Thursday, March 11, 2010

மிரட்சிக் கொள்ள மாட்டோம்,,,,,

உலகெங்கும் கறுப்புக் கொடி
பர்தாவிற்கு எதிராக;

மனநோயால் பாதிக்கப் பட்ட கூட்டம் ஒன்று
மங்கையின் அழகாய் காண துடிப்பதுண்டு!

உரக்கச் சொல்லுங்கள் எதிரிகளுக்கு
அவிழ்த்துவிட்டு வருவதுதான் உனக்கு
அழகு என்றால்
இழுத்து மூடிக் கொள்வேன்
என் சுண்டுவிரலின் நகக் கண்ணையும்!!

கழட்ட மாட்டேன் அங்கியை
கயவர் கூட்டத்திற்காக;

தாடியைக் கண்டு
வெருண்டோடும் பேடிகளா;
சோதனை என்கின்ற பெயரில்
நித்தம் நித்தம் வேதனையா;
சிரித்துவிட்டேன் நான் - என்
சருமத்தில் உள்ள முடிக்கு இவ்வளவு
சவாலா என்று!!

இறுதிவரை இருப்போம் இப்படியே
இஸ்லாம் சொன்ன முறைப்படியே!!
வறட்சியைக் கொண்டு பயமுரித்தினாலும்
மிரட்சிக் கொள்ள மாட்டோம்!!

இருக்கும் உயிர்
இறைவனுக்கே!
கொடுப்பதும் எடுப்பதும் அவனடா;
இடையில் பூச்சாண்டிக் காட்ட நீ யாரடா?

- யாசர் அரஃபாத்

துபாயில் நான்…

துபாயில் நான்…

இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…
அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,
அன்னிய மண்ணில்- நான்
வேர்ப்பட்டதும்,
விமானம் ஏற‌
தீர்மானம் செய்ததால்…
அன்று அரும்பாக இருக்கையிலே
ஆகாய பார்வையிலே
அலைபாய்ந்த ஆசையிலே
அழகாக தோன்றிய‌
ஆகாய ஊர்தியும்,
அரங்கேறி போகையிலே
ஆனந்த்தம் இல்லாத‌
அனுபவம் ஆனது.
அதில் அலங்காரம் செய்துதான்
ஆகாரம் வந்தது,
ஆசைபட்டு தீர்த்திடாமல்
அசை போட்டு தீர்த்துவிட்டேன்…
இறங்கும் நேரம் வந்து விட‍- அன்று
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு
இயற்கை என்று ஒன்றும் இல்லை…
மணல் நகரின் அனல் காட்சி
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி…
அன்று நிவார‌ண‌ம் தேடி வந்த‌ ந‌க‌ர‌ம்
இன்று நிரந்த‌ர‌ம் ஆகிப்போன‌ ந‌க‌ர‌ம்,
நாள் ‍ விடிந்தாலும் முடிந்தாலும்
ஒரே போல‌ இருக்கும்,
அட‌ அறைக்குள்ளே சிறைவைத்தால்
வேறென்ன‌ இருக்கும்…
உற‌வோடு உற‌வாட‌
தொலைபேசி என‌க்கு,
அதில் போன‌ காசுக்கு
இங்கேது க‌ண‌க்கு…
இங்கே ம‌னைவியோடு உற‌வாடி
பிள்ளை பெற‌முடியாம‌ல்,
பில்லை பெற்ற‌வ‌ர் ஆயிர‌ம்…
இள‌மையும் வேலைக்கு
இரையாகி போச்சு,
கால‌மும் காசுக்கு
க‌ரியாகி போச்சு,
த‌லையெல்லாம் அத‌ற்குள்ளே
ந‌ரையாகி போச்சு,
காசாவ‌து மீந்த‌தா
செல‌வாகி போச்சு…
வ‌ருமான‌ம் வ‌ருமுன்னே
செல‌வு வ‌ந்து சேர்ந்திடும்,
வெறுமாக‌ ஊர் சென்றால்
உற‌வு வ‌ந்து சேருமா?
காசுக் க‌ண‌க்குக‌ள்
க‌வ‌லை த‌ருகிற‌து,
க‌ட‌ந்த‌ கால‌ம்தான்
க‌ண்ணில் வ‌ருகிற‌து…
இனி இஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
ந‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌து திரும்பாது…
எந்நாடு சென்றாலும்
என் நாடு ஆகாது,
சொர்க‌மே த‌ந்தாலும் ‍ ம‌ன‌தில்
தாய் நாடு சாகாது…


( எழுதியது : யாரோ )

மதிநாவில் சென்னை ரெஸ்டாரண்ட்

மதிநாவில் சென்னை ரெஸ்டாரண்ட்

சென்னை ரெஸ்டாரண்ட்
பிலால் மஸ்ஜித் பின்புறம்
குர்பான் ரோடு
மதிநா முனவ்வரா

அலைபேசி : 0500932681

அஹமது தீதாத்

அஹமது தீதாத்

இவரது முழு பெயர் – அஹமது ஹுசைன் தீதாத்
பிறப்பு - ஜுலை 1, 1918
பிறந்த ஊர் - குஜராத், (இந்தியா)

1918-1942 வரை இவரது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள்
இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இவர் பிறந்த சில காலங்களிலேயே தென்ஆப்ரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார். இவர் தனது 9வது வயதில் தென்ஆப்ரிக்கா சென்று தனது தந்தையுடன் இணைந்துவிட்டார். இவர் தென்ஆப்ரிக்கா சென்ற சிலகாலத்திலேயே இவரது தாயார் மரணமடைந்தார் (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இவர் கடுமையாக தனது படிப்பில் கவனம் செலுத்தி 6-ஆம் வகுப்பிலேயே மிகச் சிறந்து ஆங்கிலப்புலமை மற்றும் பள்ளியில் நற்பெயர் பெற்றார்! (அல்ஹம்துலில்லாஹ்). இவர் தனது 16 வது வயதில் வேலை செய்ய துவங்கினார்.

1936-ம் ஆண்டு பர்னிச்சர் சேல்ஸ்மேன் ஆகா தனது வாழ்க்கைப் பயனத்தை துவங்கினார். அக்கால கட்டத்தில் நசாராக்களால் “இஸ்லாம் வாலால்“ பறப்பட்டது என்ற சில சர்ச்சைகள் வெளிவந்தன இந்த சர்ச்சைகளை கண்டு மனம் துவலாமல் நசாராக்களின் வேதங்களை ஆய்வு செய்ய துவங்கினார் இதன்மூலம் இவர் இஸ்லாத்தின் தாவா பணிகளுக்குள் தம்மை அற்பணித்துக்கொண்டார்!


1942-1956 வரை இவரது வாழ்வில் நடந்தவை
சகோதரர் அஹமது தீதாத் அவர்களது தாவாபணி (இஸ்லாமிய அழைப்புபணி) 1942 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற இடத்தில் அமைந்துள்ள ”அவோலன்-சினிமா” என்ற ஹாலில் துவங்கியது. முதன்முதலில் இவர் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது எத்தனை பேர் அதைக்கேட்டார்கள் தெரியுமா? மயங்கிவிடாதீர்கள் வெறும் 15 நபர்களே!
இவரது திறமையான பேச்சாற்றலில் மயங்கிப்போன மக்கள் இவரது சொற்பொழிவுகளை கேட்க ஆவலாக இருந்தனர். சில காலங்களுக்குப்பின்னர் இவரது சொற்பொழிவுகள் தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க் மற்றும் கேப்-டவுன் என்ற நகரங்களில் அரங்கேரியது அப்போது மக்கள் கூட்டம் ஆயிரத்தை தாண்டியது” தனது முதல் கூட்டத்தில் வெறும் 15 பேர்களுக்கு சொற்பொழிவாற்றுகிறோம் என்று இவர் கவலைப்படவில்லை! பிறகு நடந்த சொற்பொழிவுக்கூட்டங்களில் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் (அல்ஹம்துலில்லாஹ்).
இவர் துண்டுப்பிரச்சுரம் அளிப்பது, ஜும்ஆ பேருரை நிகழ்த்துவது முதற்கொண்டு நடைபெற்ற சொற்பொழிவுகளால் இஸ்லாத்திற்கும் கிருஸ்தவத்திற்கும் இடையே ஒறு இணைப்பு பாலத்தை அதாவது சகோதரத்துவத்தை வளர்த்தார்.

இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் – 1956-1986
இவரது பேச்சாற்றலிலும் தாவா சொற்பொழிவுகளையும் கேட்ட பொதுமக்கள் கூட்டம் அபரிமிதமாக வளர்ந்தது! கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தையும் அவர்களது ஆவலையும், இஸ்லாத்தைப்பற்றிய கேள்விகளையும் கருத்தில்கொண்டு இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் என்ற அமைப்பை 1956ஆம் ஆண்டு இவர் துவங்கினார்! (அறிந்துக்கொள்ளுங்கள் எமது ஆலிம் மற்றும் மவ்லவி சகோதரர்களே இவர் தங்களைப்போன்று எந்த ஜமாஅத்-ஐயும் நிறுவி இஸ்லாத்தை பிளவுபடுத்தவில்லை) இந்த அமைப்பிற்கு உறுதுணையாக இருந்தவர்களும் காரணமாக இருந்தார்கள் (திரு. குலாம் ஹுசென் வெங்கர் மற்றும் திரு. தாஹிர் ரசூல்). இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் இஸ்லாமிய புத்தகங்களை பிரசுரிப்பது, புதிதாக இஸ்லாத்ததை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது போன்றவைகளேயாகும்!

1958ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களால் ”அஸ்-ஸலாம் எஜிகேஷனல் இன்ஸ்டியுட் என்ற அமைப்பு பெரேமர் என்ற பகுதியில் சுமார் 75 ஏக்கர் நிலத்தில் உருவானது.


இந்த அமைப்பு இவருக்கு 30 வருடங்கள் மிகவும் பக்கபலமாக அமைந்தது. இவர் பிப்லிகள் தியோலஜி Biblical Theology பற்றி ஆராய்ந்து அதிக இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்தார். மேலும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார். இந்த செயல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் தனது கைப்பட பல இஸ்லாமிய நூல்களை இயற்றினார், இஸ்லாமிய பிட்நோட்டீஸ்கள், பேம்ப்லட் போன்றவற்றை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்! இது மட்டுமல்லாமல் பைபிள் பற்றி இஸ்லாமிய வகுப்புகளையும் நடத்தினார்! இதன்மூலம் இவருக்கு இஸ்லாம், கிருஸ்தவம் மற்றும் ஜுதயிஷ மக்கள் கூட்டம் பெருகியது!


இவரது சர்வதேச சொற்பொழிவுகள் 1985-1995
1980 ஆம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர் தீதாத் தென் ஆப்ரிக்காவிற்கு வெளியேயும் தாவா பணிகளை துவங்க எண்ணினார்!
1985-ஆம் ஆண்டு இலண்டன் நகரில் உள்ள ”ராயல் ஆல்பர்ட் ஹால்” என்ற அரங்கில் 2 இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நிகழ்த்தினார்.
1986-ஆம் ஆண்டு இவருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் பரப்பியதற்கு ”கிங் பைஷல் அவார்டு” கிடைத்தது!. இந்த அவார்டு இவருக்கு சர்வதேச அளவில் நற்பெயரை தேடித்தந்தது!
இவர் தனது 66-ஆம் வயதிலிருந்து புதுப்பொழிவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோண்டு மீண்டும் ஒரு 10 ஆண்டுகள் அயராது தனது இஸ்லாமிய தாவா பணிகளை நசாராக்களிடம் மேற்கொண்டார்! இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது பயணத்தை தொடர்ந்தார்!

இவர் இஸ்லாமிய தாவா பணிக்காக பயணித்த நாடுகளின் பட்டியல் இதோ! (அல்ஹம்துலில்லாஹ்!)

சவுதி ஆரேபியா மற்றும் எகிப்து (பல முறை)

ஐக்கிய ராஜாங்கம் எனப்படும் – இங்கிலாந்து (பலமுறை 1985 முதல் 1988 வரை)

பாகிஸ்தான் (சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்-ஐ சந்தித்தார்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுகள் (நவம்பர்-டிசம்பர் 1987களில்) இச்சமயம் இவரை ஜனாதிபதி கயும் கவுரவித்தார்

சுவிட்சர்லாந்து (மார்ச் 1987 ஜெனிவாவில் சொற்பொழிவு)

US அமெரிக்க (1986களில் திரு. ஸ்வாகர்டு, ராபர்டு டவுக்ளஸ் மற்றும் மற்ற 2 பேச்சாளர்களுக்கு இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் அரிஜோனா மாகாணம், US)

ஸ்வீடன் மற்றும் டென்மார்க் (1991-ல் மட்டும் 3 இஸ்லாமிய சொற்பொழிவுகள்)

மறுபடியும் US அமெரிக்க, கனடா (1994 இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் கனடா)

ஆஸ்திரேலியா – (1996ல் அன்னாரது இறுதி சுற்றுப்பயனம், இதற்குப்பின் இவருக்கு பக்கவாதம் Stroke ஏற்பட்டது)

1996-2005 வரை அன்புமிக்க சகோதரர் அஹ்மத் தீதாத் அவர்களது இறுதிக்கட்ட சோகமான வாழ்க்கை
மே மாதம் 1996 ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களுக்கு வலது-கையின் பக்கம் பக்கவாதம் Paralysis அதாவது கழுத்து முதல் உடலின் ஒருபக்கம் முழுவதும் (அதாவது செரிபிரல் வாஸ்குலர் ஆக்சிடன் என்ற வாத நோய்) ஏற்பட்டது. இதனால் இந்த அன்புச்சகோதரர் பேச முடியாமலும் எதையும் விழுங்கக்கூட முடியாமலும் அவதிப்பட்டார்! இவருக்கு ஏற்பட்ட இந்த நிலையைக்கண்டு உடனடியாக இவரை ரியாத் நகரில் உள்ள ”கிங் பைஷல் ஸ்பெஷலிஸ்டு மருத்துவமனை”க்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரது இந்த நிலைமை 9 ஆண்டுகள் நீடித்தது மேலும் இக்காலகட்டத்தில் இவர் தென் ஆப்ரிக்காவில் வெருளம் என்ற பகுதியில் தனது வீட்டில் படுக்கையாகவே தனது கடினமான இறுதி 9 ஆண்டுகளை கழித்தார்! இவர் இந்த இக்கட்டான நிலையில் தனது மனைவியின் கவனிப்பில் இருந்துவந்தார்! அன்னார் அவர்கள் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு தனது இல்லத்திலேயே இயற்கை எய்தினார்! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இவரது மண்ணரை தற்போது வெர்குளம் என்ற தென்ஆப்ரிக்க நகரில் உள்ளது! (மேலும் தகவலறிய www.ahmed-deedat.co.za கிளிக் it)

சகோதரர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் மார்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதை நசாராக்கள் முன் நிறுத்தி தாவா பணிகளை மேற்கொண்ட இந்த சகோதரர் உண்மையில் நமக்காகவும் நம் மார்க்கத்திற்காகவும் அயராது பாடுபட்டுச் சென்றுள்ளார்! இப்படிப்பட்ட நம் தாவா சகோதரர்களுக்கு துவா செய்து இவரது மறுமைக்கு உதவலாமே!


நன்றி
http://en.wikipedia.org/wiki/Ahmed_Deedat (மொழியாக்கம் செய்யப்பட்டது)

ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது! பிழை இருந்தால் தெரிவிக்கவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்வோம்! திருந்திக்கொள்வோம்!

இந்த கட்டுரையை தங்கள் பிளாக்குகளில் பதித்து தாவா பணியாற்றுவோருக்கு வீரியத்தை ஊட்டலாமே!


SOURCE
http://islamicparadise.wordpress.com/