Thursday, March 11, 2010

மிரட்சிக் கொள்ள மாட்டோம்,,,,,

உலகெங்கும் கறுப்புக் கொடி
பர்தாவிற்கு எதிராக;

மனநோயால் பாதிக்கப் பட்ட கூட்டம் ஒன்று
மங்கையின் அழகாய் காண துடிப்பதுண்டு!

உரக்கச் சொல்லுங்கள் எதிரிகளுக்கு
அவிழ்த்துவிட்டு வருவதுதான் உனக்கு
அழகு என்றால்
இழுத்து மூடிக் கொள்வேன்
என் சுண்டுவிரலின் நகக் கண்ணையும்!!

கழட்ட மாட்டேன் அங்கியை
கயவர் கூட்டத்திற்காக;

தாடியைக் கண்டு
வெருண்டோடும் பேடிகளா;
சோதனை என்கின்ற பெயரில்
நித்தம் நித்தம் வேதனையா;
சிரித்துவிட்டேன் நான் - என்
சருமத்தில் உள்ள முடிக்கு இவ்வளவு
சவாலா என்று!!

இறுதிவரை இருப்போம் இப்படியே
இஸ்லாம் சொன்ன முறைப்படியே!!
வறட்சியைக் கொண்டு பயமுரித்தினாலும்
மிரட்சிக் கொள்ள மாட்டோம்!!

இருக்கும் உயிர்
இறைவனுக்கே!
கொடுப்பதும் எடுப்பதும் அவனடா;
இடையில் பூச்சாண்டிக் காட்ட நீ யாரடா?

- யாசர் அரஃபாத்

No comments: