Thursday, June 10, 2010

வேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை...

வேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை...


ஐ.டி., துறை தொடர்புடைய ஒரு புதிய வேலையையோ, அல்லது வகிக்கும் பதவியில் ஒரு உயர்வையோ பெறுவதற்கு ஐ.டி., துறை தொடர்புடைய சான்றிதழ் படிப்புகள் பெரிதும் உதவி புரிகின்றன.
இன்றைய உலகம் சர்வ தேசப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இந்த நாட்களில் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதோடு, ஐ.டி., துறையும் இழந்த பெருமையை மீண்டும் பெறும் நிலைக்கு முன்னேறி வருகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில் எந்தெந்த ஐ.டி., சான்றிதழ் படிப்புகளுக்கு இனி வரும் நாட்களில் நல்ல மதிப்பிருக்கும் என்ற ஒரு ஆராய்ச்சியை பூட் பார்ட்னர்ஸ் என்ற தொழில் ஆய்வு நிறுவனம் நடத்தியது. அந்த ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்ட முதல் 10 படிப்புகள் இவைதான் :

வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல் : தற்போது வர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜிக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே வி.சி.பி., என்ற வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் வி.சி.பி.,களுக்கு அதிக தேவை இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்தப் படிப்பு முதலிடத்தைப் பெறுகிறது.

சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் : தகவல் தொழில் நுட்ப ஆடிட்டிங் பிரிவில் ஐ.எஸ்.ஏ.சி.ஏ., என்ற அமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சி.ஐ.எஸ்.ஏ., என்ற சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் சான்றிதழ் படிப்பு முன்னிலை வகிக்கிறது. இருந்த போதும் இந்த சான்றிதழைப் பெற ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பு வகுத்துள்ள நிர்ப்பந்தங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜி.ஐ.ஏ.சி., செக்யூரிட்டி ஆடிட் எசன்சியல்ஸ் : ஒரு நிறுவனத்தின் திட்டம், செயல்முறை, ஆபத்துக்கள் போன்ற நிறுவனம் தொடர்புடைய தகவல் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சான்றிதழ் படிப்பாகும் இது. இந்தப் பிரிவில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கலாம்.

சர்டிபைடு இன்பர்மேஷன் செக்யூரிட்டி மேனேஜர் : ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பினால் தகவல் பாதுகாப்பு மேலாளர்களுக்கு வழங்கப்படும் சி.எஸ்.ஐ.எம்., சான்றிதழ் படிப்பாகும் இது.

பாயிண்ட் சர்டிபைடு செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் : ஐ.டி., தகவல் பாதுகாப்புத் துறையில் அனுபவம் கொண்ட தொழில் நுட்ப அறிவு படைத்தவர்களுக்காக சி.சி.எஸ்.இ., என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பு முழுக்க நுகர்வோரின் தேவைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இதனைப் படிப்பதன் மூலம் முழுமையான தகவல் பாதுகாப்பு குறித்த திறன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பாயின்ட் சர்டிபைடு செக்யூரிட்டி அட்மினிஸ்டிரேடர் : இதுவும் பாயின்ட் சர்டிபிகேஷனில் மற்றொரு படிப்பாகும். சி.சி.எஸ்.ஏ., என்ற இந்தப் படிப்பில் உபயோகிப்பாளரின் அன்றாட பாதுகாப்பு, வலையமைப்பில் தகவல்கள் சிதறாமலிருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி பாடப் பகுதிகள் இருக்கும்.

மைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம்ஸ் என்ஜினியர்(செக்யூரிட்டி) : எம்.சி.எஸ்.இ., என்ற இந்த சான்றிதழ் படிப்பை மேற்கொள்வதன் மூலம் வடிவமைத்தல், செயல்படுத்துதல், உள்கட்டமைப்பு நிர்வாகம் ஆகிய பகுதிகளில் ஒரு தனி நபரின் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். வியாபாரத் தேவைகளை நிறைவேற்ற விண்டோஸ் 2003 மற்றும் விண்டோஸ் 2000 சர்வர்களை உபயோகிக்கும் நிறுவனங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.

சர்டிபைடு வயர்லெஸ் செக்யூரிட்டி புரபஷனல் : ஒயர்லெஸ் நெட் வொர்க்குகளைப் பெற உதவிடும் விதத்தில் வழங்கப்படும் மிக ஆழமான சான்றிதழ் படிப்பாக சி.டபிள்யூ.எஸ்.பி., படிப்பு இருக்கிறது. இந்தப் படிப்பில் 802.11 வயர்லெஸ் லான் டெக்னாலஜி குறித்த ஆழமான பாடப் பகுதிகள் இருக்கும்.

ஜி.ஐ.ஏ.சி., சர்டிபைடு இண்ட்ரூஷன் அனலிஸ்ட் : ஜி.சி.ஐ.ஏ., என்ற இந்தப் படிப்பும் தகவல் பாதுகாப்பு குறித்த ஒன்றுதான். இதில் தொழில் நுட்ப ரீதியான மற்றும் செயல்முறையுடன் கூடிய சிறப்பு அணுகுமுறைகள் உண்டு. இந்தப் படிப்பை சான்ஸ் என்ற கல்வி நிறுவனம் 1999 முதல் நடத்தி வருகிறது.

சிஸ்கோ சர்டிபைடு நெட்வொர்க் புரபஷனல் : சி.சி.என்.பி., என்ற இந்தப் படிப்பை சிஸ்கோ நிறுவனம் நடத்துகிறது. இதுவும் உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டதுதான். இந்தப் படிப்பில் லோகல் ஏரியா நெட் வொர்க்கில் திட்டமிடுதல், செயல்படுத்துதல், சோதனை செய்தல், பிரச்னைகளைக் கையாளுதல்,
திறனாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு, ஒலி, வயர்லெஸ், மற்றும் வீடியோ தொழில் நுட்பம் போன்றவற்றில் பணியாற்றுதல் ஆகியவை கையாளப்படுகிறது.

Educational Awareness Campaign by SIO

---------- Forwarded message ----------
From: KHALEELUR RAHMAN
Date: 9 Jun 2010 09:03
Subject: Educational Awareness Campaign by SIO
To:



Assalamu Alaikum

Please see the following blog for a report on Educational Awareness Campaign by SIO.

http://vmkhaleelurrahman.blogspot.com/

Regards,

V.M. Khaleelur Rahman




--
Thanks & Regards,
K.Jalaludeen
Joint Secretary

ISLAMIC FOUNDATION TRUST
138, PERAMBUR HIGH ROAD
CHENNAI - 600 012
INDIA

TEL: +91-44-2662 4401/ 4332 6446
FAX: +91-44-2662 0682
E-MAIL: iftchennai12@gmail.com
Website: www.ift-chennai.org

Read Samarasam (Tamil Fortnightly) at www.samarasam.net

மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்

மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்

மக்கள் நலனை மட்டுமே பெரிதாக கருதும், அரசு அதிகாரிகள் வரிசையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் மிக முக்கியமான ஒரு சக்தி.



வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடும் புனிதமாகவும் இருக்கின்றதோ கடைசி நாளின் போதும் அதே புத்துணர்ச்சியோடும், புனிதத்தோடும் ஓய்வு பெறவேண்டும் என்ற முடிவோடு தனது பணியைத் துவங்கிய இந்த மகத்தான மனிதர், பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில்.


”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா?


மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடும், வங்கி சேமிப்பு 7,172 ரூபாயும்


பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் இன்று தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார்.


அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு, பேருந்துகளில் திடீர் ஆய்வு என இவரைப் பற்றி அடிக்கடி படிக்கும் ஒவ்வொரு செய்தியும் மனதிற்குள் மிகப் பெரிய துள்ளலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.


ஒரு உதாரண மாவட்ட ஆட்சித் தலைவரான இவர். விவசாயிகள் ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறார்கள், எனவே அவர்களிடம் தங்கள் குறைகளைச் சொல்ல இங்கே வாருங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இழுத்தடிப்பதை விட அவர்களைத் தானே நேரில் சென்று குறைகளைக் கண்டறிந்து தீர்த்து வைத்தால் என்ன என்று, ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து வருகிறார்.


வெப்படை அருகே ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பும் வழியில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒரு வயதான விவசாயத் தம்பதி தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்து, தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று அவர்களிடம் தன்னை அந்த ”ஜில்லாவின் கலெக்டர்” என அறிமுகம் செய்து கொண்டு, தான் வந்திருக்கும் செய்தி கேட்டும் கூட, தங்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பெருமை கொள்வதாகக் கூறி அவர்களோடு ஒரு புகைப்படம் எடுத்து அதை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெரிதாக மாட்டி வைத்திருக்கிறார்.


கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்து, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குச் செல்லும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி ஊக்குவிக்கிறார்.


எல்லாவற்றிக்கும் மேலாக.. புவி வெப்பத்தை குறைக்க உலகலவில் அதிகாரம் வாய்த்தவர்கள் அலட்சியம் காட்டிய போதிலும், உலகத்திற்கே உதாரணமாக தன்னுடைய மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நட்டு வளர்த்த வேண்டும் என்ற மிகப் பெரிய கனவோடு செயல்பட்டு, இது வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், நாமக்கல் நகர அரிமா சங்கம் போன்றவற்றின் உதவியோடு நெடுஞ்சாலைகளில், பள்ளி வளாகங்களில், கிராமத்தில் கிராமத் தோப்புகளில் என இது வரை நட்டு பராமரிக்கும் மரங்களில் எண்ணிக்கை ஆயிரங்களில் அல்ல.... மொத்தம் 25 லட்சம் மரங்கள்.


கிராம குறை தீர் மன்றம், மாதிரி கிராமங்கள், கிராமத் தோப்பு, ஒரு கோடி மரம் நடும் திட்டம், மாவட்ட ஆட்சியரின் கடிதங்கள் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப் பூர்வ இணையப் பக்கத்தில் இது குறித்து நிறைய செய்திகள் உள்ளன.


தமிழகத்தின் தலைசிறந்த பத்துப் பேரில் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது கூடுதல் பெருமையும் கொண்டவர்


வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.