Showing posts with label ஐ.ஏ.எஸ். Show all posts
Showing posts with label ஐ.ஏ.எஸ். Show all posts

Thursday, June 10, 2010

மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்

மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்

மக்கள் நலனை மட்டுமே பெரிதாக கருதும், அரசு அதிகாரிகள் வரிசையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் மிக முக்கியமான ஒரு சக்தி.



வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடும் புனிதமாகவும் இருக்கின்றதோ கடைசி நாளின் போதும் அதே புத்துணர்ச்சியோடும், புனிதத்தோடும் ஓய்வு பெறவேண்டும் என்ற முடிவோடு தனது பணியைத் துவங்கிய இந்த மகத்தான மனிதர், பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில்.


”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா?


மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடும், வங்கி சேமிப்பு 7,172 ரூபாயும்


பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் இன்று தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார்.


அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு, பேருந்துகளில் திடீர் ஆய்வு என இவரைப் பற்றி அடிக்கடி படிக்கும் ஒவ்வொரு செய்தியும் மனதிற்குள் மிகப் பெரிய துள்ளலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.


ஒரு உதாரண மாவட்ட ஆட்சித் தலைவரான இவர். விவசாயிகள் ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறார்கள், எனவே அவர்களிடம் தங்கள் குறைகளைச் சொல்ல இங்கே வாருங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இழுத்தடிப்பதை விட அவர்களைத் தானே நேரில் சென்று குறைகளைக் கண்டறிந்து தீர்த்து வைத்தால் என்ன என்று, ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து வருகிறார்.


வெப்படை அருகே ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பும் வழியில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒரு வயதான விவசாயத் தம்பதி தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்து, தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று அவர்களிடம் தன்னை அந்த ”ஜில்லாவின் கலெக்டர்” என அறிமுகம் செய்து கொண்டு, தான் வந்திருக்கும் செய்தி கேட்டும் கூட, தங்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பெருமை கொள்வதாகக் கூறி அவர்களோடு ஒரு புகைப்படம் எடுத்து அதை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெரிதாக மாட்டி வைத்திருக்கிறார்.


கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்து, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குச் செல்லும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி ஊக்குவிக்கிறார்.


எல்லாவற்றிக்கும் மேலாக.. புவி வெப்பத்தை குறைக்க உலகலவில் அதிகாரம் வாய்த்தவர்கள் அலட்சியம் காட்டிய போதிலும், உலகத்திற்கே உதாரணமாக தன்னுடைய மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நட்டு வளர்த்த வேண்டும் என்ற மிகப் பெரிய கனவோடு செயல்பட்டு, இது வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், நாமக்கல் நகர அரிமா சங்கம் போன்றவற்றின் உதவியோடு நெடுஞ்சாலைகளில், பள்ளி வளாகங்களில், கிராமத்தில் கிராமத் தோப்புகளில் என இது வரை நட்டு பராமரிக்கும் மரங்களில் எண்ணிக்கை ஆயிரங்களில் அல்ல.... மொத்தம் 25 லட்சம் மரங்கள்.


கிராம குறை தீர் மன்றம், மாதிரி கிராமங்கள், கிராமத் தோப்பு, ஒரு கோடி மரம் நடும் திட்டம், மாவட்ட ஆட்சியரின் கடிதங்கள் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப் பூர்வ இணையப் பக்கத்தில் இது குறித்து நிறைய செய்திகள் உள்ளன.


தமிழகத்தின் தலைசிறந்த பத்துப் பேரில் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது கூடுதல் பெருமையும் கொண்டவர்


வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.

Tuesday, June 9, 2009

ஐ.ஏ.எஸ் தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி

ஐ.ஏ.எஸ் தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி

பொருளாதார வசதியற்ற படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற தேர்வு களை எழுதி வெற்றி பெற சென்னையில் இலவச தங்குமிடம் உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு.முஹம்மதலி வெளி யிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற தேர்வுகளை எழுதி வெற்றி பெற வழிகாட்டும் வகையில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளோம்.

இத்திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ் முதல் நிலைத் தேர்வு எழுத இருப்பவர்கள்

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் பயன் பெறலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் நேர்காணல் செய்து தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, சிறந்த மையத்தின் மூலம் பயிற்சி, நூலக வசதி முதலியன முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி, (10 –ம் வகுப்பு), பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு முதலான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடும் ஜமாஅத் தலைவர் சான்றிதழோடும், சுயவிவரக்குறிப்பினை Bio-Data உடனடியாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

முகவரி – தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
118/13, வேப்பேரி நெடுஞ்சாலை, பெரியமேடு,
சென்னை – 3.
அலைபேசி : பொதுச்செயலாளர் – 9444165153


ந‌ன்றி : ம‌ணிச்சுட‌ர் 19/20 பிப்ர‌வ‌ரி 2009

Saturday, May 16, 2009

தமிழன் ஐ.ஏ.எஸ்!

தமிழன் ஐ.ஏ.எஸ்!

- ஆர்.சரண்

தமிழன் ஐ.ஏ.எஸ்... தமிழர்களுக்குக் கனவாக இருந்த ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுகள் இப்போது மெய்ப்பட ஆரம்பித்திருக்கின்றன. 2006-க்கான ஐ.ஏ.எஸ். தேர்வில் 44 மாணவர்கள் வெற்றிக் கோட்டைத் தொட... இந்த வருடம் வெளியாகியுள்ள 2008-க்கான ரிசல்ட்டில் அது இரட்டிப்பாகி 96 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்!
மே மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை அண்ணாநகரின் ஒவ்வொரு அவென்யூவும் பிஸியாகிவிடும். 'மாப்ளே! ராய்பால் இந்தத் தடவை ரொம்ப லிபரல்... ஜோக்கெல்லாம் அடிச்சுக்கிட்டே கேள்வி கேட்டாரு...' என்று காபி சுவைத்தபடி தெருவோரக் கடைகளில் ஐ.ஏ.எஸ். இன்டர்வியூ பற்றிப் பேச்சு கேட்கும்.

''ஐ.ஏ.எஸ்னா ஐ.ஐ.டி. ரேஞ்ச் பசங்கதான் எழுத முடியும், டெல்லியில்தான் படிக்கணும், ஹிந்தி தெரியணும்னு எக்கச்சக்க பில்ட்-அப் இருந்தது. இப்போ அதெல்லாம் கிடையாது. அண்ணா நகர்ல சின்ஸியரா ஒரு வருஷம் படிச்சாப் போதும். ஏதாவது ஒரு சர்வீஸை நிச்சயம் வாங்கிடலாம். தன்னம்பிக்கையும் உழைப்பும் உங்களை அண்ணாநகர்ல இருந்து டெல்லிக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.'' - பெருமிதமான குரலில் பேசுகிறார் சசிகாந்த் செந்தில். இந்திய அளவில் 9-வது ரேங்க்கும் தமிழ்நாட்டில் முதல் ரேங்கும் எடுத்திருப்பவர்.


காலேஜ் பக்கம் போகாமலே சிவில் சர்வீஸ் தேர்வில் பாஸாகி ஆச்சர்யப்படுத்துகிறார் மைக்கேல் ஜெரால்டு. ''நான் ஒரு மெடிக்கல் ரெப். தினமும் ஒரே மாதிரியான வேலையில் சலிச்சுப்போய் சிவில் சர்வீஸ் எழுத வந்தேன். தபால் வழியில் பி.ஏ., இங்கிலீஷ் லிட்டரேச்சர் முடிச்சுட்டு, அண்ணாநகரில் வந்து சேர்ந்தேன். போன வருஷம் எழுதிய எக்ஸாமில் ஐ.ஆர்.எஸ். கிடைச்சிருக்கு. ஐ.ஆர்.எஸ். கிடைச்ச சந்தோஷத்துல அன்னிக்கு வேகமா பைக் ஓட்டினேன். ஆட்டோக்காரர் ஒருவர் 'மனசுக்குள்ள பெரிய கலெக்டர்னு நினைப்போ?'னு கேட்டார். 'ஆமாண்ணே... நான் வருங்கால கலெக்டர் தாண்ணே'ன்னு சொன்னதும் புரியாம பார்த்தார்!'' - அதிர்வேட்டாகச் சிரிக்கிறார் மைக்கேல் ஜெரால்டு.


வீரபாண்டியனின் கதை தன்னம்பிக்கை டானிக்!

பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக்கொண்டே ப்ளஸ் டூ தேர்வில் மாநில அளவில் சாதனை புரிந்தவர். ''ஐ.ஏ.எஸ். ஆகி மக்களுக்குச் சேவை செய்வேன்'' என்று அப்போது பேட்டி கொடுத்தவர், இப்போ வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ். ''என் அப்பா அலுமினியப் பாத்திரங்களை சைக்கிள்ள வெச்சுக்கிட்டு வீடு வீடாப் போய் வித்துட்டு வருவார். அம்மா கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலில் துப்புரவுத் தொழிலாளியா இருக்காங்க. அப்பாவும் அம்மாவும் முடிஞ்ச வரைக்கும் அவங்க கஷ்டத்தோட நிழல் என் மேல் விழாத மாதிரி பாத்துக்கிட்டாங்க. 'நான் ஐ.ஏ.எஸ். ஆவேன்'னு இன்டர்வியூ கொடுத்ததும், எங்க அப்பாவை எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. 'கூமுட்டக் கோழி வீடு பூரா முட்டை போடஆசைப் பட்டுச்சாம்'னு ஆளாளுக்கு அடிச்ச கிண்டலில் அப்பாவும் அம்மாவும் மனசு உடைஞ்சு போயிட்டாங்க. அவங்க கண்களில் சந்தோஷத்தைப் பார்க்கணும்னு வெறித்தனமாப் படிக்க ஆரம்பிச்சேன். போன நாடாளுமன்றத் தேர்தலப்போ முதல்முறையா ஐ.ஏ.எஸ். தேர்வை எழுத ஆரம்பிச்சேன். தவறுகளைத் திருத்தக் கிடைச்ச வாய்ப்பா ஒவ்வொரு தோல்வியையும் எடுத்துக்கிட்டேன். போன வருஷம் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தப்ப, நல்ல டிரெஸ், ஷூ வாங்கப் பணம் இல்லை. கடன் வாங்கிட்டுப் போனேன். நல்லபடியா, இந்திய அளவில் 54-வது இடத்தைப் பிடிச்சு ஐ.ஏ.எஸ். ஆகிட்டேன். இப்போ அப்பாவைப் பார்க்கிறவங்க, 'வைராக்கியக்காரன்யா நீயி! உன் மகனை கடைசியில கலெக்டர் ஆக்கிட்டியே!'ன்னு சொல்றாங்க. அப்பா, அம்மா முகம் இப்போதான் தெளிவா இருக்கு. நானும் சந்தோஷமா இருக்கேன்!'' - சாதித்த சந்தோஷத்தில் பேசுகிறார் வீரபாண்டியன்.


பாலாஜி ஐ.பி.எஸ்ஸின் கதை வித்தியாசமானது. ''இன்ஜி னீயரிங் முடிச்சுட்டு நல்லா சம்பாதிக்கணும்னு நினைச்சு அண்ணா யுனிவர்சிட்டி வந்தேன். எல்லாரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பத்திப் பேசவும் எனக்கு ஆர்வம் வந்தது. ச்சும்மா டிரை பண்ணினதுக்கு 238-வது ரேங்க் வாங்கிட்டேன். பொதுவா, 'ஐ.பி.எஸ். ஆகணும்னா உயரமா ஆஜானுபாகுவா இருக்கணும்'னு தப்பான எண்ணம் இருக்கு. போலீஸ் ஆகத் தேவைப்படுற உயரத்தைவிட குறைவா இருந்தாலும் ஐ.பி.எஸ். ஆக முடியும். நல்ல சமயோசித புத்தியும் ஆளுமைத் திறனும்தான் ஐ.பி.எஸ். ஆக முதல் தகுதி'' என்கிறார் பாலாஜி.
இளமுருகுவின் வாழ்க்கை நெகிழ்ச்சியானது. எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்த இளமுருகு ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே தொடர்ந்து 5 வருடங்கள் தேர்வு எழுதி, இப்போது வெற்றி பெற்றிருக்கிறார். ''அப்பா என்னை அரசாங்க அதிகாரியாப் பார்க்க ஆசைப்பட்டார். அவருக்காக சிவில் சர்வீஸ் எழுத ஆரம்பிச்சேன். நான் எக்ஸாம் எழுதறதுக்கு முன்னாடியே அப்பா இறந்துட்டார். ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வர்றப்ப அப்பாவை நினைச்சுப்பேன். ரிசல்ட் வந்த மறுநாளே படிக்க உட்கார்ந்திருவேன். இன்னிக்கு எங்க ஒட்டுமொத்தக் குடும்பமும் பூரிப்பா இருக்காங்க. எல்லாம் அப்பா ஆசீர்வாதம்!'' - பேசி முடிக்கும்போது இளமுருகுவின் குரலில் அத்தனை ஆனந்தம்.


''பொம்பளைப் புள்ளைக்கு எதுக்கு இவ்வளவு பிடிவாதம்... வேற ஏதாச்சும் படிச்சுச் சம்பாதிக்கச் சொல்லுங்க. இல்லைன்னா, காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துருங்கன்னு என் அம்மா- அப்பாகிட்டே அட்வைஸ் பண்ணவங்களை இப்போ நினைச்சுப் பார்க்கிறேன். அவங்களுக்கான பதில்... நிர்மலா ஐ.பி.எஸ்!'' - மலர்ந்து சிரிக்கிறார் நிர்மலா.
சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளையில் படித்தவர்களில் இந்த முறை 25 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் பலர் வசதி குறைந்த, விவசாயக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் விசேஷம்.
இவர்களோடு சேர்த்து பி.காம்., படிப்பை 10 வருடங்கள் படித்த சான்பாஷா, 11 வருடங்களாக இடைவிடாமல் சர்வீஸைத் துரத்திய ஸ்ரீதர், இன்டர்வியூ வரை தமிழில் அணுகிய சக்தி போன்றோர் சொல்வதெல்லாம் ஒன்றுதான்...


நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்!



Courtesy Vikatan.