Monday, October 13, 2008

கீழக்கரையில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

கீழக்கரையில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

09.12.2008 செவ்வாய் கிழமை அன்று காலை 8 மணிக்கு கீழக்கரை , நடுத்தெரு ஜும்ஆ
மஸ்ஜிதில் டவுன் காஜி அல்ஹாஜ் .எம்.எம் .காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ ஹஜ்ஜுப்பெருநாள்
தொழுகை நடத்தினார்


நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவி அஸ்மத் ஹுசைன் மன்பஈ பெருநாள் குத்பா உரையை
நிகழ்த்தினார் கீழக்கரை வழக்கப்படி அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்கள் மஹல்லாக்களிலிருந்து
தக்பீர் முழக்கத்துடன் ஊர்வலமாக ஜும்ஆ மஸ்ஜித் சென்று ஒன்று கூடி பெருநாள் குத்பா
நிறைவுக்குப்பின்னர் தக்பீர் முழக்கத்துடன் ஊர்வலமாக ஜமாஅத்துகளுக்கு திரும்பினர்

முஸ்லிம் டைம்ஸ் ஆசிரியர் தாயார் வஃபாத்து

முஸ்லிம் டைம்ஸ் ஆசிரியர் தாயார் வஃபாத்து

மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த முஸ்லிம் டைம்ஸ் தமிழ் மாத இதழின் ஆசிரியர் ஜி.எஸ்.ஏ.கே. இப்ராஹிம். இவரது தாயார் நேற்று 12.10.2008 ஞாயிற்றுக்கிழமை இரவு வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )

அன்னாரது ஜனாஸா 13.10.2008 திங்கட்கிழமை அஸர் தொழுகைக்குப் பின்னர் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரது மறுமைப் பேறுக்காக அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு எண் : 0091 93 63 208 537