Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

Thursday, September 9, 2010

நோன்பென்னும் தேர்வெழுதி ........

நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக
வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;
ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்
நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி
அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை
வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;
ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே
பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்
முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்
மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்
மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே
வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்
இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்
இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே
அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.!!


“கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)
அபுதபி (இருப்பிடம்)

Tuesday, August 10, 2010

நோன்பு - சில குறள்கள்.

நோன்பு - சில குறள்கள்.

1).
நோன்பை இறைவனுக்காய் நோற்கும் எவருக்கும்
மாண்பை அடையும் மனம்.
2).
ரமளான் எனுமோர் ரஹமத்தைப் பெற்றார்
அமல்கள் சிறப்ப
(து) அறிவு.
3).
வானிற் பிறையாய் உதித்த ரமளானை
வீணிற் கழிப்ப(து) இழிவு
.
4). வல்லோன் வழங்கிய வாய்ப்பாம் ரமளானை
நல்லோரே பேணுவர் நம்பு
.
5).
புலன்கள் அடக்கும் பயிற்சிகள் தந்து
நலம்பல செய்வதாம் நோன்பு
.
6).
மாதம் இதனில் முழுமைப் பயிற்சியில்
மீதமுள்ள காலமும் மீட்பு
.
7).
பொய்யும் புறமுமாய் பேச்சிருப்பின், நோன்பென்று
மெய்வருந்தச் செய்வது வீண்
.
8).
ஆயிரம் மாதபலன் அற்புத ஓரிரவில்
தூயநன் நோன்பிலே துய்ப்பு
.
9).
ஈகைப் பரிசை இறையிடமே பெற்றிடவே
வாகை ரமளானிற் வாய்ப்பு
.
10).
இறைவனின் பார்வையில் யாவுமே 'உள்'ளில்
நிறைவாய் உரைத்திடும் நோன்பு
.


இப்னு ஹம்துன்

Tuesday, August 3, 2010

ரமழான் நோன்பு பற்றி நபியின் வார்த்தைகள்

ரமழான் நோன்பு பற்றி நபியின் வார்த்தைகள்



உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்." (ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அவர் நோன்பின் மாண்புகளைப் புரிந்து நோன்புக்கு பொருத்த மற்ற, நன்மையை அழித்துவிடும்படியான அனைத்து தவறுகளிலிருந்தும் தனது நாவு, கண் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுகளைப் பேச வேண்டாம். கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவர் கூறட்டும். (ஸஹீஹூல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக் கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை." (ஸஹீஹூல் புகாரி)

தன்னை நிழலிட்டுள்ள இம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்றதல்ல. இது நோன்பின் மாதம். நோன்பு அல்லாஹ்வுக்குரியது.. அவனே கூலி கொடுக்கிறான். எவ்வித தேவையுமற்ற உபகாரியமான அல்லாஹ்வின் கூலி மகத்தானது. பூரணமானது, விசாலமானது என்ற உறுதியான நம்பிக்கை நோன்பாளியின் மனதிலிருந்து மறைந்துவிடக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கம் பத்திலிருந்து இரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: "நோன்பைத் தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன். அவன் மனோ இச்சையையும் உணவையும் எனக்காகவே விலக்கினான்."

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி; மறுமையில் தனது இறைவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி.

நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசத்தைவிட மணமிக்கது" என நபி (ஸல் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹூல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால் மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் பரக்கத் பொருந்திய இம்மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி, அதன் பகல் காலங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும் இரவுகளில் தஹஜ்ஜத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபட வேண்டும்.

Tuesday, June 29, 2010

நோன்பு

நோன்பு

மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

டாக்டர்
A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)
ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA
CHINESE TRADITIONAL MEDICINE
MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA
ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075
________________________________________
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.
நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.
இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.
இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.
ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.
நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.
ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.
இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.
நோன்பும் சில முதல் உதவிகளும்
மயக்கம் :
நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
தலைவலி :
கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.
வயிற்று உபாதைகள் :
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கு

Sunday, March 14, 2010

நோன்பு

நோன்பு
*நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போல, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கிறது.
*(இவ்விதி) எண்ணப்படும் (குறிப்பிட்ட) சிலநாள்களிலே ஆகும். (அந்நாள் களில்) உங்களில் எவரேனும் நோயாளிகளாகவோ, அல்லது பயணத் திலோ இருந்தால், அவர் வேறு நாள்களைக் கணக்கிட்டு (நோன்பு நோற்று)க் கொள்ளவும். நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். ஆனால் எவரேனும் விரும்பி (கடமைக்கு மேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச்சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர் களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும்.
*நோன்பும் அதன் பலன்களும்
அல்லாஹ்விற்காக என்னும் தூய்மையான எண்ணத்துடன் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது ஆகிய சுகங்களைத் துறப்பதற்கே நோன்பு எனப்படும். இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் “ரமளான்” மாதம் முழுவதும் நோன்பு இருப்பது பருவமடைந்த ஆண் –பெண் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.
இந்த நோன்பினால் உடல் மட்டுமன்றி உள்ளமும் தூய்மை அடைகிறது. நோயாளிகளிடம் உணவைக் குறைத்துக் கொள்ளுமாறும், பத்தியம் இருக்குமாறும் மருத்துவர்கள் கூறுவர். ஆண்டில் பதினொரு மாதங்கள் ஓயாது உழைக்கும் குடலுக்கு ஒரு மாதம் சற்று ஓய்வு தருவதால் குடல் சுத்தமாகி நோய்கள் அகலவும், உடல் ஆரோக்கியம் பெறவும் வழிபிறக்கிறது. ஆண்டு முழுவதும் உடலில் தேங்கும் அசுத்தத்தை நீக்கி உடலைத் தூய்மைப்படுத்துகிறது நோன்பு.
நோன்புக் காலங்களில் பசி, தாகம், காமம் ஆகிய உணர்வுகளை சகித்துப் பழகுவதன் மூலம், இதர நாள்களிலும் தீமைகளை விட்டகன்று, தூய்மை அடைய நோன்பு ஒரு பயிற்சிக்களமாக விளங்கு கிறது. வாழ்க்கையில் ஒரு நாளும் பசியை உணர்ந்திராதவர்கள் கூட, பசிக்கொடுமையை அனுபவ ரீதியாக உணரவும், ஏழை எளியோர் மீது இரங்கவும் நோன்பு வழிவகுக்க்கிறது.
இதற்கெல்லாம் மேலாக உண்ணஉணவிருந்தும், பருகப்பானமிருந்தும் அனுபவிக்க அருகில் மனைவி இருந்தும் அல்லாஹ்வின் கட்டளைக் காக அவற்றையெல்லாம் துறக்கும் பொழுது, மனிதனின் பக்தியும், இறையச்சமும் மேலோங்க இந்த நோன்பு காரணமாகிறது.
இவ்விதம் உடல் ஆரோக்கியம், மனக்கட்டுப்பாடு, இரக்கம், இறையச்சம் ஆகிய உயர் பண்புகளின் மூலம் மனிதன் தூய நிலையை அடைய இந்த நோன்பு காரணமாகிறது. எனவேதான் “நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு உங்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. என்று இறைவன் இங்கே சுட்டிக்காட்டுகின்றான்.
அதே நேரத்தில் நோன்பு நோற்றுக் கொண்டே பொய்,புறம்,கோள் மற்றும் தீய பேச்சுகளிலும், தீய செயல்களிலும் ஈடுபடுவோரின் நோன்புக்கு இறைவனிடம் மதிப்பு இல்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள் ‘வீண் பேச்சுகளையும், வீணான செயல் களையும் கைவிடாத ஒருவர், தன் உணவையும் பானத்தையும் கை விடுவதில் அல்லாஹ்விற்கு எத்தேவையும் இல்லை.
இன்றும் பழைய மதத்தார் இடையே நோன்பு நோற்கும் வழக்கம் காணப்படுகிறது. எனினும் அது இஸ்லாமிய நோன்பு போன்று மிகுந்த பயன் தரும் முறையில் அமையவில்லை. துக்கம் அனுஷ்டிக்கவும், போரில் வாகை சூடவும், சோதனையிலிருந்து மீளவும் வேண்டி துறவிகள் மேற்கொள்ளும் ஒரு சடங்காக யூதர்கள் நோன்பைச் சுருக்கிக் கொண்டு விட்டார்கள்.
*நோன்பு நோற்கச் சக்தியற்றோருக்கு பரிகாரம் –ஃபித்யா
நோன்பு நோற்க முடியாத நிலையில் உள்ள முதியோர், ஒரு நோன்புக்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் விடுபட்ட ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக 1600 கிராம் கோதுமை, அல்லது அரிசி, அல்லது கோதுமையின் கிரயத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்து விடவேண்டும். அல்லது ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஓர் ஏழைக்கு இருவேளை நடுத் தரமான உணவு அளித்திட வேண்டும். இது இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் கருத்தாகும். இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி ஒரு நோன்புக்கு 2150 கிராம் வீதம் விடுபட்ட ஒவ்வொரு நோன்புக்கும் கோதுமை அல்லது அரிசி வழங்க வேண்டும்.
இவையெல்லாம் குறைந்தபட்ச அளவைக் குறிப்பதாகும். விரும்பு வோர் இந்த அளவைவிட அதிகமாக வழங்கலாம். மேலும் ஓர் ஏழைக்கு மட்டுமன்றி பல ஏழைகளுக்கும் அளிக்கலாம். நடுத்தரமான உணவை விடுத்து, உயர் தரமான உணவையும் வழங்கலாம். இவ்விதம் கூடுதலாக கொடுப்பது சிறந்ததாகும் என அல்லாஹ் கூறுகின்றான்.
நோன்பு நோற்க சக்தியற்றோர் இவ்வாறு ஃபித்யா – பரிகார தர்மம் செய்யலாம். என்றாலும் கூட, சிரமத்தைச் சகித்துக் கொண்டு நோன்பு நோற்று விடுவதே மேலான செயலாகும் என நோன்பின் மாண்பை இறைவன் அரிவிக்கிறான்.
*’இஃதிகாஃப்’ தொடர்பான சட்டம்
இஃதிகாஃப் என்பதற்குப் பொதுவாக தங்கியிருத்தல் என்பதே பொருளாகும். ஆயினும் இஸ்லாமிய வழக்கில் குறிப்பிட்ட சில வரை முறைகளுடன் மஸ்ஜிதுகளில் – இறையில்லங்களில் தங்கி வழிபாடு கள் செய்வதற்கே இஃதிகாஃப் எனப்படும்.
ரமளான் மாதம் கடைசிப்பத்து நாள்களில் நோன்புநோற்று மஸ்ஜிதில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். நோன்பு திறந்த பின் உண்பது, பருகுவது, உடலுறவு கொள்வது முதலியவை மற்றவர் களுக்குக் கூடும். ஆனால் இஃதிகாஃபில் இருப்பவர் நோன்பு திறந்த பின்னர் உண்ணவும் பருகவும் செய்யலாம்; உடலுறவு கொள்ளக் கூடாது என்ற வரைமுறை உண்டு.
இதேபோல இயற்கைக் கடன்கள் மற்றும் மார்க்கத் தேவைகளுக்காக வேண்டியே தவிர, அவர் மஸ்ஜிதிலிருந்து வெளியேறக்கூடாது. இவ்வாறு ஆண்டில் ஒருமுறை மஸ்ஜிதில் தங்கியிருந்து இறைவழி பாட்டில் ஈடுபடுவதால் மனிதனுக்கு மன அமைதியும், மனத்தூய்மை யும் கிடைக்கும். இறைநெருக்கத்தைப் பெறவும் வழியேற்படும். தனக்கும், தன் குடும்பத்தார், சமூகத்தார், தேசத்தார் ஆகியோருக்கும் இறைவனிடம் சிறப்பாகப் பிரார்த்திப்பதற்கு மனிதன் இதன் மூலம் அரியதோர் வாய்ப்பைப் பெறுகிறான்.
அவன், தான் நாடுகின்றவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றான். (அப்படி) ஞானம் கொடுக்கப்பெற்றவர் அபரிமிதமான நன்மை கொடுக்கப் பெற்றவராவார். (ஆனால்) அறிவாளிகள் தவிர (வேறு எவரும்) இதனை உணர்வதில்லை.
(நீங்கள் தர்மம் செய்ய விழையும் போது) ஷைத்தான் வறுமை குறித்து உங்களை அச்சுறுத்தி (கருமித்தனம் போன்ற) தீமைகளைக் கொண்டு உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வோ தன்னுடைய மன்னிப்பையும், உதவியையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். .அல்லாஹ் தாராளமானவனும் அறிவோனுமாவான்.
*வறுமையைக் காட்டி மிரட்டும் ஷைத்தான்:
தர்மம் செய்யத் தொடங்கினால் “நாம் தர்மம் செய்து ஏழையாகி விடுவோமோ” என்று மனிதன் எண்ணுவதுண்டு. இது ஷைத்தான் தூண்டுகிற எண்ணம் என இறைவன் எச்சரிக்கின்றான். இறைவழியில் செலவு செய்து கொண்டே போனால், இறுதியில் வறிய நிலைக்குத் தள்ளப்படுவாய் என்று அச்சுறுத்தும் ஷைத்தான், கருமித்தனம் மற்றும் பேராசை போன்ற தீய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுமாறே தூண்டி விடுவான். ஆனால் அல்லாஹ்வோ “நீங்கள் அறம் செய்யுங்கள்; உங்களின் பிழைகளைப் பொறுக்கின்றேன். மேலும் உங்களுடைய தொழிலில் முன்னேற்றத்தை அருள்வேன்” என வாக்களிக்கின்றான் எனவும் திருமறை சுட்டுக் காட்டுகிறது.

நன்றி : நர்கிஸ் மாத இதழ் – செப்டம்பர் 2008

Sunday, December 21, 2008

முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)

முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். - புஹாரி : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி).

Saturday, August 30, 2008

நோன்பு - - மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நோன்பு

மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

டாக்டர்
A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)
ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA
CHINESE TRADITIONAL MEDICINE
MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA
ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075
________________________________________
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.
நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.

இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.

நோன்பும் சில முதல் உதவிகளும்

மயக்கம் :

நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.

வயிற்று உபாதைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்)இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.

மூச்சுத் திணறல் :

இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.

மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடலையும், மனதையும் கொடுத்து, நோன்பை முழுமையாக நிறைவேற்றி, அதற்கான முழுமையான நற்கூலியைப் பெற்றுக் கொண்டவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்!!

உலகெங்கும் பல இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் டாக்டரின் மருத்துவ கட்டுரைகளை இணையத்தின் மூலம் படித்து பலன் பெறுகிறார்கள். நீங்களும் படிக்கவேண்டுமா? ஒரு முறை விசிட் செய்யுங்கள்:

www.tamilislam.com

டாக்டர்
A.ஷேக் அலாவுதீனை தொடர்பு கொள்ள:
சவூதி அரேபியா:
மெடிக்கல் கன்ஷல்டன்ட் மருத்துவமனை
ரியாத், சவூதி அரேபியா
போன்: 0505258645

தமிழ்நாடு:

தி ஹெல்த் ரிசோர்ட்
HIG
-331 முல்லை நியூ ஹவுசிங் யூனிட், புது பஸ்ஸ்டான்ட் அருகில், தஞ்சாவூர்- போன்: 9442871075, 04362 227414

நலம் பெற வாருங்கள்:

அனைத்து வகையான நரம்பியல் (Neurological) நோய்கள், பலதரப்பட்ட தீராதவலி (Pre-Existing, Chronic), மனநோய்கள் Psycho), பாலியல் பிரச்சனைகள், ஆண்மைக் கோளாறு, பெண்மைக் கோளாறு All types of Sexual Problems), பெண்கள் கர்ப்பபை பிரச்சனைகள் (Uterus)> கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இதயம், கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரக நோய்கள் மற்றும் கைவிடப்பட்ட பல நோய்கள் அனைத்து நோய்களிலிருந்து விடுபட்டு நலமாக வாழ டாக்டரை தொடர்பு கொள்ளுங்கள்.
[
THANKS SOURCE:http://www.tamilislam.com/MEDICAL/INDEX.HTM