Friday, April 24, 2009

"வேடிக்கை மனிதர்கள்"

From: kalam kader
Subject: "வேடிக்கை மனிதர்கள்"
To: shaickkalam@yahoo.com, shabath.a@gmail.com
Date: Friday, April 24, 2009, 5:12 AM


"வேடிக்கை மனிதர்கள்"

மனிதம் மறந்து மதத்தை பரப்பி
"புனிதம்" தவழும் பிறவி

கற்று கொடுத்திடும் கல்வி பணமாக
விற்று பிழைக்கும் விடம்

அறிவியல் கண்ட அறிஞர் இறையை
அறியா திருக்கும் அறிவு(?!)

பெற்றதன் பட்டம் பயனற்று போனதால்
கற்றும் பறக்கும் கல்வி

வாக்குறுதி பொய்யென்று உள்ள மறிந்திருந்தும்
வாக்களிக்க வேண்டும் அரசியல்

தேர்தல் திருவிழாவில் தேடியும் கிட்டாத
மாறுதல் என்னும் மரபு

-"கவியன்பன்", கலாம்
அதிராம்பட்டினம்



"மரபு" கவிதையின்படி "யாப்பிலக்கண"த்தின் "குறட்பா"
"சந்தவசந்தம்" நடாத்தும் கவியரங்கத்தில் யான் யாத்தளித கவிதையே இது.