Saturday, January 30, 2010

ஈமானே-உன் விலையென்ன?

ஈமானே-உன் விலையென்ன?

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி. பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)

ஒரு மதம் மூன்று முக்கிய மாற்றங்களினை ஏற்படுத்த வேண்டும்:
மூடநம்பிக்கை என்ற திக்குத் தெரியாக்காட்டில் திண்டாடிக் கொண்டிருப்பவனை நேர் வழிகாட்டி நேர்மைப் படுத்த வேண்டும்.
சமுதாயத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்த வேண்டும்
தனி மனித அடையாளத்திலிருந்து சர்வதேசம் என்ற விசாலமான உலகத்தில் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும்.

அந்த மூன்று தகுதிகளும் இஸ்லாத்திற்கு இருக்கிறதா என்று பார்க்கலாம்.
அஞ்ஞான அரபு உலகமான ‘அய்யாமே ஜாகிலியா’ என்ற இருண்ட சூழ்நிலையில் ஒளியேற்றி வைத்த என்பெருமானார் முகம்மது நபி ஸல்லல்லாஹ_ அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட வஹி மூலம் மனிதனை புனிதமாக்க இறக்கப்பட்டது குர்ஆன் ஆகும். பல உருவங்களில் கடவுள் என்ற பெயரில் வழிபட்டும், நெறிகெட்டும் இருந்தவர்களை ஏக இறை தத்துவத்தினை ஆணித்தரமாக எடுத்துறைத்தது இஸ்லாம். வான‌ம்,பூமி,கடல்,அண்டத்திலுள்ள அத்தனை ரகசியங்களையும்-அவைகளின் மாற்றங்களையும் அறிந்தவன் எடுத்துரைத்து, அவனிடமே உங்கள் உதவியினை தேடுங்கள் என்று சொல்லி மூட நம்பிக்கைக்கு சாவு மணியடித்தது இஸ்லாம் என்பதை ஈமானுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.

இரண்டாவது தனி மனித சுதந்திரத்திற்கு வித்திட்டது இஸ்லாம். ஆண்டான்-அடிமை என்ற வித்தியாசத்தினை களைந்தெடுத்து, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகளுக்கு உரிமை ஸாசனம் அளித்தது இஸ்லாம் தானே. கறுப்பினராக இருந்தாலும் தொழுனைக்கு அழைக்கும் முன்னுரிமையினை ஹஸரத் பிலாலுக்கு வழங்கி கவுரவித்த பெருமை ரஸுலுல்லாவினைச் சாரும். உலகத்தில் நாங்கள் தான் முதல் ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா கூட 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அடிமைகளுக்கு ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனால் சுதந்திரம் வழங்கப்பட்டது. பெண்சிசுக்களை பிறந்த உடனேயே உயிருடன் புதைக்கும் வழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம். இந்தியாவில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பாலை-ஊமத்தழை சாரினை வாயில் ஊற்றி சாகடித்த பழக்கத்திற்கு பதிலாக பெண்குழந்தைகளை காப்பாற்றும் தொட்டில் குழந்தை திட்டம் 21ஆம் நூற்றாண்டில் தானே தமிழகத்தில் வந்தது. அத்தோடு இல்லாமல் ஒரு படி மேலாக பெண்களுக்கு சொத்தில் பங்கு என்றும் நிலைநாட்டியது.
திருமணம் சாட்சிகளோடு நடக்க வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் பதிவும் செய்து பெண்களுக்கு உத்திரவாதமும் அளித்தது. அந்தச் சட்டம் தற்போது தான் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் எவ்வளவு தொலை நோக்குப் பார்வை கொண்டுள்ளது என அறியலாம். இனப் படுகொலைகளை தடுத்து நிறுத்தி இன ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்தது.
மூன்றாவதாக தனி மனித நலனை விரட்டி பொது நலனுக்கும்-சர்வதேச நலனுக்கும் வித்திட்டது. ஈகைக்காகவே வறியவர்களுக்கு பொருளை ஜக்காத், சதக்கா என்று வாரி வழங்குவதிற்காக ஒரு ஈகைப் பெருநாளை ஏற்படுத்தித் தந்தது கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவுடமை தத்துவத்திற்கு முன்னோடி இஸ்லாம். ரஸ_லுல்லா மக்காவில் மதீனாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் வராமல் மாறாக புன்னகையுடன் வரும்போது குரைசியர்களுடன் செய்து கொண்ட ஹ_தைபியா அமைதி உடன்பாடு 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் ஏற்பட்ட ஐ.நா. உடண்படிக்கைக்கு முன்னோடி என்றால் மிகையாகுமா? ஆனால் அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஏதோ ஒரு பொய் காரணத்திற்காக இராக்கினை சின்னா பின்னமாக்கியது போல் அப்போது நடந்ததுண்டா? சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கூட இராக் மீது அமெரிக்காவுடன் கைகோர்த்து இங்கிலாந்து முன்னால் பிரதமர் டோனி பிளேயர் இங்கிலாந்தினை இராக் போருக்குள் நுழைத்தது தவறு என்றும், ஜார்ஜ் புஷ் இராக் ஜனாதிபதி சதாம் ஹுசேன் மீது ஏற்பட்ட பயத்தில் அவர் போர் தொடுத்து விட்டார் என்றும் கூறுகிறார். செய்த தவறுகள் மீண்டும் நிலை நிறுத்த முடியுமா? யாராலும். ஆகவே தான் குர்ஆனுடைய போதனைகளும் சர்வத்திற்கும் பொருத்தமானதாகும் என்பது வெள்ளிடைமலை.


மேற்கூறிய மூன்று தாரகை மந்திரங்களையும்-அதனை வஹி மூலம் ரஸுலுல்லாவிற்கு குர் ஆனாக இறக்கிய அல்லாவையும்-கடைசி நபி ரஸுலுல்லா என்று ஏற்றுக் கொண்டவர்கள் தான் உண்மையான முஸ்லிம் என சொல்லலாம். ஆனால் 28.12.09 ஆம் அன்று முகரம் பத்தாம் நாள் என்று அனைவரும் அறிவர். அன்று மாலை டி.வியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒருவர் கொடுத்த பேட்டி அதிர்ச்சியாக இருந்தது. சென்னை வாசிகளுக்கும், மற்றும் சில ஊர்களிலும் துன்பமான முகரத்தினை பெரும் திருவிழா போன்று தீ மிதித்தும், கோசாப் பெண்கள் மார்களில் கைகளால் அடித்துக் கதரியும், ஆண்கள் கூரிய கத்திகளால் உடலில் குருதியினை ஏற்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அறிந்ததே. அதே போன்ற நிகழ்ச்சியினை முதன் முதலாக நான் 1966 ஆம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரி மாணவனாக இருந்தபோது தான் பார்த்தேன். அப்போது அது எனக்கு எங்களூரில் இல்லாத நிகழ்ச்சியாக இருந்ததால் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் இஸ்லாமியர்களா என்று கூட எனக்கு ஐயப்பாடு ஏற்பட்டது. ஆனால் 28.12.09 அன்று முகரம் விழாவினை திருவல்லிக்கேணியில் ஏற்பாடு செய்தவர் நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, ‘அலி ரஸுலுல்லாஹ் அவர்கள் மகன்களான ஹசன் ‍ ஹுசைன் ஆகியோரை வழிபடுவதிற்காக கொண்டாடப்படும் பண்டிகை என சொன்னது என்னைத் தூக்கி வாரிப்போட்டது.
எல்லா முஸ்லிம்களுக்கும் ரஸுலுல்லா என்பது நபிமார்களை குறிக்கும் என்பதினையும், ரலியல்லாஹ் என்றால் நபித்தோழர்களைக் குறிக்கும் என்பதினையும் அறிவர். அலி ரலியல்லாஹ்அன்கு அவர்கள் பெருமானார் அவர்களின் அருமை மகள் பாத்திமாவை மணந்து மருமகனாகவும்-வெற்றிக்கு பெயரெடுத்த வீரத்தளபதியாகவும் திகழ்ந்தவர் என்பதினை அனைத்து முஸ்லிம்களுக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அவருடைய மகன்கள் ஹசன்,ஹுசைன் ஆகியோர் பெருமானார் நெஞ்சில் ஏறிதவழ்ந்தவர்கள் என்பதினையும் அனைவரும் அறிந்ததே. ரஸ_லல்லா உயிருடன் இருந்தபோது தலை தூக்காத இனபோர்கள் அவர்கள் மறைந்த பின்பு தலைதூக்கியது. முவாவியாவின் வழித்தோன்றல் யசீதால் ஹசனும், ஹ_சைனும் அவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர் என்பது நெஞ்சில் நீங்கா வடுவாக உள்ளது. அல்லாஹ் இபுறாகிம் நபி அவர்களுக்கு வயதான காலத்திலும் இஸ்மாயில் என்ற மகனைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய ஈமானைச் சோதிப்பதிற்காக இஸ்மாயில் என்ற பாலகனை அறுத்துப் பலியிட ஆணையிட்டு அதற்கும் இபுறாகிம் நபி அவர்களையும் அவருடைய அருமை மகனார் அவர்களையும் வழிகெடுக்க சாத்தான் முற்பட்ட போதும் கூட மனந்தளராது அது இறைவன் கட்டளையென அறுக்க முற்படும் போது இறைவன் தன் வஹி மூலம் அவர்கள் ஈமானை சோதிப்பதிற்காகவே அந்த ஆணை பிறப்பித்ததாகவும்-இறைவன் சதையையோ, குருதி சிந்துவதையோ விரும்புவதில்லை என்று கூறி தடுத்து நிறுத்தினான் என்பது அல் குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மை.

ஆனால் இன்று கூட ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தி இறந்தார் என்பதிற்கு அடையாளமாக மெக்சிகோ-தாய்லாந்து போன்ற நாடுகளில் மனிதர்களை சிலுவையில் அடித்தும், தீ மிதித்தும் வழிபாடுகள் நடக்கின்றன. அதுபோன்ற செயல்களால் இறைவன் திருப்திபடுகிறானா? என்பதினை ஏன் சிந்திக்க மறுக்கிறார் முகரத்தினை திருவிழாவாகக் கொண்டாடுபவரகள்? அப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதால் மாற்று மதத்தினர் கேலிப்பேச்சுக்கு இடம் முஸ்லிம்கள் கொடுக்கலாமா?

அல்லாவிஹ்வின் இடைத்தரகர்கள் என்று சிலர் கிளம்பி அவர்கள் செய்யும் அனாச்சாரங்களை உங்களுடம் பகிர்ந்து கொண்டால் தவறில்லை. சில மாதங்களுக்கு முன்னர் ஐமான் இனைய தளத்தில் திண்டுக்கல்லைச் சார்ந்த சகோதரர் சபீயுல்லா எனபவர் ‘சிலோன் மவுலானா’ என்பவர் எப்படியெல்லாம் அவருடைய குடும்பத்தில் நுழைந்து குழப்பத்தினை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்-சகோதர யுத்தத்திற்கும் வழிவகுக்குகிறார் என்றும்- அவருடைய காலில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கவும் கொடுமை செய்திருக்கிறார் என்று அழாத குறையாக முறையிட்டு இருந்தார். அதபோன்ற என் நண்பர் சொன்ன இன்னொரு உண்மைச் சம்பவத்தினையும் உங்களுடன் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சென்னையில் குடியிருக்கும் கடற்கரையோர செல்வக் செழிப்பான முஸ்லிம் ஊரைச்சார்ந்த ஒரு குடும்பத்தில் பண்ருட்டியினைச்சார்ந்த வருங்காலத்தினை கணிக்கும் இமாம் என்ற போர்வையில் ஒரு மவுலான நுழைந்த தாயை வசியப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் திருமணம் நடந்த சில நாட்களிலேயே தோசம் இருக்கிறது என்ற மகளையும் அவள் கணவனிடமிருந்து பிரித்ததோடு நில்லாமல்-அந்தப் புதுப்பெண்ணுக்கு ஆபாச செல்போன் எஸ்.எம்.எஸ் தொந்தரவும் கொடுப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

நான் 1983 ஆம் ஆண்டு மலேசியா சென்ற போது எங்க@ரைச்சார்ந்த ஒருவரை கோலாலம்பூர் மலேயா மேன்சனில் பார்க்கச் சென்றேன். அப்போது ஒரு வியாபாரி அறையில் கேரளாவினைச்சார்ந்த தங்கள் என்ற பெரியவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி அந்த வியாபாரி, ‘தங்கள் அருளால் தான் இந்த அளவு தொழில் முன்னேற்றம் அடைந்தேன் என்றும் அவரைக் கேட்காமல் காலையில் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்றும் அந்த தங்கள் மந்திரித்துக் கொடுத்த தாயத்தினை கையிலும், இடுப்பிலும் கட்டியிருப்பதாகவும’; சொல்லி அதனையும் காட்டினார். அந்த வியாபாரிக்கு தன்னுடைய உழைப்பில் நம்பிக்கையில்லாததும்-ஈமானில் பிடிப்பில்லாத பேச்சாக உங்களுக்கு தெரியவில்லையா?
நான் புனையப்பட்ட வழக்கு ஒன்றில் இழுக்கப் பட்டு சிறை சென்று வந்ததினை கேள்விப்பட்டு எங்க@ரைச்சார்ந்த ஒருவர் என்னை சந்திக்க வந்தார். அவர் என்னிடம் உங்களுக்கு நேர்ந்;த கொடுமைக்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் சென்னை ஐஸ்ஹவுசில் வந்துள்ள பைஜி என்ற இமாமைப் பார்த்து அவர் துவா செய்தால் எல்லாத் துன்பங்களும் விலகும் என்று வற்புறுத்தி அழைத்தார். இவ்வளவிற்கும் அவர் படித்தவர்-மேல்நாட்டில் வேலை பார்ப்பவர். அவரிடம் நான் அதில் எனக்கு நம்பிக்கையில்லை என மறுத்துவிட்டேன். அவருக்கு ஈமானில் ஊசலாடல் இருப்பதினை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். 2..1..2010 ஆம் தேதி தினத்தந்திப் பத்திரிக்கையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நாகூர் தர்காவிற்கு தொழுகை நடத்த வந்தவருக்கு டிரஸ்டி கலிபா பொன்னாடைப்போர்த்தி கவுரப்படுத்தினார் என்ற செய்தி படத்துடன் வெளியாகி இருந்தது. மாற்று மதத்தினர் நாகூர் தர்காவினையும் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் என்று நினைக்க மாட்டார்களா? ஆகவே ஏன் அவர்களுக்கு நாம் தவறான செய்திக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

மறைந்த முன்னால் அமைச்சர் முகம்மது ஆசிப் அவர்கள் அமைச்சராக பதவியேற்றபோது அப்போதைய முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். நான் அந்த சமயத்தில் சென்னை சட்டம் ஒழுங்கு டி.சியாக பணியாற்றினேன். அவரிடம், ‘உங்களுக்கு 70 வயதிற்கு மேலாகிறது, வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள், அத்துடன் ஒரு முஸ்லிம் ஏன் காலில் விழுந்தீர்கள்’ என்ற வினவினேன். அதற்கு அவர், ‘மற்ற அமைச்சர்கள் எல்லாம் காலில் விழும்போது நான் மட்டும் காலில் விழாமல் இருந்தால் முதல்வர் கோபித்துக் கொள்வார்கள்’ என்றார். நான் சொன்னேன், “மற்றவர்களில் கண்டதையெல்லாம் கடவுள் என்று எண்ணி காலில் விழுவார்கள். ஆனால் முஸ்லிம் சஜ்தா செய்வது அல்லாஹ்வினைத் தொழும் போது தானே என்று நீங்கள் இருந்திருக்கலாமே’ என்றேன். நான் அதிகாரியாக இருந்ததால் அதற்குமேல் அவரிடம் வாதம் செய்யவும் அவர் பதில் கூறவும் எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் அஹமது அவர்கள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் குத்த விளக்கு ஏற்ற மறுத்து விட்டார்கள். அதற்காக வேற்று மதத்தினர் அவர் மீது ஏவுகணை தொடுத்தார்களா? இல்லையே! ஏனென்றால் படித்த மாற்று மதத்தினருக்கு அவருடைய இஸ்லாமிய மத வழிபாடுகளை தெரியாமலில்லை..

சமீபத்தில் சென்னை கலைவானர் அரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இப்போது ஒரு பெரிய பதவியில் இருக்கும் பெயரளவிற்கு முஸ்லிமாக இருக்கும் மேதாவி கவிஞர் ஒருவர் அந்த உயர்ந்த பதவியினைப் பெருவதிற்காக புகழ்க்சியில் முக்கிய பிரமுகரை திளைக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பேசும் போது, ‘பிறை பிச்சைப் பாத்திர வடிவில் உங்களிடம் பிச்சை’ கேட்பதாகச் சொன்னதாகவும் அதற்காக சமுதாயம் கண்டனக்குரல் எழுப்பியதினையும் அறியலாம்.

கவிஞர் அல்லாமா இக்பால் தன் கவிதையில், ‘இளம் பிறையே வருந்தாதே உன்னுடன் பூரணச்சந்திரன் மறைந்து இருக்கிறான்’ என்று அவர் கூறிய பூரணச்சந்திரன் வேறு யாருமில்லை. அகிலத்தினைப் படைத்து அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ்வதிற்கு வழிவகுக்கும் அல்லாஹ்வினைத்தானே அவ்வாறுக் குறிப்பிட்டார். பின் ஏன் ஆண்டவனிடம் படைப்புகளிடம் சில சலுகைகளை தட்டிக் கேட்பதிற்குப் பதிலாக ஏன் மண்டியிட வேண்டும்?

சிலர் தவறான தகவல்களையும் சென்னையில் பரப்பி வருகின்றனர். அது என்ன தெரியுமா? ஒவ்வொரு வசதியுள்ள முஸ்லிமும் ஹஜ் செல்வது கடமையாகும். அதனைத் தெரிந்த சில வேடதாரிகள், “திருமுல்லை-சப்பைப் பட்டணம் தர்காக்கலுக்கும் சென்றால் ஹஜ் செய்வது வேண்டியதில்லை” என்றும் தவறான செய்தியினை பரப்பி வருகிறார்கள். சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்குக் கூட பழனி சென்று முருகனை வழிபட்டு-நாடிஜோசியம் பார்க்கவும் செல்கின்றனர். இவர்களின் சோரம் போன ஈமானைக் கண்டுதான் சில இமாம்கள்-மவுலானாக்கள்-தங்கள் போன்ற வேடதாரிகள் முரீது கொடுக்கிறேன் என்று அனாச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.இந்த வேதனையினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் என் கட்டுரையின் தலைப்பினை ஈமானே உன் விலை என்ன என்றேன்?

மேலே சொன்ன செய்திகள் எல்லாம் புனையப்பட்ட கட்டுக்கதைகள் அல்ல. தினந்தோறும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் தானே. ஈமான் இழந்த சிலர் செய்யும் செயல்களால் படித்த இளைஞரகள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது. ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பும், ஜமாத்தும் இஸ்லாமிய மக்கள் அநாகரியங்கள், அநாச்சாரங்களில் தடம் புரளாது கண்ணை பாதுகாக்கும் இமையாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஒலித்த பாங்கின் ஓசை

எவரெஸ்ட் சிகரத்தில் ஒலித்த பாங்கின் ஓசை

செங்கம் எஸ். அன்வர் பாஷா

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=215


இஸ்லாத்தில், மலைகளுக்கு புனிதமான சிறப்புக்கள் கிடைத்துள்ளன. உலகம் படைக்கப்பட்ட நேரத்தில், முதன் முதலாக மக்காவின் நிலமும், “அபு குபைஸ்” மலைக்குன்றும் தோன்றின. நூஹு நபி (அலை) அவர்கள், உலகப்பிரளயத்தின் போது பிரயாணித்த கப்பல், ஜுதி மலையில் தான் தரை தட்டி நின்றது. ஹள்ரத் மூஸா (அலை) அவர்களை இறைவன் “சையதுல் ஜிபால்” என்ற “தூர்சீனா” மலைக்கு வரவழைத்து உரையாடினான். “பனீநயீம்” என்ற மலையின் உச்சியில் தான், ஹள்ரத் லூத் (அலை) அவர்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. “ஸஃபா மர்வா” மலைகள் மார்க்க அடையாளங்களாக உள்ளன. என்று அல்குர்ஆன் (2:158) கூறுகிறது. நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் “ஜப்லே நூர்” என்ற மலையில் அமைந்துள்ள ஹீரா குகையில் தியானத்தில் இருக்கும் நேரத்தில் தான் வஹி அருளப்பட்டது. அத்துடன் திருமறையின் வசனமும் முதன் முதலாக இறங்கியது. மதீனாவிலுள்ள “உஹது” மலையும் புனிதமான வரலாற்று சின்னமாகும். இமாம் தாவூத் (ரஹ்) அவர்கள் இந்தியா, பாக்கிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் தான் பிறந்தார்கள். “காரசான்” மலையில் காஜாமுயீனுத்தீன் அஜ்மீரி (ரஹ்) அவர்கள் முராகபாவில் அமர்ந்திருந்தார்கள்.
தற்போது, இந்தியாவின் இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கும் ஒரு தனி சிறப்பு கிடைத்துள்ளது! கடந்த 21- 5- 2008 ம் தேதி முப்பது வயது நிரம்பிய ஃபாரூக் ஸஅத் ஹம்மாதுல் ஸமன் (ZAMAN) என்ற இளம் மலை ஏறும் வீரர் 29035 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாறு படைத்துள்ளார். இதனால், இவர் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த முதல் வீரர் என்ற தகுதி பெறுகிறார்.
நேபாள நாட்டின் நேரப்படி பகல் மூன்று மணிக்கு, நேபாள மக்களால் “சகர்மாதா” என்று அன்புடன் அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரத்தில் காலடி பதித்தார் வெற்றி வீரர் ஃபாரூக். முதல் காரியமாக அங்கு இஸ்லாத்தின் கடமையான தொழுகைக்கு வரும்படி அழைக்கப்படும், பாங்கினை உரக்கச் சொன்னார். அந்த ஓசை மலைகளில் எதிரொலித்து, ரீங்காரமிட்டது. அடுத்தபடியாக, “கலிமா” எழுதப்பட்ட சவூதி அரேபியாவின் தேசியக்கொடியை அங்கு பறக்க விட்டார். இறுதியாக எல்லாம் வல்ல நாயனுக்கு ஷுக்ரானா நஃபில் தொழுகையை தொழுது முடித்தார்.
உலகத்தின் மிகவும் உயரமான இடத்தில் நின்று உலக மக்களை தொழுகைக்கு வரும்படி கூவி அழைத்ததின் மூலம் சரித்திர சாதனையை நிகழ்த்தி விட்டார் அந்த அரேபியவீரர் !
இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், 20-5-2008 –ந் தேதியை நேபாள அரசு, சர்வதேச மவுண்ட் எவரெஸ்ட் நாள்” என்று அறிவித்திருந்தது ! காரணம், 29-5-1953 ம் தேதியன்று தான் ஸர் எட்மண்டுஹில்லாரி “நேபாளி” “ஷேர்பா” டென்சிங்குடன் முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
சாதனையாளர் ஃபாரூக் காட்மாண்டுவிலிருந்து 31-5-2008 ம் தேதி சவூதி செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது. “நான் மலை ஏறும் பொழுது, 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இருபதாவது கேம்ப் வரையில் எந்த வித சிரமமும் இருக்கவில்லை. அதற்கு மேல் அமைந்துள்ள இருபதாவது அட்வான்ஸ் கேம்பிலிருந்து உச்சி வரை ஏறுவதில் பல சிரமங்களும், இடையூறுகளும் குறுக்கிட்டன. நேபாளத்தின் “ஷெர்பா” மிகவும் உதவியாக இருந்தார். மலை ஏறும் நுணுக்கங்களை “ஷெர்பாக்கள்” நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
பனி மலையில் நிலவும் குளிரும், பிராணவாயு குறைவும், உச்சியை அடைவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனக்கும் இரண்டு மூன்று முறை உயிரை பயணமாக வைத்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருபதாவது கேம்பிற்கும் மேலே நான் ஏறிச் செல்லும் போது, எனக்கு கடினமான பல தடங்கல்கள் குறுக்கிட்டன. அங்கு நிலவும் பிராணவாயுவின் குறைவினால் மூச்சு திணற வேண்டியதாகி விட்டது. வழி நெடுகிலும் பல முறை உயிருக்கு போராட வேண்டியதாகி விட்டது.
என்னுடைய லட்சிய இலக்கை நான் அடைந்த பொழுது நாலா புறமும் பனியால் அந்த இடம் சூழப்பட்டு இருந்தது. என் உடல் முழுவதும் மரத்து விட்டதைப் போல் ஆகி விட்டது. என் மூளை உறைந்து செயலிழந்து விட்டதைப் போல் உணர்ந்தேன். நான் உலகின் உயர்ந்த சிகரத்தின் உச்சிக்கு வந்துள்ளேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! அங்கு நிலவும் அழகிய கண்கொள்ளாக் காட்சியை பார்த்ததும் நான் உணர்ச்சி வசப்பட்டு, மதி மயங்கி விட்டேன். அப்போது நேரம் பகல் மூன்று மணியாகி இருந்தது. வெயில் எங்கும் பரவிக் கிடந்தது. மலையின் மற்ற பகுதிகளில் மேகங்கள் சிகரங்களை மறைக்கும் விதத்தில் மிகுந்த வண்ணம் இருந்தன. என் கண் முன்னால் தெரிந்த உள்ளத்தை கவர்ந்து இழுக்கும் கண் கவர் காட்சி யினைக்கண்டு நான் பூரித்துப் போனேன்.
இந்த எவரெஸ்ட் சிகரத்தை உலகின் மிக உயர்ந்த இடம் என்று கூறுவதைப் போலவே புகழ் பெற்ற “கபரஸ்தான்” (இடுகாடு) என்று கூறினாலும் பொருத்தமானதாக இருக்கும் ! கி.பி. 2002 ம் ஆண்டு வரை, எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் ஆவலில், 175 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் பிறகும், பலபேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். பெரும்பாலான உடல்கள், அங்கேயே கிடக்கின்றன. சிகரத்தின் வடபகுதியில் இப்போதும் 41 உயிரற்ற உடல் கள் கிடக்கின்றன. நானும் என் கண்ணால் ஏராளமான உடல்களை கண்டேன். இவ்வளவு உயரத்திலிருந்து பிணங்களை எடுத்து வருவது இயலாத காரியம்.
பெரும்பாலான மரணங்கள், எரிவாயு முடிந்து விடுவதாலும், பிராண வாயு குறைவினாலும், பனிப்புயல்களில் சிக்கிக் கொள்வதாலும் நிகழ்ந்து வருகின்றன. அங்கு பனிக்கட்டிகள் குவிந்துள்ளதாலும், கடுமையான குளிர்ந்த காற்று வீசுவதாலும், பிணங்கள் கெடுவதில்லை. அங்கு கிடந்த ஒரு உடலை, முதன் முதலாக கண்டவுடன் அதை காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் நான் அவசரமாக தொட்டேன். என்னுடன் இருந்த “ஷெர்பா” அது இறந்து விட்டவரின் உடல், அந்த மனிதர் இறந்து பல மாதங்கள், அல்லது பல வருடங்கள் ஆகி இருக்கலாம்” என்றார்.
மலை ஏறும் ஆவல் கொண்டவர்களுக்கு வலுவான உடல் தகுதி மட்டும் இருந்தால் போதாது. பொருளாதார வசதியும் இருக்க வேண்டும். 55 வருடங்களுக்கு முன்பு ஹில்லாரியும் டென்சிங்கும், எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதன்முதலாக ஏறிய பின்பு, 3800 பேர் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் 1600 பேர் மட்டும் தான் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். மலை ஏறும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறைந்த பட்சம் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவழிக்க நேரிடும். எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவதை விட, இறங்குவது தான் மிகவும் சிரமமான காரியமாகும்” என்று விளக்கமாக கூறி தன் பேட்டியை முடித்தார் ஃபாரூக்.
உலகத்திலுள்ள நாடுகளில், ஒரே ஹிந்து நாடு முன்பு இருந்தது நேபாளம். அதன் மீது அமைந்துள்ள சிகரத்திற்கு “ஜார்ஜ் எவரெஸ்ட்” என்ற ஆங்கிலேயரின் (கிருஸ்துவர்) நினைவாக வைக்கப்பட்ட பெயர் தான் எவரெஸ்ட். வானத்தை தொடும் அந்த எவரெஸ்ட் சிகரத்தின் மீது நின்று, “தொழுகைக்கு வந்து வெற்றியடையுங்கள்” என்ற பாங்கின் அழைப்பை, உலகின் நாலாபக்கமும் இப்போது முழங்கச் செய்துள்ளான் வல்ல அல்லாஹ் ! இதன் விளைவாக, உலக மக்கள் அனைவரும் ஒரே இமாமின் பின்னால் நின்று தொழும் காலம் வெகு தூரத்தில் இல்லை !.

( குர்ஆனின் குரல் நவம்பர் 2009 இதழிலிருந்து )

இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்

இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி.பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)

உலக மக்களினை நல் வழிப்படுத்தி ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்ப அனுப்பப்பட்ட நபிமார்கள் ழூசா, ஈசா, முகம்மது ஸல்லல்லாஹ_ அவர்களால் அடித்தளம் அமைக்கப்பட்ட மதங்கள் தான் ஜூடேயிஸமும், கிறித்துவமும், இஸ்லாமும் என நாம் அறிவோம். ஆனால் இஸ்ரேயிலர்கள் ழூசாவை கடவுளாகவும், கிறித்துவர்கள் ஈசாவை கடவுளின் மகனாகவும் நெறி தவறி அழைக்கின்றனர். ஆனால் இஸ்லாமியர் மட்டும் முகம்மதுவை எந்த நேரத்திலும் கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ நினைக்கவில்லை. பெருமானாருக்கு வஹி மூலம் இறக்கப்பட்ட குர்ஆனில் ழூசாவையும், ஈசாவையும் இறைத்தூதர்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளது.. அவர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத்-இன்ஜில் வேதத்தையும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.. இறைவனால் படைக்கப்பட்ட ழூசாவையும், ஈசாவையும் கடவுளாக அழைக்காது இஸ்லாமியர் நபிகளாக ஏன் அழைக்க வேண்டும் என்ற கோபத்தினாலோ என்னவோ முஸ்லிம்களை இஸ்ரவேலர்களும், கிறித்துவர்களும் எதிரிகளாக நினைக்கின்றனர்..
மக்கா நகரில் ரஸ_லல்லா பாலகனாக இருந்தபோது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று அழைத்தபோதும் தனது 40 வயதில் தனக்கு அல்லாஹ்வால் வஹி இறக்கப்பட்டது என்று சொன்ன மாத்திரத்தில் யாரும் அதனை நம்பவில்லை. ஆனால் அவரது அன்புத் துணைவியார் கதிஜா பிராட்டியார் மட்டும் அவர்களை அரவணைத்து முதலில் ஏக இறை தத்துவத்தினை ஏற்றுக் கொண்டார்கள் என்பது வரலாறு. அன்னை கதிஜா ஒருவரே முதலில் இஸ்லாமை ஏற்றதிலிருந்து கல்லடியும், சொல்லடியும், மேலை நாடுகளின் நவீன பாஸ்பரஸ் குண்டடியும் பொருப்படுத்தாது அரேபியாவிலிருந்து-ஜிம்பாவே வரை 130 நாடுகளில் 130 கோடி மக்கள் ஏக இறை தத்துவத்தினை ஏற்று முஸ்லிம்களாக மாறி இமய மலைபோல உயர்ந்து நிற்கவில்லையா இஸ்லாம்?
இன்று உலகில் அதிகமாக 210 கோடி கிறித்துவர் கொண்ட கிறிஸ்துவ மதமிருந்தாலும், அதனுடைய வளர்ச்சி 1900 ஆண்டிலிருந்து 2000 வரை 26.9சதவீதத்திலிருந்து 29.9 சதவீதம் தான்;. அதாவது வெறும் மூன்று சதவீதம் தான். ஆனால் இஸ்லாமியர் வளர்ச்சி 12.4 சதவீதத்திலிருந்து 19.2 சதவிதத்தினை எட்டி, ஏழு சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா? இத்தனைக்கும் இஸ்லாமிய நாடுகள் வளர்ச்சியடைந்த வல்லரசாக இல்லையே! ஆனால் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தால் வல்லரசுகள் வல்லூராக மாறி ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் வேட்டையாடுவது ஏன்? அவர்களுக்குத் தெரியாது விளையாடும் பந்தினை சுவற்றிலோ-தரையிலோ எவ்வளவு வேகம் ஓங்கி அடிக்கிறோமோ அவ்வளவு தூரம் எழும்பும் என்பதினை பார்க்கிறோம். அதேபோல் இஸ்லாமியர் எவ்வளவு நசுக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவையாக எரியும் சாம்பலிருந்து சீறிப் பாய்வார்கள் என ஆதிக்க சக்திகள் அறிய மாட்டார்கள்.
வரலாற்று இடைக்காலத்தில் இஸ்லாமிய அரசர்களால் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் இன்று உலகத்தினையே தனது ஆயுத பலத்தால் மிரட்டும் அமெரிக்காவினாலேயோ அல்லது நேட்டோ கிறித்துவ நாடுகளினாலேயோ வலுக்கட்டாயமாக மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய முடியுமா? கிறித்துவ சேவை மையங்கள் கூட ஏழை மக்களை கவர கல்வி, உணவு, வீடு, சுகாதாரம் போன்ற அன்பின் அடையாங்களை மக்களிடையே அள்ளி வீசித்தானே அவர்களை கிறித்துவ மதத்திற்கு இழுக்கிறார்கள். பின் எப்படி இஸ்லாமிய மன்னர்கள் மட்டும் வரலாற்று இடைக்காலத்தில(;மெடீவல்) மக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைத்திருப்பார்கள் என்று ஏன் அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்?
வரலாற்று இடைப்பட்ட(மெடீவல்) காலத்தில் நடந்தது என்ன? ய+தர்கள், கிறித்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் புண்ணிய தலமாக கருதப்படும் ஜெரூசலம் முஸ்லிம்கள் ஆட்சி செய்த பாலஸ்தீன நாட்டில் இருந்தது. முஸ்லிம்களிடமிருந்த ஜெரூசலத்தினை கைப்பற்ற நீண்ட (குருசேட்)‘புனிதப்போர’; என்று பெயரிட்ட பெரியதோர் போரினை ஐரோப்பிய துணைக் கண்டத்தில் நடத்தினர். ஆனால் முஸ்லிம்கள் ஈமானை கேடயமாகவும், ஏக இறைத்தத்துவத்தினை வாளாகவும் கையிலெடுத்து பல உயிர்களை பறிகொடுத்ததால் ஜெரூசலத்தினை தங்களுடன் தக்க வைத்தனர் எனறால் எப்படி அவர்களால் அன்று மட்டும் முடிந்தது? இறைவனால் இறைக்கட்டளைகளை இஸ்ரவேலர்கள் மீறியதால் பழிக்கப்பட்டது மட்டுமல்ல, முதலாவது-இரண்டாவது உலகப்போர்களில் பந்தாடப்பட்டனர். கிறித்துவ-இஸ்ரேயிலக் கூட்டுப்படை இரண்டாம் உலகப் போரில் வெற்றியடைந்த களிப்பில் பாலஸ்தீனர்களுக்கிடையே இஸ்ரேயில் என்ற நாட்டினை உருவாக்கி பாலஸ்தீனர்களுக்கு நாடு என்ற அமைப்பே இல்லாமல் அகதிகளாக ஆக்கப்பட்டனர்.
1945 ஆம் ஆண்டு சர்வதேச சபையான ஐ.நா அமையப்பட்டாலும், 1948 ஆம் ஆண்டு சரவதேச மனித உரிமை சாசனம் எழுதப்பட்டாலும் பாலஸ்தீனர்களுக்கு இன்று வரை தனிநாடு என்று பிரகடனம் செய்ய உரிமை இல்லை. இன்றைய முஸ்லிம் உலகின் கொந்தளிப்பிற்கு காரணமே பாலஸ்தீனத்தின் பரிதாப நிலையே என்று உலக ஊடகங்கள் சொல்கின்றன. ஆகவே முஸ்லிம் நாடுகளான ஈரானோ, ஈராக்கோ, பாகிஸ்தானோ இஸ்ரேயிலுக்கு எதிராக பலம் வாய்ந்ததாக மாறக்கூடாது என்பதால் தான் கிறித்துவ கூட்டமைப்பு ஈராக்கை சின்னாபின்னமாக்கி, பாக்கிஸ்தானின் அணு ஆயிதத்தினை கண்காணித்து அந்த நாட்டில் ரகசியமாக ஊடுருவி ஆளில்லா விமானங்கள் மூலம் நிர்மூலமாக்குகின்றனர். பாலஸ்தீன குழந்தைகளோ அல்லது ஈராக் அல்லது ஆப்பானிஸ்தான் குழந்தைகளோ பள்ளிக்கூடங்களுக்குக்கூட செல்ல முடியாது பரிதவிக்கின்றனர். இவ்வளவிற்கும் 1989 ஆம் ஆண்டு ஐ.நா வின் சர்வதேச குழந்தைகள் ஆண்டு என்று அறிவித்து அவர்களுக்கான உரிமை 20 ஆண்டுகளாகியும் பறிக்கப்டுகிறதே வேதனையாக இல்லையா?
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 2001 ஆம் ஆண்டு தாக்கப்பட்டதிற்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் தான் காரணம் என்று அந்த நாட்டில் படையெடுத்து தாலிபான்களை விரட்டிய பின்பு அந்த நாட்டை விட்டு வெளியேராமால் ஊழல் நிறைந்த அமெரிக்காவில் வசித்த டாக்டர் கரசாய் ஆட்சியினை நிறுவி அதற்கு ஆதரவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக் ஜனாதிபதி வைத்திருக்கிறார் என்று 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் படையெடுத்த கூட்டுப்படை உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்ற உண்மையினை ஒப்புக் கொண்டு வெளியேராமால் இன்னும் அட்டைபோல் ஒட்டி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தினை உறிஞ்சிக் கொண்டுள்ளது என்ற செய்திகள் நாள்தோறும் நாம் படிக்க வில்லையா? ஈரான் சிவில் உபயோகத்திற்காக அதாவது மின்சாரம் போன்றவைகளை தயாரிப்பதிற்காக அணுவினை பயன்படுத்துகிறோம் என்றாலும் அதற்கு பொருளாதார தடையேற்படுத்துவதா?
இதே போன்றுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. அது என்னவானது? வுpவசாய நாடான சீன நாட்டினை தொழிற்சாலை மிகுந்த நாடாக ஆக்கி இன்று ஏற்றுமதியினை 17.7 சதவீதம் அதிகரித்து ஜெர்மனி நாட்டினை பின்தள்ளி உலக ஏற்றுமதியின் முன்னணி நாடாக சீனாவினை மாசேதுங் உருவாக்கவில்லையா? ஏன் இஸ்லாமியர்களால் முடியாதா? ஏகாபத்திய நாடுகள் இஸ்லாமியர்களை நடத்தும் விதம் கோபமூட்டும் செயலானது தான் அதற்காக தீவிரவாதம் ஒரு வடிகாலாகுமா? இன்றைய இஸ்லாமியர் வாழ்வு கொந்தளிக்கும் கடலில் கப்பல் ஓட்டும் மாலுமியைப் போன்றது தான். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதனை சமாளித்து திறம்பட வழி நடத்துபவனே சிறந்த மாலுமியாகக் கருதப்படும். தோல்வி-அவமானங்களை வெற்றியின் ழூலதனமாக எடுத்துக் கொண்டு உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்க சில யோசனைகளை சொல்லலாம் என நினைக்கிறேன்:
கிராம பொருளாதாரத்தினை மேன் படுத்தி-உற்பத்திற்கு உதவும் தொழில்களை தொடங்க வேண்டும்.
சீனர் உலகில் எப்படி இவ்வளவு தூரத்திற்கு வளர்ச்சியடைந்த வல்லரசாக மாறியது என்று ஆராயும் போது வருடத்திற்கு 20 லட்சம் சீனர் ஆங்கிலக் கல்வி கற்கின்றனர் என்பது தெரிய வந்தது. அதன் ழூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் முன்னேற்றத்தின் ரகசியங்களை அறிந்து-அவர்களுக்கு மேலாக ஒரு படி உயர்துள்ளனர். அதே போன்று இஸ்லாமியரும் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இன கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். அதாவது ஷியா-சன்னி என்ற வேறுபாடு களைந்து பிரிந்து நிற்கும் ஐக்கிய அரபு நாடுகள்-எகிப்து-சிரியா-ஜோர்டன்-அரேபியா-ஈரான்-பாகிஸ்தான ஆகியவை ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டும். அந்த அமைப்புகள் நாட்டோ போன்ற பாதுகாப்பு அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொருளாதார ஏற்றுமதி-இறக்குமதியில் வரியில்லா வர்த்தகத்தினை எற்படுத்த வேண்டும். தங்களுக்கென்ற ஈரோ போன்ற நாணயம் உருவாக்க வேண்டும்.
அதே போன்று விஞ்ஞான-ஆராய்ச்சிகளை தங்களுடன் பரிமாற்றம செய்து கொள்ள வேண்டும்.
வறுமையில் தவழும் இஸ்லாமிய நாடுகளுக்கு பொருளுதவி கொடுக்க வேண்டும். எப்படி பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் துபாய் நாட்டிற்கு அபுதாபி நாடு கடன் கொடுத்து கை தூக்கியதோ அதேபோன்ற உதவிகளை செய்ய வேண்டும். இஸ்லாமிய ஏழை நாடுகளில் பசியாலும்-நோயாலும் உழலும் மக்களுக்கு கல்வி-மருத்துவம்-வீடு-வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.

உலக இஸ்லாமியர் நினைத்தால் வானத்தையும் வில்லாக முறித்து-கடலிலும் எதிர் நீச்சலடித்து, பூமியிலும் வல்லரசாக மாறி எதிர்கால சவால்களை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாமா?

பாசம்

பாசம்

மணியாடர் தாளில் கையெழுத்திட முடியாமல் விரல்கள் நடுங்கின. ‘பார்வதி அம்மாள்’ என்று பெரிது பெரிதாய் எழுத்துக்கள்.தடுமாறி தடுமாறி எழுதி முடித்தாள் அந்த வயதான பாட்டி...

“என்னம்மா...ஃபாரம் முழுக்கவே உங்க கையெழுத்துப் போடறீங்க” என்று கிண்டலடித்தார் தபால்காரர்.

நோட்டுகளை எண்ணிக் கொடுத்தார்.

“வேற கடுதாசி எதுவும் இல்லியா?”

“நாளைக்கு வருதா பார்க்கலாம்...”என்றார், இன்றைக்கு இல்லை என்ற குறிப்புடன்.

பக்கத்து வீட்டு பொன்னி எட்டிப் பார்த்தாள். “என்ன பாட்டி...பேரன் அனுப்பிட்டானா?...”
பார்வதியின் அருகில் வந்தாள். “எப்ப வரானாம்...”
“வருவான். அவனுக்கு எப்ப வசதியோ...”

கிழவி உள்ளே போய்விட, பொன்னி நொடித்துக் கொண்டாள். “பாரேன் கிழத்துக்கு எவ்வளவு திமிரு. பேரன் மாசா மாசம் சுளையா பணம் அனுப்பி வச்சிடறான். கிழவிக்கு அப்புறமும் பேராசை. இந்த மாதிரி மனுசங்களுக்குத்தான் பணம் தேடி வருது...”

பின்னாலேயே உள்ளே போனாள். “ஆத்தா, .பாலு வேணும்...அதுக்காகத்தான் வந்தேன்”
“எவ்வளவு?” பால் செம்புடன் கிழவி வந்தாள்.
“இருநூறு. புள்ளைக்குக் காய்ச்சல். சோறு வேணாம்னு...”

கிழவி பாலை அளந்து ஊற்றினாள். பொன்னி கொடுத்த காசை வாங்கிப் புடவைத் தலைப்பில் முடிந்து கொண்டாள்.
‘பாரேன் புள்ளைக்குக் காய்ச்சல்னு சொல்றேன். அப்ப கூட காசுல கண்ணு. ஒரு பசு மாட்டைக் கட்டி வச்சுக்கிட்டு... வரட்டியைக் கூட காசு பண்ணிருது கிழவி.’ பொன்னி முனகிக் கொண்டே வெளியே போனாள்.

உண்மையிலேயே கிழவி மீது பக்கத்து, எதிர் வீட்டுக்காரர்களுக்கு எரிச்சல்தான். கிழவி ஒரு பைசா கூட விடுவதில்லை.
”பேரன் அனுப்புற காசை என்னதான் செய்யறாளோ...”

கிழவிக்கு வயசு எழுபதைத் தாண்டி விட்டது. சுகுமார், கிழவியின் மகள் வயிற்றுப் பேரன். கிழவிக்கு ஒரே மகள். அவள் துரதிர்ஷ்டம், மகள் போன வருடமே தவறிப் போனாள். சுகுமார் இந்தப் பக்கம் வருவதேயில்லை. கிழவியும் கிராமத்தை விட்டு நகருவதாயில்லை.

திடீரென கிழவி உடம்பு சரியில்லை என்று படுத்து விட்டாள். தபால்காரரை விட்டு சுகுமார் விலாசத்திற்குத் தந்தி அடிக்கச் சொன்னாள்.

‘ஒரு வாரத்தில் கிளம்பி வருவதாக’க் கடிதம் மட்டும் வந்தது அவனிடமிருந்து.
வந்த கார்டை அத்தனை உடம்பு நோவிலும் தூக்கிப் பிடித்து உன்னிப்பாய்ப் பார்த்தாள்.

தபால்காரர் கூடக் கிண்டலடித்துவிட்டுத்தான் போனார். “பேரன் கடுதாசியைப் பார்த்திட்டீல்ல... இனிப் பொழைச்சுக்குவே”
ஆனால் கிழவிக்குப் போறாத காலந்தான். திடீரென மிகவும் முடியாமல் போய், தூக்கத்திலேயே மூச்சுப் பிரிந்து விட்டது.
பேரன் வந்து சேர்ந்தான்.
காரியங்கள் முடிந்தபின் தபால்காரர் அவன் எதிரில் வந்தார். “இதைக் கிழவி உன் கையிலே கொடுக்கச் சொல்லிச்சு” என்றார்.
தபால் அலுவலக சேமிப்புக் கணக்குப் புத்தகம்.
“நீ அனுப்பின பணம் எல்லாம் இதுலதான் போட்டு வச்சுது.”
சுகுமார் திகைப்புடன் பார்த்தான்.

“மணியார்டர் பாரத்துல ஒத்தை வரி இல்லியேன்னு ரொம்பவும் ஏங்கிப் போச்சு. அந்தக் கார்டைப் பார்த்த பிறகுதான் அதுக்கு மனசு சமாதானமாச்சு. அந்தக் கார்டையே வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கும்”.
சுகுமார் தலைகுனிந்தான்.
“கடைசி வரை தன் உழைப்பிலேயே வாழ்ந்துட்டுப் போயிட்டா. அதுக்குத் தேவைப்பட்டதெல்லாம் பாசம்தான்... பாவம்... கடைசி வரை கொடுப்பினை இல்லை.
தபால்காரர் நகர்ந்து போனார்.
சுகுமார், மாடத்தில் மடித்துப் பத்திரமாய் வைக்கப்பட்டிருந்த கார்டையே வெறித்தான், கண்ணீருடன்.
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,


A. Mohammad Alavudeen | Cash Control | Finance & Risk Management | Emirates Group
(: +9714-7083176 | 6: +9714-2864132 | *: mohammad.alavudeen@emirates.com

kids in school think quick

kids in school think quick
TEACHER : Maria, go to the map and find North America .
MARIA : Here it is!
TEACHER : Correct. Now class, who discovered America ?
CLASS : Maria!
___________________________________________________________
TEACHER : Why are you late, Frank?
FRANK : Because of the sign.
TEACHER : What sign?
FRANK : The one that says, 'School Ahead, Go Slow.'
___________________________________________________________
TEACHER: John, why are you doing your math multiplication on the floor?
JOHN : You told me to do it without using tables!
___________________________________________________________

TEACHER : Glenn, how do you spell 'crocodile?'
GLENN : K-R-O-K-O-D-A-I-L'
TEACHER : No, that's wrong
GLENN : Maybe it s wrong, but you asked me how I spell it!
___________________________________________________________
TEACHER : Donald, what is the chemical formula for water?
DONALD : H I J K L M N O!!
TEACHER : What are you talking about?
DONALD : Yesterday you said it's H to O!
___________________________________________________________

TEACHER : Winnie, name one important thing we have today that we
didn't have ten years ago.
WINNIE : Me!
___________________________________________________________
TEACHER : Goss, why do you always get so dirty?
GOSS : Well, I'm a lot closer to the ground than you are.

___________________________________________________________
TEACHER : Millie, give me a sentence starting with 'I.'
MILLIE : I is...
TEACHER : No, Millie...... Always say, 'I am.'
MILLIE : All right... 'I am the ninth letter of the alphabet.'
___________________________________________________________
TEACHER : Can anybody give an example of COINCIDENCE?
TINO: Sir, my Mother and Father got married on the same day, same time.'
___________________________________________________________
TEACHER : Now, Simon, tell me frankly, do you say prayers before eating?
SIMON : No sir, I don't have to, my Mom is a good cook.
___________________________________________________________
TEACHER : Clyde , your composition on 'My Dog' is exactly the same as
your brother's. Did you copy his?
CLYDE : No, teacher, it's the same dog!;
__________________________________________________________
TEACHER : Harold, what do you call a person who keeps on talking when
people are no longer interested?
HAROLD : A teacher.

ஓர் ஓசையற்ற பயணம்

ஓர் ஓசையற்ற பயணம்

காலம்: அனைத்து கிழமை நாட்களிலும்

பயணி பற்றிய விபரம்: -

தகுதியானோர் : ஆதமின் மகன்!

மூல உற்பத்தி : களிமண்!

விலாசம் : பூமியின் மேற்பகுதி!

பயணச் சீட்டு பற்றிய விபரம்: -

பயண வழி : ஒன்வே ஒன்லி (ஒற்றைப் பயணம் மட்டும், திரும்பும் சீட்டு கிடையாது)!

விலை : முற்றாக இலவசம்!

முற்பதிவு : ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது!

பொதி(சுமை) பற்றிய விபரம்: -

ஒவ்வொரு விமானத்திலும் ஒரு பயணி மட்டுமே அனுமதி!

கூடுதலாக 5 மீட்டர் வெள்ளைத் துணியும் சிறிய அளவு காட்டனும் எடுத்துக் கொள்ளலாம்!

பெறுமதி வாய்ந்த பொதி பற்றிய விபரம்: -

மனத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்ட தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், தர்மங்கள்,

சத்தியத்திற்காக செய்த தியாகங்கள்,

குழந்தைகளை நல்லவர்களாக ஆக்க எடுத்துக் கொண்ட உண்மையான கரிசணைகள் மற்றும்

இது போன்ற நற்காரியங்கள் மட்டும்.

பயணம் பற்றிய விபரம்: -

பயணத்தளம் : பூமியின் எந்தப் பகுதியுமாக இருக்கலாம்.

பயணிக்கும் நேரம் : மரணத்தைத் தொடர்ந்து!

இறங்கும் இடம் : மறு உலகம்.

குறிப்பு: பயணச் சீட்டு, கடவுச் சீட்டு, பிரயாண ஆவணங்கள் போன்ற எதுவும் தேவையில்லை. தயாராக மட்டும் இருந்து கொண்டால் போதுமானது!

தங்குமிட வசதி: -

தற்காலிகமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படும்!!

அறையின் அளவு : கிட்டத்தட்ட 2 அடி அகளமும் 6 அடி நீளமுமாகும்!

அறையின் சிறப்பம்சம் : வெரும் புழுதி மணலினாலும் சிறிய கற்களினாலும் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!

தங்குமிட வசதி பற்றிய விபரம் : பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் ஒரே வகையான வசதி மட்டும்தான் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தயவு செய்து கவணத்திற் கொள்க!

கீழ்காணும் செளகரியங்கள் காணப்படும் :

குளிரூட்டி (ஏ.சி) : 0 டொன் !!!

நீர் விநியோகம் : கிடையாது !!!

மின் விநியோகம் : கிடையாது !!!

தொலை பேசி : கிடையாது !!!

டீ.வி மற்றும் சேனல்கள் : சுவனம் அல்லது நரகம் !!!

பத்திரிக்கைகள் அல்லது புத்தகஙகள் : கிடையாது !!!

ரூம் சர்விஸ் : அல்லாஹ்வுக்கு எந்தளவு கட்டுப்பட்டு நடந்தோம் என்பதைப் பொருத்து அமையும்!

முக்கிய கவணத்திற்கு : -
அனைத்து பயணிகளும் மேற் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் தயவு செய்து கவணத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!

பயணச் சீட்டு ரத்துச் செய்யப்படடுவதோ அல்லது பிறருக்கு மாற்றுவதோ முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது!

எனவே, தயவு செய்து அனைவரும் (விதிவிலக்கு கிடையவே கிடையாது) பயணத்திற்கு தயாராக இருந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

மலக்குல் மெளத் எனப்படும் உயிரைக் கைப்பற்றும் வனவர் வந்தவுடன் பயணம் ஆரம்பமாகும் என்பதையும் அறியத்தருகின்றோம்!

மேலதிக தகவல்களுக்கு: -

உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை படிக்கவும்.

Interpersonal competencies

Interpersonal competencies :


1. Maintaining composure in interacting even under stress
2. Demonstrating good judgement , poise and maturity in interaction with employees and customers
3. Interpersonal style serving to enhance rather than undermine relationship with others
4. Treating others with respect and dignity
5. Exhibiting empathy seeing things accurately from the emotional perspective of others
Caring about their well being
6. Understanding own feelings and expressing them functionally
7. Showing genuine respect for the wishes , preferences and confidentiality of clients and advocating for them
8. Managing conflict constructively by searching for areas of common agreement
9. Re cognising and acknowledging the feelings of others and demonstrate respect
10. Showing empathy , sees things accurately from the emotional perspective of others and cares about their well being
11. Using formal networks to accomplish task
12. Manages conflicts , dealing with others appropriately in difficult situation
13. Respecting confidentiality and exercising discretion when sharing info
14. Developing and leveraging a network of relationship , contacts with people and institution capable of impacting business performance
15. Using social events to improve and strengthen professional relationship
16. Using the network to identify opportunities , gather market intelligence and seek input into problem with a view to increasing the work effectiveness
17. Participating actively in relevant business forum and taking steps to best represent the organization positively
18. Working effectively with relevant stakeholders to expand common ground and maximize buy in into organizational priorities
19. Understand unique desires and preference of significant others , external bodies and uses personal touch to strengthen key business relationships