பணம்
பணம் பற்றி உலக அறிஞர்கள் கூறுவது:
ஹென்றிக் இப்சன்
பணத்தால் உணவை வாங்கலாம்; ஆனால் பசியை வாங்க முடியாது.
பணத்தால் தொடர்புகளைப் பெறலாம்; ஆனால் நண்பர்களைப் பெற முடியாது.
பணத்தால் வேலையாட்களைப் பெறலாம்; ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.
பணத்தால் பலநாள் சந்தோஷத்தைப் பெறலாம்; ஆனால் அமைதியை, இன்பத்தை பெற முடியாது.
ஆண்ட்ரோ மாராயிஸ் – பணத்தையோ வெற்றியையோ பேராசையோடு தேடுவதால் துக்கம்தான் ஏற்படும். ஏனெனில் அப்படிப்பட்ட வாழ்க்கை தங்களுக்கு வெளியே உள்ளவற்றைச் சார்ந்திருக்கச் செய்கிறது.
எட்வர்ட் பாக் – மனிதனால் உணவை உண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. பணத்தைச் சம்பாதிப்பது, அதன் மூலம் அதிகாரத்தைச் சேர்ப்பதால் வாழ்விற்கு பயனில்லை. வாழ்வு இவற்றை விட மேலானது. இந்த உண்மையை அறியாதவற்கள், அடுத்தவா்களுக்கு சேவை புரிவதால் கிடைக்கும் மாபெரும் சந்தோஷம், திருப்த்தியை அடையமாட்டார்கள்.
ஜார்ஜ் ஹோரேஸ் லாரிபர் – பணத்தையும் பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களையும் பெற்றிருப்பது நல்லதுதான். ஆனால் அவ்வப்போது பரிசோதித்துப் பார்த்து பணத்தால் பெற முடியாதவற்றை நீங்கள் இழந்துவிடவில்லை என்று நிச்சயம் செய்து கொள்வதும் நலமே!!!
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts
Thursday, September 9, 2010
Thursday, March 18, 2010
பணம் தேடும் பந்தயத்தில் .......
பணம் தேடும் பந்தயத்தில் .......
வத்திய மேனியும்
நெற்றியில் வியர்வையுமாக
இங்கே நான்!
கருகிப்போன
கனவுகளுடன்
விட்டு வந்த சொந்தங்களுக்கு
இன்னும் நான்
விடுகதையாய்!!
கூழோ! கஞ்சியோ!
குடிக்கும் போது நீ வேண்டும்;
என எத்தனை முறை சொன்னாலும் நீ;
மூட்டை முடிச்சுடன்
மூட்டைப் பூச்சிகளுடந்தான்
இங்கே நான்!!
பட்டதுப் போதும்
கட்டியவள் அங்கே - என
காட்சிகள்
சாட்சிகள் சொன்னாலும்;
முகெலும்பை ஒடிக்கும்
கடன் மட்டுமே
கண் முன்னாடி!!
பணம் தேடும்
பந்தயத்தில்
பணயமாக நீ மட்டுமே!!
விடைக் கிடைத்தால்
விடைக் கொடுத்துவிடுவேன்
வளைக்குடாவிற்கு!!
சிக்கிய எச்சிலுடன்
சீக்கிரம் வந்துவிடுவேன் என்றாலும்;
உள் அர்தத்தை
உன்னைத் தவிர யாரும் புரிந்துக் கொள்ளமுடியாது!!
வழிந்தோடும்
உன் கண்ணீரை
என் கரம் கொண்டு துடைக்கத்தான் ஆசை;
ஆனால்
அனுப்ப முடிந்தது
வெளி நாட்டு கைக்குட்டை மட்டுமே!!!
- யாசர் அரஃபாத்
வத்திய மேனியும்
நெற்றியில் வியர்வையுமாக
இங்கே நான்!
கருகிப்போன
கனவுகளுடன்
விட்டு வந்த சொந்தங்களுக்கு
இன்னும் நான்
விடுகதையாய்!!
கூழோ! கஞ்சியோ!
குடிக்கும் போது நீ வேண்டும்;
என எத்தனை முறை சொன்னாலும் நீ;
மூட்டை முடிச்சுடன்
மூட்டைப் பூச்சிகளுடந்தான்
இங்கே நான்!!
பட்டதுப் போதும்
கட்டியவள் அங்கே - என
காட்சிகள்
சாட்சிகள் சொன்னாலும்;
முகெலும்பை ஒடிக்கும்
கடன் மட்டுமே
கண் முன்னாடி!!
பணம் தேடும்
பந்தயத்தில்
பணயமாக நீ மட்டுமே!!
விடைக் கிடைத்தால்
விடைக் கொடுத்துவிடுவேன்
வளைக்குடாவிற்கு!!
சிக்கிய எச்சிலுடன்
சீக்கிரம் வந்துவிடுவேன் என்றாலும்;
உள் அர்தத்தை
உன்னைத் தவிர யாரும் புரிந்துக் கொள்ளமுடியாது!!
வழிந்தோடும்
உன் கண்ணீரை
என் கரம் கொண்டு துடைக்கத்தான் ஆசை;
ஆனால்
அனுப்ப முடிந்தது
வெளி நாட்டு கைக்குட்டை மட்டுமே!!!
- யாசர் அரஃபாத்
Friday, January 22, 2010
பணமே! பணமே!
பணமே! பணமே!
அருளில்லார்க்கு
அவ்வுலகில்லை
பொருளில்லார்க்கு
இவ்வுலகில்லை-எனும்
நன்மொழி படித்து
உன்னை நேசித்தேன்.
அல்லும் பகலும்
அயராதுழைத்தேன்.
அவனியில் வாழ்ந்திட
அயராதுழைத்தேன்.
உனைத்தேடித் தேடி-என்
உறவுகளை மறந்தேன்.
உனைத்தேடி அடைந்திட
பல்லிடம் அலைந்தேன்.
படைத்தோன் விதித்த
தடைகளை மீறி-உனை
ஈட்டிச் சேர்த்தேன்.
வட்டியில் ஈட்டிய
மொத்தப் பணத்தையும்
பெட்டியில் வைத்தே
பூட்டினை இட்டேன்.
உன் மூலம்-நான்
நிம்மதி பெறவே
உனைத் தேடி உலகினில்
நாள்தோறும் அலைந்தேன்.
அயல்நாடு சென்று
அயராதுழைத்தேன்.
உவர்நீர் சிந்தி
உற்சாகமாய் உழைத்தேன்.
உற்ற மனைவியை
பெற்ற பிள்ளைகளை
பற்றின்றி துறந்தேன்.
ஆனால்
நீ வந்த பின்பே
நிம்மதியிழந்தேன்.
நித்தமும் கட்டிலில்
நித்திரை இழந்தேன்.
உனை அடைந்திடவே
இத்தரணியில்
எத்தனை குற்றங்கள்!
எத்தனை கொலைகள்!
பணம் பாதாளம்வரை
பாயும்.
பணம் பத்தும்
செய்யும்.
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே.
உனக்குத்தான்
எத்தனையெத்தனை
பழமொழிகள்!
உனை அடைந்திடத்தானே-ஒரு
வஞ்சியவள்
வேசியானாள்.
உனைப்
பெற்றிடத்தானே
பெற்றவளையே-ஒரு
தனயன் கொன்றான்.
உனைப் பெற்றிடத்தானே
உடன்பிறந்தானின்
உயிரையே பறித்தான்.
உனை அடைந்திடத்தானே-பல
தடைகளை மீறி-பிறர்
உடைமைகளைக்
களவு செய்தான்.
உனைப் பெற்றிடத்தான்
எத்தனையெத்தனை
குறுக்கு வழிகளை
குறுமதி மானிடன்
கைக்கொள்கிறான்.
பெருவாரியாக-உனைப்
பெற்றிட எண்ணி
கள்ளத்தனமாய்
கள்ள நோட்டடித்தான்.
இன்று-அவன்
சிறையறைக்குள்
சிக்குண்டு தவிக்கிறான்
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி
kindly visit:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
www.baquaviarvideo.magnify.net
அருளில்லார்க்கு
அவ்வுலகில்லை
பொருளில்லார்க்கு
இவ்வுலகில்லை-எனும்
நன்மொழி படித்து
உன்னை நேசித்தேன்.
அல்லும் பகலும்
அயராதுழைத்தேன்.
அவனியில் வாழ்ந்திட
அயராதுழைத்தேன்.
உனைத்தேடித் தேடி-என்
உறவுகளை மறந்தேன்.
உனைத்தேடி அடைந்திட
பல்லிடம் அலைந்தேன்.
படைத்தோன் விதித்த
தடைகளை மீறி-உனை
ஈட்டிச் சேர்த்தேன்.
வட்டியில் ஈட்டிய
மொத்தப் பணத்தையும்
பெட்டியில் வைத்தே
பூட்டினை இட்டேன்.
உன் மூலம்-நான்
நிம்மதி பெறவே
உனைத் தேடி உலகினில்
நாள்தோறும் அலைந்தேன்.
அயல்நாடு சென்று
அயராதுழைத்தேன்.
உவர்நீர் சிந்தி
உற்சாகமாய் உழைத்தேன்.
உற்ற மனைவியை
பெற்ற பிள்ளைகளை
பற்றின்றி துறந்தேன்.
ஆனால்
நீ வந்த பின்பே
நிம்மதியிழந்தேன்.
நித்தமும் கட்டிலில்
நித்திரை இழந்தேன்.
உனை அடைந்திடவே
இத்தரணியில்
எத்தனை குற்றங்கள்!
எத்தனை கொலைகள்!
பணம் பாதாளம்வரை
பாயும்.
பணம் பத்தும்
செய்யும்.
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே.
உனக்குத்தான்
எத்தனையெத்தனை
பழமொழிகள்!
உனை அடைந்திடத்தானே-ஒரு
வஞ்சியவள்
வேசியானாள்.
உனைப்
பெற்றிடத்தானே
பெற்றவளையே-ஒரு
தனயன் கொன்றான்.
உனைப் பெற்றிடத்தானே
உடன்பிறந்தானின்
உயிரையே பறித்தான்.
உனை அடைந்திடத்தானே-பல
தடைகளை மீறி-பிறர்
உடைமைகளைக்
களவு செய்தான்.
உனைப் பெற்றிடத்தான்
எத்தனையெத்தனை
குறுக்கு வழிகளை
குறுமதி மானிடன்
கைக்கொள்கிறான்.
பெருவாரியாக-உனைப்
பெற்றிட எண்ணி
கள்ளத்தனமாய்
கள்ள நோட்டடித்தான்.
இன்று-அவன்
சிறையறைக்குள்
சிக்குண்டு தவிக்கிறான்
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி
kindly visit:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
www.baquaviarvideo.magnify.net
பணமே வருகை தருவாயா?
பணமே வருகை தருவாயா?
நீ
செல்வந்தர்களோடுதானே
உறவு வைத்துக்கொள்கிறாய்!
அவர்களைத்தானே
அன்றாடம் நீ
தேடிச் செல்கிறாய்!
ஏழைகள் எங்களின்
வீட்டுக்கு
வருகை தந்து-எம்
வறுமையைப்
போக்கமாட்டாயா?
நீயும்
கேடுகெட்ட மானிடரைப்
போன்றுதானோ?
அவர்கள்தாம்
வசதியுடையோருடனே
ஒட்டிக்கொள்வர்.
வசதியற்றோரை
வெட்டிக்கொள்வர்.
நீ
செல்வந்தர்களின்
இல்லங்களில்
சோம்பேறியாய்த்
துயில்கொள்வதைவிட
ஏழைகள் எங்களின்
குடிசைகளுக்கு
வருகை தந்து-எங்களின்
வயிறுகள் நிரப்பலாமே!
நீ ஏன்
செல்வந்தர்களின்
பெட்டிகளுக்குள்
சிறைபட்டுக் கிடக்கின்றாய்?
எங்களின்
இல்லங்களுக்கு-நீ
வருகை தந்தால்
நாங்கள் உனைச்
சுதந்திரமாகத்
திரியவிடுவோமே!
செல்வந்தர் வீட்டில்
சிறைபட்டுக் கிடப்பதே
உன் விருப்பமா?
ஏழைகள் எங்களின்
இல்லங்களுக்கு
வருகை தந்து
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கமாட்டாயா?
ஏழை வீட்டுக்கு
வருகை தந்து-எங்கள்
குழந்தைகளின்
பசிபோக்க மாட்டாயா?
எங்கள் பிள்ளைகளின்
உயர்படிப்புக்கு
உதவிசெய்ய மாட்டாயா?
இங்கே
வெம்பி வாடும்-முதிர்
கன்னிப் பெண்டிரின்
திருமணத்தை
நடத்தி வைக்கமாட்டாயா?
தினம் தினம்
துன்பத்தில் துவளும்-எங்கள்
துயரத்தைக் களைந்திட-எம்
இல்லங்களுக்கு-நீ
என்றுதான்
வருகை தருவாயோ?
உன்
வரவுக்காகக்
காத்திருக்கும்
பரம ஏழை.
......................................
--
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி
kindly visit:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
www.baquaviarvideo.magnify.net
நீ
செல்வந்தர்களோடுதானே
உறவு வைத்துக்கொள்கிறாய்!
அவர்களைத்தானே
அன்றாடம் நீ
தேடிச் செல்கிறாய்!
ஏழைகள் எங்களின்
வீட்டுக்கு
வருகை தந்து-எம்
வறுமையைப்
போக்கமாட்டாயா?
நீயும்
கேடுகெட்ட மானிடரைப்
போன்றுதானோ?
அவர்கள்தாம்
வசதியுடையோருடனே
ஒட்டிக்கொள்வர்.
வசதியற்றோரை
வெட்டிக்கொள்வர்.
நீ
செல்வந்தர்களின்
இல்லங்களில்
சோம்பேறியாய்த்
துயில்கொள்வதைவிட
ஏழைகள் எங்களின்
குடிசைகளுக்கு
வருகை தந்து-எங்களின்
வயிறுகள் நிரப்பலாமே!
நீ ஏன்
செல்வந்தர்களின்
பெட்டிகளுக்குள்
சிறைபட்டுக் கிடக்கின்றாய்?
எங்களின்
இல்லங்களுக்கு-நீ
வருகை தந்தால்
நாங்கள் உனைச்
சுதந்திரமாகத்
திரியவிடுவோமே!
செல்வந்தர் வீட்டில்
சிறைபட்டுக் கிடப்பதே
உன் விருப்பமா?
ஏழைகள் எங்களின்
இல்லங்களுக்கு
வருகை தந்து
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கமாட்டாயா?
ஏழை வீட்டுக்கு
வருகை தந்து-எங்கள்
குழந்தைகளின்
பசிபோக்க மாட்டாயா?
எங்கள் பிள்ளைகளின்
உயர்படிப்புக்கு
உதவிசெய்ய மாட்டாயா?
இங்கே
வெம்பி வாடும்-முதிர்
கன்னிப் பெண்டிரின்
திருமணத்தை
நடத்தி வைக்கமாட்டாயா?
தினம் தினம்
துன்பத்தில் துவளும்-எங்கள்
துயரத்தைக் களைந்திட-எம்
இல்லங்களுக்கு-நீ
என்றுதான்
வருகை தருவாயோ?
உன்
வரவுக்காகக்
காத்திருக்கும்
பரம ஏழை.
......................................
--
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி
kindly visit:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
www.baquaviarvideo.magnify.net
Tuesday, March 24, 2009
பணம்
பணம்
பணம்
பொருளாதார
மின்சாரம்
அரசாங்கத்தின்
அலாவுதீன்
விளக்கு
பணமே !
கரன்ஸிநோட்டில்
நீ
பதிவு
செய்திருப்பது
கலையெழுத்து
அல்ல,
பலரின்
தலையெழுத்து
நேர்மையாய்
வியாபாரம்
செய்தால்
நீ
வெள்ளை
கணக்கில்
விபச்சாரம்
செய்தால்
நீ
கறுப்பு
ஸ்விஸ்வங்கியில்
ரகசியமாய்
உன்னைச்
சிறை
வைத்தாலும்,
உலகை
தொடர்ந்து
ஆள்பவன்
நீ
நீ
ஒரு
பாரபட்ச
பல்லாக்கு
ஏழை
உன்னை
சுமக்கிறான்
நீ
பணக்காரனை
சுமக்கிறாய்
வாழ்க்கை
நீ
இருந்தால்
துபாய்
இல்லாவிட்டால்
கிழிந்த பாய்
-எம்.ஏ.ஷாகுல் ஹமீது -
பணம்
பொருளாதார
மின்சாரம்
அரசாங்கத்தின்
அலாவுதீன்
விளக்கு
பணமே !
கரன்ஸிநோட்டில்
நீ
பதிவு
செய்திருப்பது
கலையெழுத்து
அல்ல,
பலரின்
தலையெழுத்து
நேர்மையாய்
வியாபாரம்
செய்தால்
நீ
வெள்ளை
கணக்கில்
விபச்சாரம்
செய்தால்
நீ
கறுப்பு
ஸ்விஸ்வங்கியில்
ரகசியமாய்
உன்னைச்
சிறை
வைத்தாலும்,
உலகை
தொடர்ந்து
ஆள்பவன்
நீ
நீ
ஒரு
பாரபட்ச
பல்லாக்கு
ஏழை
உன்னை
சுமக்கிறான்
நீ
பணக்காரனை
சுமக்கிறாய்
வாழ்க்கை
நீ
இருந்தால்
துபாய்
இல்லாவிட்டால்
கிழிந்த பாய்
-எம்.ஏ.ஷாகுல் ஹமீது -
Friday, July 25, 2008
'எம்.பி.க்கள் விலை 25 கோடியா?' - பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. கருத்து
'எம்.பி.க்கள் விலை 25 கோடியா?'
மனம் திறக்கிறார்கள் எம்.பி.க்கள்!
வருகின்ற 22ஆம் தேதி, பிரதமர் மன்மோகன்சிங் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அதற்காக எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்கள். சிறிய கட்சித் தலைவர்களுக்கு பெரும் கிராக்கி இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேச்சு.
"ஒரு எம்.பி.க்கு 25 கோடி ரூபாயிலிருந்து, 30 கோடி ரூபாய் வரைக்கும் பேரம் பேசப்படுகிறது' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான ஏ.பி. பரதனே குற்றம் சாட்டியுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் அரசை ஆதரித்த இடது சாரிகள், இப்போது மற்ற கட்சிகளும், சுயேச்சை எம்.பி.க்களும் காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிக்க முன் வருகின்ற நேரத்தில் இப்படியொரு பகிரங்கக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்கள்.
இந்நிலையில், "எம்.பி.க்கள் விலை பேசப்படுகிறார்கள்' என்ற குற்றச்சாட்டு குறித்து நாம் தமிழக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டோம்.
காதர் மொகைதீன்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.பி.க்களை இவ்வளவு கொச்சைப்படுத்தக் கூடாது. மக்களுக்குச் சேவை செய்யவே எங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பணம் வாங்குவதற்காகத் தேர்ந்து எடுத்து அனுப்பவில்லை. இது மாதிரி குற்றச்சாட்டுகளைச் சொல்வது பாராளுமன்றத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். ஏதோ ஒரு நேரத்தில் எங்கோ ஒரு எம்.பி. பணம் வாங்கியிருக்கலாம்.
அதற்காக பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எல்லோருமே பணம் வாங்குகிறார்கள்; பேரம் பேசுகிறார்கள் என்று கூறுவது அபத்தம்.
வாக்கெடுப்பில் தனிப்பட்ட எம்.பி.க்களின் முடிவு ஒன்றும் இல்லை. கட்சித் தலைமை ஒரு முடிவை எடுத்து சொல்லப் போகிறது.
அதன்படி எம்.பி. வாக்களிக்கப் போகிறார். எந்த எம்.பி.யாவது மாறி வாக்களிக்க நினைத்தால் அதை ஓப்பனாகவே சொல்லிவிட்டுச் செய்கிறார். அப்படியிருக்கையில் பணம் விளையாடுகிறது என்றெல்லாம் குற்றம் சாட்டுவது நாட்டைக் கெடுக்கிற வேலை.
இந்தப் பிரச்சாரங்கள் பத்திரிகை தர்மத்திற்கும் உகந்ததல்ல. இது மாதிரி பிரச்சாரம் செய்வதும், குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும் நம் நாட்டு ஜனநாயகத்தை வளர்க்க உதவாது. மாறாக நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கெடுத்து, ஜனநாயகத்தைக் குலைத்து, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும். குதிரை பேரம் என்று பிரச்சாரம் செய்பவர்கள் நாடு குழம்பிக் கிடப்பதை விரும்புகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
http://www.tamilanexpress.com/politics/politics.asp
மனம் திறக்கிறார்கள் எம்.பி.க்கள்!
வருகின்ற 22ஆம் தேதி, பிரதமர் மன்மோகன்சிங் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அதற்காக எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்கள். சிறிய கட்சித் தலைவர்களுக்கு பெரும் கிராக்கி இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேச்சு.
"ஒரு எம்.பி.க்கு 25 கோடி ரூபாயிலிருந்து, 30 கோடி ரூபாய் வரைக்கும் பேரம் பேசப்படுகிறது' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான ஏ.பி. பரதனே குற்றம் சாட்டியுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் அரசை ஆதரித்த இடது சாரிகள், இப்போது மற்ற கட்சிகளும், சுயேச்சை எம்.பி.க்களும் காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிக்க முன் வருகின்ற நேரத்தில் இப்படியொரு பகிரங்கக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்கள்.
இந்நிலையில், "எம்.பி.க்கள் விலை பேசப்படுகிறார்கள்' என்ற குற்றச்சாட்டு குறித்து நாம் தமிழக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டோம்.
காதர் மொகைதீன்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.பி.க்களை இவ்வளவு கொச்சைப்படுத்தக் கூடாது. மக்களுக்குச் சேவை செய்யவே எங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பணம் வாங்குவதற்காகத் தேர்ந்து எடுத்து அனுப்பவில்லை. இது மாதிரி குற்றச்சாட்டுகளைச் சொல்வது பாராளுமன்றத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். ஏதோ ஒரு நேரத்தில் எங்கோ ஒரு எம்.பி. பணம் வாங்கியிருக்கலாம்.
அதற்காக பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எல்லோருமே பணம் வாங்குகிறார்கள்; பேரம் பேசுகிறார்கள் என்று கூறுவது அபத்தம்.
வாக்கெடுப்பில் தனிப்பட்ட எம்.பி.க்களின் முடிவு ஒன்றும் இல்லை. கட்சித் தலைமை ஒரு முடிவை எடுத்து சொல்லப் போகிறது.
அதன்படி எம்.பி. வாக்களிக்கப் போகிறார். எந்த எம்.பி.யாவது மாறி வாக்களிக்க நினைத்தால் அதை ஓப்பனாகவே சொல்லிவிட்டுச் செய்கிறார். அப்படியிருக்கையில் பணம் விளையாடுகிறது என்றெல்லாம் குற்றம் சாட்டுவது நாட்டைக் கெடுக்கிற வேலை.
இந்தப் பிரச்சாரங்கள் பத்திரிகை தர்மத்திற்கும் உகந்ததல்ல. இது மாதிரி பிரச்சாரம் செய்வதும், குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும் நம் நாட்டு ஜனநாயகத்தை வளர்க்க உதவாது. மாறாக நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கெடுத்து, ஜனநாயகத்தைக் குலைத்து, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும். குதிரை பேரம் என்று பிரச்சாரம் செய்பவர்கள் நாடு குழம்பிக் கிடப்பதை விரும்புகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
http://www.tamilanexpress.com/politics/politics.asp
Tuesday, January 22, 2008
பணம் பணமறிய அவா
பணம் பணமறிய அவா
- கொடுவாய் ஜாஃபர்சாதிக் பாகவி -
அன்னை தேசத்துஅகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில் எரிந்து கொண்டிருக்கிறோம்!
அடிவயிற்றில் பதிந்தவறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள் அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ளமாமிசத் துண்டுகள் நாம்!
கண் தெரியா தேசத்தில் விழுந்து காயங்கள்
தலை சாய்த்துக்கண்ணீர் வடிக்கிறோம்!
மொத்தக் குடும்பத்தையும் முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப் படாத் திசைகளில்
தொடர்கிறது நம் பயணம்!
ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா என்றுதான்
கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா என்றல்லவா
பதில் வருகிறது!
நமக்கு மட்டும் ஏன்
பணம் பந்த பாசங்களின் சமாதியாகி விட்டது?
ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப் பெற்று விடுகிறது நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்....
உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?
கலவரத்தில கைக் குழந்தையைத் தொலைத்த தாயின்
பதற்றத்தைப் போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசியபின்னால்
அடையும் அவஸ்தைகள்......நம்மில்
பலருக்கு தாம்பத்திய வாழ்க்கை கூட
தவணை முறையில்தான் தட்டுப்படுகிறது....
தொலைபேசியிலும் தபாலிலும் கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில் இல்லறம் நடக்கிறது...
மனைவியின்மூச்சுக் காற்று தந்த சுகம் கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!
குடும்ப விளக்குகளை கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம் தன்னந்தனியாய் இந்தத் தீவுகளில்...
வீடு கூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?
உயிரோடு இருக்கும்பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான் கொடுக்க முடிகிறது செல்ல முத்தங்கள்!
என்ன இருந்தாலும் காகிதங்கள் உணருமா பாசத்தின் ருசி
ஒவ்வொரு முறையும் ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும் எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!
காலத்தின்இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல் வெறும் கடிதம் போடத்தானா?
பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல தபால்களுக்காக....
வாழ்க்கையின் பாதி விரக்தியிலும், விரகத் தீயிலும் எரிந்து போகும்
நம் வாலிப வாழ்க்கை கடைசியில் நரம்புகள் அறுந்து போய்
முகாரி பாடும் வீணைகளாய்...
என்ன சொல்லி என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்?
எழுதியவர்:கொடுவாய் ஜாஃபர்சாதிக் பாகவி
- கொடுவாய் ஜாஃபர்சாதிக் பாகவி -
அன்னை தேசத்துஅகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில் எரிந்து கொண்டிருக்கிறோம்!
அடிவயிற்றில் பதிந்தவறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள் அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ளமாமிசத் துண்டுகள் நாம்!
கண் தெரியா தேசத்தில் விழுந்து காயங்கள்
தலை சாய்த்துக்கண்ணீர் வடிக்கிறோம்!
மொத்தக் குடும்பத்தையும் முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப் படாத் திசைகளில்
தொடர்கிறது நம் பயணம்!
ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா என்றுதான்
கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா என்றல்லவா
பதில் வருகிறது!
நமக்கு மட்டும் ஏன்
பணம் பந்த பாசங்களின் சமாதியாகி விட்டது?
ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப் பெற்று விடுகிறது நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்....
உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?
கலவரத்தில கைக் குழந்தையைத் தொலைத்த தாயின்
பதற்றத்தைப் போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசியபின்னால்
அடையும் அவஸ்தைகள்......நம்மில்
பலருக்கு தாம்பத்திய வாழ்க்கை கூட
தவணை முறையில்தான் தட்டுப்படுகிறது....
தொலைபேசியிலும் தபாலிலும் கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில் இல்லறம் நடக்கிறது...
மனைவியின்மூச்சுக் காற்று தந்த சுகம் கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!
குடும்ப விளக்குகளை கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம் தன்னந்தனியாய் இந்தத் தீவுகளில்...
வீடு கூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?
உயிரோடு இருக்கும்பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான் கொடுக்க முடிகிறது செல்ல முத்தங்கள்!
என்ன இருந்தாலும் காகிதங்கள் உணருமா பாசத்தின் ருசி
ஒவ்வொரு முறையும் ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும் எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!
காலத்தின்இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல் வெறும் கடிதம் போடத்தானா?
பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல தபால்களுக்காக....
வாழ்க்கையின் பாதி விரக்தியிலும், விரகத் தீயிலும் எரிந்து போகும்
நம் வாலிப வாழ்க்கை கடைசியில் நரம்புகள் அறுந்து போய்
முகாரி பாடும் வீணைகளாய்...
என்ன சொல்லி என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்?
எழுதியவர்:கொடுவாய் ஜாஃபர்சாதிக் பாகவி
Subscribe to:
Posts (Atom)