Sunday, September 14, 2008

நூர் துபாய் எனும் பார்வையின்மைத் தடுப்புத் திட்டத்தின் மூலம் பார்வையினைப் பெறும் ஈராக்கியப் பெண்


நூர் துபாய் எனும் பார்வையின்மைத் தடுப்புத் திட்டத்தின் மூலம் பார்வையினைப் பெறும் ஈராக்கியப் பெண்


நூ துபாய் எனும் பார்வையின்மைத் தடுப்புத் திட்டம் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி அமீரக துணை அதிபரும்,பிரதம அமைச்சரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பார்வையின்மைக் கோளாறுகளை உடையவர்கள் அதற்கான மருத்துவ செலவுகளைச் செய்ய முடியாதவர்கள் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக பறக்கும் மருத்துவமனை ஒன்று தயார் நிலையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயன்பெற மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, தெற்காசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இத்திட்டம் மூலம் முதலில் பார்வையினைப் பெற இருப்பது ஈராக் நாட்டினைச் சேர்ந்த நூர் எனும் ஏழைப்பெண். நூர் என்ற அரபி மொழிக்கு ஒளி என்பதாகும்.

இப்பறக்கும் மருத்துவமனை பார்வையிழப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளும்.

http://www.gulfnews.com/nation/Health/10244986.html

அண்ணல்நபி பற்றி அறிஞர் அண்ணா

அண்ணல்நபி பற்றி அறிஞர் அண்ணா
செப்டம்பர் 14, 2008 by gazzalie

http://rajaghiri.wordpress.com/

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.

யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.

அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் - இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் - அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.

அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.

உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு - அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!

அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் - அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் - என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!

எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.

அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!

இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே “இதை நம்பு” என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.

சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.

இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை - கருப்பொருள் - கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.

- அறிஞர் அண்ணா -

அசம்பாவித சமயங்களில் இழப்புகளைத் தவிர்க்க...

அசம்பாவித சமயங்களில் இழப்புகளைத் தவிர்க்க...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080914120246&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=9/15/2008&dName=No+Title&Dist=

சென்னை, செப்.14: குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தடுக்க போலீஸôர் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர்.

பொது அமைதியைக் குலைத்து, அப்பாவி மக்களின் உயிரிழப்பை ஏற்படுத்தி, பொது சொத்துகளை சேதப்படுத்தி ஓர் அசாதாரண சூழலை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே தீவிரவாதிகள் குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

இதுவரை நிகழ்ந்த சம்பவங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இத்தகைய சமயங்களில் பொது மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து போலீஸôர் வழங்கியுள்ள சில பாதுகாப்பு அறிவுரைகள் விவரம்:

வார இறுதி நாள்களில் பொதுமக்கள் அதிகம் கூடும், பொழுதுப்போக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், முக்கிய சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களிலேயே தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

எனவே, வார இறுதி நாள்களில் வெளியில் செல்வதற்கான இடங்கள், நேரங்களை வழக்கத்தில் இருந்து மாற்றி தேர்வு செய்யலாம்.

உதாரணமாக, மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இடங்களைத் தேர்வு செய்வது நல்லது. வார இறுதி நாள்களைத் தவிர்த்து மற்ற நாள்களில் வெளியில் செல்வது பாதிப்பைக் குறைக்க உதவும்.

மேலும், பெரும்பாலான குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மாலை நேரங்களிலேயே நடைபெற்றுள்ளன. எனவே, வார இறுதி நாள்களில் வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகளுக்கு மாலை நேரங்களில் செல்வதற்குப் பதிலாக காலை நேரங்களில் செல்வது நல்லது.

அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வெளியில் சென்றால் எந்த குறிப்பிட்ட இடத்திலும் அதிக நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பொருள்களை நிதானமாகத் தேர்வு செய்வதைவிட முன்கூட்டியே திட்டமிட்டு சென்று வாங்கி வருவது நல்லது.

சந்தேகப்படும் வகையில் நபர்களோ, பொருள்களோ இருந்தால் அது குறித்து கூச்சலிட்டு அந்தச் சூழலை பதற்றமாக்காமல் உடனடியாக அந்த இடத்துக்கான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து வெளியேறுவது நல்லது.

ஓர் இடத்தில் குண்டு இருப்பது உறுதியாகும் நிலையில் அந்தப் பகுதிக்கான பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள போலீஸôர் உள்ளிட்ட அதிகாரிகளின் உத்தரவுகளையும், அறிவுரைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுச் சொத்துகளைவிட விலைமதிப்பில்லாத உயிர்களை பாதுகாப்பதே அவசியம் என்பதால் பொது மக்கள் இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது இழப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தும் என போலீஸôர் தெரிவித்தனர்.

திருக்குர்ஆன் டிவிடி

இந்திய தூதரக அதிகாரி பங்கேற்ற அபுதாபி தமிழ்ச்சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

இந்திய தூதரக அதிகாரி பங்கேற்ற அபுதாபி தமிழ்ச்சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

அபுதாபியில் செயல்பட்டுவரும் அபுதாபி தமிழ்ச்சங்கம் பல்வேறு சமய, சமூக
மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வருகிறது.

அவ்வரிசையில் இன்று ( 14-09-2008) அபுதாபி அரபு உடுப்பி உணவகத்தில்
இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி நடைபெற்றது.
இது ஒரு மத நல்லிணக்க விழாவாகவே காட்சியளித்தது.

இந்நிகழ்ச்சிக்கு அபுதாபி தமிழ்ச்சங்கத்தலைவர் ரெஜினால்டு தலைமை வகித்தார்.
மீரான் பைஜி வரவேற்புரை நிகழ்த்த ஹீசைன் மக்கி 'ரமலான் மற்றும் நோன்புப்
பெருநாள் சிறப்பு' பற்றி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பாடகர் தாஜீதீன் பைஜி யின் 'கொடை உள்ளம் நீ வாழ்க'
என்ற பாடல் கேசட் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய தூதரக அதிகாரி பிரீத்தம் சிங் குடும்பத்தினர்,
இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியி்ன் சீனியர் பொதுமேலாளர் சிவக்குமார்,
அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது மற்றும் அபுதாபி தமிழ் நண்பர்கள்
நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.

தகவல் : வி.களத்தூர் ஷா, அபுதாபி