட் நிறுவனத்தில்
அப்துல்லாஹ் மேலாளர்
மதங்களை மறந்த
இவர்களுக்குள் வளர்வது
மதநல்லிணக்கமல்ல
மனிதநல்லினம்
தூய்மையான
இவர்களுக்கு மத்தியில்
துவைதத்தை தூவியது
யார்…?
அரசியல் என்ற
வியாபாரச் சந்தையில்
மதங்களும் மார்க்கங்களும்
விற்;பனைப் பொருள்கள்
சந்தை பரபரக்க விந்தைசெய்து
பரபக்கத்தை (பிறர்மதத்தை)
சூடுபடுத்தி குளிர்காயும்
சூத்திரக்காரர்கள்
அரசியல்வாதிகள்
பிள்ளையைக் கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டுவதுப் போல்
கட்டும் மேம்பாலங்களிலும்
கடக்கும் சாலைகளிலும்
நடக்கும் பாதைகளிலும்
மதநல்லிணக்கம் என்றபெயரில்
பெயர்தாங்கி நிற்க்கின்றார்கள்
மறைந்த பல சமுதாய மனிதர்கள்

சாலைகளில்
மதநல்லிணக்கத்தை
காண்பதை விட்டு
அரசியலில்
மதமற்ற மனிதர்களை
தேடுவோம்….
மனிதநேய உணர்வில்
அரசியல் வாழ்ந்தால்
ஆறுமுகத்தின் மகள்
அப்துல்லாஹ்வின்
மருமகள்
ஆல்பர்ட்டின் மகன்
ஆறுமுகத்திற்கு
மருமகன்…!


-கிளியனூர் இஸ்மத்