Showing posts with label கவிஞர். Show all posts
Showing posts with label கவிஞர். Show all posts

Thursday, February 19, 2009

கவனமாகயிரு

கவனமாகயிரு


கிளியனூர் இஸ்மத்

இளைஞனே…
வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து
வெற்றி பெறவேண்டிய நீ
சிலரது வார்தைகளில்
உன்னை இழந்து விடாதே
கவனமாகயிரு…

மருத்துவனாக
கணினியாளனாக
கணிதமேதையாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோயொன்றாய்
நீ சமைந்திடவே
உன்னைசமைத்தவர்களின்
கனவு
அதை கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு…

பள்ளிப் பாடநூல்களை
சுமக்கவேண்டிய உன்கரத்தில்
கலவரச்செய்திகளையும்
மதவாத பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகள்
திணிக்கப்படுதை அனுமதிக்காதே
கவனமாகயிரு…

கல்லூரி வாயில்களில் சில
புல்லுருவிகளின் கோலங்கள்
உன் தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் உனக்கு அணியவிக்கப்படுவது
மதவாத கண்ணாடி
கண்ணிலியாய் நீ
உன் வகுப்புத் தோழர்களுடன்
வகுப்புவாதம் செய்வதற்கு
கவனமாகயிரு…

சமுதாயம் என்ற சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு வர்ணத்தை கொடுப்பதற்கு
சிலர் தருணத்தை தாரைவார்க்க
தயாராகி இருக்கிறார்கள்
கவனமாகயிரு…
எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள்
படமெடுக்கப்பட்டு
உன் சிந்தனை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராகி
வினியோகிக்கப்படுகிறது
கவனமாகயிரு…

தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்ற தலைப்புகளில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு
முயற்ச்சிப்பார்கள்
மருள்கொள்ளாதே
கவனமாகயிரு…

வேதத்தை காண்பித்து
உனக்கு ஞானம்போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர் வழிகாட்டுகின்றோம் என்று
மெய்ஞ்ஞானியாகவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கி விடுவார்கள்
கவனமாகயிரு...

மனிதநேயத்தை
நீ விதையுண்டுருக்கிறாய்
அது துளிர்விடுவதை துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய
உன்னை
நான்கு சுவற்றுக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு…

நீ என்பது
இன்னொருவரின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன் சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாயிரு….!

www.kiliyanur-ismath.blogspot.com

Wednesday, February 18, 2009

துபாயில் வானலை வளர்தமிழ் கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் வானலை வளர்தமிழ் கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு நடத்தும் மாதாந்திர கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் பவனில் 20.02.2009 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிம்மபாரதி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் வானலை வளர்தமிழ் அமைப்பின் தனிச்சுற்று இதழான தமிழ்த்தேரின் பருவம் மற்றும் சாரல் இதழ்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும். மேலும் அமீரக தமிழ்க் கவிஞர்கள் தங்களது கவிதையினை வாசிப்பர்.

அனைவரும் வருகை புரிந்து தமிழ் அமுதம் பருக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு reachsimma@gmail.com

Thursday, February 12, 2009

உருது மொழியின் உன்னதக் கவிஞர் - கைஃபி ஆஜ்மி (1918-2002)

உருது மொழியின் உன்னதக் கவிஞர் - கைஃபி ஆஜ்மி (1918-2002)
தமிழில்: ஆனந்த செல்வி


கைஃபி ஆஜ்மி உத்திரப் பிரதேச மாவட்டம் அஜாம்காட்டில் 1918ம் ஆண்டு ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சையத் அக்தர் ஹூசைன் ரிஜ்வி ஆகும். கைஃபி தனது பதினோறாவது வயதில் "இத்னா தோ ஜிந்தகி மெய்ன் கிஸி கி கலால் படே"' என்ற கஜலை எழுதினார். இந்தக் கஜலைப் பாடி அதற்கு உயிர் கொடுத்தவர் பிரபல பாடகி பேகம் அக்தர். இந்தக் கஜல் இன்னமும் பாடப்பட்டு வருகிறது.

கைஃபி தனது 19வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். மேலும் அலி சர்தார் ஜப்ரியுடன் சேர்ந்து கட்சிக்காக "குவாமி ஜங்'' என்ற பத்திரிக்கைக்கு எழுதி வந்தார். இந்தக் காலக்கட்டத்தில் மும்பைக்கு வந்தார்.

கைஃபி தனது தோழர்கள் பைஃஜ் மற்றும் மக்தூம் ஆகியோருடன் சேர்ந்து நவீன உருது கவிதையில் புரட்சியை உண்டாக்கினார். உலகம் முழுவதுமுள்ள உருது மொழிப் பிரியர்களுக்கு மூன்று தலைமுறைக்கான கவிதைகளை எழுதியுள்ளார். இவர்களின் கவிதைகள் இன்பியல் மற்றும் மக்கள் பிரச்சனை குறித்ததாக அமைந்தது. கைஃபியின் முதல் கவிதைத் தொகுதியான "ஜான்கார்'' 1943ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவாரா சஜ்தே', ஆகீர் ஷாப், கைஃபியாத்', கைஃபி ஆஜ்மியின் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் மற்றும் ஸர்மாயா' ஆகியத் தொகுதிகளும் வெளிவந்தன.

கைஃபியின் கவிதைகள் காகிதப் பக்கங்களை அலங்கரிக்கும் அடுக்குச் சொற்களாக இல்லாமல் அவை சமூக மாற்றத்திற்கான கருவியாக இருந்தது. தனது இளைய பருவத்தில் வர்த்தக யூனியனில் இருந்தவர் பின் சமூக மாற்றம் விரும்பிய மனிதனாக தீவிரமாக செயல்பட்டார்.

இவர் சமூகத்தில் மாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்படியாக கவிதைகளை எழுதினார். மதம், ஜாதியம், சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பெண் விடுதலை மற்றும் உரிமை குறித்து மிக தைரியமாக கவிதைகளை எழுதினார்.

மேலும் இவர் உருது பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் நபி குலிஸ்தான்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மேலும் இவரின் திரைப்படப் பாடல்கள் மேரி ஆவாஜ் சுனோ' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மற்றும் இவர் எழுதிய திரைக்கதை வசனங்களும் புத்தகமாக வந்துள்ளது.

இந்திய விடுதலைக்குப் பிறகு கவிஞர்கள் மற்றும் கதாசிரியர்கள் பிழைப்புக்காக மும்பை நகரில் தஞ்சம் புகுந்தனர். 19551975 காலகட்டம் இந்தி திரைப்படப் பாடல்கள் மற்றும் வசனங்களில் மாபெரும் மாற்றத்தையும் புதுமைகளையும் படைத்த காலங்கள். புதிய அலை திரைப்பட இயக்குனர்கள் வழக்கமான காதல் கதைகளைத் தவிர்த்து சமூக அக்கறையுள்ள படங்களை இயக்கினார்கள். கைஃபி ஆஜ்மி 1952ல் ஷாஹித் லதிஃப் இயக்கிய புஜ்திலி' என்ற படத்திற்கு பாடல் எழுதி தனது திரைப்பட பாடலாசிரியர் கணக்கைத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து பலத் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். இதில் ஷமா, காகஜ் கே பூல், ஷோலா அவுர் ஷப்னம், அனுபமா, ஆக்ரி கத், ஹஷ்தே ஹக்ம், ஆர்த் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கன.

இயக்குனர் சேத்தன் ஆனந்த் இயக்கிய ஹீர் ரான்ஜா' காதல் காவியத்தில் பாடல்கள் மற்றும் வசனப் பொறுப்பை ஏற்றார். இப்படத்தின் கவித்துவமான வசனத்திற்காக அப்படம் தேசிய விருதைப் பெற்றது. மேலும் எம் எஸ் சத்யுவின் கரம் ஹவா படத்திற்காக பிலிம்ஃபேர் விருதையும் பெற்றார். பிரபல இயக்குனர் ஷாயித் மிர்ஜாவின் விருது பெற்ற நசீம் படத்தில் கைஃபி நடிக்கவும் செய்தார்.

தனது இறுதி காலம் வரை இலக்கிய நிகழ்வுகள், நாடக அரங்குகள் மற்றும் கவிதை அரங்குகள் என அயராது ஓடினார். ஒரு கவிஞர் தன் கவிதையை வாசிக்கையில் கேட்பது அலாதி இன்பம். கைஃபி தனது கரகரப்பான குரலால் கவிதை வாசிப்பதற்கு ஈடு எதுவுமில்லை.

இந்தியாவில் அதிகம் விருது பெற்ற உருது கவிஞர் இவரே ஆவார். சாகித்திய அகடமி பெல்லோசிப் பெற்ற முதல் உருது கவிஞர் இவர்தான். மேலும் இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர கவுரவ் விருது, யுவ பாரதிய விருது, டெல்லி அரசு விருது மற்றும் சர்வ தேசிய விருதான ஆப்ரோஆசிய எழுத்தாளர்களின் லோடஸ் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் சாந்தி நிகேதனின் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியன் பியுபில்ஸ் தியேட்டர் அசோசியேஷன் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் தலைமைப் பொறுப்புகளையும் வகித்தார். கைஃபி தன்னை நாடக உலகில் ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாது, இளைய சமுதாயத்தில் நாடகத்தின்பால் ஒரு ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் உண்டாக்கினார்.

இறுதி காலத்தை தான் பிறந்த கிராமத்தில் கழித்தார். இங்கு இவர் மூன்று பள்ளிக்கூடங்கள், பிரசவ மருத்துவமனை மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை உண்டாக்கி மக்களுக்கு சேவை செய்ததோடு மட்டுமல்லாமல் தனது கிராமத்தை நவீன கிராமமாக மாற்றி உள்ளார்.

கைஃபியின் நினைவாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றிற்கு கைஃபி ஆஜ்மி ஹைவே என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்லியிலிருந்து அஜாம்காட் செல்லும் ரயிலுக்கு கைஃபியாத் என்று பெயரிடப்பட்டுள்ளது. மும்பையின் ஜூகு பகுதியில் கைஃபி பார்க் என்று ஒரு பூங்காவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பூர்வாஞ்சல் பல்கலைக் கழகத்தின் கைஃபி ஆஜ்மி மீடியா சென்டர் என்ற பெயரிலும் உ.பி. மாநிலம் லக்னவில் கைஃபி ஆஜ்மி அகடமி என்ற பெயரிலும் கல்விப் பிரிவு ஏற்படுத்தியுள்ளது.

கைஃபி அவர்களிடம் இருந்த ஊக்கமும், எந்நிலையிலும் தளராத மனமும் கடுமையான உழைப்பும் பிரமிக்கக்கூடியது. அவர் சோர்ந்து இருந்ததாக யாரும் கண்டிருக்கவில்லை. உருது மொழியில் ஆளுமையின் பிரவாகமாக கவிதை படைக்கும் திறனும் இவருக்கு வாய்த்தது போல் யாருக்கும் வாய்க்காது. தனது கவிதைகளை வாசித்து சுகம் காணும் ரகமாக இருக்கக் கூடாத எனவும் எவை மக்களைச் சிந்திக்கவும் அவர்கள் தங்களை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளவும் பயனுள்ளதாக அமைய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.

தோளில் கனக்கிறது கடந்த காலம்

பண்பாட்டின் வெற்றியா இல்லை தோல்வியா
தோளில் கனக்கிறதின்னுமென் கடந்த காலம்
இன்றும் ஓடிப்போய் அனைத்துக் கொள்கிறேனதனை
எனது மார்பில் உயிர்த்து செழிக்கிறதொரு ஆரண்யம்
முன்மண்டையில் முளைக்கிறது கொம்புகள்.

கடந்த காலத்தின் நிழல் படர்ந்து கொண்டிருக்கிறதென் மேல்
குருதியிலான யுகத்தினை கடந்துள்ளேன் மறைப்பதெப்படி
குருதியில் மூழ்கியபடி தெரிகிறது எனது பற்கள்

யாரையெல்லாம் நாம் விரும்பவோ வெறுக்கவோ இல்லையோ
அவர்களைத் தாக்குகிறேன்
அவர்களை வேட்டையாடுகிறேன்
இப்படியாக என் பிறவியை பூசி நிறைகின்றேன்

உடலென்பது வெறும் வயிறுதான், மனதில்லை, இதயமில்லை
கையில் விளக்குடன் எத்தனை அவதாரங்கள் போய்விட்டது
கடந்தகாலக் கறையைக் கழுவ இயலாது பார்த்துக்
கொண்டிருக்கிறோம்

பண்பாட்டின் பொடியை நெற்றியில் பூசிக் கொண்டோம் ஆனாலும்
மிருகத்தனத்தின் கறை இன்னும் அழியவே இல்லை
ஊரை வெறுமையாக்கி நகரத்தை உருவாக்கினோம்
காடுகளுடனான நம்முறவு இன்னும் அறுந்து போகவில்லை

வீடு

இன்று இரவு கடுமையான சுடுகாற்று வீசுகிறது
இன்று இரவு நடைபாதையில் தூக்கம் வராது
எல்லோரும் எழுங்கள், நானும் நீங்களும் எழுவோம், நீயும் எழு,
இந்த சுவற்றிலேயே ஒரு ஜன்னல் திறக்கக் கூடும்

இந்நிலையிலும் நம்மை விழுங்கவே காத்திருக்கிறது பூமி
முறிகின்ற கிளைகளிலிருந்து கால்கள் இறங்குகையில்
இந்த வீட்டிற்கும் தெரியாது அதில் வசிப்பவருக்கும் தெரியாது
குகைகளில் கழிந்த நம்முடைய நாட்கள் பற்றி

அச்சில் அமிழ்ந்து போகும் கைகள் கலைப்பதில்லை
சிலைகளுக்குப் பின் புதுச் சிலைகளை உருவாக்கினோம்
சுவரை வலிமையாக, மேலும் வலிமையாக இன்னும் வலிமையாக்கினோம்
கூறையை அழககாக்கினோம், கதவுகள் அமைத்து பலமாக்கினோம்

எளிமையாய் ஜ்வாலையை பறித்துப் போகிறது கடுவளி
மின்சார விண்மீன்கள் கொண்டு வெளிச்சமாக்குவோம் வானை
மாளிகை கட்டப்பட்டு விட்டதும், காவலுக்கு அமைகிறார் ஒருவர்
சில்லுகள் மேலும் கட்டுமான பெருஞ்சத்தத்திலும் தூங்கிப் போனோம்

நாளங்கள் அனைத்திலும் உழைப்பின் வலி தாங்கினோம்
மூடிய கண்களில் இந்த மாளிகையின் ஓவியம் பெற்று
இப்படித்தான் நாளென்பது உருகுகிறதெங்கள் தலைமேல் இதுவரை
இப்படித்தான் கழிகிறது தூங்காத எங்கள் இரவுகள்

இன்று இரவு கடுமையான சுடுகாற்று வீசுகிறது
இன்று இரவு நடைபாதையில் தூக்கம் வராது
எல்லோரும் எழுங்கள், நானும் நீங்களும் எழுவோம், நீயும் எழு,
இந்த சுவற்றிலேயே ஒரு ஜன்னல் திறக்கக் கூடும்

தமிழில்: ஆனந்த செல்வி
http://www.keetru.com/ani/may08/anandhaselvi_1.php

Saturday, January 10, 2009

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம்

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ர‌ம‌லான் வ‌ருகிற‌து !
ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிறது !

ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மான‌ம் செய்ய
திருநோன்பு வ‌ருகிறது

அருளாளன் அல்லாஹ்வின்
அன்பள்ளி வ‌ருகிறது !
திரும‌றை வ‌ந்த‌
தேன்மாத‌ம் வ‌ருகிறது !

த‌க்வாவை கொஞ்சம்
த‌ட்டிடவே வ‌ருகிறது !
ஹக்கன‌வ‌ன் க‌னிவையும்
அறிவிக்க வ‌ருகிறது !

அருமை நாயகம் (ஸல்)
அறிவித்த‌ நல் அம‌லை
அருமையாய் நாம் ஏற்க
அழைப்பாக வ‌ருகிற‌து !

பத்திய மாத‌மென்று
பறைசாற்றி வ‌ருகிற‌து !
உத்த‌ம ஸஹாபாக்கள்
உவ‌ந்த‌ மாத‌ம் வ‌ருகிற‌து !

ப‌சியின் ருசியறிய
பாங்கோடு வ‌ருகிற‌து ! க‌ல்பில்
க‌சியும் ஈர‌த்தைக்
காட்டிட‌வும் வ‌ருகிற‌து !

கஸ்தூரி வாச‌ம்
க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ருகிற‌து !
கைக‌ளை ஈகையால்
அல‌ங்கரிக்க‌ வ‌ருகிற‌து !

ஏழை வீதிக‌ளும்
புன்ன‌கைக்க‌ வ‌ருகிற‌து
எல்லோர் ம‌ன‌ங்க‌ளுக்கும்
சுக‌ம் சேர்க்க‌ வ‌ருகிற‌து !

க‌லிமாவில் நாவெல்லாம்
க‌லந்திட‌ வ‌ருகிற‌து !
தொழுகை த‌வ‌றாதேயென‌
தூது சொல்லி வ‌ருகிற‌து !

லைல‌த்துல் க‌த்ரென்னும்
ர‌ம்மிய‌ இர‌வுத‌னை
தொழுகையால் அல‌ங்க‌ரிக்க‌
சோப‌ன‌மாய் வ‌ருகிற‌து !

அன்று ப‌த்ருப் போரில்
அண்ண‌லார்க்கு வெற்றியினை
த‌ந்து ப‌ரிச‌ளித்த‌
த‌னிமாத‌ம் வ‌ருகிற‌து !

நோன்பின் மாண்பு சொல்லும்
நூர்மாத‌ம் வ‌ருகிற‌து !
மாண்பில் நாம் ம‌கிழ‌ இபாத‌த்
ம‌ண‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !

ர‌மலான் வ‌ருகிற‌து
ந‌ல‌ம் கொண்டு வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிற‌து !



-

பொற்கிழி க‌விஞ‌ர் மு.ச‌ண்முக‌ம்,
இளையான்குடி

நர்கிஸ்
செப்டம்பர் 2008 மாத ரமலான் சிறப்பிதழில்
வெளியான கவிதை

04564 245988
99763 72229

Wednesday, August 6, 2008

லட்சியக் கவிஞர் இக்பால்

ஏப். 21: இக்பால் நினைவு தினம்

'ஸாரே ஜஹான் ஸே அச்சா' பாடல் எழுதிய
லட்சியக் கவிஞர் இக்பால்


எம்.ஜெ.முஹம்மது இக்பால்
(இக்கட்டுரையாளர் மதம், சமூகம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் குறித்து எழுதிவருபவர். சமூக நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றுபவர். துபாய் பொறியியல் நிர்வாக சங்கத் தலைவர். துபாயில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர்.)

''மதம் ஒருவரோடொருவர்சண்டை போடச் சொல்லவில்லை.
ஹிந்த் நமது ஜென்ம பூமி ஹிந்துஸ்தான் நம்முடையது''

இந்தியச் சுதந்திர வரலாற்றிலேயே சுதந்திர தாகத்தை மக்களிடையே ஊட்டியவர்களில் கவிஞர்களின் பங்கு மகத்தானது. அதில் அல்லாமா டாக்டர் இக்பால் பங்கு அளப்பற்கரியது.

அல்லாமா இக்பால் அவர்களின் 61-ம் ஆண்டு மறைவு தினம் 2000 ஏப்ரல் 21. அவர்களின் நாட்டுப்பற்று, சமய நல்லிணக்கம், இலட்சிய மனிதன் என அவர் கூறுவது, இளைஞர் சமுதாயத்திற்கு அவர் விடுக்கும் அறைகூவல் எல்லாம் இன்றியமையாததாக உள்ளது.

அல்லாமா இக்பாலின் மூதாதையர்கள் அவரிலிருந்து 150 வருடத்திற்கு முற்பட்டவர்கள், காஷ்மீர் பிராமண பண்டித இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர், முஸ்லிம் சூஃபி ஞானியால் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கொள்கைகளிலும், ஆன்மிகத்திலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் சேர்ந்தார். ஷேக் நூர் முஹமதுவின் மகனாக பிறந்த இக்பால் இளம் பிராயத்திலேயே கல்வி, கேள்வி ஞானங்களில் சிறப்புற்று விளங்கினார்கள். பரம்பரை முஸ்லிமாக இருந்தவர்கள் இஸ்லாத்தின் உண்மை, ஞானநெறி போன்றவற்றை மறந்திருந்த அக்கால கட்டத்தில் இஸ்லாமிய ஞான நெறிகளை, கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்த அல்லாமா இக்பால் அவர்கள்,

''மீரும் மீர்ஸாவும்
தம் உள்ளத்தையும் சமயத்தையும்
அரசியலில் மூழ்கடித்து விட்டனர்.
இந்த பிராமணச் சிறுவன் மட்டுமே
அந்தரங்களை அறிந்தவனாக இருக்கின்றான்''

என்று பாடினார்.

இளம் வயது முதலே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய அல்லாமா இக்பால் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ஒருமுறை கால தாமதமாக வகுப்பிற்கு வரவே, ஆசிரியர் ''ஏன் தாமதம்'' எனக் கேட்க, அதற்கு இக்பால் அவர்கள் ''ஐயா, இக்பால் தாமதமாகத்தானே வரும்'' எனக்கூறி இக்பால் என்ற சொல்லுக்கு புகழ் என்றொரு அர்த்தம் உள்ளது என விளக்கி ஆசிரியரை வியக்கச் செய்தார்.

இந்தியாவின் மிகச்சிறந்த சட்ட நிபுணராக விளங்கிய ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ அவர்கள் அல்லாமா இக்பாலைப்பற்றி
குறிப்பிடும் போது ''உலகின் இக்கால மகா கவிகளில் அல்லாமா இக்பால் தலையானவர். உர்து, பாரசீக மொழிகளில் பாட்டுக்கள், கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்த தொழிலாளி. கடந்த 30 ஆண்டுகளுக்கு அதிகமாக நான் அவரை ஒரு முதல்தரமான கவிஞராகவும், சிந்தனையாளராகவும் மதித்து போற்றி வருகின்றேன்'' என கூறுகின்றார்.

''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா''

தாய்நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டதற்கு அல்லாமா இக்பாலின் ''உலகம் முழுவதிலும் சிறந்தது எம் ஹிந்துஸ்தானம்'' என்று அர்த்தம் கொண்ட, இன்றும் எல்லா தரப்பினராலும் எல்லா நிகழ்ச்சியிலும் பாடலாக இன்றி இசையாக இசைக்கப்படுகின்ற ''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா'' என்கிற பாடல் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

இந்தியா பல மதங்கள், பல வழிபாடுகள், பல மக்களைக் கொண்டு நாடு. எனவே

''மதம் ஒருவரோடொருவர்
சண்டை போடச் சொல்லவில்லை
ஹிந்த் நமது ஜென்ம பூமி
ஹிந்துஸ்தான் நம்முடையது''

எனப் போற்றி புகழ்ந்தார். மேலும் ''ஓ சிந்தனையற்றவனே, உன் நாட்டை எண்ணிப்பார். மேல்நாட்டில் உன்னை அழிக்க சதி நடக்கின்றது. நடப்பதையும் நடக்க இருப்பதையும் பார். வெறும் பழங்கதை பேசுவதில் என்ன இருக்கின்றது? இதை உணராவிட்டால் இந்திய மக்களாகிய நீங்கள் அழிக்கப்படுவீர்கள். உலகச் சரித்திரத்தில் உங்களின் அடிச்சுவடு இல்லாது போகும்'' என்றும்

என்னரும் இந்தியச் சகோதரர்களே!

''நீங்கள் இத்தோட்டத்தின் பாதுகாவலர்கள். எனவே இதன் பிளவு நீங்க வழிகாணுங்கள். அப்பிளவு என்னும் பேய்க்காற்று செடிகளைப் பாழாக்கி விட்டது'' மேலும் ''நீ இந்தியாவை கண்டதில்லையா? இதயமுள்ள யாரும் போற்றும் நாடல்லவா அது! அதன் ஒவ்வோர் அணுவும் உலகின் மீது ஒளி வீசினாலும், அந்தோ! அது புழுதியிலும், குருதியிலும் கிடந்து தத்தளிக்கின்றதே'' என ஜாவீது நாமா எனும் புத்தகத்தில் தனது மகனிடம் கேட்பதாக எழுதுகிறார். தனது மகன் ஜாவீது இடம் கேட்பது என்பது இளைஞர் சமூகத்திற்கே விடுக்கும் அறைகூவல் அது!

மேலும் ஒரு பாடலின் மூலம் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் போது

(காஜா மொயினுதீன்) க்ஷ¤ஸ்தி
சத்தியத்தின் செய்தியை எந்தப் பூமியில் பரப்பினாரோ,
(குரு) நானக் எந்தப் பூங்காவில்
ஏகத்துவ கீதத்தை பொழிந்தாரோ,
தாத்தாரிய (முகலாயர்கள்) எதைத்
தமது சுய நாடாக ஆக்கிக் கொண்டனரோ,
எது ஹிஜாஸ்வாசிகளை அரபுப் பாலையை விட்டு வந்து
(தன்னகத்தே) குடியேறச் செய்ததோ
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.

பாரஸீக வானிலே உடைந்து கிடந்த
(ஞானியர், கவிஞர்களாய) விண்மீண்கள்,
மீண்டும் ஒளி தந்து ஜொலிக்கச் செய்த
வானம் எங்குளதோ,
ஏகத்துவத்தின் நாதத்தை
உலகம் எத்தலத்திலிருந்து கேட்டதோ,
அரபு நாட்டின் அதிபர் (முஹம்மது (ஸல்)) அவர்களுக்கு
தண்ணென்ற பூங்காற்று எங்கிருந்து வீசியதோ,
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.

மூஸா(அலை) இறைவனுடன் பேசிய
ஸீனா மலை உலகின் இதயமாகும்.
நூஹ§ (அலை) அவர்களின் கப்பல் (கடைசியில் வந்து)
முகாமிட்டுத் தங்கிய ஜுதி மலையும் சிறப்புடையதே!
(இது போலவே) வானமளாவ வளர்ந்து மாளிகை போல்
அழகு தந்து நிற்கும் இமயமலை எங்குளதோ,
எதன் சாரலில் வாழ்வது சொர்க்க வாழ்வோ
அதுவே என் தாய்த்திரு நாடு?
அதுவே என் தாய்த்திரு நாடு.

என தாய் நாட்டின் மீது உள்ள நேசத்தை பற்றி பாடலின் வாயிலாக கூறுகின்றார்.

அரசியல்

சிறப்பு மிக்க அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவராக 1930-ல் அல்லாமா இக்பால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931-ல் லண்டனில் நடந்த 2-வது வட்ட மேஜை மாநாட்டிற்கு இக்பால் அவர்கள் ஒரு பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அவர்கள் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சந்தித்த நேருவிடம் முஸ்லிம்கள் நலம், சிறுபான்மையினர் நலம் இவற்றை எல்லாம் எடுத்துக்கூறி சுதந்திரம் பெற்ற பிறகு இவையெல்லாம் சேர்க்கப்பட வேண்டும் என கூறினார், அவருடைய கருத்துகள் நேருவின் அயல் நாட்டு கொள்கைகளில் மிகவும் பிரதிபலிக்கவே செய்தது. அல்லாமா இக்பால் மரணப்படுக்கையில் இருந்தபோது பஞ்சாபில் கஞ்ச் மஸ்ஜித் தகராறு விஷயமாக முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளை அடக்குவதற்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அதை அறிந்து வேதனையடைந்த அல்லாமா டாக்டர் இக்பால் இயலாத இந்த நிலையிலும் ''என்னை இக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு போய், கலவரம் நடக்கும் இடத்தில் வையுங்கள் துப்பாக்கி குண்டு முதலில் என் இதயத்தை துளைக்கட்டும். அப்பொழுதாவது ஒற்றுமை நிலைக்கட்டும்'' என உணர்ச்சி வசப்பட்டு கூறினார். பிற சமய மக்களையும், மதங்களையும் மதித்து வாழவேண்டும் என்று அல்லாமா இக்பால் அவர்கள் கூறினார். திருக்குர்ஆன், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அடிப்படையில் மாற்று மதத்தினவர்களிடம் சுமூகமாக, ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை வலியுறுத்தினார் கவிஞர்.

சமய நல்லிணக்கம்

இஸ்லாத்தில் முழுதும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு திருகுர் ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முறையையும் செம்மையுடன் பின்பற்றிய கவிஞர் நபியினை தரிசிப்பது என்பது நம் உடலை அவர்கள் இட்ட கட்டளைகளுக்கு உட்படுத்தி மனித நேயத்துடன் நடப்பது எனவும், இறையினை தரிசிப்பது நபியினால் போதிக்கப்பட்ட சொல், செயல்களை பின்பற்றி, இறையோடு சம்பந்தப்படும் கருணை, இரக்கம் முதலிய குணங்களை நம் மனதுள் வளர்த்து உலகிலும் அவை நிலவும்படி செய்தல்தான் என்கிறார். இஸ்லாமிய சமாதான அடிப்படையில், சாந்தி நிலவச் செய்தால் உலகில் அமைதி நிலவும் எனக்கூறும் கவிஞர், பிற சமயங்களை அன்புடன் நோக்கினார். கிருஷ்ணபகவானின் கீதை பெரிதும் அவரை கவர்ந்திருந்தது. ஹிந்து சமுதாயத்தை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும் எனக் கூறிய கவிஞர், அலஹாபாத் முஸ்லிம் லீக் மகாநாட்டில் அவர் எழுப்பிய உரை ''பிற வகுப்பினரிடம் கெட்ட எண்ணங்கொண்ட எந்த வகுப்பும் கீழ்த்தரமானது; வெறுக்கத்தக்கது. பிற வகுப்பினரின் பழக்கவழக்கங்களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் நான் மரியாதை காட்டுகின்றேன். அவசியமேற்படின் திருக்குர் ஆன் கட்டளையிடுகிறபடி அவற்றை பாதுகாப்பது என் கடமையாகும். எனினும் என் வாழ்க்கை, நடத்தை ஆகியவற்றின் உற்பத்தியாக விளங்கும் வகுப்பிடம் நான் அன்பு கொண்டுள்ளேன்; அவ்வகுப்பு தன் மதம், தன் இலக்கியம், தன் கலாச்சாரம் ஆகியவற்றைத் தந்து எனது உணர்ச்சியில் ஜீவசக்தியாக நின்று நான் இன்றுள்ள நிலைக்கு என்னை உயர்த்திற்று.

மேலும் ஒரு பாடலில்

நான் கோயிலுக்கு மரியாதை செய்கிறேன்;
கஃபாவின் முன் அடிபணிகிறேன்.
என் மார்பில் பூணூல் உண்டு;
என் கையில் ஜெபமாலை மிளிர்கிறது.

என தனது உரையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும் தனது சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

சிறப்பு மிக்க உர்தூ, பாரஸீக சிந்தனையாளர் ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ ஒரு கடிதத்தில் அல்லாமா இக்பாலை பற்றி குறிப்பிடுகின்றார்.

''இக்பால் முஸ்லிம் தத்துவத்தையும், முஸ்லிம் கலைப்பண்பையும், முஸ்லிம் தீரச் செயல்களையும் பற்றி அதிகம் எழுதியுள்ளார் என்பது உண்மைத்தான். ஆனால் மில்டனைக் கிறிஸ்த்தவக் கவிஞன் என்று கூறி அவர் கவிதைகளை கட்டுப்படுத்தவோ, காளிதாஸனை ஹிந்து சமயக் கவி என்று கூறி அவர் கவிப் பெருமைக்கு வேலியிடவோ யாரும் முயன்றதில்லை; மற்ற மதத்தினரும் இதே காரணத்திற்காக இக்கவிஞர்களின் பெருமையைக் குறைத்துக் கூறியதுமில்லை. இக்பால் முஸ்லிம் சரித்திர வெற்றிகளையும் கலாசார சாதனைகளையும் குறித்து எழுதினால், அதற்காக முஸ்லிமல்லாதவர் அவரைக் குறையாக மதிப்பிட்டு விட முடியாது.

''ஊணாலும் உடலாலும் பொருளாலும் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். மந்தமாய் இருத்தலின்றிப் பூரண மனோ எண்ணத்துடனும் சக்தியுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வரவேண்டும். போலி ஒற்றுமை நிலைக்காது. உள்ளம் பொருந்த ஒற்றுமையாய் இருங்கள். ஒருவர் அனுபவிக்கும் இன்பத்தை அனைவரும் நுகர ஆவன செய்வது நன்மைபயக்கும். நல்லவற்றையே சிந்தியுங்கள். நல்லனவே செய்யுங்கள். வல்லவனுக்கு இது உகந்தது'' என மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்கள் மனிதர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி கூறுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

ஆன்மிகம்

ஆழ்ந்த நாட்டுப்பற்று கொண்டும், இளைஞர்களை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்ட கவிஞர் இக்பால் அவர்கள், இளைஞர்கள், செயலாற்றுவதில் முழு கவனம் செலுத்த வேண்டும், அயராமல் உழைக்க வேண்டும், நாட்டைச் சீர்படுத்த வேண்டும் என்று எப்பொழுதும் இளைஞர்களை ஊக்குவிப்பவர்களாக இருந்தார். மனிதனின் அகமிய வளர்ச்சிக்கு அன்பு, தேவையற்ற உலக ஆசைகள் பற்றிய அக்கறையே முற்றுமற்றிருப்பது, தீரம், சகிப்புத்தன்மை, உணவு தேடல், திறனை வளர்த்தல், ஆகியன முக்கியமானவை என்றார். லக்ஷ¤யங்களையும், மதிப்புகளையும் உண்டாக்கி அவற்றை எய்த முயற்சிப்பதே அன்பின் உன்னதமான படித்தரமாகும் எனக்கூறும் கவிஞர் அச்சம், யாசகம், அடிமைத்தனம், சாதி பிரிவு, உயர்குலம், தாழ்குலம், பேதம் ஆகியவை களையப்பட வேண்டும் என்கிறார். பொதுவாக சட்டங்களுக்கு கீழ்படிந்து, தன்னை கட்டுப்படுத்தி, இறைவனின் பிரதிநிதித்துவத்தை எய்துதல் மனிதனுக்கு அவசியம் என்கிறார் அல்லாமா இக்பால் அவர்கள்.

சுதந்திர வேட்கையூட்டிய, இளைஞர்களை எழுச்சியூட்டிய பாரதியும், இக்பாலும் இந்திய மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பே இயற்கை எய்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர்கள் கனவு கண்ட இலக்ஷ¤ய இந்தியா, இலக்ஷ¤ய இளைஞர்கள் இருக்கின்றனரா என்பது கேள்விக்குறி. சமுதாய விஞ்ஞானிகள் தோன்ற வேண்டும், சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், மத ஒற்றுமை வளர வேண்டும்.

''மனித இனம் ஒரே இனம். சாதியெனும் உயர்வு, தாழ்வு ஒழிய வேண்டும். இதைக் கடமையாகவும் கொடுமையாகவும் கடைப்பிடிப்பவர்கள் அழியவேண்டும். இறைவன் மனிதனில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. அதன்படி தண்டனை கொடுப்பதில்லை. மனிதனின் உள்ளத்தையே இறைவன் நோக்குகின்றான். ஒற்றுமை, சுதந்திரம், சகோதரத்துவம் மனிதனுக்குள் இருக்க வேண்டும். மனிதனின் உள்ளம் பாற்போல் இருக்க வேண்டும். இவனே ஜயம் பெற்றவன்'' என நபி(ஸல்) அவர்களின் திருப்பேரர் மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலான அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்கள் மனித இனத்தில் ஏற்ற தாழ்வுகளை இல்லை என்பதை அழகாக எடுத்தியம்புகிறார்கள்.

அல்லாமா இக்பால் அவர்கள் கூறுகின்ற ஒவ்வொரு மனிதனும் சிறிய அளவில் ஒரு சிருஷ்டிகர்த்தனே. இச் சிருஷ்டி சக்திகளைப் பாழாக்குவது பெரும் பாவமாகும்.

''செயலாற்றுவோர் முன்னேறுகின்றனர்
ஒருக்கணமவது ஓய்பவர்கள்
சதா சுழன்றுகொண்டிருக்கும்
கால சக்கரத்தில் சிக்கி நசுக்குண்டு விடுகின்றனர்''

என்று கூறும் கவிஞர்

''ஹே, இந்தியாவே,
உன் நிலை என்னை சுழலச்செய்கிறது
கதைகளிலெல்லாம், உன் கதையே வெகு துயரமானது''

என்று தனது நாட்டைபற்றி ஆதங்கப்படுகின்றார்.

''இந்தியர்களே! வானத்தின் அங்கியுள்ளே
இடி மறைந்திருக்கிறது.
இப்பாரத பூமியின் புல்புல் களான நாம்
கவலையற்று நம் கூடுகளில் தூங்கிக்
கொண்டிருக்க இதுவன்று நேரம்''

என்று இந்தியர்களை விழிக்கச்செய்கின்றார்.

மேலும் அவர் வடித்த இதய ராகம் இன்றைய சூழலில் எவ்வளவு பொருந்தும்.

''என்னருமை மக்களே!
இப்பூமியில் ஒரு புதிய தேவாலயத்தை
அன்புக்கோயிலை,
பரஸ்பரம் ஒருவரையொருவர்
நேசிக்கச் செய்யும் நிலையத்தை
எழுப்புவோம் வாரீர்!''

என தன் தாய் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

நம் இந்தியர்கள் சாதி, மத இன பேதமின்றி ஒன்றுபட்டு, இலக்ஷ¤ய கவிஞர், சிந்தனையாளர், தத்துவஞானி அல்லாமா டாக்டர் இக்பாலின் வார்த்தைகளை செவியுற்று புதியதோர் இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும் என்பதையே இந்த 60-ம் ஆண்டு நினைவு தினத்தின் செய்தியாக கொள்வோம்.

http://www.ambalam.com/idhal/special/2000/April/special23_03.html

Tuesday, July 22, 2008

ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் ! - தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

முன்னோக்கும் என் நோக்கு :

ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் !

- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்


வீடும் வாசலும் நம்மிரு விழ்கள்தாம். அந்த விழிகள், வெறுமையை - பசுமையற்ற வாழ்க்கைப் பாதையை - எவ்வளவு நாள்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும் ?

பொருளீட்டல் பூக்கள், எத்தனை தூரத்தில் இருந்தால் என்ன ? அவற்றை அடைந்தால்தானே வாழ்க்கையே அழகாகும் ?

இந்த யதார்த்த உண்மை, தகைசால் ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களின் கேள்வியில் கிளைத்திருந்தது.

நான் எழுதியுள்ள இளைஞனே புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் நான் இவ்வாறு கேட்டிருந்தேன்.

வீட்டுக்கு வருகின்றாய் ஒரு விருந்தினரைப் போல. நீ என்ன சரக்குக் கப்பலா, சாமான்களை இறக்கிவிட்டுச் செல்ல ?

எனினும் அரபிக் கடலில் நம் இளைஞர்கள் வியர்வை நீச்சல் அடிக்காமல் இருந்திருந்தால் - செல்வ முத்துக்களைச் சேமித்திருக்க முடியுமா ?

இன்றைக்கு துபாய் நாட்டின் பெருநகர வீதியொன்றில் ‘ஸலாஹுத்தீன் தெரு' என ஒளிவீசக் காணமுடிகிறதென்றால் - அது, பிற்ந்த நாட்டை விட்டுப் பிரிந்து சென்ற அறிவையும் உழைப்பையும் முதலீடு செய்ததால் தானே ?

இதனை துபாய்ப் பயணம், எனக்குத் துல்லியமாகத் துலக்கியது.

சொந்த நாட்டில் - வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. கைப்பொருளை விற்றுக் காசாக்கி, சிறு கடையொன்றில் வியாபாரம் செய்தாலும் அதனால் குடும்பத்தைக் கால் வயிறுகூட கழுவ முடிவதில்லையே !

இந்த வெட்ட வெளிச்சமான வெப்ப உண்மைதானே நம் இளைஞர்களை விரட்டுகிறது. வேலை தேடச் சொல்லி வெளிநாட்டிற்கு ?

துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய அமீரக நாடெனும் குளத்துத் தாமரைகளாகப் பூத்திருக்கும் தமிழக இளைஞர் முகங்களை நான் பார்த்த போது மலர்ந்தே காணப்பட்டன.

இந்ந்நாடுகளில் வேலை வாய்ப்பு நெல்மணிகள் அதிகமாக விளைந்து கிடக்கின்றன. எனவே நம் நாட்டு இளைய தலைமுறை, அந்த நெல்மணிகளை அறுவடை செய்யப் புறப்படுதல் தவறே அல்ல என்பதை நேரிற் கண்டுணரும் வாய்ப்பைப் பெற்றேன்.

எனவே மதிப்புமிகு ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களிடம் நான் சொன்னேன் :

நிலவின் ஒரு பக்கத்தை குறிப்பிட்டது போல, அயலகம் செல்வதைத் தவிர்க்கலாம்' என எழுதிவிட்டேன். இனி நிலவின் மறுபக்கமான ‘வேலை தேடி விரைந்து செல்லுங்கள்' என்று குறிப்பிடுவேன் என நான் விளக்கம் தந்ததும் ஸலாஹுத்தீன் காக்கா சிரித்துவிட்டார்கள்.

குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான், ‘இந்த உலகமே மனித உலகத்திற்கு' என்று. மனிதன் தான், உன் நாடு, என் நாடு என எல்லை பிரித்து, இயல்புகள் பிரிந்தும் கெட்டுக் கிடக்கின்றன.

திரைகடலோடியும் திரவியம் தேடு' எனபதும் மேலே சொன்ன குர்ஆனின் கூற்றுக்கு இணங்கக் கூறப்பட்டதுதான்.

கரும்புகள் விளைச்சல் கண்டிருப்பது போல - எங்கு பார்த்தாலும் கட்டட விளைச்சல்கள், பாலைவனமெங்கும் இன்று பல நூற்றுக்கணக்கில் அடுக்கு மாடிகள் அரும்பிக் காணப்படுகின்றன.

பெட்ரோலியப் பொருளாதாரம் - அமீரகத்தை - கடலைத் திடலாக்கும் அளவுக்குக் கட்டுமீறி காணப்படுகிறது. செல்வச் செழிப்பும் அதனையொட்டி நவநாகரீகப் பயன்பாட்டுப் பொருட்குவியலும் - சூப்பர் மார்க்கெட்களாக சூழ்ந்து கிடக்கின்றன.

குடும்பத்தை விட்டு அமீரகத்தில் குழுமியிருக்கும் நம் தோழர்கள், மீலாதுந்நபி விழாவை - ஒன்று ஒருமித்துச் சிறப்புச் செய்து வருகிறார்கள்.

துபாயில் ஈமான், அபுதாபியில் அய்மான் என உருவான அமைப்புகள் தமிழ் முஸ்லிகளின் பண்பாடுகளைப் பேணி வருகின்றன.

தரை வழிப் பயணத்திற்குப் பேருந்தும், ஆற்று வழிப் பயணத்திற்குக் கப்பலும், ஆகாய வழிப் பயணத்திற்கு விமானமும் போல மேற்கண்ட பண்பாட்டு அமைப்புகள், தங்கள் தங்களுக்கெனத் தனித்தனி வழிமுறைகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

துபாய் ஈமான் அமைப்பின் சார்பாக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

தூதர் திருநபி ( ஸல் ) அவர்களின் சிறப்புக்களை எடுத்துக்காட்ட - திருக்குறளில் இருந்து ஒரு மேற்கோளுடன் என் உரைப்படகு, மேடை நதியில் வெள்ளோட்டங் கண்டது.

தூது உரைப்பவர் பற்றி திருக்குறளில் -

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று' என இலக்கியம் செய்யப்பட்டதற்கு இலக்கணமாக நபி ( ஸல் ) அவர்கள் விளங்குகிறார்கள். அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய மூன்று குணாம்சங்களில் நபிகளாரின் வாழ்க்கையிலிருந்து விளக்கம் தந்த என் பேச்சு குவைத் மஸ்ஜித் இமாம் அவர்களுக்கு ஒப்பவில்லை போலும் அது.

-- தொடரும்



நன்றி : இஸ்மி - ஜுலை 2005

Thursday, May 1, 2008

இறையச்சம்

இறையச்சம்

கவிஞர் திலகம் ம. முஹம்மது மைதீன்

அச்சம் பறந்து விடும் - இறையச்சம்
ஆன்மா குடிபுகுந்தால் - அறம்
உச்சத்தில் நின்றாடும் - செயலில்
உண்மை ஒளிர்வதனால் !

பொங்கும் கவிதைகளில் - இறையச்சம்
பூத்துமணம் பரப்பும் - இதத்தில்
தங்கி அருவியெனத் - தீன்மொழி
தவழ்ந்தே நெறிநிரப்பும் !

வாழும் உயிர்களிலே - இறையாக்க
வார்ப்படம் மின்னுதல்போல் - துயர்
சூழும் மதவெறிகள் - நீங்கித்
தூய்மைதலை தூக்கும் !

தாய்மையைப் போற்றிடுவீர் - பெண்குலத்
தலைமையை ஏற்றிடுவர் - கற்பின்
தூய்மை இருபாலர் - தமக்கும்
தொடர்பெனக் கொண்டிடுவர் !

தீவிர வாதமெனும் - கொடிய
தீயை அணைத்துவிடும் - இறையச்சம்
மேவிய நெஞ்சத்திலே - வன்முறை
மேகமென மறையும் !

பாதை நெற்மறந்தால் - திருமறைப்
பாடநெறி துறந்தால் - இரு
காதுக ளற்றயானை - போலக்
காட்சி யளிப்பாரே !


இனிய திசைகள் - பிப்ரவரி 2008 இதழிலிருந்து

27 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 2 493 6115

Sunday, March 30, 2008

துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா

துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா

துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் 05
மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் கவிஞர் அபிவை டி.எம்.எம்.
தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.


விழா நிகழ்வு மீரா. அப்துல் கதீம், இ. இசாக், சே.ரெ. பட்டணம் மணி, குத்தாலம் அஷ்ரப் அலி, பாரத், கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர்

சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ். தாஜுதீன் வாழ்த்துரை வழங்க
உள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 050 4547046/050 4804113
மின்னஞ்சல் தொடர்புக்கு : Abdul Katheem

Thursday, August 2, 2007

தமிழ் முஸ்லிம் பதிப்பகங்கள்

இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிஷர்ஸ் & புக் செல்லர்ஸ்
எண் 62/1 மலையப்பன் தெரு
மண்ணடி
சென்னை 600 001
போன் : 65287503
செல் : 98 402 73818


Basharath Publishers
No 83 Angappan Street
Chennai 600 001
Tel : 2522 5028

Ilakiya Cholai
No 83 Sheikhna Mansion
Shop No 3 Angappan Street
Chennai 600 001
No 25 Baracks Road
Periamet
Chennai 600 003


Islamic Foundation Trust
No 138 Perambur High Road
Chennai 600 012
Tel : 2662 4401
www.iftchennaiorg.com

Islamic Foundation Trust - Branch
No 4 Town Hall Road
Masjid First Floor
Madurai 625 001
Tel : 4375653

ஜன்னத் புக்ஸ் கிப்ட் செண்டர்
ஸலாமத் புக் செண்டர்
மஸ்ஜிதே மஃமூர் வளாகம்
எண் 168/3 அங்கப்ப நாயக்கன் தெரு
சென்னை 600 001
தொலைபேசி : 044 4235 8274 / 98 411 28316
அதிராம்பட்டினம் : 0473 241615 / 99 413 94287



Media Research Foundation
No 142 North Veli Street
Madurai 625 001
Tel : 0452 2321500
98949 92298

புதுயுகம்
84-3 ஷேக்னா மேன்ஷன்
அங்கப்பன் தெரு
சென்னை 600 001
தொலைபேசி : 256 10 969

Rahmath Publications
No 6 Second Main Road
C I T Colony
Mylapore
Chennai 600 004
Tel : 2499 7373
E-mail : rahmathpublications@hotmail.com
www.rahmath.net

ஸலாமத் பதிப்பகம்
எண் 197 லிங்கிச் செட்டி தெரு
முதல் மாடி
சென்னை 600 001
போன் : 2521 1981/4216 7320
செல் : 98 413 81466

ஸலாமத் புக் செண்டர்
மஸ்ஜிதே மஃமூர் வளாகம்
எண் 168/3 அங்கப்ப நாயக்கன் தெரு
சென்னை 600 001
தொலைபேசி : 044 4235 8274 / 98 411 28316



Universal Publishers
No 2 North Usman Road
Near Kodambakkam Bridge
T. Nagar
Chennai - 600 017
Tel : 2834 3385
Cell : 94440 47786
E-mail : universal_pub2002@yahoo.co.in


கவிஞர் அபிவிர்தீஸ்வரம் டி.எம்.எம். தாஜுத்தீன் அவர்களது படைப்புகளைப் பெற

கவிநேசன் பதிப்பகம்
அபிவிருத்தீஸ்வரம் 613 705
போன் : 04366 232 150
98 435 71866


Sharjah

Charitable Book & Cassette Center
P O Box No 1678
Sharjah
UAE
Tel 06 522 0909
Fax 06 524 2463
E mail : charitablebook@hotmail.com