Monday, March 8, 2010

தமிழ் களஞ்சியம்

தமிழ் களஞ்சியத்தில் பங்கேற்று தமிழ் வளர்க்க வாருங்கள்!

பார்க்க :

http://www.tamilkalanjiyam.com/

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,

உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

சிறுநீரகக் கற்கள் எவ்வாறு உருவாகின்றன?

சிறுநீரகக் கற்கள் எவ்வாறு உருவாகின்றன?

நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியான கால்சியம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுத்துக்கொள்ளும் போது சிறுநீரில் கழிவுப் பொருளாக வெளியேறுகின்றன. இந்த கால்சிய மூலங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிகின்றன.

அறிகுறிகள்

பின்பக்க விலாவில் வலி, முதுகு வழி, அடிவயிற்றில் வலி
குமட்டல், வாந்தி
நீர்தாரையில் எரிச்சல் ஏற்படுதல் (நீர் கடுப்பு)
குறைவாக சிறுநீர் கழித்தல்
சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்

சிகிச்சை முறைகள்

சிறுநீரகக் கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின் அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் சிறிய அளவில் இருக்கும் போது மாத்திரைகளால் வெளியேற்றி செய்து விடலாம்.
நுற்கதிர் மூலம் கற்களை உடைத்து விடுதல் (ESWL )
Endoscopy, Ureterorenoscopy, Nephroscopy, Open & Laparoscopy போன்ற சிகிசிசை முறைகள்

நீடூரில் மிஸ்பாஹி உல‌மா பேர‌வையின் 17 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்ட‌ம்

நீடூரில் மிஸ்பாஹி உல‌மா பேர‌வையின் 17 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்ட‌ம்

நீடூர் : நீடூர் நெய்வாச‌ல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அர‌பிக் க‌ல்லூரியில் மிஸ்பாஹி உலமா பேர‌வையின் பொதுக்குழுக் கூட்ட‌ம் இன்ஷா அல்லாஹ் வருகிற‌ 16.03.2010 செவ்வாய்க்கிழ‌மை காலை 9.30 ம‌ணிக்கு ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இக்கூட்ட‌த்தில் மிஸ்பாஹி உலமாக்க‌ள் அனைவ‌ரும் ப‌ங்கு பெற‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். மேல‌திக‌ தொட‌ர்புக்கு 94423 19264

தமிழ் மாநில இமாம்கள் பேரவை சார்பாக சேலத்தில் மீலாது மாநாடு

தமிழ் மாநில இமாம்கள் பேரவை சார்பாக சேலத்தில் மீலாது மாநாடு

சேலம் : தமிழக இமாம்களை சேலத்தில் சங்கமிக்க வைக்கும் முயற்சியாக மாபெரும் மீலாது மாநாட்டை தமிழ் மாநில இமாம்கள் பேரவை நடத்துகிறது.

சேலம் நேரு கலையரங்கில் மார்ச் 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இம்மாநாடு நடைபெறும்.

காலை நிகழ்ச்சியாக உலமாக்களுக்கான ஆய்வரங்கம், பிற்பகலில் இளைஞர்களுக்கான கருத்தரங்கம், மாலையில் சமுதாயத்திற்கான சொல்லரங்கம் ஆகியவை நடைபெறுகின்றன.

இம்மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், டி.பி.எம். மைதீன் கான், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்துரை
வழங்குகின்றனர்.

வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் முன்னாள் முதல்வர் மவ்லானா பி.எஸ்.பி. ஜெய்னுல் ஆபிதீன், மெலப்பாளையம் மவ்லானா காஜா முஹ்யினுத்தீன் ஹஸரத், அய்யம்பேட்டை பி.எம். ஜியாவுதீன் ஹஸரத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

நாற்பது வருடங்களாக இறைப்பணியாற்றி வரும் உலமாக்கள் பற்றிய பட்டியல் இம்மாநாட்டில் வெளியிடப்பட இருப்பதால் அவர்களைப் பற்றிய விபரங்கள் வயது, பட்டம் பெற்ற வருடம், பணியாற்றும் இடம், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்களை அறிந்தவர்களோ உடன் தெரிவிக்க வேண்டும் தமிழ் மாநில இமாம்கள் பேரவை அறிவித்துள்ளது.

இத்தகவல்களை தமிழ் மாநில இமாம்கள் பேரவை, முஹம்மதுபுறா பெரிய பள்ளிவாசல், சேலம் – 1 என்ற முகவரிக்கு தெரிவிக்கவோ அல்லது 9443771151, 9443273280, 9952302880, 9443771520 என்ற எண்களில் தெரிவிக்க வேண்டுமென இதன் தலைவரும், உலமாக்கள் நலவாரிய உறுப்பினருமான மவ்லானா ஷிஹாபுதீன் மஹ்லரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Courtesy : Manisudar Tamil Daily
Feb 23,2010