உணர்வாய் உன்னை !
சகோதரர் ஜலாலுத்தீன்.
உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி).
இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..
பகுதி ஒன்று:
அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:
1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்?
2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும் ஆழமானதா?
3. அல்லாஹ்வுடன் உள்ள தொடர்புகளில் சோம்பேறித்தனமாக இருந்தீர்களா?
4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துவா மூலம் பேசினீர்கள்?
5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை கேட்டிருக்கிறீர்கள்?
6. கவலை, தேவை, சிரமம் போன்ற சமயங்களில் எத்தனை முறை அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறீர்கள்?
7. அல்லாஹ்வின் நினைவையும், அவனுடனுள்ள உங்களுடைய கடமையுணர்ச்சியையும் அதிகரிப்பதற்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் நீங்கள் என்ன செய்யலாம்?
8. அல்லாஹ்வை எந்நேரமும் நினைவில் நிறுத்த, குர்ஆன், நபிமொழிகளிலுள்ள துவாக்களை எப்படி மனப்பாடம் செய்யலாம்?
9. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்படி சகமனிதர்களை அழைத்திருக்கிறீர்களா?
உங்களுடைய இஸ்லாமிய அறிவு:
1. உங்களுடைய வாழ்நாட்களில் தினமும் குர்ஆனின் ஒரு வசனங்களையாவது பொருளறிந்து படித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இன்றிலிருந்து முயற்சி எடுப்பீர்களா?
2. இஸ்லாமிய கல்வி வட்டம் அல்லது வகுப்புகளுக்குச் சென்றீர்களா? இல்லையென்றால், அங்கு செல்லத் தடையாக இருப்பது எது..? எப்படி அந்தத் தடையை நீக்கலாம்?
3. இஸ்லாமிய அறிவைப் பெறுவதற்காக, மாநாடுகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ பயணம் செய்தீர்களா?
4. கடந்த வருடத்தில் நீங்கள் கற்ற இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் முன்பு அறிந்திராத 10 விஷயங்கள் எவை? அவற்றில் நீங்கள் நடைமுறையில் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவை எவை?
5. நீங்கள் அல்லாஹ்விற்காக மட்டுமே அறிவைத் தேடினீர்களா அல்லது வேறு எதாவது காரணத்திற்காகவா?
6. இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத எந்த 10 விஷயங்கள் பற்றி அடுத்த ரமளானுக்குள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?
7. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய புத்தங்கள் படித்தீர்கள்?
8. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய வீடியோக்களை பார்த்தீர்கள்?
9. சுமாராக எத்தனை இஸ்லாமிய ஆடியோ கேசட்டுகள் கேட்டீர்கள்?
10. அறிவு பெறுவதற்கு உங்களுக்கு எது மிகவும் பொருத்தமாக இருக்கிறது? (கேட்டல், பார்த்தல் அல்லது படித்தல்)
11. உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் அவர்களிடம் உள்ள மார்க்க ஞானம் பற்றியும் அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் அறியாமையில் இருப்பின் அவைகளை களைய ஏதாவது முயற்சி எடுத்தீர்களா.?
உங்களுடைய தொழுகை:
1. ஒரு நாளுக்கு ஐந்து முறை தொழுகிறீர்களா?
2. ஒரு நாளில் எந்தெந்த தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதீர்கள்?
3. பள்ளியிலோ பணியிலோ இருக்கும் போது தொழுகை நேரத்தில் தொழுதீர்களா, இல்லயென்றால், வீட்டிற்கு வந்தபின் அதற்காக ஈடு செய்தீர்களா?
4. தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுகிறீர்களா? அல்லது நீங்கள் தொழுவது தான் சரியான முறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
5. உங்கள் தொழுகையில் மன ஓர்மையுடன் இருக்கிறீர்களா?
தொடர்ந்து படிக்க கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்க
http://www.ottrumai.net/TArticles/37-DiscoverYourself.htm
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label உணர்வாய் உன்னை. Show all posts
Showing posts with label உணர்வாய் உன்னை. Show all posts
Sunday, July 25, 2010
Tuesday, September 9, 2008
துபாய் மற்றும் ஷார்ஜாவில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கையூட்டும் சிறப்புப் பயிற்சி முகாம்கள்
துபாய் மற்றும் ஷார்ஜாவில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கையூட்டும் சிறப்புப் பயிற்சி முகாம்கள்
துபாய் தமிழ் பஜார் முஸ்லிம் முன்னேற்றக் கழக மர்கஸில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கையூட்டும் சிறப்புப் பயிற்சி முகாம் 11.09.2008 வியாழக்கிழமை இரவு 10.30 மணி முதல் அதிகாலை வரையிலும், ஷார்ஜா இஸ்லாமிய எழுச்சி மையத்தின் சார்பில் 18.09.2008 வியாழக்கிழமை இரவு 10.00 மணி முதல் அதிகாலை வரையிலும் நடைபெற இருக்கிறது.
துபாயில் பங்கேற்க விரும்புவோர் 050 7640972 / 055 9761677 ஆகிய எண்களிலும்
ஷார்ஜாவில் பங்கேற்க விரும்புவோர் 050 537 19 18 / 050 385 19 29 ஆகிய எண்களிலும்
தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு : husainbasha@yahoo.com
தகவல் உதவி : ஹுசைன் பாஷா
துபாய் தமிழ் பஜார் முஸ்லிம் முன்னேற்றக் கழக மர்கஸில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கையூட்டும் சிறப்புப் பயிற்சி முகாம் 11.09.2008 வியாழக்கிழமை இரவு 10.30 மணி முதல் அதிகாலை வரையிலும், ஷார்ஜா இஸ்லாமிய எழுச்சி மையத்தின் சார்பில் 18.09.2008 வியாழக்கிழமை இரவு 10.00 மணி முதல் அதிகாலை வரையிலும் நடைபெற இருக்கிறது.
துபாயில் பங்கேற்க விரும்புவோர் 050 7640972 / 055 9761677 ஆகிய எண்களிலும்
ஷார்ஜாவில் பங்கேற்க விரும்புவோர் 050 537 19 18 / 050 385 19 29 ஆகிய எண்களிலும்
தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு : husainbasha@yahoo.com
தகவல் உதவி : ஹுசைன் பாஷா
Tuesday, August 5, 2008
சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை
சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சி
சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சி 23.08.2008 சனிக்கிழமை மாலை 2 மணி முதல் 8 மணி வரை முஜாஹிதீன் பள்ளிவாசல் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் தொகுத்து வழங்குகிறார்.நிகழ்ச்சியில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் : 9722169 / 98868849 / 92282984 / unarvaiunnai@eduquest.com.sg
சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சி 23.08.2008 சனிக்கிழமை மாலை 2 மணி முதல் 8 மணி வரை முஜாஹிதீன் பள்ளிவாசல் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் தொகுத்து வழங்குகிறார்.நிகழ்ச்சியில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் : 9722169 / 98868849 / 92282984 / unarvaiunnai@eduquest.com.sg
Monday, July 21, 2008
குவைத்தில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கை நிகழ்ச்சி மற்றும் ஒலி-ஒளி நிகழ்ச்சி

குவைத்தில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கை நிகழ்ச்சி மற்றும் ஒலி-ஒளி நிகழ்ச்சி
குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையம் குவைத்தில் முதல் முறையாக உணர்வாய் உன்னை ஆளுமைத்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி 31.07.2008 வியாழன் மாலை 03.30 மணி முதல் 09.30 மணி வரை ரவ்தா ஜமிய்யத்து இஸ்லாஹியில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி எண்ணங்களை தூய்மைப்படுத்தி, செயல்களை வளப்படுத்த, அனைவரிடமும் அன்பைப் பேண, கோபம், தாழ்வு மனப்பானமையிலிருந்து விடுபட, அறிவின் எல்லை விரிய, ஈமானின் சுவையை உணர, இனிய தமிழில், எளிய நடையில் நம்பிக்கையூட்டும் ஓர் உன்னதப் பயிற்சி முகாம்.
மேலும் 01.08.2008 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளை துபாய் ஜலாலுதீன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் தமிழ்நாடு பெஸ்ட் சர்வீஸ்,அல் ஷாஃபி ரெஸ்டாரெண்ட், சுப்ரீம் கார்கோ உள்ளிட்ட இடங்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண் : 3925612 / 6784362 / 2470159
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=875&Country_name=Gulf&cat=new
Labels:
உணர்வாய் உன்னை,
ஒலி-ஒளி,
குவைத்,
தன்னம்பிக்கை,
நிகழ்ச்சி
Subscribe to:
Posts (Atom)