Monday, July 21, 2008

குவைத்தில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கை நிகழ்ச்சி மற்றும் ஒலி-ஒளி நிகழ்ச்சி



குவைத்தில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கை நிகழ்ச்சி மற்றும் ஒலி-ஒளி நிகழ்ச்சி


குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையம் குவைத்தில் முதல் முறையாக உணர்வாய் உன்னை ஆளுமைத்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி 31.07.2008 வியாழன் மாலை 03.30 மணி முதல் 09.30 மணி வரை ரவ்தா ஜமிய்யத்து இஸ்லாஹியில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி எண்ணங்களை தூய்மைப்படுத்தி, செயல்களை வளப்படுத்த, அனைவரிடமும் அன்பைப் பேண, கோபம், தாழ்வு மனப்பானமையிலிருந்து விடுபட, அறிவின் எல்லை விரிய, ஈமானின் சுவையை உணர, இனிய தமிழில், எளிய நடையில் நம்பிக்கையூட்டும் ஓர் உன்னதப் பயிற்சி முகாம்.

மேலும் 01.08.2008 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளை துபாய் ஜலாலுதீன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் தமிழ்நாடு பெஸ்ட் சர்வீஸ்,அல் ஷாஃபி ரெஸ்டாரெண்ட், சுப்ரீம் கார்கோ உள்ளிட்ட இடங்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண் : 3925612 / 6784362 / 2470159

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=875&Country_name=Gulf&cat=new

No comments: