Monday, March 8, 2010

சிறுநீரகக் கற்கள் எவ்வாறு உருவாகின்றன?

சிறுநீரகக் கற்கள் எவ்வாறு உருவாகின்றன?

நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியான கால்சியம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுத்துக்கொள்ளும் போது சிறுநீரில் கழிவுப் பொருளாக வெளியேறுகின்றன. இந்த கால்சிய மூலங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிகின்றன.

அறிகுறிகள்

பின்பக்க விலாவில் வலி, முதுகு வழி, அடிவயிற்றில் வலி
குமட்டல், வாந்தி
நீர்தாரையில் எரிச்சல் ஏற்படுதல் (நீர் கடுப்பு)
குறைவாக சிறுநீர் கழித்தல்
சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்

சிகிச்சை முறைகள்

சிறுநீரகக் கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின் அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் சிறிய அளவில் இருக்கும் போது மாத்திரைகளால் வெளியேற்றி செய்து விடலாம்.
நுற்கதிர் மூலம் கற்களை உடைத்து விடுதல் (ESWL )
Endoscopy, Ureterorenoscopy, Nephroscopy, Open & Laparoscopy போன்ற சிகிசிசை முறைகள்

1 comment:

VANJOOR said...

வாழைத்தண்டு :: சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள், ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள் மற்றும் ரத்தக் குறைபாடுகளுக்கு வாழைத்தண்டு சிறந்தது.

அடிக்கடி உணவில் சேர்ப்பதால் சிறு நீரகக் கற்கள் கரைவதோடு சிறுநீரகங்களும் பாதுகாக்கப்படுகிறது.

வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
*********************
மேலும் சில தகவல்கள்
படிக்க கீழே க்ளிக் செய்யவும்.
சிறுநீரகக் கற்கள். சிறுநீர்க்கல் நோய். நோயின் அறிகுறிகள்.