Thursday, September 9, 2010

நோன்பென்னும் தேர்வெழுதி ........

நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக
வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;
ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்
நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி
அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை
வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;
ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே
பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்
முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்
மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்
மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே
வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்
இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்
இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே
அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.!!


“கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)
அபுதபி (இருப்பிடம்)

No comments: